முந்தைய பதிவான ஐ.நா வை பதிவேற்றம் செய்து விட்டு பிலாபில் எனும் அரபி வடைக்குள் பண் அமுக்குன உணவும் பக்கத்திலிருந்த பக்காலா எனப்படும் நம்மூர் பொட்டிக்கடையில் ஐஸ் கிரிமும் ஒரு ஆரஞ்சும் வாங்கினேன்.
இறுதியாக ஆரஞ்சை உரித்தால் அது genetically modified எனப்படும் மரபு வழி மாற்றம் செய்யப்பட்ட பழம்.மரபு வழி மாற்றம் செய்யப் பட்ட உணவிற்கும் ,விவசாயத்திற்கும் உலகம் முழுதும் எதிர்ப்பு கிளம்புகிறது.காரணம் விதை தானியத்திற்கு அதற்கு உரிமம் உள்ளவர்களிடமே கையேந்த வேண்டி வருவதும்,விவசாயம் சில சமயங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுடன் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை என்பதும்.சில தினங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் விவசாயி ஒருவர் மாட்டுச்சாணம்,மூத்திரம் மற்றும் நீருடன் கலந்தவற்றையே இயற்கை உரமாக இடுவதும் அதனால் அவரது செலவினங்கள் குறைவானது என்பதும்.
மாட்டுச்சாணம் பற்றி கூறும்போது கோவை நினைவு ஒன்று வருகிறது.வழியில் நான் பாட்டுக்கு போயிட்டுருந்தவனை மாட்டுப் பக்கம் நின்றிருந்த சுமார் ஒரு 18 வயதுப்பெண் கூப்பிட்டு "கொஞ்சம் கோமியம் எடுத்து தாரேளா" என்றாள்.எனக்கு கோமியம் என்றால் என்ன என்று திரு திரு. மேலும் பெண் பேசுவதால் கூச்சமும் கோமியம் என்றால் சாணமா மூத்திரமா என்றும் அந்தப் பெண்ணிடமும் கேட்க கூச்சம்.அதற்கும் மேலும் மாட்டுப் பக்கம் போக பயம்.துணிந்து மாட்டுப் பக்கம் நகர்ந்தால் மாடு இடதும் வலதுமாக இரண்டு சிலுப்பு சிலுத்துச்சு.எனக்கு மாட்டுப் பக்கம் போக பயமுங்கன்னு சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்.பின் நாட்களில் அடிச்சு பிடிச்சு சரியான பெயர் தெரிந்த போது எனது அசட்டுத்தனம் புரிந்தது.
இனி மீண்டும் மரபு வழி மாற்றத்துக்கு தாவல்.ஆரஞ்சுப் பழத்தை உரித்தேனா.தோல் எளிதாக பிய்த்துக் கொண்டு வந்தது.முன்பெல்லாம் ஆரஞ்சென்றால் கடித்து சாப்பிடுவதாயிருந்தாலும் பழரசமாக சாப்பிடுவதென்றாலும் ஒரே ஆரஞ்சுதான்.ஆனால் இப்பொழுது பழரசத்திற்கென்று ஒரு வகையும் சாப்பிடுவதற்கென்று ஒரு வகையும் வந்து விட்டது.அப்படி சாப்பிடும் வகை ஆரஞ்சை உரித்தால் தோல் சிரமப்படாமல் தனியாக வந்தது.பழத்தை உரித்தால் அதில் ஒரு விதை கூட இல்லாமல் சாப்பிடுவதற்கு சுவையாக இனிப்பாகவும் விதைகளை துப்பும் சிரமம் இல்லாமல் இருந்தது.
விவசாயிகளின் பார்வையில் பழங்களின் போகம் கூடுதலாகவும் அதே சமயத்தில் சுய சார்பில்லாமலும் பல் காரணங்களால் இழப்புகளின் பாதிப்புக்கள் அதிகம்.நுகர்வோர் தரப்பில் பார்த்தால் பழம் ருசி.நோகாமல் பழம் சாப்பிடலாம்.
Followers
Tuesday, February 10, 2009
ஐ.நா
பி.பி.சி யில் ஞாயிறன்று Inteligence எனும் நிகழ்ச்சியில் ஐ.நா சபை உருப்படுமா அல்லது உருப்படாதா எனும் பொருளில் அதாவது whether U.N is paralized or it can look forward எனும் பொருளில் நம்மூர் பட்டி மன்றம் மாதிரி மூணு மூணு பேரா பிரிச்சி பேச வைத்தார்கள்.பேசியவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாய் போலந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர், ஐ.நா செயலர் பதவிக்கு போட்டி போட்ட இந்தியர் சசி தரூர் (ஆங்கில உச்சரிப்பு செம அழகு. இப்போதைய ஐ.நா செயலர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க வேண்டிய மனுசன்) மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆலொசகர்,பிரிட்டன் சார்பாக சர்.ஜெரிமி கிரின்ஸ்டாக் உட்பட.நேற்றைய விவாதத்தின் ஒரு நகைச்சுவையாக தேசங்கள் ஏன் வெள்ளாடுகளாகவும்,செம்மறியாடுகளாகவும் பிரிக்கப்படுகிறார்கள் என்பது.
நம்மூர் பட்டி மன்றத்துக்கும் இந்த விவாதத்திற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் சாலமன் பாப்பையா போன்ற நடுவர்கள் சொல்லும் தீர்ப்புக்கு பதிலாக அரங்கத்தில் வந்தவர்களிடம் ஓட்டுக்கு விட்டு விடுகிறார்கள்.கூடவே அரங்கில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தப்பாகவோ சரியாகவோ மேடையில் உட்கார்ந்திருப்பவர்கள் பதில் சொல்வது.(தண்ணி காட்டுற கேள்வியா யாராவது கேட்டு விட்டால் பதில் சொல்லி விட்டு தண்ணி ஒரு மொடக் குடித்து விடுவது.)இப்படியாக நகர்கிறது விவாதம்.
ஐ.நா போன்ற ஒரு நல்ல அமைப்பு எப்படி இவ்வளவு மோசமாக இயங்கும் என்ற கோபமும் எரிச்சலும் பல நாட்கள் மனசுக்குள் உண்டு.பதிவுப் பக்கம் வந்தப்பறம் அதனை இங்கேயாவது கொட்டி ஆசுவாசப் படுத்திக்கிறேன்.நிரந்தர செக்யூரிட்டி கவுன்சில் மெம்பர்களான அமெரிக்கா,ரஷ்யா,பிரிட்டன்,பிரான்ஸ் நாடுகள் உலக நலன்களை தங்களது நலன்களுக்கு உகந்ததும் தமது ஆளுமைக்குட்பட்ட கோட்பாடுகளுக்கு சரிப்பட்டு வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.
வீட்டோ எனும் அந்தஸ்தைக் கொண்டு 4 பேர் சரியென்றாலும் ஒருவர் வீட்டோ அதிகாரத்தால் தீர்வின் திசையை மாற்றியமைத்து விட முடியும்.உதாரணமாக இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினையில் அமெரிக்கா தவிர 4 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அமெரிக்கா வீட்டோ செய்து விடும்.
ஆப்பிரிக்க மக்கள் பசியால் வாடியும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அடித்துக் கொண்டு செத்தாலும் பெயருக்கு ஒரு படையை அனுப்பி வைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது அமெரிக்கா மற்றொரு நாட்டுடன் போரிடுவதற்கான அனுமதியை ஐ.நா மூலமாக உருவாக்கும்.யூகோஸ்லாவியா பிரிந்து போனதும் செர்பிய அல்பேனிய போர்களை நேட்டோ படைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது பாராட்டத் தக்கதாகும்.ருவாண்டாப் படுகொலைகளில் தலையிட்டு தற்காலிக அமைதிக்கு வழிவகுத்தது.
இப்படி சில காரியங்களில் ஈடுபட்டாலும் ஐ.நா என்ற அமைப்பின் அஸ்திவாரம் தகர்ந்து போகும்படியாக premptive strike என்ற முதலடி நான் தான் கொடுப்பேன் என்ற புதிய கோட்பாட்டை முந்தைய (அதுக்குள்ளவா?)2009 ஜனவரி மாதம் வரையிலான ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஐ.நாவின் அமைப்பையே ஆட்டம் காணச் செய்து விட்டார் ஆப்கானிஸ்தான்,ஈராக் போர்களின் மூலமாக.ஈராக்,ஆப்கானிஸ்தான் போர்கள் இரு வேறுபட்ட, மாறுபட்ட நிலைகளிலிருந்து அலசவேண்டியது அவசியமாகிறது.
சென்ற மாத இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினை பல அழுத்தங்கள்,நிர்பந்தங்கள் காரணமாக குண்டு வீச்சு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இப்படி பல பரிமாணங்களைக் கொண்ட ஐ.நாவின் இயங்கும் முறை முற்றிலும் திருப்திகரமாகவும்,அனைத்து நாடுகளின் நலன்களையும் சார்ந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு நாட்டின் இறையாண்மை கெடக்கூடாது என்றும் தனி ஈழம் பிறப்பது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்று வாதாடுபவர்கள் இந்தோநேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்தது அந்த நாட்டின் இறையாண்மையைக் குறைத்ததா? இல்லை.காரணம் மக்களின் விருப்பமாக கிழக்கு தைமூர் மக்கள் எந்தவொரு நாட்டின் தலையீடும் நிர்பந்தமும் இல்லாமல் பிரிந்து போக விரும்பினார்கள்.அதற்கு ஐ.நா உதவியது.தைமூர் இனத்தின் பழைய வரலாற்றையும் படையெடுப்புக்களையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்த நிலையில் சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூரின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹொர்டா இலங்கை ஈழ எதிர்கால வாழ்வுக்கு உதவுவதாக கூறியுள்ளார்.சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மெக்ஸிகோ ஐ.நா வில் இலங்கை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளது.ஆனால் ரஷ்யா நிகழ்ச்சி நிரலில் இது குறிப்பிடப் படவில்லை என மறுப்பு தெரிவிக்கிறது.
இந்த மறுப்பை மேலே குறிப்பிட்ட விவாதத்தின் ஒரு பகுதியாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.அதாவது ஒரு முக்கியப் பிரச்சினையில் அனைத்து நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒரு நாடு ஆம் என்றால் மற்றொரு நாடு இல்லை எனக் குரல் எழுப்புவதும் ஐ.நா வின் நன் முறையில் செயல்பட இயலாமைக்குக் காரணங்கள் என்ற விவாதம் எழுந்தது.
இந்த நிலையில் ஐ.நா சபை சரி வர இயங்காமலும் ஒப்புக்கு சப்பாணியாக தற்போதைய ஐ.நா செயலாளர் இருப்பதும்,நிரந்தர நாற்காலி நாயகர்கள் 5 பேரும்
எந்த அளவுக்கு இலங்கை ஈழப் பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்பதும் கேள்விக்குரியது.இருந்தும் தற்போதைய சூழலில் உலக நாடுகள் ஐ.நா வினை ஓரளவுக்காவது நம்பியே தீர வேண்டிய நிலையில் உள்ளது.மாற்றங்கள் என்ற கோசத்துடன் வீற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதிஐ.நா பற்றியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மாற்று இனத்தின் ஜனாதிபதி என்ற பெயர் மட்டுமல்லாது உலக வரலாற்றிலும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.செய்வாரா?
சொல்ல மறந்து விட்டேனே! ஐ.நா வின் செயல்பாட்டில் திருப்தி பட்டுக் கொண்டவர்கள் 327 ஓட்டும் மாற்றங்கள் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 500 பேரும்.
நம்மூர் பட்டி மன்றத்துக்கும் இந்த விவாதத்திற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் சாலமன் பாப்பையா போன்ற நடுவர்கள் சொல்லும் தீர்ப்புக்கு பதிலாக அரங்கத்தில் வந்தவர்களிடம் ஓட்டுக்கு விட்டு விடுகிறார்கள்.கூடவே அரங்கில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தப்பாகவோ சரியாகவோ மேடையில் உட்கார்ந்திருப்பவர்கள் பதில் சொல்வது.(தண்ணி காட்டுற கேள்வியா யாராவது கேட்டு விட்டால் பதில் சொல்லி விட்டு தண்ணி ஒரு மொடக் குடித்து விடுவது.)இப்படியாக நகர்கிறது விவாதம்.
ஐ.நா போன்ற ஒரு நல்ல அமைப்பு எப்படி இவ்வளவு மோசமாக இயங்கும் என்ற கோபமும் எரிச்சலும் பல நாட்கள் மனசுக்குள் உண்டு.பதிவுப் பக்கம் வந்தப்பறம் அதனை இங்கேயாவது கொட்டி ஆசுவாசப் படுத்திக்கிறேன்.நிரந்தர செக்யூரிட்டி கவுன்சில் மெம்பர்களான அமெரிக்கா,ரஷ்யா,பிரிட்டன்,பிரான்ஸ் நாடுகள் உலக நலன்களை தங்களது நலன்களுக்கு உகந்ததும் தமது ஆளுமைக்குட்பட்ட கோட்பாடுகளுக்கு சரிப்பட்டு வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.
வீட்டோ எனும் அந்தஸ்தைக் கொண்டு 4 பேர் சரியென்றாலும் ஒருவர் வீட்டோ அதிகாரத்தால் தீர்வின் திசையை மாற்றியமைத்து விட முடியும்.உதாரணமாக இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினையில் அமெரிக்கா தவிர 4 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால் அமெரிக்கா வீட்டோ செய்து விடும்.
ஆப்பிரிக்க மக்கள் பசியால் வாடியும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அடித்துக் கொண்டு செத்தாலும் பெயருக்கு ஒரு படையை அனுப்பி வைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அல்லது அமெரிக்கா மற்றொரு நாட்டுடன் போரிடுவதற்கான அனுமதியை ஐ.நா மூலமாக உருவாக்கும்.யூகோஸ்லாவியா பிரிந்து போனதும் செர்பிய அல்பேனிய போர்களை நேட்டோ படைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது பாராட்டத் தக்கதாகும்.ருவாண்டாப் படுகொலைகளில் தலையிட்டு தற்காலிக அமைதிக்கு வழிவகுத்தது.
இப்படி சில காரியங்களில் ஈடுபட்டாலும் ஐ.நா என்ற அமைப்பின் அஸ்திவாரம் தகர்ந்து போகும்படியாக premptive strike என்ற முதலடி நான் தான் கொடுப்பேன் என்ற புதிய கோட்பாட்டை முந்தைய (அதுக்குள்ளவா?)2009 ஜனவரி மாதம் வரையிலான ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஐ.நாவின் அமைப்பையே ஆட்டம் காணச் செய்து விட்டார் ஆப்கானிஸ்தான்,ஈராக் போர்களின் மூலமாக.ஈராக்,ஆப்கானிஸ்தான் போர்கள் இரு வேறுபட்ட, மாறுபட்ட நிலைகளிலிருந்து அலசவேண்டியது அவசியமாகிறது.
சென்ற மாத இஸ்ரேல்,பாலஸ்தீனியப் பிரச்சினை பல அழுத்தங்கள்,நிர்பந்தங்கள் காரணமாக குண்டு வீச்சு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இப்படி பல பரிமாணங்களைக் கொண்ட ஐ.நாவின் இயங்கும் முறை முற்றிலும் திருப்திகரமாகவும்,அனைத்து நாடுகளின் நலன்களையும் சார்ந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ஒரு நாட்டின் இறையாண்மை கெடக்கூடாது என்றும் தனி ஈழம் பிறப்பது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகும் என்று வாதாடுபவர்கள் இந்தோநேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்தது அந்த நாட்டின் இறையாண்மையைக் குறைத்ததா? இல்லை.காரணம் மக்களின் விருப்பமாக கிழக்கு தைமூர் மக்கள் எந்தவொரு நாட்டின் தலையீடும் நிர்பந்தமும் இல்லாமல் பிரிந்து போக விரும்பினார்கள்.அதற்கு ஐ.நா உதவியது.தைமூர் இனத்தின் பழைய வரலாற்றையும் படையெடுப்புக்களையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்த நிலையில் சுதந்திரம் பெற்ற கிழக்கு தைமூரின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹொர்டா இலங்கை ஈழ எதிர்கால வாழ்வுக்கு உதவுவதாக கூறியுள்ளார்.சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மெக்ஸிகோ ஐ.நா வில் இலங்கை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளது.ஆனால் ரஷ்யா நிகழ்ச்சி நிரலில் இது குறிப்பிடப் படவில்லை என மறுப்பு தெரிவிக்கிறது.
இந்த மறுப்பை மேலே குறிப்பிட்ட விவாதத்தின் ஒரு பகுதியாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.அதாவது ஒரு முக்கியப் பிரச்சினையில் அனைத்து நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதில்லை. ஒரு நாடு ஆம் என்றால் மற்றொரு நாடு இல்லை எனக் குரல் எழுப்புவதும் ஐ.நா வின் நன் முறையில் செயல்பட இயலாமைக்குக் காரணங்கள் என்ற விவாதம் எழுந்தது.
இந்த நிலையில் ஐ.நா சபை சரி வர இயங்காமலும் ஒப்புக்கு சப்பாணியாக தற்போதைய ஐ.நா செயலாளர் இருப்பதும்,நிரந்தர நாற்காலி நாயகர்கள் 5 பேரும்
எந்த அளவுக்கு இலங்கை ஈழப் பிரச்சினையை தீர்த்து வைப்பார்கள் என்பதும் கேள்விக்குரியது.இருந்தும் தற்போதைய சூழலில் உலக நாடுகள் ஐ.நா வினை ஓரளவுக்காவது நம்பியே தீர வேண்டிய நிலையில் உள்ளது.மாற்றங்கள் என்ற கோசத்துடன் வீற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதிஐ.நா பற்றியும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மாற்று இனத்தின் ஜனாதிபதி என்ற பெயர் மட்டுமல்லாது உலக வரலாற்றிலும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.செய்வாரா?
சொல்ல மறந்து விட்டேனே! ஐ.நா வின் செயல்பாட்டில் திருப்தி பட்டுக் கொண்டவர்கள் 327 ஓட்டும் மாற்றங்கள் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 500 பேரும்.
Saturday, February 7, 2009
அஞ்சரை மணிக்கு சும்மாயில்ல
அஞ்சு மணிக்கு சும்மா சும்மா!ஆறு மணிக்கு சும்மா சும்மா.சும்மா சும்மா சும்மா சும்மா.ஆனால் அஞ்சரை மணிக்கு சும்மாயில்லன்னு
சமீபத்தில் தண்ணி குடித்த அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒரு கம்பிவட பயில்வானின் துணையால் மீண்டும் தரைக்கு தலைமுடியப் பிடிச்சு இழுத்து வந்து வயித்திலிருந்த தண்ணியெல்லாம் வெளியே கக்குன்னு சொல்லி உப்புத் தண்ணியெல்லாம் வெளியேற்றி பார்ஜ் எனும் எடை தூக்கில உட்கார வச்சு முதல் உதவியெல்லாம் முடிஞ்சு மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டது. 5.22 மாலை துவங்கிய நீச்சலும் முங்கலும் நோயாளியை மருத்துவ மனைக்கு அனுப்பும் போது காலை 1.33.
Operation Success but patient dead ங்கிறது இதுதான் போலும்.
முன்பு படித்தது சுஜாதா என்று நினைவு.அதாவது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பல வித மனிதர்கள் பல நிகழ்வுகளில் தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது அவர்களையும் அறியாமல் சில நிகழ்வுகள் நிகழ்கிறதென்று. அப்படி இந்த விமானத்தை இழுப்பதற்காக பார்ஜ் போகிற மாலை 5.22 லிருந்து காலை 1.33 வரைக்கும் உள்ள கால இடைவெளியில் நிகழ்பவைகளாக என்னவெல்லாம் இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.பார்ஜ் நகரும் முதல் பட நேரமான மாலை 5.22க்கு மக்கள் அலுவலகம் விட்டு அரக்கப் பறக்க வீடு நோக்கி ஓடுவது. 5.45க்கு மாமு என்ன டாஸ்மார்க் போகலாமான்னு நண்பரிடம் கேட்பது இப்படி படங்களின் நேரங்களில் என்னவெல்லாமோ நிகழலாம் என்பது.
பதிவு போட்டுகிட்டிருக்கும் போது பி.ஜே.பி ராமர் கோயில் கட்டுவோம் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்துடுச்சாம்.அவன் தெரியாம விழுந்ததை இழுத்துகிட்டு வர முயற்சி செய்கிறான்.இவன் இருப்பதையும் இடித்துவிட்டு இன்னொன்னு குட்டுவேன் என்கிறான்.ராம் சேனா வேண்டும் ராமர் பாலம் வேண்டாம்.நாடு விளங்கிடும்.
தாடி வெச்சிருந்தா மட்டும் தலிபான் இல்ல!காவி கட்டினாலும் தலிபானே.
நிறுத்திக் கொள்கிறேன் என்னமோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போகிறேன்.
சமீபத்தில் தண்ணி குடித்த அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒரு கம்பிவட பயில்வானின் துணையால் மீண்டும் தரைக்கு தலைமுடியப் பிடிச்சு இழுத்து வந்து வயித்திலிருந்த தண்ணியெல்லாம் வெளியே கக்குன்னு சொல்லி உப்புத் தண்ணியெல்லாம் வெளியேற்றி பார்ஜ் எனும் எடை தூக்கில உட்கார வச்சு முதல் உதவியெல்லாம் முடிஞ்சு மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டது. 5.22 மாலை துவங்கிய நீச்சலும் முங்கலும் நோயாளியை மருத்துவ மனைக்கு அனுப்பும் போது காலை 1.33.
Operation Success but patient dead ங்கிறது இதுதான் போலும்.
முன்பு படித்தது சுஜாதா என்று நினைவு.அதாவது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பல வித மனிதர்கள் பல நிகழ்வுகளில் தங்களை உட்படுத்திக்கொள்கிறார்கள் அல்லது அவர்களையும் அறியாமல் சில நிகழ்வுகள் நிகழ்கிறதென்று. அப்படி இந்த விமானத்தை இழுப்பதற்காக பார்ஜ் போகிற மாலை 5.22 லிருந்து காலை 1.33 வரைக்கும் உள்ள கால இடைவெளியில் நிகழ்பவைகளாக என்னவெல்லாம் இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.பார்ஜ் நகரும் முதல் பட நேரமான மாலை 5.22க்கு மக்கள் அலுவலகம் விட்டு அரக்கப் பறக்க வீடு நோக்கி ஓடுவது. 5.45க்கு மாமு என்ன டாஸ்மார்க் போகலாமான்னு நண்பரிடம் கேட்பது இப்படி படங்களின் நேரங்களில் என்னவெல்லாமோ நிகழலாம் என்பது.பதிவு போட்டுகிட்டிருக்கும் போது பி.ஜே.பி ராமர் கோயில் கட்டுவோம் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்துடுச்சாம்.அவன் தெரியாம விழுந்ததை இழுத்துகிட்டு வர முயற்சி செய்கிறான்.இவன் இருப்பதையும் இடித்துவிட்டு இன்னொன்னு குட்டுவேன் என்கிறான்.ராம் சேனா வேண்டும் ராமர் பாலம் வேண்டாம்.நாடு விளங்கிடும்.
தாடி வெச்சிருந்தா மட்டும் தலிபான் இல்ல!காவி கட்டினாலும் தலிபானே.
நிறுத்திக் கொள்கிறேன் என்னமோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போகிறேன்.
Friday, February 6, 2009
காதலர் தினத்துக்கு ஒரு படம்
பதிவர் கிரி காதலர் தினம் பதிவப் படிச்சதும் ஒரே பேஜாராயிடுச்சு ( பழம!பேஜாரக்கு வேற ஏதாவது துணை வார்த்தை இருக்கா?)
ராம் சேனான்னு எங்கிருந்து திடீர்ன்னு வந்தானுங்க?விலங்கினம் கூட அன்பு காட்டுகிறது ராம் சேனா நண்பர்களே.இந்திய பாரம்பரியம் சொல்வதற்கும் காப்பதற்கும் ஆயிரமாயிரம் விசயங்கள் தெரு முழுதும் சிந்திக்கிடக்கின்றன.கண்டுபிடியுங்கள்.உலகத்திற்கு சொல்லுங்கள்.
காதலிக்கும் மச்சி,மச்சினிச்சிகளா!கவலையே படாதீங்க.வருசம் முழுக்கா காதலிச்ச அனுபவத்துல கைவசம் நெறைய ஐடியா இருக்குது.அதுல ஒண்ணு இங்கே எடுத்து விடறேன். ஒரு கவிதையும் எழுதி காதலர் தினத்தை மாமுக எரியற மாதிரி கொண்டாடுங்க.

Friendship and Love defined in a single photo.
படம் உதவிக்கு நன்றி ராம்பாபு.
ராம் சேனான்னு எங்கிருந்து திடீர்ன்னு வந்தானுங்க?விலங்கினம் கூட அன்பு காட்டுகிறது ராம் சேனா நண்பர்களே.இந்திய பாரம்பரியம் சொல்வதற்கும் காப்பதற்கும் ஆயிரமாயிரம் விசயங்கள் தெரு முழுதும் சிந்திக்கிடக்கின்றன.கண்டுபிடியுங்கள்.உலகத்திற்கு சொல்லுங்கள்.
காதலிக்கும் மச்சி,மச்சினிச்சிகளா!கவலையே படாதீங்க.வருசம் முழுக்கா காதலிச்ச அனுபவத்துல கைவசம் நெறைய ஐடியா இருக்குது.அதுல ஒண்ணு இங்கே எடுத்து விடறேன். ஒரு கவிதையும் எழுதி காதலர் தினத்தை மாமுக எரியற மாதிரி கொண்டாடுங்க.

Friendship and Love defined in a single photo.
படம் உதவிக்கு நன்றி ராம்பாபு.
Thursday, February 5, 2009
விடுதலைப் புலிகளுக்கு ஓர் வேண்டுகோள்
ஒரு பயலும் உதவிக்கு வராமல் இருப்பவனும் காட்டிக்கொடுக்கும் தமிழனுக்கே உள்ள சாபக்கேட்டில் இருக்கும் வீரம் உதவிக்கு வராது.பழங்கதை அபிமன்யு மாதிரி எல்லாப் பயலும் வியூகம் அமைத்து வலை விரிக்கிறார்கள்.வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது.(யாரைய்யா சொன்னது?தெரிந்தவர்கள் ஞாபகப் படுத்துங்களேன்)
உங்களது வீரத்தை இன்னும் எவனுக்கும் பறைசாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை.தமிழன் இருக்கும் வரை உங்களது வீரம் நீங்கள் வீழ்ந்தாலும் தமிழ்மண் சொல்லும் .களத்து நிலைமைகள் உங்களையன்றி யாரும் அறியார்.உங்களால் இலங்கை ராணுவத்தை வெல்லும் சாத்தியம் இருந்தால் களத்தில் நில்லுங்கள்.இல்லையென்றால் தமிழகமும்,உலகத்தமிழர்களும் தரும் தார்மீக ஆதரவோடு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்.
மழைக்காக காத்திருக்கிறோம்,திரும்பி போகமாட்டான் போன்ற அறிக்கைகள் எல்லாம் பொய்ப்பித்துப் போகும்படியாக இலங்கை ராணுவம் பலத்துடன் இருப்பது தென்படுகிறது.கிளிநொச்சியை விட்டதால் நோகாமல் நொங்கு தின்கிறான் இலங்கை ராணுவம்.அதிசயம் என்று ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய வெற்றித் திமிரில் மிதக்கும் இலங்கை அரசை தற்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாத காலச்சூழல்கள்.அமெரிக்கா காரங்கிட்ட முன்னமேயே திரிகோணமலை பூச்சாண்டி காட்டியிருந்தால் கூட தப்பில்லைன்னு மனசு தப்புத் தாளம் போட வச்சுட்டானுக படுபாவிக.நிகழாததை இப்படியாகியிருந்தால் நல்லாயிருக்குமே என நினைப்பதில் அர்த்தம் இல்லை.நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று.இத்தனை அவலங்கள்,இழப்புக்களுக்கும் அப்பாலும் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராயுங்கள்
முடியலை ஐயா! கண்ணீர் வருகிறது.குழந்தைகள் குழிகளுக்குள் அலறுவதும்,கட்டிட இடிபாடுகளுக்குள் மனிதன் அலறுவதும்,வயதான பாட்டியின் கூக்குரலும்,ஆஸ்பத்திரி குண்டு வீச்சுக்களும்.
உங்களது வீரத்தை இன்னும் எவனுக்கும் பறைசாற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை.தமிழன் இருக்கும் வரை உங்களது வீரம் நீங்கள் வீழ்ந்தாலும் தமிழ்மண் சொல்லும் .களத்து நிலைமைகள் உங்களையன்றி யாரும் அறியார்.உங்களால் இலங்கை ராணுவத்தை வெல்லும் சாத்தியம் இருந்தால் களத்தில் நில்லுங்கள்.இல்லையென்றால் தமிழகமும்,உலகத்தமிழர்களும் தரும் தார்மீக ஆதரவோடு பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்.
மழைக்காக காத்திருக்கிறோம்,திரும்பி போகமாட்டான் போன்ற அறிக்கைகள் எல்லாம் பொய்ப்பித்துப் போகும்படியாக இலங்கை ராணுவம் பலத்துடன் இருப்பது தென்படுகிறது.கிளிநொச்சியை விட்டதால் நோகாமல் நொங்கு தின்கிறான் இலங்கை ராணுவம்.அதிசயம் என்று ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் ஒழிய வெற்றித் திமிரில் மிதக்கும் இலங்கை அரசை தற்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாத காலச்சூழல்கள்.அமெரிக்கா காரங்கிட்ட முன்னமேயே திரிகோணமலை பூச்சாண்டி காட்டியிருந்தால் கூட தப்பில்லைன்னு மனசு தப்புத் தாளம் போட வச்சுட்டானுக படுபாவிக.நிகழாததை இப்படியாகியிருந்தால் நல்லாயிருக்குமே என நினைப்பதில் அர்த்தம் இல்லை.நடைமுறை யதார்த்தங்கள் மட்டுமே தற்போது ஆராயவேண்டிய ஒன்று.இத்தனை அவலங்கள்,இழப்புக்களுக்கும் அப்பாலும் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராயுங்கள்
முடியலை ஐயா! கண்ணீர் வருகிறது.குழந்தைகள் குழிகளுக்குள் அலறுவதும்,கட்டிட இடிபாடுகளுக்குள் மனிதன் அலறுவதும்,வயதான பாட்டியின் கூக்குரலும்,ஆஸ்பத்திரி குண்டு வீச்சுக்களும்.
Subscribe to:
Posts (Atom)