- அரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிறது எனலாம்.சங்கிலி முருகன் யாரென்றும், அவர் வழக்கு தொடர்ந்து காலம் தொட்டு சுமார் 5 வருடங்களுக்கும் மேலாகியும்,குமரிமுத்து,எஸ்.வி.சேகர் போன்றவர்களை வெளியேற்றிய கால கட்டங்களில் புகைய துவங்கி இன்று கோபக்கனல்கள்,எதிர் மறுப்பு என பொது வெளிக்கு வந்து விட்டதால் கருத்துரிமை பங்காளியாகிறேன்.
சரத்குமார் அணியில் ஓரளவுக்கு தன்மையாக,மென்மையாக பேசும் குரல் சரத்குமாருக்கு மட்டுமே இருக்கிறது.ஆனாலும் அரசியல சாவகாசம்,பொதுப் பிரச்சினைகளை கையாண்ட அனுபவங்களால் கட்டப்பஞ்சாயத்து அரசியல் தொனியில் குற்றங்களை தொடுகிறார்.வாதங்களை வைக்கிறார்.
திரைப்படத்துறையினருக்கு கிடைக்கும் பயணங்கள்,மனித உறவுகளின் உளவியலை நடிப்பு,கதை,வசனம்,முகபாவங்கள் என பல வடிவத்தில் கொண்டு வரும் வாய்ப்பு பெற்றவர்கள்.இதுவே அனுபவங்களாகவும் ,தமிழகத்தின் வாழ்வியலை உணரும் அதிக வாய்ப்புகளும், வரங்களும் பெற்றவர்கள். ஆனாலும் ராதாரவி,சிம்பு,ராதிகா என அனைவரும் ஞான சூன்யங்களாக இருக்கிறார்கள்.
நண்பர்களிடம் கெட்ட வார்த்தை பேசுவதற்கும்,மைக்கை கையில் ஏந்திக்கொண்டு திட்டுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.என்ன வருண் காதில் விழுகிறதா:) பதவிக்கு ஆசை என்பதை விட 29 வருடம் 11 மாதம் குத்தகைக்கு விட்டதில் குளறுபடிகள் இருக்கின்றன என்பதை சங்கிலி முருகன் பேச்ச்சிலும்,சரத்குமாரின் மறுப்பு அறிக்கையிலும் உணர முடிகிறது.
ரஜனி,கமல்,சூர்யா,விஜய்,அஜித் போன்றவர்கள் பேசாமல் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது.அவர்கள் அமைதியாக இருப்பதை ஆதரிக்கிறேன்.
சின்னப்பையனிலிருந்து நடிக்கிறேன் என்று ஒருமையில் விஷாலை திட்டி சிம்பு கத்துவதற்கும்,கமலின் சின்ன வயது முதல் நடிப்பிற்கும் வீணாப்போன சென்னை ஆற்றுக்கும்,,இமயமலை அடிவார அருவிக்குமான வித்தியாசங்கள் உள்ளது.
இரண்டு அணிகளின் மேடைகளின் பக்கவாத்தியமாக நிற்பவர்களின் முகபாவங்களிலேயே தெரிகிறது பஞ்ச பாண்டவர் குழுவின் வெற்றிக்கான அறிகுறியும்,சோர்ந்து போன முகங்களாய் சரத்குமார் அணியும்.
சரத்குமார் அணிக்கு தோல்வி நிச்சயம் என்ற போதிலும் பின்வாங்காது ஜனநாயக தேர்தலுக்கான அடிக்கல்லை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லட்டும்.ராதாரவி திரைப்படக்குழுவினர்க்கு ஆற்றிய பணிகள்,சரத்குமார் வங்கியில் பேசி கடனை குறைத்த நல்ல காரியங்கள் ஒரு தராசிலும்,கெட்ட வார்த்தைகள்,ஈகோ போன்றவை மறு தராசிலும் ஒப்பிட்டாலும் பெரும் தவறாக 30 வருட குத்தகை மாபெரும் தவறு.
எட்டாத,கிட்டாத தூரத்தில் நான் வனவாசம் செய்வதால் திட்டக்குழுவினரான சண்டைக்கோழிகளான சரத்குமார் அணி மைக்கை பிடிக்காமல் மனதுக்குள்ளே என்னை திட்டுமாறு வேண்டுகிறேன்.
முடிக்கிறதுக்கு முன்னாடி சத்யராஜ் கடைசி ரயிலை பிடித்து வந்ததற்கு பாராட்டுகள். சிவக்குமார்,பாக்கியராஜ், பிரகாஷ் ராஜ், போன்றவர்களிடம் பெரும் மெச்சூரிட்டி வெளிப்படுகிறது.