ஒண்ணுமே எழுதறதில்லிங்கண்ணா.சும்மா தமாசுக்கு அங்கே இங்கேன்னு கொஞ்சம் பின்னூட்டம் மட்டும் போட்டு விட்டு கிடைக்கிற நேரத்துக்கு கொஞ்ச நஞ்ச பதிவுகளைப் படிக்கும்போதே கண்ணக் கட்டுது.
போதாததுக்கு ராத்திரியெல்லாம் கனவுலயெல்லாம் தமிழ்மணம் வந்து பயப்படுத்துது.நோய் எப்ப முத்துமின்னு தெரியல.அந்த குசும்பன் எங்கே போனாருன்னு தெரியல.இல்லாட்டி அவருகிட்ட மருந்தாவது வாங்கலாம்.
அட நமக்கே இப்படின்னா விடாம பேந்தா விளையாடுற பதிவர்களை நினைச்சா ஹி...ஹி... சிரிப்பா வருது:).பேரைச் சொன்னாலும் ஊரச் சொல்லாதேன்னு அப்பவெல்லாம் பழமொழி.நெல்லிக்காய் மூட்டைய அவித்து விட்ட கணக்கா உலகம் முழுதும் கொட்டிக் கிடக்கிற பதிவர்கள் +பதிவிகள்ல யாரு பேரச் சொல்றது.அதுல வேறு கொஞ்சம் பேறு முக்காடு போட்டுகிட்டு கதை சொல்றாங்க.எதுக்கு வம்பு?
நானுண்டு என்னோட பிட் படத்துக்கு கடைசி வரிசையில நிக்கிற பணியுண்டுன்னு கிடக்கிறேன்.நல்லவேளை இத எழுதற இந்த நேரத்துல ஜுலை மாச பிட் படத்துக்கு இன்னும் படம் பிடிக்காத ஞாபகம் வருது.நேத்து வானத்தை அண்ணாந்து பார்த்தா நிலா (நந்து f/o நிலா டாப்ஸிலிப் படம் வேற ஞாபகத்துக்கு வருது:) அரை வட்டத்துல நிக்குது. எப்படியோ ஒரு படத்தை இன்னைக்கு புடிச்சிற வேண்டியதுதான்.
தங்ஸ் வேற இன்னைக்கு பீச்சுக்கு புரோகிராம் பண்ணிருச்சு.அதனால எப்படியும் ஒரு இருட்டுக்கடை அல்வா! இல்ல இருட்டு நேர படம் ஒண்ணு மாட்டுமின்னு நினைக்கிறேன்.சி.வி.ஆர்! எனக்கும் ஒரு சீட்டு புடிச்சு வையுங்க.எப்படியும் சனிக்கிழமை சாயந்தரத்துக்குள்ள வந்து சேந்தர்றேன்.
மீனு கம்பியத் தூக்கிட்டுப் போனா ரெண்டு மீனு மாட்டுனாலும் மாட்டும்.அதையும் சுட்டுத் திண்ணுட்டு வரணுமின்னு முடிவு பண்ணியிருக்கேன்.பார்க்கலாம்.மீனு மாட்டுதான்னு.
டிஸ்கி: அண்ணா!வெட்டி அண்ணா பீச்சுக்குப் போறதையும்,மீனப் பிடிக்கிறதையும்,பிட் படம் காண்பிக்கிறதையெல்லாம் NRI அலும்பு கணக்கில சேர்த்த கூடாதுங்கண்ணா:)
Followers
Thursday, July 10, 2008
ஜுலை மாத பிட்டுக்கு ஒரு பிட்டு
Wednesday, July 9, 2008
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்-ஓர் பார்வை
இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தத்தின் கருத்து வேறுபாடு காரணமாகவும் ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற கருத்து
கோட்பாட்டின் பேரிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தில் ஜார்ஜ் புஷ் கூட இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு தந்த பேட்டியின் அடிப்படை கருத்தைக் கொண்டும் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு தரும் தனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்ளப் போவதாக கூறும் இந்த தருணத்தில் இந்த பதிவின் அச்சு அவசியமாகிறது.பொதுவாகவே இந்தப் பிரச்சினையிலும் ஏனைய பிரச்சினைகளிலும் அதனைச் சார்ந்தோ அல்லது எதிர்வினையாகவே கருத்துக்கள் வருகின்றன.இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் நன்மை தீமைகளை ஆராயும் போக்கு குறைவாகவே காணப்படுகின்றது.அரசியலுக்கும் அப்பால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் மேல் ஓங்கி இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையின் மூலப் பொருளைக் கண்டறிய முடியும்.அப்படிநிறைகுறைகளைக் கண்டறியும் மனோபாவங்களை வளர்ப்பதே நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் பயனளிக்கும்.ஆனால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரவலாக காணப்படவில்லை.
அரசியல் பின்னடைவுகளின் இடையிலும் இன்று 09,புதன் 2008 தினம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றிய கருத்து மேம்பாட்டை கலந்தாலோசித்தார் மன்மோகன் சிங். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் ஜார்ஜ் புஷ்.பொரோமோய் மலையின் ஓட்டல் விண்ட்சர் என்ற இடத்தில் மன்மோகன் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஸும் இரண்டு நாடுகளிக்கிடையேயான நட்புறவு பற்றி பேசினார்கள்.இதில் ஜார்ஜ் புஷ் அணு ஒப்பந்தம் பற்றி தாங்கள் இருவரும் விவாதித்ததாகக் கூறினார்.
இந்திய அரசியல் அலைகளின் மாற்றங்கள் பற்றி மன்மோகன் சிங் அவர்கள் அதிகமாக வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை.தனது அரசாங்கமும்,மக்களும் குறிப்பாக நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மக்கள் தனது பக்கம் இருப்பதாகவும் இரண்டு நாடுகளின் ஒற்றுமை மேலும் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதன் முழு உருவத்தை அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.மன்மோகன் குறிப்பாக அணு ஒப்பந்தம் பற்றிக்
குறிப்பிடவில்லையென்றாலும் இரண்டு நாடுகளும் அணு,பாதுகாப்பு,விண்வெளி மற்றும் கல்வி பரிமாற்றங்களின் முன்னேற்றங்கள் பற்றியும்
இருநாடுகளின் உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் இதன் காரணகர்த்தாவான ஜார்ஜ் புஷ்ஸுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஐ.எ.இ.எ ஆளுநர் குழுவுக்கு செல்லுமானால் அரசாங்கத்துக்கு தரும் தமது ஒத்துழைப்பை திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும்
பிரதம மந்திரியின் அமெரிக்க வருகையின் கருத்து வெளியீடு பற்றிக் கூறுகையில் "நேரம் வந்து விட்டது" எனக் கம்யூனிஸ்ட்டுகள்
குறிப்பிட்டார்கள்.மேலும் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஐ.எ.இ.எ உடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன் அதன் பாதுகாப்பு ஒப்பந்த எழுத்து வடிவினை தமக்கு இதுவரை அளிக்கவில்லையென்றும்
எழுத்து வடிவினை நோக்காமல் தாங்கள் எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் கூறினர்.
மேலும் ஐ.எ.இ.எ வின் குழுவிற்கு அரசாங்கம் போகும்பட்சத்தில் தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக வும் பிரதமரின் அறிவிப்பினை தொடர்ந்து " நேரம் வந்து விட்டது" எனக் குறிப்பிட்டனர்.
இனி கம்யூனிஸ்ட்டுகளின் தர்க்கம் என்னவென்று பார்த்தோமானால் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தம் விவாதத்துக்குரியதாகவும் அதனை எந்தவித
ஒளிவு மறைவுமின்றி விவாதிக்க வேண்டும் என்பது.ஏன் அரசாங்கம் ஒப்பந்த எழுத்து வடிவினை மக்களிடமிருந்து மறைக்க வேண்டும் எனக் கேள்வி
எழுப்புகின்றனர்.
மேலும் 123 ஒப்பந்தம் அனுபவத்தின்படி அரசாங்கம் கூறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்துக்கும் 123 ஒப்பந்த எழுத்து வடிவத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாக வாதிடுகின்றனர்.எனவே ஒப்பந்தத்தின் எழுத்து வடிவத்தை தங்களுக்கு விளக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர்.
அவர்கள் வாதத்தின் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்துவது இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்காலத்தில் கிடப்பில் போட்டால் என்ன செய்வது
என்பதாகும்.அமெரிக்காவும் இந்தியாவும் செய்த 1963ல் செய்த 30 ஆண்டு உடன்படிக்கையை பூர்த்தி செய்யாமல் 1983ல் தாராபூர் அணுசக்தி
நிலையத்துக்குண்டான எரிபொருள் வழங்குதலை இந்தியாவுக்கு நிறுத்தியதை நினைவுபடுத்துகிறார்கள்.மகாராஷ்ட்ராவில் என்ரோன் திட்டமே கிடப்பில்
போடப்பட்டு என்ரோன் நிறுவனமே திவாலாகிப்போனது உலகப்பிரசித்தம்.
தற்போதைய உடன்படிக்கை எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போகும் சூழ்நிலையிலும் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு பரிசோதனை அனைத்து
சிவிலியன் அணுநிலையங்களிலும் தொடரும் சரத்துக்கள் உள்ளதாக விவாதிக்கின்றனர்.
123 ஒப்பந்தம் இந்தியாவுக்கு எரிபொருள் ஏனைய நாடுகளிலிருந்து நிறுத்தப்படும் பட்சத்தில் இந்தியா எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமான
வார்த்தைப் பதங்களைக் கொண்டுள்ளது என வாதிடுகின்றனர்.எனவே ஐ.எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்களை தாங்கள் காணவும் அமெரிக்கா
இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்தும் பட்சத்தில் மாற்று வழிகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என விவாதிக்க வேண்டும் என்றும் வார்த்தைப்
பிரயோகங்களை இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கும் சாத்தியக்கூறு உண்டா என்றும் இதனை பொதுவில் விவாதிக்க வேண்டும் என
வற்புறுத்துகின்றனர்.
இரண்டாவதாக 123 ஒப்பந்தம் சரத்துக்களின் படி அமெரிக்கா ஐ,எ,இ.எ விடம் இந்தியாவுக்கு மட்டும் என்ற தனி எரிபொருள் ஒப்பந்தத்தை சிபாரிசு
செய்யுமென்றும் ஆனால் நடைமுறையில் ஐ.எ.இ.எ எரிபொருள் பங்கீடு பற்றிக் கவலைப் படுவதில்லையென்றும் மாறாக அணுசக்தி கருவிகளையும்
பொருட்களின் பாதுகாப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
எனவே ஐ,எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எரிபொருள் வழங்குதலை எப்படி 123 ஒப்பந்த சரத்தின்படி உறுதிப்படுத்தும் என அறியவேண்டியுள்ளது என்கின்றனர்.
கீழ்கண்ட முக்கியப்பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கின்றனர்.
1. ஐ.எ.இ.எ வின் ஒப்பந்த வாசகங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படாதது கம்யூனிஸ்ட்டுகளை கவலைக்குள்ளாக்குகிறது.
2. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கான எரிபொருள் உறுதி நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த அணு உலைகளை ஐ.இ.எ.இ வின் பாதுகாப்பு
ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விடுபட முடியுமா?
3.அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் எரிபொருள் உறுதிமொழியை நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா தனது சுய முயற்சியால் உருவாக்கிய
சிவிலியன் அணு ஆலைகளை ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விடுபட முடியுமா?
4. ஒப்பந்தத்திற்கும் அப்பாற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா எரிபொருளினைக் கொண்டுவரும் பட்சத்தில் எரிபொருள் உறுதிமொழி மீறப்படுமானால்
இந்தியா இதனை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
5.எரிபொருளை அமெரிக்காவும்,ஏனைய நாடுகளும் நிறுத்தும் பட்சத்தில் இந்தியா தனது நலன்கள் பாதிக்காவண்ணம் என்ன தீர்வுகளை முன்
வைக்கிறது?
6. ஒப்பந்தம் செயல்படும் நிலையில் என்ன விதமான உறுதிமொழிகளை இந்தியா அளிக்கவேண்டும்?
இந்தியா தற்சமயம் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை அந்தக் குழுவின் கையெழுத்து ஒப்புதல் நிலையில்
உள்ளது.அப்படி கையெழுத்திடப்படும் நிலையில் அடுத்து இந்தியாவின் பங்கு என எதுவுமே இல்லை.அடுத்து அமெரிக்க அரசாங்கமே அணு ஆயுத நாடுகளின் ஒப்புதல் பெறவும் 123 ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் காங்கிரஸ் ஒப்புதலுக்கு அனுப்பும்.எனவே இந்த ஐ.எ.இ.எ ஒப்பந்தம் இந்தியாவில் எந்தவித ஒளிவு மறைவுமின்றி விவாதிக்கப்படவேண்டுமென்கிறது.
இந்திய அரசாங்கம் இந்த ஒப்பந்த நகலை ஏன் மக்களிடமிருந்து மறைக்கின்றனர் என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்.
இனி சில நடைமுறை வாசகங்கள்
* கம்யூனிஸ்ட் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது
* மன்மோகன் சிங் " ஒரு தனித் தீவில் ஒரு தனி மனிதன்."
* நமது முகத்தை உலக அளவில் காட்டவும் குறைந்த பட்சம் தனது வார்த்தைகளைக் காப்பாற்றும் முகமாகவாவது இந்த ஒப்பந்தம் அவசியம்.
* பிரான்ஸ் நாட்டு தூதுவரின் பார்வை "இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித பாதகமுமில்லாத உலக உடன்படிக்கை இது"
* கம்யூனிஸ்ட்டுகள் " ஒரு மோசமான அணு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் புராணக் கதைகளுக்கு ஒப்பான செயல்.நாடு தழுவிய செய்தி திரித்தல்."
* ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்திய அரசாங்கத்தின் கடைசி முயற்சி.
* ஒரு பத்திரிகையாளரின் கருத்து " ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?"
* 1962ல் சீனா யுத்தத்தின் தோல்விக்குப் பிறகு நேருவின் வானொலிக் குரல்"நாம் நமக்கு நாமே இட்டுக்கொண்ட செயற்கையான உலகில் வாழ்கிறோம்"
* "மன்மோகன் சிங்கை வரலாறு எவ்வாறு பார்க்கும்?"
* " இப்பொழுது அல்லது எப்பொழுதும் இல்லை"
* மன்மோகன் சிங் " உள்நாட்டு அரசியல் நமது வெளிநாட்டுக் கொள்கையை பாதிக்கிறது"
பதிவு நீளமாகி விட்டதால் இத்துடன் முடிக்கிறேன்.அலசல்கள் எதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.
கோட்பாட்டின் பேரிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தில் ஜார்ஜ் புஷ் கூட இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு தந்த பேட்டியின் அடிப்படை கருத்தைக் கொண்டும் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு தரும் தனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்ளப் போவதாக கூறும் இந்த தருணத்தில் இந்த பதிவின் அச்சு அவசியமாகிறது.பொதுவாகவே இந்தப் பிரச்சினையிலும் ஏனைய பிரச்சினைகளிலும் அதனைச் சார்ந்தோ அல்லது எதிர்வினையாகவே கருத்துக்கள் வருகின்றன.இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் நன்மை தீமைகளை ஆராயும் போக்கு குறைவாகவே காணப்படுகின்றது.அரசியலுக்கும் அப்பால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் மேல் ஓங்கி இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையின் மூலப் பொருளைக் கண்டறிய முடியும்.அப்படிநிறைகுறைகளைக் கண்டறியும் மனோபாவங்களை வளர்ப்பதே நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் பயனளிக்கும்.ஆனால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரவலாக காணப்படவில்லை.
அரசியல் பின்னடைவுகளின் இடையிலும் இன்று 09,புதன் 2008 தினம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றிய கருத்து மேம்பாட்டை கலந்தாலோசித்தார் மன்மோகன் சிங். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் ஜார்ஜ் புஷ்.பொரோமோய் மலையின் ஓட்டல் விண்ட்சர் என்ற இடத்தில் மன்மோகன் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஸும் இரண்டு நாடுகளிக்கிடையேயான நட்புறவு பற்றி பேசினார்கள்.இதில் ஜார்ஜ் புஷ் அணு ஒப்பந்தம் பற்றி தாங்கள் இருவரும் விவாதித்ததாகக் கூறினார்.
இந்திய அரசியல் அலைகளின் மாற்றங்கள் பற்றி மன்மோகன் சிங் அவர்கள் அதிகமாக வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை.தனது அரசாங்கமும்,மக்களும் குறிப்பாக நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மக்கள் தனது பக்கம் இருப்பதாகவும் இரண்டு நாடுகளின் ஒற்றுமை மேலும் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதன் முழு உருவத்தை அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.மன்மோகன் குறிப்பாக அணு ஒப்பந்தம் பற்றிக்
குறிப்பிடவில்லையென்றாலும் இரண்டு நாடுகளும் அணு,பாதுகாப்பு,விண்வெளி மற்றும் கல்வி பரிமாற்றங்களின் முன்னேற்றங்கள் பற்றியும்
இருநாடுகளின் உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் இதன் காரணகர்த்தாவான ஜார்ஜ் புஷ்ஸுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி ஐ.எ.இ.எ ஆளுநர் குழுவுக்கு செல்லுமானால் அரசாங்கத்துக்கு தரும் தமது ஒத்துழைப்பை திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும்
பிரதம மந்திரியின் அமெரிக்க வருகையின் கருத்து வெளியீடு பற்றிக் கூறுகையில் "நேரம் வந்து விட்டது" எனக் கம்யூனிஸ்ட்டுகள்
குறிப்பிட்டார்கள்.மேலும் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஐ.எ.இ.எ உடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன் அதன் பாதுகாப்பு ஒப்பந்த எழுத்து வடிவினை தமக்கு இதுவரை அளிக்கவில்லையென்றும்
எழுத்து வடிவினை நோக்காமல் தாங்கள் எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் கூறினர்.
மேலும் ஐ.எ.இ.எ வின் குழுவிற்கு அரசாங்கம் போகும்பட்சத்தில் தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக வும் பிரதமரின் அறிவிப்பினை தொடர்ந்து " நேரம் வந்து விட்டது" எனக் குறிப்பிட்டனர்.
இனி கம்யூனிஸ்ட்டுகளின் தர்க்கம் என்னவென்று பார்த்தோமானால் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தம் விவாதத்துக்குரியதாகவும் அதனை எந்தவித
ஒளிவு மறைவுமின்றி விவாதிக்க வேண்டும் என்பது.ஏன் அரசாங்கம் ஒப்பந்த எழுத்து வடிவினை மக்களிடமிருந்து மறைக்க வேண்டும் எனக் கேள்வி
எழுப்புகின்றனர்.
மேலும் 123 ஒப்பந்தம் அனுபவத்தின்படி அரசாங்கம் கூறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்துக்கும் 123 ஒப்பந்த எழுத்து வடிவத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாக வாதிடுகின்றனர்.எனவே ஒப்பந்தத்தின் எழுத்து வடிவத்தை தங்களுக்கு விளக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர்.
அவர்கள் வாதத்தின் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்துவது இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்காலத்தில் கிடப்பில் போட்டால் என்ன செய்வது
என்பதாகும்.அமெரிக்காவும் இந்தியாவும் செய்த 1963ல் செய்த 30 ஆண்டு உடன்படிக்கையை பூர்த்தி செய்யாமல் 1983ல் தாராபூர் அணுசக்தி
நிலையத்துக்குண்டான எரிபொருள் வழங்குதலை இந்தியாவுக்கு நிறுத்தியதை நினைவுபடுத்துகிறார்கள்.மகாராஷ்ட்ராவில் என்ரோன் திட்டமே கிடப்பில்
போடப்பட்டு என்ரோன் நிறுவனமே திவாலாகிப்போனது உலகப்பிரசித்தம்.
தற்போதைய உடன்படிக்கை எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போகும் சூழ்நிலையிலும் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு பரிசோதனை அனைத்து
சிவிலியன் அணுநிலையங்களிலும் தொடரும் சரத்துக்கள் உள்ளதாக விவாதிக்கின்றனர்.
123 ஒப்பந்தம் இந்தியாவுக்கு எரிபொருள் ஏனைய நாடுகளிலிருந்து நிறுத்தப்படும் பட்சத்தில் இந்தியா எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமான
வார்த்தைப் பதங்களைக் கொண்டுள்ளது என வாதிடுகின்றனர்.எனவே ஐ.எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்களை தாங்கள் காணவும் அமெரிக்கா
இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்தும் பட்சத்தில் மாற்று வழிகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என விவாதிக்க வேண்டும் என்றும் வார்த்தைப்
பிரயோகங்களை இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கும் சாத்தியக்கூறு உண்டா என்றும் இதனை பொதுவில் விவாதிக்க வேண்டும் என
வற்புறுத்துகின்றனர்.
இரண்டாவதாக 123 ஒப்பந்தம் சரத்துக்களின் படி அமெரிக்கா ஐ,எ,இ.எ விடம் இந்தியாவுக்கு மட்டும் என்ற தனி எரிபொருள் ஒப்பந்தத்தை சிபாரிசு
செய்யுமென்றும் ஆனால் நடைமுறையில் ஐ.எ.இ.எ எரிபொருள் பங்கீடு பற்றிக் கவலைப் படுவதில்லையென்றும் மாறாக அணுசக்தி கருவிகளையும்
பொருட்களின் பாதுகாப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
எனவே ஐ,எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எரிபொருள் வழங்குதலை எப்படி 123 ஒப்பந்த சரத்தின்படி உறுதிப்படுத்தும் என அறியவேண்டியுள்ளது என்கின்றனர்.
கீழ்கண்ட முக்கியப்பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கின்றனர்.
1. ஐ.எ.இ.எ வின் ஒப்பந்த வாசகங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படாதது கம்யூனிஸ்ட்டுகளை கவலைக்குள்ளாக்குகிறது.
2. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கான எரிபொருள் உறுதி நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த அணு உலைகளை ஐ.இ.எ.இ வின் பாதுகாப்பு
ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விடுபட முடியுமா?
3.அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் எரிபொருள் உறுதிமொழியை நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா தனது சுய முயற்சியால் உருவாக்கிய
சிவிலியன் அணு ஆலைகளை ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விடுபட முடியுமா?
4. ஒப்பந்தத்திற்கும் அப்பாற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா எரிபொருளினைக் கொண்டுவரும் பட்சத்தில் எரிபொருள் உறுதிமொழி மீறப்படுமானால்
இந்தியா இதனை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
5.எரிபொருளை அமெரிக்காவும்,ஏனைய நாடுகளும் நிறுத்தும் பட்சத்தில் இந்தியா தனது நலன்கள் பாதிக்காவண்ணம் என்ன தீர்வுகளை முன்
வைக்கிறது?
6. ஒப்பந்தம் செயல்படும் நிலையில் என்ன விதமான உறுதிமொழிகளை இந்தியா அளிக்கவேண்டும்?
இந்தியா தற்சமயம் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை அந்தக் குழுவின் கையெழுத்து ஒப்புதல் நிலையில்
உள்ளது.அப்படி கையெழுத்திடப்படும் நிலையில் அடுத்து இந்தியாவின் பங்கு என எதுவுமே இல்லை.அடுத்து அமெரிக்க அரசாங்கமே அணு ஆயுத நாடுகளின் ஒப்புதல் பெறவும் 123 ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் காங்கிரஸ் ஒப்புதலுக்கு அனுப்பும்.எனவே இந்த ஐ.எ.இ.எ ஒப்பந்தம் இந்தியாவில் எந்தவித ஒளிவு மறைவுமின்றி விவாதிக்கப்படவேண்டுமென்கிறது.
இந்திய அரசாங்கம் இந்த ஒப்பந்த நகலை ஏன் மக்களிடமிருந்து மறைக்கின்றனர் என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்.
இனி சில நடைமுறை வாசகங்கள்
* கம்யூனிஸ்ட் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது
* மன்மோகன் சிங் " ஒரு தனித் தீவில் ஒரு தனி மனிதன்."
* நமது முகத்தை உலக அளவில் காட்டவும் குறைந்த பட்சம் தனது வார்த்தைகளைக் காப்பாற்றும் முகமாகவாவது இந்த ஒப்பந்தம் அவசியம்.
* பிரான்ஸ் நாட்டு தூதுவரின் பார்வை "இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித பாதகமுமில்லாத உலக உடன்படிக்கை இது"
* கம்யூனிஸ்ட்டுகள் " ஒரு மோசமான அணு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் புராணக் கதைகளுக்கு ஒப்பான செயல்.நாடு தழுவிய செய்தி திரித்தல்."
* ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்திய அரசாங்கத்தின் கடைசி முயற்சி.
* ஒரு பத்திரிகையாளரின் கருத்து " ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?"
* 1962ல் சீனா யுத்தத்தின் தோல்விக்குப் பிறகு நேருவின் வானொலிக் குரல்"நாம் நமக்கு நாமே இட்டுக்கொண்ட செயற்கையான உலகில் வாழ்கிறோம்"
* "மன்மோகன் சிங்கை வரலாறு எவ்வாறு பார்க்கும்?"
* " இப்பொழுது அல்லது எப்பொழுதும் இல்லை"
* மன்மோகன் சிங் " உள்நாட்டு அரசியல் நமது வெளிநாட்டுக் கொள்கையை பாதிக்கிறது"
பதிவு நீளமாகி விட்டதால் இத்துடன் முடிக்கிறேன்.அலசல்கள் எதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.
Tuesday, July 8, 2008
சோளம்,கம்பு,கேழ்வரகு
கிரியண்ணன் ரொம்ப வருத்தப்பபட்டுகிட்டாரு முந்தைய பதிவு ரொம்ப சின்னதா இருக்குன்னு.அவருடைய ஆதங்கத்த தீர்க்கிறதுக்கு இந்த பதிவு.
குழந்தைகளுக்கு தரும் சத்துணவின் பலன் அவர்களின் பருவ வயதுக்குப் பின்னே தெரிகிறதாம்.இந்த தலிபான்களை புடிச்சி அடைச்சு வைச்சாரே ஜார்ஜ்
புஷ் கொத்மலான்னோ என்னவோ ஊர்ப் பேரு.அந்த ஊருல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி சோளக்கஞ்சிய ரெண்டு மூணு கிராமத்து
குழந்தைகளுக்கும் சத்தில்லாத ஒரு இனிப்பு உணவை ஒரு கிராமத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்துகிட்டு வந்தாங்களாம். ஒரு முப்பது வருசத்துக்குப்
பின்னாடி பார்த்தா சோளக்கஞ்சியில் வளர்ந்த குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளாகவும் வயித்துக்கு கொட்டிகிட்ட குழந்தைகள் சாதாரண மனநிலை
கொண்டவர்களாகவும் இருந்தார்களாம்.
முன்னாடியெல்லாம் நம்ம ஊர் பக்கமெல்லாம் சோளம்,ராகி(கேழ்வரகு),கம்புன்னு அரிசிக்குப் போட்டியா நிறைய தானியங்களின் வளர்ப்பும்,வளர்த்த
தானியத்தை வக்கணையா கொளம்பு வச்சி சாப்டற பழக்கமும் இருந்தது.சாப்பிட்டு மிச்சமிருக்குறதை தண்ணிர் ஊற்றி பானைக்குள்ள மூடி வச்சிட்டு அடுத்த நாளைக்கு சூட்டு காலத்துக்கு சும்மாவோ அல்லது கொஞ்சம் மோரையோ விட்டுக் கலந்து குடிக்கிற சுகம் தனிதான். கடிச்சுக்க ஒரு
வெங்காயம்,ஒரு மொளகா.
கம்பு மட்டும் தாராபுரத்துல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கும் போது பசங்களுக்கு அப்பாமார்கள் முளைவிட்ட கம்பு,வெல்லம்ன்னு கொண்டு
வருவாங்க,கூட்டாளிக எனக்கும் கொஞ்சம் பங்கு தருவாங்க.
இப்ப கம்பக்காணோம்,ராகியக் காணோம்,சோளத்தை மட்டும் வெளிநாட்டுக்காரன் ஓட்ஸ்ன்னு பேர் சொல்லிகிட்டு திரியறான்.அதையும் யாரும் பெரிசா சாப்டறதாக் காணோம்.ஏதோ கார்ன்பிளேக்ஸுன்னு கொஞ்சம் ஓடுது.
கோயம்புத்தூர்ல மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்த்தாப்ல அந்தக் காலத்து பொட்டி தட்டுற மக்கள் வேகாத வெயில்ல உட்கார்ந்து
பெயர்,தகப்பனார் பெயர்ன்னு விண்ணப்ப படிவம் தட்டச்சிகிட்டு இருந்தாங்க.கொஞ்சம் நேராப் போனா ஆனந்தபவன் சைவ உணவகம்.வாழை இலையில தோசையோ ரவா தோசையோ சாப்பிட்டு விட்டு ஒரு ராகிமால்ட்.அதுதான் ராகிமால்ட் கடைசியா குடிச்ச அனுபவம்.
(யாராவது ராகிமால்ட் குடிச்சவங்க இருக்குறீங்களா?
சோளம்,கம்பு,ராகியோட இடத்தையெல்லாத்தையும் அரிசி குத்தகைக்கு எடுத்துகிட்டமாதிரி அந்த ராகிமால்ட் இடத்தை இப்ப பூஸ்ட்டும்
போன்விட்டாவும் புடிச்சிகிச்சு.
கிரியண்ணா.இந்தப் பதிவக்கூட கொஞ்சம் விவரமா சொல்லலாம்தான்.அலுவலக வேலை வா வான்னு கூப்பிடுது.வர்றேன்.
குழந்தைகளுக்கு தரும் சத்துணவின் பலன் அவர்களின் பருவ வயதுக்குப் பின்னே தெரிகிறதாம்.இந்த தலிபான்களை புடிச்சி அடைச்சு வைச்சாரே ஜார்ஜ்
புஷ் கொத்மலான்னோ என்னவோ ஊர்ப் பேரு.அந்த ஊருல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி சோளக்கஞ்சிய ரெண்டு மூணு கிராமத்து
குழந்தைகளுக்கும் சத்தில்லாத ஒரு இனிப்பு உணவை ஒரு கிராமத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்துகிட்டு வந்தாங்களாம். ஒரு முப்பது வருசத்துக்குப்
பின்னாடி பார்த்தா சோளக்கஞ்சியில் வளர்ந்த குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளாகவும் வயித்துக்கு கொட்டிகிட்ட குழந்தைகள் சாதாரண மனநிலை
கொண்டவர்களாகவும் இருந்தார்களாம்.
முன்னாடியெல்லாம் நம்ம ஊர் பக்கமெல்லாம் சோளம்,ராகி(கேழ்வரகு),கம்புன்னு அரிசிக்குப் போட்டியா நிறைய தானியங்களின் வளர்ப்பும்,வளர்த்த
தானியத்தை வக்கணையா கொளம்பு வச்சி சாப்டற பழக்கமும் இருந்தது.சாப்பிட்டு மிச்சமிருக்குறதை தண்ணிர் ஊற்றி பானைக்குள்ள மூடி வச்சிட்டு அடுத்த நாளைக்கு சூட்டு காலத்துக்கு சும்மாவோ அல்லது கொஞ்சம் மோரையோ விட்டுக் கலந்து குடிக்கிற சுகம் தனிதான். கடிச்சுக்க ஒரு
வெங்காயம்,ஒரு மொளகா.
கம்பு மட்டும் தாராபுரத்துல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கும் போது பசங்களுக்கு அப்பாமார்கள் முளைவிட்ட கம்பு,வெல்லம்ன்னு கொண்டு
வருவாங்க,கூட்டாளிக எனக்கும் கொஞ்சம் பங்கு தருவாங்க.
இப்ப கம்பக்காணோம்,ராகியக் காணோம்,சோளத்தை மட்டும் வெளிநாட்டுக்காரன் ஓட்ஸ்ன்னு பேர் சொல்லிகிட்டு திரியறான்.அதையும் யாரும் பெரிசா சாப்டறதாக் காணோம்.ஏதோ கார்ன்பிளேக்ஸுன்னு கொஞ்சம் ஓடுது.
கோயம்புத்தூர்ல மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்த்தாப்ல அந்தக் காலத்து பொட்டி தட்டுற மக்கள் வேகாத வெயில்ல உட்கார்ந்து
பெயர்,தகப்பனார் பெயர்ன்னு விண்ணப்ப படிவம் தட்டச்சிகிட்டு இருந்தாங்க.கொஞ்சம் நேராப் போனா ஆனந்தபவன் சைவ உணவகம்.வாழை இலையில தோசையோ ரவா தோசையோ சாப்பிட்டு விட்டு ஒரு ராகிமால்ட்.அதுதான் ராகிமால்ட் கடைசியா குடிச்ச அனுபவம்.
(யாராவது ராகிமால்ட் குடிச்சவங்க இருக்குறீங்களா?
சோளம்,கம்பு,ராகியோட இடத்தையெல்லாத்தையும் அரிசி குத்தகைக்கு எடுத்துகிட்டமாதிரி அந்த ராகிமால்ட் இடத்தை இப்ப பூஸ்ட்டும்
போன்விட்டாவும் புடிச்சிகிச்சு.
கிரியண்ணா.இந்தப் பதிவக்கூட கொஞ்சம் விவரமா சொல்லலாம்தான்.அலுவலக வேலை வா வான்னு கூப்பிடுது.வர்றேன்.
இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்.
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தற்கொலை படை தாக்குதலில் 41 பேர் சாவு.பலர் படுகாயம்.
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு.
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு.
Thursday, July 3, 2008
கண்ணா!கண்ணா நெருப்பு நரிக் கண்ணா!
முதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவத்தில் ரொம்ப சந்தோசமா இருக்கே!ஹி...ஹி.வேற ஒண்ணுமில்லீங்க.நெருப்பு நரி 3.0 தரவிறக்கிய சூட்டோட பிரேம்ஜிக்கு கமலின் தசாவதாரப் பேட்டி பற்றிய பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டாச்சு.
பெரிய தலைகள் நிறைய பேருக்கு பல விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கு.பதிவுகளின் போது அப்ப அப்ப கண்டுக்கிறேன்.இப்ப ரவிக்கு மட்டும் ஒரு பெரிய நன்றி.காரணம் அவரது பின்னூட்டமே நெருப்பு நரி 3.0க்கு தூண்டுதல்.அப்புறம் நிறைய ரவியார்கள் வலம்வருகிறார்கள்.நீங்க எந்த ரவின்னு கொஞ்சம் காதுல வந்து கூவிட்டுப் போறது?
நெருப்பு நரி சும்மா ஜிவ்வுன்னு இருக்குது.தமிழ் எழுத்துக்களை இரண்டு கண்ணிலேயும் ஒற்றி எடுத்துக் கண்ணால் சலனப்பட்டுப் போகிறேன்.
பெரிய தலைகள் நிறைய பேருக்கு பல விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கு.பதிவுகளின் போது அப்ப அப்ப கண்டுக்கிறேன்.இப்ப ரவிக்கு மட்டும் ஒரு பெரிய நன்றி.காரணம் அவரது பின்னூட்டமே நெருப்பு நரி 3.0க்கு தூண்டுதல்.அப்புறம் நிறைய ரவியார்கள் வலம்வருகிறார்கள்.நீங்க எந்த ரவின்னு கொஞ்சம் காதுல வந்து கூவிட்டுப் போறது?
நெருப்பு நரி சும்மா ஜிவ்வுன்னு இருக்குது.தமிழ் எழுத்துக்களை இரண்டு கண்ணிலேயும் ஒற்றி எடுத்துக் கண்ணால் சலனப்பட்டுப் போகிறேன்.
Subscribe to:
Posts (Atom)