Followers

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Tuesday, May 4, 2010

ஒட்டு

முன்பு ஜார்ஜ் புஷ்,டோனி பிளேர் போன்றவர்கள் வெள்ளை மாளிகையில் புல்வெளியில் உலாவும் போது காலாற நடக்கிறார்கள் என்றே நினைத்திருந்தேன்.வெள்ளை மாளிகையின் சுவர்களுக்கும் கூட பேசும் திறன் இருக்கலாமென கருதி சில ரகசிய பேச்சுக்களை புல்வெளியில் நடந்து கொண்டே பேசுவது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்று கருதியும் கூட ஒருவேளை நடைப்பயிற்சி செய்து இருக்கலாம்.உலகளாவிய அளவில் சிறந்த ஒட்டுக்கேட்கும் கதாநாயகன் ஜேம்ஜ்பாண்ட் 007.அசலா CIA, KGB, Scotlandyard மற்றும் Interpol போன்ற நிறுவனங்கள் எனலாம்.இவைகளெல்லாம் மடியிலே கனமிருப்பவர்களுக்கு மட்டுமே.அரசியல் ரீதியாக எங்கே எப்படியெல்லாம் ஒட்டுக் கேட்கப்பட்டதோ ஆனால் வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றியது வாட்டர்கேட் ஊழல் என்ற நிக்சன் காலத்து ஒட்டு.

மக்களாட்சியை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்வதில் ஒட்டுக்கேட்டல் என்ற அரசியல் மீறல்களும் கூட வெளிச்சத்துக்கு வந்து விடுவதுதான்.மக்களாட்சி தத்துவத்தில் ஒட்டுக்கு வழிகாட்டிய அமெரிக்காவுடன் நாமும் போட்டி போடாவிட்டால் எப்படி என இந்தியாவும் இப்போது தனது ஒட்டு பங்களிப்பை செய்கிறது.

ஒட்டுக்கேட்டல் இந்திய பாராளுமன்றத்திலேயே ஒலிக்கும் போது ஆளுநர் பதவியில் ஆற அமர்ந்து இருப்பதன் காரணம் கொண்டோ மிட்டாய்க்கடை,பணியாளர்கள் குரல்கள் மட்டுமே கிட்டும் பழக்கதோசத்தின் துக்கத்திலோ ஒட்டுக்கேட்டலின் மகிமையை ஒருவர் டமாரம் கொட்டுகிறார்.


இப்போதைய காலத்து அரசியலில் கல்லறை வரை ரகசியத்திருடர்கள் என இருவரைக் குறிப்பிடலாம்.ஒன்று முந்தைய பிரதமர் நரசிம்ம ராவ். அடுத்து எம்.கே.நாராயண். ஒரு பீரோகிராட்டிக்காக நரசிம்ம ராவை விட ரகசியங்களை எம்.கே நாராயண் தன்னகத்தே வைத்திருக்க கூடும்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,நேபாளம்,பங்ளாதேஷ், சீனா, அமெரிக்கா என இவரது பங்களிப்பை சரித்திரம் எழுதி வைக்க மறந்து போனாலும் ஈழத்தமிழர்களின் ரத்தக்கறையின் பங்காளிகளில் ஒருவர் என்பதை தமிழக வரலாறு நிச்சயம் எழுதி வைக்கும்.


இனி திருவிளையாடல் ஸ்டைலில்

வாசிப்பின் சுகத்துக்கு

மால்குடி நினைவுகள் ஆர்,கே.நாராயண்

ஒட்டு கேட்கும் சுகத்துக்கு

எம்.கே.நாராயண்

ஒட்டு கேட்பது சுகம் என்ற அவரது திருவாய் மலர்ந்தது இங்கே


இனி அரசியலுக்கும் அப்பால் கொஞ்சம் ஒட்டும்,ஒட்டு சார்ந்த இடங்களையும் காணலாம்.

ஹலோ யார் பேசறது வடிவேலுவுக்கும் முன்பான க்ராஸ்டாக் பேச்சுக்களின் ஒட்டுக்கேட்டல் எல்லோருக்கும் இலவசம்.ஆனா லாட்டரி மாதிரி யார் யாருக்கு என்ன டயலாக் மாட்டுமென்பது கண்ணதாசன் பாடலின் இறைவன் கொடுத்த வரம்.இருந்தும் மொபல்களுக்கும் முன் யூத்களுக்கு ஒட்டுக்கேட்பதில் எல்லாம் விருப்பமிருப்பதில்லை.மாறாக ஒட்டுக்கேட்கும் நிறுவனத்தின் வருமானத்தில் கைவைக்கும் படியாக ஒற்றை ரூபாய் நாணயத்தில் நூலைக்கட்டி நண்பனுக்கோ காதலிக்கோ கடலை போட்டு விட்டு காசை திருப்பி எடுத்துக் கொள்வதுடன் சரி.ஒரு முறை கல்லூரி சேர்மன் பிரின்சிய திட்டனுமென்று டெலபோன் முகத்துக்கு கர்சீப் போட்டு கரகர என்று கத்தினான்.அந்தப்புறம் அவர் கத்த இங்கே இவன் கத்த பக்கத்திலிருந்த அல்லக்கைகளான எங்களுக்கு ஒரே ஒட்டு கேட்ட சிரிப்பு.

கிணற்று மேடு,குழாயடி,அலுவலக கேன்டீன்,பேன் பார்த்துக் கொண்டே பக்கத்து வீட்டு கதைகள் என பெண்களின் ஒட்டுப்பேச்சு இலக்கிய தரத்து பிரபலம்.ஏதோ பக்கத்துல இருந்து ஒட்டு கேட்ட மாதிரி சினிமா கிசு கிசுன்னு ஒன்று இருக்குது.பத்திரிகை கிசு கிசு படிக்கிறதுன்னா லட்டு மாதிரி ஜொள்ளு விடற வயசுல.அப்புறம் நிருபருக்கு காசு கொடுத்து நடிகரோ, நடிகையோ,நடிகையோட அம்மாவோ செய்யும் வியாபார மார்க்கெட் தந்திரமின்னு தெரிஞ்சப்புறம் உப்பு,காரமில்லாத பத்தியம் மாதிரி ஆயிடுச்சு.சமீபத்துல சிம்பு நயன்தாரா உதடு கடி வியாபார சந்தைப்படுத்தலின் ஒரு உதாரணம்.சமீபத்தில் ஒரு பதிவர் இன்னொரு சமீபத்துக்களை கிசு கிசுத்திருந்தார்.இதுவும் ஒட்டு கேட்டலின் உள்ளடக்கம்.எங்கேயோ துவங்கி எங்கேயோ மொக்கை ஓடுது. ஜூட்.

Monday, March 22, 2010

பிளாக்குறது தப்பா!

சலுன் கடைல தினத்தந்தி படிச்சோமா,போண்டா தின்னுகிட்டே எதுத்தாப்புல இருக்குற பொட்டிகடைல மாலைமுரசு நாலுவரி செய்தி படிச்சோமா,பஸ்ல போறப்ப அந்தக் குமுதத்த கொஞ்சம் குடுக்கிறீங்களா?ஊர் லைப்ரரியில படிக்க முடியாத அளவு பக்கங்களுடன் இருக்கும் கதைப் புஸ்தகத்தையெல்லாம் படிச்சு திருஞ்சுகிட்டுருந்ததுக,ராணி,குங்குமம்,ஆனந்த விகடன்னு தொடர்கதைய வெட்டி,வெட்டி பைண்டிங் செஞ்ச கிறுக்குகள்,லெட்டர் டு தி எடிட்டர்,இன்ன பிற(?)படிப்பாளிக,பார்வையாளர்களுக்கெல்லாம் வந்த வாழ்வப் பாரேன்!

மொக்கையுங்குது,கவிஜப் பாடுது,தொழிலு நுட்பத்துல இது புதுசுங்கோ சொல்லுது,வேலையிருக்குது போறீயா விசாரிக்குது,சமையல் செய்து பாரேன் ரெசூபி சொல்லுது, இன்னுங் கொஞ்சம் மேல படியேறி காஞ்சிபுர மடத்தப் பத்தி பேசுது,ஹுசைன் ஓவியம் பார்க்காதவங்களையெல்லாம் இந்த கண்றாவியப் பாருங்களேன் சொல்றது,சன் டி.வியும்,அல்லக்கை நக்கீரனும் ஏதோ ஒரு நாள் ரேட்டு பேசி வியாபாரம் செஞ்சா அதையே புடிச்சிகிட்டு தெரியாத ராஜசேகரனுக்கு காவியுடை போட்டு இவந்தான் அவன் பிலிம் காட்டறது.

என்னமோ போனா போகட்டும்ன்னு விட்டுட்டோம்.சொல் எடுத்து மூஞ்சிகளை முகமூடி போட்டுகிட்டு கிழிக்கிறது,போட்டும்,போடாமயும்,க(ற்)ருப்புக்கே களங்கம் விளைவிக்கிறதுன்னு அடிச்ச லூட்டிகளையெல்லாம் நாங்க வந்து ஏதாவது கேட்டமா?ஆனா கட்சி கோட்பாட்டை குலைக்கிறது,மக்கள் நல்லா இருக்கட்டுமேன்னு அஞ்சும்,பத்தும் கொடுத்தா அதப்பத்தி பொரணி பேசுறது,தலிவரு உங்களுக்கெல்லாம் எத்தன செஞ்சிருப்பாரு அதையெல்லாம் விட்டுட்டு ஒரு தொண்டரடிப் பொடியாள்வார் சொன்ன மாதிரி ஏதோ கட்டிக் காப்பத்துன கட்சி,குடும்பம் சிதைந்து போகக்கூடாதேன்னு நினச்சு எதிர்க்கட்சிக செய்யுற சூழ்ச்சிகளையெல்லாம் தாங்க முடியாம இலங்கைப் பிரச்சினையில குட்டைய கலக்குனா மீன் எப்படி பிடிக்கறன்னு பார்க்கிறேன்னு விட்ட ஒரு சின்ன விசயத்தையெல்லாம் பெருசு பண்ணி ஊதி விடறது,நெருப்பு இருக்குதான்னு பார்க்கறது இதெல்லாம் இல்லாம பின்னுட்டம் போடற பேர்வழிகள்ன்னு கூடி கூடி கும்மியடிக்கிறது.

மக்கள் ரேசன் அரிசி சமைச்சு சாப்பிட்டாங்களா,வேலைக்குப் போனங்களா களைச்சு வீட்டுக்கு வந்தா அவங்க பாட்டுக்கு சீரியல் பார்த்தாங்களா,சினிமா பார்த்தாங்களான்னு இருக்குற ஓட்டுப் போடற அப்பாவி ஜனங்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை உங்களுக்கெல்லாம் என்னய்யா வந்தது?பிளாக்கு!அதென்னய்யா பிளாக்கு?பிளாக்கிங்கிறதே கருப்புத்தான்யா!அதையெல்லாம்தான் பாரபட்ச மில்லாம எல்லாக் கட்சிக் கொடியிலயும் வச்சிருக்கிறோமே.இதுவும் பத்தாதுன்னு கவியரசர் வைரமுத்துவ கூப்பிட்டு கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலருன்னு பாட்டு வேற எழுதி பரிசெல்லாம் குடுத்திருக்கிறோமே?அப்புறமென்னய்யா நீங்க எல்லாம் வந்து புதுசா தாளிக்கிறீங்க?

ஓசுல இடத்தக் கொடுத்தா அதுக்கு வேற பட்டா போட்டு படமெல்லாம் போட்டு வெச்சுகிட்டு என் கடைக்கு வாங்க!இந்தக் கடைக்கு வாங்க,அந்தக் கடைக்கு போங்கன்னு எலிய கடிக்க விடறது!இதையெல்லாம் யார் கொடுத்தா?பேட்டை அண்ணாச்சி அமெரிக்காதானே கொடுத்தாரு?அவரு சொல்றதத்தானே நாங்க கேட்கிறோம்?நேத்து கூடப் பாரு இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தைய நிருபமா ராவ் கிட்ட சொல்லி ஹில்லாரி காதுல போட்டுட்டமில்ல?நீங்க எல்லாம் சொல்றதுனாலதானய்யா சிதம்பரம் மறுபடியும் மும்பாய்க்கு வந்தீங்கன்னா இனி திரும்ப அடிப்போம்ன்னு அறிக்கை விடறாரு.

எங்க பேச்சைக் கேட்பான்னுதான் ராஜபக்சேவுக்கு உதவினோம்,அந்தாளு என்னடான்னா இந்தியாவுக்கும் பெப்பே,தமிழ் நாட்டுக்காரனுக்கும் பெப்பேன்னு சீனாக்காரன்கூட போய் சேர்ந்துகிட்டான்.நாட்டு ரகசியமெல்லாமா போய் பிளாக்குல சொல்றது?அதுதானே நிருபமா ராவ அனுப்பி பேச்சு வார்த்தை நடத்துறோமே அப்புறம் என்ன?இப்பவெல்லாம் நாங்க சேர் எடுத்து அடிச்சிக்கிறதில்லை தெரியுமா?காமிரா இருக்குற பயத்துல மெச்சூர்டு ஆகிட்டோமில்ல!எங்களை எங்க வேலைய செய்ய விடுங்கய்யா! வேணுமுன்னா கொடியப் புடிச்சிகிட்டு போராட்டம் நடத்த அனுமதி தருகிறோம்.அப்பப்ப ஏதாவது கோசங்கள் எழுப்புங்க!பஞ்சம் பொழக்கப் போனவங்க லீவு,காசு வசதியப் பொறுத்து வந்து ஒழிக!ஒழிக சொல்லுங்க.வேண்டாமுன்னா சொல்றோம்?

இல்ல ஊர் ஊருக்கு தினத்தந்தி,குங்குமம்,குமுதம்,விகடன் படிக்கிறத விட்டுட்டு நாடு நாடா சுத்தறதுமில்லாம அப்பாவியா இருக்குற எங்க புள்ளைகளையும் கெடுக்கறது.அமெரிக்காவுல இப்படியாக்கும்,லண்டன்ல இப்படியாக்கும்,சிங்கப்பூர்ல அப்படியாக்கும்,துபாய்ல இப்படியும்,அப்படியுமாக்கும்ன்னு பிளாக்குதான் எழுதுவீங்கன்னு நினைச்சா இனிமேல் இன்னுமொரு இணைய புதிய சட்டம் வரைஞ்சிட வேண்டியதுதான்.அமைச்சர் பூங்கோதைகிட்ட சொல்லியிருக்குது.வருது உங்களுக்கெல்லாம் ஆப்பு.

இல்ல!அமெரிக்காவுல இணையம் பயன்படுத்தலும் தங்கள் கருத்தை சொல்றதும் மனித உரிமைகளில் ஒன்றுன்னு தீர்மானம் போட்டிருக்காங்க.எங்களுக்கும் மனுச உரிம வேணுமுன்னு கேட்டீங்கன்னா மவனே,தோ!நேரா சீனாக்காரன்கிட்ட புடிச்சுக் கொடுத்துடுவோம்.ஏன்னா அவன்கிட்டத்தான் கூகிளே கிடையாதே?அப்புறம் எப்படி பிளாக்குவீங்க அப்புறம் எப்புடி பின்னால பின்னால சுத்துவீங்க? ஏம்ப்பா தெரியாமத்தான் கேட்கிறோம்,மத்த மாநிலத்து பசங்க எல்லாம் உங்க மாதிரியா ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்கிறாங்க?அது யாருப்பா!தமிழ்மணம்?தங்கிலீஷ்?உங்கனாலதான்யா இந்த அப்பாவி பசங்க கெட்டுப்போறாங்க.

Tuesday, June 2, 2009

ஒரு மொக்கை அறிக்கை

இங்கே வால்பையன் போன்ற Self proclaimed யாருக்கும் அனானி பின்னோட்டம் இடுவதில்லையென்ற குழுவில் நானும் அங்கத்தினன்.கடை திறந்த நாள் முதல் இன்று இந்த கணம் வரை நான் யாருக்கும் அனானிப் பின்னூட்டம் இட்டதில்லை. இனிமேலும் இடமாட்டேன்.சிலர் நிரந்தரமா கடை போடாம கருத்து சொல்வதற்கு வேண்டியும் கூட அனானி வசதியை உபயோகிக்கக் கூடும்.ஆனால் விளையாட்டாகவோ சிலர் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவோ அனானிப் பகுதியை உபயோகிக்கிறார்கள்.அனானி என்றாலே திட்டுபவன் என்ற முத்திரை விழுந்து விட்டதால் அனானிப் பகுதி எனக்குப் பிடிப்பதில்லை.எனக்குப் பிடித்த கருத்துக்களுக்கு மொக்கையாகவோ,சிரிப்பாகவோ,கருத்தின் களம் கொண்டு அதில் மூழ்கியுமே பின்னூட்டங்கள் இட்டுள்ளேன்,இனியும் இடுவேன் .

ஆனால் முந்தைய பதிவான நானும் பின்னூட்ட வாத்தியார்தான் பின்னூட்டத்தில் ஒரு அனானி இட்ட பின்னூட்டம் இங்கே:

//அப்படியே திவ்யான்ற பேர்ல நீங்க எழுதற இன்னொரு டுபாக்கூர் ப்ளாக்லையும் பண்ணலாமே?//

யாருப்பா இந்த திவ்யா?அனானி!அது நான் இல்ல கண்ணு!திவ்யாங்கிற பேர்ல நான் ஒரு இடுகையைப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.எனக்கு இடுகை எண்ணிக்கை கூட்டறது,டுபாக்கூர் ப்ளாக்ல எழுதுவதில் ஆர்வமில்லை.சொல்லப்போனா நான் 100வது பதிவை எப்ப கடந்தேன் என்று கூட கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.பதிவுகள் பல பரிமாணங்களில் இருந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக என்னை மனதால் ஆக்கிரமித்துக் கொண்ட ஒரே விசயம் ஈழமும் ஈழம் சார்ந்த இடுகைகளும்,பதிவர்களும். தமிலிஷ் இணைக்கறதுல கூட சோம்பேறி பட்டுகிட்டு இன்னைக்கு நாளைக்கின்னு நாட்களை தள்ளிப் போட்டு அண்ணன் நசரேயன் இன்றைக்கு நினைவூட்டி அதை ஒட்ட வச்சிருக்கேன்.

So my dear friends! Anony is not my cup of tea and I will remain as gentleman as far as this blog exist.Thank you.

Thursday, March 19, 2009

மொக்கை துவக்க விழா

மொக்கை போடறுதுன்னு முடிவெடுத்த பிறகு இடமென்ன வலமென்ன?அதனால வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடாம இருக்கிறத வச்சி தேத்திட வேண்டியதுதான். நேத்தைக்கு பரிசலோட வீட்டுக்குப் போனப்ப எல்லோரும் அங்கீகாரத்துக்குத்தான் எழுதறாங்கன்னு சொல்லிகிட்டுருந்தாரு.நான் அங்கீகரமாவது கிங்கீகரகமாவது எழுதறது பிடிச்சிருக்குன்னு பின்னூட்டக் கடிதாசி போட்டு விட்டு வந்தேன்.பார்த்தாரோ இல்லையோ பதிவோட பக்கத்துக்கே வெளிச்சம். இன்னொரு பதிவரு நீங்கெல்லாம் சிண்டிகேட் வச்சு சில்மிஷம் பண்ணிகிட்டு இருக்கீங்கன்னு சிரிச்சிகிட்டு இருந்தாரு.

பதிவெழுதறதுக்கு யார் யாருக்கு என்ன காரணமுன்னு காரண காரியமெல்லாம் நான் தேடுறதில்லைங்க.தனிமனித விளாசல்,மதம் பிடிச்சு திரியறது ரெண்டைத் தவிர எல்லா வீட்டுக்கும் சத்தமில்லாம அல்லது சில சமயம் சத்தம் போட்டுகிட்டு வந்துடறேன்.சொல்லப் போனா எழுதற ஆர்வத்தையும் தாண்டி பதிவர்கள் எழுத்துக்களும் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பின்னூட்டத்தில் புன்முறுவல் பூப்பதும்,பல்கோணப் பார்வையும் ரொம்பவே நல்லாயிருக்கு.எனவே படித்தல்,புரிதலில் இருக்கும் ஆர்வம்,நேரம் எழுத்தில் காண்பிப்பதில்லை.

சரின்னுட்டு சூடான பகுதியில யார் தேறுறாங்கன்னு போனா பதிவர் கமலக்கண்ணன் பெண்களின் சல்வார் கமீஸ் அணிவது பற்றியும் ஓடுற பைக்ல துப்பட்டா பறக்க விடாதீங்கன்னும் நல்லது சொல்லிகிட்டிருந்தார்.சொன்னதோடு நின்னுருந்தா பரவாயில்லை.சாருநிவேதிதா சொன்னது உண்மைதான் இந்தியர்கள் செக்ஸ் ஸ்டார்வேசன் ஆட்கள் அப்படின்னாரு.இது என்ன பொதுப்புத்தின்னு தெரியல.ஒருத்தர் பிரபலமாகி விடுவதாலேயே அவர் சொல்லும் எல்லாக் கருத்துக்களும் சரியாகத்தான் இருக்கும் என்று எடுத்துக் கொள்வது.சாரு நிவேதிதா சொல்வது உண்மையில்லைங்க.இந்தியனை விட காஞ்சவன் தேசம் தேசமா அலையிறான்னு சொல்லிவிட்டு வந்தேன்.

குறைந்தபட்சம் கண்ணும் கண்ணும் நோக்கினால் அங்கீகரமாவது இந்தியாவில் உள்ளதென நினைக்கிறேன்.அதையும் தாண்டி ஆண்,பெண் நட்புங்கிற நிலைக்கும் கூட முன்னேறியுள்ளது.கல்லூரி காலங்களில் மும்பையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் தாதரிலிருந்து நண்பர்கள் பிரவின்,முகர்ஜி,நான் கிளம்பினோம்.எங்கள் இருக்கைக்கு வந்த இரு பெண்மணிகளில் ஒருவர் எங்களிடம் வந்து மற்ற பெண்ணைக் காட்டி வேலூர் மருத்துவக்கல்லூரியில் சேரப்போவதாகவும் சென்னை வரை மருத்துவப் பெண்ணிடம் பேசிக் கொண்டு போகும்படியும் சொல்லிவிட்டு ரயில் கிளம்பும் வரை இருந்து விட்டு போய்விட்டார்.நாகரீகமான அந்த அறிமுகத்தால் தவறான எந்தப் பார்வையுமில்லாமல் அந்தப் பெண்ணிடம் சகஜமாக பேசிவிட்டு அவ்வப்போது சாப்பாடும் பங்கு போட்டு சாப்பிட்டு விட்டு சென்னை சென்ட்ரல் வரை சென்றோம்.

ரயில் பயணம் நினைவு வந்தவுடன் இன்னொரு நினைவு வருகிறது.இப்படித்தான் இன்னொரு நண்பர் பட்டாளத்தில் சுப்பரமணி என்பவன் வண்டி போகும் அவசரத்தில் பக்கத்தில் இருக்கையில் வந்து அமர்ந்த ஒருவரைப் பார்த்து இந்திக்காரன் என்று நினைத்து எருமை மாடு மாதிரி வந்து முட்டிகிட்டு உட்கார்ரான் பாருன்னான்.யோவ் எனக்கும் தமிழ் தெரியுமுன்னு வந்தவர் சொல்ல ரெண்டு பேருக்கும் எகிறிகிச்சு.

மணியடிக்கப் போறாங்க.ரெண்டு நாளைக்கு வார இறுதி.அதனால கணினிப் பக்கம் வந்தாலும் வருவேன்.இல்லைன்னா சமையல்கட்டு ஆராய்ச்சி,காய்கறி,சூப்பர்மார்க்கெட்டுன்னு சுத்திகிட்டு இருப்பேன்.ஞாயிற்றுக்கிழமை வந்து இடம்,வலம்,நடு என்று பதிவுகளை தரிசிக்கிறேன்.வணக்கம்.

Tuesday, March 17, 2009

இனிமேல் நான் மொக்கையர் பக்கம்

விழுந்து புரண்டு மண்டைய ஒடச்சி ரூம் போட்டு யோசிச்சு தீவிரமா இல்ல இஃகி கின்னு சொல்லி சிரிச்சு எப்படியெல்லாம் பதிவர்கள் எழுத்துக்கு எழுத்துமாச்சு புத்திக்கு புத்தியுமாச்சு நடப்புக்களை கணிச்சதுமாச்சு காலங்களை குறிச்சு வச்சமாதிரியுமாச்சுன்னு மெனக்கெட்டு பதிவுகள் போட்டா பளீங் சடுகுடு குடு குடுன்னுன் ட்டு நாங்க போற ட்ராக்கிலேயே போவோமுன்னு இலங்கையும் மத்தியும் மாநிலமும் ஓடுது.

யாராவது லாஜிக்கில்லா மேஜிக் பேய்க்கதை சொல்றவங்க இருக்கிறீங்களா? இதோ இப்ப வாரேன் துன்னுட்டு.

Monday, June 30, 2008

எனக்கும் எக்ஸ்புளோரருக்கும் என்ன சண்டை?

இத்தனை நாட்கள் நல்லாத்தானே பேசிகிட்டு இருந்தே?திடீர்ன்னு என் மேல் என்ன கோபம்?அல்லது யூனிகோடுக்கும் உனக்கும் ஏதாவது மனஸ்தாபமா? உன்கிட்ட அன்பாத்தானே இருந்தேன்?நேற்று முதல் தொடாதே தொடாதே ன்னு எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறாயே?

போடின்னு கோவிச்சுகிட்டு நெருப்பு நரிக்கு ஹலோ சொன்னா வாய்யா மச்சான்! உட்கார்ன்னு அழகா உபசரிக்குது.தமிழ்மணத்துக்கு கூட்டிட்டுப் போகவான்னு கேட்குது.ஒழுங்கா என்கிட்ட சண்டை போடாம இருக்குறதுன்னா இரு இல்ல உன் முகத்துலேயே முழிக்காம நெருப்பு நரியே கதின்னு இருக்கப் போறேன்.

நாட்டாமைகள் யாராவது இந்த சண்டையை தீர்த்து வச்சீங்கன்னா ஒரு கும்புடு போடுவேன்.