ஜனநாயக ரீதியா காங்கிரசுக்கும் தகுதியிருக்கு தேர்தலில் போட்டியிட.ஆனால் வானம் நிர்மலமாக இல்லாத காலத்திலேயே ஒன்றும் வெட்டி முறிக்க இயலவில்லை தமிழக காங்கிரசுக்கு.இப்போது ஈழத்து கோபம்,ஸ்பெக்ட்ரம் அலையென்ற புயலோடு காங்கிரஸ் தேர்தல் ஐவர் குழுவில் இளங்கோவனை சேர்க்க வில்லையாம்.ஏற்கனவே 1,2,3ன்னு ரிங் நடுவர் சொல்றதுக்குள்ளே பொதக்கடீர்ன்னு கீழே விழுகிற நிலையில் இருக்கிற காங்கிரஸ் இப்ப மல்லாக்கா விழுந்ததுல்ல பதிவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்ப்போம்.தங்கபாலுவுக்கு இது விட கொண்டாட்டமா இருக்குமே?
இதோட மட்டும் படம் முடிஞ்சிருச்சுன்னு ஒடிட வேண்டாம்.படமே இப்போதுதான் ஆரம்பமாகுது.அவனவன் தான் நம்பும் ஒரு காரணத்துக்காக எதுவுமே செய்ய இயலவில்லையே என்ற சுயபச்சாதபத்தில் மண் எண்ணையை,பெட்ரோலை எடுத்து ஊத்திகிட்டு தீக்குளிச்சா அதை எப்படி நெடுமாறன், சீமான் சொல்லி தீக்குளிச்சான்னு கொச்சைப்படுத்துறீங்க இளங்கோவன்? இதோ உங்க கட்சிக்காரரும் கூடத்தான் மண்ணென்னைய ஊத்திகிட்டு கொழுத்திக்கப் பார்த்தாரு.இதையும் நீங்க செஞ்ச செட்டப்புன்னு சொல்லிடலாமா?அதெப்படி தேர்தல் நேரம் பார்த்து கட்சிய கவிழ்க்கிறதுக்கு சரியா ஐடியா கிடைக்குது?
அடப்போய்யா!மனிதன் உணர்வையும்,அன்பையும் புரிஞ்சிக்காத நீயெல்லாம் தலைவன்னுட்டு.நீ மிராசு கட்சிக்கு தலைவனாக்கூட இருந்துட்டுப்போ! ஆனால் தமிழகத்துக்குன்னு கிடைச்ச அந்த வெந்தாடிக்கிழவன் பெயருக்கு களங்கம் கற்பிக்கிறதுக்கு உன்னோட கட்சியே உள் சண்டை கட்சிப்பூசலில் தமிழகத்தில் தலையெடுக்காம போகட்டும்.