Followers

Friday, April 16, 2010

லீனா மணிமேகலை

ஹுசைனின் ஓவியம் பற்றிய ஒட்டிய விவாதங்களூம்,அவருக்கு எதிரான எதிர்வினைகளுக்கான இடுகைகளும்,பின்னூட்டங்களும் எனக்கு ஒரு புரிதலை தந்தது.அதாவது கருத்து விவாதம் என்பதை விட பொருளின் கரு யாரால் சொல்லப்படுகிறதென்பதே முன்னிறுத்தப் படுகிறது.

என்னை மாதிரி நோஞ்சான் பதிவராக இருந்தால் ஒரு பார்வையிட்டு விட்டு ஒதுங்கிப் போகும் மனப்பான்மையோ,பிள்ளைப் பூச்சியையெல்லாம் அடிப்பதா என்ற பரிதாபம் கொண்டோ,நமக்கு நிகரான கருத்துவாதியா என்றோ,மூக்குல ரோசம் வர்றமாதிரி எழுத மாட்டேன்கிறானே என்று அகன்று போவதையும் அவதானித்தேன்.அப்படியும் வந்து விட்டோமே என்று நாகரீக எதிர்வினை மாற்றுக்கருத்து பின்னூட்ட நண்பர்களுக்கும் நன்றி.இதே எதிர்வினைக்காரர்கள் இன்னொரு பிரபல பதிவரின் தளத்திற்கு சென்றால் விவாதத்திற்கான களம் மாறி வார்த்தை சொற்றாடல்கள் மாறிப் போகின்றன.எனவே யார் யார் வாய் எப்பொருள் கேட்பினும் சொல்பவரின் பெயர்ச்சொல் முன் நிற்கும் புதிய மொழியை உணர்ந்து கொண்டேன்.

இப்பொழுது லீனா மணிமேகலை என்ற பெண்ணின் கவிதைகள் விவாதப் பொருளாகியுள்ளது.நிர்வாணம்,உடல் பற்றிய உணர்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் உளவியலாக தனிமனிதனுக்கு ஒரு அதிர்ச்சியை தருகிறது என்ற புரிதலையும் இப்பொழுது ஏற்படுத்துகிறது.ஆனால் தனிமனிதக் கோபங்கள் ஒரு இசத்துக்குள் நுழையும் போது விவாதப் பொருள் ஒரு புதிய வடிவம் பெறுகிறது.

உதாரணம் லீனா மணிமேகலையின் கவிதைக்கு இந்துக்கட்சி என்ற புதுமுக அறிமுகமும்,சித்தாந்தவாதிகளான கம்யூனிஸ்ட்டுகளும் குரல் கொடுப்பது.ஒரே பொருள் இரு விதமாகப் பேசப்படுகிறது.இருவருக்குமான காரண காரியங்களை விளக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லீனா மணிமேகலை குறித்த விமர்சனங்களை கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

ஹுசைன் விசயத்தில் இந்துக்கடவுள்களை கொச்சைப்படுத்தும் ஹுசைன் முகமதுவை அப்படி வரைய துணிவாரா என்ற கேள்விக்கு நிகராக லக்கிலுக் யுவகிருஷ்ணா "கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள்."

கலாட்டாக்கள் செய்தே கட்சி வளர்த்த பரம்பரைக்காரர்கள் அல்லவா நாம்,எனவே அந்த உணர்வுகள் நமத்துப் போகாது என்பதுடன் குறிப்பிட்ட தலைவர்கள் விவாதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட நாம் விரும்பா விட்டாலும் திராவிட இயக்கத்தில் கூடவே பயணித்த கண்ணதாசன் ஏற்கனவே திராவிட தலைவர்களில் சிலரை துவைத்து காயப்போட்டு விட்டார்.

கண்ணதாசன் பற்றிக் குறிப்பிடும் போது அவரது காலத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் கூட விவாதத்திற்குட்படுத்தாமல் திறந்த புத்தகமாக இருந்து போய் விட்டார்.அப்படியும் அவரது கூந்தல் கருப்பு,குங்குமம் சிவப்பு,எலந்தப்பழம் போன்ற பாடல்கள் பொது மேடைகளில் விவாதங்களுக்குட்பட்டதும் அதனையெல்லாம் பின்னால் தள்ளி விட்டு அவரது சினிமா பாடல்களின் கவிதை வரிகளும்,அர்த்தமுள்ள இந்துமதமும் மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு விட்டது.

அண்ணா,கருணாநிதி போன்றவர்களின் துவக்க கால திராவிட இலக்கியங்களும் கூட காலம் கடந்து எடைபோடும் போது நகைப்புக்குரியதாக இருந்த போதிலும் அந்தக்கால கட்டத்தில் சிலரை கோபப்படுத்தியிருக்கும் என்பதையும் கடந்து அவர்களின் பொது முகங்கள் மாறிப் போயிருக்கின்றன.

எரிக்கா யங்க்(Erica Yong) என்ற 1942ம் ஆண்டு பிறந்த ஜெர்மன் யூத பெண் எழுத்தாளரும்,கவிதாயினியும்,1970,80களின் கால கட்டத்து கேரளத்து எழுத்தாளரும்,கவிதாயினிமாகிய கமலாதாஸின் என்னுடைய கதை,அவரது ஓவியத்துக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததும் கூட அந்த அந்த கால கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவங்களுடன் விவாதங்களை ஏற்படுத்தியது.ஆனால் காலங்கள் கடந்து இவர்களின் கவிதைகள் இன்றும் உயிரோடு நிரந்தரமாகி விட்டன.எனவே லீனா மணிமேகலையின் தொடர்ந்த கவிதைகள் மட்டுமே விமர்சனங்களை கடந்தும் நிலைத்து நிற்கும்.

Wednesday, April 14, 2010

காணவில்லை

பதிவர்களே!உங்களுக்கு தெரியுமா?அட உங்களுக்கு தெரியுமா?
பதிவுலக வவ்வாலே!தலகீழா தொங்கினியே

மாறுபட்ட பார்வை வேறுபட்ட கோணமென்றாயே
இப்ப பார்வையோ மாறுகண்ணு,கோணமோ கோணல்

வெளிச்சம்தான் கண்ணுக்கு கேடுன்னா
இருட்டுலதான் ஒரு தடவை கீச்சிட்டுப் போகலாமே

போகனுமின்னு சிலர் வேண்டுவதெல்லாம்
பசை போட்டு உட்கார்ந்திருக்கு

மணல் போட்டு பதிவு குடுவை செஞ்ச விஞ்ஞான ரோசாவே!
இப்ப அந்த ரகசியமெல்லாம் காணாமல் போச்சே

கலவையெல்லாம் சரியாகத்தானே இருந்தது.
பாண்டிச்சேரி ரோடு கூட தெளிவாத்தான் தெரிஞ்சதுன்னீரே!

நல்லாத்தானே சிக்ஸர் அடிச்சு ஆடிட்டு இருந்தீக
அதென்ன மர்மம் வருசத்துக்கு ஒரு பதிவு
அப்புறமென்ன காணாமல் போன மர்மம்?

தமிழ்ப்பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை
ஒரு தமிழ்ப்படத்துக்கு போட்டதுல
பழைய நினைப்புதான்
வவ்வால் பழைய நினைப்புதான்
என்ன கொடுமை சார் இது.

Monday, April 12, 2010

நம்பிக்கைகளை சீர்குலைக்கும் தமிழக சீட்டு கம்பெனிகள்.

அங்கேயும் வந்து ஆட்டையப் போட்டுட்டாங்களான்னு இங்கே வானம்பாடிகள் பாலா சொல்லி வாய் மூடுவதற்குள் இன்னுமொரு ஏமாற்று வேலை அரங்கேற்றம்.யாரை நொந்து கொள்வதென்றே தெரியவில்லை.திருடனையா அல்லது எங்கிட்ட பணமிருக்கிறதென்று வாலட்டை திருடன் கண்முன்னே காட்டுபவனையா?அல்லது அரசு இயந்திரம் செயல்படுவதையா?இல்லை மனசாட்சிகளையெல்லாம் அடகு இல்ல இல்ல புதைத்து விட்ட,எரித்து விட்ட மனநிலைகளையா? சென்ற பதிவில் இந்திய சுதந்திரங்களை நினைத்து மனதுக்குள் மகிழ்வான ஒரு புன்முறுவல் வந்து போகுமுன் இந்திய நாணயங்கள் ஏலம் போய்விட்டது.

வேளச்சேரி பக்கமெல்லாம் கொஞ்சம் காசு புரளுகிற இடமா?அல்லது ஏமாளிகள் அதிகம் நடமாடும் இடமா?குமாரராஜா,பிரகதீஷ்வரி என்ற தம்பதியினர் ஷேர்மார்க்கெட் மற்றும் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்களாம்.இவர்களிடம் ரூபாய் 40 லட்சம் முதல் 1லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் கட்டி ஏமாந்தவர்கள் மொத்தம் 500 பேர்.

இவர்களிடம் கட்டும் பணத்துக்கு 10 சதவீதம் வட்டி தருவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் சீட்டு முதிர்வடைந்த 20 பேருக்கு “செக்” தரப்பட்டது.ஆனால், பாங்கியில் பணம் இல்லாததால் செக் திரும்பிவிட்டது. எனவே, குமாரராஜாவை சந்தித்து இது குறித்து கேட்டதற்கு வேளச்சேரியில் உள்ள வீட்டுக்கு வந்து பணம் வாங்கி செல்லும்படி தெரிவித்தனர்.அதன்படி வீட்டுக்கு சென்றால் வீட்டை பூட்டிவிட்டு கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.இந்த பணத்தை பெற்று தருமாறு போலிஸ் கமிசனரிடம் புகார்.

அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் இருக்கின்றன.பிக்சட் டெபாசிட், ATM வசதிகள் இருக்கின்றன.10% சதவீதம் லாப கணக்கு போட்டு இன்னும் இன்னும் எத்தனை முறை இந்த ஏமாற்று வித்தைகள்?திருடன் போலிஸ் விளையாட்டு மட்டும் நமக்கு அலுக்கவே அலுக்காது போல இருக்குதே.

இந்த விளையாட்டுக்கள் எல்லாம் இங்கே இல்லீங்க.ஒரே ஒரு மத்திய வங்கி நம்ம ரிசர்வ் வங்கி மாதிரி பணத்தை அச்சடிப்பதற்கு.அடுத்து தேசிய வங்கி,வியாபார வங்கி,வீட்டு கடன் வங்கி,பன்னாட்டு பொருளாதார வங்கி,வளைகுடா வங்கி என அனைத்துமே அரசால் அங்கீகரிக்கப் பட்டவையாகவும் எத்தனை வங்கி கிளைகள் தேவையோ அத்தனை அமைத்துக் கொள்ளும் உரிமைகள் கொண்டவை.இவைகள் மட்டுமே பணம் சேமிப்பு மற்றும் வியாபார நோக்கம் கொண்ட அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகள்.

சில தனியார் பணம் கடன் தரும் நிறுவனங்கள் மற்றும் இந்திய மாநிலங்களுக்கும்,இலங்கை,பிலிப்பைன்ஸ்,நேபாளம்,பெங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பணம் மாற்றம் செய்யும் தனியார் நிறுவனங்களும்,டாலர்,யூரோ,பஹ்ரெய்ன் தினார்,எகிப்திய பவுண்ட்,இந்திய ரூபாய்,ரியால்,திர்காம்,சிங்கபூர் டாலர் போன்ற பணங்களை குவைத் தினாருக்கு பதிலாக பணமாகவே தரும் தனியார் பண மாற்று நிறுவனங்களும் செயல்படுகின்றன.இதுவரை ஒரு பணம் ஏமாற்றும் செய்தி கூட நான் கேள்விப்பட்டதில்லை.காரணம் ஏலச்சீட்டு,ஹவாலா போன்றவை அரசால் அங்கீகரிக்கப்படாதவை.சேமிப்பின் பணத்தை ஐம்பது நூறென நண்பர்கள்,அறிந்தவர்கள் வட்டத்துக்குள் மட்டுமே 10 பேர் 12 பேர் என ஒரு வருட கால தவணையாக அதுவும் இந்தியர்கள் மட்டுமே ஏலச்சீட்டு நடத்துகிறார்கள்.இவையும்,தாய்லாந்து லாட்டரி போன்றவை அரசு சட்டப்படி குற்றம் என்பதால் யாரும் போய் காவல்துறையிடம் முறையீடு செய்ய இயலாது.

உள்ளூர்வாசிகள் சில சமயம் செக் கொடுத்து விட்டு பவுன்ஸ் ஆகி விட்டால் பணத்தை திருப்பி தரவோ அல்லது சிறையில் குப்பூஸ் சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளதால் இது போன்ற நிகழ்வுகள் எண்ணிக்கையில் குறைவு.எனவே பணம் விசயத்தில் வளைகுடா செயல்படும் விதம் பாராட்டுக்குரியது.

எகிப்திய முபாரக்கும் எல்பராடியின் அரசியல் கருத்துக்களும்

மத்திய கிழக்கின் நாகரீக தொட்டிலாகவும்,புராதன பிரமிடுகளின் வரலாற்றையும் தன்னகத்தே அடக்கிக் கொண்ட எகிப்து முந்தைய ஜனாதிபதிகளான நாசருக்குப் பின்னும்,சதாத்தின் இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு பின்னும் 1981ம் ஆண்டு முதல் இன்றைய 2010 வரையிலுமான இரும்பு பிடிக்குள் சிக்கி ஜனநாயக மூச்சையே இழந்து போனது.ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு வந்த துவக்கம் முதல் அரசியல் கட்சிகள் அமைப்பதோ,5 பேர் கூடி பேசுவதோ தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

எகிப்தியர்கள் ஒரு புறம் ஓரளவுக்கு படித்தவர்களின் விகிதாச்சாரம்,அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவாகவும்,படிப்பறிவில்லாதவர்களின் விகிதாச்சாரம் அதிகமாகவும் இருப்பது மாதிரியான தோற்றமே வளைகுடாக்களில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும் போது தெரிகிறது.இதற்கான காரணங்களாக மூச்சிழந்த ஜனநாயகம் காரணமாக இருக்கலாம்.நிலையான அரசு என்பதும் முன்னேற்றம் என்பதும் ஒரு பத்தாண்டு காலத்துக்குள் நிகழ்த்தி முடிக்கப்பட வேண்டியவை.அதற்கும் மிஞ்சிய காலத்தில் ஒரே அமைப்பின் ஆட்சி நிலைப்பது, ஊழல்கள் பெருகுவதற்கும்,ஏதோ ஒரு வடிவில் சர்வாதிகாரம் வேர் ஊன்றுவதற்கும் வழி வகுக்கும்.

முந்தைய அணு ஆயுத தடுப்பு நிறுவனத்தின் தலைவரும்,நோபல் பரிசு பெற்றவருமான எல்பராடி,இவ்வளவு காலம் உழைத்தோம்,இனி நாற்காலிய போட்டு பத்திரிகை படித்தோம்,பேஸ்புக்கில் கதையடித்தோமென்றில்லாமல் எகிப்தில் மாற்றங்கள் வேண்டும் என்று டிவிட்டரில் எகிப்தியர்களுக்கு இலை மறை காயாக அறிக்கையளிக்க வார இறுதியில் மீன் பிடித்துக் கொண்டோ,கால்பந்தாடிக் கொண்டோ,காயலாங்கடை சுத்திக் கொண்டோ இருந்த குவைத்தில் வசித்த சில எகிப்தியர்கள் எல்பராடிக்கு ஆதரவாக வாங்கய்யா இந்த வெள்ளிக்கிழமை இத்தனை மணிக்கு ஒன்றாக கூடி "சங்கம்" அமைப்போமென்கிற மாதிரி இணையத்தில ஒரு அறிக்கை விட வெள்ளிக்கிழமை கூடிய கூட்டத்தில் 17 முதல் 20 பேர் வரையிலான எகிப்தியர்களை குவைத் உள்துறை கைது செய்து அடுத்த நாளே பொட்டிய கட்டி எகிப்துக்கு அனுப்பி விட்டது.

குவைத் உள்துறை அமைச்சகம் சொல்வதென்னவென்றால் நீ காசு சம்பாதிச்சு புள்ள குட்டிகளை மட்டும் கவனிக்கற வேலையைப் பாரு எங்க ஊர்ல இருந்து அரசியல் கூட்டங்கள்,சங்கம்,அமைப்புகள் நிகழ்த்தக் கூடாது என்கிறது.எகிப்தில் இருக்கும் முபாரக்குக்கு எதிரா முணுமுணுக்கும், ஒளிந்து கொண்டிருக்கும் அமைப்புகள்,ஏனய்யா எங்க ஊர்ப்பிரச்சினைக்குத்தானே நாட்டாமை தேடுகிறோம் உங்க ஊர் அரசியலில் நாங்க தலையிட்டோமா என்று எகிப்தில் குரல் எழுப்புகிறது.

முப்பது வருடம் எகிப்தை தனது இரும்பு பிடிக்குள் வைத்துள்ள ஹோஸ்னி முபாரக் தனது 81வருட முதுமையில் தனது மகனை நம்மூர் ஸ்டைலில்:) அரியணை ஏற்றி விடவேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்.எல்பராடி மூலம் எகிப்தில் மாற்றங்கள் வருமா அல்லது ஹோஸ்னி முபாரக்கின் வாரிசு அரசியல் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பழைய உலக நிகழ்வுகளை மறக்க நினைத்தாலும் சில நிகழ்கால நிகழ்வுகள் பழையவற்றை மீண்டும் தோண்ட வைக்கின்றன.பதவிக்காலத்தின் 4 அல்லது 8 வருட காலங்களில் ஒரு தேசத்தையே சீர்குலைத்து விட்டு காலணி வீச்சிலும் தப்பித்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளில் இதோ ஜனநாயகம் தழைக்கிறது,நான் ஓய்வெடுக்க செல்கிறேன் என்று காணாமல் போய் விட்டார் ஜார்ஜ் புஷ்.அமெரிக்காவின் கெட்ட பெயரை மீள கட்டியமைப்பதே தனது புதியமாற்ற வெளியுறவு கொள்கை என்று ஒபாமாவும் முட்டை மேஜையில் தின நிகழ்ச்சி நிரல்களில் மூழ்கியுள்ளார்.

உண்மையில் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களாட்சி அமைவதென்பது F16களாலோ,அமெரிக்க ஆக்கிரமிப்புகளாலோ நிகழாது.சிறிய குரலாக ஒலிக்க முயன்ற,நாடு கடத்தப்பட்ட முகம் தெரியாத எகிப்தியர்கள் போன்றவர்களால் மட்டுமே மக்களாட்சி மலருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இதற்கெல்லாம் குரல் கொடுக்க அமெரிக்க பெரியண்ணன் வரமாட்டாரே!


கணவனும் மனைவியும் பக்கத்து பக்கத்து அலுவலகங்களில் வேலை செய்தால் ஒரு போன் போட்டு இன்னைக்கு "Honey!Shall we eat steak medium done with sauted baby carrots and potato with redwine at Le Bernardin?"ன்னு கேட்கறத விட்டுட்டு unix ல செய்தி அனுப்பனா போகுமா DOS ல Hi சொல்லிப் பார்க்கறதுன்னு சின்ன சின்ன செய்திகளா அனுப்பி நேற்றைக்கு ஒரு மாற்றம்,இன்றைக்கு ஒரு மாற்றம்ன்னு தொழில் நுட்பம் வளர்ந்து இப்ப இருக்குற நிலைமையில் இணையத்தால சிலருக்கு எவ்வளவு சிரமங்கள்.மனித பரிணாமத்தை ,மக்கள் சிந்தனையை எல்லோரும் வரவேற்பதில்லை,ஏனென்றால் அவை சில அடிப்படை சுய நம்பிக்கைகளை தகர்ப்பதுடன் நீண்ட சுய கட்டமைப்புகளாய் உருவாக்கியவைகளுக்கு சவாலாகவும் அமைகிறது.

Wednesday, April 7, 2010

பதிவர்கள் அரபி கத்துகிட்டாங்க:)

இப்ப அரபிக் வகுப்பில சில பேர் சேர்ந்து புத்தகமெல்லாம் வாங்கிட்டாங்க.இந்த புத்தகம் கொடுக்க காரணம் முன்னாடி ஹிந்து கத்துக்கொடுக்கிறேன்னு பதிவர் ஆடுமாடு இடுகையா போட்டார்.நன்றாகவே வகுப்புகள் போய்க் கொண்டிருந்தது.நானும் மலையாளம் கற்றுக்கொடுங்கள் என்று கலாய்த்து மலையாளமும், ஹிந்தியும் கரையேறவில்லை.சரி இப்ப புத்தகம் வாங்கின மாணவர்களில் நம்ம பதிவர்கள் அரபிக் பேசினா எப்படியிருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை:)

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த?
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்?
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா?
நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்!

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்?
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப்.

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான்

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.

அதுசரி: மா சலாம்.

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ்

வானம்பாடி மறுபடியும் மனதுக்குள்,இருங்கய்யா!எனக்கு அரபி தெரியாதுன்னுதானே இந்த தாளிப்பு தாளிக்கிறீங்க?நீங்க பேசுனதெல்லாம் உங்களுக்கு தெரியாம டேப் செஞ்சிருக்கேன்.நடராஜன் குவைத்துலதான் ஊரச்சுத்திகிட்டு இருக்காரு.கொடுத்து விளக்கம் கேட்டுட மாட்டேன்.

ஒலிப்பதிவு நடராஜனிடம் வந்தவுடன் நடராஜன் வானம்பாடிக்கு சொன்னது

நடராஜன்:அது ஒண்ணுமில்லீங்ண்ணா,நானூம் அரைகுறைதான்,தெரிஞ்சத சொல்றேன்,அச்சுப்பிசகாம உங்களுக்கு தெரியணுமுன்னா துபாய்ல குசும்பன்கிட்ட கேட்டீங்க்கன்னா பேசுனதை இலக்கண சுத்தமா பிரிண்ட் அடிச்சே கொடுத்துருவாரு:)

பேசுனது இதுதானுங்ண்ணா:

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?(வணக்கம்!எப்படியிருக்கீங்க பழம?)

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த? (வணக்கம்!நீங்க எப்படியிருக்கீங்க?)
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்? (இப்ப நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?)
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா? (நான் இப்ப அரபி கவிதை எழுதிகிட்டு இருக்கிறேன்)

நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்! (ஒண்ணூ சொல்லுங்க பார்க்கலாம்!நான் பார்க்கிறேன்)

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு ( ஒரு நாள் காளமேகப் புலவர் என் கனவில் வந்தார்)
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி (அவர் சொன்னார்,பழம பையா உனக்கு செம்மொழி தெரியுமா?)
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை (நான் சொன்னேன் இரண்டு மாதம் கழித்து செம்மொழிக்கு கோவை போகிறேன்)
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி ( எல்லோரும் என்ன சொல்கிறார்கள் இங்கே என்று கேட்கப் போகிறேன்)
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி (கலைஞர் செம்மொழி பற்றி என்ன சொல்கிறார் என பார்க்கிறேன்)
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்? (அப்புறம் காளமேகப் புலவர் கேட்டார் யார் தமிழை எல்லாம் மாற்றச் சொன்னது?)
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி (ஐயா!எனக்கு ஒன்றும் தெரியாது,எல்லாம் கருணாநிதி நிறுவனத்தோட வேலை)
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப். (அவருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது அப்புறம் எனது தூக்கம் கலைந்து விட்டது)

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான் (அப்படியா?உங்க கனவுல நிறைய அரபி கவிதை வருகிறதே,எனக்கு பேய்க பொண்ணுகளா வர்றாங்க)

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.(நீங்க ஒரு பெக் அடிச்சீங்கன்னா இன்னும் அழகான பொண்ணுகளா வருவாங்க)

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.(இல்ல தல!என்கிட்ட பெர்க்கின்ங்கிற பீர் இருக்குது.அது போதும்)

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.(சரி நண்பர்களே!எனக்கு ஒரு பதிவு இருக்குது,நாளை பார்க்கிறேன்)

அதுசரி: மா சலாம். (வணக்கம்.போயிட்டு வாங்க)

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?(அதுசரி!நீங்க எங்க போறீங்க? லண்டன் ஏர்போர்ட்டுக்கு ஒரு லிப்ட் கொடுக்க முடியுமா)
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ் (ஒண்ணும் பிரச்சினையில்ல!வானம்பாடி நீங்களும் வாங்க அதே வழிதான் சென்னை விமான நிலையத்துக்கும்)