எல்லோரும் கோபாலபுரத்து தாத்தாவை கும்முறதுலேயே குறியா இருங்க! மீனவர்களை சுடுவதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றும்,கடல் எல்லை கடந்து மீன் ஓடிப்போகுது,அதனால மீனவர்கள் மீனை துரத்திகிட்டே போயிடுறாங்க,இதுல நாம் என்ன செய்ய இயலுமென்றும் அறிக்கை விடும் நம்மை நிர்வகிப்பவர்களின் லட்சணம் ஐ.நா சபை வரை சிரிப்பா சிரிக்குது.இந்தியாவின் மானம் போகுது:(
யார் எதைப் பேச வேண்டுமென்று மொத்தமான அச்சடித்த பிரதிகளை ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் கொடுக்கும் போது போர்ச்சுகீசிய நாட்டுக்காரர் பேச வேண்டிய அறிக்கையை நம்ம எஸ்.எம்.கிருஷ்ணா கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சிருக்கார்.அட!நம்ம பள்ளிக்குழந்தைகள் கூட பரவாயில்லை போல இருக்குதே!யாராவது புதுசா ஐந்து நட்சத்திர ஓட்டல் செமினாருக்கும் Buffet க்கும் போகும் போது திரு திருன்னு முழிக்கிற மாதிரி Forign minister SM Krishna would have got nervous when he climbed the steps of U.N. I am sure of that!
இனி தாத்தாக்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டிய தருணம்.இளைய தலைமுறைகளுக்குப் பயிற்சி கொடுத்து இந்திய நிர்வாகத்திலும்,வெளியுறவுக்கொள்கையிலும்,ஐ.நா சபைக்குள்ளும் நுழைய வைக்க வேண்டும்.அட!கொறஞ்சது சசி தரூரையாவது ஐ.நா உரையை வாசித்துட்டு வாய்யா ன்னு அனுப்பியிருக்கலாம் இப்போதைக்கு.
இந்தியாவின் மானத்தை ஊழல்.லஞ்சம் என்ற பெயரில் உள்நாட்டுக்குள்ளும், நாலு வரி ஒழுங்கா இந்தியா பற்றி ஆங்கிலம் பேசத்தெரியாம அடுத்தவன் நாட்டு உரையை ஐ.நாவிலும் ஒப்பிச்சுட்டு வரும் எஸ்.எம்.கிருஷ்ணாவை நினைக்கும் போது எனக்குத் தோன்றுவது
A bunch of idiots are governing us!
மேலும் ரத்த நாளங்களை சூடாக்கிக்க ஆசைபடறவங்க இங்கே போய் கட்டிங் போடுங்க!