tag:blogger.com,1999:blog-27450043731461337552024-03-14T14:01:26.249+03:00பார்வையில்கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...
மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.Unknownnoreply@blogger.comBlogger427125tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6070850663474507692015-12-30T09:50:00.001+03:002015-12-30T09:50:30.285+03:00தி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை.<div style="text-align: justify;">
வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி நேர்பார்வை பார்த்தால் தி.மு.க வின் செயல் திட்டங்கள் தமிழகத்திற்கு நன்மைகளே.</div>
<br />
<div style="text-align: justify;">
பெரியார் கொள்கைகள் சில செயல் வடிவம் ஆன போதும் சங்கர மடம் போல் திராவிட கழகமும்,தி.மு.க குடும்ப மடம் ஆகி விட்டன. திராவிட கழகம் சமூகம் சார்ந்து செயல்படுவதால் தமிழகத்தின் இன்னுமொரு வழி என்று பின் தள்ளி விடலாம்.ஆனால் தமிழகத்தின் பொதுமக்கள் அனைவரின் வாழ்க்கை,வீழ்ச்சியை அரச பீடம் நிர்ணயிப்பதால் தி.மு.க பெயருக்கு அரசியலே வாழ்க்கை என்பதால் சில மாறுதல்களை கலைஞர் காலத்திலேயே கொண்டு வந்தால் தி.மு.க வின் பெயர் நீண்டதோர் வரலாற்றை இன்னும் நிறுவும். இந்த கருத்துரை தேர்தலுக்கும் அப்பாலான நீண்ட பார்வை.</div>
<br />
<div style="text-align: justify;">
குடும்ப ஆட்சி மட்டுமல்ல திரு.ஸ்டாலின் கூட அரச பதவியின் அடுத்த வாரிசு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று. வாரிசு அரசியல் மற்ற மாநிலங்களில் நிகழவில்லையா என்ற எதிர்கேள்விக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழகம் அல்ல. அரசியலும் திரைப்படங்களும் தமிழகத்தின் வாழ்க்கை நீரோட்டம். இன்னும் சொல்லப் போனால் வாரிசு அரசியலை விட ஜெயலலிதாவின் ஒற்றை ஆட்சி தமிழகத்திற்கு நல்லது.</div>
<br />
<div style="text-align: justify;">
அரசு பணியில் இருக்கும் சகாயம் கூட தமிழகத்தின் மாற்று என்று மக்கள் கருதும் நிலையில் ஸ்டாலின் தி.மு.கவுக்கான தீர்வு அல்ல. தி.மு.க வில் இன்னும் கூட கட்சி கட்டுப்பாட்டை மதித்து பல பேர் இருக்க கூடும்.அவர்களையெல்லாம் ஏன் தி.மு.க முன் நிறுத்துவதில்லை?</div>
<br />
<div style="text-align: justify;">
சகாயம் மாற்று என பலர் நினைக்கும் போது வாரிசு அரசியலும் தி.மு.க வின் வீழ்ச்சிக்கான இன்னுமொரு முக்கிய காரணம் என்பதால் ஓரளவுக்கு மக்களுக்கு தெரிந்த திருச்சி சிவா போன்றவர்களை ஏன் தி.மு.க கலைஞருக்கு அடுத்த மாற்றாக கருதுவதில்லை? அரசியலில் ரிமோட் கண்ட்ரோல்களாக பால் தாக்கரே,சோனியா போன்றவர்கள் உதாரணம். அனுபவம் வாய்ந்த கழகத்திற்கு வழியில் போறவனெல்லாம் கருத்து சொல்கிறான் என்று கழக கண்மணிகள் நினைத்தால் கலைஞருக்கு பின் நிச்சயம் தி.மு.க இல்லை </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுதே அரசியல் பேரம் பேசும் திறன் இன்றி விஜயகாந்தைக் கூட வரவேற்கும் கட்டெறும்பு நிலை என்பதை விட கலைஞரே சொன்ன கடுகு நிலையில் தி.மு.க இருக்கிறது. கடுகின் காரத்தை விட மிளகாய் காரம் இன்னும் அதிகம். தமிழகம் கடுகு தாளிப்பதோடு மிளகாய் காரத்தை அதிகமாக விரும்புகிறது. .</div>
<br />
<div style="text-align: justify;">
ஜனநாயக வழியில் கட்சி செயல்பாடுகளை முன்னெடுக்கும் தி.மு.கவிற்கு வாரிசு அரசியல் நல்லதல்ல. கட்சி ஜனநாயகம் தழைக்க திருச்சி சிவா போன்றவர்களை முன்னிறுத்துங்கள்.</div>
<br />
கழக கண்மணிகள் கேட்டால் கேளுங்கள்.இல்லையென்றால் பல் போன காலத்தில் வளரும் நிகழ்வுகளை ஒட்டி பதிவை அசை போடுகிறேன்.Unknownnoreply@blogger.com71tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-62235021644912497282015-12-28T07:18:00.000+03:002015-12-28T07:18:36.292+03:00,முதலமைச்சர் கனவு ஆவுறதில்ல<div style="text-align: justify;">
நமக்கு சாடை பேசுறது ஆவாதுன்னு பொது அறிவு,இலக்கியம் குறைந்த பட்சம் ஒரு சினிமா இந்த மாதிரி தேடலுக்கு போகலாம்ன்னு பார்த்தா .ஆவுறதில்ல!கவிஜ சொல்லி பார்த்தாச்சு ! சிரிக்கிறதுக்கு ஆள காணோம்! விடுகதை சொல்லி பார்த்தாச்சு கண்டுக்கவே ஆள காணோம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒன்று பதிவு போட நேரமில்லப்பா! நா ரொம்ப பிசின்னு இருக்கனும். இல்ல அப்பப்ப வந்து ஏதாவது ஹலோ சொல்லிட்டு போகனும். ரெண்டும் கெட்டான அது என்ன தேர்தல் நேரம் பார்த்து மட்டும் அரசியல் ஜோக்கராவது!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேர்தல் வேற எப்ப வருதுன்னு தெரியலையே! இன்னும் எத்தனை ஸ்லிப்பர்களை சமாளிக்க வேண்டியிருக்குமோ!</div>
<br />
<div style="text-align: justify;">
வி செயகாந்து பேசிகிட்டிருக்கும் போது பூச்சி ஏதோ வாயில் போனதுக்கு தூன்னு துப்பினதுக்கும் கூட வெளக்கவுரை தர்றாங்கப்பா! அரசியல்வாதி தா ன்னாலும் தப்பு தூ ன்னாலும் தப்பு தும்மினாலும் தப்பு கும்மினாலும் தப்பு ன்னா அப்புறம் எப்படிதான் அரசியல் நடத்துவது:)</div>
<br />
<b><span style="color: red;">சாதி கிறுக்கன்களையெல்லாம் கூட்டம் சேத்திகிட்டா? </span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<b><span style="color: red;">ரொம்ப டேஞ்சர்பா! பேஜாருபா</span></b><br />
<b><br /></b>
<br />
<div style="text-align: justify;">
<b>வர்ணமும் தெரியாம ஆசிரமும் தெரியாம போடுவது பட்டை! தொண்டனெல்லாம் மட்டை..சொல்வதென்னவோ ருத்ராட்ச கொட்டை</b></div>
<br />
<div style="text-align: justify;">
கார்ட்டுன் போட்டாலும்,குட்டிக்கரணமே சேர்த்து போட்டாலும் இந்த தேர்தல்ல ஊத்திக்கும்ன்னு ஒபாமாவுக்கு சி.அய் ஏ சொல்லிருச்சாம் .அய்யாவுக்கு கடிதாசி வரலையோ!</div>
<br />
<div style="text-align: justify;">
போன தேர்தல் எடிட்டுங்ல கொட்டு வாங்குனவனே மோதிர கொட்டாக்கும்ன்னு புல்லா ஆங்கிதமா புளகாங்கிதமாம்</div>
<br />
<div style="text-align: justify;">
முன்னமாதிரி தினத்தந்தி மாலைமுரசு சொல்றதுதான் செய்தின்னு இல்லாம இப்ப யூட்யூப்பு டூப்புகளையெல்லாம் நல்லாவே காமிக்குது. ஒரு தூ வுக்கு மூணு தூ போடுறாங்கப்பா:) எடிட்டுங்க்கு ஹாலிவுட்ல தேடுறாங்க!பாலிவுட்ல தேடுறாங்க!அனிருத்துக்கு சோடியா கனடாவுல தேடுறாங்க </div>
<br />
<div style="text-align: justify;">
இதுலருந்து இன்னா தெரியுது பார்ட்டி செட்டாவுலன்னு தெரியுது. அப்ப பிசேபி கூட்டணி அம்பேல்ன்னு தெரியுது.</div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-67063539867890575642015-12-26T14:31:00.000+03:002015-12-26T14:31:51.491+03:00கலைஞர் தொலைத்த மதராசி!<div style="text-align: justify;">
கலைஞர் மீது குடும்ப அரசியல், ஈழத்தமிழர்கள் இரு பெரும் அரசியல் தவறுகளின் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆட்சித்திறனின் நன்மைகள் தமிழர்களுக்கு பரவலாக போய் சேர்ந்திருக்கிறது. என்னடா தேர்தல சமயத்துல யூ டர்ன் போடுறானே....அவ்வ்வ்ன்னு நினைப்பவர்களுக்கு சட்டியில் இருப்பதுவே அகப்பையில் வருகிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் முத்துக்குளிக்க வாரீகளா என்ற ஆச்சி மனோரமாவின் பாடலை இந்தியில் அப்படியே பிரயோகித்ததோடு மதராசிகள் இந்தி பேசுவதை நையாண்டி செய்வார். தமிழனுக்கு இந்தியே தெரியாது என்ற அடிப்படையே தெரியாமல் நிலம் பெயர்ந்த சேட்டன்களும், ஏமண்டிகாரும், தாராவி தமிழர்களும் பேசிய இந்திக்கு நக்கலுக்கானவர்கள் மதராசிகள். </div>
<br />
<div style="text-align: justify;">
இதற்கான காரணம் மெட்ராஸ் மட்டுமே வடக்கத்தியவர்களுக்கு தெரிந்த ஊர்.திருவனந்தபுரம்,கொச்சின்,ஹைதராபாத்,விசாகபட்டினம்,பெங்களூர்,மங்களூர் போன்றவை ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தின் பெயர்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
முன்பு வைஜயந்திமாலா, ஹேமமாலினி,ரேகா, <span style="background-color: white; color: #545454; font-family: arial, sans-serif; font-size: x-small; line-height: 12.1333px;">ஸ்ரீ</span>தேவி ( <span style="background-color: white; color: #545454; font-family: arial, sans-serif; font-size: x-small; line-height: 12.1333px;">ஸ்ரீ எப்படி தட்டச்சுவதுன்னு சொல்லுங்களேன்,தலையை குழப்புது) </span>இப்பொழுது தொலைகாட்சி விரிவாக்கத்தால், அமிதாப்பச்சன், சாருக்கான், கமலஹாசன் போன்றவர்களால் ஓரளவு தென்னிந்தியா பற்றி வட இந்திய சராசரி மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். </div>
<br />
<div style="text-align: justify;">
மெரினா கடற்கரையே தெரியாத தமிழ்நாட்டு மாவட்டக்காரர்கள் போல் முன்பு வட இந்தியர்களுக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா,தமிழகம் எல்லைகள் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து யார் வடக்கே சென்றாலும் அவர்கள் மதராசிகள்தான் பின் பாலசந்தரின் ஏக் துஜே கே லியே கமலஹாசன் வசனம்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்தான் மதராசிகளின் புதிய அளவுகோல். </div>
<br />
<div style="text-align: justify;">
உத்தர பிரதேஷ்,மத்திய பிரதேஷ்,டெல்லி இந்தியோடு ஒப்பிடும் போது தென்னிந்தியர்களின் இந்தி உச்சரிப்பு அவர்களை எளிதாக காட்டிக்கொடுத்து விடும். மெஹ்மூத் கிண்டல் இந்தி பேசுபவர்கள் யார் என்ற என் அகழ்வாராய்ச்சியில் சிக்கியவர்கள் ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தை சார்ந்தவர்கள். ஹைதராபாத்தை விட கடப்பா பம்பாய்க்கு பஞ்சம் பிழைக்க வறுமையான மாவட்டம் என்பதோடு எளிதான ரயில் பயணமும் கூட.</div>
<br />
<div style="text-align: justify;">
சிவசேனாவுக்கு எப்பொழுதும் ஒரு எதிரி வேண்டும். முன்பு மதராசிகள். இப்பொழுது பீகாரிகள்.</div>
<br />
<div style="text-align: justify;">
கலைஞர் மெட்ராஸை சென்னை என்று மாற்றிய பெயரோடு மதராசிகள் காணாமல் போய் விட்டார்கள். </div>
<div style="text-align: justify;">
கிரிக்கெட் அரசியலை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகி விட்டது.</div>
<div style="text-align: justify;">
சாருக்கான் லுங்கி டான்ஸ் குத்தாட்டம் போட வைக்கிறது.</div>
<br />
உடன் பிறப்பே!<br />
எதிரிகள் அணியிலிருந்து கழக பாசறைக்கு<br />
வந்த நீ முகநூலுக்கு முரசு கொட்டு<br />
ட்விட்டரின் கதவை டொக் என்று தட்டு<br />
<br />
என கலைஞரின் கவிதைக்கு காத்திருக்கிறேன்!<br />
<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-39463904698664336092015-12-26T11:01:00.000+03:002015-12-26T11:01:09.926+03:00இதய நோயா? தேள் கடி வேணுமா?<br />
<div style="text-align: justify;">
கூகிளான் வடச்சட்டியை இலவசமா கொடுத்தாலும் கொடுத்தான். ஓட்ட வடை எப்படித்தான் சுடுவதுன்னு விவஸ்தையே இல்லைங்ண்ணா!</div>
<br />
<div style="text-align: justify;">
வட இந்தியாவிலோ அல்லது ஆந்திராவிலோ ஒரு ஆளு மீன் குஞ்சுகளை வளர்த்து அப்படியே முழுங்கினா ஆஸ்துமா போயிடும்ன்னு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி பீலா விட்டுகிட்டிருந்தாரு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருட்டு வெளிச்சத்திலே ஒரு ஆளை பின் தொடர்ந்து போனா அவர் பில்லி சூனியம் வைப்பவர் என்ற திகிலை கொண்டு வந்த தொலைக்காட்சி புததிசாலிகளை கொஞ்சம் நாட்கள் அரபி போலிஸ்காரன் கிட்ட புடிச்சுக் கொடுக்கனும் இல்லாட்டி வாங்க தேள் கடி ரொம்ப சொகமா இருக்கும்ன்னு பதிவர் சேனு வீட்டுக்கு அனுப்பி வைக்கனும் </div>
<br />
<div style="text-align: justify;">
இதய நோய் வந்தா ஆட்டோவையோ,ஆம்புலன்ஸையோ புடிச்சு நேரா சேனுங்கிற பதிவர் வீட்டுக்கு போனீங்கன்னா போதும்.அவர் வளர்க்கும் தேளை விட்டு ரெண்டு கொட்டு கொட்டினால் இதய நோய் போயே போயிந்தி!</div>
<br />
<br />Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-91563277654610814192015-12-24T21:48:00.000+03:002015-12-24T21:48:07.537+03:00குரங்கு மர புளியம் பழம்<div style="text-align: justify;">
சில பதிவுகளை காணும் போது தலைப்பு மட்டும் நச்சுன்னு வந்து விழுகிறது.மழை வந்து ஒட்டியும் ஒட்டாத ஸ்டிக்கர்,நமக்கு நாமே திட்டம்,புதுக்கூட்டணி,கிரனைட் கல்லை தேடும் சகாயத்தைக்கூட தேடிகிட்டிருக்காங்க </div>
<br />
<div style="text-align: justify;">
நாந்தான் முதல் அமைச்சர்ன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி போஸ்டர் ஒட்டியும் கூட தமிழ்ப் பசங்க நம்ம பேரைக்கூட உச்சரிக்க மாட்டேன்கிறார்களே என்று கூட்டணி கோபத்தையும்,தமிழ் சாணக்கியனே தூதுவிடுவதை தூங்கி எழுந்த ஸ்லிப்பர்கள் புலம்பி கார்ட்டூனில் சோகமாகிப்போனார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
நமக்கெல்லாம் கார்ட்டூனுக்கு நேரமே செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.உங்கள் நிலவொளிக் கூட்டங்களை கூகிளான் படம் பிடித்து வைத்திருக்கிறான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
மரம் வெட்டினால் பசுமை நிறமா<br />
நிலவொளிக்கு அக்னி சூடா<br />
காட்சிகள் பேச்சுக்கு தமிழா<br />
குரங்கு தாண்டுவது மட்டும்<br />
கிடைக்காத புளியம் பழம்<br />
ருசிக்காத பட்சத்தில் புளிப்பும்<br />
<br />
பழுத்த பழமே வலு கொண்டு எழுகிறது<br />
உங்கள் முதுகெலும்புகள் ஒடிந்து போயின<br />
ஒதுக்கி வைத்தவர்களையும் மழை<br />
இன்று கட்டித் தழுவுகிறது.<br />
பிரித்தல் அரசியலுக்கு பரிகாரங்கள் தேடுங்கள்<br />
இன்னுமொரு தேர்தல் வராமலா போய் விடும்.<br />
<br />
டிஸ்கி: பதிவுலகம் வரும் வரை உங்கள் குழுப் பெயர் கூட தெரியாத அரசியல் விமர்சகன்.<br />
Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-32552637726042631952015-12-23T13:03:00.001+03:002015-12-23T13:05:03.511+03:00மூப்பனார்,ரஜனி & சகாயம்?<div style="text-align: justify;">
நானறிந்த வரை சூழல்கள் ஒருவருக்கு சிம்மாசனத்தை தூக்கி கொண்டு சுற்றும். தனி மனித சிந்தனை, உள் அரசியல் போன்றவை எதிர்பார்ப்புக்களை நீர்க்க செய்து விடும். அந்த வரிசையில் மூப்பனார்,ரஜனி போன்றவர்களிடம் தலைக் கீரிடம் கோபித்துக்கொண்டு ஓடி விட்டது. </div>
<br />
<div style="text-align: justify;">
இப்போதைய தமிழக அரசியல் சூழலில் வை.கோவும்,விஜயகாந்தும் தங்கள் ஈகோக்களை விட்டு ஓரணியில் மூன்றாம் அணிக்கு சந்தர்ப்பம் அமையுமா என்பதை பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2010ல் எதிர்பார்த்த சீமான் உரத்த குரல் தவிர எப்படி பெரியாரியல் அரசியல் களமாடுவது என்ற அடிப்படை மறந்து பச்சைத் துண்டு,முருகன் வேல் சின்னம் என 2016ல் தான் தான் முதலமைச்சர் கனவு தமிழக வெள்ளத்துக்கும் முன்பே எங்கோ போய் முட்டிக்கொண்டு விட்டது.</div>
<br />
<div style="text-align: justify;">
இரண்டு கழக ஆட்சிகளும் தமிழகத்திற்கு தங்கள் கடமையை செய்து விட்டார்கள். ஒன்று ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை உருவாக்குகிறது. இன்னொன்று ஒற்றை ஆட்சி முறையென்பதால் தமிழ் நாட்டின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. தமிழகத்தில் ஜனநாயக பரவல் தேவையென்றால் வலுவான தலைமையோடு மாற்று அரசியல் தேவைப்படுகிறது. மக்கள் விரும்பினால் 2016லேயே அந்த மாற்று அரசியலை கொண்டு வந்து விட முடியும். ஓடுவதே ஓடட்டுமென்றாலும் தமிழகத்தின் எதிர்காலம் வெறுமையாகவே இருக்கிறது.</div>
<br />
வழியில் போகும் ஓணானை பழமொழி மாதிரி விகடன் வழியில் போவோரை வழி மறித்து அடுத்த முதல்வராக யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தது.<br />
ஒரு பையன் 41C<br />
ஒரு பெண்மணி மைக்கிலிருந்து 100 அடி தள்ளி போய் நின்று கொண்டார்<br />
ஒருவர் நல்லாட்சி தரும் யாராக இருந்தாலும் என்ற மதில் மேல் பூனை<br />
காக்கி உடையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் நாங்க கவர்ன்மெண்டு ஆட்கள் கருத்து சொல்லக் கூடாது<br />
நாமம் போட்ட ஒருவர் மழைக்கு யாருமே வரவில்லையென்ற புலம்பல்.<br />
ஒருவர் ஜெயலலிதா<br />
இன்னொருவர் கலைஞர்<br />
புதுசா யாராவது வரனுங்க<br />
ஆளை விடுங்க சாமி என ஒதுங்கியவர்கள் அதிகம்<br />
<br />
<div style="text-align: justify;">
படித்தும் கட்சி சுவற்றில் ஒட்டிய பல்லிகள் நிறைய இருக்கிறார்கள். இவர்களை தவிர இலவசம் தவிர எங்களுக்கு அரசியல் தெரியாது என்பவர்களும்,என்னதான் சொல்லுங்க என் ஓட்டு இவருக்குத்தான் என்ற அசையா நெஞ்சர்கள் நிறைய இருக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அரசியல் ஈகோ,உள்குத்து வேலைகளை பின் தள்ளி Administration Oriented Ministers and Chief Minister என்ற நோக்கில் சகாயம் போன்றவர்களை முன் நிறுத்துவது மாற்று அரசியலுக்கான வழியை திறக்கும் என்ற போதிலும் இது போன்ற சிந்தனைகள் கொண்டவர்கள் படித்த வர்க்கத்து மைனாரிட்டியாக இருக்கலாம். மேலும் ஊழல்கள் அரசு துறை ஆவணங்களில் கருத்தரிக்கின்றன என்பதால் ஊழலை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பங்களும் அமையலாம் அல்லது அதிக கரு முட்டைகளையும் இடலாம்.</div>
<br />
இதையெல்லாம் தாண்டி சகாயம் அரசியலுக்கு வருவாரா என்பதே மில்லியனோடு ஒற்றை ரூபாய் சேர்த்த கேள்வி.<br />
<br />
வந்தால்? தமிழகத்தின் புது அரசியல் முயற்சி.<br />
<br />
பதிவை முடிவு செய்யும் தருணத்தில் மக்கள் நலக்கூட்டணி விஜய்காந்துக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள். ஆட்டம் எப்படி போகுது பார்க்கலாம்.Unknownnoreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-88379590649785953252015-12-19T14:24:00.000+03:002015-12-19T14:24:05.411+03:00அர்னாப் கோஸ்வாமியை புரிந்து கொள்ள<div style="text-align: justify;">
சென்னை,டெல்லி,கல்கத்தா,மும்பாய் நான்கு நகரங்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால் சென்னை திரை உலகம் சார்ந்து வருபவர்களையும் அல்லது சேட்டுகள் போன்ற வியாபாரிகளையும் உயரத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.</div>
<div style="text-align: justify;">
புது டெல்லி அரசாங்க வேலைகள்,பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்ந்து செய்தி வெளியிட சிறந்த இடம்.கல்கத்தா ட்ராம் வண்டி போலவே மெதுவாக நகரும் நகரம்.அரசியல் போராட்டங்கள்,காளி கோயில் பிரார்த்தனை,ஹுப்ளி பாலம்,அதனை கீழே பாயும் நதியும், கரையும் தத்துவ மனநிலைக்கும், ஜோதிபாசுவின் தொடர் ஆட்சி கம்யூனிஸ சிந்தனைக்கு சிறந்த இடம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் மும்பாய் எப்படி வித்தியாசப்படுகிறதென்றால் திறமை,உழைப்பு இருந்தால் பாலிவுட்டிலும் சேரலாம். சாதாரண மனிதனின் எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையை ஊட்டும் நகரம். இது தவிர இந்தியாவின் வர்த்தக மையம் அப்பொழுதும் இப்பொழுதும். மும்பாயின் குண்டு வெடிப்பு துயரங்களையெல்லாம் தூசி தட்டி விட்டு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் நகரமும் மக்களும்.</div>
<br />
<div style="text-align: justify;">
சர்ச்கேட்,ஸ்டாக் எக்சேஞ் பக்கம் விற்கும் பழைய புத்தகங்கள் தவிர டைம்ஸ் ஆஃப் இந்தியா,மிட் டே,ஸ்கிரின் தவிர,மராட்டி பத்திரிகைகள் போக சொல்லிக் கொள்ளும் படியான பத்திரிகைகள் இருந்ததில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் மெதுவாக ஆக்கிரமித்த போது விளம்பர நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்தன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தின் சன் தொலைக்காட்சிக்கு நிகராக ஜி தொலைக்காட்சி இருந்தது எனலாம்.அமெரிக்கா எங்கே சண்டை மூட்டி விடுகிறது எனப் பார்ப்பதற்கு சி.என்.என் வுல்ஃப் பிளிட்ஸர். தசாவதாரம் பிளிட்ஸர் வைரல் தேடுவது மாதிரியே வுல்ஃப் சதாம் ஹுசேன் வைரல்களை தேடி தகவல் சொல்பவர். பி.பி.சியின் ஹார்ட் டாக் டிம் செபாஸ்டின் தான் பிரணாப் ராய்,கரன் தபார்,பர்கா தத் போன்ற டெல்லி சார் ஊடகங்கள்,மற்றும் தமிழகத்தில் இப்பொழுது களமாடும் ஞான சேகரன்,ரங்கராஜ் பாண்டே போன்றவர்களுக்கு முன்னோடி.</div>
<br />
<div style="text-align: justify;">
இதில் முக்கியமான ஒருவர் விடுபட்டு போனார்.அவர்தான் அதிரடி மன்னன் அர்னாப் கோஸ்வாமி. பொதுவாக சத்தம் போடுகிறார்,மற்றவர்களை பேச விடுவதில்லை,டைம்ஸ் நவ் தாதா என்ற பலரின் விமர்சனங்களுக்கு அவருடைய நிகழ்ச்சியும் அதனை நிகழ்த்தும் விதமும் காரணம்.</div>
<br />
<div style="text-align: justify;">
டெல்லி ஊடகங்கள் செயல்படும் விதம் போரடித்த காரணத்தினால் மும்பாய் வந்ததாகவும் டீ பார்டி,கண்காட்சிகள்,கட்சி சார்ந்து கருத்து சொல்ல வேண்டிய நிர்பந்தம் போன்றவை டெல்லி ஊடகத்துறையாளர்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.பர்கா தத்,ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்களின் 2G பக்க சார்பை உதாரணமாக கூறலாம். </div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு நாள் மும்பாயின் மெரின் டிரைவில் நடக்கும் போது எதிர்ப்பட்டவர்களின் முகங்கள் தனக்கு டெல்லியின் அவநம்பிக்கையை போக்கியதாக கூறுகிறார் அர்னாப்.உலக ஊடகங்களான சி.என். என்,பி.பி.சி போன்றவை மும்பாயிலிருந்து இயங்குவதற்கான வாய்ப்புக்களாக மும்பாய்,பெங்களூர் போன்ற நகரங்களின் தொழில் நுட்பம் பயன் படுமென்றார். சி.என்.என் டைம்ஸ் நவ் செயல்பாட்டை கவனித்துக்கொண்டிருக்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
மும்பையின் லோயர் பரேலில் டெல்லி மாதிரி தனக்கு சனிக்கிழமை விருந்து அழைப்புக்கள் இல்லாத சூழலில் எந்த கட்சி சார்ந்தும் கருத்து சொல்லாத சூழல் மும்பாயில் இருப்பதாக சொல்கிறார். காமன் வெல்த் ஊழலை பிரிட்டிஷ் மகாராணியின் ஒரு சின்ன கடிதம் மூலம் மோப்பம் பிடித்து லண்டன் வரை சென்று செய்தியாக கசிய விட கல்மாடி ஓவராக சீன் போட்டதில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வெளிக்கொண்டு வந்ததாக கூறுகிறார். தன்னுடன் பணியாற்றுபவர்கள் துடிப்புள்ள 30 வயதுக்கும் கீழான இளைஞர்கள் என்கிறார். அருகிலேயே ஜெர்மன் போன்ற ஏனைய நாடுகள் தங்கள் நெட்வொர்க்குடன் செயல்படுவதால் மும்பாய் உலக மீடியா செயல்படுவதற்கான சிறந்த இடம் என்கிறார்.</div>
<br />
<div style="text-align: justify;">
அர்னாப் கோஸ்வாமியை அவரது நிகழ்ச்சிகளுக்கும் அப்பால் சரியாக புரிந்து கொள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய யூட்யூப் காணொளிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://www.youtube.com/watch?v=rFoNagK2-eo">இந்தியாவின் ஊழல் பற்றிய மண்டை காயும் பேச்சு</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://www.youtube.com/watch?v=rYeeXVR_Vl8">இந்திய மாணவர்களை ஊக்கப்படுத்தும் மாத்திரை</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
அன்னா ஹசாரே, அர்விந்த கெஜ்ரிவால் கூட்டணி கொஞ்சம் நம்பிக்கை தந்து திசை மாறி விட்டது.<br />
<br />
முன்பு நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும்,ராகுலும் பந்தா காண்பித்து விட்டு இன்று பெயிலுக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.<br />
<br />
இன்றைக்கு அர்னாப் கோஸ்வாமி காட்டில் கொய்யாப்பழம்தான்.காங்கிரஸை கடிச்சு தின்னப் போறார்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-63267073144946486122015-12-16T00:02:00.001+03:002015-12-16T00:02:24.507+03:00சுப்ரமணியன் சாமி! நீயே ஹீரோ!நீயே வில்லன்.<div style="text-align: justify;">
எந்த வட்டத்துக்குள்ளும் உள்ளடக்கி விட முடியாத ஒரு அரசியல்வாதியென்றால் சுப்ரமணியன் சாமியாகத்தான் இருக்கும். அதுக்கு பயந்துகிட்டோ என்னமோ மோடியும்,ஜெட்லியும் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறார்கள். கறுப்பு பணம் இந்தியாவுக்கு வந்ததா எனும் ஒளறுவாயனை கூட்டு சேர்த்துகிட்டு இருட்டு வீட்டில் டார்ச் அடிக்க பைத்தியமா என்ன? இல்லைங்க மோடி?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பனிப்போர் என்றால் சுப்ரமணியசாமியை அனுப்பும் ஜனதா ஆட்சி.</div>
<br />
<div style="text-align: justify;">
சோனியா காந்தி சொல்லித்தான் டீ பார்ட்டி வைத்து ஜெயலலிதாவின் உதவியால் வாஜ்பாய் அரசை கவிழ்த்தேன் என்ற வாக்குமூலம்,பின் ஜெயலலிதாவுக்கே ஆப்பு வைக்கும் விமர்சனங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்ப தி.மு.க தானே நண்பனாக இருக்கனும்.அதுதான் இல்லை ராசாவின் மூலமாக ஸ்பெக்ட்ரம் 2G ஆப்பு. அப்புறம் இரண்டு மூணு வருசம் கழிச்சு பார்த்தா சுப்ரமணியன் சாமிக்கு வெத்திலை பாக்கு வைக்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
திராவிட கட்சியே தமிழகத்தில் இருக்ககூடாது. பிஜேபி எல்லா இடத்திலும் தனியா நிக்க வைச்சு ஜெயிக்கிறேனா இல்லையா பார்ன்னு ரங்கராஜ் பாண்டேவிடம் கிசு கிசு.தமிழ்நாட்டில் கழக அம்மிக்கல்லுகளே கூவத்தில் அடிச்சிகிட்டு போகும் போது நீர் வடிஞ்ச மழையில் மரத்தில் போய் உட்கார்ந்துகிட்ட பிளாஸ்டிக் மாதிரி சாமி கனவுக்கு மட்டும் குறைச்சலில்லை.</div>
<br />
<br />
<div style="text-align: justify;">
நல்ல படிப்பு,புத்திசாலித்தனம்,ஹார்வேர்டு பட்டம் இருந்தும் தமிழர் நலனுக்கு எதிரான பார்வை.சும்மா கிடந்த கச்சத்தீவை இந்தியாவுக்கு சேர்ந்தது என்ற கேஸ் போட்டது,இப்பொழுது மீனவர்கள் பிரச்சினை உருவான பின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ள இலங்கை அரசுக்கு சிபாரிசு செய்வது</div>
<br />
<div style="text-align: justify;">
சுப்ரமணியன் சாமி பற்றி திருச்சி வேலுசாமி முன் வைக்கும் சந்தேகங்கள் கான்ஸ்பைரஸி தியரி மாதிரி மட்டுமே காணப்படுவதால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அர்னால்ட் கோஸ்வாமிக்கு தகுந்த மாதிரி சத்தம் போடும், மற்ற கருத்தாளர்கள் எல்லாம் முட்டாள்கள்,தான் மட்டுமே புத்திசாலிங்கிற அலட்சியம் செய்யும் சிரிப்பு/. நான் பேசும் போது வாயை மூடிகிட்டிருக்கனும்.குறுக்கிடாதே1ஆனால் நீ பேசும் போது நான் அர்னால்ட் கோஸ்வாமிக்கு பக்கத்து வீட்டுக்காரனாக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
தமிழர்களை,விடுதலைப் புலிகளை ஆகாது இலங்கைதான் புடிக்குதுன்னா அப்ப சோனியா காந்தியை பிடிக்கனுமில்ல.அது என்ன காரணமோ ஆங்கிலத்தில் Personal vengence என்று சொல்லும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு.இவர்களுக்குள் என்ன விரோதமென்றே கண்டு பிடிக்காத அளவுக்கு ராகுலையெல்லாம் மக்கு,டூப்ளிகேட் சர்டிபிகேட்ன்னு போட்டு வாங்குவது.</div>
<br />
<div style="text-align: justify;">
நேஷனல் ஹெரால்டுன்னு ஒரு பத்திரிகை வந்தது யாருக்கு தெரியும்.நமக்குதான் வருசத்துக்கு ஒரு முறை கஜனி மெமரி லாஸ் நோய் இருக்குதே.ஆனாலும் மண்டைக்கு எப்படிதான் வேர்க்குதோ 5 லட்சம் முதலீடு செய்த வியாபார நலன் நாடாத நிறுவனத்துக்கு 2000 கோடி எப்படி வந்ததுன்னு துருவி சட்ட புத்தியால் இப்பொழுது சோனியாவுக்கு செக்மேட் வைத்திருக்கிறார்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு புறம் பார்த்தா சோனியா குடும்பம் மீதான கோபம் மாதிரி தெரிந்தாலும் மந்திரி பதவி கொடுக்காமலே இழுத்தடிக்கிற கோபத்துல யாரையாவது கிள்ளி வைக்கலாமென சோனியாவை கிள்ளி வைத்தாரோ.திருச்சி வேலுசாமி சொல்லும் போதே சோனியா கேட்டிருக்கனும்.அவருதான் கான்ஸ்பைரஸி தியரின்னா மன்மோகனை வைத்தே கொஞ்சம் ஆட்டம் காட்டியிருக்கலாம்.காங்கிரசே பயந்துகிற மாதிரிதான் குண்டு வீசுகிறார்.இதில் ப.சிதம்ப்ரமெல்லாம் பம்முவது நல்லாவே தெரியுது.</div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு புறம் கல்லூரி மாணவர்களின் ஆ என்ற ஆச்சரியம்.இன்னொரு பக்கம் பாதி வழுக்கை மண்டையில் தமிழ்நாட்டில் முட்டை அபிஷேகம்.</div>
<br />
சுப்ரமணியன் சாமி! நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-83365843241706244112015-12-13T23:05:00.001+03:002015-12-13T23:07:25.396+03:00புதிய வட்டமேசை கலந்துரையாடல்<div style="text-align: justify;">
புதிய தலைமுறை நிகழ்த்திய வட்டமேசை கலந்துரையாடல் ஒரு ஜனநாயக கலந்துரையாடல் எப்படி நிகழவேண்டுமென்று நிருபித்திருக்கிற்து. பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தட்டையாக நான்கு பேரை வைத்துக்கொண்டு ஒருவர் பேசும் போது இன்னொருவர் குறுக்கிட்டு விவாதத்தை கலைப்பது போல் இல்லாமல் கலந்து கொண்ட அத்தனை பேரும் சமூக அக்கறையோடு பேசியது வரவேற்பிற்குரியது.அனைவருக்கும் பாராட்டுக்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு சில விமர்சனங்களை முன் வைக்கலாமென்ற போதிலும் பொதுவான சமூக அக்கறை விவாதம் தமிழகம் இடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.வழக்கம் போல் இரு கழகங்களின் சார்புநிலை குற்றம் கடிதல் தவிர்த்து அனைவரின் கருத்தும் மழை பேரிடர் கடந்து வருவது எப்படியென்ற /வெளிப்படுத்தியது.தலை நகர் மாற்றம் என்பதெல்லாம் துக்ளக் காலத்து பரிசோதனை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழையின் முன் அனுபவத்தோடு சொன்னால் அரசு இயந்திரத்தையோ முதல்வர் ஜெயலலிதாவையோ குறை சொல்வது அரசியலாக மட்டுமே தெரிகிறது.யாரும் எதிர்பாராத அடைமழை ஒன்றே மற்ற காரணிகளை பின் தள்ள போதுமானது.மேலும் இந்த மழையின் துயருக்கு இயறகை மாறுதல் தவிர்த்து அனைவருமே பங்காளிகள்.</div>
<br />
<div style="text-align: justify;">
எதிரணிகளும் கட்சி சார்பு கடந்து கலந்துரையாடல் செய்ய முடியும் என்பதை பார்க்கும் போது இரு கழக தலைமைகளின் ஆளுமையே தமிழகத்திற்கு பலனையும் கூட எதிர் விளைவுகளை அதிகமாக உருவாக்குகிறது என தோன்றுகிறது.</div>
<br />
எதை ஊக்குவிக்க வேண்டுமோ அவை ஊக்குவிக்கப்படுவதில்லை. எதை பின் தள்ள வேண்டுமோ அவை விவாதப் பொருளாகிப் போகின்றது.அரசியலோடு சமூக இணைய தளங்களும் இதற்கு பொறுப்பு.<br />
<br />
<div style="text-align: justify;">
தமிழகம் அரசியல் ரீதியாக தன்னை புதுப்பித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையை பிரதிபலித்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு மணி நேரம் கடலை போட நேரம் இருப்பவர்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://www.youtube.com/watch?v=fBvv2TMK2mM">ஐ டூப்பு இணைப்புக்கு இங்கே கிளிக்கவும்</a>.</div>
<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80469079495420989132015-12-12T13:07:00.000+03:002015-12-12T13:07:53.602+03:00பரதேசிகளின் நன்கொடை<div style="text-align: justify;">
மாநிலம்,மொழி கடந்து பலரும் தமிழகத்தின் துயர் துடைக்க தங்களது நன்கொடையை தருவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
வளைகுடாவில் குவைத் சார்ந்து இந்திய தூதரகம் நன்கொடை வசூல் செய்வதுடன் இந்திய பிரதமர் தேசிய இடர் நிதி திட்டத்தில் வெளிநாட்டு வாழ் மக்கள் சார்பாக பணம் வந்து சேரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
//In view of the natural disaster in Tamil Nadu, all Indian nationals in Kuwait, who wish to provide assistance for the flood victims in Tamil Nadu, are requested to send their contributions directly to the Prime Minister’s National Relief Fund (PMNRF). More details about PMNRF are available at https://pmnrf.gov.in/<br />
<br />
The Embassy will also accept all contributions towards PMNRF in cash or by cheque addressed to “Embassy of India, Kuwait”.<br />
<br />
தகவல் நன்றி.குவைத் இந்தியர்கள்.<br />
<br />Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-18641537448566006832015-12-12T00:53:00.000+03:002015-12-12T00:53:12.365+03:00பாரதி நினைவாக<div style="text-align: justify;">
இரண்டாயிரத்து ஒன்பதாம் வருட சம கால வரலாறே மறக்கும் புத்தி கலவையின் மொத்த கூறுகளில் கொஞ்சம் மண்டையை கசக்கினால் பெரியார்,காமராஜர்,தமிழகத்தில் பங்காளி சண்டை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்,கொடியில் மட்டும் உட்கார்ந்து கொண்ட அண்ணா தாண்டி நாம் பயணிப்பதில்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
அதையும் தாண்டி ஆகஸ்ட் 15ம் தேதி கொடியேற்றி ஜெய் ஹிந்த் சொல்லி மிட்டாய் சாப்பிடுவதுடன் இந்திய வரலாறும் முடிந்து விடுகிறது.ஆனால் குறை சொல்ல வேண்டுமானல் காந்தியின் கயமை என்போரும்,மறுக்கப்பட்ட உரிமையென அம்பேத்காரும் என பேச படுகிறார்கள்.அனார்கிஸ்டுகளாக பார்க்கப் பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்,கடவுள் மறுப்பாளன் பகத்சிங் போன்றவர்கள் காந்தியின் அகிம்சை,பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமாதானம் போன்ற உடன்படிக்கையின் முன் பின் தள்ளப்பட்டு விட்டார்கள்.இந்தியாவின் சகிப்புத்தன்மையின் பிரதிபலிப்பு மட்டுமே இவை.</div>
<br />
<div style="text-align: justify;">
ஆனால் மொத்த சகிப்புத்தன்மையை தாங்கிய மண் இந்தியா என்பதை அலெக்ஸாண்டர்,மங்கோலியர்.முகலாயர்,போர்த்துகீசியர்,டச்சு,பிரெஞ்சு,ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பினை கவனித்தால் சகிப்புத்தன்மையும்,அடிமைத்தன்மையும் அண்ணன் தம்பிகள் மாதிரி.இந்தியாவின் சகிப்புத்தன்மைதான் இந்திய கூட்டமைப்பை இன்னும் தக்க வைத்த் கொண்டிருக்கிறது என்ற போதிலும் ஆமை வேக வளர்ச்சிக்கும்,ஊழல் நிறைந்த ஜனநாயக ஆட்சி முறைக்கும் இதுவே காரணம்.இதன் காரணம் கொண்டே இங்கொன்றும் அங்கொன்றுமாக புரட்சியென நக்சல் இயக்கமும்,ஜனநாயகத்துக்கு மாற்றான சிந்தனைகளும் உருவாகின்றன. ஆனாலும் இந்திய சூழலில் அவை சாத்தியமற்றவை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகில் பல ஆட்சி முறையை பல நாடுகளும் பரிட்சை செய்து ஜனநாயகத்தில் மையம் கொண்டிருக்கின்றன.அதன் காரணமாகவே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதியும் விமர்சிக்கப்படுகிறார். வ.உ.சியும் பிழைக்கத் தெரியாதவர் என ஆங்கிலேயர் காலத்து வரலாறு திரிபு படுகிறது.சம காலத்து சினிமா பாடல்கள் பக்கம் வந்தால் மட்டுமே பாரதியை பாமரனும் புரிந்து கொள்ள முடியும்.ஏழுக்கட்டை இப்பொழுது நாட்டுக்கட்டையாகி விட்ட போதிலும் ஆதி,தாளம்,பல்லவி மீதி சங்கீத கட்டமைப்புக்களை பாரதியின் பாடல்கள் கட்டுடைக்கின்றது.</div>
<br />
<div style="text-align: justify;">
கண்ணதாசனின் பாடல் வரிகள் தமிழ் இசையின் நிரந்தரமாகி விட்டது போல் இயற்கை,சுதந்திரம்,தாலாட்டு,பாஞ்சாலி சபதம் என பாரதியும் தமிழின் கொடை. பாடல் கூட ஆட்சி இயந்திரத்துக்கு கோபம் கொண்டு வரும் என்பதற்கு கோவனின் பாடல் சான்று.ஆங்கிலேயருக்கும் பாரதியின் பாடல்கள் கோபத்தை கொண்டு வந்தது. ஜெயலலிதாவுக்கோ அல்லது ஆங்கிலேயருக்கோ பாடல் வரிகள் தெரிவதேயில்லை. தெரியப்படுத்துவதெல்லாம் இப்போதைய ஆட்சி உளவுத்துறையும், கரைவேஷ்டிகளும்தான் மாதிரி அப்பொழுதும் ஆட்சி உளவுத்துறையும்,பட்டா மிட்டா மிராசுகளும்,ஆட்சிக்கு உதவும் தமிழ் அல்லக்கைகளும்தான். </div>
<br />
<div style="text-align: justify;">
சுதந்திர குண்டு வைத்த மண்டேலாவுக்கு நோபல் பரிசு. பாடலும்,பத்திரிகையில் புரட்சி கருத்தும் சொன்ன பாரதிக்கு தேச துரோகி பட்டம். ஜாதிகள் இல்லையடி பாப்பா பாடலுக்கு அப்புறம் ஏன் சார் பள்ளியில் ஜாதி எழுதுகிறீர்கள் என கேட்க இன்னும் ஒரு பாப்பாவும் கற்பிக்கப் படவில்லை .ஜாதி கேட்டால் குழந்தையை பள்ளியில் சேர்க்க மாட்டேன் என்ற கமலஹாசனுக்கு விழும் கும்மாங்குத்து மின்சார தடையில் கூட சத்தமாகவே ஒலிக்கிறது.பள்ளீயில் ஜாதி நீக்கமின்றி ஜாதி கூக்குரல்கள் வெற்றுக் கூச்சல்.ஸ்டிக்கர் கலாச்சாரம் கால கட்டத்திலும் வீழ்வேனென்று நினைத்தாயோ பலருக்கும் உத்வேகத்தை தருவது மட்டுமே ஆறுதல் பரிசு.</div>
<br />
<div style="text-align: justify;">
புதுச்சேரியில் தஞ்சம் புகுந்த போதும் பாரதி பேசிய அரசியல் ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு ஒன்றுதான். இடி மடி மீது வந்து வீழ்ந்த போதும் கழகங்கள் என்ற செக்கு மாட்டு கரை தாண்டி புது சிந்தனை எதுவுமின்றியே இணையமும்,தமிழ்மணமும்,முகநூலும்,செய்திதாளும்,தொலைக்காட்சிகளும் தமது கருத்தையும்,சிந்தனையையும் தெளளி இறைக்கின்றன. இதில் பாரதி இப்படியாக்கும், அப்படியாக்கும் என்ற சேட்டையும் வேற சமாளிக்க வேண்டியிருக்குது. வேற.வ.ராமசாமி அனுபவமெல்லாம் ஓசியில்தானே ஒட்ட வைத்திருக்கிறார்கள்.படிச்சுத்தான் பார்க்கறது போலிச் சாமியார்கள் மாதிரி ஆன்மீக உலா வராமல் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் உலா வருவதுதானே!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
பாரதியே! ஒரு முறை நினை நினைந்து<br />
<br />
சொல்லவும் கூடுவதில்லை அவை<br />
சொல்லும் திறன் தமிழ்மொழி எனக்கில்லை<br />
மெல்ல தமிழினிச் சாகும்<br />
என்றந்த பேதை உரைத்தான்<br />
எட்டுத் திக்கும் சென்றடைந்தோம் கலைச்<br />
சொல்லிங்கு கொண்டு சேர்த்தோம்<br />
<br />
இந்தக் கணமட்டும் காலன் என்னை<br />
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.<br />
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி<br />
ஏது செய்வேன் ஆருயிர் மக்காள்<br />
கொன்றிடல் போன்றொரு வார்த்தை - இங்கு<br />
கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்<br />
<br />
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்<br />
கண்டதோர் வையை பொருநை நதி-என<br />
மேவிய யாறு பலவோடத்-திரு<br />
மேனி செழித்த தமிழ் நாடு<br />
<br />
இனி காவிரிக்கு கெஞ்சி<br />
பெண்ணையும் காணோம் பாலாறும் காணோம்<br />
வைகைக்கு குரல் கொடுத்து பொருள் நிதி தேடி<br />
கூவம்,பக்கிங்காம் காலவாய் என கூனி குறுகி போனோம்<br />
<br />
மழையே என் செய்தாய் எம்மை!<br />
<div>
<br /></div>
Unknownnoreply@blogger.com13tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-14625491453179565782015-12-09T14:42:00.000+03:002015-12-09T14:42:53.417+03:00தமிழ் நாட்டு யோசனைகள்.<div style="text-align: justify;">
தற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே ஆட்சி இனி தொடர்ந்தாலும் மக்கள் மாற்றங்களை இனி விரும்பினாலும் ஆளும் அரசு 2016ல் எப்படி செயல்படலாமென்ற இலவச ஆலோசனை இது.</div>
<div style="text-align: justify;">
தற்போதைய நிவாரண உதவியாக ஐந்தாயிரம்,பத்தாயிரம்,கோழிக்கு கூட நூறு ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்திருந்ததை அறிந்தேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதோடு ஒரு அரசு நிர்வாகமும் பொதுமக்கள் நலன் என்ற நோக்கோடு ஒரு நிறுவனம் செயல்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புக்களை கொண்டது.திராவிட கழகங்களின் ஆட்சியில் தமிழகம் நிர்வாக கட்டமைப்புக்களை முடிந்தவரை கட்டமைத்துள்ளது ப்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.ஆனால் அதனை நிர்வாகிக்கும் திறனில் குளறுபடிகள் வந்து விடுவதாலும் புறக்காரணிகள் சிலவற்றாலும் திரும்ப திரும்ப ஆட்சி மாற்றங்கள் வந்து விடுகின்றன.</div>
<br />
<div style="text-align: justify;">
.தமிழக் அரசு தரும் குறைந்த பண உதவியும் கமல் கேள்வி கேட்ட வரிப்பணத்திலிருந்துதான் செலவாகிறது.இந்த சிறு உதவி டாஸ்மாக்கில் கூட ஒரு சிறு பகுதி செலவழிக்கும் தற்காலிக வலி நிவாரணியே தவிர நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தாது.ஒரு புறம் அரசின் பெரும் சுமை என்ற போதிலும் மறு புறம் இயலாத வயதானவர்கள்,விதவை தாய்மார்கள்,ஏழைப் பட்டியலில் இன்னும் தள்ளாடுவோர் என பலருக்கும் தினசரி பசியை நீக்குகிறது.இலவசம் என்பதை விட குறைந்த விலை உணவு பங்கீடு மட்டுமே அரசாங்கத்தின் செலவை ஓரளவு குறைக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
அரசாங்கத்தால் தரப்படும் பண உதவிகள் கூட முதியோர்,விதவைகள் போன்றோர் நேரடியாக பெறுவதில்லை.இடைத்தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவரிடமிருந்து அவரது கமிசன் போக பெற்றுக்கொள்ளும் முறையை கிராமத்து பெண் ஒருவர் சொன்னார்.</div>
<br />
<div style="text-align: justify;">
பொருளாதாரத்தின் அடிப்படை எதுவுமே இலவசமல்ல. அரசு நிர்வகிக்கும் வரிப்பணத்தின் கணக்கை இடம் மாற்றும் ஜிகினா வேலைப்பாடே இலவசம். பழைய காலத்து கணக்கில் ஆயிரம் ரூபாய் கைவசமிருந்தால் வீட்டு வாடகை,அரிசி மளிகை சாமான்,பால்,காய்கறி,பள்ளி குழந்தைகள் செலவு போக ஓட்டலுக்கு ஒரு நாள்,சினிமாவுக்கு ஒரு நாள் என்ற சுகமே ஒரு அரசின் இலவசங்கள் அறிவிப்பு. எப்படியிருந்த போதிலும் ஆயிரம் ரூபாய்க்குள் வாழ்க்கை வண்டி ஓட வேண்டும். </div>
<br />
<div style="text-align: justify;">
உலக பொருளாதார மாற்றங்களில் பைக் வாங்கனும்,கார் வாங்கனும்,வீடு கட்டனும்,கட்டுன வீட்டுல குட்டி சினிமா தியேட்டர் நினைப்பில் சினிமா பார்க்கனும் என்று ஏகப்பட்ட கனவுகளில் பணக்காகிதங்கள் அச்சடிக்கும் கொள்ளளவு அதிகரித்து ஆயிரம் லட்சமாகி இப்ப கோடியாகி விட்டன. நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து விட்டது. லஞ்சம் கொடுக்கல் வாஙகல் சுருட்டல் போக கனவில் ஓரளவு தன்னிறைவும் தமிழகம் கண்டதை பொறுக்காத மழை, ஒருத்தன் ரெய்ன் ரெயின் கோ அவே என்கிறான்.இன்னொருத்தன் வா வான்னு பூசை போடுறான்.இதுல வேற தஸ் புஸ்ன்னு டாஸ்மாக் காத்து என்னையும் தாக்கிய மப்பில் பெய்து விட்டேன்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எய்தவர்களாய் அமெரிக்க,சீனா,இந்தியாவாக இருக்க என்னை வந்து கும்மினால் எப்படி என்ற புலம்பலில் இன்னும் தூறுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அழைத்த மாநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது இப்பொழுதும் இனியுமான அரசின் கடமை.</div>
<br />
<div style="text-align: justify;">
கோவையில் கலெக்டர் அலுவலகம் சிறப்பாக மக்கள் குறைதீர்ப்பு நாளை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்துவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.இதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள ஆசைப்படும் இந்த அரசோ அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கும் அரசோ யாராகிலும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.வாக்காளர் அட்டைக்கு பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி செய்கிறார்கள்.ஆனால் திட்டமிடுதல் இன்னும் மேம்படுத்தப் படவேண்டும்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஏற்றுமதி,இறக்குமதி ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார தூண். நம்மிடம் ஏற்கனவே சென்னை துறைமுகம்,தூத்துக்குடி துறைமுகம் உள்ளன.கோவை தொழில் நகரமென்பதோடு அருகில் கொச்சின் துறைமுகம் இருப்பது தமிழ்நாட்டுக்கு சாதகமானது.இன்னும் ஒரு துறைமுக முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இருப்பதாக செய்திகள்.</div>
<br />
<div style="text-align: justify;">
விவசாய ஏற்றுமதிக்கான வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தும் சிலருக்கு ஏற்றுமதி செய்யவேண்டுமென்ற ஆவல் இருந்தும் எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை.தெரிந்தவர்கள் சிலர் ரிஸ்க் எதற்கு எடுக்க வேண்டும் என்று நினைப்பதால் இடைததரகர்களிடம் தாரை வார்த்து விடுகிறார்கள். கோவை,ஈரோடு,திருப்பூர் பகுதி விவசாயிகள் சிலர் சந்தைக்கு பொருளை கொண்டு போய் வியாபாரம் செய்வதற்கே சங்கடப்படுவதால் காசு கையில் இருக்கும் சேட்டன்கள் ஊர் கடந்து வந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி,பொருளை பேக்கிங் செய்வது முதல்,கப்பல் செலவு,வண்டி கூலி,தனது நிகர லாபம் என கணக்கிட்டு வளைகுடா சேட்டன்களுக்கு விற்று விடுகிறார்கள். தமிழகம் ஏற்றுமதி கெடுபிடிகளை குறைத்தால் கொச்சின் போகும் பொருட்களை தமிழகம் சார்ந்த துறைமுகங்களில் தமிழர்களுக்கு வருமானம் கிடைக்கும் படி செய்து விடலாம்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஏ.டி.எம் முறையில் வங்கிகள் சிறப்பாக செயலடுகின்றன.ஏ.டி.எம் கார்டுகளை வங்கிகளை தவிர்த்தும் வியாபார தளங்களில் வங்கி கணக்கோடு இணையும் இயந்திரத்தில் வரவு செலவை கணக்கை அளவிடும் உபயோகிக்கும் முறை வந்து பரிசோதனை செய்யப்பட்டு வளைகுடா நாடுகளிலும்,மேற்கத்திய நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன.முன்பு கிரடிட் கார்டுன்னாலே களவானி பயம் போய் இப்பொழுது கிரடிட் கார்டு இருந்தால்தான் பண பரிவர்த்தனை முறை இணையத்தில் வந்து விட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளைகுடா நாடுகளிலிருந்து எங்கே பணம் செல்கிறதோ அத்தனையும் வங்கி,வங்கி இணைப்புடன் மத்திய வங்கி என நெட்வொர்க்கிங் வெற்றிகரமாகி விட்டன.இது வரை கடத்திய கறுப்பு பணமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை என்ற வளர்ச்சியிருந்தும் இந்தியாவில் அவை செயல்படுகிறதா என்று தெரியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுதுள்ள மழையிலே தெரியும்,மழை பேரிடர் வந்தால் எங்கே நீர் நிற்கும் எங்கே ஓடும் எங்கே திரும்ப வந்து வீட்டுக்குள் புகுந்து விடுமென்று. அத்து மீறி கட்டிய வீட்டு நிலங்களை அரசு கையகப் படுத்திக்கொண்டு அங்கே வாழ்ந்த மக்களுக்கு மாற்று வீடுகள் தருவது கட்டாயமானதும் முதல் கட்ட நடவடிக்கையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்த கடனும் வங்கி மூலமாகவே பெறப்பட வேண்டும். கடனை கட்டவில்லையென்ற பேச்சுக்க்கே தமிழக்த்தில் பேச்சுக்கு இடமில்லை. முதலாவது தங்கம்,இரண்டாவதாக அசையாப் பொருட்கள்,மூன்றாவதாக ஆட்டைய போட மாட்டார் என இருவர் வக்காலத்து. கட்டவில்லையென்றால் குடும்பம் பொறுப்பு ஏற்க வேண்டும் அல்லது வக்காலத்து கியாரண்டி கையெழுத்து போட்டவர் பொறுப்பு. இதையும் மீறி தவிர்க்க முடியாத நிலையில் காந்தி கணக்கு என ரைட் ஆஃப் செய்து விடலாம்.நான் இந்த ஐடியா கொடுக்கும் போதே கையை எங்கே வைக்கலாம் என சில கண்மணி பிறப்புக்கள் கற்பனை செய்யக்கூடும்:)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீதி இடங்களில் மழையில் வீடுகள் தானே சேதாரமாகி விட்டது. இருக்குமிடத்தில் புதிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.காசுக்கு எங்கே போறதுன்னா அதுக்கு அரசு நீண்டகால கடன் உதவி செய்ய வேண்டும்.காசு கொடுத்தா திரும்ப கட்டமாட்டேங்கிறாங்கப்பா எனும் வங்கிகளுக்கு எல்லோரும் அப்படியென்று சொல்ல முடியாது.ஆட்டைய போட்டு விடலாம் என்ற சில விதிவிலக்குகள் இருக்கும்.அப்படி பட்டவர்களுக்காக வேண்டியே கடனை திருப்ப கட்ட முயலுபவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் படியான சட்டங்கள் என்னவென்றால் நகை மீது கடன். அஞ்சு வட்டிக்காரன்கிட்ட போய் மாட்டிக்கொள்ளும் நகை வ்ங்கியில்தான் பாதுகாப்பாக இருக்கட்டுமே.</div>
<div style="text-align: justify;">
அரசு பணியாளர்கள் ஏற்கனவே அரசு உதவிகளை அனுபவிக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் கடன் கொடுத்தால் ரிட்டயர்டு ஆவதற்குள் கடனை கட்டி விடுவார்கள்.இல்லையென்றாலும் காப்புறுதி பணம் அரசின் கைவசமிருக்கிறது பாதுகாப்பாக.கொடுத்த பணத்துக்கு காசு வந்து விடும்.</div>
<div style="text-align: justify;">
வியாபாரிகளை நம்பி கடன் கொடுங்கள்.அவர்கள் தின சேமிப்பாளர்கள்.கடனை திருப்பி விடுவார்கள்.பொருளாதாரத்தின் அடிப்படை செலவு செய்தல்.அதற்கென்று விஜய் மல்லய்யா மாதிரி ஆடம்பரம் செய்தால் விமானம் தரை தட்டி விடும்.எந்த அளவுக்கு மக்கள் செலவு செய்கிறார்களோ அந்தளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் கோட் சூட்காரர் ஒருவர் நகரமயமாக்கலே மழை பேரிடருக்கு காரணமென்றார். அப்படியில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சியில் நகரமயமாக்கல் இன்றியமையாதது.அதுவும் பக்கத்து மாநிலக்காரர்கள் தண்ணீர் தர மறுக்க இரு கழகங்களும் நகர் மயமாக்கல் முயற்சியில் இறங்கியது பாராட்டப் படவேண்டிய சிந்தனைதான். கடற்புற நாடுகளே வியாபாரத்தை பெருக்குகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதிர்காலத்தில் பெட்ரோல் இல்லாமல் போனாலோ அல்லது அமெரிக்கா மாற்று எரிபொருளை கண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற நோக்கில் எண்ணை பொருளாதாரம் இல்லாமல் போனாலும் மேற்கத்திய நாடுகளையும்,ஆசியாவையும் இணைக்கும் பாலமாக துபாய் திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாக செயல்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டில் விளையும் மாம்பழம் டெல்லிக்கு ஏற்றுமதியாகி அங்கே ஒரு நிறுவனம் தோலிருக்க சுளை முழுங்கி மாதிரி மாம்பழ சாறை மட்டும் எடுத்து ட்ரம்களில் நிறைத்து வளைகுடாவுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறது. தமிழகம்,கேரளாவில் விளையும் தேங்காய் சோப்பு கலவையாகவும்,மூஞ்சி பூசிகளாகவும் மறுவடிவமாக ஒய்யாரமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் உட்கார்ந்து கொள்கிறது.நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்ன்னு ஒரு விளம்பரம் வந்த மாதிரி தேங்காய் எண்ணை அப்படியே வடித்து வந்து விடுகிறது.தமிழ் நாட்டில் பருப்பு விலையேறினாலும் மார்க்கெட்டில் விலையேற்றமில்லாமல் பொருட்களின் வைப்பு வைக்கப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்னவை நகர்வதும் புதியவை வந்து உட்கார்ந்து கொள்வதும் (First in First out ன்னு தமிழில் ) பொருட் கிடங்கின் வியாபார அடிப்படை. பேரிடர் மேலாண்மையென்ற சொல்லையே இப்பொழுதுதான் நான் கற்றேன்.(நன்றி பொள்ளாச்சி புரபசர்.) பேரிடர் மேலாண்மையின் முதல் அடிப்படையே உணவு சேகரிப்பும் பங்கீடும்தான்.ஒரு நாள் குளிக்காமல் கூட இருந்து விடலாம்.உணவு கட்டாயம்.மாவட்டம் தோறும் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு பழுதென்றாலும் இன்னொன்று கைகொடுக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
சதாம் உசைனின் ஆக்கிரமிப்பின் பின் கூட குவைத் தனது நாட்டின் தகவல் சார்ந்த செய்திகளை இழக்கவில்லை. தனது நாட்டில் ஒரு காப்பியும்,மாஸ்டர் காபி என லண்டன்,அமெரிக்கா என ஐந்து இடங்களில் வைத்திருந்தது. எனவே நாடு குறித்த அனைத்தையும் மீள் கட்டமைக்க முடிந்தது. முன்பு காகிதம் மட்டுமே உதவியென்ற நிலை போய் இப்பொழுது காகித ஆவணத்தோடு கம்ப்பூட்டர் தகவல்கள் அதுவும் எளிதாக சேகரிக்கும் வசதிகளில் அரசு தகவல்கள் மீட்கொணர்வு பிரச்சினையே இல்லை.காகிதத்தையும் நம்பாதே!கணினியையும் நம்பாதே புதுமொழி இந்த மழைக்கு மிகவும் பொருந்துமென்றாலும் நகல்கள் ஓரளவு தகவல்களை தக்க வைக்கும்.மத்திய மாநில இணைப்புக்கள் அவசியம்.</div>
<br />
<div style="text-align: justify;">
அரசுப் பணியாளர்கள் ரிலாக்ஸாக பணி புரியுங்கள். அரசுப் பேருந்து வாகன நடத்துனர்களைப் பாருங்கள்.அடுத்த இடம் வருவதற்குள் டிக்க்ட்டும் கொடுத்து கணக்கும் எழுதிக்கொள்கிறார்.இறுக முகம் வைக்காதீர்கள். ஹலோ சொல்லிப் பழகுங்கள்.முகத்தில் சிரிப்பு காட்டுங்கள்.மன அழுத்தம் குறையும். இம்புட்டு வேலையில் யாருக்கய்யா சிரிப்பு வரும்னு எதிர்க் கேள்வி போட்டால் குறைந்த பட்சம் கொஞ்சம் மூச்சை இழுது விட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். வங்கி,நீர் வரி,நில வரிக்காரர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.காசைப் பார்த்துக்கொண்டே இருப்பதால்தானோ! </div>
<br />
<div style="text-align: justify;">
சிடு மூஞ்சிகளாய்,வரிசையில் நில்லுன்னு தாசில்தார்,போலிஸ் நிலையம் குறைந்த பட்சம் பெஞ்சு போட்டு வைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. வருமான வரி கணக்கு அட்டைக்காரர்கள் ஒரு விண்ணப்பம்,ஒரு போட்டோ ஒரு வார் காலத்திற்குள் வீடு தேடி கணினி தகவல் அட்டை வந்து விடுகிறது. தற்போதைய நிலையில் ஒரு தேசிய அட்டை,ஒரு வங்கி அட்டை,ஒரு கிரடிட் கார்டு போதுமானது.</div>
<br />
எத்தனை ஆவணத் தேவைகள்?<br />
பள்ளி,கல்லூரி சான்றிதழ்<br />
ரேசன் கார்டு<br />
பாஸ்போர்ட் காப்பி<br />
வீட்டு வரி / நீர் வரி / மின் வரி<br />
இருப்பிட சான்றிதழ்<br />
வாக்காளர் அட்டை<br />
புதிதாக வந்திருக்கும் கண்,கை ரேகை<br />
12/14 இலக்க எண்,பெயர்,படம் தவிர வேறு தகவல் இல்லாத தேசிய அட்டை<br />
<br />
<div style="text-align: justify;">
இத்தனையையும் ஒரே ஒரு டாடா கார்டு பதித்த தகவல் சேமிப்பு தேசிய அட்டை செய்து விடும்.ஒரே எண் அனைத்து துறைகளுக்கும் வங்கி உட்பட.அப்படித்தான் தேசிய அட்டைகள் அச்சடிக்கப் படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழை கடவுள் கொடுத்த நன்கொடையா!</div>
<div style="text-align: justify;">
தின வாழ்வை கெடுத்த மின் தடையா!</div>
<br />
மழை கூட புதுப்பித்தலே!புதியவர்களாவோம்.<br />
<br />Unknownnoreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-6836962283491760642015-12-07T14:26:00.001+03:002015-12-07T14:26:15.262+03:00கமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்<div style="text-align: justify;">
இந்த பதிவுக்கு கமல் அவர்கள் சம்பந்தமில்லையென்ற போதிலும் இதுவரைக்கும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிவின் காரணமாக நானும் பின்னூட்ட நண்பர்களும் காரணம் என்பதால் முந்தைய பதிவை படிச்சிட்டு பின் வைத்தியம் பாருங்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
நந்தவனத்தான்!நம்ம பின்னூட்ட விமர்சனங்கள் இல்லாமலும்,படிக்காமலும் கமல் மறு அறிக்கை விட்டிருக்கிறார்.இப்ப என்ன பண்ணுவீங்க!</div>
<br />
<div style="text-align: justify;">
காளமேக புலவரின் பேரன் பழமை பேசி என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ அதையும் சேர்த்து படிச்சிருங்க.எனக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு டிஸ்கி வேற போட்டதால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்குது:). </div>
<br />
<div style="text-align: justify;">
நம்பள்கி விளையாத தரிசு நிலம்! அதை நான் சொல்லலை என்கிறார். பழமை மருத்துவம் சொல்கிறார். தப்பி தவறி பெண்கள் யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா குறிப்பெடுத்துக் கொண்டு அறிந்தவர்கள் யாருக்காவது தேவையிருந்தால் உடுமலை கடையை நாடவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்பெல்லாம் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தும் எப்பவாவது ஹலோ சொல்ல கொஞ்சம் இருமல் தலைவலி வந்து விடும்.தலைவலிக்கு கொஞ்சம் தூக்கமோ அல்லது ஒரு பெனடால் எனும் தலைவலி மாத்திரை போட்டால் சரியாகி விடும்.இருமலும் அப்படியே. இதுவரையிலும் பெரும் நோயில் படுத்து கிடக்காமல் இயந்திரம் ஓடுகிறது. ஆனால் யோகா உலக தினத்திற்கு சில மாதங்கள் முன்பிருந்தும் பின் தொடர்ந்தும் முடிந்த வரை தியானப் பயிற்சியும்,மூச்சுப்பயிற்சியும் தொடர்வதால் எப்பவாவது ஹலோ சொல்லும் இருமலும்,தலைவலியும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக விடுப்பில் போய் விட்டது. </div>
எனது நண்பர் ஒருவர் தொழுகையையும்,யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.<br />
<br />
எனது அனுபவத்திலிருந்து சொல்வது<br />
<br />
1.தினமும் கட்டாய உடற்பயிற்சி<br />
2.மூச்சு பயிற்சி<br />
3.மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானம்<br />
<br />
<div style="text-align: justify;">
மூன்றாம் நிலை கொஞ்சம் சிக்கலானது என்னைப் பொறுத்தவரை.காரணம் சும்மா இருந்தா அதுபாட்டுக்கு எங்கேயாவது ஓடிகிட்டிருப்பதை கட்டிப்போடப் பார்த்தால்தான் எகிறி குதிக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையிலும்,இப்போதைய மழை இழப்பிலும் பெரும் மன அழுத்தங்கள் பலருக்கும் வரும்.ஆண்கள் டாஸ்மாக் தேடிப்போக கூடும்.ஆனாலும் சொன்ன மூன்றையும் கடைபிடிக்க முயலுங்கள். உடல் பருமன் குறைக்க சிறந்த வழி சைவ உணவும்,இந்திய காற்றும்.அசைவ உணவிலிருந்து உடல் விடுபட்டு விட்டால் சைவ உணவையே மனம் விரும்பும். எதுவும் பழக்கம் என்பதை அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி மனைவியின் இரட்டை சமையல் சிரமத்துக்கு பயந்து மீண்டும் அசைவத்திற்கு மாறியதில் இப்பொழுது சைவம் ஒட்டிக்கொள்வதில்லை மீண்டும்.</div>
<br />
<div style="text-align: justify;">
மழை காரணமாக தொற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
அலோபதிக்கு மருந்தை விட தேன்,மிளகு கலவையை உட்கொள்வது இருமல் மூச்சு இரைச்சலை குறைக்கும். முடிந்தால் கட்டஞ்சாயாவில் மிளகு,இஞ்சு கசாயம் செய்து சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிக்கலாம். பால் கிடைக்காத சூழலில் இந்த தேநீரே உடலுக்கும் நல்லது.தமிழகத்தில் இயற்கையாக வாழ பல வாய்ப்புக்கள் இருக்குது.கொஞ்சம் முயன்றால் பழகி விடும்.</div>
<br />
<div style="text-align: justify;">
முடியாமல் படுக்கையில் கிடப்பவர்களுக்கும் முக்கியமாக வயதானவர்களை முதுகு எப்பொழுதும் தரையில் படும்படி படுக்க வைக்காதீர்கள். அது கிடைப்புண்ணை உருவாக்கி விடும். சின்ன விசயமென்றாலும் சிலருக்கு தெரிவதில்லையென்ற அனுபவத்தில் சொல்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
Unknownnoreply@blogger.com18tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-70593653367052788442015-12-06T00:14:00.000+03:002015-12-06T00:14:55.791+03:00கமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்!<div style="text-align: justify;">
தகவல்கள அனைவரையும் போய் சேர இயலாத தமிழகத்தின் மழை இடரிலும் கமலின் வெட்கபடுகிறேன் கருத்து பொது தள விவாதமாகி இருக்கிறது.முன்பெல்லாம் கமல் அரசியல் சாயம் ஒட்டாமல் அறிவு ஜீவி கருத்துக்களை பட வசனங்களில் மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.தானுண்டு தன் வேலையுண்டு இருந்தபோது இவர் ரொம்பத்தான் தலை கர்வமாக்கும் என்று கிட்டியது பிம்பம்.</div>
<br />
நிற்பதுவோ!நடப்பதுவோ! வெறும் காட்சி பொருள்தானோ? யாமறியோம் கமல் சார்!<br />
<br />
<div style="text-align: justify;">
முந்தைய சூழலை புரட்டிப் போட்டது விஸ்வரூபம் பட வெளியீடு சிக்கலும் அதன் மன அழுத்தத்தில் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்ற மனவெளிப்பாடும் விமர்சனத்துக்கும்,எதிர்வினைக்கும் வசதியாகிப் போனது அவரது விஸ்வரூப காலத்து மனநிலை. பிரச்சினைகளிலிருந்து வெளிவந்த பின் தனக்கு ஆதரவும் அன்பு வெளிப்பாடுகளும் இருப்பதை உணர்ந்த பின் தான் சார்ந்த சமூகம் குறித்து கருத்துக்களை இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்துகிறார்.வாய் மூடி மவுனிப்பதை விட எதிர்வினைகள் நல்லதுதான்.மௌனம் சிக்கலில்லாதது. எதிர்வினைகள் வரலாற்றை சொல்லி வைக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
தூங்கா வனம் சந்தானம் மூலம் வசனம் வைத்தது போல் ரெண்டு டூயட் பாடிக்க,சண்டை சீன் வச்சுக்க உனக்கு ஏன் கருத்து வசனம் போல மேடம் ஜெயலலிதாவும் அமைச்சர் மூலம் அரசு அறிக்கை விடுகிறாரோ! தமிழகத்தின் பெரும் மழையில் தனது இயலாமை குறித்து வெட்கப்படுகிறேன் என்ற கருத்துக்கு மழையின் துயரத்தில் இருக்கும் பல கோபக்குரல்கள் பொது கருத்தாக ஒலித்தது ஜனநாயக கோப வடிவம் பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜெயலலிதா என்ற ஆளுமையை மதிக்கத் தெரியாத வாய் மூடி,சிரம் தாழ்,சீர் மண் தாழ்,பெண் கால் தாழ் என மூச்சு ஒன்றை தவிர அம்மா புராணம் பாடும் அமைச்சர்களில் மூத்த அமைச்சர் அம்மாவின் குரலாக கருத்து கந்தசாமி என கமலுக்கு மறு அறிக்கை விடுகிறாரோ அப்பொழுதிலிருந்து கமலின் கேள்வியின் வடிவம் உரு மாறுகிறது. </div>
<br />
<div style="text-align: justify;">
கமலின் கேள்வியில் என்ன தவறு? நான் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறேன் என்ற கருத்தில் சொல்லின் ஆழம் நிறைய நிறைந்து கிடக்கிறது. காதுள்ளவர்கள் கேட்க கடவர்.கண்ணுள்ளவர்கள் பார்க்க கடவர்.பொது நலனுக்கு உதவுவதோடு தனி மனித திருப்தியடைந்து விடுகிறது மனம்.சிறு துளி பெரு வெள்ளம் எங்கே கரை சேர்கிற்து என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதோ இப்பொழுது காணாமல் போன சென்னை வடிந்த மழை மாதிரி.</div>
<br />
<div style="text-align: justify;">
சுனாமியிலேயே நாம் பாடம் கற்றுக்கொள்ள வில்லையென்ற போதிலும் நம்மிடம் இன்னும் குறைகள் நிறைய இருக்கிறது என்ற போதிலும் மனிதாபிமானம் நிறைந்து இருக்கிறது அவசர நேரத்து பெரும்பாலான உதவிகளை சுனாமி காலத்தும் இப்பொழுதும் காண முடிந்தது.அதே போல் அவசர பொருளாதார உதவிகளும் சுனாமி காலத்தும் இப்பொழுதும் வந்தடைகின்றது. சுனாமி காலத்து பொருளாதார கணக்குகளை யாராவது ஒருவர் வெளியிட முடியுமா? அரசு இயந்திரத்திடம் வெளிப்படத் தன்மையில்லையென்பதால் உதவுவதோடு நாம் மனதால் திருப்தி பட்டுக்கொண்டு வாழ்வில் மேலும் நகர்ந்து கொண்டுள்ளோம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கமலின் வெட்கத்தை பிடிக்காதவர்கள் பலர் சமூக தளங்களில், தொலைக்காட்சிகளில் தங்கள் அதிருப்தியை வெளிப்படித்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருவதில் மெல்லப் புகைவதை ஊதிப் பெரிதாக்கி விடுவதாகவே முடியும். இது தனிமனிதனின் கருத்து என்று எண்ணாமல் கமல் என்ற மனிதனின் கருத்துக்கு வலு சேர்ந்து விடுமென்றும் எதிரணிக்கு சாதகமாக முடியுமென்று அறிக்கை விடுவது தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கு பாதகத்தையே உருவாக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
தேர்தல்களை,குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகளை மக்களின் தேர்தல் காலத்து மனநிலையே முடிவு செய்கின்றன. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற படிக்காத மேதை காமராஜர் கூட தோற்றுப் போயிருக்கிறார்.</div>
<br />
அம்மா அரசாமிகளை விட கருத்து கந்தசாமிகள் ஜனநாயகத்தின் பிரதிபலிப்புகள்.<br />
<br />Unknownnoreply@blogger.com25tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87551826793219978572015-12-03T15:28:00.000+03:002015-12-03T15:28:59.836+03:00யோவ்!மழையில பைக்,காரை ஓட்டாதீர்கள்.<div style="text-align: justify;">
இருக்குற மழை மன அழுத்தம் பத்தாதுன்னு யாரோ ஒருவர் இந்தியாவிலிருந்து ரொம்ப அக்கறையா ஒரு காணொளியை தட்டி விட்டார்.</div>
<div style="text-align: justify;">
ஒரு பையன் கொஞ்சமா ஓடுகின்ற தண்ணீர்தானே என்று ஒரு கால்வாய் பாலத்தை கடக்க முயற்சி செய்ய பைக்கின் முன் சக்கரம் வழுக்கி அப்படியே பைக்கையும்,பையனையும் உள்ளே அமுக்கி விட்டது.பைக்கையும் காணோம் பையனையும் காணோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முந்தைய பதிவில் சொன்ன மாதிரி வேடிக்கை பார்க்கும் நம்ம குண தோசத்தில் இந்தக்கரையில் படம் எடுப்பவர் பிலிம் காட்டிக்கொண்டும் மறுகரையில் கார் நின்று கொண்டிருக்க மெதுவாக பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டுள்ளார்கள்.</div>
<br />
நான் பட்ட அவஸ்தை மற்றவர்கள் படக்கூடாது என்ற எண்ணத்தில் காணொளி ஒட்டாமல் தடை செய்யப்படுகிறது.Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-80988696525049307092015-12-03T13:00:00.000+03:002015-12-03T13:00:02.355+03:00தமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு<div style="text-align: justify;">
தற்போதைய தமிழக வெள்ளத்தில் உடனடி நிவாரண உள் கட்ட்மைப்பு அரசும்,தனியார் துறையும்,பொது ஆர்வலர்களும் பொது மக்களும் சார்ந்தது. என்னைப்போன்ற பரதேசிகளால் ஏதாவது உதவ இயலுமா என்று யோசித்ததில்...</div>
<br />
<div style="text-align: justify;">
முன்பு ஒரு முறை இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணை வியாபாரம் பற்றி கடிதம் எழுதினால் கூட அதற்கு மறு பதில் சொல்லுமளவிற்கு நேரமில்லாமலோ அல்லது அலட்சியம் காரணமாகவோ புறக்கணித்து விடுவார்கள்.பின் டெண்டர்,அரசு துறை சுற்றுக்கள் என்ற கால விரயம் காரணமாக பெட்ரோலிய கச்சா பொருட்களில் கவனம் செலுத்தவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போதைய தமிழக மழை வெள்ளம் சூழலில் இந்த பதிவு தகவல் மூலமாக அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் தொழில் துறை சார்ந்தவர்களோ பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமில்லாமல் மழை வெள்ளம் போன பின் மீள் கட்டமைப்பை மட்டும் கவனத்தில் கொண்டு செயல் பட நினைப்பவர்கள் அணுகவும். </div>
<br />
செயல்பாட்டுக்கான கச்சா பொருட்கள் மெட்ரிக் டன் எனப்படும் கணக்கில்<br />
<br />
<div style="text-align: justify;">
1. பழைய இரும்பு கம்பிகள் 500 டன் ஒரு மாத கால தவணை இறக்குமதி. ஓரளவுக்கு தரமான கம்பிகள் என்பதால் அப்படியே உபயோகிக்கலாம் அல்லது மறு உருவாக்கம் செய்யலாம்.</div>
<div style="text-align: justify;">
2. தார் ரோடு போடும் கலவையில் கலக்கும் வொய்ட் ஸ்பிரிட் சுமார் 16 மெட்ரிக் டன்னும் அதற்கு மேலும்.</div>
<div style="text-align: justify;">
3. கெரோசின் எனும் வாசனை மற்றும் வாசனையில்லாத மண்ணெண்ணை</div>
<br />
<div style="text-align: justify;">
வொய்ட் ஸ்பிரிட் என்பது தார் ரோடு தவிர பெயிண்ட்டில் கலக்கும் மற்றும் டர்பன் டைன் பெயிண்டைக் கழுவுவதற்கான மாற்று. மரச்சாமான்கள், பூச்சிக்கொல்லி,கொசு,ஈ மருந்து என பல கெமிக்கல் துறை சார்ந்தது. கூகிள் மற்றும் இந்திய தொழில் தகவல் படி மும்பாய் துறைமுகமும்,சென்னை துறைமுகம் மட்டுமே அதிக அளவில் வளைகுடா நாடுகளிலிருந்து வொய்ட் ஸ்பிரிட் இறக்குமதி செய்கிறார்கள். </div>
<br />
<div style="text-align: justify;">
இந்த வொய்ட் ஸ்பிரிட் பெட்ரோலிய உப பொருள். இதனை டாஸ்மாக் கலவையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். டாஸ்மாக் எதனால் அடிப்படையானது.பெட்ரோலிய வொய்ட் ஸ்பிரிட் ஹைட்ரோ கார்பன் அடிப்படையானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
4. தமிழகத்தில் அரிசி போகம் செய்தாலும் தற்போதைய மழை சூழலில் பயிர்கள் மோசமாகி இருந்தால் டெல்லி,ஹரியானா பகுதிகளிலிருந்து பசுமதி,சம்பா வகை அரிசிகளை கொண்டு வந்து விடலாம்.</div>
<br />
<div style="text-align: justify;">
5.தேயிலை டீ,தேங்காய்,எண்ணை,பருப்பு போன்றவை தமிழகத்திலேயே உற்பத்தியாகின்றன. தமிழக அரசு தேவைகளை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். முடியாத பட்சத்தில் ஏற்றுமதி பொருட்களை தமிழகம் நோக்கி திருப்பி விடலாம்.</div>
<br />
<div style="text-align: justify;">
கொஞ்சம் நிலைமை சீராகிய பின் ஈரான்,துபாய் எண்ணை வளங்களை உபயோகிக்க முடியுமா என பார்க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாற்று ஆலோசனைகளை யாராவது தெரிவித்தாலும் செயல் படுத்த இயலுமா என முயற்சி செய்யலாம்.லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் வாகன பொருள் இடமாற்றங்கள்,பணம் பட்டுவாடா என்ற இரண்டு நிலைகளை கடக்கும் வலிமையில் பிரச்சினைகளை ஓரளவுக்கு சீர் கொண்டு வந்து விட முடியும்.</div>
<br />
<div style="text-align: justify;">
இதில் தமிழக நலன்,பொருள் தேடல் தவிர எனது சுய நலம் எதுவுமில்லை என்ற டிஸ்கிளைமர் போட்டு விடுகிறேன்.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-46513578790646831712015-12-02T16:26:00.002+03:002015-12-02T16:26:39.992+03:00 வாழ்வை பிரதிபலிக்காத இலக்கியவாதிகள்.<div style="text-align: justify;">
இந்த பதிவின் தலைப்பை 2009ம் வாக்கில் எழுதியிருக்க வேண்டும்.எழுதும் நேரமும்,வாசிப்பின் காலமும் இன்னும் சொல்லபோனால் ஒரு நேரப் பசியையாவது காசாக எழுத்தால் பார்க்கும் தமிழ் இலக்கியவாதிகள் என்று அக்மார்க் ஒட்டிக்கொண்ட பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முள்ளி வாய்க்கால் கால கட்டத்தில் மூடிக்கொண்டே இருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி அதுதான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு விவகாரம்...வழியில் எவனோ படுத்துக் கிடந்தாலோ,இருவர் சண்டையிட்டுக்கொண்டாலோ வேடிக்கை பார்க்கும் சென்னை கலாச்சாரத்தில் ஊறிய பழக்க தோசம் என்றாலும் தன் வீட்டுக்கும்,தான் நடக்கும்,பிரயாணம் செய்யும் ரோட்டில் அடை மழை அடித்து துவைத்து விட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு எழுத்தாளர் ருமாலி ரொட்டி எப்படி செய்வது என்று பாடம் எடுக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ருமாலி ரொட்டி என்பது தட்டையான ருமாலியை இரு கைகளிலும் பரப்பி தலைக்கு மேல் விசிறி ருமாலி கவிழ்த்துப் போட்ட வடச்சட்டி மேல் வந்து உட்காரும்ங்கிற தொழில் நிபுணத்துவம் கூட தெரியாமல் ருமாலி பற்றி என்ன கட்டுரை வேண்டிக்கிடக்குது?</div>
<br />
<div style="text-align: justify;">
எதிர் கோஷ்டியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் புர எழுத்தாளரோ தமிழ் ஹிந்துவில் கண்ட பயணிகள் ஊர்தியின் படம் போட்டு புலம்பிக்கொண்டுள்ளார்.தன்னைச் சுற்றிய நிகழ்வுகள் கூட பாதிக்காமல் என்ன எழுத்தோ கட்டுரையோ! தூரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்கே சென்னை வெள்ளம் மனம் பகீர் என்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
ஒரு புறம் சகிப்புத்தன்மை விவாதம் பாரளுமன்றத்தில் நிகழ்ந்தாலும் சிரமங்களுக்கு இடையிலும் வாழும் சென்னை வாழ் மக்கள் சகிப்புத்தன்மையின் வெளிப்பாட்டின் அடையாளம்.</div>
<br />
<div style="text-align: justify;">
பெயர் சொல்லிக்கொள்ளூம் படியான டாட்டா,அம்பானி,மிட்டல்களின் இந்திய பொருளாதார மேம்பாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிக்காப்பவர்கள் கையேந்தி பவன் துவங்கி,உணவு விடுதிகள்,சிறு தொழில்கள்,மிதமான பணக்காரர்கள்,பணத்தோடு கொஞ்சம் மனித நேயத்தையும் அன்பளிப்பவர்கள் என்பவர்களின் சராசரியில் இந்திய பொருளாதாரம் இன்னும் சுழல்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
பிளாஸ்டிக் போடுற, அதனால்தான் மழை வந்து உன்னை அடிச்சுப்போட்டுச்சுன்னு எதிர் லாஜிக் கருத்துக்கள் தென்படுகின்றன. பிளாஸ்டிக் போட்ட, அடைச்சு வீடு கட்டிகிட்ட இதெல்லாம் பிளாஸ்டிக் போட்டவன்,வீடு கட்டிகிட்டவன் குத்தமா? காசுன்னா எதுவுமே தப்பில்லைங்கிற இந்திரா காந்தி காலம் தொட்டு இப்ப ஜெயலலிதா ஆட்சி வரைன்னு தொடரும் சுய மரியாதையின்மை அது.ஆக்டோபஸ்களாக விஸ்வரூபமாய் எங்கும் பரவியிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனது அப்பாவித்தனத்தால் இந்தியன் படம் வரும் போது அரசாங்க பணியாளர்கள் ஒரு சிலராவது திருந்தி விடுவார்கள் என நினைத்தேன். நற்குணங்கள் ஜீனில் உருவாகுவதோடு வாழ்க்கையின் அனுபவங்களோடு, சூழல்களோடு சார்ந்தது என மெல்ல இப்பொழுது புரிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு உணவு நிறுவனத்தில் முன்பு பணியாற்றும் போது 150கிலோ எறா மீன் தேவைப்படும்ங்கிற கணக்கில் நீ 350 கிலோவுக்கு கணக்கு போடுன்னு அரபிக்காரனும்,எகிப்தியனும் சொன்ன கூட்டுக்களவானித்தனத்துக்கு நான் உடன்படாததால் என் வேலை போனது.பொழக்கத் தெரியாதவன் என்ற கிண்டல் அவர்களிடமிருந்து அப்பொழுது வந்தாலும் இப்பொழுது நினைப்பதற்கு மனம் நிறைவாகவே இருக்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
பொருளாதாரம்,உற்பத்தி,தொழில் என உலக மொத்த சூட்டுக்கு முக்கிய காரணிகளாக இப்பொழுது அமெரிக்கா முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் சீனாவும்,மூன்றால் நிலையில் இந்தியாவும் என திங்கட்கிழமை பஞ்சாயத்து பேசின உலக தலைவர்கள் ஒபாமா உட்பட புலம்பியிருக்கிறார்கள். </div>
<br />
<div style="text-align: justify;">
இந்திய வாழ்க்கை முறை சுகாதார முன்னுரிமைமையற்றது என்ற போதிலும்,மலை,மேகங்கள்,மரங்கள்,செடி கொடிகள்,ஏரி,குளம்,ஆறு,கடல் என இயற்கையின் நன்கொடையோடு வாழும் நமக்கு வானிலை அறிக்கை ரமணன் சொல்லாமல் போனாலும் நமக்கு பூகோள புவிச்சூட்டில் அடை மழை வரும்.50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் கொண்டு வரும்.</div>
<br />
<div style="text-align: justify;">
அங்குமிங்கும் மனித நேயங்கள் சில அவ்வபோது வெளிப்படத்தான் செய்கின்றது. ஹேப்பி கிறுஸ்மஸ் சொல்லும் நடுராத்திரி 12 மணிக்கு நான் எனது சகோதரியின் மகனோடு ஆட்டோவில் சென்னையில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு புறம் பெரிய லாரி பாரம் சுமந்து கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. லாரிக்கும், ஆட்டோவுக்கு மிடையில் மோட்டர் பைக்கில் பயணித்த ஒருவர் திடீரென லாரிக்குள் சறுக்கி விட்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தங்கை பையனோடு பேசிக்கொண்டிருந்த நான் கவனிக்கவில்லை.ஆனால் தங்கை பையன் ஆட்டோக்காரரை திடிரென பிரேக் போட வைத்து மோட்டார் பைக் காரரை நோக்கி ஓடி சக்கரத்துக்கு வெளியே இழுத்து விட்டான்.பார்த்தால் மோட்டார் பைக்காரர் மப்பு. உதவும் இந்த பழக்க தோசத்தில் இன்னொரு முறை விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை காப்பாற்றினான்.இப்பொழுதும் அவர்கள் நட்பு தொடர்கிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
பிரதி உபகாரம் நோக்காமல் சென்னை மழையில் யாராவது யாருக்காவது உதவும் முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் இருக்கலாம்.உங்கள் நல்ல மனித நேய உள்ளங்களுக்கும் உதவும் கரங்களுக்கும் ,சென்னை மழையின் அவதிக்கு அக்கறையோடு கருத்து வெளிப்படுத்தும் பதிவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.</div>
Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-67208770654379972202015-11-24T17:17:00.000+03:002015-11-24T17:17:49.962+03:00பரவாயில்லையே இளங்கோவன்!<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா வாரஇதழ் ஒன்றில் கடிதம் எழுதுவதாகக் கூறி அவர்மீது சேற்றை வாறி இறைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவர்மீது இவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்திருக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருவதால் நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கடுமையாக எழுந்து வருகின்றன. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கொல்லப்படுவது, அச்சுறுத்தப்படுவது, மிரட்டப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.</span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">எச். ராஜா எழுதிய கடிதத்தில் 'கமல்ஹாசன் என்ற சொல், தமிழ்ச் சொல்லா ? சுத்த சமஸ்கிருத சொல் தானே ? நல்ல தமிழ்ப் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை கூறுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது ? நாட்டு மக்கள் மீது சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு பல வகைகளில் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிற சங்பரிவாரங்கள் இதுகுறித்து பேசலாமா ? மேலும் 'என் தட்டில் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கமல்ஹாசன் கூறியதிலே என்ன தவறு ? பசுவதை தடைச் சட்டம் பல மாநிலங்களில் இருப்பதாகக் கூறுகிற எச். ராஜா, மேலும் இது அரசமைப்பு விதி 48 இல் இருப்பதாக கூறி தமது வாதத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். பசுவை புனிதமாகக் கருதுகிற வகையில் அப்பிரிவு இல்லை என்பதை ஒருமுறைக்கு பலமுறை அதை படித்து தெளிவு பெறுவது நல்லது. பசுவை 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து எதற்கும் பயன்படாத நிலையில் அதை கொல்வதற்கு அரசு அனுமதிப்பதையும் அச்சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை ராஜாவால் மறுக்க முடியுமா ? </span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">2014 இல் இருந்த இறைச்சி ஏற்றுமதியைவிட 2015 இல் 14 சதவீதம் அதிகமாக ரூ.29,000 கோடி ஏற்றுமதி செய்வது குறித்து ராஜா அறிவாரா ? இந்த இறைச்சி ஏற்றுமதியை அதிகமாக செய்வதே பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பது ராஜாவுக்கு தெரியுமா ? மாட்டிறைச்சி ஏற்றுமதியை அனுமதிக்கிற பா.ஜ.க., இதைத்தான் உண்ண வேண்டும், இதை உண்ணக் கூடாது என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது ? </span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">விடுதலைப் போராட்ட தியாகி பரமக்குடி சீனிவாசனின் மகனாக பிறந்து, 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 200 படங்களுக்கு மேல் நடித்து, உலக சாதனை படைத்து தமிழர்களுக்கெல்லாம் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கிற கமல்ஹாசன் அவர்களை பாராட்டுவதற்கு மனமில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் கொச்சைப்படுத்தாமல் இருக்கலாமே ? </span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களில் நடித்து தமிழர்களின் பாராட்டை மட்டுமல்ல, உலக மக்களின் பாராட்டையும் பெற்றவர் கமல்ஹாசன். 4 முறை தேசிய விருதும், 19 முறை பிலிம்பேர் விருதும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல பட்டங்களை, பரிசுகளை குவித்த தமிழ்த்தாயின் மூத்த கலைமகன் கமல்ஹாசன் மீது குறிவைத்து தாக்குகிற பா.ஜ.க.வினரின் உள்நோக்கத்தை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் தமிழ் மண்ணில் பிறந்தது தமிழருக்கு பெருமை! இந்தியருக்கு பெருமை !</span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">கடந்த ஓரிரு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் வாய்த்துடிப்போடு பேசி வருவதை நாடு முழுவதும் கண்டு வருகிறோம். அந்த வகையில் தந்தை பெரியாரை மிகமிக கேவலமாக இழிவுபடுத்தி பேசிவிட்டு, 'வைகோ வீடு போய்ச் சேர மாட்டார்" என்று மிரட்டல் விடுத்த எச். ராஜாவுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தினருக்கு சமநிலையும், சமவாய்ப்பும் தமது வாழ்க்கையை அர்பணித்து பெற்றுத்தந்தை பெரியாரை இழிவுபடுத்தி விட்டு தமிழ் மண்ணில் உங்களை நடமாட அனுமதித்தற்காக தமிழ்ச் சமுதாயத்தின் சகிப்புத்தன்மைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். </span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">எச். ராஜா எழுதிய கடிதத்தின் இறுதியில் 'எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்" என்று முடித்திருக்கிறார். எளியாராகவோ, வலியாராகவோ இல்லாமல் விபத்தின் காரணமாக அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிற எச். ராஜா போன்ற அராஜகவாதிகளை காலம் வரும்போது தமிழ் மக்கள் குப்பைக் கூடையில் தூக்கி எறிவார்கள் என்பது உறுதி.</span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;">தந்தை பெரியாரில் தொடங்கி, கமல்ஹாசன் வரை நீண்டிருக்கிற உங்களது வாய்த்துடுக்கான, தரம் தாழ்ந்த, இழிவான பேச்சுக்களை இனியாவது நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லையென்றால் அதனுடைய விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.’’</span></div>
<div style="background-color: white; font-size: 11px; text-align: justify;">
<span style="font-size: 10pt;"><br /></span></div>
Unknownnoreply@blogger.com17tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-75165721710114824382015-10-24T12:17:00.000+03:002015-10-24T12:18:15.127+03:00பதிவுலக ராதாரவிக்கு<div style="text-align: justify;">
நண்பரே!ஓடிக்கொண்டிருப்பதாலும்,இணைய தடங்களாலும் உடனடியாக மல்லுக்கு நிற்க முடியாததற்கு முதலில் உங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இலவச விளம்பரத்துக்கு நன்றி என்று பின்னூட்டம் போட்டால் கூட வெளியிட மறுக்கும் நண்பரே உங்கள் பதிவு பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி காலம் கடந்து தட்டச்சுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்மணம் இப்பொழுதெல்லாம் சண்டை களமில்லாமல் அழகாய் நகர்கிறது.அதற்கான காரணங்களில் விவாதப் பொருள் உரைப்போரும், முக்கியமாக கருத்தாளர்கள்,சண்டைக்கோழிகள் பெரும்பாலும் ட்விட்ரேன், முகத்தை பார்க்கிறேன்,பஸ் விடறேனாக்கும்,பதிவே போட மாட்டேன்... ஆனால் பின்னூட்டத்தில் கவனிச்சுக்கிறேன் என்று பலர் பிரிந்து போனதாக இருக்கலாம். </div>
<br />
<div style="text-align: justify;">
பதிவுகள் எழுதுவதை விட மற்றவர்களின் பார்வைகள் எப்படி என்று கவனிக்கும் எனக்கு முன்பு மாதிரி பதிவுலகமே கிடையா இருக்க முடியவில்லை. இதோ போன வார கோழிச்சண்டைக்கே இப்பத்தான் பதில் சொல்ல முடிகிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
திரைப்படங்களை நியூஸ் ரீலில் துவங்கி,டைட்டில் கார்டில் பெயர்கள் பார்த்த படங்கள் முதல்,கதாநாயக,நாயகிகளை பின் தள்ளி இளையராஜாவின் இசை,ஒளிப்பதிவாளர்கள் அசோக் குமார்,ஸ்ரீராம்,எடிட்டிங் லெனின்,விஜயன் இன்னும் பல தொழில் நுட்ப கலைஞர்கள்,கவுண்டமணி,செந்தில்,வடிவேல் காலம் என மாறிய போதும் கூட திரைப்படங்கள் அனைத்தும் பார்க்கும் ஞான பண்டிதம் என்னிடம் இல்லை.நடிகர்,நடிகைகள்,இசை,ஒளிப்பதிவு.கதை நல்லாயிருக்கு என விமர்சனம் படித்தோ,இப்பொழுது பதிவர்கள் பலர் ஆஹா,ஓஹோ என்றால் மட்டுமே சில படங்களை இப்பொழுது இணையத்தில் பார்க்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முக்கியமாக உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, மேதாவித்தனம் என்ற அகம்பாவம் என்னிடம் இல்லை.அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் பார்வை. இணைய தளமும்,கைபேசியும் வராத கால கட்டத்தில் என் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கூட இதே பாணியில் தான் நான் கடித பரிபாஷை செய்துள்ளேன். இவன் கடிதம் எழுதுகிறானா இல்ல கதை வசனம் எழுதுகிறானா என்ற கிண்டலை என் அண்ணனிடம் வாங்கி கட்டியுள்ளேன்.</div>
<br />
<div style="text-align: justify;">
பூச்சி முருகனை நினைத்துத்தான் கருத்து சொன்னேன். ஆனால் சங்கிலி முருகன் பெயரை கை தட்டி விட்டது. பின்னூட்டத்தில் பெயர் குழப்பத்தை லூஸ்ல விட்டுட்டேன்.ஆனாலும் நம்ம நக்கீரன் பொருள் குற்றம் கண்டு இலவச விளம்பரம் தந்து விட்டார்.பதிவின் கருத்துக்கள் எதையும் அடைகாத்து சொல்வதில்லை. அந்த அந்த நேரத்து மன நிலை,நிகழ்வுகளை ஒட்டியே கருத்து சொல்லியிருக்கிறேன். </div>
<br />
<div style="text-align: justify;">
கலைஞர கருணாநிதி தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார்.நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் 2ஜி கால கட்டத்தில் குடும்ப நலனை முன் வைத்து ஈழ பிரச்சினையை திசை திருப்பியதை ஆதங்கத்தோடு சொன்னால் அப்ப நீ அ.தி.மு.கவுக்கு வால் பிடிக்கிறவன் தானே என்று நண்பர் பிராண்டுவார். எந்த கட்சிக்கும் வாக்க படாததால் நேர்,எதிர் கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன். எங்கோ யோகா பற்றி சொல்லியிருக்க கூடும்.அல்லது இஸ்லாமிய சகோதரர்கள் பிரச்சாரம் பண்ணுறேன் பேர்வழிகள் என பதிவுகள் இட்ட கால கட்டத்தில் அரசல் புரசலாக பின்னூட்டங்களும்,பதிவும் வந்திருக்கலாம். உடனே நீ இந்துத்வா என்று இவர் பல்லிளிக்க நான் பல்லை எனக்குள்ளே நற நறக்க... இதோ இப்பொழுது மோடியின் தேனிலவு முடிந்து விட்டது.மாட்டுக்கறி,அப்பாவி இஸலாமியரை கொலை செய்த பஜ்ரங்க பலிகள் பற்றி சொன்னால் எனக்கு பச்சை வர்ணம் பூசுவீரோ? </div>
<br />
<div style="text-align: justify;">
எங்கடா சந்து கிடைக்கும்,பேந்தா ஆடலாம்ன்னு பின்னூட்ட நாயகன் வவ்வால் ஏதாவது சொன்னால் நம்ம நண்பர் மாற்று கருத்தை முன் வைப்பார். அவர் ஒன்றை சொல்ல,இவர் ஒன்றை சொல்ல நான் பேன்னு பேய் முழி முழிப்பேன். ஒரு கட்டத்தில் வரம்புகள் மீறி அண்ணன் ராதாரவியின் அங்குசத்தை வீசுவார் நண்பர். நீங்க பதிவுலகில் சொன்னதை விட,சண்டை தவிர... வவ்வால் நிறையவே சொல்லியிருக்கிறார் என நான் பிராண்ட இவருக்கு அமெரிக்காவில் எகிறுவதை எழுத்திலேயே உணர முடியும்.ஏற்கனவே வவ்வால்,ஜெயதேவ் போன்றவர்கள் உங்களை துவைத்து காயப்போட்டு விட்டார்கள். இனி புதிதாக நான் என்ன சொல்ல! உங்கள் பதிவுலக உறவுகள் முறிந்து போனாலும் கூட நான் நட்போடுதானே உங்களை கிண்டல் செய்திருக்கிறேன். உங்கள் தமிழ்,ஆங்கில மொழி நடைக்கு இதை விட இலக்கண,இலக்கிய லட்சணமாய் யாரும் சண்டை போட முடியாது.</div>
<br />
<div style="text-align: justify;">
பதிவுலகம் நல்ல பாடங்களைத்தான் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. ஒரு கருத்துக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நண்பர் மற்றும் வவ்வால் போன்றவர்களின் கருத்து மோதல்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு பிடிக்கும் கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எதற்காக பதிவிடுகிறேன்? எனக்காகவா!பிறரின் கவனம் ஈர்க்கவா என்ற புரிதல் கூட இன்று வரை என்னிடமில்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
எத்தனை பேர் பொது வெளியில் இருக்கிறார்கள் என்று கருத்துரிமை காரணம் காட்டி விமர்சனம் செய்திருப்பேன். அதே போல் நானும் விமர்சனத்துக்கு உட்பட்டவனே. ஆனாலும் இன்னும் என்னை மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதி நிலைக்கு வளரவில்லையென்பதையும் அறிவேன். ஏதோ உங்களைப் போன்றவர்கள் அருள் பார்வை கிடைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதிவுகளில் கருத்து சொல்வதற்கும் தமிழக அரசு இயந்திரங்களும்,மனிதர்கள் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்களை சமீபத்தில் அனுபவ பூர்வமாக கண்டேன்.பதிவுலகம் தீவு மாதிரி.வழி தவறி வந்து விட்டவர்கள் எப்படியோ வழி தேடி ஓடி விட்டார்கள். ஏதோ சிலர் இன்னும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டுமிருக்கிறோம்.</div>
<br />
பூச்சி முருகனும் சங்கிலி முருகனும் பெயர் குழப்பத்திற்கு என்னை மன்னிப்பார்களாக!மூளை பதிவு செய்ததை கணினி சரியாக கொண்டு வரவில்லை.மீள் பார்வை பார்க்காத குற்றத்தால் தவறு தவறாகவே போய் விட்டது.<br />
<br />
அய்யே! இந்த பதிவை பதிவேற்றும் முன் நண்பர் நம்ம பின்னூட்ட கருத்து வெளியிட்டிருக்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹும்! பதிலா பதிவுலகம் போரடிக்கிற மாதிரியிருக்குதே தோரணையில் ஏதோ புலம்பிகிட்டிருக்கார். இதோ! ஏதோ என்னால் ஆன உதவி:)Unknownnoreply@blogger.com17tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-7559189646727282152015-10-18T23:05:00.000+03:002015-10-18T23:05:16.355+03:00தமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள் <div style="text-align: justify;">
அம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தியின் வெற்றி அறிவிப்பை தொடர்ந்து தோல்விகளை கௌரவமாக ஏற்றுக்கொண்ட ராதாரவி,சரத்குமார் தன்னிலை திரும்பியமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி\றேன். ஓய்வாக இருக்கும் போது என்னவெல்லாம் பேசினோம் என்று யூடியுப் பக்கம் சென்று சுய பரிசோதனை செய்து கொள்ளூங்கள். யூ டூ சரத் சார்? So Sad.</div>
<br />
<div style="text-align: justify;">
தோல்விக்குப் பின் வந்த பண்புகளை தேர்வுக்கு முன்பே காட்டியிருந்தால் சரத்குமார் அணிக்கு எந்த தில்லு முல்லும் செய்யாமலே வெற்றி வாய்ப்புக்கள் வந்தடைந்திருக்கும். தபால் ஓட்டு சரத்குமார் அணிக்கு அதிகமாக வந்த போதே அவரின் குழு வெற்றியை நோக்கி நகர்வது மாதிரியே தெரிந்தது. நேரடி ஓட்டுக்கள் உண்மையான கள நிலையை கடைசி நேரத்தில் வெளிப்படுத்தியது. திரைக்கு முன்னால் மைக்கில் காட்டிய கோபம், குதர்க்கம், தனி மனித தாக்குதல்கள் திரைக்கு பின்னால் எழாமல் தமிழ் tதென்னிந்திய திரையுலகம் மேலும் வளர வேண்டும்.</div>
<br />
<div style="text-align: justify;">
எனது அன்பிற்குறிய பாரதிராஜா,சேரன் போன்றவர்கள் திரைப்படங்களை உருவாக்கும் திறனுக்கும்,தனி மனித செயல் படும் விதத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன என்பதை நிரூபணம் செய்தார்கள். தமிழ் திரைப்பட உலகம் பல மாநிலங்களின் திறன் தேடுதல் கொண்ட அமைப்பு. முக்கியமாக பாரதிராஜாவின் தேடல் ஓட்டம் இருக்கிறதே! ஒரு தமிழ் நடிகையை கூட அறிமுகப் படுத்தாமல் தமிழனுக்கு வக்காலத்து வாங்குகிறார் பாரதிராஜா.சீமானின் பிற்போக்கு மன பாவத்தோடு இணைகிறார் சேரன் .சரத்குமாருக்கு நன்றி கடமை பட்டவர் என்கிறார். உலகம் மொழிகளை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.இதில் தமிழ் திரைப்படமும் இணைந்தாலும் தமிழன் டா என்ற கொக்கரிப்புக்கு மட்டும் குறைவில்லை.பேசும் மொழியும்,உணர்வும் தமிழுக்கு வேறுபட்டவை.இவை திரைப்பட சண்டையில் சேர்த்தியில்லை. அப்படியிருந்திருந்தால் இன்னும் தமிழ் திரையுலகம் பாகவதம் பாடிக்கொண்டே இருந்திருக்கும்.</div>
<br />
<div style="text-align: justify;">
ரஜனி சார்! இவ்ளோ நாட்கள் வாய் மூடி மௌனம் சாதித்தீர்களே! இன்னும் சில மணி நேரம் ஓட்டுப் போடும் வரை மௌனம் கலைக்காமல் இருந்திருக்கலாமே?சென்ற பதிவில் உங்களுக்கும் சேர்த்துதானே உங்கள் மௌனத்துக்கு வக்காலத்து வாங்கினேன்:) மற்ற மாநில நடிகர் சங்கங்களை விட திராவிடம் என்ற சொல்லுக்கு இணையாக தென்னிந்தியா என்ற சொல் நன்றாகத்தானே இருக்கிறது! கமல் இந்திய நடிகர் சங்கம் என்கிறார்.உங்களை விட கமல் ஒரு படி மேல் என்பதில் ஐயமில்லை. நடிப்பு,சிந்தனை உட்பட. </div>
<br />
<div style="text-align: justify;">
உலகப் பார்வை பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் திரையுலகம் எல்லைகள் கடந்ததாகவே படுகிறது. கலை விழாவுக்கு சிங்கப்பூர்,மலேசியா வாழ் மக்கள் கரம் நீட்டுகிறார்கள். டூயட் பாடலுக்கு அனைவரும் ஐரோப்பா ஓடுகின்றோம் ( பாடலுடன் கூடவே நானுமல்லவா பயணிக்கின்றேன்:))</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரைப்பட வசூலை லண்டன் போன்ற நாடுகள் தாங்கிப் பிடிக்கின்றன. வேண்டுமென்றால் அமிதாப்பையும், சாருக்கானையும், ஜாக்கி சானையும், அர்னால்ட் ஸ்வாஸ்னகரைக் கூட கொண்டு வந்து விடுகிறோம். பன்முகம் கொண்ட நம்மவர்களின் பரந்த மனப்பான்மையே இந்திய திரைப்பட துறையில் இந்தி திரைப்படங்களுக்கு இணையாக் செயல்படுகிறது எனலாம்</div>
<br />
<div style="text-align: justify;">
தமிழ் திரையுலகம் மொழி,கலாச்சாரத்தோடு,பொழுது போக்கு,மகிழ்ச்சி என்ற நகைச்சுவை, கலையோடு,ஒலி,ஒளிப்பதிவு காதலுடன்,பாடல்,இசையென்ற கலவையோடு வியாபார யுக்திகளை திரைப்படத்தின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கிறது. இவற்றின் பின் தனி மனித வாழ்க்கையின் வெற்றி தோல்விகள் அமுங்கி கிடக்கின்றன.</div>
<br />
<div style="text-align: justify;">
பெற்றோர் வைத்த பெயரே பலருடன் ஒட்டிக்கொண்டு வாழ்க்கை முழுவதும் உச்சரிப்பு சொல்கிறது. மரபு காக்க குரல் கொடுப்போர்கள் தென்னிந்திய திரைப்பட சங்கம் பெயருக்கே வாக்களிக்கலாம்.தற்போதைய சூழலில் ரஜனியின் குரலாக தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம்,இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் விவாதத்தையும்,புது அரசியலையும் உருவாக்கும்.தமிழும் சேர வேண்டுமென்று ரஜனியோடு விரும்புபவர்கள் தலைப்பில் உள்ள படி தமிழ் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் என வைத்துக்கொள்ளலாம்.தமிழும் இருக்கிறது,இந்தியாவும் இருக்கிறது:)</div>
<br />
<div style="text-align: justify;">
பெயரில் என்ன இருக்கிறது. பாண்டவர் அணி தமிழ் திரைப்பட நடிகர்களுக்கும்,முக்கியமாக நலிந்த நாடக நடிகர்களுக்கும்,துணை நடிகர்களின் வாழ்வுக்கும் எப்படி செயல்பட போகிறது என்பதும் இவர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறை எப்படி முன்னோக்கி செயல்படுகிறது என்பதே முக்கியம்.</div>
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-84316778626821972752015-10-08T00:19:00.000+03:002015-10-08T00:20:21.607+03:00விஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்!<br />
<ul>
<li style="text-align: justify;">அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.</li>
</ul>
<br />
<br />
<div style="text-align: justify;">
சரத்குமார் அணியில் ஓரளவுக்கு தன்மையாக,மென்மையாக பேசும் குரல் சரத்குமாருக்கு மட்டுமே இருக்கிறது.ஆனாலும் அரசியல சாவகாசம்,பொதுப் பிரச்சினைகளை கையாண்ட அனுபவங்களால் கட்டப்பஞ்சாயத்து அரசியல் தொனியில் குற்றங்களை தொடுகிறார்.வாதங்களை வைக்கிறார். </div>
<br />
<div style="text-align: justify;">
திரைப்படத்துறையினருக்கு கிடைக்கும் பயணங்கள்,மனித உறவுகளின் உளவியலை நடிப்பு,கதை,வசனம்,முகபாவங்கள் என பல வடிவத்தில் கொண்டு வரும் வாய்ப்பு பெற்றவர்கள்.இதுவே அனுபவங்களாகவும் ,தமிழகத்தின் வாழ்வியலை உணரும் அதிக வாய்ப்புகளும், வரங்களும் பெற்றவர்கள். ஆனாலும் ராதாரவி,சிம்பு,ராதிகா என அனைவரும் ஞான சூன்யங்களாக இருக்கிறார்கள்.</div>
<br />
<div style="text-align: justify;">
நண்பர்களிடம் கெட்ட வார்த்தை பேசுவதற்கும்,மைக்கை கையில் ஏந்திக்கொண்டு திட்டுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.என்ன வருண் காதில் விழுகிறதா:) பதவிக்கு ஆசை என்பதை விட 29 வருடம் 11 மாதம் குத்தகைக்கு விட்டதில் குளறுபடிகள் இருக்கின்றன என்பதை சங்கிலி முருகன் பேச்ச்சிலும்,சரத்குமாரின் மறுப்பு அறிக்கையிலும் உணர முடிகிறது.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
ரஜனி,கமல்,சூர்யா,விஜய்,அஜித் போன்றவர்கள் பேசாமல் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது.அவர்கள் அமைதியாக இருப்பதை ஆதரிக்கிறேன். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சின்னப்பையனிலிருந்து நடிக்கிறேன் என்று ஒருமையில் விஷாலை திட்டி சிம்பு கத்துவதற்கும்,கமலின் சின்ன வயது முதல் நடிப்பிற்கும் வீணாப்போன சென்னை ஆற்றுக்கும்,,இமயமலை அடிவார அருவிக்குமான வித்தியாசங்கள் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டு அணிகளின் மேடைகளின் பக்கவாத்தியமாக நிற்பவர்களின் முகபாவங்களிலேயே தெரிகிறது பஞ்ச பாண்டவர் குழுவின் வெற்றிக்கான அறிகுறியும்,சோர்ந்து போன முகங்களாய் சரத்குமார் அணியும். </div>
<br />
<div style="text-align: justify;">
சரத்குமார் அணிக்கு தோல்வி நிச்சயம் என்ற போதிலும் பின்வாங்காது ஜனநாயக தேர்தலுக்கான அடிக்கல்லை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லட்டும்.ராதாரவி திரைப்படக்குழுவினர்க்கு ஆற்றிய பணிகள்,சரத்குமார் வங்கியில் பேசி கடனை குறைத்த நல்ல காரியங்கள் ஒரு தராசிலும்,கெட்ட வார்த்தைகள்,ஈகோ போன்றவை மறு தராசிலும் ஒப்பிட்டாலும் பெரும் தவறாக 30 வருட குத்தகை மாபெரும் தவறு. </div>
<br />
<div style="text-align: justify;">
எட்டாத,கிட்டாத தூரத்தில் நான் வனவாசம் செய்வதால் திட்டக்குழுவினரான சண்டைக்கோழிகளான சரத்குமார் அணி மைக்கை பிடிக்காமல் மனதுக்குள்ளே என்னை திட்டுமாறு வேண்டுகிறேன்.</div>
<br />
முடிக்கிறதுக்கு முன்னாடி சத்யராஜ் கடைசி ரயிலை பிடித்து வந்ததற்கு பாராட்டுகள். சிவக்குமார்,பாக்கியராஜ், பிரகாஷ் ராஜ், போன்றவர்களிடம் பெரும் மெச்சூரிட்டி வெளிப்படுகிறது.Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-46426236569459054352015-09-06T09:28:00.000+03:002015-09-06T09:28:00.366+03:00துபாய் நாடுகளின் இந்திய உணவக வளர்ச்சிமத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா,கத்தார்,பஹ்ரைன்,குவைத்,ஓமன் என பல நாடுகள் இருந்தாலும் துபாயும் விவேகானந்தா குறுக்கு தெருவுமே பிரபலம் என்பதால் தலைப்பு இப்படி.<br />
<br />
பல வருடங்களாக இந்திய உணவகங்கள் அதிலும் தமிழக உணவு வகைகள் கால் பதிக்காதா என்ற ஆதங்கத்தை முகல்மஹால் இன்னும் சில டெல்லி சார்ந்த பகுதிகளிலிருந்து ஆரம்பமாயின. இதுதான் இந்திய உணவு என்ற பிம்பத்தை மெல்ல உடுப்பி ஓட்டல் சைவ உணவாக நுழைந்தது. ஒருவர் கூட தமிழகத்திலிருந்து வராமல் இருக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பை மெல்ல அஞ்சப்பர் செட்டி நாடு உடைக்கிறதே என்ற மகிழ்ச்சியை அதுவும் டெல்லி சார்ந்த நிறுவனர் என்பதில் புஸ்வானமாகி போனது.<br />
<br />
குவைத்தில் 2012ல் வியாபாரத்தில் நுழைந்த சரவணபவன் மட்டுமே தமிழகம் சார்ந்த முதல் தரமான உணவகம்.க்டந்த வாரம் அடையார் ஆன்நத பவனும் தனது முகத்தை காட்ட துவங்கியுள்ளது . மேற்கத்திய படிப்பு,புதிய தொழில் நுட்பங்கள்,பொருளாதார வசதி என துபாய் நாடுகள் பன்னாட்டு வியாபாரங்களை ஊக்குவிக்கிறது. தொழிலில் முதன்மை,வியாபார காண்ட்ராக்ட் அணுகுமுறைகள் தெரியும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு அன்னிய செலவாணி சேர்ப்பதில் இப்பொழுது வாய்ப்புக்கள் அதிகம்.<br />
<br />
யாருக்கும் தெரியாமல் ரிலையன்ஸ் நிறுவனம் கூட இங்கே கால் பதித்துள்ளது.<br />
<br />
வாழ்க!வளர்க இந்திய நிறுவனங்களின் முகங்கள்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-9745460386911702522015-08-01T22:07:00.003+03:002015-08-01T22:07:51.832+03:00அப்துல் கலாமின் இந்திய கனவு<div style="text-align: justify;">
அப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய கனவை தொடரலாம்.</div>
<br />
<div style="text-align: justify;">
அப்துல் கலாமின் நினைவு கூறலை பின்னோக்கி செலுத்தினால் கல்லூரி காலம் கடந்து பொக்ரான் அணு ஆயூத பரிசோதனை துவங்கி, 2020ல் இந்திய வளர்ந்த நாடாக கனவு,இந்திய ஜனாதிபதி பின் பள்ளி,கல்லூரி,விரிவுரைகள் என இறுதி வரை தொடர் ஓட்டம் என மொத்த இந்தியாவின் பயணம் என வரிசை படுத்தலாம். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB5udKwRuWiMb0eWIqkcb8_9Nwa7-n_6XNojHN0Qdk3WVRc9pBLR_angDqgia5nhIQU6ljTdX3wbb2ljxRFDgDM1rPrBBkWf8tO8RcMezZ09K952k1eiYLijMg1IChGwYWT-hYZXdovKMI/s1600/APJ1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB5udKwRuWiMb0eWIqkcb8_9Nwa7-n_6XNojHN0Qdk3WVRc9pBLR_angDqgia5nhIQU6ljTdX3wbb2ljxRFDgDM1rPrBBkWf8tO8RcMezZ09K952k1eiYLijMg1IChGwYWT-hYZXdovKMI/s1600/APJ1.jpg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="text-align: justify;">இந்தியாவின் அணு ஆயுத விஞ்ஞான தொழில் நுட்பம் சிரிக்கும் புத்தன் (Smiling Buddha) என இந்திரா துவங்கி,ராஜிவ் காந்தியால் உரமிடப்பட்டு பின் நரசிம்ம ராவ் அறுவடை செய்யப்பட வேண்டியதின் இயலாமல் போனதன் ரகசியம் தனது கல்லறை வரைக்கும் யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்று விட்டார். காங்கிரஸின் தோல்வியை தொடர்ந்து பி.ஜே.பி வாஜ்பாய் அரசால் பொக்ரான் அணு ஆயுத பரிசோதனை ஆபரேஷன் சக்தி என்ற பெயரால் துணிந்து செயல்படுத்தபட்டது.</span><br />
<br />
<div style="text-align: justify;">
இந்திய அணு ஆயுத ஐந்து பரிசோதனையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவை விட அதிகமாக ஒரு பரிசோதனை ஆறு செய்து இந்தியாவிற்கு போட்டியாக அறிவித்துக்கொண்டது.இந்திய,பாகிஸ்தானின் பகைமையை கிரிக்கெட்டில் மட்டுமே காட்டிக்கொண்ட மக்கள் இரண்டு பக்கமே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டனர்.தனக்கு பிடிக்காத ஒன்றை ஒரு நாடு செய்தால் அமெரிக்காவின் முதல் அறிவிப்பு சேங்ஸன் என்பதாகும். இது நம்ம ஊர் லோன் சேங்ஸனாயிடுச்சு மாதிரியல்லாமல் உலக வணிகம் சார்ந்த தடை என பொருள். உதாரணமாக கார் வாங்கி வைத்துக்கொண்டு பெட்ரோல் போட முடியாமல் போவது மாதிரி.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொருளாதார தடைகளையெல்லாம் மீறி இந்தியா பயணித்தது. சி.என்.என் போன்ற தொலைக்காட்சி விவாதங்களில் இந்திய பாதுகாப்பு அனலிஸ்ட் கே.சுப்ரமணியனின் இந்திய சார்பு பதில்கள்,பிந்தைய கால கட்டத்தில் அமெரிக்காவின் இந்தியா சார்ந்த வெளியுறவு கொள்கை என மாற்றங்கள் ஏற்பட்டன.</div>
<br />
<div style="text-align: justify;">
யோகாவில் சூரிய நமஸ்காரம் என்பதனை சூரியனுக்கு வணக்கம் என பொருள்படுத்திக்கொள்வது போல் அப்துல் கலாமின் இந்தியாவின் வல்லரசு கனவும் அமெரிக்காவை பார்,ஆஸ்திரேயாவை பார் என மாறாக புரிந்து கொள்ளப்படுகிறது. கலாமின் வலுவான இந்திய கனவு இப்படி போகிறது.</div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<div style="text-align: justify;">
I and rajan (Abdul Kalam's 2020 vision co author) have often discussed something I observed during my stint at the defence research& development laboratory(DRDL), hyderabad. I came across three persons there who became in my mind points of reference that called me back unceasingly to certain</div>
<div style="text-align: justify;">
issues. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Venkat had two sons and a daughter. All were graduates and employed. Living in the same area was kuppu who had tree sons. He succeeded in educating only one. He lived in a rented dwelling. Karuppan had two daughters and one son. He was semi employed.Could not educate any of them because of poverty, and had no regular dwelling place. Was it not possible for him to merely give a normal life to his offspring and not an unrealistic or extraordinary one? A reasonable lifespan, an occupation that would provide them basic comforts and good health care.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>This is our dream of a developed India.</b></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo2va7zbX5GlcuF3iYVS98k8WOaFNyXFkAXdnb8pYIfxSi2oNXq80Wq-MJTFP2Xy1me9i3NQ6L94Gi6VqrAkD9cQ2ZZatBCphwJ-xzc25TUuZQAeEzgucDJhMN7GS9YbxRsF8sdwoMbL-R/s1600/Indian+Status+level.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="98" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo2va7zbX5GlcuF3iYVS98k8WOaFNyXFkAXdnb8pYIfxSi2oNXq80Wq-MJTFP2Xy1me9i3NQ6L94Gi6VqrAkD9cQ2ZZatBCphwJ-xzc25TUuZQAeEzgucDJhMN7GS9YbxRsF8sdwoMbL-R/s320/Indian+Status+level.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
உலக அரங்கு அரசியலும்,இந்தியாவின் வாழ்க்கை முறைகளும் 1947 தொட்டு 1990 வரையிலும் தனி மனிதன் வாழ்க்கை போராட்டமாகவே இருந்து வந்துள்ளது.இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை கூட இதன் சாரமாக கொள்ளலாம்.நரசிம்ம ராவின் காலம் தொட்ட இந்திய பொருளாதார கொள்கை மாற்றங்கள்,அந்நிய முதலீடு போன்றவைகள் பொக்ரான் விளைவால் தடை பட்டாலும் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு உள்ளூர் சந்தை பொருள் உற்பத்தியென்பதால் அமெரிக்க சித்தாந்தம் எடுபட வில்லை.</div>
<br />
<div style="text-align: justify;">
2000 தொடர்ந்த உலக அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு ஆதரவான காலம் எனலாம். இந்தியா முன்னேறிய நாடாகுமா என்ற கேள்வியை 60 களில் கேட்டால் பெரும்பாலோரின் ஒலி உச் கொட்டுவதாகவே இருக்கும். அதன் ஓசை இன்னும் கூட கேட்பதன் காரணம் தமது திறன் மீதான முழு நம்பிக்கையின்மை.</div>
<br />
<div style="text-align: justify;">
நம்புங்கள் உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பான பெட்ரோலிய பொருட்களை கூவி விற்றாலும் இறக்குமதி செய்வதை விட விவசாயம்,பொருள் உற்பத்தியென ஏற்றுமதியில்தான் இந்திய வணிகம் செயல்படுகிறது.கெரோசினிலிருந்து மேம்படுத்தப்படும் வொய்ட் ஸ்பிரிட் ( white spirit solvent) பெயிண்ட்,இயந்திரங்கள் சுத்தம் செய்தல்,லாண்டரி என பலவற்றிற்கும் தேவையான பொருள்.உள்நாட்டிலேயே இதன் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்பதோடு இதன் இறக்குமதி மும்பாய் நவா ஷிவா மற்றும் சென்னை துறைமுகங்களில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஸ்பிரிட் பற்றி பேசும் போது தமிழகம் மது விலக்கு பற்றிய விவாதங்கள் இணையத்தில் பேசப்படுவதை காண்கிறேன். எத்தனால் என்ற முழு ஆல்ஹகாலை மனிதன் குடிக்க கூடாது என அதில் மெதினல் என்ற நச்சுப் பொருள் கலக்கப்படுகிறது. மதுவிலக்கு தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்ற போதிலும் தமிழகத்திற்கு மது வந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று முன்பு வார்னிஷ் குடித்து இறந்தார் என்ற தலைப்பு செய்திகளின் காரணமாக. மது,மதுவிலக்கு என இரண்டு கால கட்டத்திலும் மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களே.அன்று கல்வியின்மை கல்வி வளர்ச்சி இரண்டு காலகட்டத்திலும் பொருளாதார பின் தங்கல் எதிர் சூழல்களில் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.</div>
<br />
<div style="text-align: justify;">
வயோதிகம் முந்தைய தலைமுறையை செயல்படாமல் செய்து விடுகின்ற காரணத்தால் கலாம் இளைய தலைமுறையை நோக்கி நாடு முழுதும் பயணிக்கிறார்.அதிலும் பள்ளி,கல்லூரி உரைகளை தொடர்ந்த காரணம் கல்வியறிவும் புதிய தலைமுறை புதிதாக சிந்திக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்பதால்.உதாரணமாக பெரியவர்கள் மவுஸ் எலியை பிடித்து கணினியை இயக்குவதை சிரமப்படும் போது இப்போதைய தலைமுறை கணினி பொருட்களை இயக்கும் விதம் ஆச்சரிமடைய வைக்கிறது</div>
<br />
<div style="text-align: justify;">
இந்தியா எப்படி தன்னிறைவு கொண்ட வளர்ந்த நாடாக முன்னேறலாம் என்பதற்கு அவர் சொல்லும் விடை ஊர் சேர்ந்து தேர் இழுப்பது எப்படி என்பதை சுருக்கமாக</div>
<br />
<div style="text-align: justify;">
இந்தியா முன்னேறிய நாடாக முடியுமா என்ற தன்னம்பிக்கை</div>
<div style="text-align: justify;">
ஏனைய நாடுகள் எப்படி தமது நலன் குறித்து செயல்படுகிறார்கள் </div>
<div style="text-align: justify;">
2020ஐ நோக்கிய தொழில் நுட்ப பரிணாம வளர்ச்சி </div>
<div style="text-align: justify;">
உணவு,விவசாயம்,உற்பத்தி திறன்</div>
<div style="text-align: justify;">
மூலப்பொருட்களும் எதிர்கால இருப்பும்</div>
<div style="text-align: justify;">
ரசாயன தொழிற்சாலைகள், மண் வளம்</div>
<div style="text-align: justify;">
மக்கள் திறன்</div>
<div style="text-align: justify;">
இந்திய நலன் சார்ந்த தொழிற்சாலைகள்</div>
<div style="text-align: justify;">
அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு</div>
<div style="text-align: justify;">
கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சீர்படுத்தல்</div>
<div style="text-align: justify;">
கனவை நனவாக்குதல்</div>
<br />
<div style="text-align: justify;">
இதனை சாத்தியப்படுத்தல் என்பதில் தடையாக விளங்குவது பீரோகிரஸி,அரசியல் இயங்கும் முறையும்,உள் சிக்கல்களாக நேர்மையின்மை,ஊழல்,இயங்கும் வேகம் போன்றவைகளின் காரணமாக மக்களின் தன்னம்பிக்கை சிதறி விடுகிறது.ஆனாலும் இப்பொழுதும் இந்தியாவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துபவை மக்கள் வளம்,சிறு தொழில்கள்,தொழிற்சாலைகள் போன்றவை.</div>
<br />
<div style="text-align: justify;">
அப்துல் கலாமின் மதசார்பின்மை பைபிளின் பொன்மொழிகள் 19: 7 ல் துவங்கி ஒருவர் சொன்னார் என்பதால் மட்டுமே நம்பாமல் ஆராய்வாக என புத்தன் சொல்லை எடுத்துக்காட்டுகிறார். தேசபக்தி என குருஜடாவை சொல்லி சுந்தர தெலுங்கு பாடுகிறது.https://www.youtube.com/watch?v=4Lck08A4xOM</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கூடவே வீணை ரசனை </div>
<br />
திருக்குறள் பொழிப்புரை இப்படி போகிறது<br />
<br />
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்<br />
விட்டேமென் பார்க்கும் நிலை<br />
<br />
(எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்)<br />
<br />
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என பாரதியாரை சொல்லி மூலப்பொருட்கள் பற்றிய அலசல்<br />
<br />
ரவீந்தர் நாத் தாகூரை முன் மொழிந்து பிஸிக்ஸ் நோபல் பரிசு முர்ரே கில் மேன் https://www.ted.com/talks/murray_gell_mann_on_beauty_and_truth_in_physics?language=en#t-40012<br />
<br />
முர்ரேயை தேடப்போய் மொழிகளின் மூதாதையர் யார் என்பது குறித்து சின்ன காணொளியும் பெயர் தேடலில் கிடைத்தது http://www.ted.com/talks/murray_gell_mann_on_the_ancestor_of_language?language=en<br />
<br />
<div style="text-align: justify;">
நோய்க்கு இடம் கொடேல் என ஒளவையார் பேசும் சுகாதாரம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கலாம் காந்தியவாதி என்பதெல்லாம் அவரது சொல்லிலும் செயலிலும் தெரிந்தன என்பதால் சொல்லித் தெரிவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பலருக்கும் தெரியாத வெர்னர் வன் பிரான் (Wernher Von Braun) பற்றி சொல்லி முடிக்கலாம். இவர் இரண்டாம் உலகப்போரில் ராக்கெட் விடுவது சூத்திரத்தை ஜெர்மனிக்கு அளிக்க அவரை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து குடிமகனாக்கி கொண்டது அமெரிக்கா.இதனை விட கருத்தரங்கில் சந்தித்த இந்தியர் ஒருவரிடம் உலகின் முதல் ராக்கெட்டிற்கு வித்தே இந்தியாவில் திப்பு சுல்தான் காலத்தில் ஸ்ரீரங்கபட்டினத்தில் நிகழ்ந்த இரண்டு போர்களில் உபயோகப்படுத்தப்பட்டது என Sir Bernard</div>
Lovell, book entitled . The origins and International Economics of Space Exploration என நிரூபணம் செய்கிறார்.<br />
<br />
<div style="text-align: justify;">
விஜய் மல்லையா கிங்பிஷர் விமான தொழிலை பாழ்படுத்தி விட்டாலும் அவரது வாழ்வில் செய்த ஒரு நல்ல காரியம் ஸ்ரீரங்கபட்டினம் போரில் பிரிட்டிஷாரால் கைப்பற்ற பட்ட திப்பு சுல்தானின் வாளை லண்டன் ஏலத்தில் எடுத்து இந்தியா கொண்டு வந்து விட்டார். </div>
<br />
(Article sources Inspired by: India 2020 A Vision for the New Millennium)<br />
<br />
கலாமின் தேசபற்று,இலக்கியம்,மொழி பற்றுதலுக்கெல்லாம் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்.<br />
<br />
STRENGTH RESPECTS STRENGTH - அப்துல் கலாம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-71198169375478587152015-07-20T23:59:00.000+03:002015-07-20T23:59:39.807+03:00உப்புவேலியும்,ரோப்வேயும்<div style="text-align: justify;">
பதிவர் கிரியின் உப்புவேலி குறித்த தகவலில் ராய் மாக்ஸம் (Roy moxham) பிரிட்டிஷ் உப்பு சத்தியாகிரக காலத்து உப்பு வரிக்கு காவலான இப்பொழுது காணாமல் போன <a href="http://www.giriblog.com/2015/07/uppuveli-book-review.html">உப்பு வேலி</a> பற்றி கூறியிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொகஞ்சோதாரோ,ஹரப்பா காலம் தொட்டு இந்திய வரலாறு சரியாகவே இல்லை.ஏதோ அங்கொன்றும்,இங்கொன்றுமாக சிதிலமடைந்த கட்டிடங்கள்,கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடிகள்,முப்பாட்டன்கள் எழுதிவைத்த பாடல்கள்,கூத்து,நகர்ப்புற பாடல்கள் என கிடைப்பதை வைத்து காதும்,கண்ணும்,மூக்கும்,வாயும் வைத்து நிலைத்து நிற்பவையே இந்திய சரித்திரம். அரசு சார்ந்த அறங்காவல் துறை மூதாதையர் சொத்து என பலவற்றை பாதுகாத்தாலும் இரும்பு கதவோடு அரசு இயந்திர கதவும் சேர்ந்து என்பதால் ஆராய்ச்சி குறித்த தேவைக்கு பலருக்கும் சென்றடைவதில்லை என அன்பர் ஒருவர் புலம்பியிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொழிகள் உருவாகியது எப்படி என்ற ஆர்வம் குறித்த தேடலில் தமிழ் மொழி குறித்து ஏராளமான தகவுகள் இருப்பது பற்றி தமிழ் தனது தொன்மை சார்ந்தும்,வரலாறு சார்ந்தும் எப்பொழுதும் பெருமை பட்டுக்கொள்ளலாம்.மனு காலம் தொட்டு இருக்கிறேனாக்கும் என்று சொல்லும் சமஸ்கிருதம் தத்துவார்த்தம் சார்ந்தும்,இப்பொழுது கோயில் மொழியாக மட்டுமே இருக்கிறதே ஒழிய அகண்ட பாரதம் வரலாறு சொல்வதில்லை. வரலாற்று முக்கியத்துவத்தை பாடம் படிப்பவர்களுக்கு கொடுத்திருந்தால் ஒருவேளை இந்திய வரலாற்று தொகுப்பு இன்னும் செழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுதும் கெட்டுப்போகவில்லை.காமிராவின் புகைப்படக்கலையை பொழுது போக்காக மட்டுமின்றி வரலாற்று பாடத்தின் ஒரு பகுதியாக வைப்பது நிகழ்வுகளை தொகுப்பதற்கு உதவும். இப்போதைய கணினி யுகம் இந்திய வரலாற்றை மென்மேலும் மேன்மை படுத்த உதவும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த ஆதங்கத்தை தொடர்ந்து <a href="http://www.roymoxham.com/page4.htm">ராய் மாக்ஸம் தளத்திற்கு</a> சென்றால் அவர் வெள்ளைக்கார துரையாக தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்த்தவர் என்ற தகவல் அறிய நேர்ந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இனி கல்லூரி காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து வால்பாறை வரை சுமார் 120 கி.மீட்டர் சைக்கிள் பயணம் செய்த நினைவுகளிலிருந்து.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுது ஆழியார் அணைக்கட்டு முதற்கொண்டு வால்பாறை வரை சுற்றுலா பகுதியாகி விட்டன. முன்பெல்லாம் அப்படியில்லை. பெரும் பதிவர் கந்தசாமி அவர்களே கூட அந்த காலகட்டத்தில் அட்டகட்டி தாண்டியிருப்பாரோ என்பது கூட எனக்கு சந்தேகமே:) காரணம் பொள்ளாச்சியில் துவங்கும் பஸ் பயணம் எங்கும் நிற்காது அட்டகட்டியில் டீகுடிக்க,ஒண்ணுக்க அடிக்க என இடை நிறுத்தம் செய்து வாட்டர்பால்ஸ்,கவர்க்கல்,ஐயர்பாடி,ரொட்டிக்கடை,புதுதோட்டம்,வால்பாறை என முடியும். ஆனைமலை,ஆழியார் கிராம வாகனங்களுக்கு ஆழியார் அணையின் வளைவுகளை கண்டாலே நடுக்கம் என்பதால் அந்தப்பக்கமே போகாது என்பதாலான ஊகம்.எனவே என்னை மாதிரி சைக்கிள் பேர்வழிகளுக்கும்,மோட்டார் சைக்கிள்காரர்களுக்கு மட்டுமேயான அபூர்வ அனுபவங்கள் எனலாம்.பேச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் நேரமின்மை காரணத்தால் சுருக்கமாக பயணிப்போம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://www.abhinavraveendran.com/blog/wp-content/uploads/DSC_3805_edited-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://www.abhinavraveendran.com/blog/wp-content/uploads/DSC_3805_edited-1.jpg" width="213" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முன்பு மனிதன் மிருகங்களை வேட்டையாடிய காலம் போய் இப்பொழுது பாரஸ்ட் ரேஞ்ச் எனும் காவல் கட்டுப்பாடு,விலங்குகள் மனிதனை வேட்டையாடும் பயத்தில் வாகனம் தவிர சைக்கிள் பயணம் சாத்தியமில்லை. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயக்குநர் பாலாவின் பரதேசி ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் ஆழியார் அணைக்கட்டைத் தாண்டி கிட்டத்தட்ட வேதாந்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில்,அதனை அடுத்த குரங்கு நீர்வீழ்ச்சி தாண்டிய வளைவிலிருந்தாவது கதை துவங்கியிருக்கலாம். மனிதன் துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்வின் இனிமைகளை ரசிப்பதாகவே வாழ்கிறான். இந்த நோக்கு பிரிட்டிஷ் காலத்து மழை,குளிர்,மரக்குடிசை,காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டை,பெண்களின் நனைந்த தாட்டு (தேயிலை கொழுந்து பறிக்க உடைக்கு மேல் உடுத்திக்கொள்வது) என பல சிரமங்களுக்குள்ளூம் மனிதர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை ஒட்டியே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முந்தைய ஆங்கிலேய நிர்வாக முறைகள் மாறி இப்பொழுது இந்திய வணிக நிறுவனங்கள் தேயிலை தோட்டங்களை நிர்வகிக்கின்றன. இந்தியாவின் ஏதோ ஒரு நகரத்திலிருக்கும் நிறுவன அலுவலகத்துக்கு பெண்கள் வெட்டும் தேயிலையின் எடை கணினி கார்டு பதிவின் வழியே போய் விடும் வசதி வந்து விட்டது. ஒரு ஆங்கிலோ இந்தியன் தேயிலை தொழிற்சாலை போர்மென் தனியாக காட்டிற்கு போய் பெரும் கொம்புகள் கொண்ட மானை வேட்டியாடிய காலம் போய் இப்பொழுது புலிகளும்,சிறுத்தைகளும் தேயிலைத்தோட்ட மனிதர்களை வேட்டையாடும் காலம் வந்தும் அங்கே உழைக்கும் மக்கள் இடம் நகர்வதாக காணோம்.</div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVuRsjlbdyB5wIfBBDD_UcLOXsKi0OD16tM4e0c070-wiGZD4VGBn0tDdxpxj4kwgHmYODkaVZNLltxE8D7JQ3kcc7x6dyyquHFKhVkCUgQNf8W0FzsjRMjQhJXwCTZ-M1qJRkcB7ck29N/s1600/Natural+But+Pity+Life.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVuRsjlbdyB5wIfBBDD_UcLOXsKi0OD16tM4e0c070-wiGZD4VGBn0tDdxpxj4kwgHmYODkaVZNLltxE8D7JQ3kcc7x6dyyquHFKhVkCUgQNf8W0FzsjRMjQhJXwCTZ-M1qJRkcB7ck29N/s320/Natural+But+Pity+Life.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
முன்பெல்லாம் டீ என உருவாகும் தேயிலை தொழிலாளர்களுக்கு கூட சிறிதும் பங்கீடில்லாமல் கோவையில் தேயிலை யூனியன் மூலமாக கொச்சின் வழியே வெளிநாடுகளுக்கு சென்று விடும். தேயிலை தோட்ட கண்காணியின் வேலையே பெண்கள் இளம்தளிர்களை பறிக்கிறார்களா என பார்வையிடுவதுதான். ஒரு பெரும் இலை,ஒரு தளிர்,ஒரு மொட்டு என மூன்றே இலைதான். </div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="http://www.sundaramengg.com/images/tea_leaves.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.sundaramengg.com/images/tea_leaves.gif" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுது பெண்களுக்கு இயந்திரம் கொடுத்து மொத்தமாக கத்திரிக்கோல் மாதிரி வெட்டி விடுகிறார்கள்.தரம் எப்படியென தெரியவில்லை.ஆனால் நிறைய தேயிலை வால்பாறை துவங்கி,ஆழியார்,பொள்ளாச்சி என தாரளமாக கிடைக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்பொழுது பரதேசி படத்தை நினைக்கும் போது கதைக்களத்தை பாரதிராஜா கையாண்டிருக்கலாமோ என தோன்றுகிறது..காரணம் பாரதிராஜா சினிமா துறைக்கு வருவதற்கு முன் அந்த பகுதிகளில் மலேரியா இன்ஸ்பெக்டராக சுற்றித் திரிந்ததாக கேள்வி ஞானம். இதனை பாரதிராஜாவே வந்து ஆமாம் இல்லை என கமெண்டினால் ஒழிய இந்த தகவலும் தமிழக திரைப்பட வரலாற்றில் இல்லாமல் போகும் சாத்தியங்கள் அதிகம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாரதிராஜாவுக்கான மலை,காடு,வான் மேக முட்டம் என கொஞ்சம் சினிமா தேவதைகளை மட்டும் பயணத்தோடு கொண்டு சேர்த்தால் அழகாக படம் பிடித்துக்கொண்டு திரும்பியிருக்கலாம்.கூகிள் மக்களின் துயர் பகுதிகளை விடுத்து கூகிள் தேடல் கூட அழகியலை மட்டும் வெளிப்படுத்துகிறது.இதன் காரணம் கூகிளின் பெரும்பாலான படங்கள் சுற்றுலா பயணிகள் சார்ந்திருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பரதேசி அழுது புரளாமல் அழகியலோடு சேர்ந்திருப்பான். பாலா சொன்னதில் இடமாற்றங்கள்,,சோகங்கள் உண்மையென்பது மட்டும் உண்மையென்பதை படம் பார்த்தும்,அந்த வாழ்வியலோடு வாழ்ந்த ஒரு வயதான பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆர்ம்ஸ்ட்ராங்க் முதன் முதலில் நிலவுக்கு போன மாதிரி வால்பாறைக்கு முதன் முதலாக பஸ் வாகன போக்குவரத்தை கொண்டு வந்தவர் நா.மகாலிங்கம் அவர்களின் அப்பா நாச்சிமுத்து பெரியவர்.</div>
<div style="text-align: justify;">
முதல் வாகனத்தின் பேருந்து ஓட்டுநரையும் திரு. நா.மகாலிங்கம் சார்ந்தவர்கள் ஆவணப்படுத்தினால நல்லது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்றபடி தினசரி வேலைகள் தவிர வீட்டைச் சுற்றி காய்கறி தோட்டம் போடுதல்,மதுரை வீரன்,மாரியாத்தா,நாகம்மாள்,ஏசுவே பிதாவே,சப்பாரம்,அல்லாவை மனதிற்குள்ளே தொழுத குத்புதின்,ராவுத்தர் என கெடாவெட்டும்,திருவிழா, கொண்டாட்டம் என வாழ்வின் மறுபக்கத்தையும் ருசித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.முன்பு தேயிலைத் தோட்ட வேலை,வீட்டுத்தோட்டம்,வீட்டு வேலை என மூன்று மடங்கு உழைத்த மக்கள் தேயிலைத்தோட்ட வேலையை முடித்துக்கொண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் குளிருக்கு இதமாக போர்த்திக்கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள்.இதற்கு தோதாக புலி,யானை பயம் என்பதால் இருட்டிய பிறகு குடிமக்கள் தவிர யாரும் வெளியில் நடமாடுவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் ஊட்டி,வால்பாறை பகுதிகள் தவிர இலங்கை,டார்ஜிலிங் தேயிலைகளும் உலக பிரசித்தம்.வாழ்க்கை முறை ஒப்பீடுகளில் தமிழக தேயிலை தோட்டங்கள் தொடர் போராட்டங்களாலும்,தொழிற்சங்கங்களின் உதவியினாலும், தொடர் போராட்டங்களாலும் ஒரு படி மேல் எனலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நகரம் , கிராமம் சாராத இரண்டையும் தொட்டும்,தொடாமலுமான மூன்றாவதான வாழ்க்கை முறை தேயிலை மலைக்காடுகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாரு புகழும் லத்தின் அமெரிக்காவின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர உதவும் ஒரே இயந்திரம் ரோப்வே மட்டுமே.அதுவும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் அறுந்து போகுமோ என்று அஞ்சக்கூடிய கம்பிகளை உயிரை பணயம் வைத்து பயணம்.</div>
<div style="text-align: justify;">
சமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான உயரமான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கி,தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் வந்து சேரும்படியான ரோப்வேக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தது. இதனை நிருபிக்கும் ஒரே ஆவணப்படம் எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் படம் மட்டுமே. முள்ளூம் மலரும் கூட கொஞ்சம் தொட்டு விட்டு ரஜனி,ஷோபா அண்ணன் தங்கை பாசமலருக்கு டிக்கட் வாங்கி விடுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிலம் தவிர மனிதர்கள் காணமல் போனார்கள்.வாழ்ந்த வாழ்க்கை முறை திருப்பூர் போன்று இடம்,சமூக மாற்றங்கள் என காணாமல் போயின.</div>
<div style="text-align: justify;">
காணாமல் போன உப்புவேலியைப் போலவே இப்பொழுது கூகிள் உட்பட அந்த ரோப்வேயையும் காணோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2745004373146133755.post-87410444958515156012014-12-22T01:39:00.000+03:002014-12-22T01:39:25.830+03:00இந்துத்வா மதமாற்றம்<div style="text-align: center;">
<span style="text-align: justify;">வவ்வாலை பதிவுலகில் தேடி வந்த காரணத்தோடு மறுபடியும் ஒரு பொது விவாதத்தை தொடுகிறேன். இணையத்தில் கருத்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காலமும், நிகழ்வுகளும் தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.உலகெங்கும் மதவாதங்கள் பெருகுவதை சில வருடங்களுக்கு முன்பு பி.பி.சியின் நிகழ்ச்சியொன்றில் காண நேர்ந்தது. பல வருடங்களுக்குப் பின்பும் அது தொடர்கதையாகிறது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையிலும்,ஜனநாயகத்து ஆசைப்பட்டும் இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகளில் தீவிரவாதத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் குரல் உச்சஸ்தாயில் ஒலிக்கத் துவங்குகிறது. மோடி,அருண் ஜெட்லி போன்றவர்கள் நல்லாட்சி மீதான கவனம் செலுத்தும் அதே வேளையில் அல்லக்கை எம்.பிக்களும்,இந்துத்வா சார்பாளர்களும் தங்கள் கோர முகத்தைக் காட்ட துவங்கி விட்டார்கள்.மனித நேயம் தேடுபவர்களுக்கு ஈராக்,சிரியாவில் நிகழும் இன வன்முறைகளும் பி.ஜே.பியின் ஆட்சியில் நிகழும் மத மாற்றங்களும் அதிர்ச்சியை உருவாக்குகின்றன. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDOm6ff3VVWMwwk7Qf_PjpkXXAz3Ni1EhidxT83c74WVaou9NjDOT67oASeqZBQdU_G4G956GlqWbErcwf5atj-bX0E457URlMIDM16UM5xzGDaBblcoRy6ZdLQC_nPEfosouC6cYWPQjU/s1600/Kerala+Convert.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDOm6ff3VVWMwwk7Qf_PjpkXXAz3Ni1EhidxT83c74WVaou9NjDOT67oASeqZBQdU_G4G956GlqWbErcwf5atj-bX0E457URlMIDM16UM5xzGDaBblcoRy6ZdLQC_nPEfosouC6cYWPQjU/s1600/Kerala+Convert.jpg" height="196" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
In Kerala 30 Christians convert. VHP says : We helped"</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருவர் இந்துவாக இருந்து கிறுஸ்துவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ ஆவதற்கு மூளைச் சலவை என்பதற்கும் மேலாக இந்து மதத்தின் குறைபாடுகள் என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் ஒரு கிறுஸ்துவரையோ அல்லது இஸ்லாமியரையோ மறுபடியும் இந்துவாக மதம் மாற்றம் செய்வதில் மூளைச் சலவை என்பதை விட பி.ஜே.பியின் அதிகார பீடம் தரும் மமதை இந்துத்வாவாதிகளுக்கு உருவாகிறது. இதன் காரணமாகவே நேற்று முளைத்த தமிழ்க் காளான் எச்.ராஜா தமிழகத்தின் நீண்ட அரசியலில் பல நேரம் நிமிர்ந்த நடையும்,சில சமயம் சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கிக்கொள்ளூம் வை.கோ வை மிரட்ட முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பி.ஜே.பியின் அசுர பலத்தை ஐந்தே ஆண்டுகளில் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளூம் செயல்களுக்கான விதையை மெல்ல விதைக்கிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEOarfBVWsz2crBFkK6uVrBCGMnJiVi596Uo5PdBmY2RFlqDiKM3IF2YOzgtLXiA6btxhuVLb2Duxcd18qS52j4z5oky8dmpECpUKIVs7G6rCd6Whzcn7DMT3QAWEcfQ74_w1aJeQLijOl/s1600/Gujarat+convert.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEOarfBVWsz2crBFkK6uVrBCGMnJiVi596Uo5PdBmY2RFlqDiKM3IF2YOzgtLXiA6btxhuVLb2Duxcd18qS52j4z5oky8dmpECpUKIVs7G6rCd6Whzcn7DMT3QAWEcfQ74_w1aJeQLijOl/s1600/Gujarat+convert.jpg" height="196" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
Valsad Conversions Spark Anger</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய காலகட்டத்தில் கிறுஸ்துவ மதம் பரப்புவது வியாபாரமாகிப் போனாலும் கூட கிறுஸ்துவ மதம் இந்தியாவின் கல்வி,மருத்துவ துறைக்கு மிகச்சிறந்த சேவையை செய்திருக்கிறது. அதே போல் இஸ்லாத்தை இந்தியாவுக்குள் கொண்டு வந்த முகலாயர்கள் இந்தியாவின் கலை,கட்டிடம்,அரசியல்,நிர்வாகம் என தமது சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் முகலாய மன்னர்களின் காலத்தில் பாபர்,ஜஹாங்கீர்,அக்பர் வரை கட்டாய மதம் மாற்றம் அதிகம் சட்ட பூர்வமாக நிகழ்ந்திருக்க வில்லை. </div>
<br />
<div style="text-align: justify;">
இந்துத்வாவாதிகளால் இடித்து தள்ளப்பட்ட பாபர் மசூதி கூட பாபர் கட்டியதல்ல. பாபரின் கவனமெல்லாம் காபூல் மீதே இருந்தது. அயோத்தியாவில் கட்டப்பட்ட பாபர் மசூதி 1528ல் மீர் பக்கி என்பவரால் கட்டப்பட்டது என்றும் பின்பு வந்த அவுரங்கசீப்பின் காலத்தில் கட்டப்பட்டது என்றும் இரு தகவல்கள் இணையத்தில் உலாவுகின்றன. ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் தனது சகோதரர்கள்,அரசன் ஷாஜகான் என அனைவரையும் சிறையில் அடைத்த கல் நெஞ்சக்காரனாக அவுரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டாலும் தாஜ்மஹாலின் வைரங்கள், பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்ட மும்தாஜ்,ஷாஜகானின் ஆடமரத்திலிருந்து வேறுபட்டு ஆறடி நிலமே சொந்தமடா என அவுரங்கசீப் எளிமையாக ஒரு ஒற்றைக்கதவு சிறிய இடத்தில் மரணித்துப் போனார் அவுரங்கசீப்.</div>
<br />
<div style="text-align: justify;">
பெரும் யானைப்படை,குதிரைப்படை,காலாட் படைகளைக் கொண்ட இந்திய மன்னர்களிடம் போர் புரிவதோடு,கைப்பற்றிய இடங்களை தக்க வைத்துக்கொள்ள இந்து,இஸ்லாமிய திருமணங்களை முகலாயர்கள் ஆதரித்தார்கள். குறிப்பாக அக்பரின் காலம் தீன் இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கியது. பின்பு வந்த அவுரங்கசீப்பின் காலத்திற்கு பின்பே கட்டாய மத மாற்றம் வடக்கில் உருவாகியுள்ளது. தற்போது ஐ.எஸ்.ஐ.எல் தீவிரவாதிகள் ஈராக்கில் யெகுதி மதம் மாறாதவர்களுக்கு வரி விதிப்பதை போல ஜெசியா வரியை அவுரங்கசீப் அறிமுகப்படுத்தினார். </div>
<br />
<div style="text-align: justify;">
வடக்கு முழுதும் முகலாய அரசு வியாபித்திருந்தும் தக்காண பீடபூமிக்கு கீழே தற்போதைய மராட்டியா,கர்நாடகா, தமிழகத்தில் ஊடுறவ இயலவில்லை. பதிலாக முகலாய ஆட்சிக்குட்பட்ட சுய அதிகாரம் கொண்ட ஹைதராபாத் நிஜாம்,ஆற்காடு நவாப் போன்றவர்களின் காலத்தில் இந்துமதத்தின் வர்ணாசிரம பிரிவுகள்,அரசு சலுகைகளுக்காக மத மாற்றம் உருவாகியிருக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படியிருந்தும் மராட்டியாவில் சத்ரபதி சிவாஜி,வடக்கில் ராஜ்புத்திரர்கள்,சீக்கியர்கள் போன்றவர்களின் இந்து அரசு தன்மையும் எதிர்ப்பும் அவுரங்கசீப்பின் கனவுகளை பூர்த்தி செய்யவில்லை.முகலாயர் காலம் வரை இஸ்லாமிய மதம் என்பது மங்கோலிய,துருக்கிய,பெர்சிய,சுபி கலவையாக மட்டுமே இருந்தது. இப்பொதைய வகாபியிசம் உருவாகியிருக்கவில்லை.ஆட்சிக்கு தொல்லை தரும் அரசியல் வாரிசுகள்,குடும்பத்தாரை மெக்காவுக்கு வழியனுப்பி வைக்க மட்டுமே செய்தார்கள். </div>
<br />
<div style="text-align: justify;">
பின்பு இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல் மதமாற்றத்தையும் உருவாக்கினார்கள்.இதற்கான சாட்சியமாக இப்பொழுதும் கோவா,டையு,டாமன் பகுதிகளை கூறலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதமாற்றங்கள் அறியாமை,அரசியல்,பொருளாதார,சமூக, சமயம் என்ற பலவற்றின் கலவை. மங்கோலிய,முகலாய படையெடுப்புக்களில் கோயில்கள் இடிப்பு சாத்தியமென்ற போதிலும் அதற்கு நிகரான குஜராத் கலவரங்கள்,கிறுஸ்துவ பாதிரியாரை உயிரோடு கொழுத்திய வன்முறைகளையும், ரத்தக்கறையையும் இந்துத்வா தனது முகத்தில் பூசிக்கொண்டுள்ளது.</div>
<br />
<div style="text-align: justify;">
பல படையெடுப்புக்கள்,இந்தியாவை ஓட்டாண்டியாக்கிய பின்பும்,மத மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் இந்து மதம் சைவம்,வைணவம்,ஜைன மதம் என தனது வேர்களை ஊன்றியிருக்கிறது. இதற்கான காரணம் எதையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை இந்தியர்களிடமிருக்கிறது. மாறாக எகிப்திய நாகரீகம்,பாரசீகம்,ஆட்டோமன் பேரரசுகள் அனைத்தும் இஸ்லாமிய தேசங்களாக மாறியிருக்கின்றன. இப்பொழுதும் இனி வரும் காலங்களின் இணைய பரிமாறுதல் இந்திய தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்பதால அரசியல் நிழலில் ஆர்.எஸ்.எஸ் செய்யும் மத மாற்றங்கள் அவசியமில்லாதவை என்பதோடு பெரும் ஆபத்தை இந்திய தேசத்திற்கு சேர்க்கும். </div>
<br />
<div style="text-align: justify;">
காந்தியை சுட்ட கோட்சே தேசப்பற்றாளன் என்று வரலாற்றை திரிக்கும் இந்துத்வாக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழகத்தின் திராவிட கழகங்களின் கிழட்டு நிலையில் தமிழர்கள் பி.ஜே.பியிடம் கவனமாக இருப்பது அவசியம். தமிழகத்தின் திராவிட கழகங்கள் தனி மனித ஆளுமை,ஊழல் போன்றவற்றில் சிக்கிவிட்டாலும் கூட திராவிட இயக்கங்கள்,பெரியாரின் கொள்கையோடு முழுவதும் இணைந்து செயல்படா விட்டாலும் கூட இரு கழகங்களும் தமிழகத்திற்கு ஆற்றிய தொண்டு நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும்.எனவே முகங்கள் மாறினாலும் கூட திராவிட இயக்கங்களின் வழியே தமிழகம் மேலும் நடைபோடுவதே தமிழகத்தை தனித்துவப் படுத்தும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தியால்தான் பாரதம் இரண்டாக உடைந்தது என்று புதிய வரலாற்றுக்கதைகள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பழைய வரலாற்றைப் பற்றி சொல்லியாக வேண்டும். மேலே தொட்ட முகலாயர்களின் படையெடுப்புக்களுக்கு ஒரே வழி காபூல்,பாகிஸ்தான் தொட்ட இந்துகுஷ் பிரதேசம் மட்டுமே.இமயமலையெல்லாம் கடந்து வரும் சாத்தியமில்லாமல் ஆற்றுக்கணவாயில் தங்களுக்கும், குதிரைகளுக்கும் இளைப்பாறியே துருக்கிய, மங்கோலிய, பாரசீக,முகலாயப் படையெடுப்புக்கள் உருவாகின.தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் கோட்டை கொத்தளங்களை அமைக்கத் தெரிந்த இந்திய மன்னர்களுக்கு ஒன்றாக சேர்ந்து அரண் சுவர் கட்டத் தோன்றவில்லை.சீனா சுத்தி சுத்தி சுவர் கட்டி ரோடு போட்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார்கள்.இந்திய பிரிவினை மவுண்ட்பேட்டன் காலத்து பிரிட்டிஷ் ராஜ்யம்,ஜின்னா என்ற பிடிவாதக்காரர், இந்திய காங்கிரஸ் என்ற முக்கிய காரணிகள் உண்டு. சுதந்திர இந்தியாவின் பதவி பங்கீடுகளுக்கிடையில் காந்தி என்ற தனிமனிதன் இந்து,முஸ்லீம் என்ற கோட்டை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இருந்தார். ஆஷ் துரையின் கொலையில் கூட வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை திவாலாக்கும் முயற்சியில் ஆஷ் முன்னிலை வகுத்தார் என்ற கோணத்தில் வாஞ்சிநாதனின் சனாதன துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தலாம்.</div>
<div>
<br /></div>
<div style="text-align: justify;">
காந்தியால்தான் பாரதம் இரண்டாக உடைந்தது என்று புதிய வரலாற்றுக்கதைகள் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பழைய வரலாற்றைப் பற்றி சொல்லியாக வேண்டும். மேலே தொட்ட முகலாயர்களின் படையெடுப்புக்களுக்கு ஒரே வழி காபூல்,பாகிஸ்தான் தொட்ட இந்துகுஷ் பிரதேசம் மட்டுமே.இமயமலையெல்லாம் கடந்து வரும் சாத்தியமில்லாமல் ஆற்றுக்கணவாயில் தங்களுக்கும், குதிரைகளுக்கும் இளைப்பாறியே துருக்கிய, மங்கோலிய, பாரசீக,முகலாயப் படையெடுப்புக்கள் உருவாகின.தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும் கோட்டை கொத்தளங்களை அமைக்கத் தெரிந்த இந்திய மன்னர்களுக்கு ஒன்றாக சேர்ந்து அரண் சுவர் கட்டத் தோன்றவில்லை.சீனா சுத்தி சுத்தி சுவர் கட்டி ரோடு போட்டு சரித்திரத்திலும் இடம் பிடித்து விட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்திய பிரிவினை மவுண்ட்பேட்டன் காலத்து பிரிட்டிஷ் ராஜ்யம்,ஜின்னா என்ற பிடிவாதக்காரர்,இந்திய காங்கிரஸ் என்ற முக்கிய காரணிகள் உண்டு. சுதந்திர இந்தியாவின் பதவி பங்கீடுகளுக்கிடையில் காந்தி என்ற தனிமனிதன் இந்து,முஸ்லீம் என்ற கோட்டை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் இருந்தார். ஆஷ் துரையின் கொலையில் கூட வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை திவாலாக்கும் முயற்சியில் ஆஷ் முன்னிலை வகுத்தார் என்ற கோணத்தில் வாஞ்சிநாதனின் சனாதன துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தலாம்._(ஆஷ் கொலை வழக்கு பற்றி தேடித்திரிந்து ஒருவர் முழு தகவலும் சொல்லியிருந்தார். பதிவு போடுவேன் என்று தெரிந்திருந்தால் குறிப்புகள் செய்திருக்கலாம்.) கோட்சேவுக்கு சிலை வைக்கும் பேர்வழிகள் காந்தியின் கொலையை நியாயப்படுத்துவதை இந்துத்வாவாதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக்கொள்ளலாம். பல மதங்கள்,கலாச்சாரங்கள் என ஒருமுகப்பட்ட இந்தியாவை அதன் ஜனநாயகத்தை ஆர்.எஸ்.எஸ்,பாகிஸ்தான் போன்றவைகள் மெல்ல அசைத்து மட்டுமே பார்க்க முடியும்.</div>
<br />
<div style="text-align: justify;">
ஒற்றைப் பதிவில் பழைய வரலாறு,இந்துத்வா தீவிரவாதங்களை ஆழமாக சொல்ல முடியவில்லையென்ற போதிலும் முடிந்தால் மதங்களை கடந்து வந்து விடும் ஆற்றலும் முடியாத பட்சத்தில் தனது நம்பிக்கைக்கு ஒரு ஊன்றுகோல் தேவையென்ற மனநிலையில் இருப்பவர்கள் கற்றுத் தெளிந்தோ பட்டறிந்தோ இயல்பாக இங்கொன்றும் அங்கொன்றுமாக மதமாற்றங்கள் செய்து கொள்வதில் தவறில்லை. அது தவிர்த்து ஒரே நாளில் கேரளாவில் 30 பேருக்கு சாமி வந்துடுச்சு என்றும் குஜராத்தில் 100 பேருக்கு கோயில் பூசை நடத்துவதெல்லாம் கட்டாய மதமாற்ற பட்டியலில் சேரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பு: பதிவின் கருத்துக்கள் முழுவதும் என்னை சார்ந்தவை மட்டுமே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடும் புரிதலும் இருக்கும்.ஒவ்வொன்றும் அவரவர் சார்ந்தவை.</div>
<br />
பதிவுக்கான தகவல்:<br />
<br />
1. In Kerala 30 Christians convert. VHP says : We helped"<br />
<br />
2. Valsad Conversion Spark Anger<br />
<br />
http://www.ndtv.com/article/india/in-kerala-30-christians-convert-local-vhp-says-we-helped-637848?pfrom=home-lateststories<br />
<br />
<br />
http://www.ndtv.com/article/india/valsad-conversions-spark-anger-637719Unknownnoreply@blogger.com2