Followers

Sunday, September 6, 2015

துபாய் நாடுகளின் இந்திய உணவக வளர்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியா,கத்தார்,பஹ்ரைன்,குவைத்,ஓமன் என பல நாடுகள் இருந்தாலும் துபாயும் விவேகானந்தா குறுக்கு தெருவுமே பிரபலம் என்பதால் தலைப்பு இப்படி.

பல வருடங்களாக இந்திய உணவகங்கள் அதிலும் தமிழக உணவு வகைகள் கால் பதிக்காதா என்ற ஆதங்கத்தை முகல்மஹால் இன்னும் சில டெல்லி சார்ந்த பகுதிகளிலிருந்து ஆரம்பமாயின. இதுதான் இந்திய உணவு என்ற பிம்பத்தை மெல்ல உடுப்பி ஓட்டல் சைவ உணவாக நுழைந்தது. ஒருவர் கூட தமிழகத்திலிருந்து வராமல் இருக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பை மெல்ல அஞ்சப்பர் செட்டி நாடு உடைக்கிறதே என்ற மகிழ்ச்சியை அதுவும் டெல்லி சார்ந்த நிறுவனர் என்பதில் புஸ்வானமாகி போனது.

குவைத்தில் 2012ல் வியாபாரத்தில் நுழைந்த சரவணபவன் மட்டுமே தமிழகம் சார்ந்த முதல் தரமான உணவகம்.க்டந்த வாரம் அடையார் ஆன்நத பவனும் தனது முகத்தை காட்ட துவங்கியுள்ளது . மேற்கத்திய படிப்பு,புதிய தொழில் நுட்பங்கள்,பொருளாதார வசதி என துபாய் நாடுகள் பன்னாட்டு வியாபாரங்களை ஊக்குவிக்கிறது. தொழிலில் முதன்மை,வியாபார காண்ட்ராக்ட் அணுகுமுறைகள் தெரியும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு அன்னிய செலவாணி சேர்ப்பதில் இப்பொழுது வாய்ப்புக்கள் அதிகம்.

யாருக்கும் தெரியாமல் ரிலையன்ஸ் நிறுவனம் கூட இங்கே கால் பதித்துள்ளது.

வாழ்க!வளர்க இந்திய நிறுவனங்களின் முகங்கள்.