முன் டிஸ்கி: ஆடு மாடு கூட வட்டார வழக்குகளுக்கு டாடா சொல்லிவிட்டு இந்தி கத்துக்கொடுக்கும் போது சேர நாட்டைப் பக்கத்துல வச்சுகிட்டு நாம ஏன் மக்களுக்கு மலையாளம் சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு மக்கள் டி.விய மல்லாந்து படுத்துகிட்டு பார்க்கிற போது உண்டான ஞானோதயத்தால துவங்குகிறது மலையாளப் பாடம்.மேலும் கன்னியாகுமாரி,திருவனந்தபுரம் பக்கமெல்லாமிருந்து பதியரவங்க யாராவது பட்டா போட்டுகிட்டா என்ன பண்ணறதுன்னு வந்த பயத்தினாலும் பாடம் இப்பவே துவங்குகிறது.நல்ல புள்ளைகளா படிச்சிகிட்டீங்கன்னா சேட்டன்ங்ககிட்ட இருந்து தண்ணிப் பிரச்சினையெல்லாம் தீர்த்துக்கலாம்.கூடவே பெங்களூருலிருந்து யாராவது கன்னட வகுப்பு ஆரம்பிச்சா காவிரிப் பிரச்சினையும் பேசித் தீர்த்துக்கலாம்.ஆந்திராவுக்கு வேற தனியாச் சொல்லணுமா?கிருஷ்ணா,காவிரித் தாயே குருவாயூரப்பா சொல்லி பாடம் துவங்கப் போவுது.
அதற்கும் முன் இனிப்பா ஒரு நல்ல செய்தியும். டெல்லியில மூணாவது அணி 11 கட்சிகளின் கூட்டாக அரசியல் கிரிக்கட்டுக்கு தயார்.பூந்து விளையாடுங்க.எந்தா கேட்டோ?
சேட்டா = அண்ணா
சேச்சி = அக்கா
எந்தடா = டாய்
சாயா = டீ
தங்ஸ் இவட ஊணு தன்நு.கழிச்சிட்டு உறங்கி நாள மீதி ஓபிசில் சேச்சி ஒண்ணு பணி செய்யா சம்சயம் கேட்டு சொல்லித் தரா கேட்டோ?
பின் டிஸ்கி:விவேக்,வடிவேலையெல்லாம் துணைக்கு கூட்டிகிட்டு வாங்க பார்க்கலாம்.தங்ஸ் சாப்பாட்ட வெச்சிக்கிட்டு மூஞ்சியக் காமிக்க்குது.வாரேன்.
Followers
Wednesday, July 23, 2008
Tuesday, July 22, 2008
பாராளுமன்றத் துணுக்குகள்.
ஒரு சீரியஸ் சிரிப்பாகிப்போன சோகம்.
லாலு பிரசாத் பேசுகையில்" சரியாக மாலை 6.00 மணிக்கு ராட்சதர்களை தோற்கடித்து மாட்டுத்தொழுவத்தில் கட்டுவோம்" என்றார்.சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி புன்முறுவல்.
அதுலயும் 6.00 மணிக்கு மேலதான் ஓட்டெடுப்பு நடத்தணும்.அப்பத்தான் மாடுகளை 6 மணிக்கு கொட்டிலில் அடைக்கும் தனது வார்த்தைகள் சரியாக இருக்குமென சோம்நாத் சட்டர்ஜியிடம் வேண்டுகோள்.
( லாலுவுக்கும் மாட்டுக்கும் அப்படியொரு பந்தம்)
சிறையிலிருந்து பிரத்யேகமாக வாக்களிக்க வந்த அதிக் அகமது என்ற பாராளுமன்ற உறுப்பினர் " நானும் விவாதத்தை ரொம்ப கவனமாக் கேட்டேன்.ஆனா இந்த விவாதம் எதற்காக என்று தலையும் தெரியல வாலும் தெரியல.ஆனாலும் நான் ஐக்கிய முன்னணிக்கு எதிராக பட்டனை அமுக்குவேன் " என்றார்.
(ஜெயிலுக்குள்ள இருட்டுக்குள்ளேயே மனுசனப் பூட்டிவச்சா வெளிவிவகாரங்கள் எப்படிங்க தெரியும்?)
அடுத்தவன் கால வார்றது எவ்வளவு முக்கியம் பாருங்க:
பாரதிய ஜனதாவின் ஹரிஸ்சந்திர சவான் சாலை விபத்திலிருந்து நாசிக்கிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் மூலமாக டெல்லி வந்தார்.
நடிகர் தர்மேந்திரா முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரத்திலிருந்து விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறார்.எப்படியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்துவிடுவார்.
கிஸான் லால் டைலர் என்பவர் பாராளுமன்றத்திற்குப் பக்கத்திலுள்ள லோகியா மருத்துவ மனையிலிருந்து வருகிறார்.அவரது மனைவியும் மருத்துவர்களும் மருத்துவ மனையை விட்டு நகரக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல் மருத்துவ வேனில் விரைவு.
(இந்த கடமையின் பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினரின் பணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால்.....ம்ம்ம்....( பெருமூச்சு:))
முன்னால் பிரதமர் வாஜ்பாய் இயலாமல் வாக்களிக்க வரவில்லை.
(வேண்டுமென்றே வரவில்லையோ?)
ராகுல் காந்தியை பேசவிடாமல் பாரதிய ஜனதா தள உறுப்பினர்கள் கலாட்டா.சோம்நாத் சட்டர்ஜி " பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு கீழ்நிலைக்குப் போக முடியுமோ அதுவரை போகிறார்கள்."
(இதெல்லாம் எங்களுக்கு ஜுஜிபி.நாற்காலிகளையெல்லாம் உடைத்து நாங்கள் கைக்கு கை கலாட்டா செய்திருக்கிறோமாக்கும்.)
ஐக்கிய முன்னணி எங்களை ரூபாய் நோட்டுக்கட்டுக்களுடன் பேரம்பேசிய பணம் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் டி.விக்கு போஸ்.
(25 கோடி ஒரு கைக்குள் அடக்கமா)
பணபேரத்துக்காக மன்மோகன்சிங் ராஜினாமா செய்யவேண்டும்.பி.ஜே.பி வற்புறுத்தல்.
(எங்களுக்கும் ஏனைய்யா பணம் தரவில்லை என்ற மற்ற உறுப்பினர்களின் கோபம்தான்.)
நம்ம சிதம்பரம் பி.ஜே.பி மீதும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் பாய்ச்சல் " "nothing more bizarre" than two disparate groups coming together to vote against the Government on the confidence motion."
( பஜாரிகள் என்பதன் வார்த்தையின் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்ற காரணத்தினாலே பிசார் என்றார்)
எப்படியோ ஐக்கிய முன்னணி மந்திர எண் 271 தாண்டி 272க்கு தாண்டிவிட்டதாக கடைசி நேரத் தகவல்.
(இந்தப் பதிவு உங்கள் பார்வைக்கு வரும் வினாடிகளில் உண்மை நிலவரம் பாராளுமன்றத்திலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்) வருகிறேன்.
லாலு பிரசாத் பேசுகையில்" சரியாக மாலை 6.00 மணிக்கு ராட்சதர்களை தோற்கடித்து மாட்டுத்தொழுவத்தில் கட்டுவோம்" என்றார்.சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி புன்முறுவல்.
அதுலயும் 6.00 மணிக்கு மேலதான் ஓட்டெடுப்பு நடத்தணும்.அப்பத்தான் மாடுகளை 6 மணிக்கு கொட்டிலில் அடைக்கும் தனது வார்த்தைகள் சரியாக இருக்குமென சோம்நாத் சட்டர்ஜியிடம் வேண்டுகோள்.
( லாலுவுக்கும் மாட்டுக்கும் அப்படியொரு பந்தம்)
சிறையிலிருந்து பிரத்யேகமாக வாக்களிக்க வந்த அதிக் அகமது என்ற பாராளுமன்ற உறுப்பினர் " நானும் விவாதத்தை ரொம்ப கவனமாக் கேட்டேன்.ஆனா இந்த விவாதம் எதற்காக என்று தலையும் தெரியல வாலும் தெரியல.ஆனாலும் நான் ஐக்கிய முன்னணிக்கு எதிராக பட்டனை அமுக்குவேன் " என்றார்.
(ஜெயிலுக்குள்ள இருட்டுக்குள்ளேயே மனுசனப் பூட்டிவச்சா வெளிவிவகாரங்கள் எப்படிங்க தெரியும்?)
அடுத்தவன் கால வார்றது எவ்வளவு முக்கியம் பாருங்க:
பாரதிய ஜனதாவின் ஹரிஸ்சந்திர சவான் சாலை விபத்திலிருந்து நாசிக்கிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் மூலமாக டெல்லி வந்தார்.
நடிகர் தர்மேந்திரா முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரத்திலிருந்து விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறார்.எப்படியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்துவிடுவார்.
கிஸான் லால் டைலர் என்பவர் பாராளுமன்றத்திற்குப் பக்கத்திலுள்ள லோகியா மருத்துவ மனையிலிருந்து வருகிறார்.அவரது மனைவியும் மருத்துவர்களும் மருத்துவ மனையை விட்டு நகரக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல் மருத்துவ வேனில் விரைவு.
(இந்த கடமையின் பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினரின் பணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால்.....ம்ம்ம்....( பெருமூச்சு:))
முன்னால் பிரதமர் வாஜ்பாய் இயலாமல் வாக்களிக்க வரவில்லை.
(வேண்டுமென்றே வரவில்லையோ?)
ராகுல் காந்தியை பேசவிடாமல் பாரதிய ஜனதா தள உறுப்பினர்கள் கலாட்டா.சோம்நாத் சட்டர்ஜி " பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு கீழ்நிலைக்குப் போக முடியுமோ அதுவரை போகிறார்கள்."
(இதெல்லாம் எங்களுக்கு ஜுஜிபி.நாற்காலிகளையெல்லாம் உடைத்து நாங்கள் கைக்கு கை கலாட்டா செய்திருக்கிறோமாக்கும்.)
ஐக்கிய முன்னணி எங்களை ரூபாய் நோட்டுக்கட்டுக்களுடன் பேரம்பேசிய பணம் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் டி.விக்கு போஸ்.
(25 கோடி ஒரு கைக்குள் அடக்கமா)
பணபேரத்துக்காக மன்மோகன்சிங் ராஜினாமா செய்யவேண்டும்.பி.ஜே.பி வற்புறுத்தல்.
(எங்களுக்கும் ஏனைய்யா பணம் தரவில்லை என்ற மற்ற உறுப்பினர்களின் கோபம்தான்.)
நம்ம சிதம்பரம் பி.ஜே.பி மீதும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் பாய்ச்சல் " "nothing more bizarre" than two disparate groups coming together to vote against the Government on the confidence motion."
( பஜாரிகள் என்பதன் வார்த்தையின் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்ற காரணத்தினாலே பிசார் என்றார்)
எப்படியோ ஐக்கிய முன்னணி மந்திர எண் 271 தாண்டி 272க்கு தாண்டிவிட்டதாக கடைசி நேரத் தகவல்.
(இந்தப் பதிவு உங்கள் பார்வைக்கு வரும் வினாடிகளில் உண்மை நிலவரம் பாராளுமன்றத்திலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்) வருகிறேன்.
Monday, July 21, 2008
மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலை வாய்ப்புக்கள்
வேலை வாய்ப்புகள்
பெரும்பாலோர் வெற்றிக்கொடிகட்டு மாதிரிதான் வேலை வாய்ப்புக்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை உதவி மையங்களான ஏஜண்ட்களிடம் தஞ்சம் அடைகிறார்கள்.தகுதியின் அடிப்படையிலும் எந்தவித இடைத்தரகர்களுமில்லாமல் இகுவேட் என்றழைக்கப்படும் நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை.தகுதியும் முன் அனுபவமும் இருக்கும் பட்சத்தில் திறமைக்கான நல்ல சம்பளம் கிட்டும்.யாராவது துறை சார்ந்தவர்கள் நேரடியாக முயற்சிக்கலாம்.தமிழ்ப்படுத்தல் சிரமமாக உள்ளது.ஆங்கிலத்துக்கு தாண்டி விடுகிறேனே.
Career Opportunity with EQUATE Petrochemical Company
Instrument Technologist
Maintenance,troubleshooting,repair,calibration & commisining of process conrol instrumentation (Such as pressure level,temp & flow control instruments including machine protection systems & DCS systems) in oil & gas / petrochemical / refinery or fertilizer plants.
Mechanical Technologist
Knowledge of principles of Rotating Equipment, Seals, Bearings , vibrartions and Lubrication, troubleshooting and repair experience on equipments in petrochemical plant such as large compressors,pumps,turbines,gear boxes, fin fans and agitators. Understanding cross section drawings, knowledge of reactors,boilers,process furnace,heat exchangers.coolers.valves and other process equipments.Practical knowledge on laser alignment and other alignment methods,rebuild and troubleshooting techniques.
Analyzer Technologist
Preventive maintenance.Calibration and troubleshooting of gas chromatography,fixex gas detectors, uv visible spectrophoto meters,ph,conductivity, infra red analyzers, total carbon, total organic carbon analyzers and dissolved oxygen.
Electrical Technologist
Carry out preventive and breakdown maintenance of all plant electrical equipment an systems including troubleshooting of failed equipments such as motors,transformers,generators,UPS, battery chargers,relays,medium/low voltage switchgears, low/medium voltage starters etc.
Qualiification for the above vacancies:
Diplomo in related field with minimum 10 years experience.
The full job description including qualifications and work experience is available on website. Interested candidates can apply online at www.equate.com
under Careers - job opportunities from 21/07/2008 to 30/07/2008.
பெரும்பாலோர் வெற்றிக்கொடிகட்டு மாதிரிதான் வேலை வாய்ப்புக்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை உதவி மையங்களான ஏஜண்ட்களிடம் தஞ்சம் அடைகிறார்கள்.தகுதியின் அடிப்படையிலும் எந்தவித இடைத்தரகர்களுமில்லாமல் இகுவேட் என்றழைக்கப்படும் நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை.தகுதியும் முன் அனுபவமும் இருக்கும் பட்சத்தில் திறமைக்கான நல்ல சம்பளம் கிட்டும்.யாராவது துறை சார்ந்தவர்கள் நேரடியாக முயற்சிக்கலாம்.தமிழ்ப்படுத்தல் சிரமமாக உள்ளது.ஆங்கிலத்துக்கு தாண்டி விடுகிறேனே.
Career Opportunity with EQUATE Petrochemical Company
Instrument Technologist
Maintenance,troubleshooting,repair,calibration & commisining of process conrol instrumentation (Such as pressure level,temp & flow control instruments including machine protection systems & DCS systems) in oil & gas / petrochemical / refinery or fertilizer plants.
Mechanical Technologist
Knowledge of principles of Rotating Equipment, Seals, Bearings , vibrartions and Lubrication, troubleshooting and repair experience on equipments in petrochemical plant such as large compressors,pumps,turbines,gear boxes, fin fans and agitators. Understanding cross section drawings, knowledge of reactors,boilers,process furnace,heat exchangers.coolers.valves and other process equipments.Practical knowledge on laser alignment and other alignment methods,rebuild and troubleshooting techniques.
Analyzer Technologist
Preventive maintenance.Calibration and troubleshooting of gas chromatography,fixex gas detectors, uv visible spectrophoto meters,ph,conductivity, infra red analyzers, total carbon, total organic carbon analyzers and dissolved oxygen.
Electrical Technologist
Carry out preventive and breakdown maintenance of all plant electrical equipment an systems including troubleshooting of failed equipments such as motors,transformers,generators,UPS, battery chargers,relays,medium/low voltage switchgears, low/medium voltage starters etc.
Qualiification for the above vacancies:
Diplomo in related field with minimum 10 years experience.
The full job description including qualifications and work experience is available on website. Interested candidates can apply online at www.equate.com
under Careers - job opportunities from 21/07/2008 to 30/07/2008.
Sunday, July 20, 2008
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கைசாத்திடல் வேண்டும்
தற்போதைய சூழலில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் அரசியல்வாதிகளின் குதிரை பேரத்திலும் காலை வாரிவிடும் சந்தர்ப்ப அரசியலாலும் மதில்மேல் பூனையாக ஆட்டம் காணும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.அரசியல் மாதிரியே பதிவுகளும் ஒப்பந்தத்தை ஆதரித்தும் எதிர்நிலை கொண்டும் காணப்படுகின்றன.வாழ்வின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் குளறுபடிகள்.எதிர்வினைகள் எழுவது பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதற்கான வாய்ப்புக்களைத் தருகின்றன.ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூணுகால்தான் பழமொழிக்கு உரம்போட நினைக்கும் போது மனம் வருத்தமாக இருக்கிறது.
இங்கே ஏ.சி குளிரில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்போது என் தேசம் ரெயில்களின் இறுக்கத்திலும்,வாகனங்களின் சுவாசத்திலும் மூச்சு விட திணறிக்கொண்டுள்ளது. உழைத்துக் களைத்து பயணம் செய்து வீட்டுக்கு வந்தமர்ந்தால் கர கர விசிறிக் காற்று கிட்டினால்கூட பரவாயில்லை என சந்தோசப் படலாமென்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து மின்சார வெட்டு.இதற்கான காரண காரியங்களை மனம் ஆராய்வதில்லை.சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாகிறது.
உலகின் பெரிய தலை ஜனநாயக நாடு என நினைக்கும்போது மனசுக்கு சுகமாக இருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி மக்கள் வாக்களித்து அனுப்பிவைத்த தேசபிதாக்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கொள்கிறார்கள்.ஜனங்கள் ஊர்வலம் என்றும் உண்ணாவிரதம் என்றும் இன்னும் எத்தனை காலங்கள் இந்த தொடர் ஓட்டம்? சரி இதை விட்டு புதிய பாதைகள் கிடைக்குமா என ஆராய்ந்தால் எல்லா இஸங்களும் நொள்ளையும் சொள்ளையுமாகவே இருக்கிறது.வேறு வழியில்லை ஜனநாயகமே வாழ்க்கை.அதற்கான வேர்களையும் நாம் ஆழமாகவே விதைத்துள்ளோம்.பிரச்சினை ஜனநாயகமல்ல.அது செயல்படும் முறை.
ஒரு மனுசன் எத்தனை காசுகளைத் தின்ன முடியும்?ஏன் கோடி கோடியென்று கோடித்துணிக்குப் போகுமுன் எத்தனை சுயநலங்கள்?கையீட்டு வாங்கி மாட்டிக்கொண்ட பின் முகத்தை காமிராவுக்கு மூடும் அரசாங்க அலுவலர்.முக்காடு போட்டுக்கொண்டு காவலர் வாகனத்திலிருந்து இறங்கும் மனிதர்கள்.(இங்கே கையூட்டு தருவதாக வாய்மொழியாக சொன்னதற்காக சிறைக்குப்போன செய்திக்கும் நமக்கும் எவ்வளவு வேறுபாடுகள்?)
நாஸ்திகர்களுக்குத்தான் கடவுள் இல்லை.இந்த ஆஸ்திகவாதிகள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்.வாழ்வின் பிரச்சினைகளின் முன் நாஸ்திகமும் ஆஸ்திகமும் வெறும் ஹம்பக் வேலையா?தனி மனித ஒழுக்கங்கள் மட்டுமே மனிதனை தூய்மைப் படுத்துமா?அப்படியானால் தனிமனித குணநலன்கள் என்றால் என்ன?அது என்ன மரபணு சார்ந்ததா?அப்படியில்லையென்றால் சமூகம் சார்ந்ததா?சார்ந்ததென்றால் எத்தனை சமூக சிந்தனைகள்?வழிகாட்டல்கள்?இத்தனையும் மீறி தவறான மிருகம் மட்டும் வளர்கிறதே?
எனது கவலை என்னவென்றால் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கொள்கையளவில் தோற்றுப் போனால்கூட பரவாயில்லை.கம்யூனிஸ்ட்டுகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்ட அடுத்த கணத்திலிருந்து தொடங்கிய அரசியல் ஆடுகளம் கவலையைத் தருகிறது.அதிகாரம் மையப்படுத்தப் படாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து தரும் நடைமுறை நல்லதாகப் பட்டாலும் இதில் குதிரை பேர அரசியல் நுழைந்து கொள்கிறதே?
இன்றைக்கே வித்திட்டு இன்றைக்கே பூ பூக்கணுமாம்.உலக அழகி ஐஸ்வர்யா வாயசத்த தமிழ்ப் பாட்டு ஞாபகம் வருகிறது.அட! ஒப்பந்தம் செய்துகொண்டால் இன்னும் 15 வருசம் கழிச்சுத்தான் மின்சாரம் கிட்டும்.அந்த மின்சாரம் நமக்கெதற்கு என்று ஒரு கோஷ்டி.
ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க... கணேசனையும் கூட பக்கத்துணைக்கு இழுக்க வேண்டி இருக்கு) கமல்கிட்ட சொல்றாரு."அப்பு இன்னைக்கு நான் விதை விதைக்கிறேன்.அதை நாளைக்கு நீ சாப்பிடுவ...அதுக்கப்புறம் உனது மகன் சாப்புடுவா...)இதுதானுங்க ஒப்பந்தத்தின் ஒரு பக்க சாரம்.
இன்னொருத்தரு சொல்றாரு பாருங்க" நாங்க இருட்டுல இருந்தாலும் இருப்போமே ஒழிய இந்த ஒப்பந்த வெளிச்சம் வேண்டாம்" ங்கிறாரு. என்னத்த சொல்ல போங்க.ஐயா!மெழுகிவர்த்தி விளக்குலயும்,கெரேசின் புகையிலும் ஒரு ஜெனரேசன்(தமிழ்...தமிழ்)கஷ்டப்பட்டதுங்க.இப்போதக்கோ அப்போதைக்கோன்னு பயம் காட்டும் மஞ்சக்காமாலை பல்பு விளக்கிலும் எனது தேசத்தில் கொஞ்சம்பேர் சாதித்துக்கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆனால் இப்போதைக்கு மஞ்சக்காமாலை குண்டுபல்பும் வெளியேறும் காலகட்டத்திற்கு வந்துவிட்டோம்.நானே பாருங்க வீட்டுக்குப் பக்கத்தில் பொட்டிக்கடையில 150வாட்ஸ் குண்டு பல்பு வாங்கி வாங்கியே சோர்ந்து போயிட்டேனுங்க.சும்மா இருக்குற நேரத்துக்கு பிட் படம் பிடிக்க டப்பா ஏதாவது கிடைக்குதான்னு ஒரு அமெரிக்கத் தயாரிப்பாக்கான(பெயர் எ.சி.இ.ஆர் ஏசர்) கடைக்குப் போனால் வெள்ளி மாதிரி பல்புக்கு முகமூடி போட பல்பு ஷேட் ஒண்ணு கிடைச்சது.அதுக்கு ஏத்தமாதிரி ரிப்ளக்டர் பல்பு ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தால் அதுவும் கிடைச்சது.வீட்டுக்கு வந்து அதுக பாட்டுக்கு பரணுல தூங்குது.ஒருநாள் வழக்கம்போல நம்ம குண்டு பல்பு டப்.சரி அவசரத்துக்கு இதை மடிக்கணினிக்கு உபயோகிக்கலாமுன்னு வச்சா பட்டனை அமுக்கினால் அந்த ரிப்ளக்டர் பல்பு எரியுது எரியுது இன்னிக்கு வரைக்கும் எரியுது.கூட கண்ணுக்கும் குளிர்ச்சி.(நீதிக்கதை என்னவென்றால் தொழில்நுட்பம் மாற மாற நாமும் மாறவேண்டும்.கணினி உபயோகிப்பதில் கூட பிரச்சினைதான் அதற்காக உபயோகிக்காமலா இருக்கிறோம்).
இனி இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்றால் வேண்டாம் என்று ஒரு குழு.ஐயா இந்த ஒப்பந்தம் ஒரு கொடுக்கல் வாங்கல் வியாபாரம்.வியாபாரத்துக்கு அடிப்படையே நம்பிக்கை.அதற்கும் அப்பால்தான் காகித வேலைகள்.காகித எழுத்துக்கள் மீது மாற்றம் தேவையென்றால் பிரச்சினையில்லை.வியாபார நம்பிக்கை மீது காழ்ப்புணர்ச்சி கொண்டால் வியாபாரம் எப்படி செய்வது?
எப்படியோ இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்தியாவுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயன் தருமானால் நல்லது. இல்லை குதிரை பேரத்தில் அரசாங்கம் கவிழ்ந்து நிலைகுலையுமானால் அதன் தோல்விகளை அரசாங்கம் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் சுமக்கவேண்டி வரும்.நாளை மறுநாள் இதற்கான கேள்வியின் முடிவு தெரியும்.
இங்கே ஏ.சி குளிரில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்போது என் தேசம் ரெயில்களின் இறுக்கத்திலும்,வாகனங்களின் சுவாசத்திலும் மூச்சு விட திணறிக்கொண்டுள்ளது. உழைத்துக் களைத்து பயணம் செய்து வீட்டுக்கு வந்தமர்ந்தால் கர கர விசிறிக் காற்று கிட்டினால்கூட பரவாயில்லை என சந்தோசப் படலாமென்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து மின்சார வெட்டு.இதற்கான காரண காரியங்களை மனம் ஆராய்வதில்லை.சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாகிறது.
உலகின் பெரிய தலை ஜனநாயக நாடு என நினைக்கும்போது மனசுக்கு சுகமாக இருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி மக்கள் வாக்களித்து அனுப்பிவைத்த தேசபிதாக்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கொள்கிறார்கள்.ஜனங்கள் ஊர்வலம் என்றும் உண்ணாவிரதம் என்றும் இன்னும் எத்தனை காலங்கள் இந்த தொடர் ஓட்டம்? சரி இதை விட்டு புதிய பாதைகள் கிடைக்குமா என ஆராய்ந்தால் எல்லா இஸங்களும் நொள்ளையும் சொள்ளையுமாகவே இருக்கிறது.வேறு வழியில்லை ஜனநாயகமே வாழ்க்கை.அதற்கான வேர்களையும் நாம் ஆழமாகவே விதைத்துள்ளோம்.பிரச்சினை ஜனநாயகமல்ல.அது செயல்படும் முறை.
ஒரு மனுசன் எத்தனை காசுகளைத் தின்ன முடியும்?ஏன் கோடி கோடியென்று கோடித்துணிக்குப் போகுமுன் எத்தனை சுயநலங்கள்?கையீட்டு வாங்கி மாட்டிக்கொண்ட பின் முகத்தை காமிராவுக்கு மூடும் அரசாங்க அலுவலர்.முக்காடு போட்டுக்கொண்டு காவலர் வாகனத்திலிருந்து இறங்கும் மனிதர்கள்.(இங்கே கையூட்டு தருவதாக வாய்மொழியாக சொன்னதற்காக சிறைக்குப்போன செய்திக்கும் நமக்கும் எவ்வளவு வேறுபாடுகள்?)
நாஸ்திகர்களுக்குத்தான் கடவுள் இல்லை.இந்த ஆஸ்திகவாதிகள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்.வாழ்வின் பிரச்சினைகளின் முன் நாஸ்திகமும் ஆஸ்திகமும் வெறும் ஹம்பக் வேலையா?தனி மனித ஒழுக்கங்கள் மட்டுமே மனிதனை தூய்மைப் படுத்துமா?அப்படியானால் தனிமனித குணநலன்கள் என்றால் என்ன?அது என்ன மரபணு சார்ந்ததா?அப்படியில்லையென்றால் சமூகம் சார்ந்ததா?சார்ந்ததென்றால் எத்தனை சமூக சிந்தனைகள்?வழிகாட்டல்கள்?இத்தனையும் மீறி தவறான மிருகம் மட்டும் வளர்கிறதே?
எனது கவலை என்னவென்றால் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கொள்கையளவில் தோற்றுப் போனால்கூட பரவாயில்லை.கம்யூனிஸ்ட்டுகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்ட அடுத்த கணத்திலிருந்து தொடங்கிய அரசியல் ஆடுகளம் கவலையைத் தருகிறது.அதிகாரம் மையப்படுத்தப் படாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து தரும் நடைமுறை நல்லதாகப் பட்டாலும் இதில் குதிரை பேர அரசியல் நுழைந்து கொள்கிறதே?
இன்றைக்கே வித்திட்டு இன்றைக்கே பூ பூக்கணுமாம்.உலக அழகி ஐஸ்வர்யா வாயசத்த தமிழ்ப் பாட்டு ஞாபகம் வருகிறது.அட! ஒப்பந்தம் செய்துகொண்டால் இன்னும் 15 வருசம் கழிச்சுத்தான் மின்சாரம் கிட்டும்.அந்த மின்சாரம் நமக்கெதற்கு என்று ஒரு கோஷ்டி.
ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க... கணேசனையும் கூட பக்கத்துணைக்கு இழுக்க வேண்டி இருக்கு) கமல்கிட்ட சொல்றாரு."அப்பு இன்னைக்கு நான் விதை விதைக்கிறேன்.அதை நாளைக்கு நீ சாப்பிடுவ...அதுக்கப்புறம் உனது மகன் சாப்புடுவா...)இதுதானுங்க ஒப்பந்தத்தின் ஒரு பக்க சாரம்.
இன்னொருத்தரு சொல்றாரு பாருங்க" நாங்க இருட்டுல இருந்தாலும் இருப்போமே ஒழிய இந்த ஒப்பந்த வெளிச்சம் வேண்டாம்" ங்கிறாரு. என்னத்த சொல்ல போங்க.ஐயா!மெழுகிவர்த்தி விளக்குலயும்,கெரேசின் புகையிலும் ஒரு ஜெனரேசன்(தமிழ்...தமிழ்)கஷ்டப்பட்டதுங்க.இப்போதக்கோ அப்போதைக்கோன்னு பயம் காட்டும் மஞ்சக்காமாலை பல்பு விளக்கிலும் எனது தேசத்தில் கொஞ்சம்பேர் சாதித்துக்கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ஆனால் இப்போதைக்கு மஞ்சக்காமாலை குண்டுபல்பும் வெளியேறும் காலகட்டத்திற்கு வந்துவிட்டோம்.நானே பாருங்க வீட்டுக்குப் பக்கத்தில் பொட்டிக்கடையில 150வாட்ஸ் குண்டு பல்பு வாங்கி வாங்கியே சோர்ந்து போயிட்டேனுங்க.சும்மா இருக்குற நேரத்துக்கு பிட் படம் பிடிக்க டப்பா ஏதாவது கிடைக்குதான்னு ஒரு அமெரிக்கத் தயாரிப்பாக்கான(பெயர் எ.சி.இ.ஆர் ஏசர்) கடைக்குப் போனால் வெள்ளி மாதிரி பல்புக்கு முகமூடி போட பல்பு ஷேட் ஒண்ணு கிடைச்சது.அதுக்கு ஏத்தமாதிரி ரிப்ளக்டர் பல்பு ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தால் அதுவும் கிடைச்சது.வீட்டுக்கு வந்து அதுக பாட்டுக்கு பரணுல தூங்குது.ஒருநாள் வழக்கம்போல நம்ம குண்டு பல்பு டப்.சரி அவசரத்துக்கு இதை மடிக்கணினிக்கு உபயோகிக்கலாமுன்னு வச்சா பட்டனை அமுக்கினால் அந்த ரிப்ளக்டர் பல்பு எரியுது எரியுது இன்னிக்கு வரைக்கும் எரியுது.கூட கண்ணுக்கும் குளிர்ச்சி.(நீதிக்கதை என்னவென்றால் தொழில்நுட்பம் மாற மாற நாமும் மாறவேண்டும்.கணினி உபயோகிப்பதில் கூட பிரச்சினைதான் அதற்காக உபயோகிக்காமலா இருக்கிறோம்).
இனி இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்றால் வேண்டாம் என்று ஒரு குழு.ஐயா இந்த ஒப்பந்தம் ஒரு கொடுக்கல் வாங்கல் வியாபாரம்.வியாபாரத்துக்கு அடிப்படையே நம்பிக்கை.அதற்கும் அப்பால்தான் காகித வேலைகள்.காகித எழுத்துக்கள் மீது மாற்றம் தேவையென்றால் பிரச்சினையில்லை.வியாபார நம்பிக்கை மீது காழ்ப்புணர்ச்சி கொண்டால் வியாபாரம் எப்படி செய்வது?
எப்படியோ இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்தியாவுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயன் தருமானால் நல்லது. இல்லை குதிரை பேரத்தில் அரசாங்கம் கவிழ்ந்து நிலைகுலையுமானால் அதன் தோல்விகளை அரசாங்கம் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் சுமக்கவேண்டி வரும்.நாளை மறுநாள் இதற்கான கேள்வியின் முடிவு தெரியும்.
Saturday, July 12, 2008
ஜுலை மாத இரவு நேர புகைப்பட போட்டிக்கு
வணக்கம் அனைவருக்கும்.எனது இரவு நேர முதல் படம் போட்டிக்கு் மற்றவை பார்வைக்கும்.
கடற்கரையிலிருந்து நகரின் நியான் விளக்குகளின் ஜொலிப்பு படப் போட்டிக்கு

K.F.C காரங்களுக்கு போட்டியா இன்னொரு பண்ணு கடை.

பகல் நேரத்திலேயே வைர நிறம்.இதுல ராத்திரி நேரத்தில பார்த்தா சுத்தம்.
வேறொண்னுமில்ல. ரோட்டுல ஓடிகிட்டிருந்த கார்கள்.
அந்தக் கார்களை ஷட்டர் வேகத்துல கிளிக்கியது.இன்னொரு முறை முயற்சி செய்யணும்.

நகரின் இன்னொரு முகம்.நல்லா இருக்கான்னு சொல்லிட்டுப் போங்க!
கடற்கரையிலிருந்து நகரின் நியான் விளக்குகளின் ஜொலிப்பு படப் போட்டிக்கு
K.F.C காரங்களுக்கு போட்டியா இன்னொரு பண்ணு கடை.

பகல் நேரத்திலேயே வைர நிறம்.இதுல ராத்திரி நேரத்தில பார்த்தா சுத்தம்.
வேறொண்னுமில்ல. ரோட்டுல ஓடிகிட்டிருந்த கார்கள்.
அந்தக் கார்களை ஷட்டர் வேகத்துல கிளிக்கியது.இன்னொரு முறை முயற்சி செய்யணும்.
நகரின் இன்னொரு முகம்.நல்லா இருக்கான்னு சொல்லிட்டுப் போங்க!
Subscribe to:
Posts (Atom)