Followers

Friday, October 21, 2011

மைக்ரோசாப்ட்...சோனி மற்றும் ஹாலிவுட் பாலா எங்கே?

முந்தைய பதிவின் விட்ட குறை தொட்ட குறையாக பதிவுலக நட்பு என்பது பதிவுகளை ரசித்துப் பின் ஆளைக் காணோமே என்று தேடி திடிரேன திரும்ப வரும் பதிவர் வவ்வால் வருகையின் நீள் உறக்கம் மகிழ்ச்சி மாதிரி இருக்க வேண்டும்:) அதே மாதிரி தலைப்புல உட்கார்ந்துகிட்டு இருக்கிற ஹாலிவுட் பாலாவும் மீள் தரிசனம் தந்தால் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும். 

நிறைய தேடல்களில் பதிவுகளில் புதிய தகவல்களை தரலாமென்பதோடு எனது சுயதேவையாகவும் சில புதிய முயற்சிகளை செய்யலாமே என்று நினைத்ததில் மைக்ரோசாப்ட்,சோனி பயில்வான்களின் போட்டியில் சில ஃபாரம்களில் வேடிக்கைப் பார்க்க போக பதிவுகளில் கவனத்தை செலுத்த முடியாது போய் விட்டது.விசயம் என்னன்னு சொல்வதற்கு அக்கரை சீமை பதிவர் ஹாலிவுட் பாலாவிலிருந்து துவங்க வேண்டும்.அவரது சிறந்த பதிவுகள் அனைத்தும் காணாமல் போனதோடு சொல்லிக்கொள்ளாமல் ஹாலிவுட் பாலாவும் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.யாரோ ஒரு பதிவுலக நண்பர்(கேபிள் சங்கரா?) அவரது பதிவுகளைப் பின்னூட்டம் நீங்கலாக மீண்டும் இணையத்தில் இணைத்திருக்கிறார்.மீண்டும் இணைத்தவர் ஒருவேளை இந்தப் பதிவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அவருக்கு எனது நன்றி.இந்தப் பதிவின் கால கட்டத்துக்கு ஆப்பிள் ஐபோனும்,ஆப்பிள் நிறுவன இயக்குநர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து போனதும் பிரபலமானவை.ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி இரமணிதரன் அவர்கள் ஒரே வார்த்தையில் Jobs well done என்று ஸ்டீவ் ஜாப்ஸ் படத்தைப் போட்டு அஞ்சலி முடித்துக்கொண்டார்!

ஹாலிவுட் பாலாவோ ஸ்டீவ் ஜாப்ஸ் இன்ன பிற குழுவினர் பட்ட வாழ்க்கை அனுபவங்களை தமிழ் சினிமாவுக்கெல்லாம் எட்டாத ஸ்கிரிப்ட் மாதிரி சொன்னதோடு கூடவே பிரிஞ்சு மேய முயன்றது பிக்ஸார் அனிமேசன் தொழில்நுட்ப கோனார் நோட்ஸ்.பிக்ஸார் நிறுவனம்,தொழில்நுட்பம் பற்றியும்,ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும்(வால்ட் டிஸ்னியும்ன்னு சேர்த்து சொன்னா நிறைய பேர் அடிக்க வருவீங்க...நீங்களாச்சு...ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் இணைப்பாச்சு) பதிவுலகத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழில் அறிமுகப்படுத்தியது ஹாலிவுட் பாலா மட்டுமே!வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டியில் குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கனுமென்று அடம் பிடித்தால் பெரியவர்களுக்கோ சீரியல் அல்லது செய்தி,விளையாட்டு சேனல்களின் பட்டனை அழுத்தும் ஆர்வம் இருக்கும்.ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் புரிதலுக்குப் பின் பெரியவர்களுக்கும் கார்ட்டூனில் ஆர்வம் வரலாம்.

உங்களுக்கு வந்ததோ இல்லையோ கார்ட்டூன்கள் வீடு முழுதும் சிதறிக்கிடக்க இது நம்ம ஏரியா இல்லைன்னு இருந்த நான் நேற்று பிக்ஸார் ஸ்டோரி டாகுமெண்டரி பாதி பார்த்து விட்டுத்தான் குறட்டையே விட்டேன்.கூடவே அடுத்தநாள் Toystory 3 வேறு.குழந்தைகளுக்கு கார்ட்டூன் முன்னுரிமையெனும் போது குழந்தைகள் கார்ட்டூன் மாய உலகில் சுற்றித் திரிவது வாழ்வியலின் ஒரு மிகப்பெரிய அதிசயம்.நம்ம தலைமுறைக்கு எல்லாம் கிடைக்காத அம்புலிமாமா,சிந்துபாத்தை விசுவலாக பார்க்கும் வரம் பெற்றவர்கள் குழந்தைகள்.இனி பெரியவர்களுக்கு குழந்தைகளுடன் கும்மியடிக்கவும்,வால்ட்டிஸ்னியும்,பிக்ஸார் தொழில் நுட்பமும்,ஸ்டீவ் ஜாப்ஸும்,ஜார்ஜ் லூகாஸ்களுடன் பயணம் செய்ய ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் பதிவுகள் துணை புரியும். 

அதோடு அன்று 14 இன்ஞ்ன்னு சொல்லிக்கிட்டு 30 வரைக்கும் பெருத்த இடை தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தாண்டி,பிளாஸ்மா, எல்.சி.டி  இஞ்சி இடுப்பையும் தாண்டி இப்போது இடுப்பே இல்லாத எல்.இ.டி பெட்டிகள் விற்பனை நிலையங்களை அலங்கரிக்கின்றன.இப்போதைய விஞ்ஞான வளர்ச்சிகளை தங்கள் மதப்புத்தகங்களில் அப்போதே சொல்லி வைத்து விட்டார்கள் என்று இறை நம்பிக்கையாளர்கள் பெருமைப்பட்டுக்கொள்வது போல் ஹாலிவுட் பாலா நிறைய விசயங்களை இரண்டு வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டார்.

அப்படி அவர் அறிமுகப்படுத்திய ஒன்று PS3.இங்கே துவங்குகிறது சோனியின் விளையாட்டு.தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்ங்கிற மாதிரி சோனி பிளேஸ்டேசன் மாதிரி ஒரு பன்முகப்பட்ட கன்சோல் எனும் பெட்டியை இனியெங்கும் காணோம் என சொல்லலாம்.இந்த கன்சோல் சாதனம் ஒரு விளையாட்டு மைதானம்.ஒரு இணையதளம்.ஒரு கலந்துரையாடல் களம்.ஒரு சினிமா தியேட்டர்.விளையாட்டு ப்ளு ரே தட்டுக்களை ஆன்லைனிலே வாங்கும் கடை என பல வசதிகள் கொண்டது..

இதோடு லினக்ஸ் இயங்குதளமாகவும் உபயோகிக்கலாம் என்று 2003ல் இணையத்தில் சுற்றுபவர்கள் அத்தனை பேரும் ரொம்ப......நல்ல பசங்கன்னு தமிழ்மணம் நம்பிய மாதிரி சோனி 80GB வரையிலும் லினக்ஸ் மாற்று இயங்குதளத்தையும் இணைக்கும் வசதியை சேர்த்திருந்தது.இப்படியெல்லாம் சோனி மாதிரி ரொம்ப நல்ல பிள்ளைன்னு ஆங்கிலத்தில் நல்ல ரிவுயூ செய்தா டாலர் கூட கொடுப்பதாக கேள்வி.நமக்கு நல்லதும் சொல்லி அதன் குளறுபடிகளும் சொல்லாட்டி தூக்கம் வராது என்பதாலும் சோனி சிக்ஸாஸிஸ்ல வளவளா பதிவு தட்டச்சு செய்யறுதுக்கும் சோனி தரவிறக்க கண்சிமிட்டல் செய்யும் நேரத்துல குட்டி தூக்கம் போடும் பொறுமையெல்லாம் இல்லையென்பதால்  இது நமக்கு ஆவுறதில்ல.

சோனி அறிமுகப்படுத்தியது.விளையாட்டு போதை பிரியர்களுக்கும்,விண்டோஸ் இயங்குதளத்திற்கு மாற்று எனும் லினக்ஸ் பிரியர்களுக்கும்,கூடவே ஹேக்கர்களுக்கும் நான் முன்பே சொன்ன ஐஸ்கிரிமுடன் கிரிம் காரமலை கலந்து சாப்பிட்ட மாதிரி ஒரே கொண்டாட்டம்.இந்த கொண்டாட்டம் நீடிக்க விடாமல் அடுத்த வெர்சன் ஸ்லிம் மாடலில் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுத்தியதோடு முன்பு வாங்கியவர்கள் பிளே ஸ்டேசனை அப்டேட் தரவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் வாங்கும்  நீலக்கதிர் வட்டுக்கள்(ப்ளு ரே) போன்றவற்றுடன் சோனியில் பன்முக பலன்களை அனுபவிக்க முடியாது என்று தடா,பொடா,கெடா வெட்டியது.போடா என்றார்கள் ஹேக்கர்கள்.உபயோகிப்பாளர்களோ சோனியை கோர்ட்டுக்கு இழுத்து விட்டார்கள்.ஹேக்கர்களோ ப்ளே ஸ்டேசனை அப்டேட் செய்யாதீங்க!மாற்று வழிகளை உருவாக்கித் தருகிறோம் என சவால் விட்டார்கள்.

ஹேக்கர்களுக்குப் பயந்த அப்பாவிகளோ சோனி செய்வதை செய்கிறேன் என்று அப்டேட் செய்யப் போக உள்ளதும் போச்சு நொள்ளக்கண்ணா என மூட்டைப்பூச்சி(bug),இடை நிறுத்தம்(crash) என்று அலறிக்கொண்டிருக்க இன்னும் சிலர் இவங்க சண்டை முடியட்டும் என்று லினக்ஸ் போகாமலும்,அப்டேட் செய்யாமலும் இயங்கிக்கொண்டிருக்க,லினக்ஸ் நரி குருக்கள் வடை போச்சேன்னு வருந்திக்கொண்டிருக்க மைக்ரோசாப்ட்டுக்கு மார்க்கெட் நிலவரம் மூக்கு வேர்த்து தயாரித்த கன்சோல்தான் எக்ஸ்பாக்ஸ் (Xbox 360).

அல்லது சோனியின் விளையாட்டு தாதா பிம்பம் உடைக்க எக்ஸ்பாக்ஸ் பயன்பட்டாலும் வடிவமைப்பில் சோனியின் பிளே ஸ்டேசன் முன்பு Xbox 360 மற்றும் Nintendo போன்ற விளையாட்டு வீரர்கள் நிற்க முடியாது.

இதை உதாரணத்தோடு சொல்லனும்ன்னா சச்சினோடு ஏனைய பேட்ஸ்மென் ஒப்பீடோ அல்லது ரோல்ஸ் ராய்ஸ் கார் மாதிரி சோனி பிளே ஸ்டேசன்.நம்ம ஊர் அம்பாசிடர் கார் மாதிரி மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ்.மைக்ரோசாப்டின் இயங்குதளம் விளையாட்டுக்கு மட்டும் என எளிதாக வடிவமைக்கப் பட்டது.2000 ரூபாய்,4000 ரூபாய் கொடுத்து ப்ளு ரே வட்டுக்களை வாங்கி விளையாடுவதை விட எக்ஸ்பாக்ஸ் குறைந்த விலையிலோ வழக்கமான திருட்டு டி.வி.டி மாதிரியாகவோ விளையாடுற மாதிரி.

ஆனால் சோனியை விட ஒரு புத்திசாலித்தனமான வேலையை மைக்ரோசாப்ட் செய்தது.நமக்கு அவதார் படம் தெரியும்தானே.அதன் 3D அனிமேசன் என்பதெல்லாம்(மறுபடியும் பிக்ஸார்,பாலா,ஜார்ஜ் லூகாஸ் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் etc..etc) ஒருவர் பின்புலத்திலிருந்து உடல் அவயங்களை அசைக்க அதற்கு தகுந்த மாதிரி நமக்கு திரைப்படத்தில் அனிமேசன்கள் ஓடுவதோ,நகர்வதோ,காதல் செய்வதோ வரும்.இதேமாதிரியான தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் கைநெக்ட்(Kinect)என்ற கேட்ஜட் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360(Xbox 360) இணைத்து இயக்குகிற மாதிரியான தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது.சோனியின் விளையாட்டு எப்படின்னா ப்ளு ரே வட்டை பிளே ஸ்டேசனில் இட்டு வயர்லெஸ் சிக்ஸாக்கிஸ்(Sixaxis)பட்டன்களை நகர்த்தி விளையாடுவது.ஆனால் எக்ஸ்பாக்ஸ்+கைநெக்ட்,அதோடு கூட அட்வென்ஸர் கேமை இட்டு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாடி 2 மீட்டர் தள்ளி நின்று உங்கள் உடல் அசைவுக்குத் தகுந்த மாதிரி தொலைக்காட்சி பிம்பம் இயங்கும்.அதாவது நீங்களே டான்ஸர்,நீங்களே பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர்:).

இல்ல எனக்கு டான்ஸெல்லாம் வராது,சினிமான்னா கண்கொட்டாமல் பார்ப்பேன் என்று டி.வி.டி பிளேயரில் படம் பார்ப்பவர்களுக்காக இன்னும் கொஞ்சம் விவரிக்க முடியுமா என்பது அடுத்த பதிவில்....  

ஹாலிவுட் பாலா மயில் ஆடிய அழகைக் கண்டு மயங்கிப் போன வான்கோழி நான்.பாலா அசல் மாதிரி உள் கட்டுமானமெல்லாம் என்னிடம் எதிர்பார்க்க கூடாது.மென்பொருட்கள் பற்றி தொடர்ந்து சசிகுமார் சொல்லி வருகிறார்.ஆனால் மென்பொருட்களை இயக்கும் கேட்ஜட் பல அமெரிக்க சந்தையில் தூங்கி எழுந்த காலையிலே அறிமுகமாகும்.நமக்கு திருட்டு வி.சி.டி மாதிரியெல்லாம் தேடி அலைய வேண்டி வரும்.அது மாதிரியான குறைகளைப் போக்கவும்,தொழில் நுட்ப வளர்ச்சிகளோடு நாமும் கூடவே பயணிக்கவுமான எனது அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.நான் தமிழ்ச் செய்திகளுக்கே சிங்கி அடிக்கும் போது(இந்த லட்சணத்துல தமிழ்மணம் தடை ?) இணையத்தில் இநியுஸ்,ஜிநியுஸ் வாசிக்கிறேன் கேளேன் என்று அமெரிக்க அம்மணிகள் உசுப்பேத்துனா எப்படியிருக்கும்...

ஹாலிவுட் பாலாவோ அல்லது ஆப்பிள்,மைக்ரோசாப்ட்,சோனி தமிழ் உஸ்தாதுகள் யாராவது இந்த பதிவைப் பார்த்தால் சிரிக்காமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.அனிமேசன்,கார்ட்டூன் போன்றவை 2Dயிலிருந்து 3Dக்குப் பயணித்து விட்டது.தொலைக்காட்சிகள் கூட 3D என்ற விளம்ப்ரங்கள் வந்து விட்டன.பழையன நகர்தலும் புதியன புகுதலும் என நுகர்வு கலாச்சாரம் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.அவற்றில் சில கடுகுகளை மட்டுமே போட்டு தாளித்திருக்கிறேன் நானும் தொழில்நுட்ப பதிவு போடுகிறேன் பேர்வழியென:)

இந்த பதிவு அக்கரை சீமை பதிவர் ஹாலிவுட் பாலாவுக்கு சமர்ப்பணம்.

அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் நுனிப்புல் தகவல்களுடன் வருகிறேன்.நன்றி.     

Tuesday, October 18, 2011

எல்லா தமிழ்மண நண்பர்களும் முக்கியமானவர்களே!

ஏர்டெல்... தலைப்பு மாதிரிதான் வித்தியாசமான விதத்தில் நண்பர்கள் அடிக்கும் லூட்டிகளை தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகிறது. போன பதிவுக்கும் முந்திய பதிவு வரையில் தினசரி தமிழ்மண தரிசனம் செய்யாமல் வேறு ஆங்கில தளங்களில் நுழைந்து கொண்டு தேடல்களில் நாட்கள் நகர்ந்து விட்டன.இந்தப் பதிவு போடுவதற்கு முன்பு கூட உடல் களைப்பால் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு திடீரென இன்று தமிழ்மணம் எட்டிப்பார்த்த பாதிப்பால் சொல்லவா வேண்டாமா என்ற பூவா காயாவில் யாரோ கருத்து கோபம் கொள்கிறார்கள் நமக்கேன் வம்பு என்று அமைதியாக ஆட்டம் பார்ப்பதை விட தமிழ் பொதுவெளியில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதால் சொல்லியே விடுவது என்று தட்டச்சு செய்கிறேன்.

பதிவுலகில் எத்தனை சண்டைகள் பார்த்திருக்கிறோம் இதையும் பார்க்க மாட்டமா என்ன என்ற முந்தைய சண்டைகளுக்கும் இப்போதைய சண்டைக்கும் வித்தியாசம் இருக்கிறது.புராணக்கதை ஒன்றில் வரம் கொடுத்தவன் மீதே வரத்தை பரிட்சித்துப் பார்க்கிற மாதிரியான சூழல் இது.நகைச்சுவையாகவோ,மொக்கையாக பதிவுகள் தரும் நண்பர்களுக்கு கூடும் கூட்டத்தை விட  நீட்டி முழக்கி கருத்துக்கள் வெளியிடும் நண்பர்களுக்கான வாசிப்போ அல்லது கூடும் கூட்டமோ குறைவு என்பது பதிவுலக யதார்த்தம்.இதற்கு விதிவிலக்கான பதிவுகளும் இருக்கும்.ஆனால் அலெக்சா ரேட்டில் மொக்கைகள் முந்திக்கொள்வது வாசிப்பின் தரமா அல்லது மனம் எங்கும் நிறைந்து கிடப்பதால் அவையே ருசிக்க கிடைக்கின்றனவா என்பது விவாதத்திற்குரிய ஒன்று. 

யாருக்கும் யார் மீதான கருத்து மாறுபாடுகள் மீதான  பதிவுகளோ அதன் பின்னூட்டங்களோ மாற்று கருத்து என்ற பெயரில் முன்வைக்கும் கருத்து சுதந்திரத்தை நான் எப்போதும் ஆதரிக்கவே செய்கிறேன்.ஆனால் இப்போது தமிழ்மணமே மன்னிப்பு கேள் பேனரை தூக்கிகிட்டு பதிவுலகை இந்தியன் ஏர்லைன்ஸ்  814 விமானத்தை தலிபான்கள் மதம் என்ற பெயரில் ஹைஜாக் செய்த மாதிரி பதிவு குழு சேர்க்கும் கருத்து வெளிப்பாடுகளை மறுக்கிறேன்.

இன்றைய தினம் வரைக்கும் பெயரிலி யாரென்றே நான் அறிந்திருக்கவில்லை.பெயரிலியாகவே அவர் தம் கருத்தை முன் வைத்திருக்கலாம்.நிர்வாகத்தில் ஒருவர் என்று அடையாளம் காட்டியது பதிவுலக கல்லூரி மாணவர்களுக்கு பேனர் தூக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்து விட்டது. அவரது ஆங்கிலம் கலந்த பின்னூட்ட விளாசல்களும், பின்னூட்ட தொடுப்பாக பெயரிலியின் 2003ம் வருடம் தொட்ட பதிவுகளைப் பார்க்கும் போதும் அவர் சொல்லும் விதத்தை உள்வாங்கிக்கொள்வதில் தவறியோ அல்லது வழக்கமான பின்னூட்ட வகையிலோ சிக்கிக்கொண்டு பின்னூட்டம் இடுவதற்கு மீண்டும் மீண்டும் அவர் மறுமொழி சொன்ன முறையில்  கோபம் கொண்ட்வர்களே அதிகம். பின்னூட்டங்களை கையாளும் பதிவுலக பின்னூட்டக்காரர்களுக்கு பெயரிலி விளாசியது உச்சமே.

அவரது பின்னூட்டத்திற்கு மறுமொழி சொல்லும்  தார்மீகப்பொறுப்பும் தளத்தின் பதிவ்ருக்கான உரிமை.அதனை விடுத்து கூட்டத்துப் பஞ்சாயத்தில் குரல் கொடுத்து சண்டை வளர்க்கும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமூக கடமைகள் நமக்கு இருந்திருந்தால் கூட பரவாயில்லை.தனது கருத்து வெளிப்பாடாய் பதிவுகள் போடுவது பதிவரின் உணர்வு சார்ந்த விசயம்.ஆனால் பதிவும் போட்டு ஒற்றைப் பார்வையாய் ஆள் சேர்த்து இணைத்துக்கொண்டு செல்வேன் என்பது மறுக்கவும் கண்டிக்க வேண்டிய ஒன்று.இதன் உச்சமாக பதிவர் ஒருவர் அமெரிக்காவில் இயங்கும் தளத்தை வளைகுடாவில் தடை செய்வேன் என்று எச்சரிக்கை விடுவது.ஆஹா!தொழில் நுட்ப திறன் புல்லரிக்க வைக்கிறது.இந்த தடை சராசரி மேய்ப்புக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்க கூடும்.அதனையும் தாண்டிய வாசிப்பு நேசிப்பு அசாங்கேகளுக்கு இது சரிப்பட்டு வராது.மேலும் தன் கையால் தன் கண்ணை  குத்திக்கொள்ளும் விவேகம் பற்றி மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் காலத்தில் தொடர்ந்த  பதிவர் சதிஷ் அரசியல் பதிவுக்கு பெரும்பாலும் பின்னூட்டங்கள் சொல்லியிருக்கிறேன்.ஆனால் அவரது சோதிடம் சார்ந்த விசயங்கள் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதும் அவை தவிர்த்து அவரது கருத்துக்களை ஆதரித்திருக்கிறேன்.சமூக கருத்துப் பரிமாற்ற்ங்கள் என்ற தளத்தில் வியாபார அணுகுமுறையை அவர் முறைப்படுத்தியதால் பதிவுகள் இணைப்பதை தமிழ்மணம் மறுத்துள்ளதாகவும் அவரது பின்னூட்டங்கள் மூலமாக அறிய முடிகிறது.எந்த ஒரு  மென்பொருளையும் உபயோகிக்கும் போதும் I accept சொல்லியே அதன் சாரங்களைக் கூடப் படிக்காமல் உபயோகிக்க துவங்கி விடுவது பெரும்பாலோரான வழக்கம்.தமிழ்மணம் சில நெறிமுறைகளை செயல்படுத்தும் போது அதற்கு உட்பட்டே நடக்க வேண்டிய பொறுப்பு பதிவர்களுக்கு இருக்கிறது.இந்தப் பதிவின் நேரத்தை மைக்ரோ சாப்ட் vs சோனி என்ற தொழில்நுட்ப பதிவுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் மெருகு படுத்தி விட்டு இணைக்க இயலுமா என்று பார்க்கிறேன்.

உலகும்,அதன் விசயங்களும் பரந்து கிடக்கின்றன.எல்லாமே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.கொடுக்கலும்,வாங்கலும் என்ற பரிமாற்றத்தை தமிழ்மணம் இதுவரைக்கும் லாபகரமான நோக்கில்லாமல் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.வாங்குதல் தவிர்த்து கொடுத்தேனே காரணம் காட்டி தமிழ்மணத்தை மறுக்கும் செயல்கள் தவிர்ப்பது எனது நிலைப்பாடு.

கூடவே பதிவுலகம் மூலமாக பெயர்கள் அறிமுகமான நண்பர்களின் வெளிநடப்பும் வருத்த்தை தருகிறது.எத்தனையோ கடந்தோம்.இதனையும் கடப்பதே வாசிப்பின் நேசிப்பை தரும்.

Tuesday, October 4, 2011

உலகத் தமிழர்கள் 896 பேரா?

பதிவுகள் பல கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.தேவையும்,அவசியமும் என்பதால் ஏற்கனவே பெரியார் தளம் தமிழ்மணத்தில் இணைத்துள்ள இந்த பதிவைதமிழ்மணம்,இண்ட்லியென இணைக்காமலே  பதிவிடுகிறேன்.இதுவரையிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து எத்தனையோ ஓட்டளிப்பு பங்காற்றியாகி விட்டது.இறுதியாக வெள்ளை மாளிகை வரையென்பதால் பதிவுலகம் சார்பாக இன்னுமொரு ஓட்டு சேர்த்து முயற்சி செய்துவிடலாமே!தகவல் உடனடியாகப் போய் சேரும் இந்த நேரத்திலும் 5000 ஓட்டுக்கு இன்னும் ஆயிரம் கூட எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலா தமிழர்கள் இருக்கிறோம்?

தமிழர்களின் குரலை வெள்ளை மாளிகை வரை கொண்டு செல்வோம்.வெள்ளை மாளிகை தளத்தில் ஓட்டுப் போடுங்கள்.நன்றி.

Sunday, September 18, 2011

செப்புப்பட்டயம்: வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

 அது என்னமோ தெரியலை!நிறைய பேர் பதிவுலகத்துக்கு வாராங்க.நல்லா அடிச்சு ஆடுறாங்களேன்னு நினைச்சுகிட்டிருக்கும் போதே காணாமல் போயிடறாங்க.பழையன கழிதலும் புதியன புகுதலும் கோட்பாடு பதிவுலகத்துக்கும் பொருந்தும்.(அப்ப அட்டை மாதிரி ஒட்டிகிட்டிருக்கிற நாங்க...ன்னு யாரோ முணுமுணுக்கிற மாதிரி தெரியுதே:))

சரி விசயத்துக்கு வருவோம்.மாங்கு மாங்குன்னு பதிவுகள் போடறது அங்கீகாரத்துக்குன்னு சிலர் சொல்றாங்க,இன்னும் சிலர் அலெக்ஸா ரேட்டை ஏத்துறதுக்குன்னே பதிவு போடுறேன்ங்கிறாங்க!வேறு சிலர் சும்மா ரிலாக்ஸ் செய்து கொள்ள என்கிறார்கள்.மற்றும் சிலர் நினைவுகளை பதிவு செய்து வைக்கிறேன் என்கிறார்கள்.இன்னும் சிலர் கூகிளண்ணன் காசு கொடுப்பார்ன்னு நினைச்சு வந்தேன் என்கிறார்கள்.அப்படி சிலர் சம்பாதிப்பதாகவும் வதந்தி:) உண்மையா என்று பரிசோதிக்க நினைச்சா பழைய பதிவர் மோகன் தாஸ் பணம் சம்பாதிப்பது எப்படி என்று முன்பு பதிவர்களுக்கு கற்றுக் கொடுத்தது இணைய தேடலில் கிடைத்தது.இப்போது கூகிள் புதிய சட்டங்களும்,திட்டங்களும் கொண்டு வந்துள்ளதா என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

அவரோட பதிவு லிங்கோடு அவர் சொல்வதை முயற்சித்துப் பாருங்கள்.கூகிளண்ணன் மூலமா ஏதாவது தேறுச்சுன்னா பதிவர் மோகன்தாஸ் அவர்களுக்கு வெறும் நன்றி சொன்னாலே போதும்.
 
செப்புப்பட்டயம்: வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

Saturday, September 17, 2011

பதிவுலகிலும் பல்லைக் காட்டும் சா தீ!

கடந்த பதிவிலிருந்து பதிவுலகை விட்டுப் போய் விடவுமில்லை.அதே நேரத்தில் பதிவுக்கும் அப்பால் பதிவர் சார்வாகன் சமரசம் உலாவும் இடமே தளத்தில் பதிவின் நீண்ட வாசிப்பில் மாட்டிக்கொண்டு எது உண்மையாக இருக்கும் என்ற நீண்ட ஆய்வுக்கான எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பாதி பயணத்தின் போது பின்னாலிருந்து காலை இழுத்து சென்னை கூவம் சாக்கடையில் தள்ளி விட்ட மாதிரியான உணர்வு இப்பொழுது.

இந்திய வரலாற்றில் சுதந்திர காலப் போராட்ட காலம் தொட்டு ஆங்கிலேயர்களாலும் ராஜா ராம் மோகன்ராயின் முயற்சியால் உடன்கட்டை போன்ற அவலங்கள் சட்டரீதியாக நீக்கப்பட்டும்,தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் ராமசாமி காலத்தில் சாதீக்கு எதிரான புரட்சி ஒரு முக்கிய காலகட்டம் என்ற போதிலும்,அரசு நிர்வாகத்துக்கு வந்து இதுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் காலம் வரை சட்டங்கள் செய்தும் சாதி மிக தூரம் பயணம் செய்து அவ்வப்போது நீண்ட தூக்கம் போட்டு விட்டு தன் கோர முகத்தை முகமூடி போட்டுக்கொண்டு தன்னை வெளிப்படுத்தி திரும்பவும் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து கொண்டே வந்திருக்கிறது என்பதை தி.மு.க ஆட்சியின் சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை,இப்பொழுது அ.தி.மு.க பரமக்குடி வன்முறை சம்பவம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காவல்துறையின் துப்பாக்கி சூடு காரணமாக அனைவரையும் பாதிக்கும் விசயமாகவும்,இப்போதைக்கு நாமும் கவலைப்பட்டு விட்டு அடுத்து இனியும் வரும் புதிய பிரச்சினைகளைப் பதிவு செய்பவர்களாகவே பயணிப்போம். சாதீயும் இன்னொரு எதிர்கால சம்பவத்தில் நம்மைப் பார்த்து கொக்கரித்து சிரிக்கும் என்று நம்புவோமாக! 

காரணம், தமிழ் திரைப்படங்கள் வியாபார நோக்காக தயாரிக்கப்பட்ட போதும் சமூகம் சார்ந்த,சாதிக்கு எதிரான ஏதாவது ஒரு முக்கிய கருத்தை பாமரனுக்கும் போய்ச் சேரும் விதத்திலும் நானெல்லாம் யோசிக்கிற வகுப்பாக்கும் என்பவர்களுக்கு கமலஹாசன் படங்கள் சொல்லியவற்றை விட பதிவுகள் ஒன்றும் புது விழிப்புணர்வைக் கொண்டு வந்து விடப்போவதில்லை.கூடவே ஒரு திரைப்படத்தை எப்படி காண்பது எப்படி என்பதை பதிவர் மதுரை சரவணன் பதிவின் சாரமான good touch and bad touchல்  பார்வையிடும் போது புதிதான படிப்பினை தோன்றியது. .

பதிவர் நிரூபன் தளத்தில் ஈழத்தில் வட,கிழக்கு பகுதிகளில் சாதியம் வெளிப்படுவது பற்றிச் சொல்லும் போது தீவுக்கே உரித்தான பின் தங்கிய நிலையென்றே நினைத்தேன்.புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மேற்கத்திய கலாச்சார வாழ்க்கைக்குப் பழக்கமாகியிருப்பார்கள்.ஆனால் அவர்களுக் குள்ளும் சாதிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவை திருமணம் போன்ற சூழல்களில் வெளிப்படுகிறதென்றும் கலந்துரையாடலில் காண நேர்ந்தது.

இவற்றையெல்லாம் கட்டுடைத்து வர்ணாசிரம கட்டமைப்பை குழிதோண்டி புதைக்கும் காதல் திருமணங்களையும் தமிழ் சமூகம் அங்கீகரிக்காமல் பின் தள்ளி விடுகிறோம்.காதல் திருமணம் செய்தவர்களும் அவர்களது சொந்த விருப்பத்தால் தமது வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதால் பொதுவாக உறவினர்கள் ஆதரவும் கிடைப்பதில்லை.தனி மனித வாழ்க்கை இப்படியிருக்க அரசியல்,சமூகம் சார்ந்த மொத்த கோட்பாடுகளையும் தாண்டி சுயநலமாகவோ,அல்லது சாதி உள் கட்டமைப்பின் விசுவரூபம் எந்த விதத்தில் வெடிக்கும் என்று அறியாமலோ தமக்கு தாமே சூனியம் வைத்துக்கொள்ளும் சூத்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம்.

வர்ணாசிரமத்தின் சூத்திரனை விட இன்னொரு சூத்திரன் தான் உயர்ந்தவன் என்று கற்பனை செய்து கொள்கிறான்.இது கற்பனையல்ல நிஜமே என்பதை இணையத்தில் தட்டச்சு செய்யும் புத்திசாலியே உறுதி செய்கிறான்.இதுல கொடுமை என்னவென்றால் வால்பையன் சாதி குறித்த பதிவின்  பின்னூட்டத்தில் பல பதிவர்கள் சொல்லியும் புரியாமலும் ராஜன்,வருண் போன்றவர்கள் நச்சென்று நடுமண்டையில் கொட்டினாலும் அவர்களின் தடாலடிப் பின்னூட்டங்களுக்கும் சளைக்காமல் மூன்று கால் முயலாய் பதில் சொல்லும் சகோதரர்களின் சாதீய உணர்வும்,சவுக்கு தளத்தில் தனது கருத்துக்களை துணிந்து சொல்லும் சங்கருக்கும் கூட சாதிய சாயம் பூசும் சாதீ வெறித்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனிதன் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொள்வதிலோ,திட்டிக்கொள்வதிலோ மூளை கட்டளையிட்ட அடுத்த கணத்தில் கரங்களோ,உதட்டோடு நாக்கும் உடனே செயல்பட வைக்கின்றது.ஆனால் பதிவு செய்பவர்களுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் மூளை கட்டளையிட கைகள் தட்டச்சு செய்து வார்த்தைகள் வடிப்பதற்கும்,தான் சொல்வது சரிதானா என்று சரிபார்க்கும் கால அவகாசம் இருக்கிறது.இதனையும் தாண்டி வார்த்தைகளின் பொருளில் வந்து விழும் வன்மமே இப்படியிருந்தால் கூட்டமாய் சேரும் போது எழும் தைரியம் எவ்வளவு சாதீ வன்மத்தை உருவாக்கும்? இதன் விதைகள் எங்கே தூவப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் வரண்ட பூமியில் வேலையின்மை,வறுமை என்பவற்றை விட தமிழக எல்லை தாண்டாத தவளை மனப்பான்மையா அல்லது விமானத்துக்குள்ளும் சீட்டுக்கு மேலே சூட்கேஸ் பெட்டிக்குள் சாதீ ஜீன்கள் உட்கார்ந்தே பயணம் செய்கிறதா?

முன்பு ஒரு பதிவு படித்ததன் விளைவாய் இரட்டைக்குவளை பற்றி தியரி மட்டுமே சொல்ல முடிந்தது.ஆனால்.கடந்த டிசம்பரில் இந்திய பயணத்தின் போது பொள்ளாச்சிக்கு அருகில் ஆழியார் அணைக்கு நேர் எதிரில் வாகன சாலையிலேயே ஒரு டீக்கடையில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
 
படத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பெரியவருக்கும்,கால் மேல் கால் போட்டு டீ குடிப்பவரும் சில்வர் கிளாஸ் பெருமைக்காரர்கள்.யாரோ ஒரு சகோதரனுக்கோ,சகோதரிக்கோ தாயாகி,நரை முடித்துப்போன அம்மா கண்ணாடி கிளாஸிருந்து இன்னும் பாவமன்னிப்பு அடையாதவர்.
 
இரண்டாம் படத்தில் பழுத்த ஐயப்ப பக்தராக இருப்பவர் டீ போடும் எந்த கிளாஸ் என்று தீர்ப்பளிக்கும் நீதிபதி.எனவே அரசியல் மட்டுமல்ல, அன்றாட சமூக வாழ்க்கையும் சாதீயை வளர்க்கின்றன.
தமிழகத்துக்கு சீனாக்காரனின் உதவியோடு இலங்கைக்காரன் சண்டை கொண்டு வந்தால் ஒழிய ஜனத்தொகை குறையாதுன்னு இயற்கையே பதிவர் தெகா சொல்வது போல் சமூக கட்டமைப்பின் வடிவில் சா தீ எனும் பெயரில் மரணத்தைக் கொண்டு வருகிறதா?
காரணம் சிலர் வளைகுடா வடிவேல்களாகவும் ட்விட்டுவதாக பதிவுகளின் பின்னூட்டங்களில் காண முடிகிறது.

மதங்களுக்கும் அப்பால் மனிதன் சிந்திக்க வேண்டுமென்ற பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டியும் கடவுள் பக்தர்களும், கூடவே மூட நம்பிக்கைகளும் வளரும் போது இவற்றோடுப் பின்னிப் பிணைந்த வர்ணாசிரமும் கூடவே வளர்கிறது.இதில் எப்படி அறுவடை செய்வது என்பதை யோசித்துக்கொண்டும் சிலர் உலா வருவார்கள்.ஈழம் குறித்த ஒருமித்த கருத்து திரண்டு வரும் இந்நேரத்தில் வன்முறை திசை திருப்பல்களுக்கு அரசியல் காரணங்களும் உள்ளதா என்ற சந்தேகங்களையும் தாண்டி சாதி நம்மைப் பார்த்து கைதட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.எது குறைய வேண்டும்,மறைய வேண்டுமென்று நினைக்கிறோமோ அவை இன்னும் வேர் பிடித்து வளர்கின்றன.முன்பை விட சாதீயும் என்பதை பதிவுலகம் வரை வந்து நிற்கின்றது.சாதீயின் அடுத்த வருகைக்காக காத்திருப்போம்.

Monday, September 5, 2011

சுப்ரமணியன் சுவாமியின் இலங்கை தீர்வு

 சுப்ரமணியன் சுவாமியின்  படிப்பு பொருளாதாரத்தில் டாக்டரேட்,சைமன் குஸ்நெட்ஸ்,பால் சாமுவேல்சன் என்ற இரு நோபல் பரிசுக்காரர்களுடன் இணைந்து பணியாற்றியது ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் டெல்லி ஐ.ஐ.டியின் பேராசிரியர்,ஜனதா கட்சி அரசின் போது  சட்டம்,நீதி மற்றும் வர்த்தக அமைச்சர் என்ற அவரது புரபைல் இன்னும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விசயம.

 படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிகராக சண்டிக்குதிரை மாதிரியாக யாரிடமும் நட்பும் இல்லாமல்,பாசமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படியிருக்க முடியும் என்ற கேள்விகள் கூட இவர் மீது எழுகின்றன.அவரோட வாக்குப்படி ராஜிவ் காந்தியை நண்பன் என்கிறார்.அதே சமயத்தில் சோனியா காந்தி உயர்நிலைப்பள்ளியைக் கூட முடிக்கவில்லையென்றும்,லண்டனில் கல்லூரியில் படித்ததாக சொல்வதெல்லாம் பொய் என்றும் தூண்டி துருவி ஆதாரங்களையெல்லாம் கொண்டு வருகிறார்.

 இது மட்டுமா பிரியங்கா,ராகுல் என இத்தாலிய வம்சம்,ராகுல் எப்படி பிரதமர் ஆவார் என்று பார்த்து விடுகிறேன் என்ற சூளுரை வேறு.ஒரு வேளை பி.ஜே.பி சார்பாளனோ என்று சந்தேகித்தால் வாஜ்பாய் இவரை மந்திரிசபையிலேயே சேரவிடாமல் ஒதுக்கி விட்டார்.எனது அரசியல் எதிரிகள் என ஒரு நீண்ட பட்டியலே வைத்திருக்கிறார்.அப்படியிருந்தும் ஜெகஜீவன்ராம்க்கு பாஸ் மார்க் வழங்குகிறார்.இப்பொழுது மீராகுமார் கூட இவரைக் கண்டு கொள்வதில்லை.
மத்தியில்தான் இப்படியென்றால் தமிழ்நாட்டில் மதுரையின் சோழவந்தான் மண்வாசனையுடைய மனிதனாச்சே என்று கணிக்க நினைத்தால் தமிழர்களே பிடிக்காத குணம்.இது தவிர கருணாநிதி எட்டிக்காய்.ஜெயலலிதாவோ சொல்லவே வேண்டியதில்லை.நான் சண்டைபோட்ட மனிதர்களில் ஜெயலலிதாவை மட்டுமே அடக்க சிரமப்பட்டதாக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.அடுத்தவர்கள் மீது கேஸ் போடுவது லட்டு சாப்பிடற மாதிரி.அதே சமயம் வாய்ச்சவடால் செய்து விட்டு காம்ப்ரமைஸ் செய்யும் சுபாவமும் கூட.

காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் ராசாவை களி திங்க வைத்தது மாத்திரமே அரசியல் பதவிகள் இல்லாமல் கூட செய்த சாதனைகளில் உச்சம் எனலாம்.இதுமட்டுமா சாதனை செய்தேன்!இந்தியா அந்நியச்செலவாணி நெருக்கடியில் இருக்கும் போது எந்த கடன்பத்திரத்திலும் கையெழுத்துப் போடாது நிபந்தனையில்லாமல் அமெரிக்காவிடமிருந்து 2 பில்லியன் டாலர் வாங்கித் தந்தேன் என்கிறார்.உலகிலேயே முதல் நல்ல,கெட்ட வியாபாரி அமெரிக்கா நிபந்தனையில்லாமல் கடன் தந்திருந்தால் சுப்ரமணியன் சுவாமியின் சாதனையே எனலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வரும் போர் விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பின் குவைத்,ஈராக் நோக்கி செல்லலாம் என்ற நிர்பந்தத்தில் பெரிய மீனாக வளைகுடாப் பெட்ரோலைக் கட்டுப்படுத்தும் சக்தியை உணர்ந்தே அமெரிக்கா 2 பில்லியன் டாலர் சின்ன மீன் தூண்டிலை  கடன் பத்திரமில்லாமல் வீசியிருக்கும்.அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் சுப்ரமணியன் சுவாமி நண்பன்.எனவே அமெரிக்க உளவாளி, சீனாவின் கைப்புள்ள என்ற பட்டப்பெயர்கள் இயல்பாய் இவருக்கு வந்து ஒட்டிக்கொள்கின்றன.
டெல்லிக்கும்,மெட்ராஸ்க்குமான அடிக்கடி பயணத்தில் இந்தியும்,தமிழும் கற்றுக்கொள்ளும்படி ஆங்கிலத்திலிருந்து நாக்கு திருந்தி விட்டாலும் ஐயாவுக்கு தமிழ்ன்னா எட்டிக்கசப்பு.திராவிட கொள்கையாளர்களுக்கு தமிழும்,பெரியாரையும் பிடிப்பது போலவே சுப்ரமணியன் சுவாமிக்கும் சமஸ்கிருதமும்,காஞ்சி பெரியவாள் மாத்திரமே பிடித்தவைகள்.

அவரவர் சுயவிருப்பங்கள் இருப்பதில் தவறில்லை.ஆனால் அடுத்தவர்களின் வாழ்வின் விளையாட்டில் இந்துத்வா நிலைப்பாட்டில் இஸ்லாமியர்களை வெறுப்பதும்,தமிழர் எதிர்ப்பு உணர்வு  மாத்திரமல்லாமல் சுப்ரமணியன் சுவாமியின் ஆத்மா எங்கே மரித்துப்போகிறதென்றால் எந்த மனிதர்களை யும் நேசிக்காத மனபாவம்.இந்த குணம் எங்கே வெளிப்படுகிறதென்பதை சமீபத்தில் சுப.வீரபாண்டியனுடன் கலந்துரையாடல்(?) செய்த புதியதலைமுறை தொலைக்காட்சி மட்டுமில்லை, விடுதலைப்புலிகள் மீதான அவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலும் புரியும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில தவறுகள் விமர்சனத்துக்குரியதென்ற நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை வகுத்துக்கொண்டால் கூட தவறில்லை.மொத்த தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு வரலாற்றில் மட்டுமல்ல, அனைவரிடமும் இவரை அந்நியப்படுத்தியே வைக்கும்.
விடுதலைப்புலிகளின் வலுவான இயக்கம் இல்லாமல் மறைந்து போனதன் பின்பான நிலையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பற்றி சின்ன விமர்சன துரும்பைக்கூட கிள்ளி போடாத நிலையில் தமிழரை நேசிக்காத அப்பட்டமான முகம் இவரிடம் தெரிகிறது.விடுதலைப்புலிகள் மீதான இவரது கோபத்துக்கு என்ன காரணம் என்று இவரிடம் கேட்டால் விடுதலைப்புலிகள் மார்க்சீய சிந்தனைவாதிகள் என்கிறார்.அதனால்தான் ரஷ்யாவும்,சீனாவும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை செய்கிறதோ?இந்துத்வா என்ற மொத்த சிந்தனையில் பார்த்தாலும் கூட தமிழக தமிழர்களை விட வலுவாகவே வட கிழக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்களும் கோயில் தேர் இழுக்கும் வலிமைக்காரர்களாயிற்றே!சுப்ரமணியன் சுவாமி என்ற களிமண்ணில் எந்த உருவத்தைக் கொண்டு வருவது?

இத்தனை விமர்சனங்களை முன்வைத்தும் கூட சுப்ரமணியன் சுவாமியை இங்கே விவாதிக்க வேண்டிய அவசியமென்ன? தமிழீழம் குறித்து தொடர்ந்து அவ்வப்போது பலரும் கருத்து பகிர்வுகளை முன்வைத்தாலும் இலங்கையின் வடகிழக்கு தமிழர்களுக்கான உறுதியான  தீர்வாக எதுவுமே இல்லை . ராஜபக்சேவை போர்க்குற்றவாளியென குரல் கொடுத்து விடுவதில் மட்டுமே தீர்வுக்கான முடிவுகள் வந்து விடுமா?என்றாவது ஒரு நாள் ராஜபக்சே குழுக்களின் ஆட்சி மறையும் என்ற போதிலும் தமிழர்களுக்கான தீர்வு என்ன?தீர்வுக்கான சாத்தியங்கள்  என்ன எனபதை தமிழ் உணர்வாளர்கள் ஒரு புறம் குரல் கொடுத்துக்கொண்டிருக்க இலங்கைப் பிரச்சினையை தன்னால் மட்டுமே தீர்க்க முடியுமென்று சுப்ரமணியன் சுவாமி  மூன்று வழிகளை முன் வைக்கிறார்.

ஒரு பக்கம் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பதோடு சட்டசபை தீர்மானம் போடவும்,புலம் பெயர் தமிழர்களில் பலர் உணர்வோடு தமிழீழத்துக்கு குரல் கொடுக்க   ஏதாவது வழியில் 30 வருட போர்களில் அவதியுற்ற மக்களுக்கு விடியல் வந்து விடாதா என்ற நம்பிக்கையில்  முடிந்த வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்க அவரோ ஈழப்பிரச்சினையை தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார்.

அதற்கு வை.கோ வும்,பழ.நெடுமாறனும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளவேண்டுமென்ற முன் நிபந்தனையை விதிக்கிறார்.மண் குதிரையை நம்பி இந்து மகாசமுத்திரத்தில் இறங்குவதா என்று   அவர்களும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு மொத்த தமிழர்களுமே இதனை கண்டு கொள்ளவில்லை.சுப்ரமணியன் சுவாமி கிட்ட தூது விடுவதை விட கருணாநிதி,ஜெயலலிதா இருவரின் தாவு தீரும் சண்டையை தமிழர்களால் நிறுத்த முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டின மாதிரிதான் என்பது தமிழர்களுக்கு தெரியாதாக்கும்! 

சுப்ரமணியன் சுவாமி விடுதலைப்புலிகள் மீதான தனது நிலைப்பாடு வேறு,தமிழ் மக்கள் மீதான நிலைப்பாடு வேறு என்று ஜெயலலிதா மாதிரியாவது  நினைத்தால் அதனை அறிக்கைகள் மூலமாகவும்,பேட்டிகள் மூலமாகவும் வெளிப்படுத்தலாமே!ஆனால் அதனையும் செய்வதில்லை. குட்டையையும் குழப்புவேன்,மீனும் பிடிப்பேனாக்கும் என்று இலங்கையின் தீர்வுக்காக மூன்று வழிகளை சொல்கிறார்.சுப்ரமணியன் சுவாமி  சொல்லும்  மூன்று தீர்வுகள் என்ன?

1. இந்தியா மாதிரியான பெடரல் அமைப்பு (Federal Government)


2. தனி நாடுகளாக பிரித்து விடுவது (Sovereign Two States)


3. இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுவது (United Srilanka India)


இந்த மூன்றில் ஏதாவது நிகழுமா என்றால்  முதலாவதான பெடரல் அமைப்புக்கு தன்னைப் போர்க்குற்றங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், உலக நாடுகளின் அழுத்தங்களால் ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்தாக வேண்டுமென்ற நிலையில் ராஜபக்சே பாராளுமன்ற ஆதரவுடன் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் பெடரல் அமைப்பாகவே இருக்கும்.இதற்கு சுப்ரமணியன் சுவாமியின் உதவியெல்லாம் ஒன்றும் தேவையில்லை.
இலங்கையை இரண்டாக தனி நாடுகளாகப் பிரித்து விடுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.இதனை தமிழர்கள் குரல் எழுப்புவதோடு  சிங்களவர்களும் குரல் எழுப்பும் சந்தர்ப்பங்கள் உருவாகுவது சிறப்பாக இருக்கும்.ஒற்றை ஆட்சியே ஆனால் சம உரிமை கிடையாது என்பது இப்போதைய கால கட்டத்துக்கு வேண்டுமானால் இலங்கை அரசுக்கு சாதித்து விட்டோம் என்ற சின்ன மகிழ்ச்சியை தரலாம்.ஆனால் தொலைநோக்கில் நீரு பூத்த நெருப்பாகவே இருப்பதற்கே வழிவகுக்கும்.இல்லையென்றால் தமிழர்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக வாழும் சூழல்களுக்குப் பழகிப் போனவர்களாக சில அரசு சலுகைகள் உதவக்கூடும்.

இரு நாட்டுக் கொள்கைக்கு தமிழர்களின் ஒற்றுமை ஒரு பக்கமிருக்க அனைத்து உலக நாடுகளில் பெரும்பான்மையானவைகளின் தமிழர் சார்பு நிலை உருவாக வேண்டும்.இந்தியா உள்பட கடல்வழி பொருளாதாரத்தில் தங்களின் நலன்கள் எப்படி பாதுகாக்கப்படும் என சீனா,இந்தியா போன்ற நாடுகளை முன்வைத்தே அமெரிக்காவும்,ஐரோப்பிய நாடுகளும் தலையிடும். மிக முக்கியமாக வளைகுடா,லிபியா,சிரியா,இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளிலிருந்து தனது கவனத்தை வேறுபக்கம் திருப்புவதற்கான கால சூழல்களில் மாத்திரமே இலங்கையில் மூக்கை நுழைக்கலாமா?வேண்டாமா என்பதை மேற்கத்திய நாடுகள் தீர்மானம் செய்யும்.நவம்பர் மாதம் இலங்கை அரசு வெளியிடும் தனக்கு தானே குற்றமும்,தீர்ப்பின் முடிவுக்காக ஐ.நாவும்,மனித உரிமை அமைப்புக்களும் காத்துள்ளன.எனவே இன்னும் சில மாதங்கள் எந்த சலசலப்பு ம் இல்லாமலே  2011 கூட  நகரும்.

மூன்றாவதாக இந்தியாவும்,இலங்கையும் புத்திசாலி நாடுகளாக இருந்தால் செய்ய வேண்டியது இலங்கையை மொழி வாரி இரு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்து விடுவது.தற்கான ஸ்டேட்ஸ்மென்ஷிப் மன்மோகனுக்கோ,ராஜபக்சேவுக்கோ இப்போதைக்கு இல்லையெனலாம்.

ஒருவேளை சீனாவை நோண்டி விடும் திட்டம் ஏதாவது சுப்ரமணியன் சுவாமியிடம் இருக்கிறதோ என்னவோ:)ஒரு வேளை பி.ஜே.பி வலுவாக வருங்காலத்தில் ஆட்சி புரிந்தால் அகண்ட பாரதம் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக சீனாவின் கடல் பொருளாதார ஆதிக்க கிரியா ஊக்கி காரணமாக மூன்றாம் நிலைக்கு மாறும் வாய்ப்புக்கள் உள்ளது.   இலங்கை ஐ.நாவின் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மை நாடாகி விட்டதால் இந்திய சாத்தியம் தற்போதைக்கு இல்லையென்றே கூறலாம்.ஆனாலும் இந்தியாவை நம்பிய   நிலையில் இலங்கை இன்னும் தொடரவே செய்யும்.

த்மிழர்களின் தாகம் தமிழீழமா அல்லது சேர்ந்தே வாழ்வோம் என்ற பெடரல் அமைப்பா அல்லது இப்போது தொடரும் சம உரிமைகளற்ற வாழ்க்கைப் போராட்டமா என்பதே இப்போதைக்கான கேள்வி.சுப்ரமணியன் சுவாமியை துணைக்கு அழைக்கலாமா?

Wednesday, August 31, 2011

மரணதண்டனைக்கும் அப்பால்!

இந்திய அரசியலமைப்பு சட்டம், பாராளுமன்றம், குற்றவியல், நீதித்துறை, மக்களாட்சி போன்ற ஜனநாயகத்தின் தூண்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடை முக்கியமான ஒரு கால கட்டத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன்பும் நீதிமன்ற மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சான்றுகள் இருந்தாலும் முந்தைய பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் நிகழ்ந்த விதம்,சோனியா குடும்பத்தாரின் அரசியல் பங்கீடு மற்றும் காங்கிரஸ் விசுவாசிகளின் அழுத்தம்,நீதிமன்ற தீர்ப்பின் காலகட்டம், தமிழர்களின் உணர்வு போன்றவை மரணதண்டனை குறித்தான  புதிய கேள்விகளைஉருவாக்கி உள்ளது.

 ஒருபக்கம் மரணதண்டனையை நிறுத்துவது குற்றங்களை ஊக்குவிக்கும் என்றும்,இன்னொரு பக்கம் ஒரு உயிரைக் கொல்லும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லையென்ற மனித உரிமைக்குரல்கள் என்ற இருபக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றும் கூட ஒரு நீதிபதி மரணதண்டனை விதித்தால் மட்டுமே இன்னொருவன் குற்றங்களுக்கு பயந்து குற்றம் செய்ய மாட்டான் என்று NTDV யில் கருத்து தெரிவித்தார்.தேசிய அளவில் தமிழக மக்களின் குரலும், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டுமென்ற அ.தி.மு.க அரசின் சட்டசபை தீர்மானமும் இன்னும் தலைக்கு மேல் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் மரணதண்டனை இடைக்கால தடையும் என்ன பாதிப்புக்களை உருவாக்கும் என்ற கருத்துரையாடல் என்.டி.டிவியில் நிகழ்ந்தது.

மரணதண்டனைக்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி, ராஜிவ் காந்தி கொலைவழக்கை துப்பு துலக்கிய கார்த்திகேயனும்,மரணதண்டனைக்கு எதிரான குரலாக வழக்கறிஞர் வைகை,மீனா கந்தசாமியும் குரல்கொடுத்தார்கள்.நீதிமன்ற தீர்ப்பின் சார்பாக ஜெசிகா லால் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி(R.S.sodhi)யும் பங்கு பெற்றார்கள்.பர்கா தத்தின் நிகழ்ச்சியின் முன்னுரையாக கிரிமினல் லாயர் ராம் ஜெத்மலானி மரணத்தின் வலி 30 வினாடிகள் என்றும் 11 வருடங்கள் தாமதிக்கப்பட்ட கருணைமனு ஆயிரம் மரணதண்டனைகளுக்கு சமம் என்ற தொலைபேசி வாக்கியங்களோடும், சோவின் நிலைப்பாடான மூவருக்கான நீதிமன்ற இடைக்காலத்தடை போல் மற்றவர்களும் கேட்பார்கள் என்ற பெருந்தன்மையான கவலையுடனான  கருத்துரையாடல் துவங்குகிறது.

கலந்துரையாடலில் சுப்ரமணியன் சுவாமி  தனது வாதத்திற்கு துணையாக இந்திய ராணுவம் இலங்கை சென்றது பற்றியும் விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பைக் காட்டினாலும் மரணதண்டனைக்கு எதிரான தமிழர்களின் குரலின் பின்ணணியில் சோனியா காங்கிரஸின் இலங்கைப் போர்க்குற்றங்களுக்கான ஆதரவு இருப்பதை பதிவு செய்யாமல் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடையை அப்சல் குருவின் மரணதண்டனையோடு ஒப்பிட்டு மட்டுமே விவாதம் முடிவடைகிறது.

ஆங்கில வாதங்களை நேரில் காண நேரமுள்ளவர்கள் இங்கே போய் கேட்கலாம்.

http://www.ndtv.com/video/player/news/rajiv-killers-should-they-hang/209435

(ஒருவேளை இன்னும் சில தினங்களில் தொடுப்பு நீக்குவார்கள் என்று இணைக்கவில்லை)

நேரம் இல்லாதவர்களுக்கும் பதிவுக்கு இணைய பூ சர்க்கரையாக...

பர்கா தத் முன் வைத்த முதல் கேள்வியாக ரேணுகா சவுத்ரியிடம் இடைக்கால தடை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்பதற்கு காங்கிரஸ் நிலைப்பாட்டில் பதவி சுகம் அனுபவிப்பவர் என்ன சொல்வார் என்று சொல்லத்தேவையில்லை.இருந்தாலும் தமிழக சட்டசபை தீர்மானம் தமிழக அரசைப்பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.இந்திய பிரஜையாக இது குறித்து கவலைப்படுகிறேன் என்றார்.

ரேணுகா சவுத்ரியின் கருத்துக்கு சுப்ரமணி சுவாமி ஏன் சிரித்தீர்கள் என்று பர்காதத் கேட்டதற்கு முன்பொரு முறை 2G விவாதத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு சட்டம் தெரியாது என்று மூஞ்சியை கிழித்த மாதிரியே ரேணுகா சவுத்ரிக்கும் ஒன்றும் தெரியாது என்ற சுப்ரமணியன் சுவாமி தமிழக சட்டமன்ற தீர்மானம் மக்கள் அழுத்தங்களுக்கு பயந்த கோழைத்தனமானது என்றும் இதனால் எந்த தாக்கமும் இல்லையென்றார்.(It has a no impact at all)தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானதா என்ற கேள்வியை ரேணுகா சவுத்ரியிடம் பர்காதத் திருப்ப இதுபற்றி தான் ஒன்றும் சொல்வதற்கில்லை என ரேணுகா தப்பித்துக்கொண்டார்.சுப்ரமணியன் சுவாமி ஒரு சிரிப்பை காமிராவுக்கு தந்தார்.


அடுத்து வழக்கறிஞர் வைகை அவர்கள் மூவரும் தடா மீதான குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட வில்லையன்றும்,கொலைக்குற்றம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்றும் தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானது அல்ல என்றும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது சட்டசபையின் பணியென்றும் வாதித்தார் வழக்கறிஞர் வைகை.பர்கா தத்தின் அடுத்த கேள்வியான மரணதண்டனைக்கு எதிரான குரலாக ஒலிக்கிறீர்களா அல்லது வெளிப்படைத்தன்மையில்லாத தீர்ப்பின் அடிப்படையில் வாதிக்கிறீர்களா என்றதற்கு 1998ம் வருடத்தில் கொலை குற்றத்திற்கு 1999ல் கருணைமனு கவர்னரால் நிராகரிக்கப்பட்டு 2000ம் வருடம் முதல் நிறுத்திவைக்கப்பட்ட காலம் கடத்திய அடிப்படையிலே தனது கருத்து என்றார்.

திரும்பவும் பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் கேள்வி எழுப்ப முந்தைய அரசுகள் காலம் கடத்தின என்றும் இதே கருணைமனுவை அப்சல்குருவும் கேட்க கூடும் என்றார்.

அடுத்து முன்னாள் ஜஸ்டிஸ் ஆர்.எஸ்.சோதியிடம் பர்காதத் திரும்ப நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இயலாதென்றும் இங்கே பிரச்சினையென்னவென்றால் கால தாமதமாக்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.இரண்டு வருட கால தாமதமான மரணதண்டனையே ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதென்றும் மூவரின் மரணதண்டனையின் காலம் 11 வருடங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளதென்றும் சொன்னார்.பர்கா தத்தின் மறுகேள்வியான இந்த மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற முடியுமா?முடியாதா என்ற கேள்விக்கு ஆம் என்று ஆர்.எஸ்.சோதி பதில் அளித்தார்.

இப்பொழுது முன்னாள் சி.பி.ஐ அதிகாரியும்,ராஜிவ் காந்தி கொலைவழக்கின் காலங்களை நினைவுபடுத்துபவருமான கார்த்திகேயனிடம் பூனைக்குட்டி இப்பொழுது வெளிவருமென்று கவலைப்படுகிறீர்களா என்றதற்கு (Are you worried about the pandora box will be opened now?) நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையென்றும்,மூவரின் மரணதண்டனை நீக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்றும்,தான் தனது கடமையைச் செய்தேன் என்றும் சொன்னார்.மேலும் மூவரின் கருணைமனுவை ஏற்பதற்கு சமூகம், குற்றங்களுக்குப் பின்பான நடத்தை,இதனை விட தாம் செய்தது தவறு என்ற ஒப்புதல் மட்டுமே கருணை மனுவுக்கு தகுதியானது என்றார்.

இந்த நேரத்தில் கார்த்திகேயனின் போலிஸ் மூளை எப்படி வேலை செய்து வழக்கின் ஓட்டைகள் போலவே சிக்கலில் கொண்டு சேர்க்கும் எனபதற்கு நீண்ட வாசிப்பு ரசனையுள்ளவர்களுக்கு பழைய நாவலான சிட்னி ஷெல்டனின் அதர் டைட் ஆஃப் மிட்நைட் (Other side of midnight by Sidney Shelton) புத்தகத்தின் இறுதிப்பகுதி க்ளைமேக்ஸ் கதையின் ட்விஸ்ட்டை சிபாரிசு செய்கிறேன்.
 
இதுவரையிலும் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கார்த்திகேயன், சுப்ரமணியன் சுவாமி,ரகோத்தமன் என்ற மூவரின் கருத்துக்களும்,ஜெயின் கமிசன் தீர்ப்பு,திருச்சி வேலுச்சாமி,சி.பி.ஐ முன்னாள் ஆய்வாளர் மோகன்ராஜ் போன்றவர்களின் அடக்கி வாசிக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களும் இன்னும் வெளிப்படையான உண்மைகள் வெளி வராமலேயே நீதிமன்றத் தீர்ப்பின் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பர்காத்தின் கேள்வியான பேரரறிவாளனின் தாய் தனது மகன் கொலையின் சதித்திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லையென்றதற்கு சுப்ரமணியன் சுவாமியின் அகந்தையான பேச்சு (Arrogance of...we go as per supreme court judgement and not mother's judgement or girl friend's judgement)உச்சநீதி மன்ற தீர்ப்புதான் தனக்கு முக்கியமென்றும்,தாய்,பெண்நட்பு,ஆண்நட்பு தீர்ப்பையெல்லாம் கணக்கில் கொள்ளவியலாது என்றும் மூவரும் கருணைக்கு தகுதியில்லாதவர்கள் என்றும் கூறினார்.
 
பர்காத்தின் கேள்வி மீனா கந்தசாமி என்பவரிடம் திரும்புகிறது.இலங்கை தமிழர்கள் பற்றிய அனுதாபங்கள் தமிழர்களுக்கு இருந்தாலும்,ஒரு தேசிய தலைவரின் கொலைக்கும் அப்பால் இடைக்காலத் தடைக்கான தமிழக மக்களின் மகிழ்ச்சி இந்திய தேசிய உணர்வுக்கு எதிரான ஒன்றாக இருக்குறதே என்பதற்கு மீனா கந்தசாமியின் பதில்.

ராஜிவ் காந்தியின் குற்றவிசாரணை அரசியல் வாதிகளின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். பேரறிவாளன் பேட்டரி கொடுத்ததாக வழங்கப்படும் நீதி நியாயமாக இருக்காது.பம்பாய் குண்டு வெடிப்புகளின் போது முஸ்லீம்களின் ஓட்டுரிமையை நீக்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாடு நீதியைப் பெற்றுத்தராது.ஒருவேளை ராஜிவின் கொலை தற்கொலை தாக்குதலாக இல்லாமல் வேறு அரசியல் காரணங்களுக்காக இருந்தால் இதுவரை தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறித்த நீதி என்ன?நளினியின் தாய் மருந்து வாங்கிய பார்மசி பில்லின் அடிப்படையில் கூட கைது செய்யப்படும் போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?இன்றைக்கு நான் பேரறிவாளன் சார்பாக பேசுவதால் நான் கூட சதித்திட்டத்துக்கு உடந்தையென்பதா நீதி?அரசியல் பெரும்புள்ளிகளின் கோணமெல்லாம் விசாரணையில் மறைக்கப்பட்டுவிட்டது என்றார்.

பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் மீனா கந்தசாமி சுட்டிக்காட்டும் கொள்கை முரண்கள்( Idealogy differences) பற்றி வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசலாம் என்றார்.

மீண்டும் ஆர்.எஸ்.சோதி  நீதிமன்ற தீர்ப்பு மாற்றமில்லாதது என்று சட்டம் குறித்து சொன்னதற்கு சுப்ரமணியன் சுவாமியின் முகத்தில் சிரிப்புடனான மரணத்தை ரசிக்கும் மகிழ்ச்சி தென்பட்டது

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எம்.எல்.ஏ அப்சல் குருவின் மரணதண்டனை பற்றிக் குறிப்பிடும் போது தமிழக சட்டசபையின் தீர்மானத்தில் காஷ்மீர் மக்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதென்றார்.

அப்சல் குருவின் மரணதண்டனை பற்றி காஷ்மீர் மக்களும்,சட்டசபையுமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் ராஜிவ் காந்தியின் ம்ரணம்,நீதிமன்ற தீர்ப்பு,தமிழக சட்டசபையின் தீர்மானம் போன்றவை இலங்கையை சுற்றிய ஒன்று என்பதும் இலங்கை குறித்த போர்க்குற்றங்கள் பின் தள்ளப்படுவதற்குமான துவக்கமாகக் கூட இந்திய அளவில் காஷ்மீருடனும், பாகிஸ்தானுடனும் அப்சல் குருவின்  தீர்ப்பை இணைக்கும் ஆபத்துமுள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

சுப்ரமணியன் சுவாமியின் வாதப்படி இந்தியாவிடம் இருக்கும் குற்றங்களுக்கான எதிர்ப்பு கருவியாக விளங்குவது மரணதண்டனை மட்டுமே என்றார்.முந்தைய கால கட்டத்தில் மரணதண்டனை குற்றங்களுக்கான எதிர்ப்பு சக்தியாக விளங்கியிருக்க கூடும்.ஆனால் இப்பொழுது உயிரையும் மதிக்காத தற்கொலைத் தாக்குதல் நிகழும் கால கட்டத்தில் மரணதண்டனை எப்படி எதிர்ப்பு கருவியாக பயன்படும் என்று மீனா கந்தசாமி எதிர்க்கேள்வியை முன் வைத்தார்.

இன்னும் எத்தனை விவாதங்களை முன் வைத்தாலும் ராஜிவ் காந்தியின் படுகொலை தவறான ஒன்று என்பதிலும்,ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை முற்றுலுமாகப் புரட்டிப்போட்டு விட்ட நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ல இயலாது.அதே வேளையில் முந்தைய பிரதமர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்கள் கொடுத்த உயிர்ப்பலிகளின் விலையும் அதிகம்.இந்தக்கோட்டிலிருந்து விலகியும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் அவமதிப்பை சந்தித்தும், இலங்கைக்கான உதவியும்,அது இந்தியாவையே மீண்டும் வந்து தாக்கும் பூமராங் என்பதையெல்லாம் எந்த தொலைக்காட்சிகளும் முன்வைத்து விவாதிப்பதில்லை.
 
ராஜிவ் காந்தியின் கொலைக்குற்ற விசாரணக்குப் பின்பான மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு தடா போன்ற சட்டங்கள் எல்லாம் பயன்படுத்தி வாய்மூடிகளாய் போன தமிழர்களின் குரல் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளுக்குப் பின் மீண்டும் எழுந்துள்ளது.முந்தைய தி.மு.கவின் அரசியல் நிலைப்பாட்டால் ஆட்சி இழப்பு போன்ற நிகழ்வுகள் நடந்த உள்குத்து வேலையையும்,மக்களின் குரல்வளை நெரிக்கும் திட்டங்களும் கூட காங்கிரஸாலும்,சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களின் மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாலும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன.இதனை விட முக்கியமாக பேரறிவாளன்,சாந்தன், முருகனின் மரணத்தின் தூக்கு கயிறு இன்னும் முற்றிலுமாக நீக்கப்பட வில்லையென்பதையும் தமிழர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

பட உதவி: கூகிள்

.

Tuesday, August 30, 2011

3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை!

நாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பேயில்லை என்ற வசனம் பிடிக்காதவர்கள் சுப்ரமணீயன் சுவாமி,சோ,என்.ராம்,ராம கோபாலன் போன்ற இந்துத்வாவாதிகள்.இந்த லட்சணத்தில் இவர்கள் இன்று போய் நாளை வா என்ற ராமயாண கலாட்சேப காதலர்கள வேறு.

விடுதலைப்புலிகள் மீதான கோபம் அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ,மசூதிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்ற இஸ்லாமியர்களுக்கோ இன்னும் சொல்லப்போனால் சோனியா குடும்பத்திற்கோ கூட இருக்க கூடும்.இந்துத்வா பெயரில் திரியும் இண்டலக்சுவல் உளவியல் தீவிரவாதிகளுக்கு என்ன கோபம் இருக்க முடியும்? ராஜிவ் காந்தியை நண்பேண்டா சொல்வேன் என்று சுப்ரமணியன் சுவாமி சொல்ல முடியாதபடி சோனியாகாந்தி பற்றிய உண்மைகளோ அல்லது அவதூறுகளோ உங்கள் உதடுகளில் உதிர்த்த முத்துக்களாகவும்,எழுத்தாகவும் இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கிறது.என்.ராம்க்கு லங்கா ரத்னா கழுதைக்கு குட்டி சுவர் பரிசே சாட்சி.

விடுதலைப் புலிகள் இல்லாமல் இலங்கை தமிழர்கள் பற்றி விவாதிக்க இயலாது என்ற போதிலும் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர் என்ற முகமூடியிலாவது சோ போன்ற பத்திரிகையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய இயலும்.இப்பொழுது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட விட்ட நிலையில் மக்க்ள மீதான மகத்தான அன்பு கொண்டவனாக இருப்பவன் அடக்குமுறைக்கு எதிர்த்து குரல் கொடுப்பவனாக இருப்பவனே உண்மையான பத்திரிகையாளன். போபர்ஸை வெளிக்கொண்டு வந்த ஆர்வம் இலங்கைத் தமிழர்களின் துயரங்களில் காட்டாமல் போனதன் காரணம் என்ன?இதோ தமிழகத்தில் நிகழும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கும் போது மூவரின் மரணதண்டனையை ரத்து செய்வதை எதிர்த்து  உங்களின் ஒட்டு மொத்த குரல் ஒலிப்பதன் காரணம் என்ன?

கலைஞர் கருணாநிதி அவரது சுயநலத் தேவையின் கணங்களில் மட்டுமே உதிர்க்கும் தமிழன் பார்ப்பனன் என்ற பிரிவினை உங்கள் ரத்த நாளங்களிலும் ஊறிக்கிடக்கிறதா?கமல்,ஞாநி,வாலி போன்றவர்கள் பூணூல் துறந்த மகத்தான மனிதர்களாக வலம் வரும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எந்த சம்பந்தம் இல்லாமல் அடுத்தவன் உயிர் போவதில் உள்ள மரணத்தின் மீதான பற்றுக்கு காரணமென்ன?ஜெயேந்திரர் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப் பட்டு இந்து மதத்திற்கான இழுக்கு என்ற பெயரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்படும் நேரத்திலும் மரணதண்டனைக்கு எதிரான நிலையில் உங்கள் குரல் வெளிப்படுமா?

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலார்”

இந்த பதிவை இன்னும் நீட்டி முழக்கும் எண்ணம் இல்லை.

Monday, August 29, 2011

மரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்

இப்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் 1907 செப்டம்பர் 28ல் பிறந்து  1931ம் வருடம் மார்ச் 23ம் தேதி பிரிட்டிஷ் ராஜ் சட்டத்தில் தூக்கு கயிற்றால் பகத்சிங்குடன் ராஜ் குரு,சுக்தேவ் என்ற இருவருடன் மரணத்தை தழுவிக்கொண்ட இந்திய சுதந்திர வரலாற்று கால கட்டத்தில் சிறையில் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன் என்ற பகத்சிங்கின் உருது எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியின் என்னால் இயன்ற தமிழாக்கம் இது.இன்றைய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்படி பாகிஸ்தானியனான பகத்சிங் இந்தியனாகப் போற்றப்படுவது வரலாற்றின் முரண்.

// LTTE leader velupillai Prabakaran lived an elusive life with an admiration to Bhagat Singh and Subash Chandra Bose with a vision of freedom from Srilanka's Singala Chavanism.Yet he was brandized as an terrorist as Bhagat Singh was named by British.

Long live Bhagat singh's visionary thoughts.//

என்ற பின்னூட்டத்தின் பாதிப்பை இங்கே பதிவு செய்கிறேன். இனி பகத்சிங்  எழுதியதாக பகத்சிங்கின் வரிகளில்...

ஒரு புதிய கேள்வி உருவாகியுள்ளது.கர்வம் காரணமாக எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை மறுக்கிறேனா?

இது மாதிரியான கேள்வியை நான் எதிர்கொள்வேன் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்ததில்லை.ஆனால் எனது நண்பர்கள் சிலருடன் உரையாடும் போது நான் கடவுள் மறுப்பை செய்வது மிகவும் அதீத கர்வத்தின் காரணமாக எனது அவநம்பிக்கை என்பதாக மறைமுகமாக குறிப்பிட்டார்கள்.

இந்த பிரச்சினை ரொம்ப தீவிரமானது.

நான் தனி மனித குணங்களுக்கும் மேலானவன் என்று தற்பெருமை கொள்ளவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே. யாரும் மேலானவர்கள் என்று கருத இயலாது.என்னிடம் பலவீனங்கள் உள்ளன.கர்வம் எனது இயல்பான குணம்.எனது தோழர்களின் மத்தியில் நான் சுதந்திரமாய் நடப்பவன் என்று கூறப்படுகிறேன்.எனது நண்பர் பி.கே தத் அப்படி விளிக்கிறார்..சில நண்பர்கள் எனது கருத்துக்களை அவர்கள் மீது தீவிரமாக திணிப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறேனென்று குற்றம் சுமத்துகிறார்கள்.இது ஓரளவுக்கு உண்மையே.இதனை மறுக்கவில்லை.இது தற்பெருமை பேசுவதாக கூட கருதப்படும்.சில பிரபலமான இனங்களுக்கு மாறாக நமது மரபு மீதான தற்பெருமை என்னிடம் உள்ளது.இந்த பெருமை நமது மரபுக்குரிய உரிமையே தவிர தற்பெருமையல்ல. 
 
தற்பெருமை,இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அகங்காரம் என்பது ஒருவர் மீதான தேவையற்ற தற்பெருமை.தேவையற்ற பெருமை என்னை நாத்திகனாக கொண்டு சென்றதா அல்லது மிகவும் கூர்ந்த பொருள் ஆய்விலும்,மிகவும் சீரிய ஆலோசனைக்குப்பின் கடவுள் நம்பிக்கை இழந்தேனா என்பதனை இங்கே விவரிக்கப் போகிறேன்.அதற்கு முன் கர்வமும், தற்பெருமையும் இரு வேறுபட்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக தேவையற்ற பெருமையும்,வீண் புகழும் எப்படி கடவுள் நம்பிக்கையின்மைக்கு இடையில் நிற்கும் எனபதை புரிந்து கொள்ள தவறிவிட்டேன்.எந்த தகுதிகளும் இல்லாமல் அதற்கு தகுதியும் இல்லாமல் நானும் கூட ஒரு சிறந்த மனிதனின் சிறப்புக்களின் புகழ் ஓரளவுக்கு வந்தடைந்ததை நிராகரிக்கிறேன்.ஆனால்  தனிப்பட்ட கர்வம் காரணமாக எப்படி ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மையாக மாற இயலும்?

இதற்கு இரு வழிகள் மட்டுமே இருக்க முடியும்.ஒன்று மனிதன் கடவுளுக்கு எதிராக எண்ண துவங்கும் போது அல்லது தான் கடவுள் என்று நினைக்க துவங்கும் போது.

இரண்டு முறையிலும் அவன் உண்மையான நாத்திகனாக மாற முடியுமா? முதலாவதில் அவனுக்கு எதிராளி இருப்பதை மறுக்கவில்லை.இரண்டாவது விசயத்தில் கூட திரைக்கும் பின்னால் அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் வழிநடத்தும் சக்தி இருப்பதாக ஒப்புக்கொள்கிறான்.தான் அந்த சக்தியாகவோ அல்லது தனக்கும் அப்பால் இன்னொரு சக்தி இருப்பதாக உணர்வதோ இங்கே முக்கியமில்லை.அடிப்படையும் அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது.இவன் இந்த விதத்தில் நாத்திகனல்ல.எனவே நான் முதல் முறையிலோ அல்லது இரண்டாவது வரிசையிலோ இல்லை.

நான் கடவுள் உள்ளது என்ற உயர் நிலையையே மறுக்கிறேன்.நான் ஏன் மறுக்கிறேன் என்பதை பின்பு காணலாம்.இங்கே ஒன்றை விளக்க வேண்டும்.அதாவது நாத்திக கொள்கையை ஏற்றுக்கொள்ள தூண்டியது கர்வம் என்ற ஒன்றல்ல .நான் கடவுளுக்கு எதிராளியுமல்ல அல்லது கடவுளின் மறு வடிவமும் அல்ல.ஒன்று மட்டும் நிச்சயம்,எனது சிந்தனைக்கு தற்பெருமை காரணம் அல்ல.இந்த கூற்றை மறுக்கும் உண்மைகளை ஆராயலாம்.எனது நண்பர்களைப் பொறுத்த வரையில் டெல்லி அசெம்பளி குண்டு வெடிப்பும் மற்றும் லாகூர் சதி திட்ட நீதிமன்ற விசாரணைகளால் கிடைத்த தேவையற்ற புகழின் காரணமாக இந்த கர்வம் என்கிறார்கள்.அவர்கள் வாதம் சரியா என்று பார்க்கலாம்.

எனது நாத்திக சிந்தனைகள் இப்போதைய துவக்கமல்ல.நான் தெளிவற்ற சிறுவனாக இருக்கும் போதே கடவுளை நம்புவதை நிறுத்தி விட்டேன் என்பதை எனது மேற்சொன்ன நண்பர்கள் அறிந்திருக்கவில்லை.குறைந்த பட்சம் ஒரு கல்லூரி மாணவன் கர்வம் காரணமாக நாத்திகத்தில் தற்பெருமை கொள்வான் என்று கூற முடியாது. சில கல்லூரி ஆசிரியர்களுக்குப் பிடித்தமானதாகவும் பலரால் விரும்பபடாததாக இருந்த போதிலும்.நான் எப்பொழுதும் சிறந்த மாணவனாக இருந்ததில்லை.என்னால் அப்படி கர்வம் கொள்ளவும் இயலாது.

நான் இயற்கையிலேயே மிகவும் கூச்ச சுபாவமுடையவனாகவும் எதிர்காலம் குறித்த தோல்வி மனப்பான்மை கொண்டவனாகவே இருந்தேன்.அந்த நாட்களில் நான் முழு நாத்திகனாக இருக்கவில்லை.நான் எனது தாத்தாவின் பழமைக் கோட்பாடு சார்ந்த ஆரிய சமாஜ் தாக்கம் கொண்டவனாக வளர்க்கப்பட்டேன்.ஒரு ஆரிய சமாஜ்வாதி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாத்திகனாக அல்ல.

எனது ஆரம்ப பள்ளி படிப்புக்குப் பின் லாகூரில் தயானந்த வேதாந்த பள்ளி(DAV-Dayanand Anglo Vedic School)யில் ஒரு வருடம் விடுதி மாணவனாக இருந்தேன்.அங்கே காலை மாலை இருவேளை பிரார்த்தனைக்குப்பின் காயத்ரி மந்திரத்தை மணிக்கணக்கில் பாராயணம் செய்தேன்.நான் ஒரு முழு பக்தனாக இருந்தேன்.பின்பு நான் எனது அப்பாவுடன் வாழ ஆரம்பித்தேன்.என் அப்பா முற்போக்காளராகவும் அதே சமயத்தில் மதத்தைப் பொறுத்தவரையில் பழமைவாதியாகவும் இருந்தார்.அவரது படிப்பினைகளால் மட்டுமே நான் சுதந்திரத்திற்காக என் வாழ்வை அர்பணிக்க தீர்மானித்தேன்.ஆனால் அப்பா நாத்திகவாதியல்ல.மாறாக மிகவும் கடவுள் நம்பிக்கையுடையவர்.நான் தினமும் பிரார்த்தனை செய்வதை ஊக்குவித்தார்.இப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கேதான் நான் முற்போக்காக சிந்திக்கவும் மதங்களின் பிரச்சினைகளையும் கடவுளையும் கூட விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன். ஆனாலும் நான் மத நம்பிக்கையாளனாகவே இருந்தேன்.எனது வெட்டப்படாத நீண்ட முடியை வளர்க்கும் போது என்னால் புராணத்தையோ,சீக்கிய கொள்கையிலேயோ அல்லது வேறு எந்த மதங்களையோ   நம்ப இயலவில்லை.ஆனால் என்னிடம் கடவுள் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

பின் நான் புரட்சிகர கட்சியில் சேர்ந்தேன்.நான் சந்தித்த முதல் தலைவர் கடவுள் இல்லையென்பதை மறுக்கும் துணிவு இல்லாதவராக இருந்தார்.எனது தொடர்ந்த கேள்விகளால் தேவைப்பட்ட போது பிரார்த்தனை செய் என்றே சொன்னார்.நாத்திகத்தை தேர்ந்தெடுக்க குறைந்த தைரியமே இது மாதிரியானவர்களால் தேவைப்பட்டது.அடுத்து சந்தித்த தலைவர் மிகவும் இறை நம்பிக்கையாளர்.அவருடைய பெயரை இங்கே குறிப்பிடுகிறேன்.அவர் தோழர் சச்சிந்திர நாத் சன்யால்.இப்பொழுது கராச்சி சதி திட்டத்தில் ஆயுள் கைதியாக உள்ளார்.அவருடைய ஒரே புகழ் பெற்ற புத்தகமான் பந்தி ஜீவன் (Bandi Jivan) அல்லது மறுபிறவி வாழ்க்கையில் கடவுளின் கீர்த்தி பற்றி உணர்ச்சி ததும்ப பாடப்பட்டுள்ளது.அவரது அழகான இரண்டாம் பகுதியான கடைசி பக்கத்தில் வேதாந்தம் குறித்த கடவுள் மீதான புகழ்ச்சிகள் மீதான மிகவும் சந்தேகப்படும் எண்ணங்களை உருவாக்கியது

1925ம் வருடம் ஜனவரி 28ல் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்ட புரட்சிகர துண்டறிக்கை அவரது அறிவுத்திறனின் உழைப்பாக என்று அவர் மீதான குற்றப்பத்திரிகை சொல்கிறது.தவிர்க்க முடியாத ரகசிய வேலையில் முக்கியத் தலைவர் அவருக்கு விருப்பமான கருத்துக்களை வெளியிடுவதோடு அவற்றில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அவரின் தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்த துண்டறிக்கையில் ஒரு முழு பாரா கடவுளுக்கும் அவரை தொழவும் செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது. இவை உளவியல் உள்ளுணர்வு மட்டுமே.நான் எதைக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றால் புரட்சிகர கட்சியிலும் கூட கடவுள் நம்பிக்கையின்மைக்கான எண்ணம் இல்லையென்பதே.புகழ்பெற்ற ககோரி தியாகிகள்-நான்கு பேர்களும் தங்களது கடைசி தினத்தை பிரார்த்தனையிலேயே கழித்தார்கள்.ராம் பிரசாத் பிஸ்மில் ஒரு பழமை ஆர்ய சமாஜ்வாதி.பரந்த சோசியலிச,கம்யூனிச சிந்தனைகளுக்கு மாறாக ராஜன் லகிரி உபநிசத்துப் பாடல்களையும் பகவத் கீதையையும் உச்சரிக்க தவறவில்லை.அவர்களில் ஒருவர் மட்டுமே பிரார்த்தனை செய்யவில்லை .”மனிதர்களின் கோழைத்தனத்திலும்,குறைந்த அறிவாலும் வருவதே தத்துவம்” என்று சொன்னவர் கூட கடவுளை எப்பொழுதும் மறுக்க துணியவில்லை.

இந்தக் காலகட்டம் வரையிலும் நான் புரட்சிகர கொள்கைகளில் காதல் கொண்டவன் மட்டுமே.இது வரையிலும் நாங்கள் கொள்கைகளைப் பின் தொடர்பவர்களாகவே இருந்தோம்.இப்பொழுது முழு பொறுப்பையும் தோளில் சுமக்கும் நேரம் வந்து விட்டது.தவிர்க்க முடியாத எதிர்ப்பு இல்லாத காரணமாக கட்சி முழுவதுமாக செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆர்வமுள்ள தோழர்கள்-தலைவர்கள் அல்ல- எங்களை ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள்.கொஞ்ச காலங்களில் நான் கூட எங்களது திட்டங்கள் பற்றிய பயனின்மை பற்றி நம்புவேனோ என்ற பயம் வந்து விட்டது.எனது புரட்சிகர வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.எனது மனதின் மூலைக்குள் “படி” என்ற எதிர் முழக்கம் கேட்டது.எதிராளிகளின் ஆழ்ந்த விவாதங்களை எதிர்கொள்ள நிறைய படி.உனது நம்பிக்கைகளையும் வாதங்களையும் காக்க இன்னும் நிறைய படி.நான் நிறைய படித்தேன்.
 

எனது முந்தைய நம்பிக்கைகளும்,திட நம்பிக்கைகளும் குறிப்பிட்டளவு மாற ஆரம்பித்தன.எங்களது முந்தையவர்களின் வழிமுறைகளில் வன்முறை மீதான பற்று மட்டுமே இருந்ததை இப்பொழுது தீவிரமான சிந்தனைகள் ஆட்கொண்டன.இனி மத நம்பிக்கைகள் இல்லை.குருட்டு விசுவாசம் இல்லை.இனி உண்மை மட்டுமே எங்கள் கோட்பாடு.வன்முறை தவிர்க்க முடியாத தேவையென்றால் மட்டுமே.வன்முறையின்மை தவிர்க்க முடியாத மக்கள் இயக்க கொள்கையானது.எதற்கு போராட வேண்டுமென்ற  தெளிந்த நம்பிக்கைகள் உருவாகின.வன்முறைப் போராட்டங்கள் இல்லாமல் போனதால் எனக்கு நிறைய உலகப்புரட்சிகளை வாசிக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன.நான் பகுனினை(Mikhail Alexandrovich Bakunin) வாசித்தேன்.கொஞ்சம் மார்க்ஸ்,அதிகமாக லெனினையும்,ட்ராட்ஷ்கி  மற்றும் தங்கள் நாடுகளில் புரட்சியை வெற்றிகரமாக உருவாக்கின அனைவரையும் வாசித்தேன்.இவர்கள் அனைவரும் நாத்திகர்களே.

பகுனின் கடவுளும் நாடும்(God and State) துண்டு துண்டாக இருந்த போதும் படிக்க ஆர்வமாக இருந்தது.பின்பு நிர்லாம்பா சுவாமியால் எழுதப்பட்ட காமன்சென்ஸ் வாசிக்க நேர்ந்தது.இது ஒருவகையான மத அடிப்படை நாத்திகம்.இதன் பொருள் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.1926ம் வருட இறுதிக்குள் எந்த அடிப்படையும்,ஆதாரமும் இல்லாத உலகை உருவாக்கி ஆளும் கடவுள் கொள்கைக்கு மாறான சிந்தனையாளனானேன்.எனது மூடநம்பிக்கைகளை கைவிட்டு விட்டேன்.இது குறித்த விவாதங்களை என் நண்பர்கள் முன்பு வைத்தேன்.நான் நாத்திகன் என விளிக்கப்பட்டேன்.ஆனால் இதன் பொருள் என்னவென்று இனி பார்க்கலாம்.

1927 மே மாதம் நான் லாகூரில் கைது செய்யப்பட்டேன்.இந்த கைது ஆச்சரியமானது.இதனை உணரவில்லை.உண்மையில் போலிஸ் தேடுவது தெரியும்.நான் ஒரு பூந்தோட்டத்தைக் கடக்கும் போது போலிஸ்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டேன்.எனக்கு நானே ஆச்சரியமடையும்படி அந்த நேரத்தில் அமைதியாக இருந்தேன்.நான் எந்த உணர்ச்சியும் அடையவில்லை, அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடையவில்லை.நான் போலிஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.அடுத்த நாள் நான் ரெயில்வே போலிஸ் லாக் அப் கொண்டு செல்லப்பட்டு ஒரு மாதம் வைக்கப்பட்டேன்.போலிஸ் அதிகாரிகளிடம் நிறைய பேச்சு வார்த்தைக்குப் பின் நான் ககோரி கட்சியுடனும்,புரட்சிகர இயக்கத்துடனும் தொடர்பு வைத்துள்ளதாக  குற்றப்பத்திரிகை என அறிந்தேன். குற்ற விசாரனையின் போது நான் லக்னோ சென்றதாகவும்,சில திட்டங்களை வகுத்ததாகவும்,அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் சில குண்டுகளை தயாரித்ததாகவும்,1926ம் வருட தசரா பண்டிகையின் போது மக்கள் கூட்டத்தில் இதனை பரிசோதிக்கும் முறையில் வெடிக்க வைத்ததாகவும் சொன்னார்கள்.மேலும் நான் ஆச்சரியமடையும் படி புரட்சிகர கட்சியைப் பற்றி நான் தகவல்கள் சொன்னால் அப்ரூவராக கூட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் பரிசுகளுடன் விடுதலை செய்து விடுவதாகவும் தூண்டினார்கள்.நான் இந்த திட்டத்தை நினைத்து சிரித்தேன். இது ஒரு ஏமாற்று வேலை.

எங்களைப் போன்ற இயக்க கொள்கை கொண்டவர்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசுவதில்லை.ஒரு நாள் காலை அப்போதைய உளவுத்துறை சீனியர் சூப்ரடிண்டண்ட் மிஸ்டர் நியுமன் என்னிடம் வந்தார்.மிகவும் கருணையுடனான பேச்சுக்குப் பின் அவர்கள் கேட்டபடி எந்தவிதமான ஸ்டேட்மெண்டும் தரவில்லை என்றும் வருத்தமான செய்தியாக சதி செய்ததாக என்மீது குற்ற அறிக்கை தயார் செய்வதாகவும் ககோரி வழக்கில் பயங்கர கொலை வழக்காக தசரா குண்டு வெடிப்பில் சதி செய்ததாகவும் வழக்கு தொடரப் பட்டிருப்பதாக சொன்னார்..மேலும் அவர்களிடம் குற்றம் சுமத்தி தூக்கில் போட போதுமான ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.

அந்த நாட்களில் நான் அப்பாவியாக இருந்த போதிலும்,போலிஸ் தங்கள் விருப்பம் போல் செய்ய இயலும் என்பதை நம்பினேன்.அதே தினத்தில் சில போலிஸ் அதிகாரிகள் கடவுளை இரண்டு வேளையும் பிரார்த்திக்குமாறு என்னை தூண்டினார்கள்.நான் இப்பொழுது ஒரு நாத்திகன்.இப்பொழுது எனக்கு நானே மகிழ்ச்சியும்,அமைதியுமாக இருந்த காலத்தில் மட்டுமே கடவுள் மறுப்பாளனாக இருந்தேனா அல்லது மிகவும் சிக்கலான இந்த சூழலில் எனது நம்பிக்கை கொள்கைகளுடன் இருக்கிறேனா என்பதை தீர்மானிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டேன்.மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நான் கடவுளை நம்பவும் பிரார்த்திக்கவும் இயலாது என்பதை தீர்மானித்தேன்.நான் பிரார்த்திக்கவில்லை.இது உண்மையான பரிட்சையாகவும் இதில் நான் வென்றவனாக வெளிப்பட்டேன்.ஒரு நிமிடம் கூட எனது கொள்கையை விட்டு எனது கழுத்தை தூக்கு கயிற்றிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.எனவே நான் தீவிரமான இறைமறுப்பாளன்.அது முதல் நான் அப்படியே இருந்தேன்.இது ஒன்றும் எளிதான பரிட்சையாக இருக்கவில்லை.

நம்பிக்கை துயரங்களை மென்மைபடுத்துவதோடு ஆனந்தமாக்கவும் செய்யும்.கடவுளை நம்புவன் மிகவும் தைரியசாலியாகவும் தன்னை பாதுகாக்கும் சக்தி இருப்பதாக நம்புவான்.கடவுள் நம்பிக்கையற்றவன் தன்னையே நம்பவேண்டிய சூழலில் இருப்பான்.தனது சொந்தக்காலில் நிற்பதற்கு நிறைய சூறாவளிகளையும்,புயலையும் சந்திக்கவேண்டி வரும்.இது குழந்தைகளின் விளையாட்டல்ல.இது போன்ற கணங்களில் கர்வம் என்று ஒன்று இருந்தால் மறைந்தே போய் விடும்.மனிதனால் இயற்கையான  நம்பிக்கையை மறுக்க இயலாது.அப்படி மறுத்தால் கர்வத்துக்கும் அப்பால் பலமான வலிமை அவனுக்கு இருக்கிறதென்று முடிவு செய்யலாம். இப்பொழுது இது போன்ற சூழலே.தீர்ப்பு ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று.இன்னும் ஒரு வாரத்தில் இது அறிவிக்கப்படும்.எனது வாழ்க்கையை மகத்தான காரணத்துக்காக அர்பணிக்கிறேன் என்ற ஆறுதலை விட வேறு என்ன இருக்க முடியும்?
கடவுளை நம்பும் இந்து மறுபிறவியில் தான் அரசனாகப் பிறக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம்.ஒரு கிறுஸ்தவனோ அல்லது இஸ்லாமியனோ தனது பாவங்களுக்கும்,தியாகங்களுக்கும் மேல் உலகின் வாழ்க்கை கனவு காணலாம்.ஆனால் நான் எதனை எதிர்பார்ப்பது? எனது கழுத்தை கயிறு இறுக்கும் போதும் எனது கால்களுக்கு அடியில் உள்ள கட்டை நீக்கப்படும் நேரமே எனது நிரந்தர நிமிடம் என்பதும் கடைசியான கணம் என்பதும் எனக்குத் தெரியும்.அல்லது இன்னும் குறிப்பாக  உடல்ரீதி பொருளில் சொன்னால் எனது ஆத்மா அடங்கும் கணம்.அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.மேலும் ஒன்றுமில்லை.

மிகவும் பெரிய முடிவில்லாத,குறைந்த வாழ்க்கைப் போராட்டம் கொண்ட பரிசை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை என்னிடமிருக்கிறதென்ற கோணத்தில் இதனை எடுத்துக்கொள்கிறேன்.அவ்வளவுதான்.எந்த சுயநல குறிக்கோள், அல்லது அதற்கு பிறகு கிடைக்கும் பரிசுக்கான ஆர்வமோ இப்பொழுதும் இனிமேலும் இல்லை.எந்த சுய விருப்பமுமில்லாமல்,மாற்று வழியில்லாமல் எனது வாழ்க்கையை சுதந்திரத்திற்கு அர்பணித்துக்கொண்டேன்.அதிக எண்ணிக்கையிலான ஆண்களும்,பெண்களும் இதுமாதிரியான உளவியல் இருக்கும் நாட்களில்,மக்கள் தங்களை மனிதகுலத்திற்கு அர்பணித்துக் கொள்ளும் போது சுதந்திரத்திற்கான சகாப்தம் உருவாகும்.
 

Friday, August 26, 2011

கொத்துமல்லி சட்னி

சி.பி.செந்தில்குமார் ஒரு பத்து வகையான சட்னிப் படங்கள் போட்டு குத்துமதிப்பா போன மாசமோ அதுக்கும் முந்தின மாசமோ ஒரு பதிவு போட்டிருந்தார்.கவுஜக்கு எதிர்க் கவுஜ மாதிரி பத்து சட்னி வகைக்குப் பதிலா ஒரே சட்டினியில் பத்துவகை உணவு எப்படி செய்வது என்ற எதிர்ப் பதிவு இது:)

இட்லிக்கு கொத்துமல்லிச் சட்னி வீட்டிலோ அல்லது சரவணபவன் போன்ற ஓட்டல்களில் சாப்பிட்டுருப்போம்.இட்லிக்கு மட்டுமில்லாமல் கொத்துமல்லி சட்னியை மாற்று உணவுகளுக்கும் உபயோகப்படுத்துவது எப்படியென்பதை தயாரிப்பு முறையையும் பார்க்கப் போகிறோம்.இதைப் படிச்சோமா அடுத்த பதிவுக்கு தாண்டினோமான்னு இல்லாமல் நடைமுறையா அன்றாட வாழ்க்கையில் தினமும் அல்லது வாரம் இரண்டு மூன்று முறை உபயோகப்படுத்தப் போறீங்க.காரணம் என்னன்னா கொத்துமல்லி சட்னி இட்லிக்கு மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மாற்று உணவுக்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பது மட்டுமல்லாமல் இது உங்கள் உடல் நலன் சார்ந்த இலவசம்..

இந்தியாவில் ஹெர்பல் எனும் தாவிரம் சார்ந்த மருந்துகளாய் அன்றாடம் காய்கறி,கீரை,கொத்துமல்லி,புதினா,வெங்காயம்,தக்காளி என உபயோகப்படுத்துகிறோம்.இதில் வெங்காய சட்னி,தக்காளி சட்னி, கொத்துமல்லி சட்னி என்பவைகள் போக பெரும்பாலும் வேகவைத்த பொருளாகவே உண்பதால் காய்கறிகள் விட்டமின் குறைபாடுகள் கொண்டு விடுகிறதென நினைக்கிறேன்.உதாரணத்துக்கு முட்டைக்கோசை KFCக்காரன் பண்ணுக்கு அரிந்தோ அல்லது மயனேஸ் சாலடுக்கோ உபயோகப்படுத்துவதை நாம் பொரியல் என்ற பெயரில் நன்றாக வதக்கி விடுகிறோம்.முழுவதும் வதக்குவதை விட பாதி வதக்கிய பதத்தில் உண்பது வித்தியாசமான ருசியாகவும்,நேரம் குறைவு,சத்து என்ற அடிப்படை விசயங்களும் அடங்கி இருக்கின்றன.கொத்துமல்லி சட்னிக்கும் இதே பார்முலாதான்.

அம்மாக்கள் அம்மி அரைச்சே அலுத்து விட்டார்கள்.இப்பத்தான் மிக்சி இருக்குதே!10 நிமிசத்துல அரைச்சு விடலாமே!ஏன் சொல்ல மாட்டாய்.24 மணி ஏர்கண்டிசன்ல உட்கார்ந்துகிட்டு வக்கணையா பதிவு போடற.மின்சார வெட்டுல லோல் படும் எங்களுக்கல்லவா மின்சார சிரமங்கள் தெரியும்ன்னு யாரோ மனசுக்குள் நினைப்பாங்கன்னு தெரிந்தும் உங்களுக்கு தெரிந்த கொத்துமல்லி சட்னியை சிபாரிசு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.காரணம் உங்கள் உடல்நலம் சார்ந்த சுகாதாரம் விசயம் என்பதோடு நேரம் மேலாண்மை (Time management),ஒரு பொருளின் பல உபயோகம் போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.மேலும் கமலஹாசன் இரண்டு மொக்கைப்படம் நடிச்சிட்டு ஒரு சீரியஸான படம் நடிக்கிறமாதிரி சீரியஸான பதிவிலிருந்து விலகி கொஞ்சம் மொக்கையும்,அதே நேரத்தில் உபயோகமான விசயங்களையும் சொல்லலாமே என்ற மாறுதலுக்காகவும் கூட.

வந்தோமா!ரெசிபி சொன்னோமோ,செய்முறை சொன்னோமான்னு போய்கிட்டே இல்லாமல் இது என்ன வந்து லொட லொடன்னு மிக்சி அரைக்கிறன்னு மனதுக்குள் திட்டுபவர்களுக்கு அதே! சட்னி மிக்சி சம்பந்தப்பட்டதென்பதோடு இந்த பதிவு உங்கள் உடல்,மன அழுத்தம் இன்னும் பல விசயங்கள் அடங்கியது.எனவே மோடி மஸ்தான் பாம்பை கீரியிடம் சண்டையிட விடுவது மாதிரி இன்னும் பல சொல்லி விட்டே கொத்துமல்லி சட்னி செய்முறை சொல்லப் போகிறேன்.

காலையில் அலுவலகம் போகும் அவசரத்துக்கு இட்லி சுட நேரமில்லையென்றோ தினமும் இட்லியா என்ற அலுப்புக்கும் கொத்துமல்லி சட்னி துணை நிற்கும்.


                                                        இந்தப் படம் சுட்ட இடம்


ஒண்டிக்கட்டை ஓட்டல் கனவான்கள் இதெல்லாம் பிரச்சினையான விசயமென்று ஓடி விட்டாலும் ரொட்டி ஜாம்ன்னு அலுத்துப் போன சாண்ட்விச்க்கு மாற்றாகவும் கொத்து மல்லி சட்னி இரண்டு சாண்ட்விச் போதுமா இன்னும் ஒன்னு வேணுமான்னு கேட்க வைக்கும்.ரொட்டி,பட்டர் ஜாம்க்கு பயந்து ஓடும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வர ரொட்டியோடவே சாப்பிடுவேனாக்கும் என்பதற்கும் கொத்துமல்லி சட்னி.சமையல் பிரியர்கள் நீலகிரி குருமான்னு ஒரு ரெசிபி கேள்விப்பட்டும், சமைத்தும் இருப்பீர்கள்.என் வழி குறுக்கு வழின்னு பதிவர் ராஜா நெத்தியில பொட்டு வச்சிக்கிற மாதிரி நீலகிரி குருமாவுக்கு குறுக்கு வழி கொத்து மல்லி சட்னி.மேலும் பிஷ் கல்தீரா (Fish Kaldera) என்று கோவா ரெசிபி ஒன்று உண்டு. பாம்ப்ரெட் மீன்(Pompret இது நம்மூர்ல என்ன பேரு?)வயிற்று நடுமுள்ளை அகற்றி அதற்குள் சட்னியை வச்சு திணிச்சு முழு மீனையும் பொரிச்சா பிஷ் கல்தீரா தயார்.

கோழி சாப்பிடனுமின்னா வழக்கமாய் "தகதகக் கதிரவனாக" சுட்ட கோழியோ, தந்தூரியோ அல்லது வழக்கமான மசாலாக்கலர் கோழிக்கு ருசி கூட்டவும் தேவை கொத்துமல்லி சட்னி.கண்ணுக்கு குளிர்ச்சி வேணுமா,மொட்டைத் தலையில் முடி வளருனுமா சாப்பிடுங்க சார் கொத்துமல்லி சட்னி (எப்படின்னு கேட்கிறவங்க இதுக்கு தனியா காசு கொடுத்து தாயத்து வாங்கி கட்டிக்கிடனும்:)

அடப் போங்க!தமிழகத்து ஆளுகளை மனசுல வச்சிகிட்டே நீ கலாய்க்கிற!நான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்க!காரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்க!நீங்கதான் நமக்கு வருட சந்தாதாரரே.ஏனென்றால் காலையில சாப்பிட கொலாஸ்ட்ரல குறைக்க முட்டைய தூக்கி விட்டு டோஸ்ட்ல கொத்துமல்லி சட்னியை தடவி விடுகிறோம்.வார இறுதிப் பார்ட்டின்னா கெனாபில கூட சட்னியை தடவி விடலாம்.நண்டுப்பிரியர் குடுகுடுப்பை ஒருவேளை இந்தப்பக்கம் வந்தார்ன்னா அவருக்கும் தேவை கொத்துமல்லி சட்னி.

வேற யாரு கஸ்டமர்?சாம்பாருக்கு ருசி,ரசத்துக்கு மணம்,கஞ்சிக்கு தொட்டுக்க துவையல்ன்னு எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து கொத்துமல்லி சட்னி.இந்த மருந்து ரகசியத்தை எல்லோருக்கும் சொல்லித் தருவதில்லை.இங்கே கூடியிருக்கும் கூட்டத்துக்கு மட்டும் சொல்லித் தாரேன்.வீட்ல போய் செஞ்சு சாப்பிட்டுங்கின்னா அக்கா!போன அழகு திரும்பி வந்துடும்.அண்ணே!சம்சாரம் கோவிச்சுகிட்டு சமைக்காம குப்புறடிச்சுப் படுத்துகிட்டாலும் பிரிட்ஜை திறந்தோமா கொத்துமல்லி சட்னியை எடுத்தோமா நமக்கு பிடிச்சபடி அவசரத்துக்கு ரொட்டி அல்லது பழைய சோற்றுல பிசைஞ்சோமா,குழம்புல கலக்குனோமா கோவிச்சுகிட்ட மனைவியை சமாதானப் படுத்தி சாப்பிடக் கூப்பிட்டோமான்னு எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே லேகியம் கொத்துமல்லி சட்டினி.

வாங்கோ!வாங்கோ!சமையல் நுணுக்கத்தை பாருங்கோ!

தேவையான பொருட்கள்.

மிக்ஸி(ஆகா!இலவசத்துல ஏன் சேர்த்தின்னு இப்பத்தானே புரியுது)
மின்சாரம் ( இது இல்லைன்னா அம்மிக்கல்லு)
சம்சாரம் (இதுவும் இல்லைன்னா மச்சினி,அக்கா தங்கை,நண்பன் என யாராவது உதவிக்கு கூப்பிடவும்.இதுவும் இல்லைன்னா நளனாக்கும் நான் என்று கோதாவில் இறங்கிட வேண்டியதுதான்)
கொத்துமல்லி நாலைந்து பெரிய கட்டு (நாம் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு வருகிற மாதிரி செய்து வச்சிக்கப் போகிறோம்)
புதினா (கொத்துமல்லி அளவுக்கு பாதியளவு)
கருவேப்பிலை( புதினாவில் பாதியளவு)

புளி ஒரு கைப்புடி உருண்டை (உணவு உற்பத்தியாளர்கள் நமக்குப் புரியாத பெயரில் நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கெடாமல் சேர்க்கும் தடுப்பான் நமக்கு இயற்கையாகவே புளியமரமா வந்து வாய்த்திருக்குது!பச்சை மிளகாய் இரண்டு (டாஸ்மாக் பார்ட்டிகள் ஊறுகாய் தொட்டுக்குவதில் பதில் இன்னும் கொஞ்சம் மிளகாய் காரம் சேர்த்து தொட்டுக்கவோ சைடு டிஸ்க்கு அல்லக்கையாக கூட  சட்னியை வைத்துக்கொள்ளலாம்.

நாடு சுத்துறவங்களுக்கு சூப்பர் மார்க்கெட் இருக்குது.தமிழகத்தில் வீட்டுக்குப் பக்கத்தில காய்கறி மார்க்கெட் இருக்குது.கிராமப்புறங்களுக்கு பசுமையா கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, புளின்னு எல்லாம் கிடைக்கிற பொருட்கள்தான். ஒரு விழுது புளியை கொஞ்சம் தண்ணீரில் உறவிட்டு பாகு பதத்தில் எடுத்து வைக்க வேண்டும்.கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா, இரண்டு பச்சை மிளகாய் நன்றாக கழுவி தண்டிலிருந்து அரிஞ்சு வைச்சுகிட்டா இனி அரைக்க வேண்டியது மட்டுமே வேலை.இலைகளை அரைக்க தனியாக நீர் சேர்க்காமல் புளிக்கரைச்சலையே உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

இலவச மிக்சியோ காசு போட்டு வாங்கின மிக்சியோ வேகத்துக்கு தகுந்த மாதிரி 5 முதல் 10 நிமிடம் வரை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அரைச்சு புளிக்கரைச்சல் மிச்சம் ஏதாவது இருந்தால் அதனையும் சேர்த்து ஒரு கலக்கு மிக்சியிலிட்டு எடுத்து வைத்துக்கொண்டால்

சாண்ட்விச்
தந்தூரிக்கு கம்பேனியன்(Accomplishment)
நீலகிரி குருமா
பிஷ் கல்தீரா
டாஸ்மாக் ஊறுகாய்
சாம்பார்
ரசம்
மோர்
டீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.
இட்லி தோசைக்கு சட்னி
என அனைத்து கலவைக்கும் கொத்துமல்லி சட்னி தயார்.

பசங்க சும்மா இருந்தாலும்,அடுப்பங்கரையிலிருந்து சம்சாரத்தின் மின்சாரக் குரல்.பதிவை இணைச்சுடறேன்.

Wednesday, August 24, 2011

கொனாசியர்

சாரு நிவேதிதா தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் மதன் பாபுவின் குடும்பத்தின் மகிழ்ச்சியின் ரசனை பற்றிக் குறிப்பிடும் போது கொனாசியர் என்று மதன் பாபுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.கொனாசியர்(Connasseur)என்ற பதத்தை தமிழில் வேறு யாராவது உபயோகிப்படுத்தியுள்ளார்களா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த சொல் பிரெஞ்சிலிருந்து வருவதால் எனது eur உச்சரிப்பு தவறானதாகக் கூட இருக்கலாம்.பிரெஞ்சு தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் நல்லது.இல்லைன்னா யாருக்கும் தெரியவில்லையென கொனாசியர் சொற் பதத்திற்கு நானே உரிமை கொண்டாடுவேன்:)

 கொனாசியர் என்பது பெரும்பாலும் உணவு,டீ,பீர்,வைன்,கலை போன்ற ரசனைகளை குறிப்பிடப்படும் சொல்.இதனை தமிழில் உணவு ரசனையாளனை சாப்பாட்டு ராமன் என்றும் மது குடிப்பவனுக்கும்,எப்படி மது அருந்துவது என்று குடியை ரசிப்பவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குடிகாரன் என சொல்லிக் கொச்சைப்படுத்தி விடுகிறோம்.(I advocate for a total prohibition in Tamilnadu or occassional drink if possible)பல உணவுகளை ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவது ஒரு கலை.ஆனால் டீ,பீர்,வைன் ருசிப்பவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது. காரணம் இவற்றை வாயில் கொப்பளித்து உமிழ்ந்த பின் நாசியில் உணரும் மணம்(aroma),நாக்கில் உணரும் உவர்ப்பு போன்ற ருசிகளை வைத்து தேயிலை, பீர்,வைன்களின் தரத்தைக் கண்டு பிடிப்பவர்களுக்கு கொனாசியர் என்று பெயர்.இன்னும் வேறு எந்த துறையில் இந்த சொற்பதம் உபயோகிக்கப் படுகிறதென்று கூகிளை கேட்டால் இந்தப் பெயரிலேயே பலான படம் இருப்பதாக தகவல் சொல்கிறார்.
 
டீயின் கசப்பை சுவைத்து டீயின் மதிப்பீடு செய்பவர்களை டீ டெஸ்டர் என்று தனியாக ஒதுக்கி விடுகிறார்கள்.எனக்கு ரெட் லேபிள்,லிப்டன் இரண்டு வகையான டீ கிடைக்கிறது.கட்டஞ்சாயா குடித்தாலும் சரி,அஸ்கா பால் சாயா குடிச்சாலும் சரி,லிப்டனின் ருசி நாக்கில் நிற்கும்.நெஸ்கபே மட்டுமே மார்க்கெட்டில் பரவலாகக் காணக் கிடைக்கிறது.துருக்கிய காபி அரேபியர்களுக்குப் பிடித்தமான காபி.பிரேசில்,கொலம்பியா போன்ற காபிகள் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.நம்ம சேட்டன் கடையில் 150Fil(ரூ.25) குடிக்கும் நெஸ்காபியை கொஞ்சம் கெபசினோ, கிரிம், சாக்லெட் கலந்து ஸ்டார்பக்ஸ் காரன் 1.500 தினாருக்கு(சுமார் IRS.250) விற்று விடுகிறான்.எனவே 10 காபி குடிக்கலாமே என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட பேர்களே  ஸ்டார்பக்ஸ் அருந்துகிறார்கள்.

எனது நண்பன் ஒருவர் நீண்ட நாட்களாக மது அருந்துபவர்.பாட்டிலை திறந்ததும் வரும் நெடி அல்லது கிளாசில் ஊற்றியதும் வரும் வாசத்தை நுகர்ந்தே சரக்கு எப்படியென்று சொல்லி விடும் வல்லமை உடையவர்.உணவுப் பிரியர்.சமீபத்தில்  நடிகர் மோகன்லால் தனது விருப்பங்களில் ஒன்றாய் ஓவியங்களை சேர்ப்பது பற்றிக் கூறியிருந்தார்.அவரது கலைப்பொருட்கள் (Antiques) தேடலும் கூட கொனாசியர்தனமே.முன்பு காபி வித் அனு பதிவில் Koffe with karen என்ற இந்தி நடிகர்களின் கலந்துரையாடல் பற்றி சொல்லியிருந்தேன்.ராஜ் கபூரின் மகன்களான ரந்தீர் கபூர்,ரிஷி கபூர்,ராஜிவ் கபூர் மூவருடன் ரிஷி கபூரின் மனைவி நீட்டு சிங் உரையாடிய நிகழ்வைக் காண நேர்ந்தது.காலை உணவு(நாஸ்டா) நேரத்திலெயே மதியம் என்ன சாப்பிடலாம் என்று திட்டமிடுவதாகவும்,மதிய உணவு வேளையில் இரவு உணவுக்கு மெனு தயாரித்து விடுவதாகவும்,நீண்ட கூட்டுக் குடும்பமாகவும் வாழ்வதால் தங்களுக்குள்ளேயே கும்மியடித்து மகிழ்வதாகவும்,ராஜ் கபூரின் மனைவி கிருஷ்ணாவுக்கு நகைச்சுவை ரசனை அதிகம் என்றும் குறிப்பிட்டார்கள்.அனைவரின் உப்பிப் போன உடம்பும் உணவு பற்றிய சிந்தனையும் கூட கபூர்களை கொனாசியர் பேர்வழிகள் என்றழைக்கலாம். பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான் பதிவுலகப் பழமொழிக்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது:)

சமையல் ரெசிபிக்கும் அடுப்பாங்கரை அனுபவங்களுக்கு மிடையான பல நுணுக்கங்கள் ஆராயப்படுவதில்லை யென்றாலும் அசராமல் சமையல் பதிவுகள் போடுபவர்களும் கூட கொனாசியர் ரசனையாளர்களே.வீட்டில் மனைவியின் சமையலைப் புகழ்ந்து என்னமா சமைக்கிறேன்னு புகழ்ந்தோ வஞ்சப் புகழ்ச்சியாக கூட புகழ்ந்து ருசித்து சாப்பிடுவர்களும் கொனாசியர்களே:)சில சமயம் சமையல் நல்லாயில்லையென்று சொல்லி என்னை மாதிரி வாங்கிக் கட்டிக் கொள்பவர்களை கோணாசியர்கள் என்று  வேண்டுமானால் இனிமேல் அழைக்கலாம். வாங்கி கட்டி இப்ப பாடம் கற்றுக்கொண்டு விட்டதால் நானெல்லாம் அடுத்த வகுப்புக்கு புரமோசனாகி விட்டேனென்ற குறும் தகவலையும் சொல்லி வைக்கிறேன்:) தொலைக்காட்சியில் பாட்டுப்போட்டிக்கு சரிகமபதநி யெல்லாம் கரைச்சுக்குடிச்சு தயாரா வந்து எல்லோரையும் அசத்தும் புதுப்பாடகர்களை நொள்ளை சொல்லும் அனுபவ இசை மேஸ்திரிகளான நீதிபதிகள் மாதிரியானவர்கள் கொனாசியர்களா கோணாசியர்களா என்று பட்டிமன்றம் வைக்கலாம்!முன்பு ஒரு முறை இப்போது களத்தில் காணாத பதிவர் குடுகுடுப்பை அமெரிக்க நண்டு சமையல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.நண்டு சாப்பிட்டாலும் நடுத்துண்டு நமக்குன்னு ருசிக்கும் ரசனையும் கொனாசியர் இலக்கணத்துக்குள் வந்து விடும்.எழுத்தின் மீதான காதலும்,ரசனையாளர்கள் கூட கொனாசியர்களே.நடிப்பு மீதான காதல் கொண்ட சிவாஜி,கமல் போன்றவர்கள் கொனாசியர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியவர்கள். வாழ்க்கையை ரசிப்பவர்கள்,ருசிப்பவர்கள் மகத்தான கொனாசியர்கள். சுப்ரமணி பாரதி தாத்தா நினைவில் வந்து போகிறார். 

டிஸ்கி:கொனாசியரும் கொத்துமல்லி சட்னியும் என்று ரிதமாக தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.தலைப்பு கூகிளிக்குள் இடம் பிடிக்க வேண்டுமென்பதால் சுருக்கி விட்டேன்.அடுத்து கொத்து மல்லி சட்னி பற்றி பார்க்கலாம்.சமையல் பதிவர்கள் எங்க ஏரியாவுல வந்து இப்படி மொக்கை போடுறீயேன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்:)பதிவுகளில் சமையல் பகுதி ஏன் பின்கட்டைப் பிடித்துக்கொள்கிறது?வெறுமனே ரெசிபி மட்டும் சொல்வதனாலா என்ற மரபை முறிக்கும் முயற்சியாகக் கூட மொக்கைகள் கலந்த சமையல் பதிவுகளை சொல்ல விரும்புகிறேன். 

பட உதவி:
http://en.wikipedia.org/wiki/File:Mona_Lisa,_by_Leonardo_da_Vinci,_from_C2RMF_retouched.jpg 


http://en.wikipedia.org/wiki/File:Produits_r%C3%A9gionaux_-_photo_CPPR.jpg

Monday, August 22, 2011

கடாபி வெர்சன் 1.1

கடாபி பற்றி முன்பே இங்கே சொல்லி விட்டதால் இது கடாபி வெர்சன் 1.1

நடப்பவை நன்றாகவே நடக்கிறது.ஆனால் பிப்ரவரி 2011 லிருந்து மிகவும் தாமதமான விடுதலை லிபியாவின் ராணுவக் கிளர்ச்சியாளர்களின் லிபியா தலைநகரம் கைபற்றல் எப்பொழுதென்று எதிர்பார்த்தது நிகழ்ந்தே விட்டது.லிபியாவின் ராணுவப்புரட்சியை நான் வரவேற்பதை விட உணர்வு பூர்வமாக மகிழ்ச்சி அடைபவர்கள் ராணுவக் கிளர்ச்சியாளர்களும் அவர்களைச் சார்ந்த மக்களுமே.ஆட்சி மாற்றத்தில் நிகழும் மாற்றங்களால் நேட்டோ படைகளின் குறிக்கோள்!(Mission accomplished) முடிந்தது.பெட்ரோல் விலையைக் கொஞ்சம் குறைங்கப்பா:)

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சந்தை உறுதிப் படுத்தப் பட்டு ரஷ்யா,சீனாவின் ராணுவ சந்தை பின்படுத்தப்படும்.இவற்றை விட உடும்பிப் பிடி கடாபியின் சர்வாதிகார கரம் வலுவிழந்ததும் இன்னொரு வாரிசு அரசியல் நிகழாமல் போவதும் வரவேற்க தக்கது.நேற்று இரவு சூடான செய்தி பார்க்கும் போது இயல்பாய் தோன்றிய ஒன்று லிபிய கிளர்ச்சி உருவான துவக்கம் முதலே தனி மனிதனாக கடாபியின் சர்வாதிகாரம் ஒழிய வேண்டுமென்று நினைக்கும் போது இந்திய அரசின் வாலையும்,தலையையும் காட்டும் (obstain) வெளியுறவுக்கொள்கை மனதில் வந்து போனது.உலகரங்கில் பிரச்சினை ஏற்படும் போது எது சரியென்ற தீர்க்கமான முடிவுகள் எடுப்பது அவசியம்.

வலைப்பின்னல்கள் இல்லாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை.அன்னா ஹசாரே,இலங்கை,லிபியா என எந்த உள்,வெளிநாட்டுப் பிரச்சினை யென்றாலும் காங்கிரஸ் அரசின் குழம்பும் நிலை மட்டுமே தெரிகிறது.முன்பெல்லாம் வலுவான இந்தியாவிற்கு ஒரே ஆட்சி மீண்டும் நிலவுவது நல்லது என்றே மன விளம்பரம் செய்தார்கள்.இரண்டாம் முறை ஆட்சி நிர்வாக சீர்கேடுகளையும்,செய்த ஊழல்களை திடப்படுத்துவதற்கு மட்டுமே உதவுமா என்ற ஐயப்பாட்டை உருவாக்குகிறது.இரண்டாம் முறை ஆட்சி செய்யும் ஐக்கிய முன்ணணி கூட்டணியின் இப்போதைய நிர்வாகத் திறன் என்ன?மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருந்தால் நிகழ்வுகள் எப்படியிருந்திருக்கும்?

மீண்டும் லிபியா பக்கம் பார்வையை செலுத்தினால் முறையான பயிற்சிகள் இல்லாத கட்டமைப்பில்லாத,கட்டுக்கோப்பில்லாத லிபிய ராணுவ புரட்சியாளர்கள் வெற்றியின் பின் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு என்ற வலுவான ஆயுதம் இருக்கிறது.மேற்கத்திய நாடுகளின் எண்ணைப் பொருளாதார சந்தையை கட்டுப்படுத்தும் சுயநலங்கள் இருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான தரை,கடல்,விமானப்படைகள் தனித்துவமாய்(Unique) சரியான காரணங்களுடன் இயங்கி சாதிக்க இயலாத ஒன்றை அமெரிக்க ஆதரவிலான நேட்டோ படைகளின் துணையோடு லிபிய ராணுவப் புரட்சி சாதித்துள்ளது.மேற்கத்திய நாடுகளின் தேவையென்றால் ஆயுதம் தூக்குவதில் தவறில்லை.மேற்கத்திய நாடுகளின் தேவை நிறைவேற்றப் படாவிட்டால் ஒசாமா பின்லேடன்,தலிபான்களுக்கு மட்டுமே சொந்தமான தீவிரவாதத்தை டெரரிஸ்ட் என்ற சொல் பிரயோகி!மேற்கத்திய நாடுகளின் சுயநலங்கள் லிபியா விசயத்தில் நிர்வாணமான உண்மையாய் தெரிகிறது.இருந்தாலும் தன் நாட்டு மக்களையே நாய்கள் என்றும்,கருணையே காட்ட மாட்டேன் என்று அறைகூவல் விட்ட கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உதவிய மேற்கத்திய நாடுகளின் சுயநலம் வரவேற்க படவேண்டியதே. 

லிபிய புரட்சியாளர்களின் போராட்டங்களுக்கான நியாயங்களை விட ஆயிரம் மடங்கு வலுவான காரணங்களும்,வரலாற்று நிகழ்வுகளும்,வலிகளும் இலங்கையில் வாழும் வட,கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருக்கிறது.இதனை அடிக்கடி பதிவு போட்டு தமிழர்களுக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.இல்லையென்றால் விடுதலைப் போராட்டத்துக்கு குரல் கொடுக்கும் வை.கோ மேல் நொள்ளை, சீமான் மீது அவதூறுகள், திருமா,ராமதாஸ் போன்றவர்களின் சுயநல அரசியல் பிறழ்வு,தி.மு.கவின் குடும்ப நலத்தில் பின் தள்ளப்பட்ட ஈழம்,தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் அ.தி.மு.கவினால் மட்டுமே இயலும் என்ற தற்போதைய சூழல் என்ற அனைத்தையும் மறந்தே போய் விடும்.

மேலும்  விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் துப்பாக்கியை கீழே போட்டு மரணித்து விட்ட  நிலையில் புதிதாய்ப் பிறந்த நாடு கடந்த தமிழீழ அரசு நம்பிக்கையான ஒன்றாகவே காணப்பட்டது.இப்பொழுதும் அதன் மூலமே தமிழர்களின் குரலையும் கூட ஒலிக்க வேண்டியுள்ளது.லிபியாவின் ராணுவப் புரட்சியாளர்களுக்கும் அப்பால் மேற்கத்திய நாடுகளோடு இணைந்து உடன்பாடு காணும் அமைப்பான Transitional National Council என்பது நாடு கடந்த தமிழீழம் போன்ற ஒன்றே.எனவே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அனைத்துலக அங்கீகாரத்திற்கான உரிமைகள் உண்டு.அமைப்பை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்க செய்வதிலும்,தமிழகம்,தமிழ் தேசியக் கூட்டமைப்புக்களுடன் இணைந்து வலுவாக செயல்படுவதும் அவசியம்.இலங்கை,இந்திய அரசுகள் தவறுகள் செய்கின்றன என்ற போதிலும் அவைகளுக்கான அங்கீகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்டமைப்பு என்ற வலிமை.

அன்னா ஹசாரேவின் மக்கள் உணர்வுகளுக்கான நியாயமான இயக்கத்திற்கே மத்திய அரசு குழப்புவது,சிறையிலிடுவது,இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வது என்று செயல்படும்போது ராஜீவ்காந்தியின் கொலை,சோனியாவின் இத்தாலிய சினம் என்ற வலுவான காரணங்கள் இருக்கும் போது சீனாக்காரனுக்கு செக் வைக்கிறேன் பேர்வழியென பொய் முகத்துடன் இலங்கைக்கு ஆதரவும்,போர்க்குற்றங்களுக்கு துணையாக கள்ள மௌனம் சாதிக்கவும் செய்வதுடன் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது.

உண்மையில் காங்கிரஸ் அரசின் நோக்கம் சீனாவின் வணிக நலன்களைக் கட்டுப்படுத்துவதாகவும்,தனது தென் எல்லைகளை பாதுகாப்பதாகவும் இருந்தால் துவக்கம் முதலே சீனாவுக்கு செக் வைத்திருக்க வேண்டும்.இதோ இந்தியாவின் தலையீட்டையும் மீறி இலங்கை சீனாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் முகமாக ராஜபக்சே கடந்த வாரங்களில் சீனா போய் விட்டு வந்துள்ளார்.

இந்த இடத்தில் பதிவை வாசிப்பவர்களுக்கு  வெளியுறவு,நாட்டு நலன் ஒப்பீடு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.ஈரானிலிருந்து எண்ணைக் குழாய்களை பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்பு ஈரான்,பாகிஸ்தான்,இந்திய கூட்டமைப்பில் நிகழ்ந்தன.இந்த ஒப்பந்தம் போகாத ஊருக்கு வழிகாட்டின மாதிரியென்ற போதிலும் இந்தியா,பாகிஸ்தான் பெட்ரோலிய எண்ணை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நல்ல திட்டமே.அதற்கு மூன்று நாடுகளின் நீண்ட நல்லுறவு முக்கியம்.ஈரானுக்கும்,இந்தியாவுக்குமான உறவு கடந்த காலங்களில் வலுவான ஒன்றே என்ற போதிலும் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஈரான் - பாகிஸ்தான் என்ற முக்கோணம் சரியான அரசியல் உறவாக இல்லை.இதனை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்ல ஈரானிடம் எண்ணைப் பொருளாதாரத்தை வாங்காதே,அமெரிக்கா இந்தியாவுக்கு எதிர்கால எரிபொருள் மின்சார உதவிகளை செய்யும் என்று ஜார்ஜ் புஷ் அரசினால் அமெரிக்க சட்டங்கள் தளர்த்தப்பட்டதே இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தங்கள்.இப்போது ஈரான் - இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்த திட்டங்களின் நிலை என்ன?இதுவே அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வெற்றியும், பொருளாதார ரீதியாக நாடுகளை கட்டுப்படுத்தும் நுணுக்கங்களும்.

சீனாவிலிருந்து இலங்கைக்கான தூரமும் புவியியல் ரீதியாக இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த இயலும் என்ற போதிலும் தனது நாட்டு நலன்களையும் பின் தள்ளி விட்டு இந்தியாவின் தென்னக மக்களுக்கு எதிர்காலத்தில் இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,பிரபாகரனின் மக்களுக்கு ஒரு கண்னாவது போகவேண்டுமென்ற வஞ்சினமல்லவா இந்திய வெளியுறவுக் கொள்கையாய் இலங்கையில் செயல்படுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் தேசநலன்களில் அக்கறை இருந்தால் இலங்கையை  பணிய வைக்க,சீனாவின்  இலங்கையில் மூக்கு நுழைப்பு ஆதரவை இழக்க வைக்கும் வல்லமையை இலங்கை இந்திய புவியியல்,தமிழர்களின் கோபம் என்ற காரணங்கள் போதும்.நேராகவே நோக்கினாலும் கூட இலங்கை,இந்திய உறவு,தமிழ்,சிங்கள கலாச்சாரத்தை காத்தல் போன்றவற்றிற்கு இரு அரசுகளும் துணை புரிய வேண்டும்.மாறாக நிகழ்வது என்ன? பாகிஸ்தான் - இந்திய மக்களின் வெறுப்பு அரசு கட்டமைப்புக்களில் எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டதோ அதே போன்றதொரு வெறுப்பை மட்டுமே இப்பொழுது இந்திய-இலங்கை அரசுகள் கடல் ஊட்டி வளர்க்கின்றன.
இந்த லட்சணத்தில் சட்டசபை தேர்தலில் வீணாய்ப் போன தங்கபாலு காங்கிரஸ் அரசுக்கு 30 லட்சம் ஈழத்தமிழர்களையும்,7 கோடி இந்திய தமிழர்களையும் காக்க வேண்டிய தலையாய கடமையும்,சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய கடமையின் காரணமாகவே ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளிக்கிறது என்று அறிக்கை விடுகிறார்.இந்தியாவில் தமிழக மக்கள் இலங்கைக்கான எதிர்ப்பு சக்தி என்பதை உணர்ந்துதானே ராஜபக்சே சீனாவின் உறவுகளை மேம்படுத்தினால் இந்தியா தன்னிடம் கைகட்டி நிற்குமென்ற கணக்குப் போட்டுத்தானே செயல்படுகிறார்?அரசியல் அரிச்சுவடி படிக்காத நமக்கே விளங்கும் உண்மைகள் தங்கபாலுவுக்கும்,அவரது அண்ணாத்தைகளுக்கும் விளங்காமலா போகும்?

இப்ப லிபியா பக்கம் பார்வையை திருப்புவோம்.நேற்று லிபியக் கிளர்ச்சியாளர்கள் அறிக்கையின் படி கடாபியின் ஒரு மகன் சய்ஃப் அல் இஸ்லாம் கடாபியும்,இன்னொரு மகனான சாதி கடாபியும் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடாபி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.ராஜபக்சே?