Followers

Thursday, June 20, 2013

வெற்றியின் முதல் படியில்

சென்ற பதிவில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அமுதவன் சார்,ரெவரி,பூபதி பெருமாள்,வருண்,நந்தவனத்தான்,வேகநரி,செங்கோவி மற்றும் எதிர்கால விவசாய மேதை கடி வவ்வால்:) அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு கச்சேரியை துவங்கலாம்.

வவ்வால்!சென்ற பதிவில் நந்தவனத்தான்"நீர் வெவசாயத்துல ஜெயிப்பீரா என்னவோ காலம்தான் பதில் சொல்லும். ஆனா உமக்கிருக்கற வாயையும் புத்தியையும் பார்த்தால் நீர் கன்சல்டன்ஸி வைத்தால் நல்லா காசு அள்ளலாம்.." என்று ஆலோசனையோடு யூடியுப் பிலிம் வேற காட்டியிருந்தார்.நமக்கு வேற அலை வரிசை ஒண்ணா வெலை செய்யுதா!யோசனை செய்யவும்:)

ஆடுன காலும்,பாடுன வாயும் வரிசையில் எழுதுற கையும் சேர்த்துக்கிடலாம். கடந்த ஒரு மாத காலத்தில் எப்படி தொழில் துறையில் நுழையலாம் என்ற திட்டமிடலின் முதல் சுற்றில் சட்டபூர்வமாக இணைவதற்கான வெற்றியின் முதல் படியில் நுழைந்து விட்டேன்.என்னோடு இணைந்து கொள் என்ற பெரும்பாலோனோரின் விருப்பம்,நம்மை ஆட்டைய போட்டுடுவானோ என்று நான் இணைய நினைப்பவர்களின் தயக்கம்,காசு கொடு என்ன வேணுமோ பண்ணிக்கோ என்ற பல அனுபவங்களோடு என் மீதான நம்பிக்கையையும்,மதிப்பையும் சரியான பல் நோக்கு நிறுவனத்தோடு கொண்டு சேர்த்தது நிவின் என்ற ஒரு தமிழ்க் கரம்.பெரும்பாலான வியாபார பேச்சுக்கள் அலுவலகத்தின் நாறகாலிகளில் பேசி முடியும் போது நேராக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் அரபி காபியும்,இனிப்பும் கூடிய உபசரிப்புடன் வியாபார ஒப்பந்தங்களை பேசி வந்துள்ளேன்.என்னைப் பற்றி அனைத்தையும் நிவினிடம் சொல்லி மெய்யாலுமே பிளாக்கன் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன்:)காலம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம்.

வியாபார புதிய சிந்தனைகள்,சுதந்திர எண்ணங்கள்,விளம்பர யுக்திகள்,ருசி செய்து பாரு பிடிச்சா காசு கொடு இல்லாட்டி வேணாம் என்ற பலவற்றிலும் என்னை கவர்வது அமெரிக்காவே.நாமும் அவர்களை பார்த்து நிறைய பொருட்களை பொருள் மாற்றம் செய்து அழகு படுத்தி சந்தை படுத்தி விடுகிறோம். உதாரணமாக சொன்னா மசாலா,இட்லி தோசை மாவு மாற்றங்கள்.நம்ம அம்மா,சகோதரிகள்,கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் ரசம் வைக்கனும்ன்னா புளிக்கரைசலை ஊற வைத்து இறுத்து ஊற்றி ரசம் வைப்பதுதான் பாரம்பரிய ரசம் சமையல் முறை.நம்ம ஊர் புளி பம்பாய்க்கு ரயில் பயணம் செய்து அங்கே ஒரு நிறுவனம் கழிவுகள் நீக்கி multi purpose Tamarind என்றும் சமோசாவுக்கு தொட்டுக்க Tamarind sauce என்றும் பம்பாயில் வித்தது போக கொஞ்சம் பெட்ரோல் டாடரையும் பார்க்கலாம் என்று 1000 x 24 பாட்டில்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தால் இங்கே மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை.இதுல என்ன ஒரு புது செய்தின்னா நம்ம ஊர்ல மோர் குடிக்கிற மாதிரி புளி ஜூஸ்தான் அரேபிய சீசா புகையிழுக்கும் கடைகளின் மெனு என்பது நான் புகைபிடிக்காத ஒரே காரணத்தால் எனக்கு இதுவரை தெரியாது.

மேலும் இப்படி ஒரு பொருள் சந்தையில் இருப்பதே பலருக்கும் தெரியாது.இதனை எப்படி சந்தை படுத்துவதென்பது என்பதில் துவங்கி முன்பு ஒரு முறை தமிழில் புகைப்படக்கலை பதிவுகளின் நிபுணர்களில் ஒருவரான நாதாஸ் ஒரு பிரிட்ஜுக்குள் ஒரு கை மட்டும் போய் ஒற்றை கொக்கோகோலாவை எடுப்பது மாதிரி ஒரு படம் போட்டிருந்தார்.கொஞ்சம் வித்தியாசமான பார்வை இன்னும் நினைவில் நிற்கின்றது.தமிழில் புகைப்படக்கலை பக்கம் போய் மிக அதிக காலங்கள் ஆகிவிட்டன.இனி வந்து பார்க்கிறேன்.

இது போல் விளம்பர யுக்திகள்,பொருட்களின் மார்க்கெட்டிங் துவங்கி இங்கே என் புருசனும் கச்சேரிக்கு போறான்ங்கிற மாதிரி நிறைய இணைய தளங்கள் நொண்டிகிட்டி இருக்கின்றன.இவற்றை கண்டு பிடித்து ஒடைஞ்ச கை,கால்களை ஒட்ட வைக்கவோ அல்லது புதுசா முக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என பல் நோக்கு வியாபார திட்டங்களோடு அதிகம் போட்டிகள் இல்லாத பொருட்களை தமிழகம்,அமெரிக்காவிலிருந்தே ஆன்லைனில் விற்பது என்ற புது முயற்சிகள்.யாராவது ஏற்றுமதி பொருட்கள்,புது யுக்திகள் சந்தைபடுத்தல் ஆர்வம்,பொழுது போக்குக்கு புகைப்படம் எடுப்பவர்கள், இணைய தளம் உருவாக்குபவர்கள்,கிராபிக் டிசைனர்கள் கொஞ்சம் காசும் பார்க்கலாமே என்று நினைப்பவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது rajanatcbe@gmail.com முகவரிக்கு தனி மடல் அனுப்பவும்.

அமெரிக்க டாலர்ல வித்தா 55-60 ரூபாய்தான் கிடைக்கும். அதையே குவைத் தினாரில் விற்றால் 180-200 ரூபாய் கிடைக்கும்.அமெரிக்காவின் பெயர் அறிமுகத்தால் செந்தில் மாதிரி 60ரூபாய் அமெரிக்கா டாலர்தான் பெருசுன்னா நீங்கள் போக வேண்டிய முகவரி கூகிள் தேடல்.

மறுபடியும் ஒட்டவைக்கும் போதுதான் கவனிச்சேன்.மெல்ல நகர்ந்து,ஊர்ந்து இதுவரையிலான பார்வையாளர் வரிசை 299. இனி யார் 300 என்பதை ஒட்ட வச்சிட்டு பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.இதுவே இதுவரையிலான ஏனைய பதிவர்களுக்கான எனது பின்னூட்டங்கள் என்றால் எண்ணிக்கை வரிசை எகிறும் என நினைக்கிறேன்.காரணம் பதிவுகள் சொல்வதை விட அப்போதைக்கான உடனடி நிவாரண எண்ண வடிகால் பின்னூட்டம் என்பதால் மேயுறதுதான் இதுவரை எனது முதல் விருப்பமாக இருந்தது.இனி கூகிள்காரனிடம் சொல்லி பின்னூட்டத்துக்கும் அலாஸ்கா வரிசை ஏத்த சொல்லனும்:)

இப்போதைக்கு அனைவருக்கும் மீண்டும் நன்றி வணக்கம் சொல்லிட்டு உட்கார்ந்துக்கிறேன்.


Monday, June 10, 2013

வெச்சுட்டான்யா ஆப்பு!

வாழ்க்கையின் இனிமையான தருணங்கள் என்றால் குழந்தை பருவம்.பள்ளி பருவம்,கல்லூரி,காதல்,கல்யாணம்,குடும்பம் என்பதோடு நிச்சயம் தமிழ்மண நேரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற நிலையில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.நக்கீர பரம்பரை வவ்வால்!தொலைக்காட்சி பார்த்தே நடராஜன் பரிட்சை எழுதுகிறான் என்ற கவலையெல்லாம் இனி வேண்டாம்.நேற்று நரேந்திர மோடிதான் அதிகார பூர்வ பிஜேபி தேர்தல் இயக்குநர் என்பது தவிர இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்பது கூட தெரியாது.இனி காங்கிரஸ் சார்பாக ராகுல் மல்லுக்கட்ட தயாரா என்பதை மட்டும் தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறேன்:)

இரண்டு  விவாத சேம்பியன்கள் விட்டேனா பார் என்ற போட்டியில் கலந்து கொள்ள முடியாதபடி தற்போது மேய்க்கும் ஒட்டக நிறுவனம் லே ஆஃப் என பலரை வேலை நீக்கம் செய்து விட்டதில் நானும் ஒரு பிரதிநிதி என்பதால் வவ்வால்,வியாசன் விவாத களத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்.

ஒரு லீவு எடுத்துட்டு இந்தியா போய்ட்டு திரும்பி வந்தால் அண்ணன் எப்ப போவான் நாற்காலி எப்ப காலியாகும் என காத்திருந்த நிறுவனம் வந்தவுடன் லே ஆஃப் கொடுத்து விட்டார்கள்.இருந்தாலும் இன்னும் இங்கே ஒட்டகம் மேய்க்கும் அனுமதி இருப்பதால் சரி என கையெழுத்து போட்டுக்கொடுத்து விட்டேன் நமது திறமை நம்மிடம்தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில். இனி மேல் எந்த நிறுவனத்திலும் பணி செய்வதில்லையென்ற தீர்மானத்தோடு தனக்குத் தானே சுய முயற்சியில் உள்ளேன்.பெரும்பாலும் விளம்பர நிறுவனம், மார்க்கெட்டிங, ஏற்றுமதி-இறக்குமதி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என உள்ளேன். கிராபிக் டிசைனர் மற்றும் இ-மார்க்கெட்டிங் துறையில் யாராவது இருந்தால் சுதந்திரமாக பணி செய்யும் கால அவகாசம் உள்ளவர்கள்  rajanatcbe@gmail.com இமெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.


ஒட்டகம் மேய்க்கிற வேலை ஒருபுறமிருக்க கடந்த சில மாதங்களாக சவுதியின் சட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்பொழுது குவைத் நாட்டிலும் சட்டங்களை இறுக்கும் முயற்சிகள் தொடர்கிறது.வாகனம் ஓட்டுவதில் சாலை விதிமுறைகள் மீறல்,வாகனம் ஓட்டும் உரிமை இல்லாதவர்கள், அங்கீகாரமின்றி விசா காலாவதியாகியவர்கள் என்று உள்துறை தனது கடமையை செய்கிறது என்று சொன்னாலும் கூட கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகளாக கூட்டாக தங்கும் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் பலரையும் இரவு நேரத்தில் தங்குமிடங்களில் புகுந்து விசாரணை செய்து அப்படியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்ற தகவல்கள் கசிகின்றன.பொதுவாக இந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டங்களை மதிக்காமல் விசாக்களுக்கு காசு வாங்கி விட்டு எப்படியோ சம்பாதித்துக்கொள் என்று விட்டு விடுகிறார்கள்.விசா நிறுவனங்களும் அப்படியே.இந்திய தூதரக செயல்பாடுகள் பற்றி பதிவாகவும்,பலரின் பின்னூட்டங்களுக்கும் கருத்து சொல்லியாகிவிட்டது. ரஷ்யா காலத்து சிவப்பு நாடாக்கள் இன்னும் இறுகியே நிற்கின்றன. இந்திய தூதரகம் முதலில் தூங்கிக்கொண்டிருந்ததால் பலருடைய பாஸ்போர்ட் கூட இல்லாமல் பலரையும் டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் இதில் சேட்டன்கள் கிட்டத்தட்ட 50 பேர்கள் இந்தியா சென்று கேரள அரசு மத்திய அரசிடம் முறையிட பின் இந்திய தூதரக அதிகாரி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் அனுமதிக்க முடியாது என அழுத்தங்கள் கொடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.குவைத் உள்துறை இதற்கெல்லாம் அலட்டிக்காமல் இன்னும் சிறையில் தள்ளிக்கொண்டுதான் உள்ளது.ஜனத்தொகை ரீதியாக இந்தியர்கள் அதிகம் இருப்பதால் சட்டவரைமுறை மாற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் இந்தியர்களாகவே உள்ளார்கள்.இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வயலார் ரவி என்ற அமைச்சரை மத்திய அரசு வைத்திருந்தும் வயலார் ரவி " இப்படியொரு நிகழ்ச்சி குவைத்தில் நடப்பதே எனக்கு தெரியாது" என்று தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறாராம்.

பிரச்சினைகளுக்கு அரசு ரீதியில் தீர்வுகள் வந்தால் நல்லது.இல்லையென்றால் இந்திய வேலையில்லா திண்டாட்டத்தில் பலரும் இந்தியா திரும்பும் பட்சத்தில் இந்தியாவே பாரங்களை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

முன்பு மாதிரி வளவளத்தான் பின்னூட்டங்கள் போடும் கால அவகாசம் இல்லாததால் பின்னூட்ட கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாத சூழலுக்கு மன்னிக்கவும்.

இப்பொழுது பதிவை ஒட்டவைக்கும் போதுதான் பார்த்தேன்.பின்னூட்டங்கள் 94 தொடுகிறது.ஆட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் இரட்டை சதம் அடித்திருக்கலாம். வவ்வால்,வியாசன் மற்றும் அனைத்து பின்னுட்ட நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.