Followers

Wednesday, December 30, 2015

தி.மு.கவுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனை.

வாழ்வோடு ஒட்டிய கலாச்சாரத்தில் தி.மு.கவும் ஒரு பகுதி என்பதாலேயே கருத்துக்களை,விமர்சனங்களை முன் வைக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் அரசியல் கழிவுகளை நீக்கி நேர்பார்வை பார்த்தால் தி.மு.க வின் செயல் திட்டங்கள் தமிழகத்திற்கு நன்மைகளே.

பெரியார் கொள்கைகள் சில செயல் வடிவம் ஆன போதும் சங்கர மடம் போல் திராவிட கழகமும்,தி.மு.க குடும்ப மடம் ஆகி விட்டன. திராவிட கழகம் சமூகம் சார்ந்து செயல்படுவதால் தமிழகத்தின் இன்னுமொரு வழி என்று பின் தள்ளி விடலாம்.ஆனால் தமிழகத்தின் பொதுமக்கள் அனைவரின் வாழ்க்கை,வீழ்ச்சியை அரச பீடம் நிர்ணயிப்பதால் தி.மு.க பெயருக்கு அரசியலே வாழ்க்கை என்பதால் சில மாறுதல்களை கலைஞர் காலத்திலேயே கொண்டு வந்தால் தி.மு.க வின் பெயர் நீண்டதோர் வரலாற்றை இன்னும் நிறுவும். இந்த கருத்துரை தேர்தலுக்கும் அப்பாலான நீண்ட பார்வை.

குடும்ப ஆட்சி மட்டுமல்ல திரு.ஸ்டாலின் கூட அரச பதவியின் அடுத்த வாரிசு என்பது ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று. வாரிசு அரசியல் மற்ற மாநிலங்களில் நிகழவில்லையா என்ற எதிர்கேள்விக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழகம்  அல்ல. அரசியலும் திரைப்படங்களும் தமிழகத்தின் வாழ்க்கை நீரோட்டம். இன்னும் சொல்லப் போனால் வாரிசு அரசியலை விட ஜெயலலிதாவின் ஒற்றை ஆட்சி தமிழகத்திற்கு நல்லது.

அரசு பணியில் இருக்கும் சகாயம் கூட தமிழகத்தின் மாற்று என்று மக்கள் கருதும் நிலையில் ஸ்டாலின் தி.மு.கவுக்கான தீர்வு அல்ல. தி.மு.க வில் இன்னும் கூட கட்சி கட்டுப்பாட்டை மதித்து பல பேர் இருக்க கூடும்.அவர்களையெல்லாம் ஏன் தி.மு.க முன் நிறுத்துவதில்லை?

சகாயம் மாற்று என பலர் நினைக்கும் போது வாரிசு அரசியலும் தி.மு.க வின் வீழ்ச்சிக்கான இன்னுமொரு முக்கிய காரணம் என்பதால் ஓரளவுக்கு மக்களுக்கு தெரிந்த திருச்சி சிவா போன்றவர்களை ஏன் தி.மு.க கலைஞருக்கு அடுத்த மாற்றாக கருதுவதில்லை? அரசியலில் ரிமோட் கண்ட்ரோல்களாக பால் தாக்கரே,சோனியா போன்றவர்கள் உதாரணம். அனுபவம் வாய்ந்த கழகத்திற்கு வழியில் போறவனெல்லாம் கருத்து சொல்கிறான் என்று கழக கண்மணிகள் நினைத்தால் கலைஞருக்கு பின்  நிச்சயம் தி.மு.க இல்லை 

இப்பொழுதே  அரசியல் பேரம் பேசும் திறன் இன்றி விஜயகாந்தைக் கூட வரவேற்கும் கட்டெறும்பு நிலை என்பதை விட கலைஞரே சொன்ன கடுகு நிலையில் தி.மு.க இருக்கிறது. கடுகின் காரத்தை விட மிளகாய் காரம் இன்னும் அதிகம். தமிழகம் கடுகு தாளிப்பதோடு மிளகாய் காரத்தை அதிகமாக விரும்புகிறது. .

ஜனநாயக வழியில் கட்சி செயல்பாடுகளை முன்னெடுக்கும் தி.மு.கவிற்கு வாரிசு அரசியல் நல்லதல்ல. கட்சி ஜனநாயகம் தழைக்க திருச்சி சிவா போன்றவர்களை முன்னிறுத்துங்கள்.

கழக கண்மணிகள் கேட்டால் கேளுங்கள்.இல்லையென்றால் பல் போன காலத்தில் வளரும் நிகழ்வுகளை ஒட்டி  பதிவை அசை போடுகிறேன்.

Monday, December 28, 2015

,முதலமைச்சர் கனவு ஆவுறதில்ல

நமக்கு சாடை பேசுறது ஆவாதுன்னு பொது அறிவு,இலக்கியம் குறைந்த பட்சம் ஒரு சினிமா இந்த மாதிரி தேடலுக்கு போகலாம்ன்னு பார்த்தா .ஆவுறதில்ல!கவிஜ சொல்லி பார்த்தாச்சு ! சிரிக்கிறதுக்கு ஆள காணோம்! விடுகதை  சொல்லி பார்த்தாச்சு கண்டுக்கவே ஆள காணோம்

ஒன்று பதிவு போட நேரமில்லப்பா! நா ரொம்ப பிசின்னு இருக்கனும். இல்ல அப்பப்ப வந்து ஏதாவது ஹலோ சொல்லிட்டு போகனும். ரெண்டும் கெட்டான அது என்ன தேர்தல் நேரம் பார்த்து மட்டும் அரசியல் ஜோக்கராவது!

தேர்தல் வேற எப்ப வருதுன்னு தெரியலையே! இன்னும் எத்தனை ஸ்லிப்பர்களை சமாளிக்க வேண்டியிருக்குமோ!

வி செயகாந்து பேசிகிட்டிருக்கும் போது பூச்சி ஏதோ வாயில் போனதுக்கு தூன்னு துப்பினதுக்கும் கூட வெளக்கவுரை தர்றாங்கப்பா! அரசியல்வாதி தா ன்னாலும் தப்பு தூ ன்னாலும் தப்பு தும்மினாலும் தப்பு கும்மினாலும் தப்பு ன்னா அப்புறம் எப்படிதான் அரசியல் நடத்துவது:)

சாதி கிறுக்கன்களையெல்லாம் கூட்டம் சேத்திகிட்டா? 

ரொம்ப டேஞ்சர்பா! பேஜாருபா


வர்ணமும் தெரியாம ஆசிரமும் தெரியாம போடுவது  பட்டை! தொண்டனெல்லாம் மட்டை..சொல்வதென்னவோ ருத்ராட்ச கொட்டை

கார்ட்டுன் போட்டாலும்,குட்டிக்கரணமே சேர்த்து போட்டாலும் இந்த தேர்தல்ல ஊத்திக்கும்ன்னு ஒபாமாவுக்கு சி.அய் ஏ  சொல்லிருச்சாம் .அய்யாவுக்கு கடிதாசி வரலையோ!

போன தேர்தல் எடிட்டுங்ல கொட்டு வாங்குனவனே மோதிர கொட்டாக்கும்ன்னு  புல்லா ஆங்கிதமா புளகாங்கிதமாம்

முன்னமாதிரி தினத்தந்தி மாலைமுரசு சொல்றதுதான் செய்தின்னு இல்லாம இப்ப யூட்யூப்பு டூப்புகளையெல்லாம் நல்லாவே காமிக்குது. ஒரு தூ வுக்கு மூணு தூ போடுறாங்கப்பா:) எடிட்டுங்க்கு ஹாலிவுட்ல தேடுறாங்க!பாலிவுட்ல தேடுறாங்க!அனிருத்துக்கு சோடியா கனடாவுல தேடுறாங்க 

இதுலருந்து இன்னா தெரியுது பார்ட்டி செட்டாவுலன்னு தெரியுது. அப்ப பிசேபி கூட்டணி அம்பேல்ன்னு தெரியுது.






Saturday, December 26, 2015

கலைஞர் தொலைத்த மதராசி!

கலைஞர் மீது குடும்ப அரசியல், ஈழத்தமிழர்கள் இரு பெரும் அரசியல் தவறுகளின் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆட்சித்திறனின் நன்மைகள் தமிழர்களுக்கு பரவலாக போய் சேர்ந்திருக்கிறது. என்னடா தேர்தல சமயத்துல யூ டர்ன் போடுறானே....அவ்வ்வ்ன்னு நினைப்பவர்களுக்கு சட்டியில் இருப்பதுவே அகப்பையில் வருகிறது.

இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் முத்துக்குளிக்க வாரீகளா என்ற ஆச்சி மனோரமாவின் பாடலை இந்தியில் அப்படியே பிரயோகித்ததோடு மதராசிகள் இந்தி பேசுவதை நையாண்டி செய்வார். தமிழனுக்கு இந்தியே தெரியாது என்ற அடிப்படையே தெரியாமல் நிலம் பெயர்ந்த சேட்டன்களும், ஏமண்டிகாரும், தாராவி தமிழர்களும் பேசிய இந்திக்கு நக்கலுக்கானவர்கள் மதராசிகள். 

இதற்கான காரணம் மெட்ராஸ் மட்டுமே வடக்கத்தியவர்களுக்கு தெரிந்த ஊர்.திருவனந்தபுரம்,கொச்சின்,ஹைதராபாத்,விசாகபட்டினம்,பெங்களூர்,மங்களூர் போன்றவை ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தின் பெயர்கள்.

முன்பு வைஜயந்திமாலா, ஹேமமாலினி,ரேகா, ஸ்ரீதேவி ( ஸ்ரீ எப்படி தட்டச்சுவதுன்னு சொல்லுங்களேன்,தலையை குழப்புது) இப்பொழுது தொலைகாட்சி விரிவாக்கத்தால், அமிதாப்பச்சன், சாருக்கான், கமலஹாசன் போன்றவர்களால் ஓரளவு தென்னிந்தியா பற்றி வட இந்திய சராசரி மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். 

மெரினா கடற்கரையே தெரியாத தமிழ்நாட்டு மாவட்டக்காரர்கள் போல் முன்பு வட இந்தியர்களுக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா,தமிழகம் எல்லைகள் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து யார் வடக்கே சென்றாலும் அவர்கள் மதராசிகள்தான் பின் பாலசந்தரின் ஏக் துஜே கே லியே கமலஹாசன் வசனம்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்தான் மதராசிகளின் புதிய அளவுகோல். 

உத்தர பிரதேஷ்,மத்திய பிரதேஷ்,டெல்லி இந்தியோடு ஒப்பிடும் போது தென்னிந்தியர்களின் இந்தி உச்சரிப்பு அவர்களை எளிதாக காட்டிக்கொடுத்து விடும். மெஹ்மூத் கிண்டல் இந்தி பேசுபவர்கள் யார் என்ற என் அகழ்வாராய்ச்சியில் சிக்கியவர்கள் ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தை சார்ந்தவர்கள். ஹைதராபாத்தை விட கடப்பா பம்பாய்க்கு பஞ்சம் பிழைக்க வறுமையான மாவட்டம் என்பதோடு எளிதான ரயில் பயணமும் கூட.

சிவசேனாவுக்கு எப்பொழுதும் ஒரு எதிரி வேண்டும். முன்பு மதராசிகள். இப்பொழுது பீகாரிகள்.

கலைஞர் மெட்ராஸை சென்னை என்று மாற்றிய பெயரோடு மதராசிகள் காணாமல் போய் விட்டார்கள். 
கிரிக்கெட் அரசியலை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகி விட்டது.
சாருக்கான் லுங்கி டான்ஸ் குத்தாட்டம் போட வைக்கிறது.

உடன் பிறப்பே!
எதிரிகள் அணியிலிருந்து கழக பாசறைக்கு
வந்த நீ முகநூலுக்கு முரசு கொட்டு
ட்விட்டரின் கதவை டொக் என்று தட்டு

என கலைஞரின் கவிதைக்கு காத்திருக்கிறேன்!



இதய நோயா? தேள் கடி வேணுமா?


கூகிளான் வடச்சட்டியை இலவசமா கொடுத்தாலும் கொடுத்தான். ஓட்ட வடை எப்படித்தான் சுடுவதுன்னு விவஸ்தையே இல்லைங்ண்ணா!

வட இந்தியாவிலோ அல்லது ஆந்திராவிலோ ஒரு ஆளு மீன் குஞ்சுகளை வளர்த்து அப்படியே முழுங்கினா ஆஸ்துமா போயிடும்ன்னு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி பீலா விட்டுகிட்டிருந்தாரு.

இருட்டு வெளிச்சத்திலே ஒரு ஆளை பின் தொடர்ந்து போனா அவர் பில்லி சூனியம் வைப்பவர் என்ற திகிலை கொண்டு வந்த தொலைக்காட்சி புததிசாலிகளை கொஞ்சம் நாட்கள் அரபி போலிஸ்காரன் கிட்ட புடிச்சுக் கொடுக்கனும் இல்லாட்டி வாங்க தேள் கடி ரொம்ப சொகமா இருக்கும்ன்னு பதிவர் சேனு வீட்டுக்கு அனுப்பி வைக்கனும் 

இதய நோய் வந்தா ஆட்டோவையோ,ஆம்புலன்ஸையோ புடிச்சு நேரா சேனுங்கிற பதிவர் வீட்டுக்கு போனீங்கன்னா போதும்.அவர் வளர்க்கும் தேளை விட்டு ரெண்டு கொட்டு கொட்டினால் இதய நோய் போயே போயிந்தி!


Thursday, December 24, 2015

குரங்கு மர புளியம் பழம்

சில பதிவுகளை காணும் போது தலைப்பு மட்டும் நச்சுன்னு வந்து விழுகிறது.மழை வந்து ஒட்டியும் ஒட்டாத ஸ்டிக்கர்,நமக்கு நாமே திட்டம்,புதுக்கூட்டணி,கிரனைட் கல்லை தேடும் சகாயத்தைக்கூட தேடிகிட்டிருக்காங்க 

நாந்தான் முதல் அமைச்சர்ன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி போஸ்டர் ஒட்டியும் கூட தமிழ்ப் பசங்க நம்ம பேரைக்கூட உச்சரிக்க மாட்டேன்கிறார்களே என்று  கூட்டணி கோபத்தையும்,தமிழ் சாணக்கியனே தூதுவிடுவதை தூங்கி எழுந்த ஸ்லிப்பர்கள் புலம்பி கார்ட்டூனில் சோகமாகிப்போனார்கள்.

நமக்கெல்லாம் கார்ட்டூனுக்கு நேரமே செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.உங்கள் நிலவொளிக் கூட்டங்களை கூகிளான் படம் பிடித்து வைத்திருக்கிறான்.

மரம் வெட்டினால் பசுமை நிறமா
நிலவொளிக்கு அக்னி சூடா
காட்சிகள் பேச்சுக்கு தமிழா
குரங்கு தாண்டுவது மட்டும்
கிடைக்காத புளியம் பழம்
ருசிக்காத பட்சத்தில் புளிப்பும்

பழுத்த பழமே வலு கொண்டு எழுகிறது
உங்கள் முதுகெலும்புகள் ஒடிந்து போயின
ஒதுக்கி வைத்தவர்களையும் மழை
இன்று கட்டித் தழுவுகிறது.
பிரித்தல் அரசியலுக்கு பரிகாரங்கள் தேடுங்கள்
இன்னுமொரு தேர்தல் வராமலா போய் விடும்.

டிஸ்கி: பதிவுலகம் வரும் வரை உங்கள் குழுப் பெயர் கூட தெரியாத அரசியல் விமர்சகன்.