Followers

Thursday, December 3, 2015

தமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு

தற்போதைய தமிழக வெள்ளத்தில் உடனடி நிவாரண உள் கட்ட்மைப்பு அரசும்,தனியார் துறையும்,பொது ஆர்வலர்களும் பொது மக்களும் சார்ந்தது. என்னைப்போன்ற பரதேசிகளால் ஏதாவது உதவ இயலுமா என்று யோசித்ததில்...

முன்பு ஒரு முறை இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணை வியாபாரம் பற்றி கடிதம் எழுதினால் கூட அதற்கு மறு பதில் சொல்லுமளவிற்கு நேரமில்லாமலோ அல்லது அலட்சியம் காரணமாகவோ புறக்கணித்து விடுவார்கள்.பின் டெண்டர்,அரசு துறை சுற்றுக்கள் என்ற கால விரயம் காரணமாக பெட்ரோலிய கச்சா பொருட்களில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய தமிழக மழை வெள்ளம் சூழலில் இந்த பதிவு தகவல் மூலமாக அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் தொழில் துறை சார்ந்தவர்களோ பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமில்லாமல் மழை வெள்ளம் போன பின் மீள் கட்டமைப்பை மட்டும் கவனத்தில் கொண்டு செயல் பட நினைப்பவர்கள் அணுகவும். 

செயல்பாட்டுக்கான கச்சா பொருட்கள் மெட்ரிக் டன் எனப்படும் கணக்கில்

1. பழைய இரும்பு கம்பிகள் 500 டன் ஒரு மாத கால தவணை இறக்குமதி. ஓரளவுக்கு தரமான கம்பிகள் என்பதால் அப்படியே உபயோகிக்கலாம் அல்லது மறு உருவாக்கம் செய்யலாம்.
2. தார் ரோடு போடும் கலவையில் கலக்கும் வொய்ட் ஸ்பிரிட் சுமார் 16 மெட்ரிக் டன்னும் அதற்கு மேலும்.
3. கெரோசின் எனும் வாசனை மற்றும் வாசனையில்லாத மண்ணெண்ணை

வொய்ட் ஸ்பிரிட் என்பது தார் ரோடு தவிர பெயிண்ட்டில் கலக்கும் மற்றும் டர்பன் டைன் பெயிண்டைக் கழுவுவதற்கான மாற்று. மரச்சாமான்கள், பூச்சிக்கொல்லி,கொசு,ஈ மருந்து என பல கெமிக்கல் துறை சார்ந்தது. கூகிள் மற்றும் இந்திய தொழில் தகவல் படி மும்பாய் துறைமுகமும்,சென்னை துறைமுகம் மட்டுமே அதிக அளவில் வளைகுடா நாடுகளிலிருந்து வொய்ட் ஸ்பிரிட் இறக்குமதி செய்கிறார்கள். 

இந்த வொய்ட் ஸ்பிரிட் பெட்ரோலிய உப பொருள். இதனை டாஸ்மாக் கலவையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். டாஸ்மாக் எதனால் அடிப்படையானது.பெட்ரோலிய வொய்ட் ஸ்பிரிட் ஹைட்ரோ கார்பன் அடிப்படையானது.

4. தமிழகத்தில் அரிசி போகம் செய்தாலும் தற்போதைய மழை சூழலில் பயிர்கள் மோசமாகி இருந்தால் டெல்லி,ஹரியானா பகுதிகளிலிருந்து பசுமதி,சம்பா வகை அரிசிகளை கொண்டு வந்து விடலாம்.

5.தேயிலை டீ,தேங்காய்,எண்ணை,பருப்பு போன்றவை தமிழகத்திலேயே உற்பத்தியாகின்றன. தமிழக அரசு தேவைகளை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். முடியாத பட்சத்தில் ஏற்றுமதி பொருட்களை தமிழகம் நோக்கி திருப்பி விடலாம்.

கொஞ்சம் நிலைமை சீராகிய பின் ஈரான்,துபாய் எண்ணை வளங்களை உபயோகிக்க முடியுமா என பார்க்கலாம்.

மாற்று ஆலோசனைகளை யாராவது தெரிவித்தாலும் செயல் படுத்த இயலுமா என முயற்சி செய்யலாம்.லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் வாகன பொருள் இடமாற்றங்கள்,பணம் பட்டுவாடா என்ற இரண்டு நிலைகளை கடக்கும் வலிமையில் பிரச்சினைகளை ஓரளவுக்கு சீர் கொண்டு வந்து விட முடியும்.

இதில் தமிழக நலன்,பொருள் தேடல் தவிர எனது சுய நலம் எதுவுமில்லை என்ற டிஸ்கிளைமர் போட்டு விடுகிறேன்.

No comments: