Followers

Sunday, April 29, 2012

என்ன கொடுமை சார் இது!

அய்யா வவ்வாலாரே!சென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம்ன்னு விலாவாரியா எழுதினதும் மட்டுமில்லாமல் ஆதாரமாக பஸ்ஸோட படம் வேற புடிச்சுப் போடறது மாதிரி ஒரு கல் ஒரு கண்ணாடின்னு அழகா தமிழில் எழுதி தொலைக்க வேண்டியதுதானே!
நான்தான் நேரம் கிடைக்கும் போது மட்டும் எப்பவாவது மேலிருந்து கீழ் தலைகீழா உங்க பதிவுகளை மேயுறேனே!மு.கருணாநிதியை மு.க ன்னு எழுதறதுல தப்பில்ல! ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடியை நீங்க ஓகே!ஓகேன்னு படத்தை குறுக்கி எழுதலாமா? சினிமா பதிவர்கள் புண்ணியத்துல சினிமா போஸ்டர்களையே அபூர்வமா மேயும் அப்பாவியான நான் ஓகே!ஓகே  ஏதோ ஒரு புதுப்படமாக்கும்ன்னு  நினைச்சு உங்களுக்குப்  பின்னூட்டம் போட்டு இப்ப அசடு வழியறேனே!

என்ன கொடுமை சார் இது:)!

பின் குறிப்பு: உங்க அஞ்சா கொடுமையோட இதையும் ஆறா சேர்த்துக்கோங்க!

Friday, April 27, 2012

புதிய ஈழ சகோதர சண்டைகள்!

சமீபத்தில் பதிவர் ஜாக்கி சேகர் அரசியலுக்கும் அப்பாலான அபி அப்பாவைப் பற்றி சொல்லியிருந்தார்.மனம் கனத்தது என்பதனை விட கண்கள் பனித்தன சொல் பொருத்தமாக இருக்கும்.ஆனால் அரசியல் என்று வரும் போது அபி அப்பாவின் தூணைக்கட்டிப் பிடித்துக்கொள்ளும் அடிவருடித்தனம் சொல்லி மாளாது.தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பான இணைய நீரோட்டத்தை ஆழம் பார்க்கும் முதல் மாதிரியாகவே அவரது பதிவு இருந்ததை புலம் பெயர் ஈழ தமிழர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் என்பதை பதிவுகளின் கோபங்களும்,பின்னூட்டங்களும் உரக்கச் சொல்லுகின்றன.யாருக்கு பின்னூட்டம் சொல்வது என்றே தெரியவில்லை.அதனால் பதிவர் செந்தில் சென்ற பதிவுக்கு இட்ட ஒற்றைப் பின்னூட்டத்திற்கான எனது மறுமொழியையே எனது பின்னூட்ட கருத்தாக மீண்டும் ஒரு முறை இங்கே வெளிப்படுத்துகிறேன்.

இப்பொழுது எம்.ஜி.ஆர் இல்லாத காரணத்தால் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயலலிதா,வை,கோ இன்னும் அரசியலில் உள்ள பலரையும் காலை வாரி விடுவதிலேயே கண்ணும்,மண்டையுமாக இருக்கிறார்.அது போலவே ஜெயலலிதாவும் கூட.ஏனையோரும் கருணாநிதி மீதான விமர்சனத்துக்கு குறைந்தவர்களாயில்லை.அதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன என்பது வேறு விசயம்.ஆனால் நான் மையப் படுத்த நினைப்பது தமிழர்களிடையே நிகழும் சகோதர சண்டைகளை.இணையமும் குறைந்ததாக இல்லையென்பதை பதிவுகளும் படம் போட்டுக் காண்பிக்கின்றன.இதில் கவனித்து எனக்கு நானே சிரித்துக் கொண்ட விசயமென்னவென்றால் இணைய இஸ்லாமிய மதக்குருக்கள் யாரும் ஒரு கருத்தும் முன் சொல்ல வராதது.இப்படியான சிதறிக் கிடக்கும் தமிழர்களின் நிலையே இலங்கை அரசின் பலமாக அமைகிறது.

இன்றைய நிலையில் ஈழப்பிரச்சினை பல பரிமாணங்களை உட்கொண்டது.

1.தமிழகம் சார்ந்த அரசியல் மற்றும் மக்கள் குரல்களைப் பிரதிபலிப்பது.
2.இந்தியா மத்திய அரசின் இலங்கை  இரட்டை வெளிநாட்டுக்கொள்கைகள்
3.புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் அதன் எதிர்ப்பு நிலை
4.இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு விதமான  பிரதிபலிப்பு
5.அன்றாட வாழ்வில் சிரமப் படும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள்
6.மனித உரிமைக் குழுக்களின் போர்க்குற்றங்களுக்கு எதிரான குரல்கள்
7.இலங்கை அரசுக்கு எதிரான சிங்களவர்களின் குரல்
8.அமெரிக்கா,சீனா,ரஷ்யா,இந்தியாவின் சுயநல உலக அரசியல்
8.இவை அனைத்தையும் பின் தள்ளிவிடும் போக்கான ராஜபக்சே அரசு.
9.ஐ.நா என்ற அமைப்பின் ஆமை வேகம்
10.தனி தமிழீழமா?ஒற்றைக் குடியரசா என்ற புதிர்

மேற்சொன்ன 10 பெரும் வளையத்துக்குள் ஒப்பிட்டால் சகோதர சண்டைகள் ஒரு பொருட்டானதே அல்ல.ஈழப்பிரச்சினை இப்பொழுது உலக அரங்கிற்குள் வந்து விட்டதால் மேற்கொண்டும் தமிழர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி விவாதிப்போம்

கவிஞர் தாமரையின் இந்த காணொளி காணவும்.

http://www.colombotelegraph.com/index.php/thamarai-on-un-resolution-against-sri-lanka/.




Monday, April 23, 2012

மகிந்த,கோத்தபய ராஜபக்சேக்கள்!

கொஞ்சமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.அதனால பிலிம் காட்டுறதை மட்டும் பார்த்துவிட்டு கமெண்டாம கூடப் போகலாம் சரியா?

சில விசயங்களை கடந்து போக நினைத்தாலும் கூட மௌனமாக இருக்க முடியவில்லை.நான் சொல்வதோ அல்லது நீங்கள் சொல்வதோ அல்லது ஒரு பத்திரிகை சொல்லும் முறையிலும் கூட எழுதும் முறை,சொல்லும் நடையினால் கூட பொருள் மாறக்கூடும்.ஆனால் நவீன தொழில்நுட்ப வசதிகளில் காணொளிகள் உள்ளதை உள்ளவாறு சொல்லி விடுகின்றன.ஆனால் அதனையும் மார்பிங்க்,போட்டோஷாப் என்ற திரிபுகள் என திசை மாறி விடுகின்றன.

இன்னும் சில செய்திகள்,காணொளிகள் பொது ஊடகங்களிலிருந்து  வெளி வருவதேயில்லை.இன்றைக்கு இந்தியாவின் மத்திய காங்கிரசின் இலங்கை நிலைப்பாடும்,ராஜபக்சேக்கள் சார்ந்த இந்திய வெளிநாட்டுக்கொள்கைகளின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சிப்பதை விட மகிந்தாவின் 88ம் ஆண்டு கால இந்திய நிலைப்பாடு என்ன என்பதை இந்த காணொளி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

http://www.colombotelegraph.com/index.php/rajapakse-in-double-talk-88-and-now/

சென்ற பதிவின் பின்னூட்டத்திலேயே கொலம்போ டெலிகிரா2ப் இணையதளம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.இலங்கையிலிருந்து சுயவிருப்பிலோ அல்லது உயிர் பயத்தில் மேறகத்திய நாடுகளுக்கு சென்ற இலங்கைப் பத்திரிகையாளர்கள் கருத்துரிமை எப்படியிருக்க வேண்டுமென்பதை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள்.இலங்கை குறித்த விக்கிலீக்ஸ் உட்பட பொதுப்பார்வைக்கு வைக்கிறார்கள்.கட்டாயம் பார்வையிட வேண்டிய தளம் என்பேன். 

தமிழகத்தில் கட்சிகள் சார்ந்த தலைவர்கள் பற்றி இலங்கை அரசியல் பார்வையாளர்களும்,அரசியல்வாதிகளும் ஒரு தவறான கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.தமிழக கட்சிகள் தங்கள் வாக்கு தேவைக்காக வேண்டி இலங்கைப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.ராஜிவ் காந்தியால் மௌனம் காத்த தமிழக குரல்கள் ஈழ மக்களுக்கான குரலாக மெல்ல ஒலிக்கத்துவங்கியது 2008ம் ஆண்டின் கால கட்டம் துவங்கியே.அதற்கு முந்தைய கால கட்டத்தில் ஈழப்பிரச்சினை தவிர்த்த அரசியல் களமாகவே தமிழகம் இருந்து வந்தது என்பதை நினைவு படுத்துவது அவசியம்.நாளை ஈழமக்களுக்கான நியாயமான? தீர்வு உருவாகும் பட்சத்தில் தமிழகம் இந்திய இறையாண்மையோடு ஜனநாயக வழியில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளின் குரல்களோடு தொடர்ந்து பயணிக்கும் என்பது நிச்சயம்.

 எனவே இப்போதைய இலங்கை அரசின் போர்க்குற்றங்களை பின் தள்ளுவதற்கான முயற்சியே தமிழக கட்சிகளின் இலங்கை அரசியல் வட்டார விமர்சனம். இதற்கெல்லாம் உச்சகட்டமாக நவீன காந்தி மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் புதுமை புத்தன் கோத்தபய ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிறார்.அண்ணன் காந்தியாகவும் தம்பி புத்தனாகவும் இருக்கும் பட்சத்தில் கருணாநிதியையும்,தமிழர்களையும் ஏனைய மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்களையும் தீவிரவாதிகள் என்றால் அதில் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை.இதில் கொடுமை என்னவென்றால் மக்கள் குரலாகவோ அல்லது சமமாக வாழலாம் என்ற நிலைப்பாடும்,ஜனநாயகப் போர்வையில் குடும்ப ராணுவ ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், கருத்தாளர்களான சிங்களவர்களையும் கூட உயிர்பயம் கொளள வைக்கவோ, வெள்ளை வான் கடத்தல் செய்வதை அரசு திட்டமிடுதலின் ஒன்றாக கொள்ளும்  போர்க்குற்ற பரிசுத்தர்கள் இவர்கள். இவர்களின் அரசியல் அரியணையும்,பொது அறிக்கைகளும்  எவ்வளவு காலம் என்பதை காலம் பதில் சொல்லும்..

Saturday, April 21, 2012

வணக்கம் லண்டன் ஒலிம்பிக்ஸ்!

தமிழ் மாதங்களின் திரிபு மாதிரிவணக்கத்தின் திரிபு வெல்கம் என்ற ஆங்கில சொல்லாக இருக்குமோ!

வணக்கம் என்ற குரலுடன்  வெல்கம் லண்டன் ஒலிம்பிக்ஸ் உலகை வரவேற்கிறது.

காணொளி காண இங்கே கிளிக்கவும்.


http://www.london2012.com/videos/2012/welcoming-the-world.php