Followers

Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Wednesday, November 17, 2010

ஊழல் , லஞ்சம் மூலக்கூறுகள்

ஊழலின் மூலக்கூறுகள் என்னவென்று பார்க்கும் முயற்சியாக இந்த படைப்பு.

இந்தியாவில் மிகவும் தெரிந்த கண்ணுக்கு தெரிந்த ஆனால் யாரும் அலட்டிக்கொள்ளாத மூலப்பொருள் லஞ்சம் என்ற சொல்.

ஊழலின் காரணங்கள் எது? லஞ்சத்தை எப்படி பிரிக்கலாம்?

லஞ்சம் என்பது அரசு இயந்திரம் சரியாக இயங்காத காரணத்தால் தனி மனிதனை மற்றும் மொத்த சமூகத்தை பாதிக்கும் ஒன்று.இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள்  சாதாரண மக்களே.

ஊழல் எப்படி ஏற்படுகின்றது?

அரசு அமைப்பில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பதவியை உபயோகிப்பது

நிறுவனங்கள் விலை,டெண்டர் போன்றவைகளை நிர்ணயிக்க கையூட்டு தருவது
வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போலீசுக்கு பணம் தருவது மட்டும் கேட்பது, விமான நிலையத்தில் சுங்கவரி அதிகாரிகள் கையூட்டு கேட்பது போன்றவை.அரசு நிறுவனங்களில் தனிமனிதனுக்கு அரசியல் சட்டப்படி சேரவேண்டிய உரிமைகள்,தேவைகளை பூர்த்தி செய்ய கையூட்டு வாங்குவது.

அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக இலவசங்களாக உணவு,பயண செலவு,பணம்,சாராயம் என அள்ளி தருவது. 
இவைகள் நிகழ்வதற்கு காரணங்கள்.

அரசு கட்டமைப்பின் செயல்களில் வெளிப்படையான ஒளிவு மறைவு இன்மை (Tranaparency)

ஒரு செயலின் நன்மை,தீமைகளுக்கான பொறுப்பு (Accountability)

(உதாரணமாக திட்டங்களை அரசு  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தலையைக் குடைந்து செயல்பட்டால் தலிவர்கள் ரிப்பன் வெட்டி பெயரை தட்டிக்கொண்டு போவதும் அதோடு கூட நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அதே அரசு அதிகாரிகள் தூண்டுகோலாக அமைவதும் )

சமுதாயத்தின் ஊழலின் வகைகள்

லஞ்சம் (bribe) - அரசு ஊழியருக்கு தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் தருவது.

வன்முறை (Nepotisim) - கட்டை பஞ்சாயத்து வில்லன்கள் மூலம் பணம் கொடுத்து அடியாள் மூலம் ஏற்படும் கொலைக்குற்றங்கள்.

சார்பு நிலைகள்(Favoritism)  - கட்சி,நண்பர்கள்,சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் என பக்கசார்பாக செயல்படுவது.

ஊழல் (Curruption) - அரசாங்க கட்டமைப்புக்களை பல்வேறு ஆவணப்படுத்தல் குளறுபடிகள் மூலம் ஏமாற்றுவது

திருட்டு  (Fraud)- அரசாங்க பணம் மற்றும் சொத்துக்களை திருடுவது

அரசு அலுவலகங்களின் ஊழல் (Administrative curruption) - அரசாங்க கொள்கைகள் மற்றும் சட்டங்களை திரிப்பதும் மாற்றுவதும்.உதாரணமாக ஒரு டெண்டர் அல்லது அரசு ஆவணத்தில் தகுதியில்லாதவர்கள் பெயரை சேர்ப்பதும் சட்டத்திற்கு புறம்பாக கையெழுத்திடுவதும்.

அரசியல் கட்சிகளின் ஊழல் (Political curruption) -  சட்டம்,நீதி,ஒழுங்கு மற்றும் கொள்கைகளை (ஸ்விஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்க) மாற்றியமைப்பதும் தமக்கு தேவையானவர்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும்.

ஊழலின் விளைவுகள்

நீங்கள் நேரடியாக ஊழலில் ஈடுபடாவிட்டாலும்  ஊழல் உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது.முதலாவதாக ஊழல் உங்கள் வாழ்க்கை தரத்தை குறைக்கிறது காரணம் ஊழல் கட்டமைப்பில் வணிகம் செய்வதற்கான சூழலையும் பொருளாதார நம்பிக்கையையும் குறைக்கிறது

ஊழல் இல்லாத அல்லது குறைந்த நாடுகளை விட ஒரு தனிமனிதனின் சராசரி வருமானம் மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.

இதன் காரணமாக ஒரு அரசு ஊழியருக்கான மாத வருமானம் அரசாங்கத்தால் தருவது குறைவதோடு அரசின் வாங்கும் திறனும் குறைகிறது.அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்கீடு செய்யும் திட்டங்கள் குறைகின்றன.

இதன் விளைவு பள்ளி,மருத்துவம்,நல்ல சாலைகள்,கழிவுகளை அகற்றும் முனிசிபல் திட்டங்கள்,காவல்துறைகள் போன்ற முக்கியமான தேவைகள் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைந்து காணப்படும்.

இதனோடு தனிமனித குணநலன்களின் கூட சமுதாயத்தினாலேயே கட்டமைக்கப்படுகின்றன.தனிமனித குணநலன்கள் நேர் அல்லது எதிராக மாறுவதைப் பொருத்தே ஊழலின் அளவு குறைவதும் வளர்வதும்

மேலும் குழந்தைகள் கருத்தரிப்பில் அல்லது பிறந்தவுடன் இறப்பு மற்றும் படித்தவர்களின் விகிதாச்சாரம் போன்ற பக்கவிளைவுகளை உருவாக்கும்

இதோடு கூட ஊழல் பணம் வைத்திருப்போர் மற்றும் அவரோடு சார்ந்திருப்பவர்களை சட்டத்தை வளைக்கவும் அரசியல் சட்டங்கள் அவர்களுக்கு ஏதுவானதாகவும் இருக்க உதவி செய்யும்.

விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத அளவுக்கு ஊழலின் ஆக்கிரமிப்பு நமக்கு கண்ணுக்கு தெரியாமலே செயல்படும்.

ஊழல் சமூக சூழலை பாதிப்பதோடு அரசாங்கம் சரியாக செயல்படாத நிலைக்கு தள்ளப்படுவதால் அரசு மீதான நம்பிக்கையை குறைக்கும்.

டிஸ்கி: மேலே சொன்ன உலகவங்கி  தியரிகள் அத்தனையும் ஊழல் கொண்ட எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.இந்தியா இதில் அடக்கமா?ஜெய் ஹோ!



படங்கள் உதவி: உலக வங்கி மற்றும் கூகிளண்ணன்