Followers

Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Tuesday, July 17, 2012

Black Friday - திரைப்பட விமர்சனம்

வேலைப்பளு ஒரு புறம்,எதை சொல்வது என்ற உந்துதல் இல்லாத மறுபுறம் என்பதற்கிடையில் தற்போது  கொஞ்சம் மனதை இலகுவாக்குவது ஏனைய கருத்துரையாடல்களே..யாருடனாவது சண்டை போடலாமே என்று தேடினாலும் எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.இப்படியே பயணம் செய்யட்டும். பதிவுலக தேடல்களுக்கு மாற்றாக இப்போது ஆங்கில திரைப்படங்களுடன் இந்தி திரைப்படங்களும் விட்டும் தொட்டும் என்னுள் முடிவடைகிறது.


முன்பு ஒரே கதைக்கருவை வைத்தே சென்று கொண்டிருந்த இந்தி திரை உலகம் கறுப்பு பணம்,பாதாள உலகம் என்ற சூழலிலும் இந்தி திரைப்படங்களே இந்திய சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் இப்போது பன்னாட்டு மூலதனங்களும் புரள்வதோடு இந்தி திரைப்படங்கள் பல கதைக்களங்களையும் தொடுவது வரவேற்க தக்க மாற்றம்..பல இயக்கங்கள் யார் இயக்குநர் என்று மீண்டும் பெயர் தேட வைக்கிறது.அந்த வரிசையில் மிகவும் தாமதமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர் அனுராக் கெஷ்யப்.திரைப்படம் கறுப்பு வெள்ளிக்கிழமை எனும் Block Friday.

இதே பெயரில் ஹுசேன் ஜெய்தி என்பவர் எழுதிய புத்தகமே திரைப்பட வடிவமாக.திரைப்படம் முடிந்து எழுத்து வரிசைகள் ஓடிக்கொண்டிக்க கண்கள் நிலைகுத்திய நிலை.எந்த பக்க சார்புமில்லாமல் ஒரு திரை ஊடகம் எப்படி பம்பாய் குண்டு வெடிப்பு சம்பவத்தையும்,அதன் பின்புல மனிதர்களையும், மதம்,அரசியல்,காவல்துறை செயல்படும் முறை என பட்டவர்த்தனமாக திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் கொண்டு செல்கிறது.

ஒரு புறம் இந்திய காவல்துறை செயல்படும் விதம் குறித்த மனித உரிமை பார்வையும, அதற்கு எதிராக காவல்துறை  தனது பக்க நியாயத்தை சொல்லும் போது எந்த தவறுகளும் செய்யாத பம்பாயின் அன்றாட வாழ்வை தேடும் மக்கள் மரணித்துப் போவதும்,பலத்த காயங்களுடன் ஏனைய வாழ்நாளை கழிப்பவர்களுக்கு மனித உரிமை இல்லையா என்ற கேள்வி மனித உரிமை,காவல்துறை செயல்படும் விதம் குறித்த இருவித மன அதிர்வை உருவாக்குகிறது.

சாதாரண இளைஞர்கள் மதம் என்ற பெயரில் எப்படி மூளை சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும் பம்பாய் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 1993ம் வருடத்திற்கு பின் சுமார் 122 பேர் மீதான குற்றப்பத்திரிகை மீது 100 பேர்கள் குற்றவாளிகள் என 13 வருட ஆண்டுகளுக்குப் பின்பான நீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டனை அடைந்தாலும் முதல் குற்றவாளிகளான தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் போன்றவர்கள் இன்று வரை தப்பித்து வருவதும்,இந்திய அரசியல்,சட்ட வலிமைகளையும் கேள்விக்குறியாக்குகிறது.

குண்டு வெடிப்புக்கு முன்பே டைகர் மேமனின் மொத்த குடும்பமும் துபாய் சென்று விடுவதும்,தாவுத் இப்ராஹிம் இன்று வரை பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதும் இவர்களின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மத வாதத்தை பஜ்ரங்க் தள்,ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத இயங்கங்கள் பி.ஜே.பி என்ற அரசியல் முகமூடி போட்டுக்கொண்டு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் மதவெறியை இந்திய,,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தமது அரசியல் சுயநலன்களுக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும் தொட்டு தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் என்ற தனி மனிதர்களிடமிருந்து பிரச்சினை விலகி எப்படி இந்திய,பாகிஸ்தானிய அரசியலை தீர்மானிக்கிறது என்பதையும் மெலிதாக தொட்டு செல்கிறது.

நீதி மன்ற தடைகளையும் மீறி படம் வெளி வந்தும் கூட இயக்குநர் மணிரத்னத்தின் பாம்பே,நசுருதீன் ஷாவின் நடிப்புக்கான தி வென்ஸ்டே படங்களுக்கான விளம்பரம் அனுராக் கெஷ்யாப்க்கு குறிப்பிட்ட ரசனையாளர்களின் மத்தியில் மட்டுமே கிடைத்துள்ளது எனலாம். பாம்பே,வென்ஸ்டே போன்ற படங்கள் தனிமனிதர்களின் கதைக்களத்தினூடே  ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லி நிகழ்வுகளோடு சமரசப்பட்டவை.

ஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வின் காரணகர்த்தாக்களையும்,அவர்களை சார்ந்த சாதாரண மனிதர்களையும் தொட்டு மதம் எப்படி மனிதர்களை விலக்கி வழிநடத்திச்செல்கிறது என்பதையும்,தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன்,பால் தாக்கரே, அத்வானி, ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,ஐ.எஸ்.ஐ என்ற பெயர்களை எந்த சமரசமுமின்றி நிகழ்வுகளுனூடே சொல்லி செல்கிறது.

கதைக்களம்,ஒளிப்பதிவு,இசை இவற்றிற்கும் மேலாக பாலிவுட் நடிகர் என்ற  தனி மனித பிம்பங்களற்ற நடிக்கிறோம் என்ற உணர்வுகளற்ற கதையின் பாத்திரத்தோடு ஒன்றிப் போனவர்களை இயக்கியிருப்பது நடிகர்களுக்கும், இயக்குநருக்கும் வெற்றியே.அனுராக் கெஷ்யப் இந்திய திரைப்படத்தின் தவிர்க்க முடியாத பெயர் பட்டியலுக்குள்.இந்திய திரைப்படங்கள் கறுப்பு வெள்ளிக்கிழமை போன்ற பட வரிசையில் பயணிப்பதே இந்திய சினிமாவை உலக திரைப்படங்களின் வரிசையில் நிற்க வைக்கும்.

Tuesday, June 21, 2011

இரண்டாவது காந்தி மண்டேலாவா?ராஜபக்சேவா? - திரைப்பட விமர்சனம்.

நட்சத்திர வாரம்தான் முடிஞ்சிருச்சே அப்புறமென்ன அதே எஃபக்ட்டுன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.இது அவன் - இவன் திரை விமர்சனம்.சி.பி இந்த படத்திற்கான வசனங்களை அவரது பதிவில் விலா வாரியாக சொல்லியிருந்தார்.ஆனால் தலைப்பில் சொல்லிய வசனத்தை கோட்டை விட்டுட்டார்.எனவே பின்னூட்டமாகப் போட வேண்டிய முக்கியமான படத்தின் வசனத்தை பதிவின் தலைப்பாகப் போட்டு விட்டேன்.

பாலா படம்ன்னா எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.கதைக்களம் எந்த மாவட்டத்துக்கு சேர்ந்ததுன்னு தெரியாத ஒரு புனைவு.கதையின் கருவாக தெரிவது தெருக்கூத்தாடிகளின் கதையை சொல்ல முயன்ற மாதிரி தெரிகிறது.ஆனால் மாட்டுத்தொழுவத்திலிருந்து சட்ட விரோதமாக அடிமாடுகளாக கேரளாவுக்கு மாடுகள் கடத்தப் படுவதே கதை.பொருளாதார வளர்ச்சியில் மாடுகளின் எண்ணிக்கையும்,லாரி மூலமாகவே கடத்தப்படுவதும் இப்பொழுது அதிகரித்து விட்டதா எனத் தெரியவில்லை.ஆனால் கேரளாவிற்கும்,வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களுக்கும் காங்கேயம்,பொள்ளாச்சி சந்தைகளில் நடையாகவே மாடுகளைக் கொண்டு சென்ற காலங்கள் உண்டு.எனவே பசுக்கள் கடத்தல் அதுவும் அடிமாட்டுக்கு கடத்தல் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் தமிழுக்குப் புதிய கதைக் களம்.

திரைப்படம் பார்ப்பதற்கு முன்பே தொலைக்காட்சி விளம்பரம் காணும்போது பிதாமகன் பார்க்கும் உணர்வு வந்தது.படம் பார்த்ததும் அது உறுதியாகி விட்டது.விஷாலுக்கு நடிப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள்.உடல் மொழி கமல்,விக்ரம் வரிசையில் விஷால்.அரங்கிலிருந்து திரும்பிப் போன சூர்யாவை மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கும் நடிப்பு,முகபாவம்.நாட்டிய நடனம்,கதகளி போன்ற கலைகளுக்குத் தேவையான அழுத்தமான முகபாவங்கள்.இனி மேல் அவன் - இவன் மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஷால் சொன்னதாகப் படித்தேன்.விஷால் மறுபரிசீலனை செய்யலாம்ஆர்யாவும் கேலியும் கிண்டலுமான நடிப்பில் சோடை போகவில்லை.

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி சொல்லனுமின்னா யதார்த்தமான குணநலன்கள் கொண்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்.ஆனால் அதிலும் எதிர்ப்புக் குரல்கள் வருமென்று இயக்குநர் சமரசங்கள் செய்து கொண்டிருக்கலாம்.அம்பிகா!கதாநாயகி சான்ஸ் முடிஞ்சு போச்சுன்னா உடம்பை இப்படி உப்ப வைக்க வேண்டுமா?துறு துறுன்னு ஆர்யா கூட சுத்தும் பையனும்,பதவி உயர்வு ஏட்டய்யாவும்,ஊருக்குப் புதுசு இரண்டு பேரில் விஷாலின் போலிசு காதல்(லைலா கால்ஷீட் கிடைக்கலியா)பரவாயில்லை.யுவன் சங்கர் ராஜா பாடலை இன்னொரு முறை கேட்டாத்தான் கருத்து சொல்ல முடியும்.

மக்களும்,காவல்துறையும் படத்தில் இருக்கிற மாதிரி நட்பு நிலையில் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!யதார்த்தம் என்ற பெயரில் வசனங்களில் கொஞ்சம் கவிச்சி வீசுகிறது.அய்னஸ் (Highness) மாதிரி ராஜ பரம்பரை கதாபாத்திரங்கள் இன்னும் தமிழகத்தில் எங்காவது உலவுகிறார்களா எனத் தெரியவில்லை.ஆனால் அந்த கதாபாத்திரத்தின் சாயலில் நிறைய சராசரி மனிதர்கள் இருக்கக்கூடும்.கதையின் படி நிர்வாணமாக நடிக்க வேண்டுமென்ற பாலாவின் எண்ணத்திற்கு துணிந்து நடித்ததும் இது மாதிரியான முழு ஆண் நிர்வாணம் தமிழ்ப் படத்திற்கு புதியது. மெல்லிய நகைச்சுவையோடு  போய்க்கொண்டிருந்த படத்தின் கதையை, வன்முறைக்காட்சியாக நிர்வாணமாய் திசை மாற்றுகிறது.

இறப்பின் வலியை குடியாகவும்,கும்மாளமாகவும் நகர்ப்புறங்களே முன்னிலைப் படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.தமிழ்க் கலாச்சாரத்தின் வேர்கள் எங்கோ ஒளிந்து கிடக்க தாரை,தப்பட்டை,பூ வண்டி போன்றவை பண்பாட்டின் இப்போதைய மாற்றங்கள் எனலாம்.பெண்களின் ஒப்பாரியே தமிழ் சாவின் பரம்பரை.

படைப்பவன் மனிதம் சார்ந்த தனது உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு தடைகள் உள்ள நிலையில் தலைப்பின் வசன இடைச்செறுகல்கள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடும்.இதே வசனத்தை சீமான் தனது படத்துக்கு சொல்லியிருந்தால் படம் முக்கி முனகி வெளி வந்திருக்கும்.அல்லது வசனம் வெட்டுப்பட்டிருக்கும்.அந்த விதத்தில் இயக்குநர் பாலாவுக்கும்,கதை வசனகர்த்தாவுக்கும் இந்த வசனத்திற்காக ஒரு பாராட்டு.

Saturday, October 2, 2010

எந்திரன் விமர்சனங்கள் எங்கே?

தாரை,தப்பட்டைகளோடு எந்திரன் திரை விமர்சனம் களை கட்டுமென்று பார்த்தால் இன்று படம் பார்த்து விட்டு வந்தும் பிரபல திரை விமர்சன பதிவர்களின் இடுகை ஒன்றும் கண்ணில் படவில்லை.டிக்கட் கிடைக்கவில்லையா என்ன? கட்டவுட் பாலாபிஷேகம், தரையில் சாப்பாடுன்னு களைகட்டுச்சே என்னாச்சு? தமிழகத்தில் போட்ட காசு வந்துமென்று நினைக்கிறேன்.இந்தி சத்தத்தையே காணோம்!

எப்படியோ தமிழக கோமாளித்தனங்கள் இல்லாமல் தமிழகத்திலிருந்து வரும் அதே ரசிகர் கூட்டம் பிரம்மச்சாரிகளின் கூட்டமாக,குடும்ப சகிதமாக ஹவுஸ்புல்லா ரொம்ப மெச்சூர்டா அமைதியா படம் பார்க்கிறது பார்க்க சந்தோசமாய் இருந்தது.ஆனால் இந்த அமைதியைக் குலைக்க திரையரங்கின் ஸ்டிரியோபோனிக் சத்தம் காதை கிழி கிழின்னு....

படம் துவங்கியதுமே Son pictures லோகோ வந்ததும் சன் தொலைக்காட்சி செய்தி வருகிற மாதிரி ஒரு உணர்வு.அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்னையறியாமல் தசாவதாரத்தின் ஆராய்ச்சிக்கூடத்தை நினைவு படுத்தியது.கூட கருணாஸ்,சந்தானத்தின் பித்துக்குளித்தனங்களும் அதனைத் தொடர்ந்த கதை நகர்வும் என்னமோ கோடிக்கணக்கில் காசு கொட்டினாங்கன்னு சொன்னாங்களே ஒரு எபக்டுமே இல்லையேன்னு தோன்ற வைத்தது.எந்திரனின் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கின்றது.அப்புறம் குறிப்பிட்டுச் சொல்லும்படியா என்ன என்று இப்ப யோசித்தாலும் ரயில்,ஆராய்ச்சிக்கூட கிராபிக்ஸ்,பீட்டர் ஹெய்ன் ரயில் சண்டைன்னு கொஞ்சம் நினைவு வருது.சும்மாவே சாமியாடுற ரஜனி ரசிகர்களுக்கு கிராபிக்ஸ்தான் படைப்பாளி.
 
டோனி சொல்ற மாதிரி கதையே இனிமேல்தான்னு இடைவேளையில் சொல்வதால் சரி பார்க்கலாமேன்னு உட்கார்ந்தா இயந்திரமா இருக்கிற யந்திரனுக்கு உணர்ச்சிகள் கொடுக்கனுமுன்னு 1 டெராபைட் 2ஹெக்டாபைட், பைட் இயந்திரனுக்கு டாய்பிரண்டா இருந்து இப்ப பாய்பிரண்டாகனுமுன்னு ஐஸ்வர்யா மேல் காதல் வந்து விடுகிறது.காதல் என்ற நட்டு கழண்டுகிச்சுன்னா என்னாகுமென்று கதை நகர்கிறது.ஏ.ஆர் ரகுமானை இயர்போனை காதுல மாட்டிகிட்டு இன்னொரு முறை கேட்டாலே கருத்து சொல்ல முடியும்.

ரஜனிக்கு ரொமான்ஸை விட வில்லத்தனம் அல்வா மாதிரி வருகிறது.அதனை மூன்று முடிச்சு முதல் லகலகலக வரை நிரூபித்திருக்கிறார்.இதிலும் எந்திரன் வில்லனாகும் போது அசத்தல்.ஆனால் இங்கே திரையரங்கில் விசில் அடிக்க மட்டுமே ஆட்கள் இல்லை.கண்ணை கழட்டி வேறு கண் மாற்றுவது,காயம்பட்ட உடலை ரீமோல்டிங்க் செய்வது போன்றவை டெர்மினேட்டரை நினைவுபடுத்தியது.ஆங்கிலப்படங்களுக்கு கண்ணில் விளக்கெண்ணைய் இட்டு எந்தக்காட்சி எங்கே அசல் என்று துப்பறியும் பதிவர்களுக்கு இன்னும் சில ஆங்கிலப்படப் பெயர்கள் அகப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
 
க்ளைமாக்ஸ் எந்திரன்களின் சாகசம் இதுவரை இந்தியத் திரைப்படங்களிலே முதல்முறையாக என்ற வாக்கியத்தை உண்மை என்கிறது.ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் சிறு முயற்சியாகவாவது இதனை ஷங்கரை பாராட்ட வேண்டும்.கலாநிதி தயாரிப்பாளர் என்றதும் உலையிலே போட்ட பணம் என்று சிலர் முணுமுணுக்கலாம்.ஐங்கரனால் முடியாததை கலாநிதி வெற்றி வியாபாரமாக்கியிருக்கிறார்.எனவே இதன் நுண்ணரசியல்களில் எனக்கு ஈடுபாடு இல்லை.

ரஜனி! உடலை மெலிதாக வைத்திருக்கும் ரகசியத்தை மட்டும் என் காதுல போட்டீங்கன்னா கூட்டாளியாக வசதியாக இருக்குமில்ல!டாட்!

Tuesday, June 22, 2010

செம்மொழி தினத்தில் ராவணன்

பதிவுலக திரைப்பட விமர்சனங்களை இரு வகையாக பிரிக்கலாம்.எவ்வளவு மொக்கையாக படம் இருந்தாலும் தனது இருப்பை புதுப்பித்துக் கொள்ளும் பொருட்டோ அல்லது பதிவின் எண்ணிக்கையை கூட்டும் எண்ணத்திலோ அல்லது என்ன செய்றதுன்னே தெரியலையெ எதையாவது கிறுக்கி வைப்போம் என்பது ஒரு வகை.இன்னுமொரு வகை கவனிக்கப்பட்டவர்களை கவனிப்பதும், மனதை பாதிப்பதும், படத்தின் காலகட்டத்தையும், கதை, இசை, ஒளிப்பதிவு, நடிக, நடிகையரின் திறன் வெளிப்படுத்தலை பதிவு செய்வதும், நேர் எதிர் வினைகளும் இன்னும் கூடவும். ராவணன் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

ரசிகர்களை வாசல் கதவில் நல்லாவே இருக்குது என கருத்துப் படம் புடிக்கும் கால கட்டத்திற்கு முன்பு குடும்பம்,நண்பர்களாக,குழுவாக திரையரங்கை விட்டு வெளியே வரும்போதே படம் குறித்தான தாக்கம் வாயசைவுகளாக வெளிப்படும் வார்த்தைகளும்,தனி மனிதனாக படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது தொண்டைக்குழி அடைத்துக்கொள்வது மாதிரியான உணர்வுகளுடன் மனதை என்னவோ செய்வதும், திரைப்படம் குறித்தான ஆக்கிரமிப்பு திரையரங்கை விட்டு வெளியே வந்தும் நெஞ்சாங்கூட்டில் சிம்மாசனம் போட்டு உட்காருவதும், யோசிக்க வைப்பது மட்டுமே ஒரு படத்தின் வெற்றியாக அமைவதற்கான அறிகுறிகள்.

பட விளம்பரங்கள்,பாட்டு,நல்லாயிருக்குது வாய் வார்த்தைகள் என படம் கல்லா கட்டுவது என்பதெல்லாம் மாறி எதிர்வினைகளும்,நிகழ்வுகளும் படத்தை காணவேண்டும் என்ற விளம்பர நுட்பமாகவும்,தொலைக்காட்சி விளம்பரங்கள்,பாடல் விழா,வலைத்தளம் என்று மாறிப்போன காலகட்டத்தில் படம் குறித்த பார்வைகள் ஓரளவுக்கு கசியத் துவங்குவதும்,படம் பார்க்கும் முன்னே அது குறித்தான பல்நோக்கு விமர்சனங்கள் வெளிவந்து விடுவதாலும் முந்தைய கால கட்டத்து தாக்கங்கள் எதுவுமின்றி வீரா மலை மாதிரி நின்ற துவக்க காட்சியுடன் தொடர்ந்த கதை ஒண்ணுமே புரியமாட்டேங்குதே என்ற பக்கத்து இருக்கை இரு பேச்சிலர் பார்ட்டி குரல்களுடனும்,ஸ்டிரியோ சத்தத்தால் சத்தம் போட்டு அழுத குழந்தையின் அழுகையுடனும் துவங்கியது.பின் இடம் பழக்கப்பட்ட மாதிரி படத்தின் தாக்கம் ஒவ்வொருவரையும் சூழ்ந்து கொண்டது ரஞ்சிதாவின் முகம் தெரியும் வரை.இது குறித்த ஏனைய தமிழக பதிவர்களின் விமர்சனங்களையும் காணும் போது மனதின் சலனங்கள் நாடு விட்டு நாடு போனாலும் ஒரே மாதிரிதான் போலும்.பாரதிராஜாவின் நாடோடி தென்றலும்,மணிரத்னத்தின் ராவணனும் ரஞ்சிதாவின் வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும் மிக முக்கிய காலகட்டங்கள் ரஞ்சிதாவைப் பொறுத்த வரையில்.

யார் யாரை முந்துகின்றார்கள் என்ற போட்டியில் காமிராவே எல்லோரையும் முந்திக்கொள்கிறது.அதற்கு துணையாக காடும், காடு சார்ந்த இடங்களும், அதனையொட்டிய கதையமைப்பும்.2010 சிறந்த படம்,நடிகர்,நடிகையென விக்ரம், ஐஸ்வர்யா பச்சனுக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. படத்தில் நடித்தவர்கள் உழைப்புக்கும், ஒளிப்பதிவு, பாடல்கள்,அரங்கமைப்பு, சண்டைக்காட்சி போன்ற உழைப்புக்கும் அப்பால் மணிரத்னத்தின் உழைப்பின் நேர்த்தி படத்தை அழகாகவே கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது.காடும்,காடு சார்ந்த இடங்களும்,வீரா பெயரும், தூதுக்கு வந்தவனை சுட்டுக்கொன்ற எஸ்.பி போன்ற நிகழ்வுகள் வீரப்பனை நோக்கி நகர்த்த முயற்சித்து விட்டு, காட்டில் வசிக்கும் மக்களை நோக்கி மேல் தட்டு வசனத்துடனும், வடக்கில் நிகழும் பழங்குடியினர் சார்ந்த மாவோயிஸ போராட்டத்தை மெல்ல அடையாளம் காட்டி விட்டு கதாபாத்திரங்களின் புனைவுகளில் ராவண காவியம் எழுத முயற்சி செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.ராமனை விட ராவணன் உயர்ந்தவன் என்பது மட்டுமே படத்தில் தெரிகிறது. விவாதம் உள்ளவர்கள் கம்பராமயாணத்தையும், பட்டிமன்றங்களையும் மீள் வருகை செய்வது நல்லது.

அனில் அம்பானியின் பணமும்,சிறந்த இயக்குநரின் ஆளுமையும் இருந்தும் கூட சொல்ல வந்ததை சொல்ல முடியாத தயக்கங்கள் இருப்பது தெரிகிறது.மேல்தட்டு சிந்தனைகள் கீழ்தட்டோடு பொருந்தாமல் போவதன் காரணம் எல்லாவற்றையும் சமன் செய்து நடக்க வேண்டிய இந்திய சூழலா என்பது தெரியவில்லை.அனில் அம்பானிக்கும்,மணிரத்னத்துக்குமே சொல்ல வந்ததை சொல்ல இயலாத நிலைமையென்றால் இந்திய முக பிரதிபலிப்பை மீண்டும் ஒரு முறை நமக்கு நாமே பார்த்துக்கொள்வது நல்லது.

மேலும் திரைப்படத்துறையில் இருக்கும் அமிதாப்பச்சனுக்கும், மணிரத்னத்துக்குமே அவரவர் படம் குறித்த பார்வைகளின் விமர்சனங்கள் இருக்கும் போது படம் குறித்தான முழுமை இல்லையென்றே தெரிகிறது.

பொழுதுபோக,வியாபாரம் மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் ஒரு திரைப்படம் இருந்தால் இருக்கவே இருக்கிறது நண்பர்களின் விமர்சனங்களும்,திருட்டு டி.வி.டிக்களும்.இங்கே விமர்சனம் என்பதற்கு இவற்றை தாண்டிய சமூக பார்வையும் அதனை சொல்ல வேண்டிய அவசியமும் உள்ளது.


தமிழனின் உண்மையான இதிகாசமான ஒரு காலகட்டத்துக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கின்ற புரிதல் நமக்கு ஏற்படவேண்டும் நிறை, குறைகள் எதுவானாலும்.நமது இருப்பை, அதன் பொறுப்பை பல படிமங்களாக விட்டுச் செல்லவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.இல்லையென்றால் வரலாறுகள் திரிக்கப்படும் அபாயங்களை மட்டுமே எதிர்காலத்திற்கு சொல்லாமல் போவோம்.

மணிரத்னம்,கமலஹாசன்,பாரதிராஜா இன்னும் திரைப்படத்துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட தயாரிப்பாளர்கள் தங்களை நிரந்தரமாக தமிழ் மண்ணில் அடையாளப்படுத்தி விட்டுப் போகும் ஆற்றல் கொண்டவர்களாய் வரலாற்றின் நிகழ்வுகளை புனைவுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் பதிவு செய்ய வேண்டிய தார்மீக கடமை கொண்டவர்கள்.ஆனால் அதற்கான தடங்கல் இந்திய சூழல்களா மனம் சார்ந்த தயக்கங்களா?இரண்டுமா?

Thursday, February 4, 2010

வடிவேலு

திரைக்கும் அப்பால் உள்ள நடிகர்,நடிகைகளுக்கு ஒரு முகம் இருக்கக் கூடும்.திரைப்பட பார்வையாளனாக அதுபற்றி பொதுமக்களுக்கு அக்கறை இல்லை,சினிமா செய்திகள்,கிசு கிசுக்கள் என்ற பொது வைப்பு தவிர.பொதுப் பார்வையில் ஏதாவது வில்லங்கத்தில் மாட்டாத வரையில் எதுவும் யாருக்கும் தெரியப் போவதில்லை.குற்றங்களின் மூல காரணங்களை தேடினோமென்றால் மது,மாது,பணம்,அரசியல் என்று பெரும்பாலானவை சுருங்கி விடும்.அதே போல் மனிதனின் கோபங்களின் வெளிப்பாடுகளின் காரணங்களாகக் கூட இவை அமைந்து விடுகிறது.அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் வாய் வார்த்தைகளில் ஏதோ ஒரு புள்ளியில் விவகாரம் விசுவரூபமெடுத்து விடும்.

சொந்த அனுபவமாக நீண்ட நாள் நண்பனுக்கு வியாபார உதவிக்கு பணம் கொடுத்தேன்.பணம் திரும்பி வரவில்லை.அந்த சூழ்நிலையிலும் ஒரு நாள் குழந்தை மாதிரி அழுதுகொண்டு சாம்சங்க் கடைக்காரன் 6 மாதம் கட்டாத தவணைப் பணத்தை கேட்டு 1/2 நாள் மட்டும் அவகாசம் கொடுக்க என் கையிலிருந்த வீட்டு வாடகைப் பணம் உட்பட கொடுத்து சிக்கலில் இருந்து தப்பிக்க விட்டு பின் நான் வீட்டு வாடகை கூட கட்ட இயலாத சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.இப்படியாக துவங்கிய பணவிவகாரம் இன்று வரை இருவரின் நட்புக்கு சுவர் எழுப்பி இனி பணத்தை திருப்பி கேட்பதில்லை என்று விட்டு விட்டேன்.இதுவே இந்திய சூழலாய் இருந்திருந்தால் பிரச்சினை திசை மாறிப் போயிருக்கும்.

இனி வடிவேலு சிங்கமுத்துவின் பக்கம் திரும்பினால் சினிமாவில் நகைச்சுவை லூட்டிக்கும் பின்னால் நட்பு என்ற கோட்டில் இருவரும் பயணித்து இருக்கக் கூடும்.இருவரின் உடல் மொழிகளைப் பார்த்தால் சிங்கமுத்து வில்லனாக இருக்கக்கூடும்.கூடவே வடிவேலு தொழிலில் கொடி கட்டிப்பறப்பது சிங்கமுத்து உட்பட சிலருக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.நகைச்சுவை எவ்வளவு பெரிய வரம். முகபாவங்களால்,சொல்லின் நவரசத்தால் தமிழகத்தையே திரை,தொலைக்காட்சி,இணையத்தின் முன்னால் கட்டிப் போடுவதென்பது சாதாரண விசயமல்ல.எல்லோரும்தான் நகைக்க வைக்கிறார்கள் சிங்கமுத்து உட்பட.ஆனால் நகைச்சுவை தனித்துவம் என்பது திறன்,உழைப்பு,மனதை கவருவதில் வருவது.சொந்த வாழ்க்கை சிக்கலில்லாமல் இருந்தால்தான் நகைச்சுவையின் பரிணாமங்களை இன்னும் இன்னும் வடிவேலு வெளிப்படுத்த இயலும்.அந்த விதத்தில் அவர் சிக்கல்களில் விடுபட்டு நமது முகங்களை மலர வைக்க வாழ்த்துவோம்.

Tuesday, September 29, 2009

உன்னைப் போல் ஒருவன்,தி வென்ஸ்டே- ஒரு ஒப்பீடு

பொதுவாக ஒரு மொழி திரைப்படத்தை மற்ற மொழிக்கு மாற்றும் போது முந்தைய மொழியின் நிறைகளை தக்க வைத்துக் கொண்டு விட்டுப்போன குறைகளை மாற்றம் செய்வது வியாபார நலன் கருதி செய்யும் தொழில் தந்திரங்கள்.அந்த வகையில் தமிழ் கஜனி இந்தி கஜனி ஆகும்போது இந்தி கஜனி நன்றாக மொட்டை போட்டு,சிக்ஸ் பிக்கெல்லாம் வைத்து நன்றாகவே சண்டை போட்டான்.அதே மாதிரி இந்தி வென்ஸ்ட்டே மூலம், தமிழுக்கு உன்னைப் போல் ஒருவனாகும் போது கதை மாற்றம் இல்லாமல் இருந்தாலும் நடிகர் தேர்வு,இசை,வசனம்,ஒளிப்பதிவு,இயக்கம் என தமிழ் நன்றாகவே இருந்தது.

படம் சார்ந்த இணைய இடுகைகளில் தெரிந்த நுண்ணரசியல்கள் தமிழை விட இந்தியில் அதிகமாகவே பட்டது.ஆனால் அதையெல்லாம் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவில்லை.உதாரணத்திற்கு காவல்நிலையத்தில் உட்கார்ந்து இருக்கும் நசுருதீன் ஷா வைத்திருக்கும் பையின் J&K எழுத்தைப் பார்த்து விட்டு காவல்துறை FIR எழுதுபவர் விளிக்கும் ஹலோ ஜம்மு & காஷ்மீர்!இந்தியில் வேகாத இந்துத்வா பருப்பெல்லாம் தமிழகத்தின் சூட்டில் நன்றாகவே வேகிறது.இந்தியில் படம் வந்ததும் தெரியவில்லை.போனதும் தெரியவில்லை.இந்தியில் படம் பார்ப்பது என்பது சமூகம் சாராத ஒரு பொழுது போக்கு.ஆனால் இங்கே விமர்சனம் என்ற பெயரில் எழும் விவாதங்கள் நம்மை பல்வேறு திசைகளுக்கு கொண்டு செல்கின்றன.காரணம் நமது திரைப்படம்,அரசியலின் அன்றாட வாழ்க்கையின் ஆளுமைகள். உன்னைப் போல் ஒருவன் தான் திரைப்படம் என்ற பார்வையில் தி வென்ஸ்டேவை விட சிறந்த படம்.ஆனால் நசுருதீன் ஷா,கமல் இருவரின் நடிப்பில் மட்டும், யார் எனக் கேட்கும் அனுபம் கேரின் கேள்விக்கு பதில் அளிக்கும் நசுருதீன் ஷாவின் சமூகக் கோபங்களுக்கான வார்த்தைகளில் வென்ஸ்டேவின் இறுதி நீண்ட வசனங்கள்,நசுருதீன் ஷாவின் நடிப்பை வெற்றியடையச் செய்து விடுகிறது.வசனத்தின் புரிதலின் சமூக கோபங்களில் சில இங்கே:-

அனுபம் கேர்: யார் நீ?

நசுருதீன் ஷா: நான் பஸ்,ரயிலின் படிக்கட்டில் ஏறுவதற்கு பயப்படுகிறவன்.நான் வேலைக்குப் போகிறவன்,சரியாகப் போய் சேர்ந்து விட்டேனா என்று அரைமணி,ஒரு மணி நேரத்துக்கு மனைவியால் விசாரிக்கப் படுபவன்.டீ குடித்தாயா?சாப்பிட்டாயா?நான் உயிரோடிருக்கிறேனா என விசாரிக்கப் படுபவன்.

நான் சில சமயம் மழையில் சிக்கிக் கொள்பவன்,சில சமயம் வெடிகுண்டுக்குள் மாட்டிக்கொள்பவன்.நான் தாடி வைப்பவனை,தொப்பி வைப்பவனைப் பார்த்து பயப்படுகிறவன்.(ஏன் இந்தி பாராட்டும் விமர்சனங்கள் இந்த நுண்ணரசியல் இடைச் செறுகலை நசுருதீன் ஷா மேலோ இந்தி இயக்குநர் மேலோ சுமத்தவில்லை?)வியாபாரத்துக்கு கடை பார்த்தால் என்ன பெயர் வைப்பது என்று யோசிப்பவன்.சண்டை யாருக்கோ இருக்கட்டும்.சாகிறவன் நான்.I am just a stupid common man.தினமும் ரொட்டிக்கான கவனத்தில் இந்த வேலை தாமதமாகி விட்டது.உங்களுக்குத் தெரியுமா?துணி துவைக்கும் சோப்பு கூட குண்டு தயாரிக்கப் பயன்படுகிறதென்று!சாதாரண மனிதனுக்கு இதை விட உபயோகமான பொருள் இதுவரை தயாரிக்கப் படவில்லை.

தவறு நம்முடையது.மிக சீக்கிரம் நிகழ்வுகளைப் பழக்கப் படுத்திக் கொள்கிறோம்.குண்டு வெடிப்பு மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தால் சேனல் மாற்றி சேனல் பார்த்து விட்டு,SMS அனுப்பினோமா,போன் செய்தோமா,பின் எனக்கு ஒன்றும் ஆகவில்லையென்று அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.அரசாங்கம்,காவல்துறை,உளவுத்துறை என பூச்சிக் கொல்லிகள்(Pest controllers) நிறைய இருக்கிறீர்கள்.Why are you not nibbing them in the bud?

All this system is flawed.நாங்கள் இப்படித்தான் உங்களைக் கொல்வோம்.உங்களால் என்ன செய்ய முடியும்? Yes!they asked this question on a Friday and repeated it on a Tuesday and now I am replying back on Wednesday.

Wednesday, September 23, 2009

உன்னைப் போல் ஒருவன்-திரை,சமூக விமர்சனம்

உன்னைப் போல் ஒருவன் படம் எப்ப வெளியீடுன்னு தெரியாம தமிழ்மணம் பக்கம் வந்தா பதிவர்கள் ஆளாளுக்கு விமர்சனம் போட்டுத் தள்ளுறாங்க.கோணங்கள்,பார்வைகள் பலவாக இருந்தாலும் இதுவே படத்தின் வெற்றிக்கான இணையம் சார்ந்த படவிமர்சன வெற்றி எனலாம்.

இது பத்தாதுன்னு உண்மைத் தமிழன் அனைத்து விமர்சனங்களையும் தொகுத்து வழங்கிட்டாரு.நேற்று 30 நிமிட நெடுஞ்சாலை வாகனப் பயணத்துல படத்தையும் பார்த்துட்டு வந்தாச்சு.சரி மக்கள் என்னதான் சொல்றாங்கன்னு அங்கே இங்கேன்னு போய் பார்த்தா படம் ரசிகத்தன்மைக்கும் அப்பால் புலப்படும் இரண்டு விசயங்கள்.ஒன்று யானை தொட்ட பதிவு விமர்சனங்கள்.இரண்டு கமலஹாசன் என்ற பெயர் காரணம் மட்டுமே பட உணர்வுகளுக்கு அப்பால் எழும் வர்ண முலாம் பூசும் விமர்சனங்கள்.ஒரு வட்டத்துக்குள்ளோ அல்லது ஒரு வட்டத்தை சுற்றி வெளியே வர முயற்சிக்கும் திரைப்பட இயக்கங்களுக்கும் அப்பால் கமல் புத்திசாலித்தனமாக பரிட்சித்துப் பார்த்து விடக் கூடாதே:)

படம் ஊத்திக்கணுமுன்னு வேண்டுதலோ அல்லது நாங்கள் சொல்வது என்னவென்று அறிந்தும் அறியாமலிருக்கிறோம் என்ற எண்ணமோ அல்லது மாற்றுக்கருத்துக்கள் என்ற பெயரில் எழும் நுண்ணரசியல் எழுத்தோ அத்தனைக்குமாய் வந்து விழும் விமர்சனங்களையும் மீறி வியாபார ரீதியாக மற்றும் தற்கால சிந்தனை ரீதியாக உன்னைப்போல் ஒருவன் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

இந்தி பிடிக்காத தமிழக எழுத்துக்களுக்கும் கூட இந்தி வெட்னஸ்டேதான் டாப் என்ற சொல்லாடல்களும் கூட புதன்கிழமைதான் எப்படியிருக்குமென்ற டி.வி.டி ஆவலை தூண்டுகிறது.இருந்தும் மொழிக்கென்று புரிதல் ஒன்று உண்டு.முகம் காட்டாத முதல்வரின் குரல்,செயலாளருடன் கைபேசியில் பேசும் வார்த்தை நுணுக்கங்களை,அரசியிலை இந்தி மூலம் கொண்டுவந்துவிடுமா என்ன?முதல்வரின் செயலாளர் ராகவன் மராருடன் பேசும் வசனங்களின் வீரியம் - முதல்வர் தொட்டு முதல்வரின் செயலாளர் வரை பிரச்சினையிலிருந்து நழுவ முயலும் மனப்பான்மை,சுமையை காவல்துறையிடம் சுமத்தும் அரசியல், அரசுத்துறை (பீரோகிராட்டிக்) மனோபாவம் என்ற மூலப் பிரச்சினைகளை கேமிராவும் வசனமும் பேசுவதை விட்டு விட்டு காமிரா முகப்பூச்சுக்கும் அப்பால் தெரியும் லட்சுமியின் முதுமையை படம் பிடிப்பதில் சிலருக்கு வருத்தம்:)

படம் துவங்கி குண்டு செய்வது எப்படி என்ற சோல்டரிங் நுணுக்கங்களையெல்லாம் காண்பிச்சுட்டு பஸ்,ரயில்,காய்கறி மார்க்கெட்,காவல்நிலையம் தண்ணி வராத ரெஸ்ட்ரூம்ன்னு பல இடத்துலயும் I love India தோள்பையை அங்கங்கே விட்டு விட்டு தக்காளியெல்லாம் வாங்கி,விழுந்த தக்காளிய பொறுக்கி எடுத்துகிட்டு பழைய காலத்து ரயில்வே படுக்கை,ரவுட்டர்,பன்னாட்டுக்கும் சுத்திவரும் சிம்கார்டு,கணினிகள்,துப்பாக்கின்னு கடையப் பரப்பி வியாபாரத்தை ஆரம்பிக்கிறார் கமல்.முதல் போணி ராகவன் மரார் மலையாளத்தமிழும் ரசிக்கும்படியாக உள்ளது.அதுக்குள்ள காவல்துறை அதிகாரிகள்ன்னா இப்படித்தான் இருக்கணும் மாதிரி சேது,ஆரிஃப்ன்னு ரெண்டு பேரு.முயற்சி பண்ணுங்கய்யா!பதவி உயர்வுக்கும்,முன்னுக்கு வருவதற்கும் அறிகுறிகள் நிறையவே தெரிகிறது.TV1 தொலைக்காட்சி பரபரப்பு செய்தியில்லாம அலுவலகத்துல ஹாயா கணினியப் பார்த்துகிட்டு இருக்கும் பெண்செய்தியாளரை பரபரப்பா செய்தி இருக்குது,பொட்டியக் கட்டிகிட்டு சொன்ன இடத்துக்கு வான்னு சொல்லி செய்தியெல்லாம் அலைபரப்பி மோகன்லால் மராரிடம் Can I smoke ன்னு கேட்டு தம் பத்த வைக்கும் நேரம் பார்த்து தம் அடிக்கப் போங்கய்யான்னு துரத்தி விட்டுட்டாரு தியேட்டர்ல பிலிம் காட்டுறவரு!

வாழ்க்கையிலேயே படம் துவங்கி அரைமணி நேரத்துல இடைவெளி விட்ட ஒரே படம் இதுதான்.சரின்னு வெளிய போனா பாப்கார்ன்னுக்கும் பெப்சிக்கும் அலைமோதுற குவைத்தி சின்னபசங்க கூட்டம் தாங்கமுடியாம இரண்டே நிமிடத்தில் திரும்ப இருக்கைக்கு வந்தா படத்தை மறுபடியும் ஆரம்பிச்சுட்டுடாங்க.(நல்லா படம் காட்டுறாங்கய்யா)அப்புறமென்ன வந்து உட்கார்ந்தா அரங்கில் அத்தனை நிசப்தம்.கதை சொல்லும் விதமா?கதையின் கருத்தா?கதாபாத்திரங்களின் ஆளுமையா?எது அரங்கை மவுனிக்க வைக்கிறது?தமிழகத்தைப் போல் வட்டார வழக்குகளுக்கான இடமாக இல்லாமல் வருத்தப்படாத வாலிபர் சங்க மெம்பர்கள்,இலங்கைத் தமிழர்கள்,மோகன்லால் நடிப்பைக் காண வந்திருக்கும் கேரளத்துக்காரர்கள்,தமிழக கலப்பென ஒரு கூட்டமாக இருந்தும் நேரடியாகவோ அல்லது படத்தின் தொலைக்காட்சி மாதிரியான செய்தி அனுபவங்களோ கதையின் மையக்கருவுக்குள் அனைவரையும் கட்டிப் போடுகிறதென்று நினைக்கிறேன்.

திரைக்கதை சொல்லும் முறை,நடிகர்களின் ஆளுமை,வசனம்,காமிரா கோணங்கள் என படத்தை நன்றாகவே நகர்த்தி செல்கிறது இயக்கம்.யதார்த்தங்களை மட்டுமே சொல்வது என்று கதை நகர்வதால் பெஸ்ட் பேக்கரி,மோதி,குஜராத்,கோவை குண்டுவெடிப்பு போன்றவை கதைக்குள் வந்து விடுகின்றது.

சாதாரண மனித வாழ்க்கைக்கும் தீவிரவாதத்திற்குமிடையில் கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் சிலர் பொருளாதாரம்,அரசு பலம்,தொழில் நுணுக்கம்,பொருட்களை கடத்தும் லாஜிஸ்டிக்ஸ்,மதம்,இனவாதம், என்ற குகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.தீவிரவாதத்தின் தொட்டில் எனப்படும் பாகிஸ்தானிய நாட்டிலிருந்து வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பாகிஸ்தானியர்கள் தையல்காரர்,காருக்கு வர்ணம் அடிப்பவர்,கார் மெக்கானிக்,மரவேலைப்பாடுகள்,எலக்ட்ரிகல்,முடி சீர்திருத்துபவர்,பாகிஸ்தானிய உணவு விடுதி என ஏதோ ஒரு நிலையில் தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள்.ஆனால் விமான நிலையத்தில் போதைப் பொருட்களை கடத்தி மாட்டிக்கொள்பவரும் ஒரு பாகிஸ்தானியராகவே இருக்கிறார்.

நேரில் பேசும் போதும் இந்தியனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் வித்தியாசம் ஒன்றும் இருப்பதில்லை.இடைச்செருகல்களாக இந்தியனுக்கும் பாகிஸ்தானியனுக்கும் பகை எங்கிருந்து வருகிறது?1947ன் காலகட்ட அரசியல் நிலைகள் அரசாங்க கட்டமைப்புக்குள் இன்னும் ஊட்டி வளர்க்கப்படுகிறதா?இந்தியனுக்கு தேசியவாதம்.பாகிஸ்தானியனுக்கு மதம்.இதில் மதத்தை மட்டுமே பள்ளியில் கற்றுவித்த கோளாறு,அதற்கான அரபு நாடுகளின் பண உதவி,ரஷ்யா,ஈரான்,இந்தியா,சீனா என அனைவரையும் கண்காணிக்க சிறந்த இடம் பாகிஸ்தான் என்ற அமெரிக்காவின் 9/11க்கு முந்தைய திட்டமிடல்(இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடல) என்று பரந்து விரிகிறது தீவிரவாதம்.இதுல நம்மூரு இந்துத்வா கட்சி இந்துக்களின் பாரம்பரியம் சொல்வதற்கு கோயில்,குளம்,மட்டை,குட்டை,கட்டிட பிரமிப்புக்கள்,கலாச்சாரம்,வாழ்க்கை முறைன்னு ஆயிரம் இருக்கும் போது நாற்காலி பிடிக்க குறுக்கு வழியா வழியில போற ஓணாணை வலுக்கட்டாயமா பிடிச்சி சட்டைக்குள்ள விட்டுகிட்ட மாதிரி பாபர்மசூதி,குஜராத் சம்பவங்களை முன்னிறுத்தி அதில் குறுக்கு வழியும் தேடிகிட்டு இப்ப நொண்டிகிட்டு நடக்குது.தேறுமா இல்லையா என்பதை எதிர்காலம் கணிக்கும்.இது ஒரு புறம் இருக்க இந்துத்வா பற்றியும் அதன் தீவிரவாதம் பற்றியும் விமர்சனங்கள்,வெறுப்புக்கள் எல்லாம் முன்வைக்கும் போது இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி குரல்கள் எழுவது குறைவாக இருக்கிறது.நோன்பும்,தொழுகையும்,ஈகையும்,மானுடத்தின் இறுதியின் எளிமையும் எவ்வளவு சிறந்தவை.இவற்றையெல்லாம் குறுகிய எண்ணிக்கை கொண்ட ஆனால் தீவிர உணர்வு கொண்ட சிலர் ஒரு மதத்தையே ஹைஜாக் செய்து விட்டது வருத்தம் கொள்ள வேண்டிய விசயம்.

இந்தியாக்காரன் திரும்ப திரும்ப உலகத்துகிட்ட முக்கியமா அமெரிக்காகாரங்கிட்ட சொன்னானே-பாகிஸ்தான்காரன் திரும்ப திரும்ப அடிக்கிறான்.ரொம்பவே வலிக்குதுன்னு.படத்துல முஷ்ரஃப்,புஷ் பொம்மைக மாதிரி சிரிச்சுகிட்டேயிருந்தாயே!இப்ப உனக்கு வலிக்கும் போது எல்லாமே மாறிப் போச்சு.ஆனாலும் மானுடத்தின் வலியறிந்த காரணத்தால் 9/11ன் துக்கமும் எங்களது துக்கமானது.தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் வெற்றி கொள்ள முடியுமா?படத்தின் கேள்வி.அப்ப அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் திட்டம் ஜெயித்திருக்கணுமே!படத்தில் லட்சுமி சொல்லும் வசனம் மாதிரி திட்டமிடுதல்,செயல்படுதல் (Planning and Execution) இரண்டையுமே தீவிரவாதிகள் நன்றாகவே செயல்படுத்துகிறார்கள்.மேலும் தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஜெயிப்பதென்பது ஒரு தொடர்நிகழ்வாக ரணமாகிப் போவதற்கான அறிகுறியே அதிகம்,மனிதம் என்ற மருத்துவம் பார்க்காத வரையில்.

கருவறுத்தல் என்ற சொல்லாடல் ஒன்றும் படத்தில் கேட்க நேர்ந்தது.ஒரு இனத்தின் கருவறுத்தல் சோகங்களையும் கமல் வெளிக்கொண்டு வர முயல வேண்டும்.அது ஒரு திரைப்பட ஆவணம் என்ற முறையிலும் உங்கள் கருத்தின் வீச்சின் தூரம் கருதியும் ஒரு சமூக அவலங்களை எதிர்கால சந்ததியை சிந்திக்க வைக்க உதவியாக இருக்கும்.