நேற்று காலை சுகமாக இல்லை.காரணம் பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம்.பெங்களூரில் இந்த மாதிரி சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் முன்பே நிகழ்ந்துள்ளது.கல்வி நிறுவனங்களையெல்லாம் முன்பே அவர்களது குண்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.நாம் கொஞ்ச நாட்கள் பரபரப்பாகி மீண்டும் வழக்கம்போல் அடங்கிவிட்டாயிற்று.சமூக துரோகிகள் ஸ்லீப்பிங் செல்லிலிருந்து திட்டமிட்டு வெளியே வந்து விட்டார்கள்.வெளிநாட்டுச் சதித்திட்டம் என்று உடனே செய்தி அறிக்கை விடுவதில் நாம் தாமதமே கொள்வதில்லை.தன்னையும் மண்ணையும் மதிக்காத துரோகிகளின உதவிக்கரம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை.
அரசியல்வாதிகளுக்கு தானே செய்துவிட்டும் கூட எதிர்க்கட்சி மேலோ பக்கத்து நாடு மேலோ பழிபோடும் அணுகூலம்.
மத்திய கிழக்கு நாடுகளின் சமூகம் சார்ந்த குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தும் நாம் சட்டத்தின் வேகம் எந்த அளவுக்குப் பாயும் என்பதை அறிவதில்லை. அரசக்குடும்பத்தைச் சார்ந்த இளைய தலைமுறையைச் சார்ந்தவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியும் அதனை காரோட்டியின் உதவியுடன் வினியோகிக்கவும் முற்பட்டு உள்துறையின் இரும்புக்கரங்களால் சிறைக்குள்ளே தள்ளப்பட்டார்.பின் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் தூக்குத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.நிகழ்வின் துவக்கமும் தீர்ப்பின் காலமும் சுமார் ஒரு வருடம்.
இன்னொருக்குற்றத்தில் பொதுமக்களின் பார்வைக்கு படும்படியாக மூன்று பேர் தூக்குமேடைக்கு காலை நேரத்தில் கொண்டுவரப்பட்டார்கள்.தெரு முழுதும் கூட்டம்.தண்டனை நடக்குமிடத்துக்கு நடந்துபோய்விடும் தூரம். மனிதனை மனிதன் தூக்கிலிடுவதைப் பார்க்கும் கோரநிகழ்ச்சியைக் காணப்பிடிக்காத இந்திய மனோபாவத்தால் நான் பார்க்கவில்லை.
Followers
Saturday, July 26, 2008
காமிரா அனுபவம்
நண்பர் ஒருவர் மூலமாக காமிராவும் காமிரா உபகரணங்களும் ஒருவரிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக ஒரு வாரம் போன்முயற்சி செய்து நேற்று மீண்டும் அவரது நேரடித் தொடர்பு கிட்டியது.
நானோ சுதந்திரமாக ஒருத்தரை சந்திக்க நினைத்தமாத்திரத்தில் கால அவகாசத்துக்குத் தகுந்த மாதிரி அனுசரித்து சந்திக்கும் பழக்கம் உடையவன்.அவரோ நேரம் தவறாமையினை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் என்பது அவரது தொலைபேசி மூலமான நேரம் குறிப்பில் தெரிய வந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை சரியாக மாலை 6.00 மணிக்கு இருவரும் சந்திப்பதாகக் கூறி என்னை அவர் தங்குமிடத்திற்குப் பக்கத்தில் வந்து விடுமாறு சொன்னார்.நானும் நகரின் தெருக்களையெல்லாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் திமிரில் 4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு அவர் சொன்ன இடத்துக்குப் போனேன்.வாகனப் பாதையின் ரவுண்ட் அபவுட் எனும் ஒரு சுற்று வட்டின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் சொன்னபடியே யாரும் நிற்காத வட்டத்துக்குள் நமது ஊர் கான்ஸ்டபிள் போலிஸ் மாதிரி அவருக்காக காத்திருந்தேன்.
வந்தவர் சுமார் 60 வயதுக்கும் மேலானவர்.கண்ணாடி அணிந்திருந்தார். இருவரும் கைகுழுக்கிய சம்பிராதயத்துக்குபின் என்னை அழைத்துக்கொண்டு ஒரு புராதனமான பாழடையும் நிலையிலுள்ள பழையதோர் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் நேரே வாசலுக்கு இடது புறமான ஒரு கதவைத் திறந்தார்.திறந்த கதவின் உள்ளே நுழைந்ததும் ஒரு வித்தியாசமான இடத்துக்கு வந்த உணர்வு ஏற்பட்டது.காரணம் பழைய கட்டிடமும் அதற்கேற்றார் போன்றே நெரிசலான முன் அறையின் பொருட்களின் ஆக்கிரமிப்பும்.முன்னறைக்குப் பதிலாக நேரே படிப்பு படுக்கையென இருநிலை கொண்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஆல்ஃப்ரட் ஹிட்சாக் மற்றும் ஆங்கில திகில் படத்துக்கு இணையாகவும் நமது திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் எந்தவித செட் எனப்படும் அமைப்புகளுக்கு தேவையில்லாமல் காமிராக் கோணம் அமைக்கவும் உகந்த இடம்.கதவுக்குப் பக்கத்தில் ஒரு யமாஹாப் பியானோ,இன்னும் காமிராவையும் கண்ணையும் நகர்த்திக் கொண்டு வந்தால் சின்னச் சின்ன அறைகள் கொண்ட அடுக்கில் புத்தகங்களும் காகிதங்களும்.இன்னும் கண்ணை நகர்த்தினால் ஒரு இரும்பினாலான மேசை இரு அடுக்குகள் கொண்டது.மேல் அடுக்கில் ஒரு சில புத்தகங்களும்,கீழ்த் தட்டில் தூசு தட்டாமல் நிக்கான் FG எழுத்துக்களுடன் காமிராவும் அதன் பக்கத்தில் லென்ஸ் ஒன்றும் அதன் முகமூடியும் அதையும் ஒட்டி ஒரு பொலராய்ட் காமிராவும் அடுத்து மமியா C220 எனும் நெற்றிப்பொட்டுடன் இன்னொரு காமிராவும் இன்னும் பொருட்கள் உள்ளே ஒளிந்து எட்டிப்பார்த்துக்கொண்டுள்ளது.இதன் அருகில் எனக்கு அவர் இருக்கை தந்தார்.
வழக்கமாக இருவர் சந்திக்கும்போது உள்ள லதானந் சித்தர் கூறுவது மாதிரியான break the ice சங்கடங்களை நான் நேர் கொள்வதில்லை.ஒன்று எதிரில் இருப்பவரை அவர் பேச்சைத் துவக்கட்டுமென அவரது கண்களை உற்று நோக்குவது மனுசன் சங்கோஜப் பேர்வழி மாதிரி தெரிந்தால் ஸ்டார்ட் மீசுக் சொல்வதுதான் எனது வழக்கம்.ஆனால் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை அவர் தராமல் அவரே உரையாடலைத் துவங்கினார்.
பேச்சு துவக்கமாக ஒரு நாள் இடது கண் எதை நோக்கினாலும் சிவப்புக் கலரில் தெரிந்ததாகவும் அதனால் அவரது இடது கண் கார்டியாக் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிப் போனதாகக் கூறினார்.இரவு நேரங்களில் வெளியே போக வேண்டுமென்றால் தெரு விளக்குகளுடன் டார்ச் விளக்கின் ஒளியும் கூடுதலாகத் தேவைப்படுகிறதென்றார்.
இங்கே மருத்துவர்கள் சரியில்லையென்றும் இந்திய மருத்துவரே அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை என்றார்.தான் கிறுஸ்துவ வழிமுறை வாழ்ந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களுக்குள் பார்வை கிட்டியதாகவும் சொன்னார்.தற்போது யாரும் இறப்புக்குப் பின் கடவுளுக்குப்பதில் சொல்லவேண்டிய பயமில்லாமல் வாழ்வதாகவும் சொன்னார்.
மண்ணின் மைந்தர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.நான் இங்கும் வாழ்வியலை மதம் சார்ந்த ஒழுங்கியலோடு வாழ்பவர்கள் உள்ளார்கள் என்றேன்.தனக்கு அப்படிப் படவில்லை என்றும் மேலும் எனக்குப் பேசுவதற்கு எந்தப் பங்களிப்புமில்லாமல் கிறுஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து துவங்கி அப்போதைய காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்.
அவரது பழைய ஏற்பாட்டின் பேச்சு கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நீண்டது.இவர் எப்பொழுது காமிரா விசயத்திற்கு வருவார் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவரது இன்னொரு அலமாரியின் புத்தகங்களைப் பார்வையிடுகிறேன்.ஒரு ஆங்கில டிக்சனரியும்,ஆங்கில தெலுங்கு மொழிபெயர்ப்பும் தவிர பெரும்பாலோனவைகள் பைபிள் புத்தகங்கள் என்று தோற்றம் தரும் கருப்புக் கலர் முகம் கொண்ட புத்தகங்கள்.எனது பார்வை பைபிளில் சென்றதும் பல மொழி பைபிள்களை ஒவ்வொன்றாய் சோதித்து விட்டு தான் கனடா,லண்டன்,இஸ்ரேல்,சிரியா,எகிப்து,லெபனான்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சுற்றி வந்துள்ளதாகவும் பின் என்னிடம் தமிழ் பைபிள் ஒன்றை நீட்டினார்.நான் வலது கையில் வாங்கி விட்டு இடது கையில் மேசை மேல் வைத்தேன்.அவர் இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லையென்றும் அதற்கான தருணம் வரும் சமயத்தில் மாத்திரமே நான் பைபிளைத் திறப்பேன் என்றும் சொன்னார்.
நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டு அவரிடம் சொன்னேன்.இந்துவாகப் பிறந்து,அரசினர் பள்ளியிலும் பின் கிறுஸ்தவப் பள்ளியிலும் படித்து இப்போதைக்கு ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் நான் மத எல்லைகளைக் கடக்கும் மனப்பக்குவம் வந்து விட்டதால் எந்த மதத்தையும் வெறுப்பதுமில்லை அணப்பதுமில்லையென்றேன்.நான் இங்கு வந்ததே உங்களிடம் காமிரா பற்றிப் பேசத்தான் என்றேன்.
அவர் மேசையினுள்ளே கையை விட்டு 35MM பிலிம்காமிரா ஒன்றையும் அதனுடன் ஒட்டிய பிளாஷ் இணைப்பையும் காட்டினார்.காமிரா பெயர் நிக்கான் F3, பிளாஷ் பேனாசோனிக்.தன் வாழ்வின் பெரும்பங்காக இந்த காமிராக்களும் இசையும்தான் பொருளாதார ஆதாரம் என்றார்.ஒரு மணி நேரத்துக்கு KD 5/= (சுமார் ரூ750)இசைக் கற்றுக்கொடுக்க பணம் வாங்குவதாகக் கூறினார்.என்கையில் நிக்கான் F3 யைக் கொடுத்துவிட்டு தன்னிடம் இன்னுமொரு நிக்காமேட்டிக் காமிரா இருப்பதாகவும் சொன்னார்.என்னடா மனுசன் நிக்கான் FG,பொலராய்ட்,மமியா,நிக்காமேட்டிக்ன்னு இத்தனைக் காமிராவை வைத்திருக்கிறாரே என்று பார்வையை சுவர்ப்பக்கம் திருப்புகிறேன்.
சுவற்றில் சின்ன வெள்ளைப் பலகையில் பைபிளின் வாசகம் ஏதோ ஆந்திர மொழியில் எழுதி வைத்துள்ளார்.அதற்கும் கீழே யமாஹா கீ போர்டு.அதற்கும் அடுத்து பேனாசோனிக் டெக்னிக்ஸ் என்ற பெரிய கீ போர்டு.எல்லாமே விற்பதாகக் கூறினார்.பரணில் கிடக்கும் வீடியோ லைட்டை எடுத்தார். அதே மாதிரி இன்னொன்று இருப்பதாகவும் அந்த ஜெர்மன் மாடல் தற்போது தயாராவதில்லையென்றும் சொன்னார்.சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் மற்ற நாட்டின் பெயர்ப்பலகைகளைக் காண்பது ரொம்ப அபூர்வம்.எனவே அவர் சொல்வது சரியெனப்பட்டது.
பின் வரலாறாகிப்போன பழைய தட்டச்சு மெசினைக் காட்டினார்.இத்தனைக்கும் நடுவில் அறையை அதிகமாக ஆக்கிரமிப்பது காகிதக் கட்டுகளும் பிளாஸ்டிக் பைகளில் மூடி மூடி வைத்திருக்கும் எனக்குத் தெரியாதப் பொருட்கள். முன்பு கடந்து வந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். வெளி ஹாலுக்குச் சென்று ஒரு நீண்ட ஏணியைக் கொண்டு வந்து பரண்மேல் ஏறினார்.அங்கேயிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை ஏணியிலிருந்தவாறே என்னிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினார்.
கீழே வந்து வெளிநாட்டில் புகைப்படமே கதியாகக் கிடக்கும் புகைப்படக்கலைஞர்கள் உபயோகப் படுத்தும் டோம் என்று சொல்லப்படும் போட்டோ ஸ்டியோவில் உபயோகப்படுத்தும் ரிஃப்ளக்டர் எனப்படும் விளக்குச் சாதனங்கள்.தயாரிப்பு பிரிட்டன்.அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை தேறும்.சின்ன டிஷ் ஆண்ட்டனா மாதிரியான அதன் பின்பாகம் இரண்டு பெரிய பெட்டிகளில் பரண்மீது தூங்குவதைக் காண்பித்தார்.
அப்பொழுதுதான் கவனித்தேன்.அவர் நிறுத்திய ஏணிக்கு அப்பால் தொலக்காட்சிப் பெட்டி இருந்தது.அதன் பக்கத்தில் VHS காலத்து வீடியோக் காமிரா ஒன்று பேனாசோனிக் M3000 முத்திரையுடன்.நான் அவரிடம் இப்பொழுது எல்லாமே கணினி மயமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டதாலும் இந்த மாதிரிப் பொருட்களை இபே பொன்ற தளங்களில் குறைந்த விலையில் வாங்கிவிடலாமென்றும் மனுசனை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தேன்.அவரோ அசருகிறப் பாட்டைக் காணோம்.
எனது கண்ணும் மனக்கணக்கும் எப்படியாவது அவரிடம் ஒரு காமிராவையும் விடியோ மற்றும் காமிரா விளக்கையும் வாங்கி வந்து சி.வி.ஆரிடம் ஒரு நல்ல பெயர் வாங்கிவிடவேண்டுமென்பது:) ஆனால் பெருசு ஒன்றும் விலை அசைக்கிறப் பாட்டைக்காணோம்.தொட்டதுக்கெல்லாம் சும்மா குத்து மதிப்பா ஐம்பதியாயிரம் கணக்கு சொல்கிறார்.
அப்புறம் இவ்வளவு நேர உரையாடலில் அவரது பேச்சின் பங்கே பெரும்பான்மையாக இருந்தாலும் நான் களைப்படைந்ததாக நினைத்து சமையல்க் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக சமையல்க் கட்டு.எல்லாமே ஒரு நேர்த்தியுடன் தான் பொருட்கள் இருக்குது.ஆனாலும் அந்தப் பெண்ணியப்பாங்கும் அழகுணர்ச்சியும் இல்லாமல் போனது.
உள்ளே போனதும் அவரது குளிர்சாதனப் பிரிட்ஜை திறந்தார்.உள்ளே வரிசையாக மூன்று தளங்களில் சின்னச்சின்ன பிளாஸ்டிக் வெள்ளை டப்பாக்கள்.அவையெல்லாம் தனது 3 மாதமாதத்திற்கான (கவனிக்கவும் மூன்று மாதம்)
சமைத்துக் குளிர்பதனப்பட்ட காலிபிளவர்,காரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட் போன்ற காய்றிகளின் கலவை மற்றும் எண்ணையிடப் படாத உப்புமாவும்.இந்தச் சின்னச்சின்ன டப்பா உணவுகளுடன் பக்கத்து வீட்டு அமீரகத்துக்காரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன கோதுமை குப்புஸும்தான் அவரது உணவு.மனுசன் மூன்று மாதத்திற்கும் ஒரே முறையாக சமைத்து வைத்துக்கொள்கிறாராம். இருபது வருடங்களுக்கு முன் கனடாவில் இரண்டு வருடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கதோசம் இதுவரை விடவில்லையாம்.அந்தப் பாழடைந்த கட்டிடத்திலேயே பதினெட்டு வருருச்த்துக்கும் மேலாக வாழ்கிறாராம்.அதே காரணத்தினாலும் அந்த பழைய கட்டிடம் காரணம் கொண்டும் துவக்கத்தில் கட்டிய வீட்டு வாடகை சுமார் 15000 இன்னும் தொடர்கிறதாம்.என்கிட்டேயெல்லாம் இரட்டிப்பாக 30000க்கும் மேல் பிடிங்கிக்கொள்கிறார்கள்:)
இவ்வளவு நேரம் தட்டச்சு செய்ததை கையில் விடியோக் காமிராக் கொண்டு போய் இருந்தால் நிகழ்வுகளை முக்கியமாக அந்த ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் அறையின் சூழலை படம் பிடித்து வந்திருக்கலாம்.முதல் சந்திப்பு என்பதாலும்,அப்படிப் பட்ட சந்திப்பில் காமிராக் கண்ணனாயிருப்பது இயலாத காரணத்தாலும் முடியவில்லை.இல்லையென்றால் பிரேம்ஜி,சின்னக்குட்டி ஸ்டைல்ல படம் பாருங்க சொல்லி சின்னக்குறிப்புகள் கொடுத்து பதிவின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
மீண்டும் ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை (குழந்தைகள் உட்பட) அவருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் முக்கியமாக அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)
டிஸ்கி: 25 வருடமாக அவர் இந்தியா செல்லாததற்கு நான் பொறுப்பல்ல.
நானோ சுதந்திரமாக ஒருத்தரை சந்திக்க நினைத்தமாத்திரத்தில் கால அவகாசத்துக்குத் தகுந்த மாதிரி அனுசரித்து சந்திக்கும் பழக்கம் உடையவன்.அவரோ நேரம் தவறாமையினை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் என்பது அவரது தொலைபேசி மூலமான நேரம் குறிப்பில் தெரிய வந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை சரியாக மாலை 6.00 மணிக்கு இருவரும் சந்திப்பதாகக் கூறி என்னை அவர் தங்குமிடத்திற்குப் பக்கத்தில் வந்து விடுமாறு சொன்னார்.நானும் நகரின் தெருக்களையெல்லாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் திமிரில் 4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு அவர் சொன்ன இடத்துக்குப் போனேன்.வாகனப் பாதையின் ரவுண்ட் அபவுட் எனும் ஒரு சுற்று வட்டின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் சொன்னபடியே யாரும் நிற்காத வட்டத்துக்குள் நமது ஊர் கான்ஸ்டபிள் போலிஸ் மாதிரி அவருக்காக காத்திருந்தேன்.
வந்தவர் சுமார் 60 வயதுக்கும் மேலானவர்.கண்ணாடி அணிந்திருந்தார். இருவரும் கைகுழுக்கிய சம்பிராதயத்துக்குபின் என்னை அழைத்துக்கொண்டு ஒரு புராதனமான பாழடையும் நிலையிலுள்ள பழையதோர் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் நேரே வாசலுக்கு இடது புறமான ஒரு கதவைத் திறந்தார்.திறந்த கதவின் உள்ளே நுழைந்ததும் ஒரு வித்தியாசமான இடத்துக்கு வந்த உணர்வு ஏற்பட்டது.காரணம் பழைய கட்டிடமும் அதற்கேற்றார் போன்றே நெரிசலான முன் அறையின் பொருட்களின் ஆக்கிரமிப்பும்.முன்னறைக்குப் பதிலாக நேரே படிப்பு படுக்கையென இருநிலை கொண்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஆல்ஃப்ரட் ஹிட்சாக் மற்றும் ஆங்கில திகில் படத்துக்கு இணையாகவும் நமது திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் எந்தவித செட் எனப்படும் அமைப்புகளுக்கு தேவையில்லாமல் காமிராக் கோணம் அமைக்கவும் உகந்த இடம்.கதவுக்குப் பக்கத்தில் ஒரு யமாஹாப் பியானோ,இன்னும் காமிராவையும் கண்ணையும் நகர்த்திக் கொண்டு வந்தால் சின்னச் சின்ன அறைகள் கொண்ட அடுக்கில் புத்தகங்களும் காகிதங்களும்.இன்னும் கண்ணை நகர்த்தினால் ஒரு இரும்பினாலான மேசை இரு அடுக்குகள் கொண்டது.மேல் அடுக்கில் ஒரு சில புத்தகங்களும்,கீழ்த் தட்டில் தூசு தட்டாமல் நிக்கான் FG எழுத்துக்களுடன் காமிராவும் அதன் பக்கத்தில் லென்ஸ் ஒன்றும் அதன் முகமூடியும் அதையும் ஒட்டி ஒரு பொலராய்ட் காமிராவும் அடுத்து மமியா C220 எனும் நெற்றிப்பொட்டுடன் இன்னொரு காமிராவும் இன்னும் பொருட்கள் உள்ளே ஒளிந்து எட்டிப்பார்த்துக்கொண்டுள்ளது.இதன் அருகில் எனக்கு அவர் இருக்கை தந்தார்.
வழக்கமாக இருவர் சந்திக்கும்போது உள்ள லதானந் சித்தர் கூறுவது மாதிரியான break the ice சங்கடங்களை நான் நேர் கொள்வதில்லை.ஒன்று எதிரில் இருப்பவரை அவர் பேச்சைத் துவக்கட்டுமென அவரது கண்களை உற்று நோக்குவது மனுசன் சங்கோஜப் பேர்வழி மாதிரி தெரிந்தால் ஸ்டார்ட் மீசுக் சொல்வதுதான் எனது வழக்கம்.ஆனால் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை அவர் தராமல் அவரே உரையாடலைத் துவங்கினார்.
பேச்சு துவக்கமாக ஒரு நாள் இடது கண் எதை நோக்கினாலும் சிவப்புக் கலரில் தெரிந்ததாகவும் அதனால் அவரது இடது கண் கார்டியாக் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிப் போனதாகக் கூறினார்.இரவு நேரங்களில் வெளியே போக வேண்டுமென்றால் தெரு விளக்குகளுடன் டார்ச் விளக்கின் ஒளியும் கூடுதலாகத் தேவைப்படுகிறதென்றார்.
இங்கே மருத்துவர்கள் சரியில்லையென்றும் இந்திய மருத்துவரே அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை என்றார்.தான் கிறுஸ்துவ வழிமுறை வாழ்ந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களுக்குள் பார்வை கிட்டியதாகவும் சொன்னார்.தற்போது யாரும் இறப்புக்குப் பின் கடவுளுக்குப்பதில் சொல்லவேண்டிய பயமில்லாமல் வாழ்வதாகவும் சொன்னார்.
மண்ணின் மைந்தர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.நான் இங்கும் வாழ்வியலை மதம் சார்ந்த ஒழுங்கியலோடு வாழ்பவர்கள் உள்ளார்கள் என்றேன்.தனக்கு அப்படிப் படவில்லை என்றும் மேலும் எனக்குப் பேசுவதற்கு எந்தப் பங்களிப்புமில்லாமல் கிறுஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து துவங்கி அப்போதைய காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்.
அவரது பழைய ஏற்பாட்டின் பேச்சு கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நீண்டது.இவர் எப்பொழுது காமிரா விசயத்திற்கு வருவார் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவரது இன்னொரு அலமாரியின் புத்தகங்களைப் பார்வையிடுகிறேன்.ஒரு ஆங்கில டிக்சனரியும்,ஆங்கில தெலுங்கு மொழிபெயர்ப்பும் தவிர பெரும்பாலோனவைகள் பைபிள் புத்தகங்கள் என்று தோற்றம் தரும் கருப்புக் கலர் முகம் கொண்ட புத்தகங்கள்.எனது பார்வை பைபிளில் சென்றதும் பல மொழி பைபிள்களை ஒவ்வொன்றாய் சோதித்து விட்டு தான் கனடா,லண்டன்,இஸ்ரேல்,சிரியா,எகிப்து,லெபனான்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சுற்றி வந்துள்ளதாகவும் பின் என்னிடம் தமிழ் பைபிள் ஒன்றை நீட்டினார்.நான் வலது கையில் வாங்கி விட்டு இடது கையில் மேசை மேல் வைத்தேன்.அவர் இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லையென்றும் அதற்கான தருணம் வரும் சமயத்தில் மாத்திரமே நான் பைபிளைத் திறப்பேன் என்றும் சொன்னார்.
நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டு அவரிடம் சொன்னேன்.இந்துவாகப் பிறந்து,அரசினர் பள்ளியிலும் பின் கிறுஸ்தவப் பள்ளியிலும் படித்து இப்போதைக்கு ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் நான் மத எல்லைகளைக் கடக்கும் மனப்பக்குவம் வந்து விட்டதால் எந்த மதத்தையும் வெறுப்பதுமில்லை அணப்பதுமில்லையென்றேன்.நான் இங்கு வந்ததே உங்களிடம் காமிரா பற்றிப் பேசத்தான் என்றேன்.
அவர் மேசையினுள்ளே கையை விட்டு 35MM பிலிம்காமிரா ஒன்றையும் அதனுடன் ஒட்டிய பிளாஷ் இணைப்பையும் காட்டினார்.காமிரா பெயர் நிக்கான் F3, பிளாஷ் பேனாசோனிக்.தன் வாழ்வின் பெரும்பங்காக இந்த காமிராக்களும் இசையும்தான் பொருளாதார ஆதாரம் என்றார்.ஒரு மணி நேரத்துக்கு KD 5/= (சுமார் ரூ750)இசைக் கற்றுக்கொடுக்க பணம் வாங்குவதாகக் கூறினார்.என்கையில் நிக்கான் F3 யைக் கொடுத்துவிட்டு தன்னிடம் இன்னுமொரு நிக்காமேட்டிக் காமிரா இருப்பதாகவும் சொன்னார்.என்னடா மனுசன் நிக்கான் FG,பொலராய்ட்,மமியா,நிக்காமேட்டிக்ன்னு இத்தனைக் காமிராவை வைத்திருக்கிறாரே என்று பார்வையை சுவர்ப்பக்கம் திருப்புகிறேன்.
சுவற்றில் சின்ன வெள்ளைப் பலகையில் பைபிளின் வாசகம் ஏதோ ஆந்திர மொழியில் எழுதி வைத்துள்ளார்.அதற்கும் கீழே யமாஹா கீ போர்டு.அதற்கும் அடுத்து பேனாசோனிக் டெக்னிக்ஸ் என்ற பெரிய கீ போர்டு.எல்லாமே விற்பதாகக் கூறினார்.பரணில் கிடக்கும் வீடியோ லைட்டை எடுத்தார். அதே மாதிரி இன்னொன்று இருப்பதாகவும் அந்த ஜெர்மன் மாடல் தற்போது தயாராவதில்லையென்றும் சொன்னார்.சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் மற்ற நாட்டின் பெயர்ப்பலகைகளைக் காண்பது ரொம்ப அபூர்வம்.எனவே அவர் சொல்வது சரியெனப்பட்டது.
பின் வரலாறாகிப்போன பழைய தட்டச்சு மெசினைக் காட்டினார்.இத்தனைக்கும் நடுவில் அறையை அதிகமாக ஆக்கிரமிப்பது காகிதக் கட்டுகளும் பிளாஸ்டிக் பைகளில் மூடி மூடி வைத்திருக்கும் எனக்குத் தெரியாதப் பொருட்கள். முன்பு கடந்து வந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். வெளி ஹாலுக்குச் சென்று ஒரு நீண்ட ஏணியைக் கொண்டு வந்து பரண்மேல் ஏறினார்.அங்கேயிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை ஏணியிலிருந்தவாறே என்னிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினார்.
கீழே வந்து வெளிநாட்டில் புகைப்படமே கதியாகக் கிடக்கும் புகைப்படக்கலைஞர்கள் உபயோகப் படுத்தும் டோம் என்று சொல்லப்படும் போட்டோ ஸ்டியோவில் உபயோகப்படுத்தும் ரிஃப்ளக்டர் எனப்படும் விளக்குச் சாதனங்கள்.தயாரிப்பு பிரிட்டன்.அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை தேறும்.சின்ன டிஷ் ஆண்ட்டனா மாதிரியான அதன் பின்பாகம் இரண்டு பெரிய பெட்டிகளில் பரண்மீது தூங்குவதைக் காண்பித்தார்.
அப்பொழுதுதான் கவனித்தேன்.அவர் நிறுத்திய ஏணிக்கு அப்பால் தொலக்காட்சிப் பெட்டி இருந்தது.அதன் பக்கத்தில் VHS காலத்து வீடியோக் காமிரா ஒன்று பேனாசோனிக் M3000 முத்திரையுடன்.நான் அவரிடம் இப்பொழுது எல்லாமே கணினி மயமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டதாலும் இந்த மாதிரிப் பொருட்களை இபே பொன்ற தளங்களில் குறைந்த விலையில் வாங்கிவிடலாமென்றும் மனுசனை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தேன்.அவரோ அசருகிறப் பாட்டைக் காணோம்.
எனது கண்ணும் மனக்கணக்கும் எப்படியாவது அவரிடம் ஒரு காமிராவையும் விடியோ மற்றும் காமிரா விளக்கையும் வாங்கி வந்து சி.வி.ஆரிடம் ஒரு நல்ல பெயர் வாங்கிவிடவேண்டுமென்பது:) ஆனால் பெருசு ஒன்றும் விலை அசைக்கிறப் பாட்டைக்காணோம்.தொட்டதுக்கெல்லாம் சும்மா குத்து மதிப்பா ஐம்பதியாயிரம் கணக்கு சொல்கிறார்.
அப்புறம் இவ்வளவு நேர உரையாடலில் அவரது பேச்சின் பங்கே பெரும்பான்மையாக இருந்தாலும் நான் களைப்படைந்ததாக நினைத்து சமையல்க் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக சமையல்க் கட்டு.எல்லாமே ஒரு நேர்த்தியுடன் தான் பொருட்கள் இருக்குது.ஆனாலும் அந்தப் பெண்ணியப்பாங்கும் அழகுணர்ச்சியும் இல்லாமல் போனது.
உள்ளே போனதும் அவரது குளிர்சாதனப் பிரிட்ஜை திறந்தார்.உள்ளே வரிசையாக மூன்று தளங்களில் சின்னச்சின்ன பிளாஸ்டிக் வெள்ளை டப்பாக்கள்.அவையெல்லாம் தனது 3 மாதமாதத்திற்கான (கவனிக்கவும் மூன்று மாதம்)
சமைத்துக் குளிர்பதனப்பட்ட காலிபிளவர்,காரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட் போன்ற காய்றிகளின் கலவை மற்றும் எண்ணையிடப் படாத உப்புமாவும்.இந்தச் சின்னச்சின்ன டப்பா உணவுகளுடன் பக்கத்து வீட்டு அமீரகத்துக்காரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன கோதுமை குப்புஸும்தான் அவரது உணவு.மனுசன் மூன்று மாதத்திற்கும் ஒரே முறையாக சமைத்து வைத்துக்கொள்கிறாராம். இருபது வருடங்களுக்கு முன் கனடாவில் இரண்டு வருடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கதோசம் இதுவரை விடவில்லையாம்.அந்தப் பாழடைந்த கட்டிடத்திலேயே பதினெட்டு வருருச்த்துக்கும் மேலாக வாழ்கிறாராம்.அதே காரணத்தினாலும் அந்த பழைய கட்டிடம் காரணம் கொண்டும் துவக்கத்தில் கட்டிய வீட்டு வாடகை சுமார் 15000 இன்னும் தொடர்கிறதாம்.என்கிட்டேயெல்லாம் இரட்டிப்பாக 30000க்கும் மேல் பிடிங்கிக்கொள்கிறார்கள்:)
இவ்வளவு நேரம் தட்டச்சு செய்ததை கையில் விடியோக் காமிராக் கொண்டு போய் இருந்தால் நிகழ்வுகளை முக்கியமாக அந்த ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் அறையின் சூழலை படம் பிடித்து வந்திருக்கலாம்.முதல் சந்திப்பு என்பதாலும்,அப்படிப் பட்ட சந்திப்பில் காமிராக் கண்ணனாயிருப்பது இயலாத காரணத்தாலும் முடியவில்லை.இல்லையென்றால் பிரேம்ஜி,சின்னக்குட்டி ஸ்டைல்ல படம் பாருங்க சொல்லி சின்னக்குறிப்புகள் கொடுத்து பதிவின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
மீண்டும் ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை (குழந்தைகள் உட்பட) அவருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் முக்கியமாக அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)
டிஸ்கி: 25 வருடமாக அவர் இந்தியா செல்லாததற்கு நான் பொறுப்பல்ல.
Friday, July 25, 2008
வாழ்வியலும் மொழியும்
நடந்து முடிந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசிய முன்னேற்றுக் கட்சியும் எதிர்க்கட்சிகளும் செய்த கூத்துக்கள்,சேட்டைகள் போலவே எனது முந்தைய பதிவில் எப்படியாவது சதம் அடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கும்மிப்பதிவர்கள் கும்மு,கும்முன்னு கும்மி விட்டார்கள்.
தமிழ் சினிமாவுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கின்றது.ஒரு படம் கதாபாத்திரத்தின் காரணமாக வெற்றி பெற்று விட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லது நடிகருக்கு அதே மாதிரியான ஒரு முத்திரையை தயாரித்து விடுவார்கள்.அந்த மாதிரி நடிகர் நடிகைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
அப்படி ஒரு முத்திரையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சிவாஜி கணேசன்,கமல் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களை ஏற்க வேண்டும்.நான் அந்த மாதிரி நடிப்பில் மெழுகா உருகிப்போய் விட்டு அந்த பாலபாடங்களையெல்லாம் மறந்து விட்டால் என்னையும் கும்மிப்பதிவன் என்ற முத்திரை குத்தி விடுவார்கள் என்ற ஞானோதயத்தில் உருவான பதிவு இது.
தற்போது தமிழில் புகைப்படம் பதிவர் வட்டத்தில் சேர்ந்த பின் தெரிந்து கொண்ட விசய ஞானம் படங்களை எடுத்து சிறிது மெருகேற்றியதும் போட்டிக்கான கற்பனைகளுடன் பதிவிரக்கம் செய்து விடுகிறோம். ஆனால் எடுத்த படத்துக்கும் அப்பால் படங்களுக்கு மெருகூற்றுவது ,அந்தப் படங்களை எப்படிப் பேசவைப்பது ( பதிவுகளில் எதச்சொன்னாலும் மக்கள் நம்புறாங்கப்பாங்கிற வெட்டிப்பயலின் வாசகம் வருவதால் பேசுவது) என்பது அனிமேசன் எனக்கூறப்படும் படங்களின் நகர்வு, மேலும் குறுந்தகடுகளாவதற்கு முந்தைய எடிட்டிங் எனக்கூறப்படும் தணிக்கை இறுதியில் குறுந்தகடுகளாக மாற்றுவது எப்படி போன்ற தொழில் நுட்பங்கள் ஒழிந்து கிடக்கின்றன. பிரேம்ஜி போன்ற வித்வான்கள் இந்த நுட்பங்களை பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.
அடுத்து கும்மிகள் - இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க உதவினாலும் பெரும்பாலான பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.பகிர்தல் என்ற கோட்பாட்டில் தமிழையும், அதற்கு உதவும் தமிழ்மணத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.முக்கியமாக இதன் தாக்கம் இன்னும் விரிவடைய வேண்டும். ஆறுகோடித்தமிழர்களில் எத்தனை பேருக்கு பதிவுகளின் தாக்கம் சென்றடைகிறதென்று தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நாவின் அறிக்கை : தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வரிகளை ஊக்கப்படுத்தும் படி இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கும் என்பது.எனக்கும் கூட பொதுப்புத்தி அறிவில் அது சரியாகத்தான் இருக்கும் எனப்பட்டது. அந்தக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக வாழ்வைத் தேடிப்போன இடத்தில் மொழி மறந்து போன சான்றாய் இன்றும் மொரிஷியஸ்,ஆப்பிரிக்கா,அய்ரோப்பா நாடுகளில் வாழும் சந்ததியினர் கூடவே சமீபத்து கென் பதிவில் ஒட்டவைத்த சாருவின் எழுத்துக்கள் போன்றவை இதனை உறுதி செய்தது.ஆனால் தமிழ்மணம் போன்ற அசாத்திய திரட்டிகளும் பதிவர்களின் ஆக்கபூர்வமான உழைப்பும் அந்தக் கூற்று தோற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.
ஒளி ஊடகங்கள் மக்களின் ரசனைகளை மென்மைப்படுத்தியிருக்கலாம்.கமல்கூட சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தார்.ஆனால் திரைப்படம் சின்னத்திரையின் பலங்களை அழித்து தமிழ்வாழ்வின் பல அங்கங்களைச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் வந்து சிம்மாசனம் போட்டுக்கொண்டது. இதனூடே சின்னத்திரைகள் நமது வாழ்வைப் பிரதிபலிக்கின்றனவா அல்லது அதனது லயத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றனவா எனத்தெரியவில்லை.காரணம் சின்னத்திரையின் தாக்கம் இன்று நம்மிடம் அதிகமாகவே உள்ளது.தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் பேசும் முறைகள் நம்முடைய மொழி பேசும் முறையை ஏளனம் செய்கிறது.
இரண்டு சகாப்தங்களையும் கடந்தும் ஈழத்துப்பிரச்சினை முடிந்தபாடில்லை.அதற்கான நமது தார்மீக உணர்வுகளையும் எழுத்துக்களாய் நாம் வெளிப்படுத்த வேண்டும்.உணர்ச்சிகளுக்கும் மேலாய் மனிதம் வெளிப்படவேண்டும்.விடியலுக்குக் காத்திருப்போம்.
தமிழ் சினிமாவுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கின்றது.ஒரு படம் கதாபாத்திரத்தின் காரணமாக வெற்றி பெற்று விட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லது நடிகருக்கு அதே மாதிரியான ஒரு முத்திரையை தயாரித்து விடுவார்கள்.அந்த மாதிரி நடிகர் நடிகைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
அப்படி ஒரு முத்திரையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சிவாஜி கணேசன்,கமல் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களை ஏற்க வேண்டும்.நான் அந்த மாதிரி நடிப்பில் மெழுகா உருகிப்போய் விட்டு அந்த பாலபாடங்களையெல்லாம் மறந்து விட்டால் என்னையும் கும்மிப்பதிவன் என்ற முத்திரை குத்தி விடுவார்கள் என்ற ஞானோதயத்தில் உருவான பதிவு இது.
தற்போது தமிழில் புகைப்படம் பதிவர் வட்டத்தில் சேர்ந்த பின் தெரிந்து கொண்ட விசய ஞானம் படங்களை எடுத்து சிறிது மெருகேற்றியதும் போட்டிக்கான கற்பனைகளுடன் பதிவிரக்கம் செய்து விடுகிறோம். ஆனால் எடுத்த படத்துக்கும் அப்பால் படங்களுக்கு மெருகூற்றுவது ,அந்தப் படங்களை எப்படிப் பேசவைப்பது ( பதிவுகளில் எதச்சொன்னாலும் மக்கள் நம்புறாங்கப்பாங்கிற வெட்டிப்பயலின் வாசகம் வருவதால் பேசுவது) என்பது அனிமேசன் எனக்கூறப்படும் படங்களின் நகர்வு, மேலும் குறுந்தகடுகளாவதற்கு முந்தைய எடிட்டிங் எனக்கூறப்படும் தணிக்கை இறுதியில் குறுந்தகடுகளாக மாற்றுவது எப்படி போன்ற தொழில் நுட்பங்கள் ஒழிந்து கிடக்கின்றன. பிரேம்ஜி போன்ற வித்வான்கள் இந்த நுட்பங்களை பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.
அடுத்து கும்மிகள் - இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க உதவினாலும் பெரும்பாலான பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.பகிர்தல் என்ற கோட்பாட்டில் தமிழையும், அதற்கு உதவும் தமிழ்மணத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.முக்கியமாக இதன் தாக்கம் இன்னும் விரிவடைய வேண்டும். ஆறுகோடித்தமிழர்களில் எத்தனை பேருக்கு பதிவுகளின் தாக்கம் சென்றடைகிறதென்று தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நாவின் அறிக்கை : தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வரிகளை ஊக்கப்படுத்தும் படி இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கும் என்பது.எனக்கும் கூட பொதுப்புத்தி அறிவில் அது சரியாகத்தான் இருக்கும் எனப்பட்டது. அந்தக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக வாழ்வைத் தேடிப்போன இடத்தில் மொழி மறந்து போன சான்றாய் இன்றும் மொரிஷியஸ்,ஆப்பிரிக்கா,அய்ரோப்பா நாடுகளில் வாழும் சந்ததியினர் கூடவே சமீபத்து கென் பதிவில் ஒட்டவைத்த சாருவின் எழுத்துக்கள் போன்றவை இதனை உறுதி செய்தது.ஆனால் தமிழ்மணம் போன்ற அசாத்திய திரட்டிகளும் பதிவர்களின் ஆக்கபூர்வமான உழைப்பும் அந்தக் கூற்று தோற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.
ஒளி ஊடகங்கள் மக்களின் ரசனைகளை மென்மைப்படுத்தியிருக்கலாம்.கமல்கூட சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தார்.ஆனால் திரைப்படம் சின்னத்திரையின் பலங்களை அழித்து தமிழ்வாழ்வின் பல அங்கங்களைச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் வந்து சிம்மாசனம் போட்டுக்கொண்டது. இதனூடே சின்னத்திரைகள் நமது வாழ்வைப் பிரதிபலிக்கின்றனவா அல்லது அதனது லயத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றனவா எனத்தெரியவில்லை.காரணம் சின்னத்திரையின் தாக்கம் இன்று நம்மிடம் அதிகமாகவே உள்ளது.தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் பேசும் முறைகள் நம்முடைய மொழி பேசும் முறையை ஏளனம் செய்கிறது.
இரண்டு சகாப்தங்களையும் கடந்தும் ஈழத்துப்பிரச்சினை முடிந்தபாடில்லை.அதற்கான நமது தார்மீக உணர்வுகளையும் எழுத்துக்களாய் நாம் வெளிப்படுத்த வேண்டும்.உணர்ச்சிகளுக்கும் மேலாய் மனிதம் வெளிப்படவேண்டும்.விடியலுக்குக் காத்திருப்போம்.
Thursday, July 24, 2008
தமிழ்மணத்துக்கு இரு வேண்டுகோட்கள்
தருமி அய்யா சொல்லியும் கேட்காம நான் ஞாபகப்படுத்தியும் கேட்காம ச்சின்னப் பையன் நான் கூட "ப்" போடறேனாக்கும் போட்டுக்கோ தப்பேயில்ல போடாம இருந்தாத்தான் தப்புன்னு சொல்லியும் கேட்காம தமிழ்ப்பிரியன் இன்னும் தமிழ் பிரியன் என்று பதிவிடுவதாலும் உப்பு சேர்க்காட்டியும் பரவாயில்ல உடம்புக்கு நல்லதுதான் ஆனா "ப்" சேர்க்காட்டி தமிழுக்கும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்துக்கும் அழகல்ல என்பதினாலும் அவர் "ப்" சேர்க்கும் வரை பதினெட்டுப்பட்டி பதிவு கிராமத்திலிருந்து அவரை தற்காலிகமாக தள்ளி வைக்கவோ அல்லது அவரது பதிவு ஏதாவது ஒரு மூலையில் தெரியும்படி செய்யுமாறும் பணிவன்புடன் பிராது அனுப்புகிறேன்.
இரண்டாவதாக நேற்று சி.வி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லலாமென்று குவைத் நேரப்படி இரவு 12.30 மணிக்கு பெட்டியத் திறந்து வச்சிகிட்டு படம் போட்டுகிட்டு இருந்த போதுதான் தெரியுது அமெரிக்க பதிவு மக்களும் நியுசி துளசி மேடமும் அந்த நேரங்களில்தான் பட்டையக் கிளப்பி பதிவு ஆட்டங்களை அடிச்சு ஆடிகிட்டு இருக்காங்கன்னு.அந்த நேரத்தில் பதிவிடுவதென்பது இயலாத ஒன்று. நான் தூங்கும் நேரமோ இரவு 11.30 மணி.அந்த நேரத்தில் இந்திய மக்கள் எல்லாம் 2.00 மணிக்கு மோன நிலையில் கனவு கண்டு கொண்டுள்ளார்கள்.
காலையில் நான் பெட்டியக்கட்டி தயாராகி அலுவலுக்கு வந்து அலுவல்களையும் பார்த்துவிட்டு அங்கே இங்கென்னு சில பின்னூட்டங்களையும் போட்டு விட்டு பதிவிடலாமுன்னு பார்த்தா அந்த நேரம் பார்த்து இந்தியப் பதிவர்கள் சாப்பாட்டு மூட்டைகளைத் தேடி ஓடி விடுகிறார்கள். சரி திரும்ப வரட்டும் வந்து பதிவினைப் படிப்பார்களென்று பார்த்தால் வந்தவுடன் உண்ட மயக்கத்தில் தூங்கிவிடுகிறார்களோ அல்லது இருக்குற ஆணிகளைப் புடுங்கி விட்டு மிச்சம் மீதி இருந்தா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமிங்கிற நினைப்புலயும் அல்லது ரஸ் நேரத்து டிராபிக்குக்கு முன்னால வீட்டுக்குப் போயிடணுமிங்கிற அக்கரையில பறந்து போயிடறாங்களோன்னும் தெரியல.அதுதான் அப்படின்னா பக்கத்து வீட்டு அமீரகத்து மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.குவைத் நேரத்துக்கும் ஒரு மணி முன்னால அவங்க பொட்டிய மூட்டை கட்டுற நேரமும்.
பதிவு தமிழ்மணத்துக்கு வரும்போது எனது பொட்டிக்கடை காத்து வாங்குது.ஒரு நாள் இப்படித்தான் தருமி அய்யாவும் அவருக்குப் புடிச்ச சிவாஜிகணேசன் பதிவப் போட்டுவிட்டு கடையத் திறந்து வெச்சுகிட்டு காத்துகிட்டு இருக்காரு.ஒருத்தருமே வரல.நாந்தான் அவருக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு ரெண்டு பின்னூட்டமிட்டேன்.கவலைப்படாதீங்க ஹிட் ஏறுமுன்னு சொல்லிப்புட்டு வீட்டுக்குப் போயிட்டேனுங்க.வீட்டுக்குப் போனப்புறம் ஏதாவது மீனு மாட்டியிருக்குதான்னு பார்த்தா நமக்கு ஒண்ணுமேயில்ல,தருமி அய்யாவுக்கு மட்டும் நம்பர் எட்டாகியிருக்குது.
அதனால வருத்தப்பட்டு தமிழ்மணத்துக்கு ஒரு பிராது சீட்டு அனுப்புறேனுங்க.இந்த சீக்கிரமாவும் வேக வேகமாவும் ஓடுற நடுப்புறத்தில எனது பதிவப் போடாம இந்த சூடான இடுகைகள் இடது புறத்தில போடாட்டியும் பரவாயில்ல அந்த வலதுபுறத்துல கொஞ்சம் ஆமை வேகத்துல நகருகிறப் பக்கமா எனது பதிவுகளை இடனுமின்னு வேண்டிக்கிறேன்.
நேற்று நான் கேட்காமலேயே இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஓர் பார்வை ங்கிறத மீள்பதிவாக்கினதுக்கு நன்றிங்க.வணக்கம்.
இரண்டாவதாக நேற்று சி.வி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லலாமென்று குவைத் நேரப்படி இரவு 12.30 மணிக்கு பெட்டியத் திறந்து வச்சிகிட்டு படம் போட்டுகிட்டு இருந்த போதுதான் தெரியுது அமெரிக்க பதிவு மக்களும் நியுசி துளசி மேடமும் அந்த நேரங்களில்தான் பட்டையக் கிளப்பி பதிவு ஆட்டங்களை அடிச்சு ஆடிகிட்டு இருக்காங்கன்னு.அந்த நேரத்தில் பதிவிடுவதென்பது இயலாத ஒன்று. நான் தூங்கும் நேரமோ இரவு 11.30 மணி.அந்த நேரத்தில் இந்திய மக்கள் எல்லாம் 2.00 மணிக்கு மோன நிலையில் கனவு கண்டு கொண்டுள்ளார்கள்.
காலையில் நான் பெட்டியக்கட்டி தயாராகி அலுவலுக்கு வந்து அலுவல்களையும் பார்த்துவிட்டு அங்கே இங்கென்னு சில பின்னூட்டங்களையும் போட்டு விட்டு பதிவிடலாமுன்னு பார்த்தா அந்த நேரம் பார்த்து இந்தியப் பதிவர்கள் சாப்பாட்டு மூட்டைகளைத் தேடி ஓடி விடுகிறார்கள். சரி திரும்ப வரட்டும் வந்து பதிவினைப் படிப்பார்களென்று பார்த்தால் வந்தவுடன் உண்ட மயக்கத்தில் தூங்கிவிடுகிறார்களோ அல்லது இருக்குற ஆணிகளைப் புடுங்கி விட்டு மிச்சம் மீதி இருந்தா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமிங்கிற நினைப்புலயும் அல்லது ரஸ் நேரத்து டிராபிக்குக்கு முன்னால வீட்டுக்குப் போயிடணுமிங்கிற அக்கரையில பறந்து போயிடறாங்களோன்னும் தெரியல.அதுதான் அப்படின்னா பக்கத்து வீட்டு அமீரகத்து மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.குவைத் நேரத்துக்கும் ஒரு மணி முன்னால அவங்க பொட்டிய மூட்டை கட்டுற நேரமும்.
பதிவு தமிழ்மணத்துக்கு வரும்போது எனது பொட்டிக்கடை காத்து வாங்குது.ஒரு நாள் இப்படித்தான் தருமி அய்யாவும் அவருக்குப் புடிச்ச சிவாஜிகணேசன் பதிவப் போட்டுவிட்டு கடையத் திறந்து வெச்சுகிட்டு காத்துகிட்டு இருக்காரு.ஒருத்தருமே வரல.நாந்தான் அவருக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு ரெண்டு பின்னூட்டமிட்டேன்.கவலைப்படாதீங்க ஹிட் ஏறுமுன்னு சொல்லிப்புட்டு வீட்டுக்குப் போயிட்டேனுங்க.வீட்டுக்குப் போனப்புறம் ஏதாவது மீனு மாட்டியிருக்குதான்னு பார்த்தா நமக்கு ஒண்ணுமேயில்ல,தருமி அய்யாவுக்கு மட்டும் நம்பர் எட்டாகியிருக்குது.
அதனால வருத்தப்பட்டு தமிழ்மணத்துக்கு ஒரு பிராது சீட்டு அனுப்புறேனுங்க.இந்த சீக்கிரமாவும் வேக வேகமாவும் ஓடுற நடுப்புறத்தில எனது பதிவப் போடாம இந்த சூடான இடுகைகள் இடது புறத்தில போடாட்டியும் பரவாயில்ல அந்த வலதுபுறத்துல கொஞ்சம் ஆமை வேகத்துல நகருகிறப் பக்கமா எனது பதிவுகளை இடனுமின்னு வேண்டிக்கிறேன்.
நேற்று நான் கேட்காமலேயே இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஓர் பார்வை ங்கிறத மீள்பதிவாக்கினதுக்கு நன்றிங்க.வணக்கம்.
Wednesday, July 23, 2008
Subscribe to:
Posts (Atom)
