Followers

Thursday, August 2, 2012

அரபு நாடுகள் ரொம்ப மோசமா?

சிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்.சிங்கபூரை பாருங்கள் என்று அதன் முன்னேற்றத்தையும், உயர்ந்த கட்டிடங்கள்,சுத்தமான சாலைகள் என்று பெருமூச்சு விட்டு சொல்லும் போது சிங்கப்பூர மீதான பிம்பம வேறு விதமாகவே இருந்தது.ஆனால் பணிக்கு செல்லும் வெற்றிக்கொடி கட்டு சிங்கப்பூர் சட்ட கட்டமைப்புக்களை கோவி விளக்கும் போது அரேபிய நாடுகளுக்கும், சிங்கப்பூருக்கும் வித்தியாசமில்லை யென்றே தெரிகிறது.செல்லதுரை லெனின் துயர் மரணத்தை சொல்லி விட்டு பின்னூட்டத்தில் வவ்வாலின் கேள்விக்கு பதில் சொல்லும் போது "அரபு நாடுகளில் இது போல் இறந்தால் பிணம் நாட்டுக்கு வந்து சேருமா ? " என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அரபு நாடுகளில் மனித உரிமை குறித்த குறைகள் இருக்கலாம்.ஆனால் மரணம் போன்ற சூழலில் அவர்கள் மனிதாபிமானத்துடனே நடந்து கொள்கிறார்கள் என்ற எனது பின்னூட்டத்திற்கு பதிவர் சுவனப்பிரியன் கோவிக்கு எதிர் கேள்வியொன்றை போட்டிருந்தார்.கூடவே பின்னூட்ட வேகநரி உயிருடன் பெண்களை கூட வேலைக்கு போன ஆசிய இஸ்லாமிய பெண்கள் உட்பட துன்புறுத்தி இன்புறும் அரபு கொடுமைகாரர்கள் இறந்து போன பின்பு மட்டும் மனிதாபிமானத்துடன் நடப்பார்கள் என்று பதில் சொல்லியிருந்தார்.இவற்றிற்கு சில விளக்கங்கள் தருவது எனது அனுபவத்தையும் சொல்வது யாருக்காவது பயனுள்ளதாக இருக்க கூடும்.

இறப்பு விசயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்பது மருத்துவமனை,மார்ச்சுவரி,அரசு துறை சார்ந்த மரணசான்றிதழ் அலுவலகம் மற்றும் விபத்து எனும் பட்சத்தில் உள்துறையின் போலிஸ் சர்டிபிகேட் போன்றவற்றை துரிதப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.பணிப்பெண்கள் வன்கொடுமையென்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் வக்கிரகம் என்ற புரிதல் வேண்டும் வேகநரி.வளைகுடா நாடுகளில் பணிபுரிவோர் பிரச்சினைகள் பற்றி ஏற்கனவே சொல்லியாகி விட்டது. எனவே எதிர்பாரா மரணம் குறித்து மட்டும் இங்கே பேசுவோம்.

நம்பிக்கையே வாழ்க்கையென்ற நம்பிக்கையிலும் கனவிலும் யாரும் எதிர்பாராத மரணம் குறித்தோ அப்படியான சூழலில் என்ன செய்யவேண்டும் என்ற அடிப்படை விசயங்களைக் கூட யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. கல்லூரிக்காலம் தொட்டு வாழ்வோடு இணைந்து வந்த உயிர் நண்பன் இறக்கும் வரை நானும் கூட அப்படித்தான். இருந்தேன்.தவ்ஹித் ஜமாத்தை சார்ந்த சிலர் இணைந்து இறந்த ஒருவரின் உடலை அனுப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும்.கோவி.கண்ணனுக்கு மதம் சார்ந்த சுய கருத்துக்கள் இருக்கலாம்.அதற்காக எதிர் கருத்துக்கள் அனைத்தையும் ஒரே ஜாடிக்குள் மூடி அடைத்து விடுவது பகுத்தறிவின் அம்சத்தையே சீர்குலைத்து விடுகிறது என்பேன்.

வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்பவர்கள் பெரும்பாலும் குடும்பத்தை விட்டே செல்ல வேண்டிய சூழலில் செல்லுமிடத்தில் தன்னை நிலை நிறுத்தல்,பின் குடும்பத்திற்கான உதவி,கடன் என்ற நிலையிலே வாழ்வை தொடர்கிறார்கள்.எதிர்பாராத விதமாக பணியின் நேரத்தில் இறந்து விட்டால் நம்பகமான நல்ல நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் உடலை இந்தியா அனுப்பும் முயற்சியும்,காப்புறுதி தொகையும் கிடைத்து விடும.டணால் தங்கவேலு பாணி மண்ணாரம் கம்பெனி மாதிரி இருக்கும் போது சிக்கல்கள் உருவாகின்றன.அதே போல் வீடுகளில் பணிபுரியும் பெண்கள் குறித்த பாலியல் வன்முறைகள் பற்றி பரவலான விமர்சனங்கள் எழுகின்ற போதும் அதற்கு நிகரான பணிப்பெண்கள் மரணம் குறித்த விமர்சனங்கள் எழுகிறதா?அல்லது வாகன் ஓட்டுனர்கள் மரணம் குறித்த அதிக சர்ச்சைகள் உருவாகிறதா? 

குற்றவியல்,விபத்துக்கள் சார்ந்த மரணங்கள் தவிர்த்து எதிர்பாராத மரணம் எனும் பட்சத்தில் அதிக பட்சம் ஒரு மணி நேரத்துக்குள் போலிஸ்,ஆம்புலன்ஸ் வண்டிகள் உடலை அப்புறப்படுத்தி மருத்துவமனை மார்ச்சுவரிக்கு கொண்டு வந்து விடுவார்கள்.இதற்கு பின்பு உடலை உள்ளூரிலேயே அடக்கம் செய்யவோ அல்லது அவரவர் நாட்டுக்கு,வீட்டுக்கு அனுப்ப எடுக்கும் முயற்சியில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்திய தூதரகங்களின் பணி வருகிறது. ஏனைய நாட்டு தூதரகங்களோடு ஒப்பிடுகையில் இந்திய தூதரகத்தின் எதிர்பாரா மரணம் குறித்த பணி பரவாயில்லையெனலாம்.

ஆனால் அரேபிய மரண சான்றிதழ் பெறுவதற்கு இந்திய தூதரகத்தின் அபிடாவிட் சான்றிதழ் முதல் தகுதி.உடல் உள்ளூரிலே புதைப்பதற்கோ அல்லது இந்தியா கொண்டு செல்லவோ இந்திய தூதரகத்தின் அனுமதியும் உடலுக்கு பொறுப்பேற்றுக்கொள்பவர் எந்த விதத்தில் இறந்தவருக்கு தொடர்புடையவர்,எந்த சூழலில் இறந்தார் போன்றவற்றோடு குற்றவியல் சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறதா என்ற இந்திய சட்ட சிக்கல்கள் தூதரகம் மீது வந்து விடாத படி அதற்கான சான்றிதழ்கள் தேவையென கால தாமதம் செய்து விடுகிறார்கள். 

ஒருவர் எடுக்கும் முயற்சியைப் பொறுத்து மரணசான்றிதழ்,அபிடாவிட் மார்ச்சுவரியிலிருந்து உடலை பெட்டியில் வைக்க,விமான பயண சீட்டு என மூன்று நாட்களுக்குள் உடலை இந்தியா அனுப்புவது தனிமனித முயற்சி,பணம், அரசு அலுவல் தினங்கள் போன்றவற்றைப் பொறுத்தது.இவைகள் சாராத பொறுப்பேற்காத இறந்தவரின் உடலுக்கு பொறுப்பு யார் எனும் போது சிக்கல்கள் எழுகின்றன.அந்த மாதிரி சூழலில் செத்தாலும் நம்ம ஊர்ல சாகனும் என்று நினைக்கவே தோன்றும்.

அதிக நாட்கள் மார்ச்சுவரியில் இருக்கும் உடல்களை தூதரக முயற்சியைப் பொறுத்து அரபிய நாடுகளில் புதைப்பது நல்லது.பிரமிடு காலம் துவக்கமே உடலை புடம் போட்ட எகிப்திய நாட்டுக்காரன் ஒருமுறை .செத்தும் கூட ஒருத்தனை எரித்து ஏன் துன்புறுத்துகிறீர்கள் என்று எதிர்க்கேள்வி ஒன்றை போட்டான்..

இங்கே அடக்கம் செய்யும் கல்லறைகள்  நம்ம ஊர் சுடுகாடு என்ற உணர்வுகள் இல்லாமல் வரிசையாக அழகாக இருக்கின்றன.நம்ம ஊர் மாதிரி இறந்தவுடன் குழி தோண்டாமல் தயாராக நாலைந்து குழிகள் வரிசையாக வெட்டப்பட்டிருக்கின்றன.உறவினர் அல்லது நண்பர்கள் துணையிருந்தால் மார்பிள் கற்களின் நினைவுகளோடு பெயர்,பிறந்த தேதி,,இறந்த தேதியுடன் அமரராகி விடலாம்.நம்மூர் மாதிரி நாய்,நரிகள்,பில்லி சூனியம் தொந்தரவுகள் இல்லாமல் 25 வருடங்கள் வரை உடல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் வரை இறந்தவரின் உடலுக்கு சுகமான உறக்கமே.

கல்லறையோ சுடுகாடோ நம்மூரில் வகுப்பு பேதங்கள் இருப்பது மாதிரி இங்கே மதம் சார்ந்து தனித்தனியான கல்லறைகள்.

எனது அனுபவங்களை மட்டுமே இங்கே பதிவு செய்திருக்கிறேன்.மாற்று துயர் அனுபவங்களும் இருக்க கூடும்.பிரிவின்,இறப்பின் துக்கங்களையும் செய்வதறியாது திகைத்து துயரங்கள் கொண்டவர்களுக்கு எனது அனுதாபங்கள்.




86 comments:

UNMAIKAL said...

.
.


இங்கே சொடுக்கி >>>>> சவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடலை நெல்லைக்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத் <<<<< படிக்கவும்

.

Riyas said...

நடா அண்ணா..

எதற்கெடுத்தாலும் அரேபியர்களை குறை சொல்வதும் அரபு நாட்டை குறை சொல்வதும் சிலருக்கு பொழுது போக்கு..

அரேபியர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என சொல்ல வரவில்லை!! எதற்கும் ஒரு அளவு உண்டு.. காலையில கக்கூசுக்கு வராட்டியும் அதற்கும் அரேபியர்கள்தான் காரணம் என்பவர்களும் இருக்கிறார்கள்..

அந்த வேகவரி என்னும் முகமூடி போட்ட சாக்கடை நரிக்கு இதேதான் தொழில் எங்கு போனாலும் இஸ்லாத்துக்கெதிராக வாந்தியெடுப்பது..

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

அரபு நாடுகளில் இறந்த உடலுக்கு கொடுக்கும் மரியாதையை அழகாக சொன்னீர்கள். எனது ஊர்க்காரர் ஒருவர் இறந்து அவரை அடக்கம் செய்ய உடலை ரியாத்தில் உள்ள மைய வாடிக்கு எடுத்துச் சென்றோம். பக்கத்தில் ஒரு சவுதி நாட்டவர் இறந்ததற்காக அவரது ஊடலை புதைக்க அவரது உறவினர்களும் வந்திருந்தனர். எங்களை பார்த்தவுடன் 'இந்தியரா?' என்று கேட்டு எங்களை ஒதுங்க சொல்லி விட்டு உடலை ஆம்புலன்ஸிலிருந்து எடுப்பதிலிருந்து அந்த உடலை மண்ணில் வைத்து மண்வெட்டியைக் கொண்டு மண்ணை தள்ளி மூடுவது வரை அனைத்து வேலைகளையும் அந்த சவுதி நாட்டவரே செய்தனர். எங்களுக்கு எந்த வேலையையும் கொடுக்காது அவர்களே அந்த வெயிலில் வியர்வையை துடைத்துக் கொண்டு செய்ததை ஆசசரியத்தோடு பார்த்துக் கொண்டு நின்றேன்.

வவ்வால் said...

ராஜ்,

கோவி நிறைய மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கக்கூடிய சிந்தனையாளர், ஆனால் இது போன்ற சில விஷயங்களில் சொதப்பி விடுகிறார் என்பதில் எனக்கும் வருத்தமே.

அரபு தேசமோ,சிங்கையோ வெளிநாட்டில் இருந்து பிழைப்பு தேடி வரும் எளியவர்களை ஆபத்தான வேலையில் ஈடுப்படுத்தி உயிருக்கு உலைவைக்க தயங்குவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு.

அ)ஒரு நாட்டு அல்லது குழு மனிதர்களின் மொத்த குணத்தை விமர்சிக்கும் ஒரு பதிவு என்ற அடிப்படையில் இப்பதிவுக்கு மட்டுமல்ல ,பொதுவாக நான் சில கேள்விகள் மட்டுமே கேட்கிறேன்.

1.ஓவ்வொருவரும் தன் சுய அனுபவங்கள் ஊடாக ஒரு கருத்துக்கு வருவதும் அத்னை அனைவருக்குமான நிகழ்வாக பொதுப்படுத்துவது எவ்வளவு சரியாக எப்போதும் பொருந்தும்?

2.ஒருவருக்கு கிடைக்கும் சூழல் சார் அனுப‌வங்கள் பிறருக்கு கிடைக்காது என்பது உண்மை என்னும் பட்சத்தில் அறியத்தக்க பல‌ரின் அனுபவங்களின் மேலான முடிவு சரியாக இருக்குமா?

3. இப்படி முடிவு எடுப்பவர்கள்(பெரும்பாலும் ஊடகங்கள்) சார்பற்று சான்றுகளின் மீது முடிவெடுப்பவர்களாக் இருப்பார்களா?

ஒரு குழு மக்களின் குணம் என்பது பன்முகத் தன்மை
உடையது.சரியாக கணிக்க இயலாது என்பது என் கருத்து எனினும் பெரும்பான்மை மக்களின் குண்மே அக்குழுவின் குணமாக எடுக்கப் படும் வாய்ப்பு அதிகம்.
*********
ஆ)ஆயினும் அரசுகளின் கொள்கைகள், ஆவணப் படுத்தப்பட்ட விடயங்கள் இவற்றின் மீதான விமர்சனங்கள் மீது மக்களின் பார்வைகள் வித்தியாசப் படும்.


ஒரு நாட்டின் ஆளும் அரசை ஆதரிக்கும அல்லது எதிர்க்கும் குழுவினருக்கு அதன் செயல் முக்கியம் இல்லை.இது ஒருவகை அடையாளப் படுத்தல் மட்டுமே.(எ.கா தர விரும்பவில்லை)

ஆளும் அரசின் செயல்களை பிற ஆட்சியாளர்களுடன் ஒப்பீட்டு அள்விலே மட்டுமே பார்க்க முடியும்.

அரபு ஆளும் வர்க்கங்களின் மீது சில விமர்சனங்களை வைக்க்லாம்.



1. ஜனநாயகமின்மை

2. மத சார்பின்மை,மத சட்டங்களை அம்மதம் சாராதவருக்கும் பயன்படுத்துவது.அந்நாட்டவரை விட பிற நாட்டவரே அதிகம் பாதிக்கப் படுவதாக் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.(இது பிற நாடுகளில் இல்லை என்பதால் மட்டுமே விமர்சிக்கிறோம்)

3. நெடுங்காலம் பணியாற்றுவோருக்கும் குடியுரிமை வழங்குவது இல்லை.ஏன் வழங்க வேன்டும் என்பதல்ல எதிர்வாதம்,பிற நாடுகள் அரபுக்களுக்கு குடியுரிமை வழங்கும் போது இயலும் அரபு நாடுகள் செய்வது இல்லை.

4. பணியாற்ற செல்லும் பலர் ஏமாற்றப்படுவது. பணியாளர்களின் துன்பங்கள்

5. முறையான விசா இன்றி பல இலட்சம் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றினாலும் உழைப்பு திருட்டுக்காக வேண்டுமென்றே கண்டு கொள்ளாமை.

6. கண்மூடித்தனமான அமெரிக்க ஆதர‌வு

மக்கள் என்பவர்கள் எந்நாட்டினர் என்றாலும் ஒரே மாதிரித்தான்.பல் வகை குணம் உடையவர்களும் இருப்பர்.ஆனால்

நான் ஏற்கெனவே கூறியபடி இந்நாட்டு ஆளும் வர்க்கங்களையும் ஆதரிப்பது தங்கள் அடையாளம் என்பவர்கள் செய்வது சரியா?

சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!

நன்றி

வடுவூர் குமார் said...

வவ்வால் பதிவில், பிழைப்பு தேடி வருபவர்களை ஆபத்தான வேலைகளில் வைத்துவிடுவதாக சொல்லியுள்ளார் அது சென்னைக்கு வந்து மெட்ரோவில் வேலை(வட நாட்டவர்கள்) செய்பவர்களுக்கும் பொருந்தும். இன்னைக்கும் தமிழ் நாளிழதில் சாக்கடை அள்ளப்போய் இறப்பவர்கள் பற்றி அடிக்கடி வருது,இதை எப்படி வகைப்படுத்துவது?
வேலை/சாவு/அபாயம் யாருகாவது உத்திரவாதம் கொடுக்கமுடியுமா?

Riyas said...

@சார்வாகன்


//அரபு ஆளும் வர்க்கங்களின் மீது சில விமர்சனங்களை வைக்க்லாம்.//

ம்ஹும் இந்த பழைய காமெடிய விடமாட்டாங்களே எத்தனை முறைதான் சிரிக்கிறது :-)


//1. ஜனநாயகமின்மை//

அங்கே மன்னராட்சிதான் என்றாலும்.. ந்ம ஆசிய நாட்டைவிட ஜனநாயகம் ஒன்றும் செத்துவிடவில்லை!!

//2. மத சார்பின்மை,மத சட்டங்களை அம்மதம் சாராதவருக்கும் பயன்படுத்துவது.அந்நாட்டவரை விட பிற நாட்டவரே அதிகம் பாதிக்கப் படுவதாக் புள்ளி விவரங்கள் கூறுகின்றன//

உங்கள் புள்ளி கொஞ்சம் எடுத்து விடலாமே..

தவறு செய்தால் தண்டனை யாவருக்கும் சமம் அவ்வளவுதான்.. மற்றபடி இஸ்லாத்தின் கடமைகளை செய்யும்படியோ இஸ்லாத்தை ஏற்கும்படியோ யாரும் வற்புறுத்தப்படுவதில்லை.. நீங்கள் சொல்வது போல் நடந்திருந்தால் இலட்சக்கனக்கான முஸ்லிமல்லாதவர் இங்கே வேலை பார்க்கும் நிலை வந்திருக்காது..

சார் நீங்கள் எத்தனை வருடம் அரேபியாவில் வேலை பார்த்தீர்கள்..?

//3. நெடுங்காலம் பணியாற்றுவோருக்கும் குடியுரிமை வழங்குவது இல்லை.ஏன்//

அது குறித்த நாட்டின் இறையான்மை சம்பந்தப்பட்டது..

அதுதான் அரேபியாவில் ஜனநாயகம் இல்லன்னு சொல்லிட்டிங்களே திரும்ப எதுக்கு அங்க குடியுரிமை பெற்று கஷ்டப்படனும்..

//4. பணியாற்ற செல்லும் பலர் ஏமாற்றப்படுவது. பணியாளர்களின் துன்பங்கள்//

இதை முழுமையாக மறுக்க முடியாது? ஆனால ஏமாற்றுவது அரேபியர்கள் மட்டுமல்ல உங்கள்(இந்திய) முகாமையும்தான்.. அரேபியர்கள்தான் நிறுவன உரிமையாளராக இருந்தாலும் அதிகமாக அவற்றை நிர்வகிப்பது இந்திய முகாமைதான்.. அவர்களால்தான் அதிகமானோர் ஏமாற்றப்படுகின்றனர் குறிப்பாக இந்தியா தவிர்ந்த பிற நாட்டவர்.. பாகிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை நாட்டவர்கள்..

இந்த கசப்பான உண்மைக்கு பல பாகிஸ்தானிகளும் பங்காளிகளும் சாட்சி சொல்வார்கள்..

எதுக்கு பிரிவினை சேர்ந்தே சொல்வோம் அயோக்கியர்கள் அரேபியர்களும் இந்திய படித்த முகாமைகளும்தான்..!!


//5. முறையான விசா இன்றி பல இலட்சம் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றினாலும் உழைப்பு திருட்டுக்காக வேண்டுமென்றே கண்டு கொள்ளாமை.//

இதில் இருவரும் திருடர்கள்.. மற்றபடி சட்டப்படி விசா பெறுவதனால் அரசாங்க வருமானம்தான் அதிகரிக்கும்..

//6. கண்மூடித்தனமான அமெரிக்க ஆதர‌வு//

இந்த இடத்தில் இதைச்சொல்வதன் காரண்ம் ஏனோ புரியவில்லை....

அமெரிக்காதான் நல்லவன் வல்லவன் என புகழ்கிறீர்கள்,, அதை ஆதரிப்பதையும் விமர்சிக்கிறீர்கள்,,
what a funny!!

சார்வாகன் said...

சகோ ரியாஸ்
அரபு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக அடையாளம் சார்ந்து பதில் சொல்லி இருக்கிறீர்கள் என எடுக்கிறேன்!!!!!!!!!.இது நியாஸ் என்னும் தனி மனிதனின் கருத்து.

அ).(1) ஜனநாயகமின்மை,(6) அமெரிக்க ஆதரவு இரண்டுக்கும் தொடர்பு இருப்பது வரலாறு படித்தால் தெரியும்.ஆட்டோமான் பேரரசு தோற்கடிக்க உதவி செய்தவ்ர்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் அளித்த பரிசுதான் அரபுலக ஆட்சி.
இவர்கள் ஆட்சியில் இருப்பது அமெரிக்க எண்ணெய் சுரண்டலுக்கு மிக அவசியம்.
மத்திய கிழக்கு முழுதும் அமெரிக்க போர்த் தளங்கள் இருப்பது இவர்களை பாதுகாக்கவே.
இபோது நான் ஏன் குறிப்பிட்டேன் என புரியும். சிந்திக்க மாட்டிர்களா!!!!!

ஜனநாயகத்தை விட அரபு மன்னர் ஆட்சி சிறப்பாக் உங்களுக்கு தோன்றுவது ஏன் எனில் தேவையை விட அதிக இயற்கை வளம் கொண்ட நாடுகளில் பொருளாதார சிக்கல் இருக்காது.அப்ப்டி இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டால் மட்டுமே நன்கு சுரண்ட முடியும்.

அந்நாட்டில் வாழும் ஷியாக்கள் இந்த இபின் சவுத் மன்னராட்சியை விரும்புவது இல்லை.
*************
ஆ)ஒரு மத சட்டங்கள் பிறருக்கும பயன்படுத்தலாம்.இது சரியாக் உங்களுக்கு படுவதில் வியப்பு இல்லை.
இந்தியாவுக்கு நீங்கள் சொல்வதை பொருத்துவோம்

இதைத்தானே இந்துத்வவாதிகள் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதால் பொது சிவில் சட்டம் வேண்டும் என சொல்கிறார்கள்.இஸ்லாமியர் பெரும்பான்மையினார் ஆனால் அம்மத சட்டம்,சிறுபான்மையாக இருந்தால் மத சார்பின்மை என இரட்டை வேடம் போடுவார்கள் என்பது உண்மை என நிரூபித்து விட்டீர்கள்!.
ஆகவே இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவை!!!!!!!!!!!!!!!
***************

இ)மரண தன்டனை,கை வெட்டப் பட்டவர்கள் அதிகம் வெளிநாட்டவரே என்பது அனைவரும் அறிந்ததே. பணம் இருப்பவர்கள் இரத்தப் பணம் கொடுத்து தப்பிப்பதால் மட்டுமே இது நிகழ்கிறது.
http://www.guardian.co.uk/news/datablog/2011/mar/29/death-penalty-countries-world
Thank you

சார்வாகன் said...

சூனியம் வைத்ததாக கருதப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு மரண தண்டனை.

சூனியம் வைக்க‌ முடியும் என்று யாராவது நிரூபியுங்கள்,பிறகு இதற்கு மரண தண்டனை கொடுக்கலாமா என யோசிப்போம்.


Woman Faces Death Penalty For Witchcraft In Saudi Arabia
Posted: 04/20/2012 11:48 am Updated: 04/20/2012 11:48 am


A Sri Lankan woman could be beheaded for witchcraft in Saudi Arabia.

Reuters reports that the woman was arrested for allegedly casting a spell on a 13-year-old girl.

In a report filed by The Daily Okaz and cited by Reuters, the girl's father claimed she "suddenly started acting in an abnormal way, and that happened after she came close to the Sri Lankan woman."

Witchcraft is a crime punishable by death in Saudi Arabia, according to Reuters.

The story comes just one month after the Times of India reported that villagers in Lohardaga, India lynched an elderly woman and man, allegedly for practicing witchcraft.

Last year the Times also reported on a string of elderly women killed in Guwahati, India for performing dark magic.

But the killings reported in the Times were not conducted by the government, whereas the woman in Saudi Arabia faces a state-sanctioned death penalty.

http://www.huffingtonpost.com/2012/04/20/death-penalty-witchcraft-saudi-arabia_n_1438963.html

வவ்வால் said...

வடுவூர் குமார்,

வாங்க, இங்கே வந்து என்னை பிடிக்கிறிங்களே :-))

இரண்டுப்பதிவும் படிச்சீங்க தானே?சரி நீங்களே சொல்லுங்க

1)சென்னையில் வேலை செய்யும் பீகாரி அடிப்பட்டதும் சாலை ஓரம் தூக்கி போட்டுவிட்டு 108 போன் செய்து விடுகிறார்கள், அத்தோடு அவர்கள் பொறுப்பு முடிந்துவிட்டது.

2) சென்னையில் மெட்ரோவில் வேலை செய்ய என சொல்லாமல் நல்ல சம்பளம் , வசதி என சொல்லி சுமார் 1.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு வேலைக்கு அழைத்து வருகிறார்கள்.

4) வேலையோ ,சம்பளமோ பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டுப்போக முடியாது.அப்படி போனால் குற்றம்.

3)மேலும் இறந்தால் இழப்பீடு இல்லை, பிணம் கொண்டு செல்வதற்கு யாராவது தன்னார்வ நிறுவனம் தான் செய்கிறது.

இப்படி எல்லாம் இந்தியாவில் இருக்குன்னு சொல்லுங்க :-))

சிங்கையில் தொழிலாளி இறந்ததற்கு யார் காரணமோ அவருக்கு என்ன தண்டனை? ஒன்றும் இல்லையே.ஆனால் அவர் ரிஸ்க் எடுத்து வேலைக்கொடுத்த முதலாளி என்பதால் தெய்வம் :-))

நான் ரிஸ்க் எடுத்து உனக்கு வேலை கொடுத்தேன் அதனால தொழிலாளி ரிஸ்க்கான வேலை செய்து உயிரை விடனும்னு சொல்றாங்களா :-))

முதலில் வெளிநாட்டு வேலைக்கு என ஆள்பிடித்து போகும் ஏஜெண்ட்களை புடிச்சு உள்ள போடணும், கொய்யாலே இவனுங்க தான் பொய்யா சொல்லி காசு வாங்கிட்டு போய் புதைகுழில தள்ளுராங்க அவன் எல்லாம் இந்திய தமிழனுங்க தான்.

வவ்வால் said...

சகோ.சார்வாகன் ,

அவங்களுக்கு இதெல்லாம் புரியாது, புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,அடிமையாக இருந்தாலும் அரபுக்காரன் கிட்டே இருந்தா தப்பில்லை :-))

சவுதி அரேபியா அரசு இப்போ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது , நோன்பு மாதத்தில் மாற்று மதத்தினர் பொது இடத்தில் உணவு உண்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று.

அட உணவுன்னா இலைப்போட்டு சாப்பிடுறது கூட இல்லை, ஒரு ஐஸ் கிரீம் வாங்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு கடையவிட்டு காருக்கு கூட வரக்கூடாது :-))

ஏன்யா நீங்க நோன்பு இருங்க அதுக்கு அடுத்தவனை ஏன் சாப்பிட கூடாதுன்னு சொல்லுறிங்க?

காட்டுமிராண்டிக்கூட்டம் வகுக்கும் சட்டம் அப்படித்தான் இருக்கும் :-))

Riyas said...

சகோ சார்வாகன்..

விளக்கத்திற்கும் ஆதாரங்களை தேடி தேடி தந்ததற்கும் நன்றிகள்..

உங்கள் அளவுக்கெல்லாம் எனக்கு வரலாறு தெரியாதென்பது உண்மைதான்..

ஒரு கருத்துக்கு மாற்று கருத்து தெரிவித்தால் உடனே அந்த வர்க்கத்தின் பிரதிநிதி என முத்திரை குத்தி விடுவீர்கள் போலிருக்குது..

நான் யாருடைய பிரதிநிதியும் அல்ல!! நான் மன்னராட்சிதான் சிறந்தது எனச்சொல்ல வரவும் இல்லை.. நம்நாட்டின் ஊழல் நிறைந்த ஆட்சியோடு ஒப்பிடும்போது அதொன்றும் அவ்வளவு மோசமில்லை என்றே சொன்னேன்..

அமெரிக்க ஆதரவு கொள்கையில் உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்!!

மற்றபடி இந்த தண்டனை விடயத்தில் No Comments.. இந்தியாவுக்கு சிவில் சட்டம் தேவையா வேண்டாமா என்பதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது காரணம் நான் இந்தியன் இல்லை!! இலங்கையன,, இலங்கையில் எல்லோருக்கும் ஒரு சட்டம்தான்.. மத,இன வேறுபாடு கிடையாது!!

மற்றபடி நீங்கள் சொன்னது போன்று இது எனது சொந்த கருத்துக்கள்தான்..

மரனதண்டனைக்கு கையா? கழுத்தா? கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..

வரலாறு பிழைக்ககூடாதல்லவா :-)

Riyas said...

வவ்வால் சார்,

அவங்க காட்டுமிராண்டிகளாகவே இருக்கட்டும்..

அப்போ எதுக்கு இலட்சக்கணக்கான இந்திய யோக்கியசிகாமனிகள் அவர்களிடம் வேலைவாய்ப்பு பெற்று கைநீட்டி சம்பளம் வாங்கனும்..

காட்டுமிராண்டி கூட்டத்திடம் நல்ல மக்களுக்கு என்ன சகவாசம் வேண்டிக்கிடங்கு...

இவ்வளவு பேசத்தெரிந்த நீங்கள் இந்தியனை காட்டுமிராண்டிகளிடம் வேலைக்கு அனுப்பாமல் சொந்த நாட்டிலேயே தன்மானத்தோடு வேலை
பார்க்க வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த வேண்டியதுதாணே..!!

நடா அண்ணா மண்ணிக்கனும் :(

வவ்வால் said...

ரியாஸ் சார்,

வேலைக்கு போறவன் முட்டாளா இருக்கானே,

நாங்க இங்கேயே வச்சிக்கணும் என சொன்னால் நீங்க எல்லாம் அங்கேயே போயிடுங்களேன்னு ஒருத்தர் சொல்வார் போறிங்களா?

காபீர்களின் நாட்டில் எதுக்கு இருக்கணும்?

அரபிக்காரனை சொன்னால் இவரே பொங்குறார் அரபியை விட :-))

முதலில் பிறந்த நாட்டுக்காரனாக சிந்தியுங்கள், நீங்க என்ன தான் அரபிக்கு கொடிப்பிடித்தாலும் அவனுக்கு சமமாக உங்களை நடத்தப்போவதில்லை.

Riyas said...

வவ்வால்,

//காபீர்களின் நாட்டில் எதுக்கு இருக்கணும்?//

இனத்துவேஷமான கருத்து!!!

அவர்களையே திட்டிக்கொண்டு அங்கே ஏன் போறிங்கன்னுதான் கேட்டேன்..இங்கே முஸ்லிம் காபீர் ஏன் வர வேண்டும்..

20,30 வருடமாக அரபிக்கு கொடி பிடித்து அவனுக்கு சேவகம் செய்ய நாங்களொன்றும் தமிழ்நாட்டுக்காரன் கிடையாது..

இப்போதைக்கு அவன் எஜமான் நாங்கள் தொழிலாளர்கள்.. எங்கள் காண்டரக்ட்(தேவை)முடிந்ததும் அவன் யாரோ நாங்கள் யாரோ?

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//காபீர்களின் நாட்டில் எதுக்கு இருக்கணும்?//

காஃபிர்களின் நாடு என்று இந்தியாவை யார் சொன்னது? 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று அச்சு அசலாக இஸ்லாத்தை 3000 வருடங்களுக்கு முன்பிருந்தே சொல்லி வருவதல்லவா நான் பிறந்த தாய் மண். இடையில் 2000 வருடங்களாக சாதிக்கு ஒரு சாமி தெருவுக்கு ஒரு சாமி என்று வைத்துக் கொண்டது உங்கள் தவறல்லவா? இது சரியில்லை என்பதால்தான் நமது முன்னோர்களின் மார்க்கமான ஓரிறைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாத்தை எங்களது முன்னோர்கள் சுவீகரித்துக் கொண்டார்கள். எனவே இங்குள்ள பூர்வீக குடிகளான இஸ்லாமியர்களை வேறு தேசத்துக்கு போகச் சொல்ல அத்வானிக்கே நா எழாது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

வவ்வால் said...

ரியாஸ் சார் ,

தமிழ் நாட்டுக்காரனும் இல்லை அரபியும் இல்லை அப்புறம் அரபிய திட்டினா நீர் என்னாத்துக்கு ஓடி வரணும் ,ஒரமா போய்க்கோ.

நான் சாம்பாரும் ,தயிரும் சாப்பிடுறவன் இல்லை , சும்மா குறுக்க வந்து கூவினா கும்மிடுவேன்.

இனத்துவேஷம்னா என்ன தெரியுமா இப்போ நீர் சொன்னது தான் , தமிழ்நாட்டுக்காரன் தான் அப்படினு சொல்வது நீர் எந்த நாடு ,என்ன மொழிக்காரன் , அதாவது தெரியுமா?

Riyas said...

வவ்வால் சார், என்ன மிரட்றிங்களா?

நாங்களும் சாம்பார் சாப்பிடரல்ல..

எங்க வரலாற்றை கொஞ்சம் சொல்லித்தாங்களே தெரிஞ்சுக்கிறோம்..

வவ்வால் said...

திரு.சுபி,

உங்க காமெடிக்கு அளவே இல்லையா , இஸ்லாம் அல்லாதவர்கள் அனைவரும் காபீர்கள் தானே :-))

// இது சரியில்லை என்பதால்தான் நமது முன்னோர்களின் மார்க்கமான ஓரிறைக் கொள்கையை //

புத்த மதம் ,ஜைன மதம் ,ஏன் வள்ளலார் கூட சொன்னார் அவரை எல்லாம் விட்டுப்புட்டு எங்கேயோ இருந்து இறக்குமதியான ஓரிரை கொள்கையை இந்தியாவின் பூர்வீக வழியில்னு சொல்லிக்கிறது என்ன கொடுமை சார், எல்லாம் உங்களூங்க போல தலையாட்டின்னு நினைச்சு சொல்றிங்களா?

வள்ளலார் சொன்னதும் உருவ வழிப்பாடு இல்லா ஓரிறை வழிப்பாடே வாங்க அதுல சேர்ந்துக்கலாம், நீங்க எல்லாம் சவுதி அரேபிய மதத்துக்கு போனதால் தான் வள்ளலார் சொன்ன புதிய மார்க்கத்தை இந்துத்துவாக்கள் ஆக்ரமிச்சுட்டாங்க ,அதை மீட்கலாம் வாங்கோ :-))

வவ்வால் said...

ரியாஸ் ,

அரபிக்காரனை திட்டினா அதுக்கு ஏன் ஓடி வந்தீர் அப்புறம் உங்க வரலாற்றை ஆராய்றேன், மேலும் , மேலும் தமிழ்நாட்டுக்காரன் தான் அடிமையா அங்கே இருக்கான்னு சொல்லும்போதே உங்க லட்சணம் தெரியுது :-))

Riyas said...

வவ்வால்,

எதுவும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.. எனது கருத்தை முதலில் விமர்சித்தவர் நீங்கள்..

அப்புறம் நீங்க சொன்ன கருத்த நான் விமர்சிச்சா கோபம் வருகுதா? என்ன நியாயம் சார்..

நான் உண்மையைத்தான் சொன்னேன்,, உங்க ஊர் காரர்கள் குடும்பம் பிள்ள குட்டியோடு போய் அரபிநாட்டில் செட்டிலாவதை போல் எங்க ஊர் காரண் இருப்பதில்லை என்பதையே சொல்ல வந்தேன்..

இதில் எந்த இனத்துவேஷமும் இல்லை.. அப்படி தோன்றினால் மன்னித்துக்கொள்ளுங்கள்,,:(

சார்வாகன் said...

ஸலாம் சகோ சுவனன்,

மிக்க நன்றி

யாரும் இந்தியார்களை வேறு நாட்டுக்கு போக சொல்லவில்லை.வேலைக்கு அங்கு போகும் போது வரும் பிரச்சினைகளையே அலசுகிறோம்.ஏதோ அங்கு சென்று கொஞ்சம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற செல்லும் சகோக்கள் பிரச்சிஅனையில் சிக்கி தண்டிக்கப்படுகிறர்களே என்றுதான் குரல் கொடுக்கிறோம்.

இந்தியரகள் பல நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ்கிறார். பணியும் ஆற்றுகிறார். தண்டனை அரபுநாடுகளில் வெளிநாட்டவருக்கு எண்ணீக்கையில் அதிகம் பிற நாடுகளை ஒப்பிடும் போது என்பதுதான் நம் ஆதங்கம்.அதுவும் மரண தண்டனை கூட பதிலுக்கு பதில்,ஆனால் திருட்டுக்கு கை வெட்டுதல் திருடினான் என்றே வைத்தாலும் அச்சகோவின் வாழ்வே அழிந்து விடாதா?

இப்போதைய‌ உங்கள் பதிவில் கூட நம் சொந்தம் என்பதால்தானே காப்பாற்ற‌ முயல்கிறோம்?.

நான் மீண்டும் மீண்டும் இன்னும் அழுத்திக் கூறுவேன்.

"எவ்வள்வு பெரும்பான்மையாக இருந்தாலும் ஒரு மதத்தின் சட்டங்களை மதம் சாராதோர் மீது பயன்படுத்துவது தவறு".

***************
இது வேற கொஞ்சம் ஜாலியாக

"இந்தியா காஃபிர்களின் நாடு இல்லை".ஹையா

நீங்கள் வஹாபியில் இருந்து "குரான் மட்டும்" பிரிவுக்கு கருத்து ரீதியாக் விலகி செல்வது போல் தெரிகிறது.நல்ல விடயம்தான்.

இன்னும்

1. "இந்தியர்கள் காஃபிர்கள் இல்லை" என்று சொல்லலாமா?

2. நான் காஃபிர் என்று மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.குழப்பி விட்டீடிர்களே!!!!


நான் யார்???????????

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி

தனிமரம் said...

சட்டம் பற்றிய தெளிவான பார்வையைச் பகிர்ந்ததுக்கு நன்றி!

Salahudeen said...

நான் இங்கு பஹ்ரைனில் வேலை செய்கிறேன் சமீபத்தில் எங்கள் கம்பெனியில் இறந்த ஒரு ஆந்திரா தொழிலாளியின் உடல் 4 நாட்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இங்கு உள்ள மருத்துவமனைகளில் லஞ்சம என்பதே கிடையாது ஆனால் நமது ஊரில் பிணவறையில் கூட லஞ்சம கொடுக்க வேண்டும் மனித உரிமைகளை பொறுத்தவரை அர்பிகளை மட்டும் குற்றம் சொல்லி பயன் இல்லை இங்குள்ள பெரும்பாலான கம்பனிகளை நிர்வகிப்பது இந்தியர்கள் தான் அவர்கள் தான் தன் சொந்த நட்டு மக்களையே கொடுமை படுத்துகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஹேமா said...

நல்லதொரு பதிவு.மனிதர்களும் மனிதாபிமானங்களும் வாழத்தான் செய்கின்றன்.எங்கள் சௌகரியங்களுக்கு அது அமைவாக இல்லாவிட்டால் சரியில்லை என்று சொல்லிவிடுகிறோம்.நன்றி நடா !

suvanappiriyan said...

திரு சார்வாகன்!

//1. "இந்தியர்கள் காஃபிர்கள் இல்லை" என்று சொல்லலாமா?//

2. நான் காஃபிர் என்று மிக மகிழ்ச்சியாக இருந்தேன்.குழப்பி விட்டீடிர்களே!!!!


நான் யார்???????????//

நீங்கள் யார் என்பதை என்னை விட உங்கள் உள்ளம்தான் நன்கு அறியும்..

தொன்மையான காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கியிருக்கிறேன்
8 : 6 : 11 - ரிக் வேதம்

இதிலிருந்து குர்ஆன் 'குறிப்பிடும் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும்' கொண்டு தொகுக்கப் பட்ட பாடல்களையே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் என்று விளங்கிக் கொள்ளும் படியாக ரிக் வேதத்தின் சுலோகம் அமைந்துள்ளது.

இறைவன் நோவா அவர்களுக்கு அருளிய வேதங்களான ஆதி கிரந்தம், ஆதி கியான் போன்றவை தொன்மையான காலம் தொட்டு வாய் மொழியாக, மரபுச் செய்தியாக இருந்தது. அவைகளே ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதம் என்று பகுத்து தொகுக்கப் பட்டிருக்கிறது என்று விளங்க முடிகிறது.

வேதங்கள் தவிர்த்து புராணங்கள், உபநிஷத்துக்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதிகள் எல்லாம் இந்துக்களின் புனித நூல்களாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்க உரையாக முகமது நபியின் 'நபி மொழிகள்' எவ்வாறு அமைந்திருக்கிறதோ அது போல ஆதி கிரந்தங்களுக்கு ரிஷிகளால் எழுதப் பட்ட வியாக்யானங்களாக இந்த புராணங்களும் உபநிஷத்துகளும், எழுதப் பட்டிருக்க வேண்டும். அல்லது நோவாவுக்குப் பிறகு வந்த இறைத் தூதர்களின் விளக்கங்களின் தொகுப்பாகக் கூட இருக்கலாம்.

'இது முந்தய வேதங்களிலும், ஆப்ரஹாம், மோசேவுடைய வேதங்களிலும் உள்ளது.'
87 : 18,19 –குர்ஆன்

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:62)


இறைவனே உண்மையை அறிந்தவன்.

வேகநரி said...

திரு.ராஜ நடராஜன், நான் அரபிகள் பற்றி சொன்ன கருத்தில் மாற்றமில்லை. அரபு கொடுமைகாரர்கள் என்று அவசரத்தில் எழுதியது குறைவே.அதுக்கு இன்னும் மேலே.
கல்லால் அடித்து கொல்லுதல், தலையை துண்டித்தல், கை வெட்டுதல் செய்யும் அரபு காட்டுமிராண்டி தனக்காக பதைபதைத்து துடித்து போகும் ஒரு அடிமைகள் கூட்டத்தை தமிழ் பேசும் உலகில் உருவாக்கி வைத்திருக்கிறானே!!! என்னத்தை சொல்வது!
சகோ சார்வாகனின் கேள்வி அரபு நாடுகள் நெடுங்காலம் பணியாற்றுவோருக்கும் குடியுரிமை வழங்குவது இல்லை பிற நாடுகள் அரபுக்களுக்கு குடியுரிமை வழங்கும் போது அரபு நாடுகள் ஏன் அப்படி செய்வது இல்லை என்ற கேள்விக்கு பதில் அரபு நாடுகளின் இறையான்மை சம்பந்தப்பட்டது. இவர்கள் என்ன தான் அரபு பெயர் வைத்து இஸ்லாமியன் என்று சொல்லி அரபு விசுவாசமாக நடந்தாலும் இவர்களுக்கும் அரபுகாரன் குடியுரிமை கொடுக்க மாட்டான். இந்தியா உட்பட காபிர்கள் நாட்டில் தான் குடியுரிமை தாராளமாக கிடைக்கும்.

வவ்வால் said...

ரியாஸ்,

//எதுவும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.. எனது கருத்தை முதலில் விமர்சித்தவர் நீங்கள்..
//

நல்லா கண்ணை திறந்து பாரும்,நான் சார்வாகனுக்கு தான் பதில் சொன்னேன், நீர் தான் குறுக்க ஓடி வந்தது அதை எப்படி உங்களை சொன்னேன் என எடுத்துக்கொண்டீர்கள் , ஹீக்கா அடிச்சு இருக்கிங்களா? :-))

அப்புறம் நான் சொன்னதை இனத்துவேஷம்னு சொன்னது நீங்க, அப்புறமா நான் திருப்பி சொன்னதும் அப்படி இருந்தா மன்னிச்சிடுங்க என சொல்றிங்க , தெளிவா வாரும், பேசுவோம் :-))

-----------

சு.பி,

இந்து மத வேதம் எல்லாம் படிச்சு இருக்கார்,அடுத்த நித்தியானந்தாவா ஆகிடுவார் போல இருக்கு, இந்து மதம் அவர் மனதை ஆக்ரமிச்சுடுச்சு :-))

இந்து மதத்தின் வெற்றி என மோடி சொன்னாலும் சொல்வார் :-))

துளசி கோபால் said...

எனக்கென்னமோ இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளிலும் மரணம் ஒரு மரியாதையோடுதான் பார்க்கப்படுகிறது.

சென்னை சுடுகாட்டில் கூட பணம், பேரம் எல்லாம் இருந்தது நாங்கள் அனுபவிச்ச ஒரு கசப்பான நிகழ்ச்சி.

எல்லாத்துலேயும் காசு பார்க்கத்துடிக்கும் மக்கள்:(

mayavee said...

அரபிகள் காட்டுமிராண்டிகள்... மங்களூர் .... அசாம் எல்லாம் ஒரு பெண்ணை எப்படி நடதவேண்டும்னு தெரிஞ்ச.. நல்ல மனிதர்கள்....

உடனே பெண் குடிக்கலாமானு கேக்காதிங்க ?? குடிகுரதே தப்பு... அதில் பெண் குடிச்சா என்ன பிரச்னை... ??

பாம்பே .. சொந்த நாட்டில்.. பீகார் கரன் வேலை செய்ய முடியல... அது கேக்க துப்பு இல்லாதவங்க... அடுத்த நாட்டு சட்ட திட்டத்தை பத்தி பேச என்ன யோகிதை இருக்கு...

என்ன நாடு இந்திய தான்... நான் இந்தியன் தான்... மோதல... நான் என்ன சு*தை கழுவிட்டு .. அடுத்தவங்கள பத்தி பேசுறேன் ....

வருண் said...

***காட்டுமிராண்டிக்கூட்டம் வகுக்கும் சட்டம் அப்படித்தான் இருக்கும் :-)) ***

காட்டுமிராண்டிகள் வாழும் காட்டிமிராண்டி நாட்டுக்கு என்னவோ இவர்களை இந்தியா நாடுகடத்தி இவங்க எல்லாம் அங்கே போயி ரமடான் நேரத்திலே பசியும் பட்டினியுமா கெடந்து சாகிற மாதிரி.

பேசாம நம்ம ஊர்லயே, கள்ளச்சாராயம் காய்ச்ச வேண்டியதுதானே? அம்மாதான் மது விலக்கு கொண்டு வரப்போதாம் இல்லை! எனக்குத் தெரிய "வீரமறவர்கள்" எல்லாம் இதைத்தான் செஞ்சாங்க டாஸ்மாக்க்கு (கம்பேணி சாராயம் ஆரம்பிக்க முன்னாலே)! இப்போ எல்லாரும் பெரிய பணக்காரரா இருக்கா! இல்லைனா கஞ்சா கிஞ்சாவாவது விக்கலாம். என்ன செய்தாலும் நம்ம தேசத்திலேதான் மன்னிச்சு விப்புடுவாளே!

நம்ம ஊர்ல பிச்சைக்காரனுகதான் ரொம்ப வாய் சவடால் பேசுவனுக. அத மாரித்தான் இங்கேயும் இருக்கு.

வருண் said...

***thequickfox said...

திரு.ராஜ நடராஜன், நான் அரபிகள் பற்றி சொன்ன கருத்தில் மாற்றமில்லை. அரபு கொடுமைகாரர்கள் என்று அவசரத்தில் எழுதியது குறைவே.அதுக்கு இன்னும் மேலே.
கல்லால் அடித்து கொல்லுதல், தலையை துண்டித்தல், கை வெட்டுதல் செய்யும் அரபு காட்டுமிராண்டி தனக்காக பதைபதைத்து துடித்து போகும் ஒரு அடிமைகள் கூட்டத்தை தமிழ் பேசும் உலகில் உருவாக்கி வைத்திருக்கிறானே!!! என்னத்தை சொல்வது!
சகோ சார்வாகனின் கேள்வி அரபு நாடுகள் நெடுங்காலம் பணியாற்றுவோருக்கும் குடியுரிமை வழங்குவது இல்லை பிற நாடுகள் அரபுக்களுக்கு குடியுரிமை வழங்கும் போது அரபு நாடுகள் ஏன் அப்படி செய்வது இல்லை என்ற கேள்விக்கு பதில் அரபு நாடுகளின் இறையான்மை சம்பந்தப்பட்டது. இவர்கள் என்ன தான் அரபு பெயர் வைத்து இஸ்லாமியன் என்று சொல்லி அரபு விசுவாசமாக நடந்தாலும் இவர்களுக்கும் அரபுகாரன் குடியுரிமை கொடுக்க மாட்டான். இந்தியா உட்பட காபிர்கள் நாட்டில் தான் குடியுரிமை தாராளமாக கிடைக்கும்.***

நேரடி அனுபவம் போல!! நீங்களுமா வயித்துப்பொழைப்புக்காக உங்க தேசத்தை விட்டு அரபு தேசம் போயி பிச்சை எடுத்தேள்? அடப்பாவமே? அதான் இந்தமாரி மெண்டலா அலையிற!

Leave, middle east, if you talk this much in china, you will be hanged for sure (by some law) and you will be in heaven now as an "anony" af course. Only in India, you can get away with anything! Because the law so fucked up, all we have is FREEDOM, nothing else!

வருண் said...

After all India is so close to become a super power now! We dont need to go to brutal nation! We dont need to stay there illegally and get killed for those heartless people. If we dont go anywhere, we dont have to worry about brutality or anything.

வருண் said...

***தமிழ் நாட்டுக்காரனும் இல்லை அரபியும் இல்லை அப்புறம் அரபிய திட்டினா நீர் என்னாத்துக்கு ஓடி வரணும் ,ஒரமா போய்க்கோ.***

அநியாயமா, வாய் கொழுப்பா பேசினா அதை யாரு வேணா கேக்கலாம்! இப்போ நான் கேட்டா என்ன சொல்லுவேள்? நானும்ம் இப்பொதைக்கு தமில்நாட்டுக்காரனும் இல்ல, அரபிக்காரனும் இல்லை.

அங்கே நம்மாளு பொழைப்புக்கு போயிட்டு அவனைக் காட்டுமிராண்டினு சொல்லிக்கிட்டு அலையிறது படு கேவலமாயிருக்கு!

அங்கே வாழ்றவங்க இப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க! நம்ம ஊர் வெட்டிப்பேச்சு சண்டியர்கள்தான் இப்படி எல்லாம் பேசி அங்கேபோய் வாழ்றவங்க நிலைமையையும் கஷ்டத்துக்கு உள்ளாக்குவானுக!

கோவி.கண்ணன் said...

நான் சுவனப்பிரியனின் பின்னூட்டத்திற்கு இணைப்புகளும் கொடுத்திருந்தேன், அது பற்றி எதுவும் சொல்லவே இல்லையே.

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து பிணத்தைப் பெற்றுத் தாருங்கள் என்று உறவினர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்ததாக எந்த நாளிதழிலும் நான் செய்திகள் பார்த்ததில்லை, இருந்தால் எடுத்துக்காட்டவும். ஆனால் அரபு நாடுகளில் இருந்து பிணம் பெற கண்ணீர் வடிக்கும் உறவினர்கள் உண்டு என்பதை மறந்துவிட்டு எழுதுகிறீர்கள்.

குற்றவியல் மரணமோ, சாதாரண மரணமோ இங்கெல்லாம் இரண்டே நாட்களில் சொந்த நாட்டுக்கு உடலை அனுப்ப முடிகிறது, அங்கு ஏன் முடியவில்லை, அதே தூதரகம் தானே இங்கும் இருக்கிறது. நான் குறிப்பிட்டிருக்கும் செல்லதுரை முறைப்படியான அனுமதியில் வேலை செய்து இறந்தவரும் அல்ல, அவர் உடலைக் கூட பார்வையிட அவரது நண்பர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.

//பணிப்பெண்கள் வன்கொடுமையென்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் வக்கிரகம் என்ற புரிதல் வேண்டும் //

எல்லா நாட்டிலும் தனிமனித வக்ரம் தான் குற்றம் செய்ய தூண்டுகிறது, எந்த ஒரு அரசும் வெளிநாட்டு பணிப் பெண்களை நீங்கள் அடிமையாக நடத்தலாம் என்று ஒப்பம் கொடுப்பது இல்லை, ஆனால் அப்படி நடந்து கொண்ட சொந்த நாட்டுக்காரனை எந்த அளவுக்கு தற்காத்து பாதிக்கப்பட்டவர்களை கைவிடுகிறார்கள் என்பதைத் தான் பார்த்து அரசின் நேர்மையைப் பற்றிப் பேச வேண்டும், சிங்கப்பூரில் பணிப் பெண்ணை துன்புறுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை உண்டு, தண்டனை அனுபவித்துவருபவர்களும் இருக்கிறார்கள், சர்வதேச நெருக்கடி இல்லாமல் இதை சவுதி உள்ளிட்ட மற்ற நாடுகள் சுயமாக செய்கிறதா என்று பார்த்துவிட்டு உங்கள் கருத்தை 'தனி நபர் சார்ந்த குற்றச் செயலுக்கு அரசை குறைச் சொல்ல முடியுமா ?' என்று கேட்கலாமே.


சுபி போன்றவர்களுக்கு அரபு நாடுகளைக் குறைச் சொன்னால் இஸ்லாமை எதிர்ப்பதாக நினைப்பார்கள், உங்களுக்கும் அப்படி தெரிந்தால் அது எனது பிழை இல்லை.

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பதிவு'


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

சார்வாகன் said...

வணக்கம் சகோ இராஜ நடராஜன்,

அனல் பறக்குது!!!!!!!!!!

என்ன ஆச்சு அமைதியா இருந்த எப்பூடீ? நீங்களும் வாங்க பதில் சொல்லுங்க!!!!!!

நன்றி

வேகநரி said...

வருண் என்பவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதிவிட்டால் தனது கருத்து உயர்ந்தது என்று மற்றவங்க நம்பிடுவாங்க என்ற உறுதியான நம்பிக்கை.அவசியம் ஒரு மென்டல் மருத்துவரை பார்க்கவும். ஆங்கிலத்தில் நாலு வரி எழுதி பசங்கள ஏமாற்றலாம் என்ற காலம் எல்லாம் போய்விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்க வருண் அவர்களே.
வருண் என்பவர் தான் புகழ் பெறுவதற்காக
( கருத்து தெரிக்கவல்ல) மற்றவர் பதிவுகளுக்குள் புகுந்து குழப்பம் விளைவிக்கும் தமிழ்மண புகழ் ஒரு மன நோயாளி. புகழுக்காக கறுப்பு காகங்களை வெள்ளை புறா என்று சொல்லி திரியும் மென்டல்.

வவ்வால் said...

வேகநரி,

//தமிழ்மண புகழ் ஒரு மன நோயாளி. புகழுக்காக கறுப்பு காகங்களை வெள்ளை புறா என்று சொல்லி திரியும் மென்டல்.//

உமக்கும் அந்த உண்மை தெரிஞ்சு போச்சா, அதனால அதை கண்டுக்கிறதே இல்லை :-))

அதை நாளு பேரு கும்மினா கூட அதையும் பெருமையா நினைக்குது என்னத்த சொல்ல :-))

UNMAIKAL said...

மார்பு திறந்து பெண்கள் மாபெரும் போராட்டம் ! கலங்கி போனது ஒலிம்பிக் நிர்வாகம் ...

என்ற பதிவை படித்து பார்த்தால் பதிவரின் நோக்கம் புரியும்.

அங்கு நான் இட்ட கீழ்கண்ட பின்னூட்டம் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.

ஆதலால் இங்கு பதிந்து வாசகர்கள் அறிய தருகின்றேன்.

ராஜ நடராஜன் அவர்கள் அன்பு கூர்ந்து இதை அனுமதிப்பார்களாக.

1. UNMAIKAL2 August 2012 23:41
விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?


உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது.

இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கத்திய (அ)நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது.

முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக் என்ற புத்தகத்திலும், அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள ”பட் ஆஃப்” என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும்,

மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever?

Athletes will receive 15 condoms each for the 17-day festival

'I've seen athletes having sex out in the open, getting down and dirty on grass between buildings,' says U.S. women's goalie
Victoria Pendleton among the glamorous female stars offered condoms

Read more:CLICK >>> .The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever? <<< HERE

இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம்,

அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம்.

அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும்,

2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும்,

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம்

விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு

இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம்

தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).

இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு.

இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர்.

வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்,

ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

UNMAIKAL said...

UNMAIKAL2 August 2012 23:43
விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?
PART 2


சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம்.

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன்.

கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர்.

இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது.

இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம்.

கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள்.

வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?.

எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும்,

பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

-நௌஷாத் அலி

UNMAIKAL said...

UNMAIKAL2 August 2012 23:54

150,000 Olympic Condoms (That’s 15 Per Athlete) To Be Handed Out At London 2012

One of the most titillating stories surrounding every Olympics is the insane amount of sex that takes place in the athletes’ village.

Olympians are charged up with hormones (some natural, some unnatural) and tight with tension. Many are looking to let loose before their big event, or at least as soon as it’s over.

They are surrounded by toned, attractive athletes from around the world and they are all living together in tight quarters. It’s not hard to see why so many of them get it on with each other.

A record 150,000 condoms will be delivered to athletes at the 2012 Summer Olympics, in anticipation of record levels of athlete sex.

That equates to a staggering 15 condoms per athlete–a 50 per cent increase over the number that were handed out in Beijing.

Durex has even said that it is prepared to ship in emergency backups if the initial supply runs out.

At the 2000 Sydney Olympics, organizers famously had to place a rush order for 20,000 extra condoms because the initial supply of 70,000 ran out.

Hope Solo, goalkeeper for the US women’s Olympic soccer team, has spoken in the past about all the sex that happens at the Olympics.

“I’ve seen people having sex out in the open, getting down and dirty on grass between buildings,” she said. “I may have snuck a celebrity into my Beijing room without anybody knowing and snuck him back out. But that’s my Olympic secret.”

Many athletes cheat on their spouses at the games, but it doesn’t seem to be a big deal in that culture. They take sort of a “what happens at the Olympics stays at the Olympics” perspective on things.

SOURCE: http://www.manolith.com/2012/07/20/150000-olympic-condoms-thats-15-per-athlete-to-be-handed-out-at-london-2012/

Anonymous said...

பணிப்பெண்கள் வன்கொடுமையென்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் வக்கிரகம்....

அந்த வக்கிரங்கள் செய்வோர் அரபுகளாக இருக்கும் பட்சத்தில் தண்டம் செலுத்தினால் போதும். அரபுகளாக இல்லை என்றால் கடுமையான தண்டனையாமே.. சிங்கள் பெண்ணின் உடலில் எக்கச்சக்க ஆணிகளை ஏற்றிக் கொடுமை செய்தவரின் கழுத்தை வெட்டி விட்டார்களா .. அப்புறம் என்னாச்சுனு எனக்குத் தெரியல.

செத்தப் பின் துரிதப் படுத்தி உடல்களை கொடுப்பது மனிதாபிமான விடயம் தான். ஆனால் சாகும் முன் அவனைப் படாதபாடு படுத்துவதாக பல குரல்கள் எழுகின்றன.. தொழிலாளர் நலனில் அரபு நாடுகள் இன்னும் பின்னுக்கே இருப்பதாக நான் நினைக்கின்றேன் ..

அரபு நாடுகளில் எல்லாமும் கெட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் கெட்டது இருக்கு என சொன்னால் மாற்றிக் கொள்ளாவோ ஏற்றுக் கொள்ளவோ கூடிய மனோபாவம் அங்கில்லை என நான் கருதுகின்றேன்.

மார்பிள் கற்களின் நினைவுகளோடு பெயர்,பிறந்த தேதி,,இறந்த தேதியுடன் அமரராகி விடலாம்....

இஸ்லாமியர் கல்லறை கட்டுவதில்லை எனக் கேள்வி பட்டேன். அப்போ அது உண்மை இல்லை.. நல்ல விசயம்னு நினைச்சேன் அதுவும் இல்லையா...

UNMAIKAL said...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கம் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு

ஜெத்தா: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும்,

பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.

தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும்.

அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும்.

முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது,

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார்.

கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம்.

நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை.

அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம்.

அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

அதில் அடிக்கடி இநதியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

http://tamil.oneindia.in/news/2012/08/02/world-nris-angry-at-reintroduction-decades-old-gold-customs-158888.html

naren said...

இறந்து போன நபரின் உடலை, எப்படி நடத்துகிறோம் என்பதுதான் கேள்வி.
இதில் தனிநபர் தார்மீகம், பண்பு, நாட்டு மற்றும் இன மக்கள் கலாச்சாரம் என்று பார்ப்பதை விட, ஒரு நாட்டின் சட்டத் திட்டங்கள் எப்படி அந்த உடலை நடத்துகின்றன என்று பார்த்தால், அனைத்து நாடுகளில், ஒரே நிலைதான் இருக்கின்றது. சாவு இயற்கையானதா அல்லது செயற்கையானதா மற்றும் குற்றம் நடைபெற்று இருக்கின்றதா என்று ஆராயவது, பிரதே பரிசோதனைகள், உடல் பதப்படுத்துதல் பாதுகாத்தல், உரியவரிடம் ஒப்படைத்தல் போன்றவைகள் நடைமுறையில் இருக்கின்றன.

இந்த நடைமுறையில் சிக்கல்கள் இருக்கும், தரம் வேறுபடும். இவையெல்லாம் குறைந்து இருக்கும் நாட்டில், அந்த நாட்டின் இன மக்கள், மதம் சிறந்தது என சொல்வது தவறு.
ஐரோப்பிய நாடுகளில் சவுதியை விட தரம் சிறப்பாக இருந்தால், வெள்ளைகாரன் கிருத்துவம் சிறந்தது என்று சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த சட்டதிட்டம் தரமானாத என்று பார்க்கவேண்டும். போர் காலங்களின் தரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
http://www.icrc.org/customary-ihl/eng/docs/v2_rul_rule113

இந்தியாவில் அரசாங்க ஊழியர்கள், அமைப்புகள், இறந்தவரின் உடலை நடத்தும் விதம், உண்மையில் மனிதாபிமானமற்றது. சென்னை பொது மருத்துவமனை சவகிடங்கில் ஒரு நாள் இருந்தால் அதன் உண்மை, வலி தெரியும்.

இந்தியாவில் பலரும் பலவிஷயத்துக்கும் இலஞ்சம் வாங்குகிறார்கள், சவுதியில் மன்னர் குடும்பம் மட்டுமே அனைத்து விஷயத்துக்கும் இலஞ்சம் வாங்கிவிடுகிறது, மற்றவர்கள் வாங்கினால் அதோகதிதான். அதனால் இந்தியாவில் இலஞ்சம் சவுதையை விட அதிகம் இருப்பதை போல வெளித்தோற்றத்தில் தெரிகிறது.

வருண் said...

***thequickfox said...

வருண் என்பவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதிவிட்டால் தனது கருத்து உயர்ந்தது என்று மற்றவங்க நம்பிடுவாங்க என்ற உறுதியான நம்பிக்கை***

thequickfox?????, இதென்ன நவீன தமிழ் ஸ்க்ரிப்ட்டா? ஏன்யா யோவ்!

எதுக்கு காட்டுமிராண்டி நாட்டுல போயி பிச்சை எடுக்கனும்? நீதான் வாய் கிழிய பேசுற இல்லை? அங்கே காட்டுமிராண்டி நாட்டுல போயி எதுக்கு நிக்கிற? அவர்களையெல்லாம் உன் ஹிந்தூ தேசத்துலேயே வச்சுக்கிட்டு அழவேண்டியதுதானே? செத்தா நீயும் வவ்வாலும் தூக்கிப்போயி ஒப்பாரி வச்சு, சாராயம் குடிச்சு தெருவெல்லாம் ஆடிப்புட்டு, ஒரு நாள்லயே பொதச்சுட்டு வந்துடலாம். உனக்கும் வவ்வாலுக்கும் ஒரு உருப்படியான வேலையும் கெடச்சாப்புலயும் இருக்கும்?

இப்போ தமிழ்லதான் கேக்கிறேன், பதில் சொல்லு!

வருண் said...

****வவ்வால் said...

வேகநரி,

//தமிழ்மண புகழ் ஒரு மன நோயாளி. புகழுக்காக கறுப்பு காகங்களை வெள்ளை புறா என்று சொல்லி திரியும் மென்டல்.//

உமக்கும் அந்த உண்மை தெரிஞ்சு போச்சா, அதனால அதை கண்டுக்கிறதே இல்லை :-))

அதை நாளு பேரு கும்மினா கூட அதையும் பெருமையா நினைக்குது என்னத்த சொல்ல :-))

August 3, 2012 7:25 AM***

நீ என்னத்த கும்மி தாலிய அறுத்தயோ, போ! நான் பார்த்தவரைக்கும் நீ மேதாவி மாரி எதையாவது ஒளறிட்டு அறைவாங்காத எடமே இல்லை! வேணும்னா நீ எங்க எங்க அறை வாங்கினனு "காப்பி பேஸ்ட்" பண்ணுறேன். நீயே சொல்லு!

நான் எல்லாம் சிறுவயதிலேயே எம் சி யார் ஆட்சியிலேயே பட்டைச்சாராயம் காய்ச்சு, குடிச்சு வளர்ந்தவன். நீ என்னத்தையோ கொஞ்சோண்டு பீரக் குடிச்சுப்புட்டு சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரிகிற!!! உன் சண்டியர்த்தனம் காமெடியாத்தான் இருக்கு போ!

வவ்வால் said...

வருண்,

//நான் எல்லாம் சிறுவயதிலேயே எம் சி யார் ஆட்சியிலேயே பட்டைச்சாராயம் காய்ச்சு, குடிச்சு வளர்ந்தவன்.//

ஓ அப்போ ஒல்ட் மாங்க் ஆ அதான் என்ன பேசறோம்னே நிதானம் இல்லை, ஒரு செத்த பாம்பை அடிக்க வேண்டாமேனு பார்க்கிறேன் "get a life"

அப்படியும் பேசித்தான் ஆகணும்னா பேசலாம் ,அப்பாலிக்க ஒப்பாறி வச்சு அய்யோ வவ்வால் என்னை கொல்லுறான்னு ராஜ நடைக்கிட்டே பஞ்சாயத்து வைக்க கூடாது, ஏற்கனவே ஒருக்க சின்னப்புள்ளத்தனமா கண்ணைக்கசக்கிட்டு நின்ன ஆசாமி ஆச்சே :-))

ஹி..ஹி என் கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டவங்க ... கைப்புள்ள போல அவங்களே பெருமைப்பட்டுக்கிறாங்க ,அதை வேற காபி பேஸ்ட் போடுறீரா போடும் அப்படியே நான் சொன்னதை சரினு மத்தவங்க சொன்னதையும் சேர்த்து போடு எனக்கு ஓசில விளம்பரம் :-))

வருண் said...

***அப்படியே நான் சொன்னதை சரினு மத்தவங்க சொன்னதையும் சேர்த்து போடு எனக்கு ஓசில விளம்பரம்***


வவ்வாலு!

ஒங்களோட ஒரே காமெடியா இருக்கு. நான் நீங்க அடி வாங்கினதைச் சொல்றேன்ன்னு சொன்னா, இல்லை நான் அடிச்சதையும் சொல்லுனு சொல்றீங்க.

அவங்க நாட்டிலே அவங்க வசதிக்கு ஒரு சட்டம் கொண்டு வந்தா, அவங்க காட்டுமிராண்டினு சொன்னீங்க.

சரி, எதுக்குய்யா காட்டுமிராண்டி நாட்டுக்குப் போயி வாழனும்? நம்ம ஊர்லயே இருக்க வேண்டியதுதானே? னா பதிலைக்காணோம்.

இல்லை நான் சென்னையிலேதான் கிழிக்கிறேன்னு எதையாவது விடுவீங்க.

சரி, சென்னையிலேயே கிழிங்க. இது உங்க பிரச்சினை இல்லை. நாடுவிட்டு நாடு போனவன் அங்கே உள்ள சட்டசிட்டங்களை அனுசரிச்சு நடந்துட்டுப் போகட்டும், நீங்க சென்னையிலே மூடிக்கிட்டு இருங்கனு நான் சொன்னாலும் எதையாவது ஒளறுவீங்க!

அப்புறம் "நாந்தேன் ஜெயிச்சேன்," நான் பெரிய சண்டியராக்கும்னு தற்பெருமை வேற!!

----------


ஓல்டாவது மாங்காவது!!!

ஒரு காலத்தில் பட்டச்சாரம் குடிச்சேன்னு சொன்னேன். நான் இப்போலாம் ஜானி வாக்கர் க்ரீன் லேபல்தான் குடிக்கிறது. இல்லேனா க்ளெண்டிஃபிஷ் மாரி ஏதாவது "பழைய சரக்கு"தான் குடிக்கிறது. :)))

வேகநரி said...

வவ்வால்,
//நாளு பேரு கும்மினா கூட அதையும் பெருமையா நினைக்குது என்னத்த சொல்ல//
விளங்கிச்சு.அப்படிபட்ட ஒரு மோசமான ஜென்மம் அது.பதிவர்கள் மாடரேசன் கொண்டுவருவதன் மூலம் இந்த மென்டலிடமிருந்து தங்கள் பதிவுகள பாதுகாத்து நல்ல மாதிரியான விவாத இடமாக மாற்றலாம்.

வருண் said...

thequickfox said...

வவ்வால்,
//நாளு பேரு கும்மினா கூட அதையும் பெருமையா நினைக்குது ***என்னத்த சொல்ல//
விளங்கிச்சு.அப்படிபட்ட ஒரு மோசமான ஜென்மம் அது.பதிவர்கள் மாடரேசன் கொண்டுவருவதன் மூலம் இந்த மென்டலிடமிருந்து தங்கள் பதிவுகள பாதுகாத்து நல்ல மாதிரியான விவாத இடமாக மாற்றலாம்.

August 3, 2012 8:05 PM***

நீ இஸ்லாத்தின் நம்பிக்கை உள்ளவங்களத்தான் அதை இதைச் சொல்லி "தாக்க" முடியும். என்னை யெல்லாம் உன்னை மாரி ஒரு முட்டா மிருகம் (நரி ஒரு மிருகம்தானே?) ஒண்ணும் கிழிக்க முடியாது.

நீ பெரிய சிந்தனைவாதி! உன் சிந்தனைகளை அள்ளிவிட்டு விவாதிச்சு கிழி கிழினு கிழிச்சுட்ட பாரு!

வர்றது ஒரு பொறம்போக்கு "ஐ டி"! வாயைக் கேளூ!

ஆமா, நீயென்ன நாத்திகனா? இல்லை ஒரு பண்டாரமா? நாத்திக வேடம்போடும் பண்டாரமாத்தான் இருக்கும். அதானே? :)))

வவ்வால் said...

வருண்,

//சரி, எதுக்குய்யா காட்டுமிராண்டி நாட்டுக்குப் போயி வாழனும்? நம்ம ஊர்லயே இருக்க வேண்டியதுதானே? னா பதிலைக்காணோம்.
//

என் பேரைப்போட்டு கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் "பதில்" என் பேரை சொல்லவே பயப்படும் ஆசாமியிடம் என்னத்த பேசன்னு தான் பதில் சொல்லவில்லை.

இப்பவும் சொல்லுவேன்,அப்புறம் டீச்சர் வவ்வால் கிள்ளிட்டான் போல அழக்கூடாது சரியா :-))

நான் என்ன உம்மை போல அடுத்தவன் முதுகுபீன்னாடி பொரணி பேசுறவன் நினைச்சீரா? யாரையாவது திட்டிப்பதிவு போட்டு அதன் மூலம் ஹிட்ஸ் வாங்க அலைபவர் தானே, அப்படியே திட்டணும்னா சம்பந்தப்பட்டவங்க பதிவில் போய் பேச தில்லுக்கிடையாது

,வாய் மட்டும் வாஷிங்க்டன் வரைக்கும் கிழியுது:-))

இதே இஸ்லாமியர்கள் அமெரிக்கா போனால் ஏர்ப்போர்ட்டில் கடுமையாக நடத்துறாங்க அப்படி இருந்தும் ஏன் போகணும் ? போகாமல் இருக்கலாமே?

அதே போலவே இங்கு இருந்தும் காட்டுமிராண்டி நாட்டுக்கு ஒரு கும்பல் போகுது, என்ன செய்ய,அதுக்காக சாகடிச்சா கேட்காம இருப்பாங்களா?

வருண் said...

***இதே இஸ்லாமியர்கள் அமெரிக்கா போனால் ஏர்ப்போர்ட்டில் கடுமையாக நடத்துறாங்க அப்படி இருந்தும் ஏன் போகணும் ? போகாமல் இருக்கலாமே?***

அவன் நாட்டு சட்டம் பிடிக்கலைனா போகக்கூடாது, அம்புட்டுத்தான். இல்ல நான் போவேன்னு நின்னா, அது முட்டாள்த்தனம்.

***அதே போலவே இங்கு இருந்தும் காட்டுமிராண்டி நாட்டுக்கு ஒரு கும்பல் போகுது, என்ன செய்ய,அதுக்காக சாகடிச்சா கேட்காம இருப்பாங்களா? ***

சாவடிச்சா உடனடியா இருக்கவங்க எல்லாரும் திரும்பி வரனும். இனிமேல் எவனும் அங்கே போகக்கூடாது.

சும்மா காட்டுமிராண்டி நாட்டுக்கு போயிட்டு "இப்படி ஆயிடுச்சே"னு ஒப்பாரி வைக்கக்கூடாது. புரியுதா?

suvanappiriyan said...

வருண்!

//சரி, எதுக்குய்யா காட்டுமிராண்டி நாட்டுக்குப் போயி வாழனும்? நம்ம ஊர்லயே இருக்க வேண்டியதுதானே? னா பதிலைக்காணோம்.//

சும்மா அடிச்சு விளாட்றீங்க....ஈராக் சண்டையில் குவைத்திலிருந்தும் மற்ற வளைகுடா நாடுகளிலிருந்தும் வெளியேறிய இந்தியர்களால் நமது நாட்டு பொருளாதாரமே ஒரு ஆட்டம் கண்டது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலோ மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் அதிகம் பேர் குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் வளை குடா நாடுகளில் அதிகம் பேர் தங்களது குடும்பத்தை தாய் நாட்டிலேயே விட்டு விட்டு தங்கள்து செலவு போக மொத்த பணத்தையும் நமது நாட்டுக்கே அனுப்பி விடுகின்றனர். இவ்வளவு ஊழலுக்கு பிறகும் நமது நாடு நிமிர்ந்து நிற்க காரணமே வளைகுடா பணம் தான். எங்கள் ஊரைச் சுற்றி கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், இரும்பு சம்பந்தமான வேலையில் உள்ளோர் அனைவரும் வளைகுடா சம்பளத்தை நம் நாட்டிலேயே பெற்றுக் கொள்கிறார்கள். ஆட்களும் கிடைப்பதில்லை. அந்த அளவு வீடு கட்டும் பணி கொடி கட்டி பறக்கிறது. அனைத்தும் வளைகுடா பணமே.

அடுத்து இந்தியர்களை அரபு நாட்டுக்கு அனுப்ப நம் அரசு தடை விதித்தால் அவர்கள் பங்களாதேஷிலிருந்தோ பாகிஸ்தானிலிருந்தோ ஆட்களை எடுத்துக் கொள்வார்கள். இந்த வகையிலும் நஷ்டம் நமக்குத்தான்.

எவனோ ஒரு அரபி எப்பொழுதோ ஒரு முறை வீட்டுப் பெண்களிடம் தவறாக நடந்தால் அதையே பெரிது படுத்தி அரபு நாடுகள் என்றால் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்வது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

Riyas said...

@வருண்,

சில லூசுங்கள லூசுல விடுங்க..:-)

நாய் நம்மள கடிச்சா நாயை திருப்பி கடிக்கவா முடிவும்..

Take it easy!!

வருண் said...

***எவனோ ஒரு அரபி எப்பொழுதோ ஒரு முறை வீட்டுப் பெண்களிடம் தவறாக நடந்தால் அதையே பெரிது படுத்தி அரபு நாடுகள் என்றால் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்வது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ***

உண்மைதான், தவறில்லாத இடம் ஏது? அங்கே போய் வாழ்ந்து தன் குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் எல்லாம் இப்படி வவ்வாலு மாதிரி "காட்டுமிராண்டிகள்" அது இதுனு பேசமாட்டாங்க.

இன்னொரு நாட்டுக்குப் போனால், அங்கே உள்ள சட்டதிட்டங்களை ஒழுங்காத் தெரிந்துகொண்டு அதன் படி நடந்தால் பிரச்சினை வராது.

அவன் தண்டனைனு கையை வெட்டினால் என்ன தலையை வெட்டினால் என்ன? நீ தப்பு செய்தால்தானே? நீ தப்பு செய்றது ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுப்பதுபோலனு நெனச்சு ஒழுங்கா நடந்தால் என்ன பிரச்சினை உனக்கு?

விசா முடிந்தபிறகு "கள்ளக்குடி"யா இருக்கிறது. அப்புறம் அவங்களை வேலைக்கு வச்சவன் தப்புதான் நான் கள்ளக்குடியா இருப்பது என் தப்பு இல்லைனு சொல்றது! எனக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்தபோது என்னை தண்ணி தெளிச்சுட்டாரு என் எஜமானர் இதெல்லாம் சரியா? நியாயமா? என்பதெல்லாம் எதுக்கு?

விசா முடிஞ்ச உடனே இடத்தை காலி பண்ண வேண்டியதுதானே? அபப்டி செய்திருந்தால் இந்தப் பிரச்சினையே வராது.

ராஜ நடராஜன் said...

பின்னூட்ட நண்பர்கள் அனைவருக்கும்...

பின்னூட்டங்கள் அனல்பறக்க போவதால் தனிப்பதிவாக மொத்தக்கருத்துக்களையும் தனித்தனி பின்னூட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பதிலாக அடுத்த பதிவாக இணைத்து விடுகிறேன்.
காத்திருக்கவும்.நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

நாசமா போச்சு போங்க :-))

இப்போ தான் எனக்கு ஒரு ஃபார்ம் வருது.

வருணுக்குன்னு ஒதுக்கி வச்ச கருணை நேரம் முடிஞ்சு போச்சு , அதை ஒரு வழி ஆக்கலாம்னு பார்த்தேன். இப்போ வந்து கட்டைய போடுங்க.

ஏன்யா வருண்னு உன் பதிவிலே வந்து பேசினதுக்கே அழுத, அப்புறம் இங்கேவும் அழுத, அப்புறம் நான் திருப்பி பேசினா தாங்கிற சக்தி இல்லைனா ஏன் பேச வர்ர?

இப்பவும் இது ராஜ் பதிவு என்பதால் உன் குலம் பிழைத்தது ,இல்லைனா உன் பரம்பரையே நாறி இருக்கும், போய் அரபிக்கிட்டே காட்டு எண்ணை போடுவான் :-))

வவ்வால் said...

//அவன் தண்டனைனு கையை வெட்டினால் என்ன தலையை வெட்டினால் என்ன? நீ தப்பு செய்தால்தானே? நீ தப்பு செய்றது ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுப்பதுபோலனு நெனச்சு ஒழுங்கா நடந்தால் என்ன பிரச்சினை உனக்கு?
//

இதனை கமாருதீன் என்ற சவுதிசட்டத்தின் முன் திருடன் திருடவில்லை காசு கொடுங்க அப்பாவின்னு சொல்பவரிடமும் சொல்லுங்களேன், அப்போ மட்டும் தமிழனுக்கு காசு கொடுங்கள்னு கேட்கும் வெட்கம் கெட்டத்தனம் ஏன்?

சவுதி சட்டமே சொல்லிடுச்சு கமாருதீன் திருடன்னு அதை ஏத்துக்க வேண்டியது தானே, முஸ்லீம் இல்லாதவன் என்றால் அந்நாட்டு சட்டம் சொல்லிடுச்சு ஏத்துக்கனும் , என்னங்கடா கொடுமை இது?

வருண் said...

***வவ்வால் said...

ராஜ்,

நாசமா போச்சு போங்க :-))

இப்போ தான் எனக்கு ஒரு ஃபார்ம் வருது.

வருணுக்குன்னு ஒதுக்கி வச்ச கருணை நேரம் முடிஞ்சு போச்சு , அதை ஒரு வழி ஆக்கலாம்னு பார்த்தேன். இப்போ வந்து கட்டைய போடுங்க.

ஏன்யா வருண்னு உன் பதிவிலே வந்து பேசினதுக்கே அழுத, அப்புறம் இங்கேவும் அழுத, அப்புறம் நான் திருப்பி பேசினா தாங்கிற சக்தி இல்லைனா ஏன் பேச வர்ர?

இப்பவும் இது ராஜ் பதிவு என்பதால் உன் குலம் பிழைத்தது , இல்லைனா உன் பரம்பரையே நாறி இருக்கும், போய் அரபிக்கிட்டே காட்டு எண்ணை போடுவான் :-))

August 4, 2012 12:30 AM***

திடீர்னு ஏன் மரை கழண்டுருச்சு!!! நீர் இது முன்னால கேட்ட கேள்விக்கு ஒழுங்காத்தானே பதில் சொல்லியிருக்கேன்!!! :)))

வருண் said...

***இதனை கமாருதீன் என்ற சவுதிசட்டத்தின் முன் திருடன் திருடவில்லை காசு கொடுங்க அப்பாவின்னு சொல்பவரிடமும் சொல்லுங்களேன், அப்போ மட்டும் தமிழனுக்கு காசு கொடுங்கள்னு கேட்கும் வெட்கம் கெட்டத்தனம் ஏன்?

சவுதி சட்டமே சொல்லிடுச்சு கமாருதீன் திருடன்னு அதை ஏத்துக்க வேண்டியது தானே, முஸ்லீம் இல்லாதவன் என்றால் அந்நாட்டு சட்டம் சொல்லிடுச்சு ஏத்துக்கனும் , என்னங்கடா கொடுமை இது?***

சவுதியை கொஞச்ம தள்ளி வச்சுட்டு, நம்ம "சங்கர் ராமனை" கவணிப்போம். அந்தாளு ஆத்மா ஷாந்தி அடையாமல் ஆவியா அலையிறாரு. அந்தாளை கொன்னவனுக்கு இன்னும் ஒரு நியாயத்தையும் காணோம்! அது மட்டும் மணக்குதாக்கும்!

அதெஇயெல்லாம் ஒண்ணும் புடுங்க முடியலை உம்மோட க்ரேட் இந்த்யாவிலே! வாயை கேளு. சவுதிக்குப் போயி நீ ஒரே கிழியா கிழிச்சுடுவ போ!

வவ்வால் said...

வருண்னு,

என்னத்த ஒழுங்க சொன்னீர் ஒழுங்க சொன்ன லட்ச்சனமே இதானா, என் லட்சணமும் ஆளுக்கு ஏத்தாப்போல தான் இருக்கும்.

சங்கர்ராமன் கொலையை மணக்குதுன்னு சொன்னவன் கிட்டே போய் சொல்லுய்யா, நான் எல்லா கொலையும் சட்ட விரோதமும் ஒன்றாக தான் சொல்கிறேன்.

அந்த நாட்டுல கைய வெட்டுற சட்டம் இருக்குன்னு தெரிஞ்சு போக கூடாதுன்னு சொல்வதை ஏன் கமாருதீன் வழக்கில் சு.பிக்கு சொல்ல கூடாது?

அந்த நாட்டு சட்டம் கமாருதீன் குற்றவாளின்னு சொல்லி உள்ளபோட்டாச்சு ஏத்துக்கிட்டு போக சொல்லுங்க அப்போ, ஏன் இப்போ மட்டும் அந்த சட்டம் தப்பா செயல்ப்பட்டுச்சுன்னு சொல்லணும், நான் எல்லாருக்கும் சேர்த்தே அந்த சட்டம் காட்டுமிராண்டி சட்டம் சொல்கிறேன் என்பதை புரிந்துக்கொள்ளாமல், பேசினா எப்படி?

கமாருதீன் மாட்டிக்கிட்டா மட்டும் அந்நாட்டு சட்டம் தப்பா சொல்லிடிச்சு, கந்தசாமி மாட்டிக்கிட்டா சரியா சொல்லிச்சுன்னு சொல்லும் சு.பிக்கு கொடி பிடிக்க வெட்கமா இல்லையா வருண் ?

உங்க நிலைப்பாடு என்ன அந்த நாட்டுல சட்டம் அப்படி இருக்குன்னு தெரிஞ்சு போகக்கூடாது ,போனால் அந்நாட்டில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கணும் சரியா? அதையே சு.பியிடம் சொல்லுங்களை உடனே காபீர் என திட்டுவார் :-))

நான் சொன்னதை சு.பியிடம் சொல்லுங்கள்,நானும் அந்நாட்டு சட்டம் காட்டுமிராண்டி இல்லைனு சொல்லிடுறேன் :-))

suvanappiriyan said...

//சவுதியை கொஞச்ம தள்ளி வச்சுட்டு, நம்ம "சங்கர் ராமனை" கவணிப்போம். அந்தாளு ஆத்மா ஷாந்தி அடையாமல் ஆவியா அலையிறாரு. அந்தாளை கொன்னவனுக்கு இன்னும் ஒரு நியாயத்தையும் காணோம்! அது மட்டும் மணக்குதாக்கும்!//

அதானே! நியாயம் என்று பேசினால் எல்லாத்தையும் பேசிறனும்.:-) கமருதீன் சந்தேக நபராகத்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணத்தை எடுத்தார் என்பதற்கு நேரடி சாட்சிகளும் இல்லை..

ஆனால் சங்கரராமன் கொலை வழக்கில் கடிதங்கள் முதற்கொண்டு நேரடி சாட்சிகள் வரை பலமாக இருக்க நமது நாட்டு சட்டம் என்ன செய்து விட்டது வவ்வால்?

அரசு நிலத்தை அபகரித்த அம்மாவையும், பல ஊழல் செய்த கலைஞரையும் நமது சட்டம் என்ன செய்து விட்டது வவ்வால்?

வருணுக்கு பதில் சொல்லுங்கள். அதன் பிறகு நாம் சவுதி அரேபியாவை திருத்த போகலாம்.

வேகநரி said...

வவ்வால்,
//சவுதி சட்டமே சொல்லிடுச்சு கமாருதீன் திருடன்னு அதை ஏத்துக்க வேண்டியது தானே முஸ்லீம் இல்லாதவன் என்றால் அந்நாட்டு சட்டம் சொல்லிடுச்சு ஏத்துக்கனும் என்னங்கடா கொடுமை இது?//
ஹி!ஹி!ஹி!செந்துறை என்ற தமிழ் கிராமத்தைச் சேர்ந்த கமருதீனை தானே சொல்றீங்க? அவர் அரபு வழி தவறியிருந்தாலும் இப்போ திருந்தி ஒரு தமிழராக மாறிவிட்டாராம்.

வருண் said...

வவ்வால் said...

வருண்னு,

***என்னத்த ஒழுங்க சொன்னீர் ஒழுங்க சொன்ன லட்ச்சனமே இதானா, என் லட்சணமும் ஆளுக்கு ஏத்தாப்போல தான் இருக்கும்.

சங்கர்ராமன் கொலையை மணக்குதுன்னு சொன்னவன் கிட்டே போய் சொல்லுய்யா, நான் எல்லா கொலையும் சட்ட விரோதமும் ஒன்றாக தான் சொல்கிறேன்.***

சங்கர்ராமன் கொலைக்கேசு நாறுதுனா அதை சுத்தம் பண்ணிட்டு வா, அப்புறம் சவுதிக்கு போவோம்!

இங்கேயே உன்னால ஒரு மயிரையும் ஒண்ணூம் புடுங்க முடியலை. நீர் சவுதில போயி புடுங்கிறுவ போ!

சும்மா வாயிலேயேதான் புடுங்குற!

வருண் said...

***thequickfox said...

வவ்வால்,
//சவுதி சட்டமே சொல்லிடுச்சு கமாருதீன் திருடன்னு அதை ஏத்துக்க வேண்டியது தானே முஸ்லீம் இல்லாதவன் என்றால் அந்நாட்டு சட்டம் சொல்லிடுச்சு ஏத்துக்கனும் என்னங்கடா கொடுமை இது?//
ஹி!ஹி!ஹி!செந்துறை என்ற தமிழ் கிராமத்தைச் சேர்ந்த கமருதீனை தானே சொல்றீங்க? அவர் அரபு வழி தவறியிருந்தாலும் இப்போ திருந்தி ஒரு தமிழராக மாறிவிட்டாராம்.***

பொறம்போக்கு நரி!!!

சங்கர் ராமனை கொன்னது யாருடா? அது சம்மந்தமா நியாயஸ்த்தனுக நீயும் வவ்வாலும் போயி ஏதாவது புடுங்க வேண்டியதுதானே? ஏன் சவுதில போயி நியாயம் பேசிக்கிட்டு திரிகிறீங்க?

எட்டு வருசமா என்னத்தடா புடுங்குறீங்க??

பார்ப்பான்ந்தானே செத்தா என்னனு விட்டுப்புட்டிங்களா?

இல்லைனா பார்ப்பானுகளுக்குள்ள குத்திக்கிடுவானுக வெட்டிக்கிடுவானுகனு நின்னு வேடிக்கை பார்க்கிறீங்களா?

உண்மையை சொல்லு!!கொலை செஞ்சவன் சாகிறதுக்காக காத்து இருக்கீங்களா??

Srinivasan said...

Really good article sir, I am working in middle east since 2009; feeling like same India, there are people different in all places, we cant count that.

Thanks
Sri

வவ்வால் said...

சுபி மற்றும் வருண்,

உங்க இருவரின் சரக்கும் தீர்ந்து போச்சு என்பது தெரிகிறது,

கமாருதீன் நிராபராதி என்று சொன்னால் ,சவுதி சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மை ஆகிவிடும்,

சவுதி சட்டம் சரியானது என்றால் கமாரூதீன் குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரே நேரத்தில் இரண்டும் சரி என்று சொல்ல முடியாது,ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை, எனவே இதில் இருந்து திசை திருப்ப சங்கர்ராமனுக்கு தாவி விட்டீர்கள்.

அதைப்பேசினால் ஒருக்கட்டத்திற்கு பிறகு மோடி ,கோத்ரா எனப்போவீர்கள் ,ஆனால் பேச ஆரம்பித்த கருத்திற்கு வரமாட்டீர்கள் :-))

முதலில் இந்தப்பதிவின் பேசுப்பொருளுக்கு உட்பட்ட சவுதி அரசு வேலைக்கு வருபவர்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை, ஏமாற்றுதலுக்கு பதில் சொல்லுங்கள்.

சங்கர்ராமன் பற்றி இன்னொரு பதிவு ஆரம்பித்து பேசலாம்.

//பார்ப்பான்ந்தானே செத்தா என்னனு விட்டுப்புட்டிங்களா? //

வருண் பூனைகுட்டி வெளியில் வந்துடுச்சு ,புடிச்சு கட்டும் ஓய் ,அப்புறம் மயிரைப்புடுங்கலாம் :-))

வருண் said...

வவ்வாலு!!

ஆமா, நீயென்ன முழு லூசா?

***சங்கர்ராமன் பற்றி இன்னொரு பதிவு ஆரம்பித்து பேசலாம்.***


***கமாருதீன் நிராபராதி என்று சொன்னால் ,சவுதி சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மை ஆகிவிடும்,

சவுதி சட்டம் சரியானது என்றால் கமாரூதீன் குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.***

அப்போ எழவைப்பத்தி பேசுற இடத்தில் "கமருதின் எழவை" எதுக்கு கூட்டின??

இப்போ "சங்கர் ராமன் எழவை"ப் பத்தி பேசுனா உடனே, அதை வேற் இடத்தில் புடுங்கலாம்னு சொல்ற?

கமாருதினை ஏன் இங்க வச்சு புடுங்குற அப்போ, முண்டம்??

மூளையே இல்லையா உனக்கு!

வருண் said...

***//பார்ப்பான்ந்தானே செத்தா என்னனு விட்டுப்புட்டிங்களா? //

வருண் பூனைகுட்டி வெளியில் வந்துடுச்சு ,புடிச்சு கட்டும் ஓய் ,அப்புறம் மயிரைப்புடுங்கலாம் :-))***

என்ன பூனைக்குட்டியோ என்ன எழவோ போ!!!

என்ன எழவைச் சொல்ல வர்ற இப்போ?!!

வருண் ஒரு பார்ப்பான்னு இன்னொருதர கண்டுபிடிச்சுட்டியா!!!? :)))

suvanappiriyan said...

//கமாருதீன் நிராபராதி என்று சொன்னால் ,சவுதி சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்பது உண்மை ஆகிவிடும்,

சவுதி சட்டம் சரியானது என்றால் கமாரூதீன் குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.//

... கமருதீன் சந்தேக நபராகத்தான் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் பணத்தை எடுத்தார் என்பதற்கு நேரடி சாட்சிகளும் இல்லை..

என்று பதில் கொடுத்தும் திருப்பி திருப்பி ஓட்டை ரிகார்டாக சொன்னதையே சொன்னால் எப்படி?

//முதலில் இந்தப்பதிவின் பேசுப்பொருளுக்கு உட்பட்ட சவுதி அரசு வேலைக்கு வருபவர்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை, ஏமாற்றுதலுக்கு பதில் சொல்லுங்கள்.//

பீகாரிலிருந்து குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை அழைத்து வந்து ஆபத்தான வேலைகளில் அமர்த்தி அவர்கள் இறந்தால் உரிய நஷ்ட ஈடுகளும் நம் தமிழக அரசால் கொடுக்கப்படுவதில்லையே ஏன் என்பதை யோசித்தால் உங்கள் கேள்விக்கும் விடை கிடைத்து விடும். ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும் எல்லா நாடுகளிலும் நிறைந்தே உள்ளனர்.

வேகநரி said...

மென்டல் வருண்,
நீ மென்டலாக இருக்கும் போதே சுன்னத்தும் செய்தவிட்டாயா?

Anonymous said...

சுவனப் பிரியன் உங்கள் வேத அறிவை பாராட்டுக்கின்றேன் .. ( அஹமதியாக்கள் கோவித்துக் கொள்ள கூடும் ) ..

அதாவது சு.பி. ஐயாவுக்கு இந்துக்கள் என்றதுமே வேதிஸ்டுகள் என்றே எண்ணி வருகின்றார்... ஒரு போதும் நாங்கள் வேதிஸ்டுகளாக இருந்தது இல்லை ...

கிமு ஐந்தாம் நூற்றாண்டில் எம் மூதாதையர் நாட்டார் வழிபாடு தான் செய்தார்கள். அவர்களுக்கும் வேதத்துக்கும் சம்மந்தமே இல்லை .. கிமு மூன்றாம் நூற்றாண்டில் எம் மூதாதையர் வடக்கில் இருந்து வந்த சமணத்தை ( அல்லது பௌத்தத்தை ) பின்பற்றினார்கள் .. அது கிட்டத் தட்ட 8-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது அவர்களும் வேதத்தை நம்பவில்லை .. 12-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே பல சமணர்கள் சைவத்துக்கு மாறினார்கள் ( மாற்றப்பட்டார்கள் ) அப்போது கூட சைவர்கள் வேதத்தை முன்வைக்கவில்லை .. வேதத்தை திரைமறைவில் வைத்துவிட்டு தமிழில் தேவாரம் பாடி மதம் மாற்றினார்கள் ... இன்று நாம் சைவத்தில் இருந்து விலகிவருகின்றோம் ..

நாம் ஒரு போதும் வேதத்தையோ அது சொல்வதையோ ஒரு மண்ணாக மதித்தது இல்லை ... !!! மதிக்கப் போவதும் இல்லை. ...

அதில் ஓரிறை சொன்னாலும் சரி பல் இறை என்று சொன்னாலும் சரி .. அதைக் கண்டு வியக்கப் போவதில்லை ... வேண்டும் எனில் குரானை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து .. பூணூல் காவி உடை அணிந்து இஸ்லாத்தை பரப்ப முயலுங்கள் .. ( கிருத்தவர்கள் செய்தது போல ) .... விட்டில் பூச்சிகளாக சிலர் இந்து மயக்கத்தில் இஸ்லாமுக்கு வரக்கூடும் ... !!!

Anonymous said...

ஏன் இங்க இவ்ளோ சண்டை .. இந்தியாவை ஒப்பிட்டால் வளைக்குடா நாடுகள் பெஸ்ட் தான். ஆனால் வளைக் குடா நாடுகளை ஒப்பிட்டால் சிங்கப்பூர் இன்னும் பெஸ்ட் என்பது தான் உண்மை .. !!! சிங்கப்பூர் ஆசியாவில் இருக்கக் கூடாத ஆனால் இருக்கும் ஒரு நாடு !!! தேங்க்ஸ் டு லி க்வான் யு !!!

வவ்வால் said...

வெண்ணை வருண்,

நாசமா போச்சு என்ன பேசறோம்னே தெரியாமத்தான் பேசிக்கிட்டு இருந்தீரா, போய் சுண்ணாம்பு சு.பிக்கிட்டே முழுக்கதையும் கேட்டுக்கோ ,இப்போ ஓரம் கட்டு :-))

---
சு.பி,

சாட்சி இல்லைனா ஏன் 2 ஆண்டுகளாக சிறையில் , இந்தியாவில் சாட்சி இல்லைனா குற்றம் நிருபிக்கப்படவில்லை என விடுதலை செய்துவிடுவார்கள், மேலும் வழக்கு நடைப்பெறும் காலத்திலும் ஜாமீன் உண்டு.

சந்தேகம் என்றால் விசாரணைக்கு பின் விட்டு விடுவார்கள்.

மேற் சொன்ன எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை எனில் அது காட்டுமிராண்டி சட்டமே :-))

1000 குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பது உலக சட்ட நெறி.

ஆனால் உங்கள் மேலான சவுதியில் சாட்சி இல்லைனாலும் ,நிரபராதி என்றாலும் ஒரு அரபி செய்வதே சட்டம் ஆக இருக்கே.சரியான காட்டுமிராண்டி கட்டப்பஞ்சயாத்து.
--------------
பிகார் ,தமிழ் நாடு எல்லாம் ஒரே நாட்டுக்குள் இருக்கு.

பிகாரி தமிழ்நாட்டில் வேலை செய்ய லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தேவை இல்லை.

வேலைப்பிடிக்கவில்லை என்றால் வெளியேறலாம், மீறி கட்டாயப்படுத்தினால் கொத்தடிமை சட்டத்தில் முதலாளி கைதாவார். உண்மையில் அரபி ஷேக்குகள் எல்லாம் கொத்தடிமை சட்டத்தில் கைதாக வேண்டியவர்கள் :-))

ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டு அங்க்கிருந்து இன்னொரு வேலைக்கு மாறினால் குற்றம் இல்லை.

சட்டம் அனைவருக்கும் சமம், சாட்சி இல்லைனாலும் கேள்வி கேட்காமல் உள்ளே போட முடியாது ,போட்டாலும் ஜாமீன் உண்டு .

இது போதுமா இன்னும் வேண்டுமா ,கீறல் ரெக்கார்டுல விழலாம், ஆனால் உங்க மனசுல விழுந்து போச்சே நான்ன்ன் என்ன்ன செய்ய்வேன் ..அஹ்ஹ் ஹ்ஹா :-))

suvanappiriyan said...

//இது போதுமா இன்னும் வேண்டுமா//

புதுடில்லி: ஆறு பேர் மீது, காரை மோதி விட்டு, தப்பி ஓடிய வழக்கில், கடற்படை முன்னாள் தளபதி எஸ்.எம்.நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா, இரண்டு ஆண்டுகள் சமூக சேவை செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், "விபத்து ஏற்பட்ட பின், தப்பி ஓடாமல் கருணையுடன் செயல்பட்டிருந்தால், ஆறு பேரின் உயிர் காப்பற்றப்பட்டு இருக்கும்' என்றும், நந்தாவின் செயல் குறித்து, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடற்படை முன்னாள் தளபதி எஸ்.எம்.நந்தா. இவரது பேரன் சஞ்சீவ் நந்தா, 34. இவர், 1999ல், டில்லியில், தனக்குச் சொந்தமான பி.எம். டபிள்யூ., காரை ஓட்டிச் சென்றார். அவரது நண்பர்களும் அதில் இருந்தனர். அப்போது, சாலையில் சென்ற ஆறு பேர் மீது, நந்தா ஓட்டி வந்த கார் மோதியது. அவர்கள் படுகாயமடைந்ததும், நந்தா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தண்டனை குறைப்பு: இந்த வழக்கை விசாரித்த, டில்லி நீதிமன்றம், நந்தாவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டது. நந்தாவின் கவனக்குறைவே இதற்கு காரணம். விபத்து நிகழ்ந்தது, அவருக்கு தெரியவில்லை' எனக் கூறி, தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, கடந்த 2009ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டில்லி போலீசார், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நந்தாவின் செயலால், ஆறு உயிர்கள் பறிபோய் விட்டன. மரணம் ஏற்படுத்தக் கூடிய குற்றத்தைச் செய்தது தொடர்பான சட்டத்தின் கீழ், அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீபக் வர்மா, கே.எஸ்.ராதா கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் நேற்று தீர்ப்பளித்தது.

பொறுப்பற்ற செயல்: அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: மரணம் ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை நந்தா செய்துள்ளார். இதில், எந்த சந்தேகமும் இல்லை. விபத்து நிகழ்ந்தவுடன், அங்கிருந்து தப்பி ஓடாமல், காயமடைந்தவர்கள் மீது கருணை காட்டியிருந்தால், ஆறு உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த செயல், அவரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக உள்ளது. சாதாரண வழக்கின் கீழ், நந்தாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல. இந்த தீர்ப்பு, மக்களுக்கு தவறான தகவலை தருவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும். ஆனாலும், இந்த வழக்கின் கீழ், ஏற்கனவே அவர், இரண்டு ஆண்டு தண்டனை அனுபவித்துள்ளார். இதனால், மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக, இரண்டு ஆண்டுகள் சமூக சேவை செய்வதோடு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும். இந்தத் தொகையை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக, பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
-Dinamalar
04-08-2012

சகல உயிரையும் சமமாக மதிப்பது நமது இந்தியாவாம் ...என்னத்த சொல்ல..நண்பர் வருண்தான் வவ்வாலுக்கு புரிய வைக்கணும்.

வருண் said...

///பிகார் ,தமிழ் நாடு எல்லாம் ஒரே நாட்டுக்குள் இருக்கு.//

வவ்வாலு!

சிங்கை எழவுக்கு பிஹார் எழவைப் பத்தி ஆரம்பிச்சதே நீதாண்டா முண்டம்!

///வவ்வால் said...

வடுவூர் குமார்,

வாங்க, இங்கே வந்து என்னை பிடிக்கிறிங்களே :-))

இரண்டுப்பதிவும் படிச்சீங்க தானே?சரி நீங்களே சொல்லுங்க

1)சென்னையில் வேலை செய்யும் பீகாரி அடிப்பட்டதும் சாலை ஓரம் தூக்கி போட்டுவிட்டு 108 போன் செய்து விடுகிறார்கள், அத்தோடு அவர்கள் பொறுப்பு முடிந்துவிட்டது.///

வெளிநாட்டுல கள்ளக்குடி பத்தி பேசும்போது பிஹாரியை கூட்டி வந்து எழவைக்கூட்டினது உன்னைத்தவிர யாரும் இல்லை.

இப்போ பிஹார் இந்தியாலதான் இருக்குனு புதுசா நீயே கண்டுபிடிச்சுட்ட போல!

உன்ன வச்சு ஒழுங்கா எழவுக்கு ஒப்பாரிகூட வைக்க முடியாதுபோல!!! அடிக்கடி சங்கராச்சார்யாவுக்கு உருவிவிட வெண்ணை வாங்கப் போயிடுற!!!:))))

வருண் said...

**** இந்தியாவில் சாட்சி இல்லைனா குற்றம் நிருபிக்கப்படவில்லை என விடுதலை செய்துவிடுவார்கள், மேலும் வழக்கு நடைப்பெறும் காலத்திலும் ஜாமீன் உண்டு.***

ஆஹாஹா!

வவ்வாலு!!!

ஒன் இந்தியா சட்டங்கள் பற்றிய பெருமையை சங்கர் ராமன் குடும்பத்திடம்தான் கேக்கனும்!!!

ஆமா, உன் முப்பாட்டானாருக எல்லாம் எழுதப் படிக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளாமே? வெள்ளிக்காரந்தான் இந்திய சட்டத்தை எழுதினாமே?

இல்லை உங்க தாத்தாதான் இந்திய சட்டத்தை எழுதினாரா?

கேட்டுச்சொல்லு!!

வருண் said...

வெள்ளைக்காரன் எழுதின சட்டத்தை வச்சுக்கிட்டு என்னவோ உங்க தாத்தா புடுங்கினமாரி ஒளறிக்கிட்டு திரிகிற??

வருண் said...

***சகல உயிரையும் சமமாக மதிப்பது நமது இந்தியாவாம் ...என்னத்த சொல்ல..நண்பர் வருண்தான் வவ்வாலுக்கு புரிய வைக்கணும்.***

இந்த வவ்வாலு யாருனு தோண்டிப் பார்த்தொம்னு வச்சுக்கோ, கடைசில இவனும் ஒரு பண்டாரமாத்தான் இருப்பான். ஆனால் ஏதோ பகுத்தறிவுவாதி மாரி விடுவான்.

வருண் said...

***thequickfox said...

மென்டல் வருண்,
நீ மென்டலாக இருக்கும் போதே சுன்னத்தும் செய்தவிட்டாயா?

August 4, 2012 7:43 AM***

என்ன பொறம்போக்கு நரி!! ஒளற ஆரம்பிச்சுட்ட!!! :))))

கோவி.கண்ணன் said...

//அதாவது சு.பி. ஐயாவுக்கு இந்துக்கள் என்றதுமே வேதிஸ்டுகள் என்றே எண்ணி வருகின்றார்... ஒரு போதும் நாங்கள் வேதிஸ்டுகளாக இருந்தது இல்லை ...//

பார்பன வேதம் நான்கு வருண கோட்பாடுகளை உள்ளடக்கியது என்பது சுபிக்கு தெரியாது போலும், சுபி விரைவில் பூணூல் அணிய வாழ்த்துகள்.

வவ்வால் said...

தோடா வருணு,

ரொம்ப மெர்சலாயி சட்டையை கிழிச்சுக்கின்னு அலையிறார் போல , பாவம் இவரு பின்னூட்டம் போடச்சொல்ல மண்டையை கம்பியூட்டர் டேபிளில் முட்டி முட்டி உடைச்சிருப்பார் போல ,

செம எண்டெர்டெயின் மெண்ட் :-))

------
ஏற்கனவே சொன்னது தான் சுபிக்கும்,வருணுக்கும் சரக்கு காலியாச்சு எனவே எதையாவது பேசணும்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க , பேசுங்க கேட்போம் :-))

நான் எல்லாம் அசர மாட்டேன், கடை ஓனர் அனுமதிச்சா ஓட்டிக்கிட்டே இருப்பேன் ;-))

ரெண்டு ஆடு சிக்கி இருக்கு வச்சு வதம் பண்ணுவோம் :-))

வருண் said...

என்ன வவ்வாலு, வழக்கம்போல நீங்களே விவாதத்துல ஜெவிச்சிட்டதா நீங்களே அறிவிச்சுட்டீங்க போல!!! :)))

வாழ்த்துக்கள்!! :))))

***நான் எல்லாம் அசர மாட்டேன், கடை ஓனர் அனுமதிச்சா ஓட்டிக்கிட்டே இருப்பேன் ;-))***

அட அட அட அட...வாய்கிழிய சலைக்காமல் தொடர்ந்து தற்பெருமை பேசுற பந்தயம் ஏதாவதும் ஒலிம்பிக் ல இருந்தா இந்தியாவுக்கு நம்ம வவ்வாலு தயவால ஒரு தங்க மெடல் உறுதிதான் போங்கோ!!!:)))

Nasar said...

@ கோவி.கண்ணன்
// பார்பன வேதம் நான்கு வருண கோட்பாடுகளை உள்ளடக்கியது என்பது சுபிக்கு தெரியாது போலும், சுபி விரைவில் பூணூல் அணிய வாழ்த்துகள். //
ஆம் ..சு.பிரியனுக்கு அந்த வருண கோட்பாடுகள் தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம் ,தங்களுக்குதான் நல்லா தெரியுமே நீங்கள் என் பூணுல் அணியக்கூடாது ?? நாத்திகம் பேசிக்கொண்டு பூணுலை மற்றவர்களுக்கு பரிந்துரைப்பது ஏன் ?? சரி பூனுளுக்காவது சில பல கட்டுபாடுகள் இருக்குது ஆனால் நாத்திகர்களுக்கு அதுபோல ஏதாவது உண்டா ??
என்னது..போலி நாத்திகர்களுக்கு அதுபோல இல்லையா...??!! ஆசரீ

Unknown said...

சாட்டை அடி நன்பா
இ்ங்கு இருக்கும் பிரச்சனைக்கு காரனம் உங்களுக்கு புரியவில்லை இங்கு நீதி என்பது பணக்காரனுக்கும் உள்ள இடையில் உள்ளவை மற்றும் அனைத்து மதங்களும் சட்டங்களும் நீதியை நிலை நிருத்தவே செல்கிறது ஆனால் இவை அனைத்தும் செயல்படுத்து பவர்களின் கையில் தான் உள்ளது