Followers

Saturday, December 11, 2010

மீண்டும் சென்னை பயணம்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக சில விசயங்களை பதிவில் அங்கலாய்ப்பதற்கும் தமிழக யதார்த்தத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பது அனுபவ பூர்வமாக புரிகிறது.அதாவது தமிழ் அகதிகளை சந்திப்பது என்ற எண்ணம் ஈடேறாத விதமாக சில தகவல்கள் சேகரிக்க முடிந்தது தமிழகம் அடைக்கலம் தரும் காரணத்தால் இவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருப்பார்கள்.இந்திய அரசில் தமிழகத்தின் பங்காக இவர்களை பாதுகாக்கிறார்கள் என்பதற்கும் அப்பால் அரசு கட்டமைப்பின் நியதிகளாக இவர்களை யாரும் சுதந்திரமாக பார்க்க இயலாது என்பது அனுபவ பூர்வமாக தெரிந்தது.
 
புழல் எனுமிடத்தின் சுற்று வட்டாரங்களுக்கு வியாபாரம் நிமித்தமாக செல்லும் ஒருவரிடம் முன்தகவலாக எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து வரச் சொன்னால் சுமார் 1500 குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள் என்றும் வட்ட தாசில்தார் போன்றவர்களின் கையொப்ப மிட்ட கடிதத்துடன் வருகை தருவதற்கான காரணம் பெயர் விபரம் மற்றும் சந்திப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் தேவை என்ற தகவலை கொண்டு வந்தார்.
 
 இதற்கு மாற்றாக கட்சிகள் ஏதாவது ஒன்றின் துணையுடன் வேண்டுமானால் முகாமுக்குள் போகமுடியுமென்றார்.நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற சுயபரிதாபம் மட்டும் இருக்கிறது இப்போது.தனி ஆவர்த்தனம் பதிவுலகில் மாத்திரமே இயலுகிறது.ஆக்கபூர்வமாய் யாராவது செயல்பட்டால் இணைந்து கரம் கொடுக்க விரும்புகிறேன்.
 
வலுவான இயக்கமாக சீமான் போன்றவர்கள் வந்தால் மட்டுமே மாற்றங்களோடு எதிர்கால நம்பிக்கையையும் இவர்களுக்கு ஊட்டமுடியும்.நீதிமன்ற தீர்ப்புக்கும் சீமானின் சிறையடைப்பிலிருந்து புன்னகையோடு வெளி வந்ததற்கும் வாழ்த்துக்கள். சீமானின் மீள்வருகை தமிழக அரசியல் களத்தில் இன்னும் புயல் கிளப்புமா அல்லது மீண்டும் சிறை வாழ்க்கை அடக்கி வாசிக்க சொல்லுமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.மாற்று அரசியலுக்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

சீன சார்பாளர்கள் மகிழ்வதற்கும் சில நல்ல செய்திகள் சென்னைக்குள் கொட்டிக்கிடக்கிறது.கொண்டு வந்த கைபேசியில் பேச இயலவில்லையென்று ரிச்சி ஸ்ட்ரீட் என்ற தமிழ் தெருவுக்கு போனேன். லண்டன் வாழ் தமிழர்கள் ஆபரண கடை என்றும் தங்க மாளிகையென்றும் தொலைக்காட்சியில் விளம்பரப்டுத்தினால் நகர் முழுதும் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே ஜுவல்லரி மார்ட்,மெடிக்கல்ஸ்,கிளாத் செண்டர் என தமிழ் படுத்தி கடைகளின் பெயர்களை வைத்திருக்கிறார்கள்.ரிச்சி ஸ்ட்ரீட்டீல் முழுக்கவும் சீனா,ஹாங்காங் மின்பொருட்களின் ஆக்கிரமிப்பு பழுதான பொருட்களை பழுதுபார்க்கும் நிபுணத்துவம் வாய்.ந்தவர்களாக 5 அமெரிக்க டாலருக்கும் 2 குவைத் தினாருக்கும் எனது கைபேசியை சரிசெய்ய பணிபுரியும் இளைஞர்கள்.வன்பொருட்களில் சீனாவும் மென்பொருளில் இந்தியாவும் என்பது எழுதப்படாத புதிய உபயோகிப்பாளர் பொருளாதாரமாகிவிட்டது. முந்தைய அதே பர்மா பஜார் அதே தோரணையில் கால்குலேட்டருக்கு பதிலாக புது வடிவமாக கடிகாரம்,கைபேசிகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து திரைப்படங்களும் 25,20 பேரத்தில் கிடைக்கின்றன.

என்னமோ தலப்பா கட்டு தலப்பா கட்டுங்கிறாங்களேன்னு ஒரு தலப்பா கட்டு கடையில் நுழைந்தால் தலைப்  பாவை ஒன்றையும் காணோ\ம்.பீகாரியோ, குஜராத்திப்பையனோ கொஞ்சம் வடக்கு வாடையுடன் தமிழ் பேசி பிரியாணி போட்டான்.முதலும் கடைசியுமான தலைப்பா பிரியாணி என முடிவு செய்துவிட்டேன்.சென்னை கண்ணன்களே!அண்ணன்களே! ந:ளபாகம் என்பது கோயம்புத்தூர் பக்கம்தானுங்ண்ணா!வானம்பாடிகள் பாலாண்ணாவுடன் சாப்பிட்ட சரவணபவன் கூட சோபிக்கவில்லை.ரசிக்கும் ஒரே விசயம் அவரது பதிவு மாதிரியே நிறைய கேரக்டர் கைவசம் வைத்திருக்கிறார் கூடுதல் புன்னகையோடு.
 
சாப்பாடு முடிந்து தலைமையகம் பக்கம் முதல் முறையாக போனால் தமிழக செயலக கட்டிடம் அசரவைக்கிறது.கூடவே ஒரு மார்பிள் கல் கட்டிட வரிசையிலிருந்து தெத்துப்பல் மாதிரி வெளியே எட்டிப்பார்க்கிறது.கழக கண்மணிகள் யாராவது வழிதெரியாம இந்தப்பக்கம் வந்தீங்கன்னா பொதுப்ப்ணித்துறை அமைச்சரிடம் சொல்லி வையுங்க.கூடவே ஈழ்த்தமிழர்கள் விசயத்தில் அரசியல் குள்ளநரித்தனங்களை மட்டுமே இங்கே விமர்சிப்பதோடு கருணாநிதிக்குப்பின்னும் தமிழக செயலக கட்டிடம்,திருவள்ளுவர் சிலை,வள்ளுவர் கோட்டம் போன்றவை என்றென்றும் அவரது பெயர் சொல்லும் என்ற எனது பக்கம் சாராமையையும் சொல்லி வையுங்க.பதிவுலகின் நேர்மையான விமர்சனங்கள் ,எண்ணங்கள் கடல் கடந்து வானம்கடந்து தேசம்கடந்துசென்னை தொட்டு சிங்கப்பூர் மலேசியா வளைகுடா ஐரோப்பா அமெரிக்கா கனடா என்று உலக பவனி வரும்போது கருத்துப்பரிமாற்றங்கள் தமிழகத்துக்குள்ளேயே பவனி வராதது மட்டுமே தமிழக கட்சிகளின் பலம் எனலாம்.குடும்ப அரசியலில் பணம் காய்ச்சி மரங்களாய் ஆகிவிட்டதால் தி.மு.க விளம்பரங்களை விட திருமா அழைக்கிறார் விளம்பரங்களே சுவர்களில் அதிகம்.இதே மாதிரி தமிழ்மணம் அழைக்கிறது,தங்கிலிஷ் அழைக்கிறது என்று விளம்பரம் வந்தால் பதிவர்களின் கல்லா கட்டும்.

இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் பெரும்பாலும் முகமூடித் திருடிகள் மாதிரி துப்பட்டா ஹெல்மெட்,குளிர்கண்ணாடி சகிதம் வண்டி ஓட்டுகிறார்கள்.ஆண்கள் இரும்புத்தலையன்கள் மட்டுமே.அமெரிக்க, ஜப்பான்,கொரியா,ஐரோப்பிய கார்களின் வளைகுடா பொருளாதாரத்தில் சென்னை சாலைகளும்,கார்களும் என்னை கவரவில்லை.

மவுண்ட் அண்ணா சாலையைக் கடந்து மெரினா போவதற்கும் முன் சிட்டி செண்டர் போன்ற இடங்களின் காசு புரளுமிடம் எப்படியிருக்குதுன்னா சுத்தியும் கொசு,கூவம்,ஒரே நாளுக்குள் அழுக்காகும் உடைகளில் படியும் தூசுகளில் நாங்கள் வாழ்ந்தாலும் படுக்கறது பஞ்சு மெத்தை கொப்பளிக்கிறது பன்னீர்......இல்ல...இல்ல....மினரல் வாட்டர்ங்கிற மாதிரி இருக்குது:) இப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நேர்மை, லஞ்சமின்மை  ,பங்கீடு,நிர்வாகம்,சுயநலமின்மை போன்றவைகளை சீராக்கும் போது வளமான இந்தியாவி தமிழகத்தின் பங்கு என்பது கனவல்ல,நிகழக்கூடிய சாத்தியம்தான்.தமிழகத்தின் மற்ற மாவட்டக்காரர்களுக்கு கிடைக்க இயலாத ஒரு அனுபவம் சென்னைவாசிகளுக்கு உண்டு.அது சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் ஏற்றுமதி லாரிகளின் பவனி. மேற்கத்திய நாடுகளிலும்,வளைகுடாவிலும் கார்கள் பயணத்தில் ட்ராபிக் ஜாம் என சொல்லப்படும் வாகன நெரிசல்களின் அனுபவம் பலருக்கு இருக்ககூடும்.அனைத்துப்பொருட்களுக்கும் வெளிநாடுகளையே நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் கூட  கன்ட்டெய்னர் லாரிகளைப் பார்த்ததில்லை.தமிழக ஏற்றுமதி லாரிகளின் வரிசை பிரமிக்க வைக்கிறது.உள் நாட்டு உற்பத்தி திறன் மற்றும் உபயோகம் நீங்கலாக ,வெளிநாட்டுக்கு ஏற்றுமதி,பல தொழில்நுட்பங்களில் சுயதேவை பூர்த்தியெனும் நிலை.மனிதவள மேம்பாடு இன்னும் பல பொருளாதார நலன்கள் இருந்தும் கூட அனைத்திலும் பஞ்சப்பாட்டு நிலை.இயற்கை மழை,பசுமை என்று அத்தனை நலன்களைய்ம் வாரியிறைக்கிறது.அப்படியிருந்தும் புழல் ஏரி நிரம்பி விட்டதென்று மதகை திறந்து விட்டு நீரை கடலுக்குப் போ என்று துரத்தி விட்டார்கள்.அப்புறம் வெயில் காலத்தில் தண்ணீர் தண்ணீர்  என கத்த வேண்டியது.இல்லைன்னா ஏண்டா தண்ணி கொடுக்கலன்னு கர்நாடகாக்காரன் கூட சண்டைக்குப் போக வேண்டியது.அதுவும் தனக்கு அரசியல் ஆதாயமிருந்தா மட்டுமே ஆட்டுக்குட்டித் தொண்டர்களை தூவி விடுவது.
 
மூர்மார்க்கெட்டில் ஒரே ஒரு பெண்மணியின் கெட்டவார்த்தை தவிர சென்னைமொழி கேட்கவில்லை.வாழக தமிழகம்.முந்தைய பிச்சைக்காரர்களையும்,தொழு நோயாளிகளையும் இதுவரை பார்க்கவில்லை. ஒருவேளை முந்தைய காலங்களில் நடைப்பயணம்,பஸ் பயணம் என்பதால் எளிதாக நேரடியாகவோ அல்லது கண்ணிலோ பட்டிருக்கலாம்.இப்போதைய பயணவேகத்தில் உட்காருமிடங்கள் இடம் மாறிவிட்டனவா இல்லை பிச்சைக்காரர்கள் இல்லா தமிழக தலைநகரம் என பெருமைப்பட்டுக்கொள்ளலாமா என சென்னைவாசிகள் தகவல் பின்னூட்டம் சொன்னால் நல்லது.அண்ணாசமாதி,எம்.ஜி.ஆர் சமாதிப் பக்கம் கூட போய்ப்பார்த்தேனே ஒருத்தரையும் காணவில்லை.ஒருவேளை மழைக்கு ஒதுங்கி விட்டார்களா என்றும் தெரியவில்லை.கண்ணகியைக் காணவில்லையென்று தமிழக முதல்வர் விளம்பரம் கொடுத்தாரான்னு தெரியவில்லை.காந்தி தாத்தாவுக்கும் பக்கத்தில் யாரோ மஞ்சக்கலருல நிற்கிறாஙகளேன்னு போய்ப்பார்த்தால் சிவாஜி சிலையாம்.என்னமோ நாங்கெல்லாம் சிவாஜியை சினிமாவிலேயே பார்க்காத மாதிரித்தான் இவர்தான் சிவாஜின்னா நம்பிடுவோமா என்ன? 


தனிமனித தேவைகளாக அத்தனையும் பாக்கெட்டுகளாகவும்,பவுடர்களாகவும் கிடைக்கின்றன.வீடு தேடிவரும் நெல்லிக்காய்,நெல்லிக்காய் என்ற ஒரு அம்மாவின் குரலுக்கு வேண்டாம் எனும் கோலம் போடும் பெண்களின் குரலே அதிகம்.வீட்டிலும் சரி பதிவுலகிலும் சரி கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன். கேட்கறதுக்குத்தான் ஆட்களில்லை.முன்பு போட்ட சோடாபுட்டி கண்ணாடியில்லாமலே பார்வையும் எழுத்தும் தெளிவாக தெரிவதற்கு விளக்கெண்ணெய் ஆண்டவரின் கருணையும் ,பதிவர் தெகா கொடுத்த யோகா பயிற்சி மாதிரியான குட்டிக்கரணங்களும் கூட காரணமாக இருக்கலாம். குவைத்தில் சீயக்காய்த்தூள் தேடி அலைந்தும் கிடைக்காமல் சென்னையில் தேடியதில் சிகைக்காயோடு செம்பருத்திப்பூ ,ரோஜாப்பூ ,மகிழம்பூ ,வெட்டிவேர் ,பூங்ககாய் கொட்டை,கேழ்வரகு,பச்சை பயிறு,பச்சஅரிசி,வெந்தயம், வாசனைப்பட்டை ,கார்போக அரிசி ,ம கிச்சலி கிழங்கு,கோரை கிழங்கு என ஹெர்பல் மிக்ஸ் என்ற பெயரில் சாம்பு கிடைக்கிறது.இதை அரைத்து தர யந்திரத்தோடு கடையும் இருக்கிறது.ஆனால் உபயோகிப்பாளர்கள் மட்டுமே குறைவு என நினைக்கிறேன்.சிகைக்காய் உபயோகித்து விட்டு ஜாதக பலனை பின்னால் சொல்கிறேன். சிந்தனையாளர்கள்,நேர்வகிடு கனவான்களுக்கு இந்த சிகைக்காய் சித்தமருத்துவம் பொருந்துமா எனத் தெரியவில்லை.இருந்தாலும் போனதே போச்சு ஜான் என்ன முழம் என்ன என்று உபயோகித்துப்பார்க்கலாம்.

சுடுதண்ணியைக் காலுல ஊத்திகிட்டவன் மாதிரி சென்னை மேலோட்டம் பார்க்கிற எனக்கே தலைநகரின் தங்கப்புதையலா பலசெய்திகள் நசரோட வளவளத்தா பாணியில் அப்படியே வரிகள் கொட்டுது.அடைமழைக்கும் அஞ்சாத சென்னைப்பதிவர்கள் இன்னும் கூட அடிச்சு(அடிச்சுக்காம) ஆடலாம்.

அடுத்த வாரம் கோவை,திருப்பூர் பயணம்.ஜோதிஜி தவிர ஏனைய பதிவர்கள் யாராவது அந்தப்பக்கம் சிறுவாணி தண்ணீர் கொடுப்பதாயிருந்தால் சந்திக்கலாம்.

Wednesday, December 8, 2010

சென்னை பயணம்

முந்தைய பதிவின் சில பின்னூட்டத்திற்கு மறுமொழி இயலவில்லை.மன்னிக்கவும்.விமானத்திற்கு கிளம்பும் முன் ஒரு மணி நேரம் வரை முந்தைய பதிவுக்கு மறுமொழியிட்டு சென்ற வாரம் சென்னை பயணம் துவங்கிய பின் கடந்த 6 நாட்களில் 3 நாட்களாக சென்னைமழை வீட்டுச்சிறை வைத்து விட்டது.எல்லோரும் 16GB,32GB என அசலாய் ஐபோன் வைத்திருக்கும் போது 64GBயில் ஐபோன் கிடைக்கிறதே என்று உபயோகித்த சீன ஐபோன் அந்நியன் சென்னையின் டாட்டா,ஏர்செல்,பி.எஸ்.என்.எல் என்று அத்தனை சிம் கார்டுகளுக்கும் டபாய்த்து விட்டது போதாத குறைக்கு தங்கை வீட்டில்தான் கணினி இணைப்பு கிட்டுமே என்ற நினைத்து வந்ததில் கணினி இணைப்பை துண்டித்து விட்டு சன் தொலைக்காட்சியின் மெகாக்களில் மூழ்கியிருந்தார்கள்.

நொளளைகள் சொல்லாமல் இந்தியாவிலிருக்கும் நல்லவைகளை மட்டுமே இந்த முறை சொல்லவேண்டும் என்று நினைத்ததை இந்தியன் ஏர்லைன்ஸின் விமானபணி உதவியாளரிடம் விமானம் மீண்டும் கோவா வழியேவா பயணிக்குமென்று கேட்டுக்கொண்டிருந்ததை நான் சரியாக புரிந்துகொள்ளாமலிருந்த போது எனக்கும் முன்பு நின்று கொண்டிருந்தவர் உதவிக்கு வந்தார்.முதல் பார்வையில் அடையாளம் கண்டுகொள்ளாமல் சார்!நீங்க என்று பெயர் சொல்லாமல் நான் வார்த்தையை இழுக்க ஆம் என்பது மாதிரி சிரித்தவர் சீர்காழி சிதம்பரம் அவர்கள்.You are a great gift to Taminadu என்று சொன்னதை நான் மிகவும் சாதாரணமானவன் என்று பெருந்தன்மைப்பட்டார்.

பெட்டிகள் சுற்றும் ரப்பர் வளையத்துக்குள் டிராலியுடன் நின்று கொண்டுருந்த போது விமானநிலைய பணியாளர் தரையில் நான் வைத்த பெட்டியை எடுத்து டிராலிமேல் வைத்து விட்டு சார் டீ குடிக்க ஏதாவது கொடுங்க என்றார்.இதோ இந்தியாவின் நுழைவாசல் என்று 20ரூபாய் கொடுத்தேன்.அருகில் நின்றவர் அண்ணன்கிட்ட தினார் கேளு என்று தூண்டி விட்டார்.நான் சிரித்து விட்டு சுங்கவரித் துறைக்குச் சென்றேன்.நான் ஆச்சரியப்படும் வகையில் பெட்டி பற்றி கவலைப்படாமல் நின்றிருந்த பெண்கள் இருவரிடம் கையைக் காட்டிவிட்டார்கள்.அதில் ஒருவர் இமிக்ரேஷன் கார்டை மட்டும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று சொல்லி விட்டார்.

ப.சிதம்பரம் மூன்றடுக்கு பாதுகாப்பில் எதிரே.பாதுகாப்பு உதவியாளர்களின் மிரட்டலும் பநதாக்களும் கூடவே.வெளியே வந்தால் கரடுமுரடான ரோட்டில் வரவேற்புக்காக காத்திருக்கும் கூ\ட்டம்.சார்!இந்தியா பணம் வேணுமா என்று ஒளிவு மறைவில்லாமல் கைநிறைய கறுப்பு அல்லது ஹவாலா பணம்.இந்தியாவின் நாடியான உயிரோட்டமுள்ள ஜனசந்தடியும்,வாகன டர்புர்களும்.திருமா ஆளுயர பேனரில்.விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடிபட்டும் படாமலும் பாலத்தின் அருகில்.டிசம்பர் 26 மாநாடும் வரும்கால அரசியல்தந்திர கூட்டணியும் திருமண மண்டபத்தை மீட்டுக்கொடுக்கும் என்ற கனவு கை கொடுக்குமா என்று நினைத்துக்கொண்டு குடும்பத்தோடு கண்ணில் பட்ட சரவணபவனுக்கு இட்லி தோசை பூரி சாப்பிடப்போனோம்.சரவணாவின் ருசியோ ருசி.பெண் மோகப் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

சென்னையின் மெரினா சாலையிலிருந்து முந்தைய சட்டசபையான ஜார்ஜ்கோட்டை வரையிலுமான சாலையும் இருபுறம் மட்டுமே நானும் உலகத்தரத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு நின்று கொண்டிருக்கிறேன் சொல்கிறது.கோயம்பேடு மார்க்கெட்,புதிய துறைமுகத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையின் லாரிகளின் வரிசையும் குண்டும் குழியுமான பாதைகளும் தமிழகத்தின் திட்டமிடலின்மையையும், திட்டமிட்டாலும் தோற்றுவிடும் கட்டமைப்புக்களையும் பறைசாற்றுகின்றது.பொருளாதார ரீதியாக சீனாவுடன் போட்டியென்பதாலும் வணிக ரீதியான அல்லது நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்ளும் மனபாவம் மட்டுமே.தானும் போராடாமல் போராடுபவனை குறைசொல்லி சிறையில் தள்ளும் சாட்சிகள் ரீதியாக காண்கிறேன்.மாமா!இந்த போலிஸ்காரன் லஞ்சம் வாங்குவதில் படுகில்லாடியென லாரி ஓட்டுனரை மிரட்டிக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தங்கை மகன் காட்டி எரிச்சல் பட்டான்.

கழுகுப்பார்வையாய் தூரத்தில் நின்றுகொண்டு விமர்சனம் செய்யும் அத்தனையும் கண்முன்னே நிதர்சனங்களாய்.இன்றைய மழை விட்ட தேங்கிய நீருக்குள் கால்,உடை நனைத்து நடந்து செல்லும் மாணவ,,மாணவிகள் மட்டுமே எதிர்கால நம்பிக்கையை இன்னும் உயிர்ப்பிக்க வைக்கின்றன.

கோவை நோக்கிய பயணத்துக்கு ரயில் டிக்கட் முன் அனுமதிக்கு செல்லலாமென்று போகையில் ஹோண்டா பைக்கை ஓட்டிகொண்டிருந்த தங்கை மகன் மாமா இலங்கை தமிழ் அகதிகளைப் போய் பார்க்கலாமா என்றான்.

Friday, December 3, 2010

இலங்கையின் மனித உரிமை மீறல் மீதான ஊடகப்பார்வை

தமிழக ஊடகங்களே உண்மைகளை வெளிக்கொண்டு வர இயலாத நிலையில் இந்திய ஆங்கில ஊடகங்களில் அவ்வப்போது இலங்கை குறித்தான மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலையின் ஒரு சில ஆவண்ங்களையும் Channel 4 வெளியிட்டதாக  செய்திகள் வர ஆரம்பித்திருப்பது இந்தியர்களின் பார்வையை இலங்கை மீதும்,ஈழத்தமிழர்கள் மீதும் கொண்டு வருவது சக்கரத்தின் சுழற்சியில் மாற்றங்களைக் கொண்டு வருமா என்பது இன்னும் வரும் காலங்களில் கணிக்க வேண்டியிருக்கிறது.

கூடவே விசில்கார அண்ணாச்சிJulian Assange யின் ஆவண வெளியீடுகள் சட்டரீதியாக போராடும் தமிழ் தரணிகளுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று நம்புவோம்.


உயிருக்கு ஆபத்தான நிலையிருந்தும் கூட ஜூலியன் தனது இணையதளத்தை வேறு தளத்திற்கு மாற்றி விட்டு வாங்கய்யா கேள்வி கேளுங்க  பதில் சொல்கிறேன் என்கிறார்.அவர் பக்கத்துல யாராவது இருந்தா இலங்கை குறித்தான ஒரு கேள்வியும் போட்டு வையுங்க.இவரைக்குறித்து சுடுதண்ணி சுடசுட டீ ஆத்துவதால் தலைப்புக்கு மீண்டும் வந்து விடுகிறேன்.

Channel 4 Video of Sri Lanka executions causes shockwaves 

என்று தலைப்பிட்டு இங்கே  வீடியோ  ஆவணப்பதிவு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல் இலங்கை அரசு It's fake என்று உண்மையானது அல்ல என்று மறுத்திருக்கிறது.

Channel 4 தொலைக்காட்சி இதனை ஐக்கிய நாட்டின் குற்றங்களை விசாரிக்கும் குழுவுக்கு அனுப்பியிருப்பதாக தெரிகிறது.


பார்க்கலாம் எங்கே போகும் இந்த பாதையென்று!

ஓடிப்போன ராஜபக்சேவும் இந்திய,தமிழக சூழலும்

பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் உணர்ச்சிகரமான ஒன்று கூடுதலால் இன்று ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்.விமானத்தளத்தில் நின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கூட்டத்திலிருந்து துவங்கி அவர் தங்கியிருந்த டோர்செஸ்டர் ஹோட்டலின் முன்பு கூடியிருந்த மக்களைக் கண்டு பிரிட்டனின் இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்து கொண்டு நாட்டின் தலை என்ற டிப்ளமட்டிக் என்ற தனி அங்கீகாரத்தால் தப்பித்தோம் பிழைத்தோமென்று நாடு திரும்புகிறார்.

தமிழ் மக்களின் நியாயமான உணர்வுகள் உலகம் முழுதும் வாழும் தமிழ்மக்களின் அடிமனத்தில் கனல் விட்டு எழுந்து கொண்டிருக்கிறதென்பதே உண்மை.இதற்கு விதிவிலக்காக சில வழிதவறிய ஆடுகளும்,இலங்கையின் சர்வாதிகார எமெர்ஜென்சி சட்டங்களால்  தமிழர்கள் வாய்மூடியாகவும், தவறுகளை சுட்டிக்காட்ட வலுவில்லாத நிலையில் சமத்துவம் பேணும் சில சிங்களவர்களும் இருக்கலாம்.

இவற்றைத் தவிர்த்து தமிழகம் நோக்கினால் அரசியல் களத்தில் நின்று ஈழத்தமிழர்களுக்காக அமைப்பு ரீதியாகவும்,தனிமனித குரல்கொடுப்பவர்கள் தவிர  ஏனைய தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே  அறியாத் நிலையிலே கண்ணைக்கட்டி விடப்பட்டிருக்கிறார்கள்.ஈழம் திசை மாறிப்பயணித்ததில் மாநில அரசுக்கும்,மத்திய அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறதென்று கிளிப்பிள்ளையாக திரும்ப திரும்ப சொல்லவேண்டியிருக்கிறது.

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுருக்கிறது என்று இன்னுமா தமிழக அரசும்,மாநில அரசும்  நினைத்துக்கொண்டிருக்கப் போகின்றன?எங்களுக்கு ஊழல் குற்றங்களையும், குடும்ப அரசியலுக்கு ஜெயலலிதாவுக்கு பதில் சொல்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறதென்று சொன்னால் தள்ளி நின்று தயவுசெய்து மக்களின் உணர்வுகளுக்கு வழி விடவாவது செய்யுங்கள்.குறைந்த பட்சம் நாட்டை விட்டுத் துரத்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சி செய்வது எப்படியென்பதை பிரிட்டன்காரனைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.கூடவே ஜனநாயக ரீதியாக மக்கள் போராடுவது எப்படியென்பதை லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களைப்பார்த்து தமிழ்மக்களும்,மொத்த இந்தியர்களும் இனியாவது கற்றுக்கொள்ளட்டும்.போராட்டமென்றால் கல்லெறிதலும்,பஸ் எரித்தலும் ,ரயில் கொளுத்தலும் நாட்டின் உடமைகளை சேதமாக்குவதல்ல.ஆனால் இவற்றின் காரணகர்த்தாக்களே நீங்களல்லவா?

அடக்குமுறைகளிலும்,சிறை அடைப்புக்களிலும்,மக்களை திசை திருப்பி களியாட்டங்களிலும்,போதையிலும் தள்ளிவிட்டு ஊடகச்செய்திகள் கூட மக்களை போய்ச் சேர்ந்து விடக்கூடாது என்று அரசு நடத்துவது மக்களுக்கான மக்களால் நடக்கும் ஆட்சிமுறையல்ல.நாற்காலிச் சண்டைக்காக விடாப்பிடியாக கருணாநிதியும்,ஜெயலலிதாவும் ஒருவருக்கொருவர் அறிக்கை விட்டுக்கொள்வது களைப்பையே தருகிறது.உலகின் எந்த நிர்வாகமும் இப்படி தின்மும் அறிக்கை விட்டுக்கொள்வதேயில்லை.இரு தினங்களுக்கு முன்பான எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று கணக்கு காண்பிப்பதும் அதற்கு தகுந்த மாதிரி ஜெயலலிதா சொல்லும் நகைப்புக்குரியது உண்மையென்பதும் கட்சி சார்பற்றவர்களுக்கு நன்றாகவே புரிகிறது.

ரஜனி படத்து சாகும் நாட்கள் தெரிந்து போனா வாழும் நாட்கள் நரகம்ங்கிற மாதிரி அளவுக்கு மீறிய  பணமும் கூட வாழும் நாட்களில் நரகமே.உங்களுக்கெல்லாம் தினமும் இரவில் மெய்மறந்த  தூக்கம் வருகிறதா?அரசியல் ரீதியாக எந்த நிலைப்பாடு எடுத்து இருவருமே ஒருவரை ஒருவர் கும்மிக்கொண்டிருந்தாலும் ராஜபக்சே இந்தியா வருவதையும் ,மனிதப்படுகொலை கறைபடிந்தவர்களையும் கோயில் குளமென்று இந்தியா சுற்ற உங்கள் அரசியல் அழுத்தங்கள் கொண்டு அனுமதித்து இருக்க மாட்டீர்கள்.

இணைய உலகம் பரந்து கிடக்கிறது.வந்து பாருங்கள்!அதில் தமிழனின் அவலங்களும்,மனித உரிமை மீறல்களும் தலைவன் என்பதையும் அம்மா என்பதையும் கேலிசெய்து முகத்தில் அறைந்து பதில் சொல்லும்.

Wednesday, December 1, 2010

ராஜபக்சேவுக்கு ஒரு ஆப்பு

 மக்கள் போராட்ட குணத்திற்கு கிடைத்த வெற்றியாக ராஜபக்சே லண்டனில் பேச இருந்த லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளதை அதன் அதிகார பூர்வ அதிகாரி கடித எழுத்தில் கையெழுத்திட்டு உறுதிப் படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 50ஆயிரம் புலம் பெயர் தமிழர்கள் கூடுவார்கள் என்று நம்ப படுவதாலும் நிகழ்ச்சிக்கும் ராஜபக்சேவுக்கும் பாதுகாப்பில்லை என்று கருதியே இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கொண்டு ராஜபக்சே என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அதை விட பதவியில் இருக்கும் திமிரில் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதை நிறுத்திக்கொண்டு மனிதனாக மக்களுக்கு நல்லது என்ன செய்யலாம் என்பதை மனதில் கொள்ளட்டும்.

இந்த செய்தியை தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏனைய மானிடம் நிலைக்க போராடுபவர்களுக்கும் எடுத்துச் செல்வோமாக.ஒற்றுமை தமிழனிடமிருந்தால் ராஜபக்சே என்ன கோத்தபாய என்ன ?காலம் அதன் தீர்ப்பை சரியாகவே எழுதும்.குளிரையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக ரீதியாக போராட துணிந்த பிரிட்டன் தமிழர்களுக்கு எனது வணக்கங்கள்.

எஸ்.எம்.கிருஷ்ணா எத்தனை அடிச்சாலும் தாங்குவாரு

தலைப்பு நம்ம வடிவேலு சொல்லும் எத்தனை அடிச்சாலும் தாங்குறானய்யா!புதுசா ஏதாவது செய்தி வந்தா பழையவற்றை மறந்து விட்டு புது அவலுக்கு தாவி விடுகிறோம்.நான் பழையவற்றை நினைவுபடுத்தி விட்டு புதுசுக்கு தாண்டுகிறேன்.எஸ்.எம்.கிருஷ்ணா எந்த எந்த ஊருக்கு பயணப்படுகிறார் என்பது தெரிவதில்லை.சில நேரங்களில் நாட்டுக்கு நல்லது என்று பறக்கும் பயணங்களைக் கூட செய்திருக்க கூடும்.அவை ஊடகத்தில் அமுக்கியும் வாசிக்கப்பட்டிருக்க கூடும்.

ஆனால் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் போய் வாங்கிக்கட்டிக்கொண்டு வந்ததையும் என் மீசையில் மண் ஒட்டவில்லையென்ற எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி வந்த பின் தந்த ஊடக பேட்டியும் சரவெடிமாதிரி வெடிச்சு பின் அமுங்கிப் போனது.அதற்குப் பின் நானும் கிருஷ்ணாவை மறந்துவிட்டேன்.நேற்றுக்கும் முந்தைய தினம் ராஜபக்சே பிரிட்டன் பயணம் குறித்து தகவல்களை லண்டன்வாழ் புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்று கவனிக்கையில்  குறுக்கே எஸ்.எம்.கிருஷ்ணா மறுபடியும் வந்து கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டார்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற முதுமொழி மாறாக கிருஷ்ணா வருவார் பின்னே டக்ளஸ் தேவானந்தா வருவார் முன்னே என்று படை சூழ வரும் கிருஷ்ணாவுக்கு வழிகாட்டியாக டக்ளஸ் நடந்து வந்த தோரணை இருக்கிறதே!சொல்லி மாயாது:( இந்த ஆளு பேரே கதிர்வேலு நித்யானந்த டக்ளஸ் தேவானந்தா என்பது இங்கே http://www.pakistan-karachi.info/Douglas_Devananda  என தேடலில் பாகிஸ்தான் தளமொன்று சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.

இந்தியனைப் பொறுத்தவரையில் சட்டங்களும் முக்கியமாக நீதித்துறையும் கேலிக்குரியதாக்கப்படுகின்றன என்பதற்கு டக்ளஸ் இந்திய தலைகளோட கரம் கோர்ப்பதும் வழிகாட்டும் படலங்களும் சிறந்த உதாரணங்கள்.


டக்ளஸ் கிருஷ்ணாவுடன் வரும் புகைப்படத்தை தேடியதில் கிட்டவில்லை.சந்தர்ப்பங்கள் யாருக்காவது கிட்டினால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.அதுவரைக்கும் நம்ம Mr.clean உடனான படத்தோடு ஆறுதலையடைய வேண்டுகிறேன். அரசன் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே. 

சரி!திருடனும்,கொலைகாரனும்தான் பொதுவாழ்க்கை நாயகர்கள் என்பது மக்களின் தலைவிதியாகிப்போச்சு.கிருஷ்ணா! இலங்கைக்கு போனதுதான் போனீர்கள்.திட்டமிட்ட ஈழத்தின் தமிழ்க்கூட்டமைப்பு அமைச்சர்களுடன் ஆறுதலுக்கோ அல்லது தொலைகாட்சி செய்தியென்ற முகப்பூச்சுக்காக வேண்டியாகினும் அவர்களை சந்தித்து வந்திருக்கலாமே.அவர்கள்தான் ஜனநாயகத்தில் சங்கமாகி விட்டோமென்ற மக்கள் தேர்வாளர்களாயிற்றே. நேரம்,கால,இடம்,சூழ்நிலைகள் அமையவில்லையா அல்லது மத்திய அரசின் உள்நிலைப்பாட்டில் தவிர்ப்பா என்பது உங்களது மனசாட்சிக்கே வெளிச்சம்.நீங்கள் போனதின் ஒரே இந்திய பயன் சீனாவுக்கு முட்டுக்கட்டை போடும் இலங்கை தூதரக திறப்பு விழா மட்டுமே.தூதரக கட்டிடத்தை வச்சுகிட்டு ஒற்றர் வேலை மட்டுமே செய்ய முடியும்.சீனாக்காரன் இலங்கையில் கட்டமைப்புக்களை நிறுவிக்கொண்டிருக்கிறான் இந்தியாவுக்கு ஆப்பு வைக்க. 
 
உட்கார்ந்து கொண்டு பார்ப்பவனுக்கு தெரிவது ஊர்சுற்றுபவனுக்கு தெரியாமல் போவது எப்படி சாத்தியம்?

ஸ்பெக்ட்ரம் பதிவுகளும் விக்கிலீக் இணைய பரிமாற்றமும்

சேகர் குப்தாவுடனான கருத்து பரிமாறலில் ரத்தன் டாட்டா தனது பக்கத்து நியாயத்தை சொல்லிவிட்டு தனது சார்பான வழக்கறிஞர் மூலம் ஸ்பெக்ட்ரம் 2G குறித்தான பதிவு செய்த குரல்களை பொதுவில் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சேகர் குப்தாவுடனான உரையாடலில் கார்பரேட் நிறுவனங்கள்,ஸ்பெக்ட்ரம் குறித்த குரல் பதிவுகளில் தனது இந்திய கவலை,2005ல் ஸ்பெக்ட்ரம் இலவசமாக்கப்படக்கூடாது(Because it is a scarce resource)என்ற தனது கருத்து தயாநிதி மாறனுக்கு பிடிக்காமல் போனதில் இருவருக்கும் வியாபார கெமிஸ்ட்ரி வேலை செய்யவில்லையென்றும்,ஆனால் தயாநிதி ரொம்ப புத்திசாலி மற்றும் Sophisticated person(தமிழ் தெரியலைங்ண்ணா!இப்படி வெச்சுக்கலாம்,குறைந்த பட்சம் பயணம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் தேவை)என்றும் சொல்லி விட்டு ஆ.இராசா(இதுதான் அவரோட லெட்டர்பேட் பெயர் தெரியுமா)வின் ஸ்பெக்ட்ரம் சரி தவறுகள் பற்றி கருத்து சொல்லாமல் ஆனால் ராசாவினால் டெலிகாம் பரவலாக்கப்பட்டது என்ற தனது மறைமுக ஆதரவை ராசாவுக்கு வழங்குகிறார்.

தனது சார்பு கருத்துக்களை தொலைக்காட்சியில் பொதுவில் வைத்த  மறுநாள் திங்கள் கிழமை ஸ்பெக்ட்ரம் டேப் பதிவுகளை வெளியிடக்கூடாதென்ற உயர்நீதி மன்ற மனுதாக்கல்.அவரது கருத்துப்படி இந்தியா வாழைப்பழ ஜனநாயகம்(Banana Democracy) ஆகிவிடுமென்ற கவலை தெரிகிறது.(வாழைப்பழ ஜனநாயகமென்பது litteraly a strong word.வாழைப்பழம்(லஞ்சம்)கொடுத்தால்தான் அரசாங்கத்தில் காரியமாகும் என்பதும்,இதுவே பல குற்றங்களின் இறுதியாக சர்வாதிகாரத்துக்கு வழிகோலும் என்ற பொருள் கொண்டது).

இனி விக்கிலீக்கை பார்ப்போம்.பொதுவாக கண்ணில் படும் உலக செய்திகளை அன்றாட வாழ்க்கையோடு கவனித்துக்கொண்டு வந்தோமானால் பலதேசத்து அரசாங்கம் செயல்படும் தன்மைக்கும்,யதார்த்தமாக உலகப்பார்வைக்கு வராமல் செய்யும் தகிடுதத்தங்கள் புரியவே செய்யும்.புரிதல் என்பது சாட்சியல்ல.ஆனால் இந்த புரிதலுக்கு சாட்சி ஆவணங்கள் மட்டுமே விக்கிலீக்கின் அமெரிக்காவின் உலகநாடுகளின் நிலைபாடு.இணைய வசதிகள் பொதுவாக்கப்பட்ட காலத்தில் the real war started now (இணையப்போரின் துவக்கம்)என்ற ஹேக்கர் ஒருவரின் வாசகம் நினைவுக்கு வருகிறது.கூகிள் பூமியில் உங்க வீட்டு கூரையைக் கூட கண்டுகொள்ள முடியும் என்பதும்,சீனாவின் கணினி குறித்த ஒற்றர்வெலை போன்றவையும் இந்த குறியீட்டுக்குள் வந்த போதிலும்,அமெரிக்காவின் உள்வேலைகள் சாட்சியமாக விக்கிலீக் மூலம் வெளிவருவது அமெரிக்காவையும் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அடுத்து ஸ்பெக்ட்ரம் குரல் பதிவுகள்,விக்கிலீக் அமெரிக்க கேபிள் பதிவுகள் வெளியிடப்படுவது விளையாட்டு மைந்தர்களுக்கு (அடிச்சு ஆடுகிற ground players)விருப்பமில்லாத ஒன்றாக இருந்தாலும் இதன் ஆச்சரியங்கள் என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு மகிழ்ச்சியையே உருவாக்குகின்றன. இந்த மகிழ்ச்சியின் காரணம் அரசாங்கங்களே! பொதுமக்கள் எதிர்காலத்தோடு  பயணிப்பவர்களே!இரட்டை வேடம் போடாதீர்கள்! நாம் புதிய யுகத்தில் இப்பொழுது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதால்.

உலகின் நன்மைக்கு நல்லது என்றும்,நாட்டு மக்களுக்கு நல்லது என்ற அகன்ற பார்வையில் சில விதிவிலக்குகள் அரசியல் களத்தில் இருக்கலாம்.தவறில்லை.ஆனால் நட்பு நாடு என்று பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவி எனும் பெயரில் இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுவதும் அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைப்பதும்,மத்திய கிழக்கில் இஸ்ரேலையும்,ஏனைய அரபு நாடுகளையும் நட்பு ரீதியாக இணைப்பதற்கு பதிலாக சவுதி அரேபிய மன்னர் ஈரான் மீது குண்டு போடு என்பதும் பரிசீலிக்கிறேனென்ற அமெரிக்க நிலைப்பாடும் உலக சமாதானத்திற்கு நல்லதல்ல.

Classified எனும்  ரகசியங்களை வெளியிடுபவர்கள்( Whisle blowers)வானிலிருந்து வந்த வேற்றுகிரகவாசிகள் அல்ல.இவர்கள் ஒன்று ஒரு அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்தவர்கள் என்பதற்கான காரணங்களும்,ஒருவேளை சுயநலவிருப்ப காரணங்களாக கூட இருக்கலாம்.ஆனால் தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்குபவர்கள் என்பதோடு இவர்கள் உலகமாற்றுக்கான கிரியாஊக்கிகள் எனபது மட்டும் தெளிவு.

Friday, November 26, 2010

நிஜமாகவே சமீபத்திய மறுமொழிகள்:)

டோண்டு பெரியவர் மேல இருக்குற கடுப்புல அவர் பக்கம் போவதேயில்லை.அப்படியும் தப்பி தவறி சில நல்ல தலைப்பை வைத்து விடுவதால் என்னதான் சொல்கிறாரென்று பார்த்ததில் கண்ணுல பட்டது என்னோட தலைப்பு:)

சிலேடை புரிந்தவர்கள் ஜமாய்ங்க மக்கா!நான் கொஞ்சம் சிரிச்சிட்டு வருகிறேன்:)

Thursday, November 25, 2010

எனது அரசியல் நிலைப்பாடு

சென்ற பதிவுக்கு நிறைய ஹிட் கணக்கு.கருத்து பரிமாறல்கள் தவிர நான் இவற்றில் அதிக ஆர்வமில்லாதவனாக இருந்தாலும் தற்போதைய இந்திய,தமிழக அரசியல் நிலை அனைவரையும் கவர்வதும்,பாதிப்பதும் மட்டும் இதிலிருந்து புரிகிறது.

முந்தைய பதிவு தந்த உற்சாகத்தால் இங்கே நொள்ளை அங்கே இல்லைன்னு ஒவ்வொரு கட்சிகளைப்பற்றியும் குறைகளாகவே சொல்லிகிட்டிருக்கிறதுக்கு பதிலாக எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதனையும் எவ்வாறு தமிழகத்தில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் இங்கே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.சில அடிப்படை தகுதிகள் நம்மிடம் இயல்பாகவே ஒளிந்து கொண்டிருக்கிறது.சிலவற்றை மாற்றிப்போட மக்களின் மனோபாவத்தை மாற்ற வேண்டியிருக்கிறது.

சிறுவனாக இருக்கும் போது மாறன் என்ற காங்கிரஸ்காரர் சிறுவர்கள் அனைவரையும் கூட்டி சுதந்திரதினத்தில் ஜனகனமன தேசியகீதம் பாடி கொடியேற்றி ரோஜா மலர்கள் தலையில் விழ வந்தே மாதரம் சொல்லிய பின் கிடைக்கும் மிட்டாயோ,சுதந்திர தினத்தில் கிடைக்கும் புதுச்சட்டை,டிரவுசர் அணிந்த மகிழ்ச்சியோ,கொடியின் மூவர்ணமோ மனதளவில் நான் காங்கிரஸ்காரனாகவே மாறிப்போனேன்.காங்கிரஸ் பற்றிய மதிப்பீடும் இதுவரை அப்படியேதான் அடிமனதில் நிற்கின்றது.

தி.மு.கவுக்கு மாற்று இல்லையென்ற நிலையில் கோவை வீதிகளில் நிகழும் அரசியல் கூட்டங்களில் அனல் பறக்கும் உச்சரிப்பும் தமிழும் இயல்பாகவே தி.மு.கவின் பால் இழுத்தது.எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற வசீகரகங்கள் என்னை ஏனோ அரசியலில் இதுவரை வசீகரிக்கவில்லை.இப்பொழுது ஓரளவுக்கு எம்.ஜி.ஆரின் மறுபக்கம் புரிகிறது.மேலும் அரசியலின் பலபக்கங்களையும்,சுயநலங்களையும் எனக்கு தோலுரித்துக்காட்டியது இணைய தொடர்பும் ஈழப்போரின் அவலங்களும் என்பேன்.

ஒரு புறம் அ.தி.மு.க என்ற ஆணவத் தலைமை,இன்னொரு புறம் குடும்ப அரசியல் என்ற தி.மு.க இரண்டுக்குமிடையில் தமிழ் இனத்துக்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் என்ற பக்கவாத்தியம் என்ற மூன்று பரிமாணங்களில் தமிழகம் சிக்கி தவிக்கிறது.இவர்களுடன் கூட்டு சேர என ஜாதிக்கட்சிகள் ,சினிமா கவர்ச்சியென சிறு கிரியா ஊக்கிகளும் கூட.இந்த நிலைக்குள்ளேயே தமிழர்களின் மனமும் சுழன்று வருகின்றன.பணம்,குற்றவியல் பங்கீடு, ஜாதி,ஊழல்,சினிமா போன்ற காரணிகளே ஒரு கட்சியின் முக்கிய தகுதியாக இருக்கிறது.அனைத்துக்கட்சிக்குள்ளும் தொண்டர்கள்,துணை தலைவர்கள் என நல்லவர்களும் இருக்ககூடும்.ஆனால் கட்சியென்ற கூட்டுக்குள் இவர்கள் அனைவருமே தனது சுயங்களை இழந்து விடுகிறார்களென்றே நினைக்கிறேன்.
 
எனக்கு கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பிடிப்பு,போராட்ட குணம்,உழைக்கும் வர்க்கத்துக்கு குரல் கொடுக்கும் துணிவு பிடித்திருக்கிறது.ஆனால் சீன,ரஷ்ய சித்தாந்தங்கள் என்ற பக்கசார்புகள், யதார்த்தமான பொருளாதார நிலை,கேரள,கல்கத்தா மாநிலங்களின் வளர்ச்சியின்மை கம்யூனிசம் மீது அவநம்பிக்கையை உருவாக்குகிறது.இருந்தும் சென்ற தலைமுறையின் நல்லக்கண்ணு,கேரள கம்யூனிஸ்ட்களில் சிலர் புது சித்தாந்தங்கள் உருவாகுவதற்கு நல்ல காரணிகள்.

ஒவ்வொரு தனிமனிதனும் கட்சி சார்பு என்ற நிலையிலிருந்து விடுபடவேண்டும்.இவற்றுக்கெல்லாம் மாற்றாக டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தமிழகத்தில் மாற்றாக வந்திருக்க வேண்டியவர்.நவீன தமிழக அரசியலில் அவரால் சாதிக்காமலே போய்விட்டது தமிழகத்துக்கு பேரிழப்பே.தமிழக அரசியலை நெம்புகோலிட்டு மாற்ற வேண்டுமென்றால் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியைப் போன்றவர்களை முக்கியமாக தமிழகத்துக்குள்ளேயும் தேவைப்பட்டால் உலகளாவிய அளவிலும் தேடிக்கண்டு பிடிப்பது அவசியம்.

நமது அரசுத்துறைப் பணியாளர்களில் திறன் படைத்தவர்களை கண்டு பிடித்து முன்னிறுத்த வேண்டும்.உதாரணத்துக்கு உமாசங்கர்.

கல்லூரி மாணவர்கள் காவல்துறை, சட்டம்,மருத்துவம், என்ஞியரிங், விவசாயம்,விஞ்ஞானம்,ஐ.ஐ.டி,எம்.ஐ.டி இன்னும் பல துறைகளிலுருந்தும் தகுதியானவர்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்.

தவறுகளுக்கு தண்டனை நிச்சயம் என்ற பயம் வேண்டும்.ஒரு காவல்துறையை சார்ந்த பெண்மணி ஒரு கடையில் கையூட்டு வாங்கி வீடியோ எடுத்த ஊழல் தடை அதிகாரியின் காலைப்பிடித்து கெஞ்சுவதை யூடியுப்பில் பார்த்தேன்.துறை சார்ந்த மூத்த அதிகாரி வந்து வீடியோ எடுத்தவருடன் சண்டை போட்டார்.இந்த நிலைகள் மாறவேண்டும்.

வழக்காடு மன்றங்களின் தீர்ப்புக்கள் துரிதப்படுத்த வேண்டும்.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத சமூக ஆர்வலர்களை உள்ளிட்டுக்கொள்ள வேண்டும்

திராவிடன்,பார்ப்பனன்,இஸ்லாமிய வேற்றுமையை அழிக்கவேண்டும்.இந்திய எல்லையைக்கடந்தால் இவை வெறும் வார்த்தைகள் என்ற புரிதல் இப்பொழுது எனக்கிருக்கிறது.

பெரியாரியல்,மதம் இரண்டும் ஒவ்வொரு மனிதனின் தனி சுதந்திரம்.இவையிரண்டும் அரசியலில் கலக்ககூடாது.

வாரிசு அரசியல் இருக்கக்கூடாது.இருக்கும் வாரி அரசியல்கள் ஓரங்கட்டப்பட வேண்டும்.இதன் காரணம், அழகிரி மகனின் திருமணத்தில் அழகிரியின் பாடல்,உடை போன்றவை மனுசன் Happy goes lucky ங்கிற மாதிரிதான் தெரிகிறார்.இவருக்கு ஏன் அஞ்சாநெஞ்சன் என்ற மாய பிம்பங்கள் எல்லாம் என்று எனக்கு வியப்பாகவே இருக்கிறது.முதலமைச்சரின் மகன் என்ற ஒரே தகுதியால் மட்டுமே மத்திய அரசின் கேபினட் பதவி போன்றவை கலைஞர் கருணாநிதியின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா,ஆந்திராக்காரர்களுடன் நட்புறவு பாராட்டவேண்டும்.Conflict of interest வரும்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும்.மனம் அகலும் போது கேரள,கர்நாடக,ஆந்திர,தமிழக மக்களின் குணநலன்களில் என்னால் வித்தியாசம் காண இயலவில்லை.

கல்வி,மருத்துவம்,வீடு,நல்ல சாலைகள்,மின்சாரம் போன்றவை அடிப்படை தேவையும் உரிமையும் கூட

இணைய பயன்பாடு அனைவரையும் போய்ச்சேர வேண்டும்.

அடிப்படை பொருளாதார தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்-அதற்கான காலகட்டங்களில் பொருளாதாரத்தில் நாம் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம்.இவை இன்னும் சாத்தியமே.

விவசாயிகள் முன்னிறுத்தப்படவேண்டும். விவசாயம் மேம்படுத்த வேண்டும்.அடிப்படையில் நாம் விவசாய நாடு என்ற உணர்வே தென்னக மாநிலங்களை எந்த உலக மாற்றங்களிலிருந்தும் நிரந்தரமாக வாழவைக்கும்.

கடல் என்பது தமிழகத்தின் மிகப்பெரிய பொருளாதார வளம்.இதனை மேம்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலமென்பது இந்திய,தமிழகத்தின் எதிர்காலமும் கூட என்ற அகன்ற பார்வை நமக்கு தேவை.ராஜபக்சேக்கள் இல்லாது போகும் போது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும்.இதுவே இலங்கைக்கும்,இந்திய அரசியலுக்கும்  முக்கியமாக தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லது.

நடக்கிற காரியமான்னு சந்தேகங்களுக்கு அண்ணன் மார்டின் லூதர் கிங்கை துணைக்கு அழைக்கிறேன்.

அமெரிக்க சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட மார்டின் லூதர் கிங்க் மாதிரி நானும் கனவு காண்கிறேன்.

I say to you today, my friends, that in spite of the difficulties and frustrations of the moment, I still have a dream - Martin Luther King

 (எனது நண்பர்களே! இன்றைக்கு சொல்லிக்கொள்கிறேன்,கடினம்,ஏமாற்றமான தருணத்தில் என்னிடத்தில் இன்னும் ஒரு கனவு இருக்கிற்து.)

Wednesday, November 24, 2010

தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் முட்டிகிச்சு

ராஜ் தொலைகாட்சி தலைப்பு செய்தி.

கூட்டணியில் சேர்ந்திருப்பது தேவையில்லையென்றால் யோசிக்க தயாராக இருக்கிறோம் .கருணாநிதி பரபரப்பு பேச்சு!


கூட்டணியில் சேர்ந்திருக்க விரும்பவில்லையென்றால் வழி விடுங்கள்.
சேர்ந்திருக்கவே விரும்புகிறோம்,வேண்டாமென்றால் அதற்கும் தயார்.

 ஸ்டாலின் தலைமையில் தமிழக வேளாண் கருத்தரங்கத்தில் பேசும்போதே இதனை தெரிவித்தார்.
.

காங்கிரஸின் மைக் இளங்கோவன் எவ்வளவு நாட்களாக  மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களென தி.மு.க அரசு பரசாற்றிக்கொள்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்?இதனை சாக்காக வைத்து முதல்வர் கருணாநிதி நேரம் பார்த்து கல்லெறிகிறார்.சகுனம் பார்க்கிறதென்பது இதுதான்.

என்னமோ போங்க! இரண்டு பேரும் நல்லாயிருந்தா சரி:).

Tuesday, November 23, 2010

விக்கிபீடியாவின் கடிதம்.

வலது கரம் ஈவதை இடது கரம் அறியாதிருப்பதாக என்பது இயேசு கிறுஸ்துவின் வாக்கு.சில நேரங்களில் நாலு பேருக்கு நல்லதுன்னா இடது கரமும் அறியட்டுமென சுயபுராண சொரிதல் இல்லாமல் விக்கிபீடியாவின் கடிதம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.அமெரிக்க வாழ் சகோதர,சகோதரிகளுக்கு வரி காரணங்களுக்கு இது போன்ற தனிக் கடிதம் உதவக்கூடும்.இந்தியாவில் .........அவரவர் பார்வைக்கும் விமர்சனத்துக்கும் விட்டு விடுகிறேன்.இனி கடிதத்தின் சாரம்.


Dear MR.NATARAJAN,

Thank you for your gift of USD .... to the Wikimedia Foundation, received on November 23, 2010. I’m very grateful for your support.
Your donation celebrates everything Wikipedia and its sister sites stand for: the power of information to help people live better lives, and the importance of sharing, freedom, learning and discovery. Thank you so much for helping to keep these projects freely available for their nearly 400 million monthly readers around the world.

Your money supports technology and people. The Wikimedia Foundation develops and improves the technology behind Wikipedia and nine other projects, and sustains the infrastructure that keeps them up and running. The Foundation has a staff of about fifty, which provides technical, administrative, legal and outreach support for the global community of volunteers who write and edit Wikipedia.
Many people love Wikipedia, but a surprising number don't know it's run by a non-profit. Please help us spread the word by telling a few of your friends.

And again, thank you for supporting free knowledge.

Sincerely Yours,


Sue Gardner
Executive Director

* To donate: http://donate.wikimedia.org
* To visit our Blog: http://blog.wikimedia.org
* To follow us on Twitter: http://twitter.com/wikimedia
* To follow us on Facebook: http://www.facebook.com/wikipedia


This letter can serve as a record for tax purposes. No goods or
services were provided, in whole or in part, for this contribution.
The Wikimedia Foundation, Inc. is a non-profit charitable corporation
with 501(c)(3) tax exempt status in the United States. Our address is 149 New Montgomery, 3rd Floor, San Francisco, CA, 94105. Tax-exempt number: 20-0049703

விக்கிபீடியாவுக்கு உதவுங்கள்.

நாட்டுச் சரக்குகள் உண்மைத்தமிழன்,செந்தில்,வானம்பாடிகள் பாலா இன்னும் பல முன்னணி பதிவிகள்,பதிவர்கள் போல அல்லாது நானும் ரவுடிதான் என்று காட்டிக்கொள்வதற்காக வேண்டியாவது பாதிக்கும் சில நிகழ்வுகளைப்பற்றி பதிவு போட வேண்டுமென்று நினைக்கும் போது உதவிக்கு வருவது பெரும்பாலான நேரங்களில் விக்கிபீடியா தளமே என்று போலிஸ் ஜீப்பில் ஏறி நின்று உறக்க சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.(குறிப்புகள் மட்டுமே விக்கி போன்றவர்களுக்கு சொந்தம்,எழுத்து நடை,மண்டைக்குள் முன்பே சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டவை மற்றும் சரக்கு கலக்கல்,வார்த்தை அலங்காரம் எல்லாம் சொந்த சரக்கே:))

எந்தவிதமான லாப நோக்குமில்லாமல் அறிவு சார்ந்த விசயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றஒரே அடிப்படையில் உருவான் தளம்.அமெரிக்காவின் பொருளாதார தட்டுப்பாடு வங்கிகள்,உலகப் பொருளாதாரத்தில் பின்னடைவு என்று துவங்கி விக்கிபீடியா போன்ற நல்ல நிறுவனங்களையும் பாதிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

விக்கிபீடியா தனது சேவையை மேலும் தொடர அனைவரின் பொருளாதார உதவியை நாடுகிறது.முடிந்தால் உதவுங்கள்.உதவ முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் உங்கள் தளத்தில் விக்கிபீடியா விட்ஜெட்டாவது ஒட்ட வைத்துக்கொள்ளலாம்.விக்கிபீடியாவுக்கு உதவி என்ற இடுகை பார்த்த என்னைப்போன்றவர்களில் சிலரது உதவிகளாவது போய் சேரட்டும்.

 Support Wikipedia

நல்லவைகளுக்கு நாடு,நிறம்,எல்லைகள் இல்லை.





 

சித்தார்த்த சங்கர் ரேயின் நினைவுகளிலிருந்து

நவம்பர் 6ம் தேதி மறைந்த இந்திராகாந்தியின் நண்பரும் காங்கிரஸ்காரருமான சித்தார்த்த சங்கர் ரேக்கு சமர்ப்பணம் இந்த பதிவு.
எனக்கு தெரிந்த மிசா காலங்கள் எல்லாம் தமிழ் பத்திரிகைகளில் அரசல் புரசலாக படித்த ஸ்டாலின் ஜெயிலுக்குப் போனாரு,கண்ணப்பன் காரு ஓட்டினாரு போன்றவைகளே:)நேற்றைய மேய்ச்சலில் பின்னூட்டமிட்டபின் பின் வாசகர் பரிந்துரையிலும் வந்த பதிவர் ரஹீம் கஸாலி எழுதிய அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி  என்ற தலைப்பே முதல் முறையாக மிசா காலத்தைப் பற்றி ஓரளவுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. இப்பொழுது எல்லோரின் அவுட்லுக்கின் பார்வையும் எங்கேயென்று சொல்லத்தேவையில்லை.ஆனால் அவுட்லுக்கில் என்னைக்கவர்ந்தது சித்தார்த்த சங்கர் ரேயின் நினைவுகள் பற்றி டோலா மித்ரா என்பவர் எழுதியது.முழுமையான ஆங்கில மூலத்துக்கு இங்கே செல்லவும்.என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்கிறேன்.

இந்திராவும் நானும்:
(இந்திராவும் சித்தார்த்தாவும் இளம் வயது முதல் குடும்ப நண்பர்கள் என்ற சிறுகுறிப்புடன் இனி...)

21 டிசம்பர் 1980: அன்பின் சித்தார்த்தா!உன்னுடைய குதுகலப்படுத்தும் வார்த்தைகள் நரை அல்லது கண் வளையங்களை(Wrinkles)நிறுத்தாது.உலகம் வருத்தப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.மனிதன்,எல்லா சந்தர்ப்பங்கள் இருந்தும் முன்நோக்கி பார்க்கிறான் ஆனால் இடறி கீழே விழுகிறான்.நான் இப்பொழுதுதான் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியை பார்த்து வந்தேன்.85ம் வயதிலும் வயதானவர் என்று நம்பமுடியாத தோற்றம் ஆனால் மனிதத்தின் அவரது பார்வை நம்பிக்கையிழக்கச் செய்கின்றன.
Allied Powers: Siddhartha Shankar Ray with Indira Gandhi in New Delhi, 1972
Reminiscences
The Wind Has Followed Us

இந்திரா காந்தியும் சஞ்சயும்:

இந்திராவை நான் குழந்தைபருவம் முதல் அறிவேன்.ஆனால் எங்கள் வாழ்க்கை முழுவதுமான நட்பு மிசா(Emergency) காரணமாகவும்,சஞ்சயின் தலையீட்டாலும் களங்கத்தை உருவாக்கியது.இது பற்றி இந்திரா பலமுறை தனது இயலாமையை புலம்பியிருக்கிறார்.அவர் பலமுறை அழுதுருக்கிறார்.அவர் அடிக்கடி என்னிடம் “சித்தார்த்தா!என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்தப் பையனை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்?” நான் ஆலோசனைகள் சொன்னாலும் சஞ்சய் சொல்வதையே இறுதியாக கேட்பார்.சஞ்சய் மீது அவர் பயம் கொண்டவ என்றே சந்தேகப்படுகிறேன்.சஞ்சயைப் போல் அல்லாது ரஜிவ் காந்தி மிகவும் நல்ல திறமையானவர்.இவரே என்னை பஞ்சாபின் ஆளுநராக ஆலோசனை கூறினார்.அவரது மரணம் எனக்கு பேரிழப்பாகும்.அவருக்கு பின் காங்கிரஸ் தலையில்லாமல் போனது.சோனியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் மாதிரி ஒரு அமைப்பை நடத்துவதற்கு மிகவும் புத்திசாலியாகவே இருக்க வேண்டும்.
 
விருப்பமில்லாத அரசியல் சட்டமைப்பு வழக்கறிஞராக

எனது சட்டவியல் பயிற்சி நான் சட்டமைப்பு வழக்கறிஞராகவே அறிமுகப்படுத்துகிறது.ஆனால் அந்த எண்ணத்தில் சட்டவியலை ஆரம்பிக்கவில்லை.இந்திய சட்டமைப்பு உருவாகும்போது நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தேன்.வெறுமனே பரிட்சையில் வெல்ல வேண்டுமென்பதற்கு மேல் எனது குறிக்கோள் எதுவுமில்லாததாக இருந்தது. தத்துவமும்,பொருளாதாரமும் எனக்கு ஈடுபாடில்லை.ஆங்கிலத்தையும் பெங்காலி இலக்கியத்தையும் அதிகம் விரும்பினேன்.ரபீந்தரரின் பாடல்கள் என்னை மயக்கியது.எனக்கு கிரிக்கெட் மிகவும் விருப்பம்.எனது சட்டப்பயிற்சி காலத்திலேயே அரசியல் சட்டத்தின் நுணுக்கங்களையும் சட்டப் பிரச்சினைகளையும் புதிய ஜனநாயகத்தில் எதிர்கொள்ள வேண்டியதை உணர ஆரம்பித்தேன்.அரசியலமைப்பின் சிந்தாந்தங்கள் என்னை கவர்ந்ததை விட சமூக சிக்கல்களை தீர்ப்பதை விரும்பினேன்.சட்டங்களைப் பொறுத்தவரையில் யதார்த்தவாதியாகவே இருந்தேன்.

முக்தி பாகினிக்கு கிடைத்த தன்னம்பிக்கையும் ஆதரவும்:
(முக்தி பாகினி என்பது பெங்களாதேஷ் என்ற தனி நாடு உருவாவதற்கு காரணமான விடுதலைப்புலிகள் போன்ற தனிநாடு கோரிக்கை போராளிகள் அமைப்பு.தற்போதைய பெங்களாதேஷ் 1971க்கும் முன்பான காலகட்டத்தில் கிழக்கு பாகிஸ்தான் என்றே அழைக்கப்பட்டது.)

1971ல் பெங்களாதேஷ்க்கும் முன்னால் இந்திரா காந்தி என்னிடம் சொன்னது டெல்லியிலிருந்து பெங்காலி பேசும் மந்திரி ஒருவர் உற்சாகமும் தைரியத்தையும் தரும் பேச்சு பெங்களாதேஷ் முக்தி பாகினிக்கு (Liberation rmy)பெரிய தன்னம்பிக்கையாக இருக்கும்.நீங்கள் வெற்றி பெற்றால் இதுபற்றி யாருக்கும் தெரியாது அதேபோல் இது தோல்வியடைந்தாலும் உங்களை யாரும் குற்றம் சுமத்த மாட்டார்கள்.
 
இதன் அர்த்தம் இந்த பயணம் அதிகார பூர்வமானதல்ல.நிச்சயமாக இதை நான் புரிந்துகொண்டேன்.அப்பொழுதெல்லாம் சுதந்திர இயக்கங்களின் உலக சட்டங்கள் அவ்வளவு தெளிவானதாக இல்லை.நிச்சயமாக இந்தியாவும் ஏனைய நாடுகளின் தனி நாடு கோரிக்கைகளுக்கு நேரடியாக ஆதரவு தர விரும்பவில்லை.இந்த முடிவை அவர் சுயமாகவே எடுத்தாரா அல்லது யாராவது ஆலோசனையின் பேரில் எடுத்தாரா என்று நான் ஒருபோதும் அவரிடம் கேட்டதில்லை.
 
 
(1971, Pakistan Surrenders: Ray was CM of Bengal during the birth of Bangladesh. (Photograph by Corbis, From Outlook, November 29, 2010)
 
நான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றதில் எனது பாதுகாப்பில் மிகவும் கவலைப்பட்ட நண்பர் ஒருவரின் கூட்டம் நிறைந்த வீட்டில் தங்கியதும் அடங்கும்.அடுத்து கிழக்கு வங்காளத்தின் அடர்ந்த காடுகளின் இரண்டு மணி நேரத்துக்குப் பின் அமர் சோனர் பெங்களா (பெங்களா நாடு எங்களுடையது) என்று பாடிய ஆயிரம் போராளிகள் என்னை வரவேவற்றார்கள்.நான் கண்ணீரோடு அதனை உணர்ந்தேன்.

ஜோதிபாசுவும் ஏனைய கம்யூனிஸ்ட் தோழர்களும்.

ஜோதிபாசுவும் நானும் அரசியல் எதிராளிகளாக இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்தோம்.அரசியலில் நாங்கள் சண்டை போட்டோம்.எதிர்வாதம் செய்தோம்.1962ல் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஜோதி அமைதியாக இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அது தீவிரமான ஆதரவாக இருந்தது.ஜோதி விஸ்கியை மிகவும் விரும்பினார்.பொதுமக்கள் முன் அவர் சிரித்தது மிகவும் குறைவே ஆனால் அவர் மிகவும் நகைச்சுவை உணர்வுடையவர்.நாங்கள் பல நினைவுகளை பகிர்ந்துகொண்டோம்.

ஒருமுறை நானும் ஜோதியும் சந்தன்நகர் பிரச்சாரத்திற்காக செல்லும்போது அழகிய பெண்களின் குழுவொன்று எங்களை சூழ்ந்துகொண்டு எங்களிடம் ஆட்டோகிராப் கையெழுத்து கேட்டார்கள்.என்னை விட ஜோதி மேல் மட்டுமே அவர்கள் அதிக ஆர்வமாக இருந்ததுடன் என்னிடம் ஒரு கையெழுத்து வாங்கியதுடன் விட்டு விட்டார்கள்.ஆனால் ஜோதியிடம் பெங்காலியில் சில வார்த்தைகளாவது எழுதி தரவேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.ஆனால் ஜோதி மறுத்துவிட்டார்.பின் நாங்கள் கல்கத்தாவுக்கு காரில் போகும்போது சில வரிகளை பெங்காலியில் எழுத ஏன் மறுத்துவிட்டாய் என ஜோதியிடம் கேட்டேன்.உடனே ஜோதி என்னிடம் “Arrey, parley toh likhbo ”(பெங்காலியில் எழுத தெரிந்திருந்தால் எழுதியிருப்பேன்).

மேலும் சோம்நாத் சட்டர்ஜியிடம் சில நகைச்சுவையான நிகழ்வுகளை காணக்கிடைத்தது.இவர் ஒரு அருமையான வழக்கறிஞர்,ஆனால் அரசியலில் சேர்ந்து வீணாகிப்போனார்.கல்கத்தா உயர்நீதிமன்றத்தில்  ஒருவருக்கு ஆதரவாக நான் சோம்நாத் சட்டர்ஜியுடன் எதிர் விவாதம் செய்த நினைவு வருகிறது.நான் நீதிபதியிடம்”யுவர் ஹானர்!மதிப்புக்குரிய எதிர் தரப்பு வக்கீலின் வாதங்கள் மிகவும் தீவிர நம்பிக்கையுடையதாக இருக்கிறது” என்ற பொருளில்(Your honour, my respected opponent’s arguments are bullish.”) உடனே சோம்நாத் சட்டர்ஜி நீதிபதியிடம் ‘நீதிபதி அவர்களே1மதிப்புக்குரிய எதிர் தரப்பாளர் நான் அசிங்கமாக இருப்பதால் என்னை மாடுமாதிரி என்கிறார்.(“Your honour, my respected opponent is calling me a bull because I am ugly.”)

ஏனைய கம்யூனிஸ்ட்களில் நிதியமைச்சர் ஆசிம் தேஷ்குப்தா படித்தவராக திறன் வாய்ந்தவராக உணர்கிறேன். இவர் MIT படித்தவர்.ஆனால் தவறான கட்சியில் இருக்கிறார்.அடுத்து புத்ததேப்பட்டாச்சார்யா ஒரு நல்ல மனிதர்.நேர்மையானவர்.ஆனால் முதல் மந்திரிக்கான தகுதி இவரிடமில்லை. இவர் பதவி விலகவேண்டும்.  
---------------------------------------------------------------------------------------
இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு இந்தியாவின் பாதை பலவிதங்களிலும் தடம் புரண்டு விட்டதும் காங்கிரஸ் தனது பாதையிலிருந்து எவ்வாறு மாற்று வழியில் நடந்து திணறுகிறதென்பதும் பதிவுகள்,நிகழ்வுகள் மூலம் கண்கூடாக காண்கிறோம்.இருந்தும் இந்திய ஜனநாயகத்தின் வேர் அனைத்து புயல்களையும் கடந்து இன்னும் வளரும் எனபது மட்டும் உறுதி.

Democracy is not a good system but there is no other alternative either to compete-எங்கோ கேட்டது.




Friday, November 19, 2010

ஆங் சான் சூ கியின் நேர்காணல்

சென்ற பதிவில் திசநாயகம் பற்றி பதிவிட்டதும் உறங்கும் போது ஆங் சான் சூ கியின் பி.பி.சியின் ஜான் சாம்சனுடனான நேர்காணலை சென்ற வாரம் கண்டும் குறிப்பிட மறந்துவிட்டோமே என்ற உறுத்தல் இருந்தது.இன்று  திசநாயகம் பின்னூட்டத்தில் ரதி அவர்களின் பின்னூட்டம் கண்டதும் பதிவிட்டு விடவேண்டுமென்று இணையத்தில் தேடிக் கண்டு பிடித்ததில் ஆங்க் சான் சூ கியின் சென்ற வாரம் கண்ட நேர்காணல் கிடைத்தது.

வெறுமனே குளிர் அறையில் உட்கார்ந்து கொண்டு நேர்காணல் காண்பதும், பதிவு எழுதுவதும் எளிது என்ற சில விமர்சனங்களுக்கு மாறாக பி.பி.சியின் ஜான் சாம்சன் உலகின் பலபகுதிகளின் போர்முனைகள், உரிமைக்குரல்கள், கலவரங்கள் என்று பல இடங்களுக்கும் உயர்ந்த கட்டிங்களையும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் உலகின் முன் காட்டும் பீஜிங்க் நகரத்திற்கும் அப்பால் சீனாவின் குறுநகர் சார்ந்த சாதாரண சீன மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் கூட வீடியோ சகிதம் நேர்காணல் காண்பவர்.எனக்கு பிடித்த ஊடகவியளாளர்களில் ஒருவர் ஜான் சாம்சன்.

இரண்டாம் உலகப்போரின் காலகட்ட சுபாஷ் சந்திர போஸ்,ஆசியாவின் உலகப்போரின் பங்களிப்பு,பினாங்கில் வியாபாரம் மற்றும் போரினால் மக்கள் வெளியேற்றம் என்று தற்கால பர்மிய மியான்மரின் வரலாற்றை துவக்கலாம்.ஒரு புறம் சீனா மறுபுறம் இந்தியா என்ற நிலையில் பூகோள ரீதியாக காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை போன்று பர்மாவும் கூடவே தனது சுதந்திர சிறகுகளை விரித்திரிக்க வேண்டியது.மாறாக சூ கியின் அப்பா ஆங்க் சான் 1947ன் காலகட்டத்தில் ராணுவப் படுகொலையால் மரணிக்க பர்மா ராணுவ ஆட்சிக்குள் புகுந்து கொண்டு உலகம் மறந்து விட்ட ஒரு இருண்ட பகுதியாகவே இதுவரை மியான்மர் காட்சியளித்தது.

 இன்னும் பர்மாவின் நதிமூலமெல்லாம் தேடினால் அசோகரின் புத்தமதம், பொன்னியின் செல்வன் கதைக்கள சோழர்களின் ஆட்சியில் பௌத்தம் என்று கதை நீளும்.ரஷ்யாவின் கம்யூனிச வீழ்ச்சிக்குப்பின் 1990களில் இந்தியா சோசலிஷத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு திறந்த பொருளாதாரக் கொள்கைகளை கைகொண்ட காலகட்டத்தில் துவங்குகிறது ஆங்க் சான் சூயின் அரசியல் பிரவேசம்.அப்பா ஆங்க் சான் பர்மாவின் ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து பர்மாவை மீட்டவர்,அம்மா கின் கீ இந்தியா, நேபாள் போன்ற நாடுகளின் பர்மாவுக்கான தூதுவர் போன்ற நிலையில் வளர்க்கப்பட்டவர் ஆங்க் சான் சூ கி.

இவர் அரசியலுக்குள் கால்வைப்பதற்கும் முன்பான இரண்டு ஆண்டுகளில்(1988) ஜுண்டா என்ற ராணுவ அமைப்பு உருவாகிறது.இவரது அரசியல் பிரவேசத்தை விரும்பாத ஜுண்டா ஆங்க் சான் சூ கீயை நாட்டை விட்டு வெளியேற வற்புத்துகிறது.இதனை நம்ம வீராங்கனை மறுக்க சுருக்கமாக சொன்னால் இந்த ராணுவ அமைப்புக்கும் பர்மாவில் ஜனநாயகம் பரவவேண்டுமென்ற ஆங்க் சான் சூயின் சுதந்திர வேட்கைக்குமிடையேயான போரில் ஆங்க் சான் சூயை வீட்டுக்காவலாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சிறையில் அடைத்ததும் இப்போது ஜுண்டா ராணுவம் ஒப்புக்கு சப்பாணியா தேர்தல் நிகழ்த்திய பின் ஆங்க் சான் சூயை விடுதலை செய்ததுமே இடுகையின் சுருக்கம்.

நோபல் பரிசு பெற்ற ஆங்க் கி சான் கீ தனது குடும்பத்தவர்கள், கட்சி ஆதரவாளர்கள்,உலக பத்திரிகையாளர்கள் என யாரையும் பார்க்க மறுக்கப்பட்டு கம்பி தொலைபேசி கைபேசியாக மாற்றம் பெற்றதும் கூட ஆங்க் சான் சூ கியின் பார்வையில் கண்களை அகல ஆச்சரியப்படுத்தும் செய்தி.சாம்சனுடனான அவரது நேர்காணல் இங்கே உங்கள் பார்வைக்கு.

Thursday, November 18, 2010

திசநாயகம் நேர்காணல்

 எல்லைகள் இல்லா ஊடகவியளாளர்கள் அமைப்பு திசநாயகம் விடுதலை அடைந்ததற்கு பின்பான முதல் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது.

ஊடக சுதந்திரம் வளர எல்லைகள் இல்லா ஊடகவியளாளர்கள் அமைப்பின் பணி பாராட்டுக்குரியது.

 Man is born Free but everywhere he is chained - ரூசோ

சாவையும் அடக்குமுறைகளையும் கடந்து வந்த திசநாயகத்திற்கு வாழ்த்துக்கள்.
திசநாயகத்தின் நேர்காணல் இங்கே

Wednesday, November 17, 2010

ஊழல் , லஞ்சம் மூலக்கூறுகள்

ஊழலின் மூலக்கூறுகள் என்னவென்று பார்க்கும் முயற்சியாக இந்த படைப்பு.

இந்தியாவில் மிகவும் தெரிந்த கண்ணுக்கு தெரிந்த ஆனால் யாரும் அலட்டிக்கொள்ளாத மூலப்பொருள் லஞ்சம் என்ற சொல்.

ஊழலின் காரணங்கள் எது? லஞ்சத்தை எப்படி பிரிக்கலாம்?

லஞ்சம் என்பது அரசு இயந்திரம் சரியாக இயங்காத காரணத்தால் தனி மனிதனை மற்றும் மொத்த சமூகத்தை பாதிக்கும் ஒன்று.இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள்  சாதாரண மக்களே.

ஊழல் எப்படி ஏற்படுகின்றது?

அரசு அமைப்பில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களுக்காக பதவியை உபயோகிப்பது

நிறுவனங்கள் விலை,டெண்டர் போன்றவைகளை நிர்ணயிக்க கையூட்டு தருவது
வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக போலீசுக்கு பணம் தருவது மட்டும் கேட்பது, விமான நிலையத்தில் சுங்கவரி அதிகாரிகள் கையூட்டு கேட்பது போன்றவை.அரசு நிறுவனங்களில் தனிமனிதனுக்கு அரசியல் சட்டப்படி சேரவேண்டிய உரிமைகள்,தேவைகளை பூர்த்தி செய்ய கையூட்டு வாங்குவது.

அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவதற்காக இலவசங்களாக உணவு,பயண செலவு,பணம்,சாராயம் என அள்ளி தருவது. 
இவைகள் நிகழ்வதற்கு காரணங்கள்.

அரசு கட்டமைப்பின் செயல்களில் வெளிப்படையான ஒளிவு மறைவு இன்மை (Tranaparency)

ஒரு செயலின் நன்மை,தீமைகளுக்கான பொறுப்பு (Accountability)

(உதாரணமாக திட்டங்களை அரசு  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தலையைக் குடைந்து செயல்பட்டால் தலிவர்கள் ரிப்பன் வெட்டி பெயரை தட்டிக்கொண்டு போவதும் அதோடு கூட நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அதே அரசு அதிகாரிகள் தூண்டுகோலாக அமைவதும் )

சமுதாயத்தின் ஊழலின் வகைகள்

லஞ்சம் (bribe) - அரசு ஊழியருக்கு தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் தருவது.

வன்முறை (Nepotisim) - கட்டை பஞ்சாயத்து வில்லன்கள் மூலம் பணம் கொடுத்து அடியாள் மூலம் ஏற்படும் கொலைக்குற்றங்கள்.

சார்பு நிலைகள்(Favoritism)  - கட்சி,நண்பர்கள்,சொந்தக்காரர்கள்,தெரிந்தவர்கள் என பக்கசார்பாக செயல்படுவது.

ஊழல் (Curruption) - அரசாங்க கட்டமைப்புக்களை பல்வேறு ஆவணப்படுத்தல் குளறுபடிகள் மூலம் ஏமாற்றுவது

திருட்டு  (Fraud)- அரசாங்க பணம் மற்றும் சொத்துக்களை திருடுவது

அரசு அலுவலகங்களின் ஊழல் (Administrative curruption) - அரசாங்க கொள்கைகள் மற்றும் சட்டங்களை திரிப்பதும் மாற்றுவதும்.உதாரணமாக ஒரு டெண்டர் அல்லது அரசு ஆவணத்தில் தகுதியில்லாதவர்கள் பெயரை சேர்ப்பதும் சட்டத்திற்கு புறம்பாக கையெழுத்திடுவதும்.

அரசியல் கட்சிகளின் ஊழல் (Political curruption) -  சட்டம்,நீதி,ஒழுங்கு மற்றும் கொள்கைகளை (ஸ்விஸ் வங்கி கணக்கில் பணம் சேர்க்க) மாற்றியமைப்பதும் தமக்கு தேவையானவர்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும்.

ஊழலின் விளைவுகள்

நீங்கள் நேரடியாக ஊழலில் ஈடுபடாவிட்டாலும்  ஊழல் உங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது.முதலாவதாக ஊழல் உங்கள் வாழ்க்கை தரத்தை குறைக்கிறது காரணம் ஊழல் கட்டமைப்பில் வணிகம் செய்வதற்கான சூழலையும் பொருளாதார நம்பிக்கையையும் குறைக்கிறது

ஊழல் இல்லாத அல்லது குறைந்த நாடுகளை விட ஒரு தனிமனிதனின் சராசரி வருமானம் மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது.

இதன் காரணமாக ஒரு அரசு ஊழியருக்கான மாத வருமானம் அரசாங்கத்தால் தருவது குறைவதோடு அரசின் வாங்கும் திறனும் குறைகிறது.அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்கீடு செய்யும் திட்டங்கள் குறைகின்றன.

இதன் விளைவு பள்ளி,மருத்துவம்,நல்ல சாலைகள்,கழிவுகளை அகற்றும் முனிசிபல் திட்டங்கள்,காவல்துறைகள் போன்ற முக்கியமான தேவைகள் ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைந்து காணப்படும்.

இதனோடு தனிமனித குணநலன்களின் கூட சமுதாயத்தினாலேயே கட்டமைக்கப்படுகின்றன.தனிமனித குணநலன்கள் நேர் அல்லது எதிராக மாறுவதைப் பொருத்தே ஊழலின் அளவு குறைவதும் வளர்வதும்

மேலும் குழந்தைகள் கருத்தரிப்பில் அல்லது பிறந்தவுடன் இறப்பு மற்றும் படித்தவர்களின் விகிதாச்சாரம் போன்ற பக்கவிளைவுகளை உருவாக்கும்

இதோடு கூட ஊழல் பணம் வைத்திருப்போர் மற்றும் அவரோடு சார்ந்திருப்பவர்களை சட்டத்தை வளைக்கவும் அரசியல் சட்டங்கள் அவர்களுக்கு ஏதுவானதாகவும் இருக்க உதவி செய்யும்.

விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காத அளவுக்கு ஊழலின் ஆக்கிரமிப்பு நமக்கு கண்ணுக்கு தெரியாமலே செயல்படும்.

ஊழல் சமூக சூழலை பாதிப்பதோடு அரசாங்கம் சரியாக செயல்படாத நிலைக்கு தள்ளப்படுவதால் அரசு மீதான நம்பிக்கையை குறைக்கும்.

டிஸ்கி: மேலே சொன்ன உலகவங்கி  தியரிகள் அத்தனையும் ஊழல் கொண்ட எந்த ஒரு நாட்டுக்கும் பொருந்தும்.இந்தியா இதில் அடக்கமா?ஜெய் ஹோ!



படங்கள் உதவி: உலக வங்கி மற்றும் கூகிளண்ணன்

Tuesday, November 16, 2010

ஸ்பெக்ட்ரம் கோபிகிருஷ்ணன்

ஸ்பெக்ட்ரம் குறித்த தகவல்கள்,கருத்து பரிமாற்றங்கள் என பிரபல பத்திரிகைகள் மற்றும் பதிவுகள் அடக்கி வாசிக்க போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்த என்.ராம் கூட இலங்கையுடன் சோரம் போய்விட ஸ்பெக்ட்ரம் குறித்த செய்தியையும் கூட இருட்டடிப்பு செய்து இங்கே 
(The article you are looking for is no longer available in this website. ) என்று சொல்லி விடும் அளவுக்கு சுயபரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இந்து பத்திரிகை.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் புலன்விசாரணையின் பரிசை டெய்லி பயனீர் தளம் தட்டிக்கொண்டு போகிறது.டெய்லி பயனீர் தளத்தின் கொச்சின் பிரிவின் நின்று போன பயனிரிலிருந்து டெல்லிக்கு வேலை தேடிப்போய் உதவித் தொகை வருமானத்துடன் தனது பத்திரிகை நிருபர் தொழிலை துவங்கிய கோபிகிருஷ்ணனின் அயராத உழைப்பால் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்திருக்கிறது.கோபிகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
முழுப்பூசனிக்காயை தலித் என்ற சாயம் பூசி திசை திருப்பும் கருணாநிதி,வீரமணிகளை நினைத்தால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது.கூடவே ஜெயலலிதா,சுப்ரமணி சாமிகளின் அரசியல் பித்தலாட்டங்கள் ஸ்பெக்ட்ரம் குறித்த அவர்களது குரல்கள் அவர்களின் சொற்களுக்கான நம்பிக்கைத்தன்மையை சந்தேகிக்க வைக்கவும் நீ யோக்கியமா என்று எதிர்க்கேள்வியை கேட்டு வெட்கபட வைக்கவும் செய்கின்றன..தமிழக மக்களுக்கு ஸ்பெக்ட்ரம் குறித்த செய்திகள் போய்ச் சேர்வதில் அனைத்து தமிழக ஊடகங்களும் மலடாகிப் போய் இருக்கும் நிலையில் டெய்லி பயனீர் இணையம் மற்றும் பதிவர்களின் பங்களிப்பே மாற்றத்துக்கான நம்பிக்கையையும் உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும்.

ஸ்பெக்ட்ரத்தின் அணுவைக் கண்டுபிடிக்க இயலாதவாறு பெரும் வலைப்பின்னலை ராஜா பின்னியிருக்கிறார்.ஆனால் இது ஒரு தனிமனிதனால் சாத்தியமான ஒன்றல்ல என்பதோடு ஊழலின் நலன்கள் பெரும் நெட்வொர்க் வலையத்தில் கண்டு பிடிக்க இயலாத ஒன்றாக அனுமான் வாலாக நீளும்.மன்னர்கள் தொட்டு,அரேபிய படையெடுப்பு,ஐரோப்பியர் வருகை,சோசியலிஷ முக்காடு,ஜனநாயகமென இந்தியாவின் வளம் சுரண்டப்படுவது மட்டும் தொடர்கதையாக தொடர்கிறது.போபர்ஷ் துவங்கி ஸ்பெக்ட்ரம் வரை காங்கிரஸ் ஆட்சியில் மட்டும் ஊழல் தொடர்வதன் காரணமென்ன?Mr.Clean.மன்மோகனுக்கு முன்னாடியே ஒரு கொட்டு வாங்கியும் என்ன சொல்லி பித்தம் தெளிவிப்பதென தெரியவில்லை.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

பதிவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழ்கண்ட சுட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

1. இங்கே

2. இங்கே

3, இங்கே

4. இங்கே

5. இங்கே

6. இங்கே

Thursday, November 11, 2010

ம்ம்ம்

இதென்ன

விக்கலா
கிக்கலா
முக்கலா
முனகலா
மொரப்பா
இனிப்பா
காரமா
தாகமா
பயமா
வீரமா
கோபமா
காதலா
வடிவேலா
நசரேயா
யாதொன்றுமறியேன் பராபரமே

Wednesday, October 27, 2010

தேரி பின்லாடன்

சிரிக்கணுமா?உருது, இந்தி தெரியுமா?தெரிந்தால் தேரி பின்லாடன் பார்க்கிற வழியைப் பாருங்க.தெரியலையா அல்லது கொஞ்சமா தெரிஞ்சுக்க விருப்பமா? அப்ப இடுகையை ஒரு மேலோட்டம் பார்த்து விட்டு படம் பார்க்கிற வழியைப் பாருங்க.இது பலநாடுகளில் முக்கியமாக வளைகுடா,பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட படம்.தடை செய்ற அளவுக்கு என்ன இருக்குன்னு பார்க்கலாமேன்னு மூளை திசுக்களை கிள்ளுதா?அப்ப தேரி பின்லாடன் பார்த்துடுங்க.

அலி ஹசன்-.எப்படியாவது அமெரிக்கா போய் செய்தியாளராகி விட வேண்டும் என்ற கனவு கண்ணன்.விமான பயணத்தில் செய்யும் பக்ரா சில்மிசங்களால் பாகிஸ்தானிய தீவிரவாதி என்று வண்டியை விட்டு இறக்கி விட்டு விடுகிறார்கள்.இதற்கிடையே டங்கா தொலைக்காட்சிக்கு வீடியோ நணபருடன் கராச்சி சார்ந்த செய்திகளை சேகரிக்கும் பணியில் முதலமைச்சர் நிகழ்ச்சியை சேகரிக்க போக டங்கா தொலைக்காட்சி பெயரையே கேள்விப்படாத காரணத்தால் காவலர் உள்ளே விட மறுக்க, முதலமைச்சர் நிகழ்ச்சியை எப்படியாவது வீடியோ எடுத்து விடவேண்டுமென்று அறையின் மேல்கூறை வழியாக முதலமைச்சரின் மொட்டைத்தலையை படம் பிடித்து டங்கா நிறுவனரிடம் வாங்கி கட்டிக்கொள்கிறார்.

ஆறு முறை முயற்சி செய்தும் ஏழாவது முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அமெரிக்க கனவு நிறைவேறாமல் நம்ம ஊர் வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜண்ட் ஸ்டைலில் ஒரு நிறுவனத்தை அணுக அவரோ 250000 ரூபாய் கொண்டு வருமாறு கூறுகிறார்.அவ்வளவு பணம் அதிகம் என அலிஹசன் கூற பணம் கட்டாத இன்னொரு குறுக்கு வழியும் இருக்கிறதென்று AK47 சுடத்தெரியுமா என்று பின்பக்கம் உட்கார்ந்திருக்கும் 2 முஜய்தீன்,உலக வரைபடம் காட்டி முதலில் ஈரானுக்கு உன்னை அனுப்புவோம்.பின் அங்கிருந்து ஈராக்கிற்கு போனால் அமெரிக்கர்கள் உன்னை எந்த செலவுமில்லாமல் அமெரிக்கா கொண்டுபோய் விடுவார்கள் என்கிறார்.அலிஹசன் அலறியடித்து எப்படியாவது பணம் கொண்டு வருவதாக சொல்லி விட்டு கோழிப்பந்தயம் ஒன்றை வீடியோ நண்பருடன் சேகரிக்கிறார். 


கோழிகளை  சண்டைக்கு மோதவிட்டுத்தான் பார்த்திருக்கிறேன்.பதிவுலகம் வந்த காலத்தில் கூட வெட்டிப்பயல் கல்லூரிக்கால கோழி பதிவுளை போட்டதைப் படித்திருக்கிறேன்.முதல் முறையாக வாசகர் பரிந்துரை மாதிரி எந்தக் கோழி நல்லா கொக்கரக்கோன்னு மைக்கில கூவுதுன்னு தலைக்கு முண்டாசு கட்டின கராச்சி நாட்டமைகாரன் மார்க் போடுவதை தேரே பின்லேடன் இந்திப்படத்தில் முதல் முறையாகப் பார்த்தேன்.
எந்தக் கோழி மைக்கில் கொக்கரக்கோ நல்லா கூவுதுங்கிற கோழிகளின் நடிப்பு:)க்கு பறவையினங்களுக்கான ஆஸ்கார் பரிசு என புதிதாக ஒன்று ஆரம்பிக்கலாம்.

போட்டிக்கான முதல் கோழியை அறிவிக்க கோழி மைக்கில் கோக்க்..கோக் என கூவ நாட்டாமை 5 மார்க் தருகிறார்.அடுத்து இரண்டாவது கோழி கெட்டவார்த்தை ஒன்றை சொல்லி 7 மார்க் வாங்கியதும் அடுத்து சென்ற ஆண்டின் பதக்கம் பெற்ற கோழி நிலம் நோகாப் பெண்ணாக மெல்ல அடி எடுத்து வைத்து கோக் என்ற ஒரே ஒரு சன்னக்குரலில் 1 மார்க் வாங்கி தோல்வியுறுகிறது.அடுத்து வீர நடை போட்டு வந்து ஹொக்க்ரக்ஹோ என்று கூவி பரிசை தட்டிச்செல்கிறது நூரா என்ற பின்லேடன் சாயல் கோழிப்பிரியரின் கோழி.

அலிஹசன் வீடியோவை கணினியில் எடிட் செய்ய இணைய தேடலில் பின்லேடன் முகச்சாயலோடு நூரா இருப்பது கண்டு தனது புதிய திட்டத்தை நண்பனிடம் கூறுகிறார்.அமெரிக்காவோ பின்லேடனை டோராபோராவில் தேடுகிறது.நூரா பின்லேடனோ கிராமத்தில் கோழி வளர்த்துக்கொண்டிருக்கிறார்.கோழிகள் மேல் உயிராக இருக்கும் பின்லாடன் உருவத்தில் உள்ள நூராவை  அவருக்குத் தெரியாமலே பின்லேடன் மாதிரி பேச பயிற்சி தந்து வீடியோ படக்காட்சி எடுத்து டோங்கா நிறுவனர் மூலமாக அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்க பின்லேடன் உயிரொடு இருப்பதாக அமெரிக்கா நூராவை தேடுவதென கதை நகர்கிறது.

எத்தனையோ அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பின்லேடன்,ஜார்ஜ் புஷ் கடி ஜோக்குகள் சொல்லியுள்ளன.ஆனால் இருவரையும் காலை வாரி விடும்படியான சிரிப்பு பரிசை தேரே பின்லாடன் இந்திப்படம் தட்டிக்கொண்டு போய்விடும் என நினைக்கிறேன்.

இதுவரை அறிமுகமாகாத கதாபாத்திர புதுமுகங்கள்,அமெரிக்க அசல் உச்சரிப்புக்கள்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் இருக்கிற மாதிரி லாரி,அப்படியே பாகிஸ்தானின் கராச்சி நகர்ப்புறத்தை பிரதிபலிக்கும் செட்டிங்ஸ்,ஆடைகள்,சில AK47 துப்பாக்கிகள்,நல்ல நகைச்சுவை ஸ்கிரிப்ட் கலந்து தேரி பின்லாடன் அமெரிக்காவையும்,பாகிஸ்தானையும் நையாண்டி செய்கிறது.

இந்தி கட்டாயம் படிக்கணும் என்ற அரசியல் திணிப்பினால் செய்ய இயலாத ஒரு சாதனையை இந்தி சினிமாக்கள் செய்கின்றன.அதோடு இந்தியா பாகிஸ்தான் என்று பிரிந்து நிற்கும் மக்களை இணைக்கும் பாலமாக இந்தி படங்கள் சிரிக்க வைத்து இருகோட்டு மனிதர்களை இணைக்கும் சாத்தியமும் ஒருவரை ஒருவர் நெருங்கும் புரிந்துணர்வை தரலாம்.பதிலாக மனிதர்களின் மனோபாவங்களைப் பொறுத்து. தேரி பின்லேடன் சிரிப்பையும்,கோபத்தையும் உருவாக்கும்.

டிஸ்கி.நூரா பின்லேடன் கோழியுடன் போஸ் தரும் படத்தை இணையத்தில் தேடி கிடைக்காததால் கிடைத்தவை இடுகையில்.

Thursday, October 21, 2010

பாவம்!இந்தியாவின் ரோகிந்தன் மிசிரியும் கோவிந்தன் மேஸ்திரியும்.

யாராவது பதிவர்கள் சொல்வார்களா என்று எதிர்பார்த்து யாரும் சொல்லாத காரணத்தால் என்னுடைய தனி ஆவர்த்தனம் இந்த் இடுகை.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மனிதன் பலருக்கு காட்பாதர் மாதிரி.இன்னும் சிலருக்கு சமூகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிப்பவர்கள்.அந்த வரிசையில் எப்பொழுதும் விவாதத்திற்குரிய வில்லங்கமான ஒரு மனிதர் பால் தாக்கரே.கார்ட்டூனிஸ்ட்டாக இருந்து பின் காட்பாதராகும் வரை மகாராஷ்டிரம் சார்ந்தும்,இந்தியா சார்ந்தும் செய்யும் அடாவடி ஜனநாயக அத்துமீறல்கள் அதீதமானவை.மும்பையின் பாதாள உலக தாதாக்கள்,அரசியல் பாதுகாப்புடன் அப்பாவி மக்கள் சார்ந்த குரலும் சேர்ந்த மொத்த கலவை பால் தாக்கரே.

இடுகையைப் படிப்பவர்களில் சிலருக்கு வரதா பாயை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரதராஜன் என்ற வர்தா பாயின் நிஜ வாழ்க்கையையும்,  மார்லன் பிராண்டோ நடித்த காட்பாதரையும் சேர்த்து அரைத்த கலவையே நாயகன் திரைப்படம் என விசயம் தெரிந்தவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.வரதா பாயின் காலத்தை 70பதுகளின் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம் என்று ஒப்பிடுவது சரியாக இருக்கும்.ஏனென்றால் பின்னால் சொல்ல வரும் செய்திக்கு முன்னுரையாகவும் அந்தக்கால கட்ட பால் தாக்ரேயின் அரசியல் தடாலடிக்கும் துணைபுரிவதாக இருக்கும்.

70பதுகளில் பம்பாயில் வாழ்க்கை தேடி ஓடிய ஆந்திர,கர்நாடகா, கேரள,மெட்ராஸ்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ள மொத்த அடையாளம் மதராஸி(சி வேணும்ங்கிறவங்க சி போட்டு படிக்கவும்:)).பம்பாயின் நலன்களை மதராஸிகள் அபகரித்துக்கொள்கிறார்களென்றும்,தாராவியின் குடிசைகளுக்கு இவர்களே காரணமென்றும் மதராஸிகள் பம்பாயை விட்டு வெளியேற வேண்டும் என்ற கலவரத்தை மகாராஷ்ட்ரிய மக்கள் மூலமாக தீக்குச்சி பத்த வைத்தார்.இதில் தென் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைச் சார்ந்தவர்கள்,முக்கியமாக கேரள சேட்டன்களும் கூட வர்தா பாயுடன் சேர்ந்து திருப்பி அடிக்கும் ஆயுதத்தை எடுத்திருக்க முடியும்.ஆனால் வர்தா பாய் தாராவியின் தாதா என்பதாலும் கணேஷ் சதுர்த்திக்கு பணம் அள்லி விடுபவராகவும் இருந்ததுடன் நாயகன் திரைப்படம் காரணமாக பிரபலம் என நினைக்கிறேன்.கலவரங்கள் அடங்கிப் போய் பம்பாய் தன்னை "நான் காஸ்மோபோலிடனடா" என்று சொல்லிக்கொண்டது.

ஆனால் பால் தாக்கரேக்கு  மராட்டியர்களின் பாதுகாவலன் என்ற பிம்பம் வந்து விட்டது.இதற்கும் அடுத்த பத்தாண்டு காலத்தில் பம்பாயின் இந்து,முஸ்லீம் கலவரங்களின் முக்கிய களவானியாக பதவி உயர்வும் அதனைத் தொடர்ந்த தடாலடி அறிக்கைகளையெல்லாம் தொகுத்தால் பால் தாக்கரே மீதான எதிர்வினைகளே மிஞ்சும்.பால் தாக்கரேயின் சிவசேனா குடும்ப அரசியல் இரண்டாகப் பிரிந்த பின்னர், பீகாரிகளின் ஆதிக்கம் மஹாராஷ்ட்டிராவில் அதிகம்,அமிதாப் பச்சன் மீது நொட்டைச் சொல்,சச்சினிடம் வம்பு,நீதிமன்ற வாரண்டு வந்தாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்ற திமிர்த்தனம்  என வில்லங்கத்தனங்கள் சொல்லி முடியாது.இந்த லட்சணத்துல நம்ம ரஜனி அவர்கள் பால் தாக்கரே எனக்கு கடவுள் என்று சொல்வது அபத்தமாயில்லை ரஜனி ரசிகர்களே!

இதையெல்லாம் விடுங்க பாஸ் மற்றும் பாஸிகளே!(பெண்களும் படிக்கிறாங்க இல்ல அதனால்தான்:)) இப்ப இடுகையின் தலைப்பு கதைக்கு வருவோம்.

பள்ளியில்,கல்லூரியில் படிச்சிருக்கிறோம்.வாத்யார்,லெக்சரர் சொல்வதை கேட்டும்,கேட்காமலும் தேர்வு நேரத்தில் மனப்பாடம் செஞ்சும்,பிட் அடிச்சும் எப்படியோ தேத்தி சிலசமயம் தோத்தும் விடுகிறோம்.ஆண்டனி கிளியோ பாட்ரா,ஜூலியஸ் சீஸர்,ஷேக்ஸ்பியர்,மில்டன்,உண்ணும் உணவின் ஹார்போஹைட்ரேட்,புரோட்டின்,மால்க்யூல்,என்சைம்ஸ்,திருக்குறளின் முப்பாலில் சில, அகநானூறு, புறநானூறு, கலிங்கத்துப் பரணி, கணக்கு வாத்தியார்கிட்ட கையை நீட்டி வாங்கும் தப்புக்கணக்கு, அசோக ஸ்தூபியை நிறுவியது யார் இப்படி ஏதாவது கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு வருட லீவை அமர்க்களப்படுத்திட்டு அப்புறம் நமது கண்கள் வென்றவர்கள் அட்டவணையில் பெயரும்,எண்ணும் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கப் போய் விடுவோம்.ஏனென்றால் இந்தியாவில் கற்கும் பெரும்பாலான மாணவர்கள் ஜனநாயகத்தின் அசடுகள்.நாம் ஐம்பெருங்காப்பியங்களில் கூட எங்காவது குறை காண்பதுமில்லை.வேண்டுமென்றால் கம்பனைப் பற்றி பட்டிமன்றம் நிகழ்த்துவோம்.ஏனென்றால் காப்பியங்கள் நமக்கு இலக்கியம்.

ஆனால் நீங்கள் பால் தாக்கரேவின் 20 வயது வம்ச வாரிசாக இருந்தால் உஃப் என்று ஊதினால் கீழே விழும் எலும்பாண்டியாக இருந்தாலும் வீர மராட்டியனின் பேரப்பிள்ளை.பத்து வருடங்களுக்கும் மேலாக Such a long journey என்ற புலிட்சர் பரிசின் B.A ஆங்கில இலக்கியத்தின் பாடப் பகுதியாக இருந்தாலும் நொள்ளைகள் கண்டுபிடிக்க உரிமை உண்டு.அதோடு மட்டுமில்லாமல் இந்தப் பாடத்தைப் படித்து படிக்கிற புள்ளக கெட்டுப்போகும்,மராட்டியர்களை இழிவுபடுத்தும் பகுதிகள் இருக்கு என்று சொல்லி ஆதி(க்க)த்ய தாக்கரே தாத்தா பால்தாக்கரேகிட்ட வத்தி வைக்க முடியும்.தாத்தா பத்து வருடம் பாடத்திட்டத்தில் இருக்கும் ஒரு நூலை 24 மணி நேரங்கள் ஏன் எதற்கென்று கேள்வி கேட்க இயலாமல் தடை செய்ய இயலும்.இந்த தடைக்கு மராட்டிய வாள் எடுத்து அப்பன், தாத்தன், பேரன் என ஒரே மேடையில் வாரிசு விழா எடுக்க இயலும்.மத்தியிலும் வாரிசு அரசியல்,மாநிலங்களிலும் பாஸ் இசம் பூரிக்கும் அரசியல்.வாழ்க!வாழ்க எத்தனை நாட்களாத்தான் சொல்வது அதனால் வளர்க இன்னும் வாரிசு இந்திய ஜனநாயகம்!

ரோகிந்தன் மிசிரியின் Such a long journey ( Pulitzer prize winner) புத்தகம் கிடைப்பவர்கள் வாங்கிப் படிக்கவும்.தாக்கரேக்களால் முடிந்த ஒரே நல்ல காரியம் இது.

பொஸ்தகம் படிக்க நேரமில்லப்பான்னு சொல்றவங்க அதே பெயரில் வந்த திரைப்படம் கிடைச்சா பார்த்துட்டு ஜனநாயக தாதா தாக்கரேக்களுக்கு உர்ர் என்ற முறைப்பு விடவும்.

Wednesday, October 20, 2010

வடிவேலுவும் எந்திரன் மகன் சிந்திரனும்

சரக்கொன்னும் இல்லியான்னு நசரேயன் கேட்டதால இது நசரேயன் ஸ்பெஷல்:)இப்ப காட்சிகள் ம்யூசிக்குடன் ஸ்டார்ட்..
எல்லா பய புள்ளகளும் போகுதேன்னு எந்திரனின் பாகங்களை கழட்டி வைத்த ம்யூசத்துக்கு ஒரு நாள் வடிவேல் போகிறார்.ஆகா!எந்திரனத்தான் கருணாசும்,சந்தானமும் ஆட்டையப் போட்டுட்டாங்க எந்திரன் 2ல எப்படியாவது கலக்கிடணுமுன்னு அங்குமிங்கும் இயக்குநர் ஷங்கரைத் தேடி நோட்டம் விடுகிறார்.
 
அப்ப ச்சிட்டி மாதிரி ஒரு பையன் ஸ்கூலுக்குப் போறதப்  பார்த்துட்டு பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்குன்னு வடிவேல் பையன்கிட்ட் மெதுவாப் பேச்சைத் துவக்குகிறார்!
 
வடிவேல்: யாருப்பா நீ?உன் பேரென்ன?
 
பையன்: என் பேர் சிந்திரன்.எந்திரனின் மகன் 4 மொக்கரா பைட் 8 ஜிகிட்டா பைட்.நான் ச்சிட்டியப்பா மாதிரி சண்டையல்லாம் போட மாட்டேன்.காமெடி மட்டும்தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க

வடிவேல்: எனக்குப் போட்டியா கிளம்பிடங்காய கிளம்பிடங்கா.
 
சிந்திரன்:  என்னாதிது இப்பவே கண்ண கட்டுதா?இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு

வடிவேல்:ஓபநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா
 
சிந்திரன்: ம்க்கும்!உனக்கும்தான்  பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மென்ட் வீக்கு!ஆனா நாங்க ஏதாவது கோட்டோமா?
 
வடிவேல்: தம்பி!எதையுமே பிளான் பண்ணாம பண்ணபடாது.ஆமா
why blood same no blood?

சிந்திரன் எங்கப்பன்கிட்ட கேட்க வேண்டிய கேள்விய என்கிட்ட கேட்டா?சரி
 இந்தப் பக்கம் 2ஈ வருமா?

வடிவேல்:வரும் ஆனா வராது.ஆமா!இத்தனை ஆளு இருக்கறப்ப ஏன் என்கிட்ட வந்து கேக்குற ?என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே

சிந்திரன்:அண்ணே!ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு நீங்கதானே சொன்னீங்க

வடிவேல்(மனதுக்குள்)என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா என்று வடிவேல் மகிழ

வழக்கம் போல்  என்ன நடந்திருக்கும்?


இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்

வேணா வலிக்குது அழுதுடுவேன்

மாப்பு வெச்சிட்டான்யா ஆப்பு....

ஷங்கர் சார் ! சீக்கிரம் கொஞ்சம் ஓடியாங்க. நீங்க எனக்கு சான்ஸ் கொடுக்காட்டியும் பரவாயில்லை.என்னை இந்த ஜந்திரன்ங்க கிட்டருந்து காப்பாத்துங்கஅப்படியே இந்த மொண்ணையா மொக்கை போடுறவன்கிட்டயிருந்து நசரேயனையும் காப்பாத்துங்க....

படங்கள் அசல்: தொஷிபா கணினி விளம்பரம்.

Friday, October 15, 2010

ரஜனி VS கே.ஆர்.பி செந்தில்

Dear Senthil !

 நண்பர்களின் இடுகைக்கு பின்னூட்டமிடும் போது மனதின் ஓட்டத்தில் தட்டச்சுவதால் கூகிளண்ண்ன் நீ வரம்பு மீறுகிறாய் என்று பல சமயம் எச்சரிப்பதால் பின்னூட்டமாய் போட வேண்டியதை இடுகையாக்குகிறேன்.

செந்தில்!நாம் பொது நலன்களை ஒரே பார்வையில் பார்ப்பதால் எனது பின்னூட்ட இடுகையான இந்த பதிவுக்கு உங்களின் தலைப்பே முக்கியம் என்பதால் முதலில் பின்னூட்ட இடுகையிட்டு விட்டு அப்புறம்  உங்களின் இடுகையை காணப் போகிறேன்.

கடந்த சில தினங்களுக்கு எனது இடுகைக்கு பிறகு தமிழகத்தில் எழும் குரல்களை  கூர்மையாக கவனித்து வருகிறேன்.முதலாவதாக எழுந்த குரல் வை.கோ.அடுத்து திருமா வளவன்.அடுத்து நெடுமாறன் அவர்கள்.இவர்களின் பொதுவான எதிர்ப்புக் குரல் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு திசையிலிருந்தும் குரல் எழுப்புவதால் அதன் தாக்கம் மக்களைப் போய்ச் சேர்வதிலலையென நினைக்கிறேன்.அதன் பலன் தி.மு.க VS அ.தி.மு.க என்ற பழைய வட்டத்துக்குள்ளெயே  தமிழகம் வலம் வருவது தவிர்க்க இயலாததாகிறது.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு சினிமாவின் ஆதிக்கம் அரசியலில் நுழைவது நல்லதல்ல என்றே நினைத்து வந்திருக்கிறேன்.ஆனால் நினைப்புக்கும் அப்பால் ரசிகர்கள் என்ற வட்டமும் அதனையொட்டிய யதார்த்தம் என்ற நிலையையும் யோசனை செய்தால்  எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசமும் அதனைத் தொடர்ந்த அரசியல் நிலைகளும் யோசிக்க வைக்கிறது.எனவே இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட இப்படியும் நிகழும் யதார்த்தங்களை சிந்திக்கும் போது மாற்று அரசியலுக்கு ரஜனி என்ற காந்தம் மக்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுகிறது.அதற்கான சூழல்கள் முன்பொரு காலத்தில் மூப்பனார் காலத்தில் இருந்தது.ஆனால் அதனை ரஜனிகாந்த் தவற விட்டு விட்டார் எனலாம்.இருந்தாலும் ரஜனி எனும் காந்தம் இன்னும் மக்களை வசீகரிக்கிறது.இவரால் தமிழகத்துக்கு மாற்றம் வராதா என்று பலரும் நம்பும் தருணம் இருக்கிறது அரசியல் நுழைவின் விளைவுகள் எப்படியிருந்த போதிலும். 

எனக்கு முன்பு மக்கள் கலை இலக்கிய கழகமான வினவு தள குழு பற்றி எதுவும் தெரியாது.சமூக உணர்வுள்ள புதிய இயக்கங்கள் சமூகத்தில் வலம் வருவதை வரவேற்கிறேன்.ஆனால் இவர்களின் முரண்நகை நீங்க ஆட்டத்தில் சீக்கிரம் வெளியேறுகிறீர்கள் என்றே உங்களின் பின்னூட்ட்ங்களும் ஏனைய நண்பர்களின் பதில்களும் பறைசாற்றுகின்றன.

முன்பு வானம்பாடிகள் பாலாவின் பின்னூட்டமொன்றிற்கு(இடுகை நினைவில் இல்லை) சொன்ன பின்னூட்ட விடையை இப்பொழுது அவிழ்க்கப் போகிறேன்.ரஜனிக்கு கருணாநிதியென்ற மரியாதை நிமித்தமோ அல்லது அவரது ஆட்சி காலத்தில் அரசியலுக்குள் நுழையக்கூடாது என்ற செண்டிமெண்ட் காரணம் கூட  இருக்ககூடும்.அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதற்கும் மேல் மெட்டீரியலிசத்துக்கும் அப்பால் ஆன்மீக வாழ்க்கை. பிடித்ததாகக் கூட இருக்க கூடும்.இப்படியொரு குழப்பமான மனநிலை காரணமாக எப்ப வருவேன் என எனக்கே தெரியாது என்ற  திரைப்பட வசனங்களும் கூட குழப்பமான சூழலை உருவாக்குகிறது.எது எப்படியிருந்த போதிலும் தமிழகத்தின் மாற்று அரசியலுக்கு சரியோ தவறோ ரஜனியை விட்டால் வேறு வழியில்லையெனக் கருதுகிறேன்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் அதன் கடமையை செய்யவே செய்யும்.அதற்கு பின்னாலான அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க ஒரு வலிவான மனிதனும் அதன் பின் ஒரு அமைப்பும் தேவை.அதற்கான வல்லமை ரஜனிக்கு இருக்கிறது.தேர்ந்தெடுப்பதும் ஆன்மீகம் மட்டுமே என்ற சுய அனுபவங்களைப் பெறுவதும் ரஜனியின் கரங்களில்!


டிஸ்கி! இது இடுகையல்ல!பின்னூட்டம்.இவ்ளோ பெரிய பின்னூட்டத்தை கூகிளண்ணன் அனுமதிப்பார் என நீங்கள் நினைக்கிறீங்களா:)

Thursday, October 14, 2010

புதிய தொழில் நுட்ப மாற்றங்கள் மற்றும் மனித உறவுகள்

முன்பு Beyond 2000 என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்வு ஒன்று காணும் போது  2000 வருடத்திற்கு பிறகு என்னவெல்லாம் மாற்றங்கள் வரும் என்று சொல்லும்போது நிகழ்ச்சியாளர் ரீல் விடுகிறாரோ என்று சந்தேகம் வரும்.ஆனால் 2000க்குப் பிறகான கணினி தொழில் நுட்ப மாற்றங்களைக் காணும் போது  பிரமிக்க வைக்கின்றன.இன்னும் வரும் காலங்களில் எதுவெல்லாமோ நிகழும் என்ற கற்பனைக்கு அளவேயில்லை.முதல் தலைமுறை,இரண்டாம் தலைமுறை போய் இப்பொழுது 3G ,4G என்ற மூன்றாம்,நான்காம் தலைமுறைக்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது.

                                                                         i Phone 4
                                                                Samsung Galaxy S

இதை சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முன்பு மேஜையில் இடத்தைக் காத்துக் கொண்டிருந்த மேசை மேல் கணினிப் பெட்டிகள் போய் மடிக்கணினி(Laptop) என்றும் புத்தக கணினி என்றும்(Notebook) வந்தவுடன் அட!இது நல்லாயிருக்குதே என்று மனம் குதுகலித்தது.நசரேயன் எல்லோருக்கும் பின்னூட்டம் போடுவது மாதிரி ம்ம்ம் என்றோ  அல்லது கடின தட்டுக்கு (Hard Disk) பிடித்த உர்ர்ரென்ற சத்தமோ வந்தாலும் கூட தட்டச்சும் வசதியால் இதனைப்  பெரிது படுத்தாமல் நாம் இருந்தோம்.ஆனால் எந்திரன் ரஜனி மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய மனிதா பாட்டுப்பாடாவிட்டால் தூக்கம் வராது.அப்படி தொஷிபா மடிக்கணினிக்காரர்கள் கண்டு பிடித்த புதிய 3G கணினி லிப்ரட்டோ மாடல் 7 இன்ஞ் குள்ளன்.

                                                    Toshiba Notebook Libretto

நாம் வழக்கமாய் தட்டச்சும் கீ போர்டை காணோம்.பதிலாக அங்கேயும் பிலிம் காட்டும் Display.தட்டச்ச வேண்டுமென்றால் virtual Keyboard and Touch Screen மட்டுமே.இப்பொழுது ஐபோன்,சாம்சங்க் கேலக்சி போன்ற கைபேசிகளும் கூட இதே தொழில்நுட்பத்துடன் கடைகளில் கிடைக்கின்றன.சென்னையில் டிராபிக் சிக்னல்களில் காமிரா பொறுத்துவதாக கேள்விப்பட்டேன்.எப்பொழுதோ செய்திருக்க வேண்டியது.பயண ஊர்திகளில் கேமரா பொறுத்துவது ஆண்களின் சில்மிஷங்களையும்,பிக்பாக்கெட் குற்றங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.கேமிரா பொறுத்துவதை விட அதை எப்படி இயங்காமல் செய்வது என்பதில் நமது ஒழுக்கங்கள் பல்லைக்காட்டும் என எண்ணுகிறேன்.

தொழில் நுட்ப வசதிகளால் பதிவுகள் போன்ற கருத்து பரிமாற்றங்கள் நேரடி பலன்கள் எனலாம்.கூடவே பன்முக கருத்துக்களும் ஒரு பொருள் பல பரிமாணங்களை தோற்றுவிப்பதும் மகிழ்ச்சிக்குரியது.புதிய தேடல்கள் ஒரு புறம் ஆரோக்கியமானதென்றாலும் இதற்கான பக்கவிளைவுகளும் நிகழாமல் இல்லை.உதாரணத்திற்கு ஒன்று.முன்பு கணினியைத் தொடாத எகிப்தியன் சொல்லும் நகைச்சுவைகள் சிரிக்க வைக்கும்.குட் மானிங்க் என்பதை மார்னிங் குத் என்பான்.கூட பணி புரியும் ஒருவன் சப்பாத்தி தின்பதை அவனைப் போலவே மோனோஆக்டிங்க் செய்து அவனுக்கு ஸப்பாத்தியென்றே பெயர் வைத்து விட்டான்:).மெல்ல அரபி மொழியில் கணினையைத் தட்டக் கற்றுக்கொண்டு இப்பொழுது பெரும்பாலும் கணினி விளையாட்டில் ஈடுபடுகிறான்.முந்தைய சிரிப்பு போய் விட்டது.
 
இது ஒருபுறமிருக்க வளைகுடாவைப் பொறுத்த வரையில் அரபி பையன்களின் போக்கிரித்தனம் குறைந்த மாதிரி தெரிகிறது.இணையத் தொடர்புகள் ஓரளவுக்கு உலகப் புரிதலை கொண்டு வந்து சேர்த்திருக்கிறதெனவும் நினைக்கிறேன்.அதற்கான கலந்துரையாடல்கள் நிகழ்வதைக் காண்கிறேன். 
 எட்டாம் வகுப்பு,ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பரிட்சையில் வாங்கும் மார்க் 15 போனா போகுதுன்னு 20 மட்டும் உச்சம்.கணக்கில் முட்டை மட்டும் மிச்சம்.ஆனால் கணினி விளையாட்டில் அள்ளும் மார்க் ஆயிரங்கள், பத்தாயிரங்களை காட்டுகின்றன. நேற்று கணினி,தொலைக்காட்சிக்கு குழந்தைகள் மொழியில் கட்டி சொல்லிவிட்டு மேக்ரோனி பேஸ்தா செய்யும் மனைவிக்கு உதவி செய்யப் போனது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் சமைத்துக்கொண்டே  பேசும் உரையாடலுக்கு உறுதுணையாகவும் இருந்தது.

தொழில் நுட்பமும் வேண்டும்.நம்மையும் தொலைத்து விடாதிருக்க வேண்டும்.கூடவே பசியில்லாத,அமைதியான,போரில்லாத சமூகம், உலகம் உருவாகும் வரை தொழில் நுட்ப வளர்ச்சிகளின் வெற்றிக்கு அர்த்தமில்லை.

                                                                 Love Thy People

அதன் காரணம் கொண்டே அவரவர் சார்ந்த சமூகத்தையும்,பொதுவாகவே மக்கள்: வாழ்க்கையை பாதிப்பவர்களையும் குறித்த விமர்சனம் தேவைப்படுகிறது.இல்லையென்றால் பதிவுலகத்துக்கும் விமர்சன முன்ணனி மனிதர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் சண்டையா என்ன?

விட்டவை தொட்டவை பின்னூட்டத்தில்.....

Photo courtesy : Google images.

Monday, October 11, 2010

CWG - கல்மாடி முதல் ராஜபட்சி வரை

இனியொரு தளம் CWG விளையாட்டு நிறைவினை  ராஜபக்சே தலைமையில் செய்தி வந்துள்ளதாக மொட்டையாக இடுகையிட்டதைப் பார்த்து மனம் பகீர் என்றது.இது உண்மைதானா என்ற தேடலில் டெக்கான் ஹெரால்ட் செய்தி அதனை உறுதி செய்கிறது.

விளையாடா விட்டாலும் விளையாட்டின் தின வர்ணனைகளை பதிவில் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் கல்மாடியின் கலாட்டாக்கள் ஒரு நாள் நிகழ்வைக் கூட பார்க்க இயலாமல் ஒப்புக்கு சப்பாணியா எத்தனை தங்கம்,வெள்ளி,பித்தளை என்ற கணக்கில் மட்டும் பார்வையிட்டு விட்டு ஓடிப் போகும் மனநிலையே இருந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ரத்தக் கறைத் துண்டு ராஜபக்சேவுக்கு இறுதி நாள் வரவேற்பு.

Just disgusting!No more to say.

Monday, October 4, 2010

CWG விளையாட்டும் கல்மாடியும் டெல்லி அரசியலும்

காமன்வெல்த் போட்டிகளின் மொத்த குழறுபடிகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.ஒன்று கல்மாடியின் ஊழல் நிர்வாகம்.இரண்டு டெல்லியின் முதலமைச்சர் ஷீலா தீக்சித்க்கு மாநிலப் பங்கீடின்மை. எனவே குழறுபடிகளின் நிலைகளில் இருவரும் வேறுபடுகிறார்கள்.எப்படியென்றால் கல்மாடியின் நிர்வாகத் திறமையின்மைக்குப் பின் ஊழல் விரிச்சாடுவது இடிந்த பாலம்,நடைபாதைப் பாலம்,புதிதாகக் கட்டிய பாத்ரூம்களின் வெத்திலைப் புகையிலை (புகையில என்று நினச்சிருப்பாரோ கல்மாடி)எச்சில் துப்பல்கள் என்ற இந்திய சுகாதாரம் போன்றவை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

2003 ம் ஆண்டிலிருந்து 7 வருடங்கள் எனும் போது இரண்டாவது முறை வருவதற்கு வாய்ப்பில்லை!சுருட்டுவதற்கு இதை விட்டால் வாய்ப்பில்லை என்று முதல் இன்னிங்ஸில் கணக்குப் போட்டிருப்பாரோ? நேற்று காமன்வெல்த் துவக்கவிழாவில் கல்மாடி பேசும் போது ஆடிட்டோரியம் முழுக்க பூ....பூ என்ற மக்களின் எதிர்ப்புச் சத்தத்தை மக்களின் மகிழ்ச்சி ஆரவாரக் குரல் என்று நினைத்திருப்பாரோ கல்மாடி? ஒரு சிறந்த பொருளாத நிபுணராக, ஆனால் முதுகெலும்பில்லாத பிரதமராக மக்களின் கல்மாடி எரிச்சல் குரல்  சத்தங்கள் என்பது  தெரிந்தோ அல்லது தெரியாமலே கல்மாடிப் பேச்சுக்கு கைதட்டுகிறார் மன்மோகன்சிங். பார்க்க சகிக்கவில்லை பிரதமரே!

விளையாட்டுக்கள் முடிந்த பின்னாவது கல்மாடிக்கு ஆப்பு காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.எப்படியோ மணி சங்கருக்கு அவல் மெல்ல சந்தர்ப்பம் கிடைச்சாச்சு கல்மாடி.இவரு கல்மாடியில்ல களவாடியின்னு அறிக்கை விடப்போறாரு பாருங்க.அதுவும் பத்தாம ஆப்புன்னா நாற்காலியும் புடுங்கப் போறாரு.இது என்னோட கணிப்பு.பார்க்கலாம் என்ன ஆகிறதென்று. இது  நடக்கலின்னா இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு தோளில் துண்டைப் போட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.

அடுத்து ஷீலா தீக்சித்! டெல்லியின் முதலமைச்சர் என்ற காரணம் கொண்டே இவரால் சுயமாக செயல்பட இயலாத நிலை.மத்திய அரசும்,மாநில அரசும் ஒரே இடத்தில் இருந்தும் நிர்வாகப் பங்கீடுகளுக்கான stream lining இல்லை.விளையாட்டுத்துறையோ கல்மாடியிடம்.டெல்லிக்கு வரும் அவப்பெயரோ முதல் அமைச்சருக்கு.மத்திய,மாநில அதிகாரப் பங்கீடு அரசியல் பனிப்போர்கள் கூட உலக அரங்கில் இந்தியா அவமானப்பட்டதற்கு காரணம் எனலாம்.இறுதி மூன்று தினங்களில் முதலமைச்சர் ஷீலா தீக்சித் பொறுப்பேற்றுக்கொண்டு ஓரளவுக்கு நிவர்த்தி செய்து விளையாட்டுப் போட்டிகளை துவங்கியிருக்கிறார்கள்.Let the game begin என்று சார்லஸ் சொல்வதற்கு பதில் இந்திய ஜனாதிபதி முந்திக்கொண்டார் என்ற கிசுகிசு வேறு கேள்விப்பட்டேன்.

எவ்வளவு ஓட்டம் ஓடியிருப்பேன்!தங்கமெல்லாம் கொண்டு வந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தினேன்.எனக்கு வெத்தலை பாக்கு வைக்கலியேன்னு பி.டி.உஷா அக்கா ஒரு பக்கம் புலம்பல்.உஷா அக்கா! டெல்லி முழுதும் சேட்டன்,சேச்சிகள் பீரோகிரசியில் இருந்தும் எப்படி கோட்டை விட்டாங்கன்னு தெரியலையே!எப்படியோ நீங்க புலம்பறது நியாயம்தான்.ஆனால் விளையாட்டில் சாதனை என்பதெல்லாம் இந்தியாவில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாது.விளையாட்டு முடிந்து மூணாவது நாள் துவங்கி மறுபடியும் மக்களின் கவனம் கிரிக்கெட்ல போயிடுமில்ல.

நான் என்னமோ எங்க பதிவு மக்கள்தான் என் பதிவை சுட்டுட்டாங்க,என் இடுகையை என்னைக் கேட்காமலேயே பத்திரிகைல போட்டுகிட்டாங்கன்னு இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்ப bjc.com ன்னு கூகிள் அண்ணன்கிட்ட கேட்டா அவர் நேரா மன்மோகன்,சோனியா,ராகுல் காந்தி மூன்று பேர் படத்தைக் காண்பிச்சு அது இவங்க கடைதான்ன்னு சொல்றார்.பிஜேபிக்காரங்க கோவிச்சுகிட்டு காங்கிரஸ் மேல் கேஸ் போட்டிருக்காங்க.யோவ் உன்னோட கடைப்பேரு bjb.org ன்னு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அங்கே போய் பாருன்னு விரட்டுகிறார்.இவங்களே சைபர் கிரைம் செய்யறாங்க.இதுல பதிவுலக புள்ளப்பூச்சிகளையெல்லாம் சைபர் கிரைம்ல சேர்க்கனும்ன்னு பின்னூட்டம் போடறது நல்லதில்லை:)

இந்திய மக்களுக்கு சினிமா குஜாலாவுக்கும்,அரசியல் அடாவடிகளுக்கும் பஞ்சமேயில்லை போங்க!
 

ரஜனி சொன்ன ஜோக்

ரஜனி முகப்பூச்சு இல்லாமல் அவர் அவராகவே மைக்கின் முன் அமிதாப், ஐஸ்வர்யராய் கலந்துகொண்ட எந்திரன் பட விழாவில் ஏற்ற இறக்கங்களுடனான முகபாவனைகளுடன் சொன்னது அமர்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

ஒருவர்  ரஜனியிடம் வந்து இந்தியில் பேசி படத்தின் பெயரைக்கேட்டாராம்.ரஜனி படத்தின் பெயரை சொல்ல கதாநாயகி யார் என்று வந்தவர் கேட்க ஐஸ்வர்யராய் என்றாராம் ரஜனி.அடுத்து கதாநாயகன் யார் என்று ரஜனியிடமே கேட்கவும் தான்தான் கதாநாயகன் என்று சொல்லி சில வினாடிகள் தாமதத்திற்கு பிறகு ரஜனி தொடர்ந்தார்.

வந்தவர் ரஜனியைப் பார்த்துவிட்டு அமிதாப் பச்சனுக்கு என்ன ஆச்சு!,ஐஸ்வர்யராய்க்கும் என்ன ஆச்சு? என்று அருகில் இருந்தவரிடம் புலம்பினாராம்:) 

திரைப்படத்துக்கு வெளியே நடிக்காத ஒரே ஆள் ரஜனி என்று இயக்குநர் பாலசந்தர் ஒரு முறை ரஜனி பற்றிக் குறிப்பிட்டார்.கவியரசு வைரமுத்து அவர்களே!இது ரஜனியே சொன்ன நிகழ்ச்சி.எனவே அமிதாப்,போப் குட்டிக்கதையெல்லாம் இனிமேல் யார்கிட்டயும் சொல்லாதீங்க.

Jokes apart, ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதற்கு முதல் நாள்,இரண்டு,மூன்றாம் நாட்களின் வசூல் கணக்கை சொல்லி விடுவது வழக்கம்.ரஜனி விசிறி ஒருவர் அவதார் வசூலை எந்திரன் மிஞ்சப்போகிறது பாருங்கள் என்று முகம் மலர்ந்தார்.அவதார் படத்தின் முதல் நாள் வசூலைக் கூட அறிவிச்சாங்க.ஆனால் எந்திரன் வசூல் பற்றி மூன்று நாள் ஆகியும் கணக்கு சொல்றதுக்கு  ஆள் இல்லை.உங்களுக்கு தெரியுமா?பட்டு!நீங்கள் சொல்லுங்களேன்!

எத்தனை பஞ்சாயத்து செய்தும் எந்திரன் காய்ச்சலை நிறுத்தவே முடியவில்லை.மெய் உலகத்துக்கும் மெய் நிகர் உலகத்துக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு இப்பவாவது புரியுதுங்க்ளாண்ணா:)

Saturday, October 2, 2010

எந்திரன் விமர்சனங்கள் எங்கே?

தாரை,தப்பட்டைகளோடு எந்திரன் திரை விமர்சனம் களை கட்டுமென்று பார்த்தால் இன்று படம் பார்த்து விட்டு வந்தும் பிரபல திரை விமர்சன பதிவர்களின் இடுகை ஒன்றும் கண்ணில் படவில்லை.டிக்கட் கிடைக்கவில்லையா என்ன? கட்டவுட் பாலாபிஷேகம், தரையில் சாப்பாடுன்னு களைகட்டுச்சே என்னாச்சு? தமிழகத்தில் போட்ட காசு வந்துமென்று நினைக்கிறேன்.இந்தி சத்தத்தையே காணோம்!

எப்படியோ தமிழக கோமாளித்தனங்கள் இல்லாமல் தமிழகத்திலிருந்து வரும் அதே ரசிகர் கூட்டம் பிரம்மச்சாரிகளின் கூட்டமாக,குடும்ப சகிதமாக ஹவுஸ்புல்லா ரொம்ப மெச்சூர்டா அமைதியா படம் பார்க்கிறது பார்க்க சந்தோசமாய் இருந்தது.ஆனால் இந்த அமைதியைக் குலைக்க திரையரங்கின் ஸ்டிரியோபோனிக் சத்தம் காதை கிழி கிழின்னு....

படம் துவங்கியதுமே Son pictures லோகோ வந்ததும் சன் தொலைக்காட்சி செய்தி வருகிற மாதிரி ஒரு உணர்வு.அதனைத் தொடர்ந்த ஆராய்ச்சிக்கூடம் என்னையறியாமல் தசாவதாரத்தின் ஆராய்ச்சிக்கூடத்தை நினைவு படுத்தியது.கூட கருணாஸ்,சந்தானத்தின் பித்துக்குளித்தனங்களும் அதனைத் தொடர்ந்த கதை நகர்வும் என்னமோ கோடிக்கணக்கில் காசு கொட்டினாங்கன்னு சொன்னாங்களே ஒரு எபக்டுமே இல்லையேன்னு தோன்ற வைத்தது.எந்திரனின் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே கதையை நகர்த்திச் செல்கின்றது.அப்புறம் குறிப்பிட்டுச் சொல்லும்படியா என்ன என்று இப்ப யோசித்தாலும் ரயில்,ஆராய்ச்சிக்கூட கிராபிக்ஸ்,பீட்டர் ஹெய்ன் ரயில் சண்டைன்னு கொஞ்சம் நினைவு வருது.சும்மாவே சாமியாடுற ரஜனி ரசிகர்களுக்கு கிராபிக்ஸ்தான் படைப்பாளி.
 
டோனி சொல்ற மாதிரி கதையே இனிமேல்தான்னு இடைவேளையில் சொல்வதால் சரி பார்க்கலாமேன்னு உட்கார்ந்தா இயந்திரமா இருக்கிற யந்திரனுக்கு உணர்ச்சிகள் கொடுக்கனுமுன்னு 1 டெராபைட் 2ஹெக்டாபைட், பைட் இயந்திரனுக்கு டாய்பிரண்டா இருந்து இப்ப பாய்பிரண்டாகனுமுன்னு ஐஸ்வர்யா மேல் காதல் வந்து விடுகிறது.காதல் என்ற நட்டு கழண்டுகிச்சுன்னா என்னாகுமென்று கதை நகர்கிறது.ஏ.ஆர் ரகுமானை இயர்போனை காதுல மாட்டிகிட்டு இன்னொரு முறை கேட்டாலே கருத்து சொல்ல முடியும்.

ரஜனிக்கு ரொமான்ஸை விட வில்லத்தனம் அல்வா மாதிரி வருகிறது.அதனை மூன்று முடிச்சு முதல் லகலகலக வரை நிரூபித்திருக்கிறார்.இதிலும் எந்திரன் வில்லனாகும் போது அசத்தல்.ஆனால் இங்கே திரையரங்கில் விசில் அடிக்க மட்டுமே ஆட்கள் இல்லை.கண்ணை கழட்டி வேறு கண் மாற்றுவது,காயம்பட்ட உடலை ரீமோல்டிங்க் செய்வது போன்றவை டெர்மினேட்டரை நினைவுபடுத்தியது.ஆங்கிலப்படங்களுக்கு கண்ணில் விளக்கெண்ணைய் இட்டு எந்தக்காட்சி எங்கே அசல் என்று துப்பறியும் பதிவர்களுக்கு இன்னும் சில ஆங்கிலப்படப் பெயர்கள் அகப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
 
க்ளைமாக்ஸ் எந்திரன்களின் சாகசம் இதுவரை இந்தியத் திரைப்படங்களிலே முதல்முறையாக என்ற வாக்கியத்தை உண்மை என்கிறது.ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் சிறு முயற்சியாகவாவது இதனை ஷங்கரை பாராட்ட வேண்டும்.கலாநிதி தயாரிப்பாளர் என்றதும் உலையிலே போட்ட பணம் என்று சிலர் முணுமுணுக்கலாம்.ஐங்கரனால் முடியாததை கலாநிதி வெற்றி வியாபாரமாக்கியிருக்கிறார்.எனவே இதன் நுண்ணரசியல்களில் எனக்கு ஈடுபாடு இல்லை.

ரஜனி! உடலை மெலிதாக வைத்திருக்கும் ரகசியத்தை மட்டும் என் காதுல போட்டீங்கன்னா கூட்டாளியாக வசதியாக இருக்குமில்ல!டாட்!