பதிவர்களே!உங்களுக்கு தெரியுமா?அட உங்களுக்கு தெரியுமா?
பதிவுலக வவ்வாலே!தலகீழா தொங்கினியே
மாறுபட்ட பார்வை வேறுபட்ட கோணமென்றாயே
இப்ப பார்வையோ மாறுகண்ணு,கோணமோ கோணல்
வெளிச்சம்தான் கண்ணுக்கு கேடுன்னா
இருட்டுலதான் ஒரு தடவை கீச்சிட்டுப் போகலாமே
போகனுமின்னு சிலர் வேண்டுவதெல்லாம்
பசை போட்டு உட்கார்ந்திருக்கு
மணல் போட்டு பதிவு குடுவை செஞ்ச விஞ்ஞான ரோசாவே!
இப்ப அந்த ரகசியமெல்லாம் காணாமல் போச்சே
கலவையெல்லாம் சரியாகத்தானே இருந்தது.
பாண்டிச்சேரி ரோடு கூட தெளிவாத்தான் தெரிஞ்சதுன்னீரே!
நல்லாத்தானே சிக்ஸர் அடிச்சு ஆடிட்டு இருந்தீக
அதென்ன மர்மம் வருசத்துக்கு ஒரு பதிவு
அப்புறமென்ன காணாமல் போன மர்மம்?
தமிழ்ப்பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை
ஒரு தமிழ்ப்படத்துக்கு போட்டதுல
பழைய நினைப்புதான்
வவ்வால் பழைய நினைப்புதான்
என்ன கொடுமை சார் இது.