Followers

Monday, January 14, 2013

மார்க்கத்தின் மூர்க்கத்தோடு

பதிவுகள் இடுவதற்கும் எதிர் வினையாற்றுவதற்கும் புற்றீசல்கள் மாதிரி ஒன்றைக் கடந்து இன்னொன்று என தீயவைகள் உலகை வலம் வருகின்றன.புத்தாண்டாக,பொங்கலாக நல்லவைகள் கண்ணில் பட்டால் மட்டும் பதிவு செய்வோம் என்ற நினைப்பை ரிசானாவின் ம்ரண தண்டனை காணொளி தோல்வியுறச் செய்து விட்டது.

ரிசானாவின் மரணம் குறித்து பலரும் பதிவுகள், பின்னூட்டங்களிட்டும் அதன் தாக்கம் பெரிதாக மனதை பாதிக்கவில்லை.உளவியல் ரீதியாக ஒருவரது மரணத்தை ரசிக்கும் மனப்பான்மையே பலருக்கும் இருக்கிறது என்பதை அத்தி பூத்தாற் போல நிகழ்ந்த ஒரு மரணதண்டனையை பார்வையிட பலரும் சென்ற போது நானும் சாமி கும்பிடாத லெபனான் பாஸும் போகவில்லை. 

மரணதண்டனை தேவையா இல்லையா என பெரும் விவாதங்கள் நிகழ்கின்றன.பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகள் கூட பொதுமக்கள் முன்பு தண்டனையை நிறைவேற்றுவதில்லை.ஒரு மனித உயிர் வலியில்லாமல் எப்படி மரிக்க இயலும் என்ற பரிசோதனைகளில் உலகளாவிய அளவில் பலநாடுகள் பெரும்பாலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுகின்றன.

ஈராக்கின் ரத்தம் படிந்த வரலாறு எப்படியிருந்த போதிலும் உலக நாகரீக தொட்டில்களில் ஈராக்கும் ஒன்று.ஒரு இஸ்லாமிய தேசம் என்பதோடு அரேபிய நாடுகளில் ஓரளவுக்கு செகுலரான நாடாகவும் ஈராக்கை சொல்லலாம். வரலாறுகள் தவறாக மாற்றி எழுதப்படுகின்றன என்பதற்கு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பும் ஒன்று எனலாம்.

அமெரிக்க தலையீட்டிற்கு பின்பு சதாம் உசைனின் மரணதண்டனையைக் கூட தனியாக தூக்கிலிட்டே கொன்றார்கள்.அப்படியிருந்தும் உள்துறையின் கசிவால் சதாமின் மரண தண்டனை உலகின் பார்வைக்கு வந்து விட்டது.அல்லாஹ் அக்பர் என உச்ச கொலைவெறிக் குரலிட்டு காமிரா சகிதம் மேற்கத்திய நாட்டவர்களின் கழுத்தை அறுக்கும் மத தீவிரவாதங்களுக்கும் கூட அரசியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு அஜெண்டா இருக்கிறது எனலாம்.

ரிசானாவின் குற்றச்சாட்டில் பல விவாதக் கேள்விகள் எழுந்தும் கூட ஒரு மரணதண்டனையை நிறைவேற்றும் அதிபயங்கரம் எழுத்தில் சொல்லி விவரிக்க இயலாது.மதம் சார்ந்து கடவுள் மறுப்பாளர்கள், மதநம்பிக்கையாளர்கள் என இரண்டு பக்கங்களையும் பார்க்க நினைக்கும் நடுவண் நிலையைத் தாண்டிய மனித உயிர்க்கொலை ரிசானாவின் மரண நிகழ்ச்சி நிரல்.

குற்றங்களுக்கான தண்டனைகள் தற்காலிக நிவாரணியே.அதிலும் கடும் தண்டனைகளால் குற்றங்கள் மறுபடியும் நிகழ்வதில்லையென்றால் சவுதியில் ரத்த வெள்ளத்திற்கு பதிலாக பாலாறும்,தேனாறும் ஓடவேண்டும்.ஒரு நாட்டில் நிகழும் குற்றங்களை வெளிப்படையாக பொதுப்பார்வைக்கு கொண்டு வருவதால் அந்த நாடு குற்றங்கள் நிறைந்த நாடு என்று சொல்ல முடியாது.அது போல் இரும்புக்கரம் கொண்டு இருட்டில் குற்றங்களை வெளியே சொல்லாமல் இருந்து விடுவதால் மட்டுமே ஒரு நாடு புனிதபூமி என்று பெருமை கொண்டாட முடியாது.வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டு மக்களின் குணாதியங்களை எடை போடும் வலிமை பல நாடுகளிலிருந்தும் பணிநிமித்தமாக வாழும் பல நாட்டு மக்களையே சேரும்.குறிப்பாக பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்கள் மட்டுமே இவர்களின் நல்ல குணங்களையும்,யோக்கியதைகளையும் சொல்லும் தகுதி பெற்றவர்கள். ஆனால் இவை எந்த விதமான துணையுமில்லாமல் ஒருமித்து இல்லாமல் நெல்லிக்காய்கள் போல் சிதறிக்கிடக்கின்றன.குறைகளை பொருளாதாரம் என்ற ஒற்றைச் சொல்லால் கடந்து விடுகிறது.தூதரகங்கள் ஒப்புக்கு சப்பாணிகள் மட்டுமே.

ஆடுகளை பலிகொடுக்கும் பழக்கத்தில் மனித உயிர்களையும் தண்டனை என்ற பெயரில் பலிகொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மதநம்பிக்கை, மதமறுப்புக்கள் கடந்து கண்டிக்க வேண்டியது அவசியம்.

அமெரிக்காவின் சுயநலம்,சவுதி அரேபியாவின் மத மூர்க்க காட்டுமிராண்டித்தனம்,அறிவுக்கண் அவிந்து போன சவுதியின் சட்டங்களுக்கு ஜே போடும் பதிவுலக காட்டான்கள்!

Shame on America's economic ethics,Saudi's unreligious values and bloggers dehumanised blind support in the name of religion.

81 comments:

Robin said...

//ஆடுகளை பலிகொடுக்கும் பழக்கத்தில் மனித உயிர்களையும் தண்டனை என்ற பெயரில் பலிகொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மதநம்பிக்கை, மதமறுப்புக்கள் கடந்து கண்டிக்க வேண்டியது அவசியம்.// இந்தக் காட்டுமிராண்டித்தனமே மத(மல்ல மார்க்க) நம்பிக்கையிலிருந்துதானே வருகிறது .

ராஜ நடராஜன் said...

ராபின்!போணி செஞ்சுட்டீங்களா?

பதிவு போட்டும் அந்தக் காட்டுமிராண்டித்தனம் கண்ணை விட்டு அகலவில்லை.

வேகநரி said...

சிறப்பாக மார்க்கத்தின் மூர்கத்தை ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்.
//ஆடுகளை பலிகொடுக்கும் பழக்கத்தில் மனித உயிர்களையும் தண்டனை என்ற பெயரில் பலிகொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மதநம்பிக்கைமதமறுப்புக்கள் கடந்து கண்டிக்க வேண்டியது அவசியம்//
எல்லோரினதும் அவசிய கடமை.

ஜோதிஜி said...

சுண்டக்காய்ச்சிய பால் போல சுவைத்தது. வடிவம் சுருக்கம் நோக்கம் சிறப்பு. பொங்கல் வாழ்த்துகள்.

Anonymous said...

நடுநிலையான பார்வையில் மதம் மனக்கண்ணை மறைத்துவிடும், கழிவிரக்கம் கொன்று விடும் என்பதை பதிவு செய்துள்ளீர்கள் உரக்கச் சொன்னாலும், பக்குவமாய் சொன்னாலும் யாவும் செவிடர் காதுகளில் ஊதும் சங்கோ என்ற ஐயமே மிச்சம். பொங்கல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

சுருக்கமாகவும், நறுக்காகவும் பதிவு செய்வதை உங்களிடம் யாம் கற்றுக் கொள்ள வேண்டும். எழுத்து நடையும், கருத்துப் பதிவும் மிக அருமை.

கோவி.கண்ணன் said...

பொது இடத்தில் மரண தண்டனையும் அதனை தேர் திருவிழா போல் வேடிக்கை பார்க்க வரும் கூட்டம், அந்த நாட்டுமக்களின் ஒட்டுமொத்த மனநிலைகள் நினைக்க நாமும் இதே பூமியில் தான் பிறந்துள்ளோமா என்கிற ஐயமே ஏற்படுகிறது.

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

மன‌தில் உள்ளதை கொட்டி விட்டீர்கள்.சவுதி செய்வதை நியாயப் படுத்தும் புண்ணியவான்கள் மீதே கோபம் வருகிறது.

ஷரியாவில் பல்வகை,அதில் சவுதி,இரான்,சூடான் ஆகிய ஷரியா நடைமுறைகளே சிக்கல்.

1. உயிருக்கு உயிர் என்பதே மதச்சட்டம் என்றாலும் நடைமுறையில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்பதே உண்மை.

2.பிற நாட்டு ஏழைகள் மீதே அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இத்ன மூலம் குடிமக்க்ளை பய்முறுத்தி தன் ஆட்சியை சவுதி ஆளும் வர்க்கம் தக்க வைக்கிறது.

3. மத நிந்த்னை,மதமாற்றம் ஆகியவற்றுக்கும் மரணம் என மிக இயல்பாக அல்ஜசீர தொலைக்காட்சி செய்தியில் கூறுகிறார்கள்.
http://www.aljazeera.com/news/middleeast/2013/01/20131146361222980.html
Saudi Arabia rejects maid beheading criticism
Saudi Arabia "deplores" international condemnation over beheading of Sri Lankan maid convicted of killing baby.

he government spokesman condemned what he called "wrong information on the case," and denied that the maid was a minor when she committed the crime.

"As per her passport, she was 21-years-old when she committed the crime," he said, adding that "the kingdom does not allow minors to be brought as workers".

He said authorities had tried hard to convince the baby's family to accept "blood money," but they rejected any amnesty and insisted that the maid be executed.
...
Rape, murder, apostasy, armed robbery and drug trafficking are all punishable by death under Saudi Arabia's strict version of Islamic law, Sharia.

Last year the ultra-conservative Muslim kingdom beheaded 76 people, according to an AFP news agency tally based on official figures, while Human Rights Watch put the number at 69.

So far in 2013, three people have been executed.

சென்ற வருடம் கொல்லப்பட்ட 76 பேரில் சவுதிகள் எத்த்னைபேர் இருக்கும்!!!ம்ம்ம்ம்ம்ம்

சவுதியில் எண்ணெய் தீர்ந்தால்[ 20 வருடம் நம் கணிப்பு!] இந்த திமிர் காணாமல் போய்விடும்,ஜனநாயகம் வந்து விடும் என்றாலும் அதுவரையிலும் எத்னை உயிர் போகுமோ?

அகவே சவுதி போல் ஷரியா சர்வரோஹ நிவாரணி என்பவர்களை அனைவரும் கண்டிப்பதே இந்தக் காட்டுமிராண்டித் த்னங்களை ஒழிக்கும் முதல் பணி.

Unknown said...

இது குறித்து நிறைய பதிவுகள் வந்து விட்டது பதிவுலகதிலும் நிறைய கருத்து மோதல்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றன ...இருப்பினும் உங்கள் நடையில் நான் மெய் சிலிர்த்து விட்டேன் ....நேர்மையான பார்வை உங்கள் எழுத்தில் உள்ளது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்

வவ்வால் said...

ராச நட,

தண்டனையை நிறைவேற்றிட்டாங்களா, இன்னும் நாளாகும்னுல நினைச்சேன்.

இந்த விடயத்தை பற்றி பேசக்கூட கடுப்பாயிடுச்சு, குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பது வேறு ஆனால் அதனையும் கூட்டமா ரசிப்பது ரொம்ப கொடுமை,அதையும் ஆஹா ஓஹோன்னு சிலாகிக்க ஒரு கூட்டம் பதிவுலகில் நடமாடுவது உண்மையில் வருத்தம் தருகிறது.

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் , அதற்கு நடுவில மதமென்று மனிதர்கள் ஆடும் ஆட்டமிருக்கே சகிக்கலை :-((

ராஜ நடராஜன் said...

வேகநரி!நீங்கள் தொடர்ந்து மத எதிர்ப்பு பின்னூட்டங்கள் இடும் போது நீங்களும் ஒரு மார்க்கமாக இருக்கிறீர்களோ என்று தோன்றும்.ஆனால் ரிசானாவின் மரணத்துக்கு மதசட்ட வக்காலத்து வாங்கும் மனிதமின்மையற்றவர்களின் கருத்துக்கள் வெளியானதைப்பார்த்து உங்களை போன்றவர்களின் எதிர்(ப்பு)குரல்கள் இந்த கணத்தில் அவசியமான ஒன்றே என தோன்றுகிறது.

ராஜ நடராஜன் said...

இக்பால் செல்வன்!இந்த காலகட்டத்தில் உங்கள் தொடர் பதிவுகளின் அவசியம் புரிகிறது.

இது வரையில் மதக்கல்வரங்களையும்,மனிதர்களைப் பிரிக்கும் தீய செயல்களையும் மதவாதிகளே கையில் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.இவற்றிற்கெல்லாம் உச்சம் ஒரு ஏழைப்பெண்ணின் மரணதண்டனையும் அதனை வேடிக்கை பார்க்கும் கொடுமையும்.

சொல்வதை சொல்லி வைப்போம்.காதுள்ளவர் கேட்க கடவர்.பகுத்தறிவு உள்ளவர் சிந்திக்க கடவர்.மூளைச் சலவை செய்யப்பட்டவர் குண்டுகள் வெடிக்க கடவர்.அது முடியாத பட்சத்தில் அடுத்தவர்களை மூளைச்சலவை செய்யக்கடவர்.

ராஜ நடராஜன் said...

கண்ணண்!மீண்டும் பதிவுலகில் நீங்கள் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கருத்துப் பரிமாறல்கள்,உலக நடப்புக்கள்,வாசிப்பு அனுபவங்கள் போன்றவை ஒரு மனிதனை செம்மைப்படுத்த உதவுகின்றன.வளைகுடா நாடுகளின் முகமாற்றத்தை உருவாக்கும் சக்தியாகவும்,உலகின் ஜன்னலாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன எனலாம்.சவுதியை சுற்றியிருக்கும் நாடுகள் ஓரளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்கின்றன என்ற போதிலும் மொத்த வளைகுடா நாடுகளின் பின் தங்கிய முகமாக சவுதியின் பிற்போக்குத்தனமே முன்வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் பல பிரச்சினைகள் இருந்தாலும் கூட மதசட்டமென்ற பெயரில் மனித பலியும் நவீன விஞ்ஞான மாற்றங்களிலும் கற்காலத்துக்கு இட்டுச்செல்வது சவுதியாக மட்டுமே இருக்க முடியும்.சவுதி மண் பூமியின் சாபம் என்பதை ரிசானாவின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!வழக்கமாக இதுபோன்ற பதிவுகள் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டீங்களே!

பொங்கல் வாழ்த்து சொல்ல வந்ததற்கும் வாழ்த்து சொல்லும் மரபுக்காக வேண்டியும் பொங்கல் வாழ்த்து சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!மதவாத கருத்துக்களுக்கு தொடர்ந்து எதிர் விம்ர்சனங்களை வைப்பவர்கள் இங்கே பின்னூட்டங்களில் கலந்து கொண்டாலும் கூட ஹதீஸ் போன்றவைகளில் கூட உள்ளே நுழைந்து வாதங்களை முன்வைப்பதிலும்,மதவாதங்களுக்கு எதிரான ஆதார கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதில் நீங்கள் குறிப்பிடத்தக்கவர்.உங்களுக்கே பேரிச்சம் பழம் தரும் மூளையின் நாளங்கள் கரிந்து போனவர்களை நினைத்தால் ஒருபுறம் வருத்தமாகவும்,ஒரு ஏழைப்பெண்ணின் ஆட்டுக்கெடா வெட்டு பலிக்கும் கூட மதவாதங்கள் முன்வைத்து நியாயப்படுத்துபவர்களை நினைத்தால் கோபம் பீரிட்டுக்கொண்டு வருகிறது.கருத்துரிமை அவரவர் தனி உரிமை என்ற போதிலும் முட்டாள்தனமான வாதங்களை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

வகாபிச பலிகடா காணொளியை பார்க்கும் சோகம் ஏற்பட்டது போல் கல்லெறிந்து கொல்லும் ஷியாதனத்தை காணும் நாள் வராமல் இருக்கட்டும்.

1. வளைகுடா நாடுகளுக்கு மேற்கத்திய நாட்டவர்கள் வரும் போது பெரும்பான்மையானவர்கள் அந்த நாடுகளின் சட்டதிட்டங்களோடு வெளியுலகில் இணைந்து வாழ கற்றுக்கொள்கிறார்கள்.அதே நேரத்தில் அவர்கள் வசிக்குமிடத்தில் அவர்களது அனைத்து கலாச்சாரத்தோடும்தான் வாழ்கிறார்கள்.மேலும் ஏனைய ஆசிய நாட்டவர்கள் போல் அரபியர்களுடன் கூட்டங்களில் இணைவதில்லை. இவற்றையெல்லாம் மீறி யாராவது ஒருவர் குற்றச்செயல்களில் மாட்டிக்கொண்டால் கூட அவர்கள் சார்ந்த தூதரகங்கள் பிரச்சினையை டிப்ளமெட்டிக்காக சாதித்து விடுவதால் பாரபட்ச தோற்றம் ஏற்படுகிறது என நினைக்கின்றேன்.

2.வாகனம் வாங்க,விற்க போன்ற சில விசயங்களில் பொதுச்சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட அவர்களின் நலன் சார்ந்த விசயங்களில் இருவித சட்டமுறைகளை கடைப்பிடிக்கப்படுகின்றன.

சவுதி ஆட்சி முறையில் மதவாதிகளின் ஆதிக்கம் ஒருபுறம்,மன்னர்களின் தொடர் ஆட்சிக்கு எந்த பங்கமும் வராதபடி மத ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொண்டே நகரவேண்டிய கட்டாயம் என்ற கோட்டிற்குள் சவுதியின் சட்டதிட்டங்கள் கட்டமைக்கப்படுகின்ற்து என நினைக்கிறேன்.இதனை விவாதிக்கலாமென்று யாரையாவது கூப்பிட்டால் வசன குறிப்புக்களைத் தந்து குழப்பி விடுகிறார்கள்:)

3.அல்ஜசிரா கத்தார் மன்னர்களது உதவியால நிறுவப்பட்ட தொலைக்காட்சி ஊடகம் என்ற போதிலும் அரபுதேசங்களின் குரலாகவே ஆரம்பிக்கப்பட்டபொழுது தோன்றியது.[பின்லேடன் குரல்,காணொளி போன்றவற்றை வெளிக்கொண்டு வந்ததில் அல்ஜசிராவுக்கு முக்கிய பங்குண்டு.ஜார்ஜ் புஷ்சின் ஈராக் படையெடுப்பிற்குப் பின் அதன் திசை மெல்ல மாறத்துவங்கிய போதிலும் மேற்கத்திய நாடுகளின் தொலைக்காட்சி ஊடகங்களான பி.பி.சி,சி.என்.என் போன்றவற்றிற்கு மாற்றாக அல்ஜசிரா உள்ளது.

ரிசானாவின் வழக்கின் வாத,எதிர்வாதங்கள் அனைத்தையும் பின் தள்ளி ஆட்டுக்கெடா வெட்டு மரணதண்டனை முந்திக்கொள்கிறது.

சவுதி மட்டுமல்ல ஏனைய எண்ணைக்கிணறு நாடுகள் அனைத்திலும் கூட 20 வருடங்களில் முடிவுக்கு வந்து விடும் என்பது இரவுமில்லா பகலுமில்லா கனவு:)

இதற்கான சாவி அமெரிக்காகாரனிடம் இருக்கிறது.ஆனால் அந்த சாவியை தற்போதைக்கு உபயோகிப்பதில்லையென்பதை who killed the electric car என்ற ஆவண திரைப்படத்தைப் பார்த்தால் புரியும்.

வருடம் பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை.அதற்குள் 3 தலையா?உங்களின் ஜேம்ஸ்பாண்ட் 007 யாராவது சவுதியில் களம் கொண்டிருக்கிறார்களா என்ன?

ஒருவர் மீது வெறுப்பு கொள்வதை விட நட்போடு எதிர்விவாதம் செய்வது நல்லது என்ற நமது பார்வையை இந்த பதிவின் சாரம் மாற்றியிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

நதி சொல்லவா?
நாராயணன் சொல்லவா?
மணி சொல்லவா?
நட்போடு ஹாய் சொல்லவா?

இந்த வாழ்க்கையை இனிமையாக்குவது எப்படி என்ற மெட்டீரியலிசத்துக்கு எதிராக இந்த வாழ்க்கை கசந்தாலும் பரவாயில்லை,இறந்த பின் வாழ்க்கைக்கு இலக்கணம் சொல்லும் அதுவும் ஒரு நரபலிக்கு வக்காலத்து வாங்கும் மனிதர்களை நினைத்தால் வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

துளசி கோபால் said...

மனசு பாரமாகிக்கிடக்கு:(

ராஜ நடராஜன் said...

வவ்சு!உங்ககிட்ட மொக்கை போடும் போதும்,பதிவுகளின் பல கருத்துக்களையும் மேயும் போதும் கூட ஒரு மரணத்தின் விபரீதம் எனக்கு தெரியவில்லை.

நீங்க மண்டையில் சுர்ருன்னு ஏறுற மாதிரி இட்ட மார்க்க பின்னூட்டங்களுக்கான பொருள் விளக்கமே இப்பொழுதுதான் மெல்ல புரிகிறது.

சார்வாகன் said...

வணக்கம் சகோ இராசநட,

நாம் மதபுத்தக ஆய்வாளர் என்ற வகையில் மதபுத்த்க மதங்களின் மீது வரலாறு,அறிவியல் சார் விமர்சனம் வைக்கிறோம்.இப்போதிய மதப் பிரச்சார கருத்துகளுக்கு பழைய புத்த்கங்களில் சான்று இல்லை என்பதே உண்மை.

தங்களைப் பாதிக்கும் விடயம் என்றால் கைவிடும் மதவாதிகள் ,மனிதவிரோத சட்டங்களை அமல்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

இஸ்லாம் பன்முகத் தனமை கொண்ட மதம் என்பதும்,இந்தியாவில் மண்ணுக்கேற்ப பல விடயங்களை மாற்றிக் கொண்டது.ஆனால் அதில் வாஹாபியம் ஒரு வித்தியாசமான பிரிவு என்பதும், சவுதிமயமாக்கல்[உணர்வால் சவுதி] என்ற குறிக்கோளில்தான் செயல்படுகிறது. அது தமிழ் இஸ்லாமியர்களிடையே கூட ஒரு சிறுபான்மை என்பதே உண்மை.

வகாபிய பிரச்சார‌த்தை எதிர்த்து பல இஸ்லாமியர்களும் போராடுகின்றனர் என்பதும் உண்மையே.

பாகிஸ்தானின் சீரழிவுக்கு ஜியாவுல் ஹக்கின் வஹாபியமே காரணம்!!.

சவுதி பொருளாதாரம் சீர்குலையும் போது வஹாபியம் மட்டுப்படும் அல்லது காணாமல் போகும் என்பதும் உண்மையே!!


அதுவரை உயிர்கள் பலியாகும் என்பது மிகவும் வருத்தமான செய்தியே!!

நம் பங்குக்கு தமிழ் பதிவுலகில் வஹாபிகளுக்கு சுளுக்கெடுக்கும் பணியை தொடர்ந்து செய்வோம்!!

நன்றி!!

? said...

மான்னாவுக்கு மூனா... தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு ராசா! (பதிவை பலர் பாராட்டியது போக எனக்கு கிடைச்சுது தலைப்புதான்!)

அடுத்தவனின் வலி பற்றி கொஞ்சமும் கவலையின்றி அதை ரசித்தபடி துடிக்கவைத்து கொல்லும் சைகோபாத் கொலையாளிகள் பற்றிய டாக்குமென்டரி தொடரை பார்த்துகொண்டிக்கிறேன். அவர்களுக்கு இயற்கையினாலும் வளர்ப்பினாலும் மனப்பிறழ்ச்சி. இங்கு மதம் அந்த தூண்டலை செய்கிறது. கொடுமை!

முன்பெல்லாம் பதிவுலகில் இந்து மதம் பொந்து மதம் என செத்த பாம்பினை சேஃபாக அடித்துக் கொண்டிருப்பார்கள். இசெ,வவ்வால், வேகநரி,எதிகலிஸட் சார்வாகன் மற்றும் உம்மைப் போன்ற பதிவர்கள் நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். நீங்க எழுதியதுபோல் அவர்களின் சேவையினை தேவையாக்குகிறது இந்த பலி!

வருண் said...

நடராஜன்:

அந்த இலங்கையை சேர்ந்த இஸ்ஸ்லாமியப் பெண்ணின் பரிதாப மரண தண்டனையை விம்மார்சிக்கும்போது நீங்க எதுக்கு அமெரிக்காவை இழுக்கிறீங்கணு தெரியலை..அமெரிக்கா இங்கே தேவையே இல்லாதது!

ஒரு வெளிநாட்டுப் பெண், பிழைக்க வந்தவள், ஒரு சிறு குழந்தையை கொன்னுயிருப்பாளா?னு கேட்டீங்கணா என்னுடைய 6 வது அறிவு சொல்வது.. அது சாத்தியமே இல்லை என்பதே.

அதனால் இந்த நிகழ்வு ரொம்ப பரிதாபமாக இருக்கிறது..:(

சரி, இதுபோல் எத்தனை இன்னும் பார்க்கணும். எதுக்காக மனிதனை மதிக்கத் தெரியாத, மதவெறி பிடித்து அலையும், மனிதாபிமானம்னா என்னனு தெரியாத ஆறறிவு இல்லாத முட்டாள்கள் நிறைந்து வழியும் இது போல் (மிடில் ஈஸ்ட்) நாடுகளுக்கு இன்னும் போறாங்க?

இப்படிப் போய் மனிதாபமானமில்லா ஜந்துகள்ளுக்கு உழைத்து சாவதற்கு, பிறந்த நாட்டிலேயே பிச்சை எடுக்கலாம்..

என்னைக்கேட்டால் அங்கே உள்ளவங்க (இலங்கையிலிருந்து போனவங்க) எல்லாரும் உடனே திரும்பி வரனும். அதைச் செய்யாமல் மறுபடியும் மறுபடியும் பலியாகிகொண்டே அந்த நாட்டு சட்டத்தை குற்றம் சொல்லிக்கொண்டு இருந்தால், யாரை குற்றம் சொல்வது???

வருண் said...

***Shame on America's economic ethics***

இது ரொம்ப ரொம்ப அவசியமாக்கும்?

இதுபோல் தலையை வெட்டும் மனுசனை மதிக்கத் தெரியாத காட்டுமிராண்டி நாட்டை விமர்சிக்கும்போது நீங்க அமெரிக்கா, சதாம் உசேன் எல்லாம் இழுப்பட்துதான் வேடிக்கை.

இங்கே தனி ஒரு பொதுஜனத்தை இரக்கமில்லாமல் தண்டிப்பதை பத்திதான் பேசுறோம். ச்தாம் உசேன், அமெரிக்க தந்திரம் எல்லாம் தேவையே இல்லாத "நாண்செண்ஸ்"!

MANO நாஞ்சில் மனோ said...

ஈராக்கின் ரத்தம் படிந்த வரலாறு எப்படியிருந்த போதிலும் உலக நாகரீக தொட்டில்களில் ஈராக்கும் ஒன்று.ஒரு இஸ்லாமிய தேசம் என்பதோடு அரேபிய நாடுகளில் ஓரளவுக்கு செகுலரான நாடாகவும் ஈராக்கை சொல்லலாம். வரலாறுகள் தவறாக மாற்றி எழுதப்படுகின்றன என்பதற்கு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பும் ஒன்று எனலாம்.//

ஆம் நண்பா வரலாறுகள் மாற்றப் படுவதால் வரும் விளைவுகள் பயங்கரமாகத்தான் இருக்கிறது...!

MANO நாஞ்சில் மனோ said...

சுருங்க சொன்னாலும் செமையான நெத்தியடியாக சொல்லிவிட்டீர்கள் நண்பா...!

செங்கோவி said...

எம்மைப் போன்றோரின் மன வேதனையை அழுத்தமாக பதிவில் கொண்டு வந்துவிட்டீர்கள். இதனைப் பற்றிய செய்திகளையும், சில மூர்க்கர்களின் ஆதரவு வாதங்களையும் பார்த்தபோது, மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.....உங்கள் பதிவுக்கு நன்றி.

அஞ்சா சிங்கம் said...

இந்த நிகழ்ச்சி குறித்த பதிவுகளில் நான் பின்னூட்டம் இடுவதை வேண்டும் என்றே தவிர்த்து வந்தேன் .
இந்த விஷயத்தில் எதிர்வாதம் யாராவது புரிந்தால் நான் கட்டுபாட்டை இழந்து விடுவேன் என்று எனக்கு தெரியும் .
இதை வக்காலத்து வாங்கி எழுதிய சில பதிவுகளை பார்த்தேன் .
அவர்கள் சொல்லும் குற்றவாளிகளின் பட்டியல் முதல் குற்றவாளி அந்த பெண்ணின் தாயார் ,வெளிநாட்டிற்கு பிழைக்க அனுப்பியதால் .
ரெண்டாவது குற்றவாளி தூதரகங்கள் சரியான மொழிபெயர்பாலரை நிறுவ வில்லை .
மூன்றாவது குற்றவாளி இறந்த குழந்தையின் பெற்றோர்கள் . அவர்கள் அந்த சிறுமியை மன்னிக்க தவறியதால் .
ஆனால் எந்த விதத்திலும் சவ்தி அரசாங்கம் குற்றவாளி இல்லை . அவர்கள் நியாயமான தீர்ப்பயே அளித்தார்கள் என்று.
இப்படி வக்காலத்து வாங்குபவர்களை சவ்தி பாணியில் தண்டனை குடுக்க மனம் ஏங்குகிறது .
நடு ரோட்டில் உட்கார வைத்து . எல்லோரும் சுற்றி நின்று காரி துப்பலாம் ..........

Unknown said...

நல்ல பதிவு நண்பரே,
பரிதாபத்திற்குறிய மரணம் ஆனால் மத வி(யா)தியால் நியாயம் கூறுகிறார்கள் என்பதை நினைக்கும் போது இவர்கள் நாட்டில் வாழும் காட்டுமிராண்டிகளே!!காகித புத்தகத்தை நம்பி வாழும் இவர்கள் ஒருபோதும் மாற்றுக் கருத்தை ஏற்காத எண்ணமுடையவர்கள். மனிதநேயத்தையும்,மாற்றத்தையும் விரும்பாதவர்கள் எதிர்காலம் இவர்களுக்கு பாடம் கற்பிக்கும்.

வவ்வால் said...

ராச நட,

//நீங்க மண்டையில் சுர்ருன்னு ஏறுற மாதிரி இட்ட மார்க்க பின்னூட்டங்களுக்கான பொருள் விளக்கமே இப்பொழுதுதான் மெல்ல புரிகிறது.//

உங்களுக்கு அப்போவே புரிந்திருந்தால் தான் ஆச்சர்யப்படணும் :-))

நான் மதத்தினை பின்ப்பற்றுவதையோ, விதந்தோம்பி பேசி மகிழ்வதையோ கூட எதிர்க்கவில்லை, ஆனால் மனித நேயம், மக்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதை கூட மதம் சொல்லிடுச்சு எனவே சரி என கண்மூடித்தனமாக ஆதரிப்பதையும், மதத்தின் பெயரால் செய்யப்படும் ஏமாற்று வேலைகளுக்கும் நியாயம் கற்பிப்பதையுமே எதிர்த்தேன்.

இன்னும் சொல்லப்போனால் எல்லா மதத்தையும் விமர்சித்தேன் ,ஆனால் என்னமோ மார்க்கப்பந்துக்களை மட்டும் விமர்சித்தாக நினைத்துக்கொண்டார்கள் :-))

இந்துமதமோ, அரேபிய மதமோ , மனிதனுக்கு பிறகு தான் மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.

மனிதம் தவிர்த்து மதம் பிடித்து அலைந்தால் நானும் விடாமல் கொட்டிக்கிட்டே இருப்பேன் :-))

இணையத்திலும் , கற்கால மூட நம்பிக்கைகளுக்கு உயிரூட்டுவதை உங்களை போன்ற உலக அனுபவமுள்ளவர்கள் இனியும் கண்டும் காணாமல் செல்லாமல் ,கண்டிப்பதே தமிழ் இணைய சமூகத்தின் மாற்றம் எனலாம்.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

துளசி டீச்சர்!நலமாக இருக்கிறீர்களா?உங்களவரையும் கேட்டதாக சொல்லவும்.

உங்களுக்கு மனம் பாரம்!இன்னும் சிலர் மண்ணுக்கு பாரம் என்கிற மாதிரிதான் பொதுவெளி கருத்து தெரிவிக்கிறார்கள்.

நான் எந்த பதிவுக்கும் இவ்வளவு பாதித்த மாதிரி தெரியவில்லை.அந்த அப்பாவி பெண்ணின் மரணத்தின் மௌனமே விடியற்காலை தூக்கத்தைக் கலைத்தது.

suvanappiriyan said...

//அமெரிக்காவின் சுயநலம்,சவுதி அரேபியாவின் மத மூர்க்க காட்டுமிராண்டித்தனம்,அறிவுக்கண் அவிந்து போன சவுதியின் சட்டங்களுக்கு ஜே போடும் பதிவுலக காட்டான்கள்!//

'இந்தியாவின் சுயநலம். பார்ப்பனர்களின் மத மூர்க்க காட்டுமிராண்டித் தனம்: அறிவுக்கண் அவிந்து போன மனுதர்ம சட்டங்களுக்கு இன்னும் ஜே போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில காட்டுமிராண்டிக் கூட்டம்'

என்று கூட நானும் எழுதலாம். ஒரு குற்றவாளிக்கு கொடுக்கும் தண்டனையை பொது மக்கள் மத்தியில் நிறைவேற்றப் படுவதே அதை பார்க்கும் யாரும் அந்த குற்றத்தை இனி ஒரு தரம் செய்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.

இங்கு அந்த இலங்கைப் பெண்ணுக்கு அனுதாபம் காட்டுவதை விட இஸ்லாமிய சட்டத்தை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறது ஒரு கூறு கெட்ட கூட்டம்.

எல்லோரும் மதங்களை உதறினாலும் இந்த மார்க்க பந்துக்களின் இஸ்லாமிய பிடிப்பு நாளுக்கு நாள் இருகிக் கொண்டல்லவா செல்கிறது என்ற வயிற்றெரிச்சலும் பின்னூட்டங்களில் தெரிகிறது.

அந்த பெண் குற்றவாளியா இல்லையா என்பதை அந்த பெண்ணும் இறைவனுமே உண்மையை அறிவர். இந்த அளவு வறுமைக்கு காரணமாக்கிய சமூகம்தான் முதல் குற்றவாளி. பொருளாதார வசதி இருந்திருந்தால் இது போன்று ஒரு பாலைவனத்தில் தனது உயிரை விட அந்த அபலைப் பெண்ணுக்கு எந்த அவசியமும் வந்திருக்காது. மருத்துவரின் அறிக்கையும், தானே கொலை செய்தேன் என்று கையொப்பமிட்துமே அந்த பெண்ணுக்கு அவரது முடிவை கொண்டு வந்து விட்டுள்ளது. மிரட்டி வாங்கப்பட்டடிருந்தால் அதன் தண்டனையை சமபந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள். அந்த பெண்ணின் பெற்றோர்களும் பொருந்திக் கொண்டார்கள். மன்னரும் மன்னிக்கச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அந்த பெற்றோர் மன்னிக்கவில்லை எனும் போது வேறு என்ன வழி?

ராஜநடராஜனோ, வவ்வாலோ, வேகநரியோ, சார்வாகனோ, இக்பால் செல்வனோ போடும் கூச்சல்களை புறம் தள்ளி விட்டு வழக்கம் போல் தெளிந்த நீரோடையாக இஸ்லாம் தனது பயணத்தை இன்னும் வீரியத்தோடு தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

எனது நாட்டின் வர்ணாசிரம கேட்டை நீக்கும் தகுதி ஒரே மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே உண்டு. அது உங்களைப் போன்றவர்கள் வெறுத்தாலும் நடப்பதை தடுக்க முடியாது.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!நான் வளர்ந்த முறையில் இந்து,கிறுஸ்தவ,இஸ்லாமிய நிலைகளை தாண்டி வந்திருக்கிறேன்.இஸ்லாமிய நண்பர்களாக இருப்பவர்கள் யாரும் மதம் குறித்தோ அல்லது மதபரப்பல் குறித்தோ பேசுவதில்லை.அவர்களின் சுயநம்பிக்கையென்ற அளவில்தான் தொழுகைகள் கூட செய்கிறார்கள்.

இங்கே சுற்றித்திரிபவர்களே மத திணிப்புக்களையும் அதனையும் அடுத்தவர்கள் புரிந்து கொள்ளாத வண்ணம் வெறுப்பையும் உருவாக்கும் விதமாக கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.வகாபியென்ற சொல்லே இவர்களின் மதவெறியால் இங்கே பதிவுலகில் நான் கற்றுக்கொண்ட ஒன்று.

வவ்வாலிடம் குட்டிக்கதையொன்று சொன்னால் நான் ரொம்ப தொலைக்காட்சி பார்க்கிறேன் என்று மண்டையில் கொட்ட வருவார் என்பதால் உங்களிடம் ஒரு கதை தொடுக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் இஸ்லாமியம் பன்முகத்தன்மை கொண்டது என்பதோடு அடிப்படையில் பணிவு,ஈகை,சமத்துவம் என்பவற்றையும் உள்வாங்கிக்கொண்டதாக இருந்தது.துனிசியாவில் இப்படியான நம்பிக்கை கொண்ட ஒரு முல்லா ஜார்ஜ் புஷ்,பின்லேடன் காலகட்டத்துக்கும் முன்னால் தனது மகன் இஸ்லாமிய வழியில் நடக்கவேண்டுமென்று ஜிகாத் என்று பெயர் வைத்தாராம்.பின்லேடன் சொல்லிக்கொடுத்த ஜிகாத் பிரபலமானவுடன் அந்த அப்பாவி முல்லாவை நீ ஏன் ஜிகாத் என்று பெயர் வைத்தாய் என்று ஜார்ஜ் புஷ் காலத்தில் சி.ஐ.ஏக்காரன் கேள்வி கேட்டு துனிஷியா நாட்டின் உதவியோடு சிறை வைக்கப்பட்டாராம்.அடிப்படைகளை விட்டு விட்டு மதப்புத்தகத்தில் இருக்கும் கருப்பு பக்கங்களை முன்னிறுத்தி மதத்திற்கு அவதூறுகளைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஒரு கண்ணாடி போட்ட டாக்டர்(பெயர் நினைவில்லை),எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன்,இன்னும் சிலர் அரசியல் சார்ந்தும் மதம்,சமூகம்,அரசியல் சார்ந்து பேசுகிறார்கள்.ஆனால் இவர்களின் மிதவாதத்தன்மைகளையும் கடந்து மதஅடிப்படைவாதிகள் தாங்களே முன்னுக்கு நிற்கிற மாதிரி பிலிம் காட்டுவதால் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் கெட்ட பெயரை உருவாக்குகின்றனர்.

பாகிஸ்தானின் சீரழிவு மட்டுமல்ல,வகாபியத்தின் உலக கனவே சவுதி அரசின் பொருளாதர உதவியோடு முன்னர் பாகிஸ்தானில்தான் வஹாபிய வித்து விதைக்கப்பட்டது.உலக மாநாடுகள் கூட நிகழ்ந்தது.எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் என்கிற இந்திய கொள்கைக்குப் பின்பு பின்லேடன்,ஜார்ஜ் புஷ் மோதல் வகாபியசத்தின் அசிங்க முகங்களை உலகுக்கு கொண்டு வந்து விட்டது.

இதை சாக்காக வைத்துக்கொண்டு இந்துத்வாவாதிகள் ஆடும் டபுள் ரோலை இன்னொரு நேரத்தில் பேசுவோம்.

ராஜ நடராஜன் said...

நந்தவனத்தான்!நாம் இப்பொழுது வேறு களத்தில் நிற்கிறோம் என்று உணர்ந்து வவ்வாலோடு சேர்ந்து மொத்தாம இருப்பதற்கு முதலில் நன்றி.

தலைப்பு நேற்று படித்த ரிசானாவின் பதிவுகளின் தாக்கத்திலும்,கோபத்திலும் வந்து விட்டது.

சைகோபாத் கொலையாளிகள் பற்றிய டாக்குமென்டரி என்பதால் உள்வாங்கிக்கொள்ள சில விசயங்கள் கிடைக்கும்.எனக்கு இந்த ரத்தம் சார்ந்த படங்கள் கூட பிடிப்பதில்லை.

ரம்பாவை ரசிப்பவனிடம் ரம்பம் படம் பார்ன்னா எப்படியிருக்கும்:)இதுல வேறு ரம்பம் பார்ட் 1,2,3,4 வேற.
கதை சொல்லும் பாணி தவிர்த்து குவான்டின் Reservoir Dogs கூட இம்சைதான்.

அதென்னமோ தெரியல மதம் சார்ந்த பதிவுகளைக் கடந்து செல்வோமென்று நினைத்தாலும் கூட இவர்களின் தட்டைப்பார்வைக்கு எதிர் சமர் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்படுகிறோம்.

Robin said...

//ஆனால் இவர்களின் மிதவாதத்தன்மைகளையும் கடந்து மதஅடிப்படைவாதிகள் தாங்களே முன்னுக்கு நிற்கிற மாதிரி பிலிம் காட்டுவதால் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் கெட்ட பெயரை உருவாக்குகின்றனர்.// வஹாபிகளால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான். இஸ்லாத்தின் இன்னொரு முகம் வெளியில் தெரியவந்ததே இவர்கள் மற்ற மதங்களை தாக்கி தங்கள் மதத்தை வளர்க்க நினைக்கும் முரட்டுப் போக்கினால்தான்.

ராஜ நடராஜன் said...

வருண்!வாங்க!நீங்களாவது அமெரிக்காவிற்கு துணையா வந்தீங்களே!முன்பெல்லாம் ஹாலிவுட் படம் பார்த்தோமா!ஆகா என வியந்தோமோ என இருந்த காலம் மெல்ல பி.பி.சி,சி.என்.என் என நகர்ந்து இணைய தொடர்பால் உலகப்பார்வையில் சில பக்கங்களை உணரமுடிகிறது.அமெரிக்க டாலர் கிடுகிடுத்தால் எங்கோயோ உட்கார்ந்திருக்கும் மூன்றாம் நாட்டின் முதுகெலும்பையே ஆட்டிப்பார்க்கிறது.
WMD,IMF,ABM போன்ற மூன்றெழுத்துக்கள் அமெரிக்க நலன்களுக்காகவே உருவாகினாலும் இதன் தாக்கங்கள் எங்கோ ஒட்டகம் மேய்க்கும் என்னைப் போன்றவர்களை மறைமுகமாக பாதிக்கிறது.

அம்னெஸ்டி,இன்னும் பல மனித உரிமைக் குழுக்களின் குரலையும் தாண்டி உலக தீர்ப்புக்கள் எழுதுவது அமெரிக்காவே.

எங்கெங்கோ மூக்கை நுழைக்கும் அமெரிக்கா சவுதி விசயத்தில் தலையிடுவதில்லை.காரணம் எண்ணைப்பொருளாதாரம்.

சமூகம்,அரசியல்,பொருளாதாரம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.அதிலும் எண்ணை பொருளாதாரம் சார்ந்த சமூக நிகழ்வுகளின் பின்ணனியில் அமெரிக்கா இருக்கும் போது அமெரிக்கா,சதாம் உசேன்,சவுதி,ரிசானா அனைத்தும் பட்டாம்பூச்சி எபக்ட் மாதிரி.

நான் சென்சாகவே பேசுகிறேன்:)

Robin said...

//எனது நாட்டின் வர்ணாசிரம கேட்டை நீக்கும் தகுதி ஒரே மார்க்கமாகிய இஸ்லாத்திற்கே உண்டு.//

அரபுக் காட்டுமிராண்டித்தனத்தையே இஸ்லாத்தால் நீக்க முடியவில்லை.

"சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர், வீட்டு எஜமானின் தாக்குதலுக்கு இலக்காகி வீதியில் வீசப்பட்ட நிலையில், பொலிஸாரால் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், அப்பெண் பணிப்பெண்ணாக சேர்ந்த வீட்டு எஜமானால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது இடது கையில் 5 வெட்டுக் காயங்களும் வலது கையில் எரிகாயங்களும் காணப்படுகின்றன. அத்துடன், தனது தலையில் ஆடைகளைக் கழுவும் இரசாயன பதார்த்தம் போடப்பட்டதாகவும் தாக்குதலினால் தான் பாதிக்கப்பட்டதாகவும் இப்பெண் குறிப்பிட்டுள்ளார்."

http://eutamilar.com/6400-2013-01-15-08-17-22.html

கல்வெட்டு said...

சமையல் வேலைக்கு வந்த பெண் என்று தெரிகிறது.
சமையல் வேலைக்கு வந்த பெண்ணிடம் ஏன் குழந்தையைப் பார்க்க கொடுத்தார்கள்? ஒரு வேலை எல்லா வேலைகளையும் செய்யும் அடிமையா?

அப்படியே அவர் குழந்தையைக் கொண்ரு இருந்தாலும் அதற்கான தண்டனையை சமபந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்களே ஏன் அரசு???

.

வருண் said...

சுவனப் பிரியன்:

///இங்கு அந்த இலங்கைப் பெண்ணுக்கு அனுதாபம் காட்டுவதை விட இஸ்லாமிய சட்டத்தை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறது ஒரு கூறு கெட்ட கூட்டம்.///

நீங்க என்ன பண்ணுறீங்க? இஸ்லாமிய (சவுதி சட்டத்தை?) சரினு சொல்லி ஒரு பெண் பரிதாபமாகக் கொல்லப்படுவதை கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் பார்க்கிறீங்க.

பொதுஜனங்களிடம் உங்களுக்கு கொஞ்ச நன்சம் இருந்த மரியாதையும் காற்றில் பறக்க விடுறீங்க! உங்களைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு!

வருண் said...

***எங்கெங்கோ மூக்கை நுழைக்கும் அமெரிக்கா சவுதி விசயத்தில் தலையிடுவதில்லை.காரணம் எண்ணைப்பொருளாதாரம்.***

உள்நாட்டு சட்டதிட்டங்களில் அமெரிக்கா தலையிட முடியாதுனு உங்களுக்குத் தெரியாதா???

வருண் said...

***அந்த பெண் குற்றவாளியா இல்லையா என்பதை அந்த பெண்ணும் இறைவனுமே உண்மையை அறிவர்.****

அப்படியா?!!!

****இந்த அளவு வறுமைக்கு காரணமாக்கிய சமூகம்தான் முதல் குற்றவாளி. பொருளாதார வசதி இருந்திருந்தால் இது போன்று ஒரு பாலைவனத்தில் தனது உயிரை விட அந்த அபலைப் பெண்ணுக்கு எந்த அவசியமும் வந்திருக்காது.****

பணக்காரனெல்லாம் தப்பு செய்றதே இல்லையா???பாலைவனத்தில் சாகிறது இல்லையா??? இல்லைனா இன்னொரு நாட்டில் மறைந்து வாழும்போது கொல்லப்படுவதில்லையா?

***மருத்துவரின் அறிக்கையும், தானே கொலை செய்தேன் என்று கையொப்பமிட்துமே அந்த பெண்ணுக்கு அவரது முடிவை கொண்டு வந்து விட்டுள்ளது. ****

இந்த சூழ்நிலையில். கொலை செய்தோம் என்று ஏற்றுக்கொண்டால், தனக்கு தண்டனை குறையலாம் என்ருகூட நினைத்து இருக்காலாம். அந்தப்பென் அறியாமை இருப்பவள்னு தெரியலையா உங்களுக்கு?

***மிரட்டி வாங்கப்பட்டடிருந்தால் அதன் தண்டனையை சமபந்தப்பட்டவர்கள் இறைவனிடம் பெற்றுக் கொள்வார்கள்.***

அந்தப் பெண் நிரபராதி என்றால் இரக்கமே இல்லாமல்ப் பேசும் உன்க்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுப்பார்னு சொல்லுங்க, ப்ளீஸ்!

k.rahman said...

வஹாபீகள் தான் இஸ்லாமுக்கு பெரிய கெட்ட பெயர் தேடி தருபவர்கள். அதிலும் தமிழ் பதிவர்களில் இவர்கள் அதிகம் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம். ஷரியாவை இன்னமும் தொடருவோம் என்று சொல்லும் கற்காலத்தில் இருக்கும் சாதி அரசை என்ன சொல்வது என்று தெரிய வில்லை. இந்த விஷயத்தில் ஒரு சௌதியொ, அமெரிக்கனோ, ஐரோபியனோ சம்பந்த பட்டு இருந்தால் கண்டிப்பாக இந்த அளவுக்கு பொய் இருக்காது. ஒரு மூன்றாம் உலக உயிர் தானே என்ற எண்ணம் தான்.

ராஜ நடராஜன் said...

வருண்!உங்க பெரிய பின்னூட்டத்தை விட்டு விட்டு சின்ன பின்னூட்டத்துக்கு மறு உரை சொல்லியிருந்தேன்.

முதலாவதாக இந்தப் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு பார்ப்பதற்கு நன்றி.

வளைகுடா நாடுகளில் வாழும் வெளிநாட்டினர் பிரச்சினை குறித்து ஏற்கனவே கருத்துப்பரிமாறல்கள் நிகழ்ந்துள்ளன.இருந்தாலும் சுருக்கமாக நினைவுபடுத்தலுக்காக....

ஆசிய பொருளாதாரத்தின் பின் தங்கிய நிலை,எண்ணைப் பொருளாதார டாலர் மதிப்பு,ஆசிய தூதரகங்களின் முதுகெலும்பில்லாதன்மை என்ற மூன்று முக்கிய காரணங்கள் வளைகுடா பணிகளில் அங்கம் வகிக்கிறது.

என்னைப்போன்ற நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் 8 மணிநேர பணி செய்தோமா,வீடு வந்தோமா என்றில்லாமல் வீடுகளில் பணிபுரிபவர்களின் வேலைநேரக்கெடு இல்லாமை,வீட்டுப்பணி புரிபவர்களுக்கென்றே தனி விசா போன்ற சிக்கல்கள் தெரியாமல் 5000,10000,15000 என ஏஜண்டுகள் கணக்கு சொல்லி வீட்டில் பணிபுரிபவர்களை இக்கட்டில் தள்ளிவிடுகிறார்கள்.

இலங்கைப் பெண்கள் அரபு வீட்டுப் பணிக்கு போகாமல் இருந்தால் பிலிப்பைன்ஸ்,தாய்லாந்து,இந்தியா,நேபாளம் என மாற்றுவழிகள் உருவாகும் சூழல் ஏற்படுகின்றன.சார்க் போன்ற முக்கிய பேச்சுவார்த்தையில் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.

ராஜ நடராஜன் said...

ராபின்!மீண்டும் இணைந்து கொண்டதற்கு நன்றி.

சரியாக சொன்னீர்கள்.இதற்கு மேல் நான் வளவளக்க வேண்டிய அவசியமில்லை.

ராஜ நடராஜன் said...

//உள்நாட்டு சட்டதிட்டங்களில் அமெரிக்கா தலையிட முடியாதுனு உங்களுக்குத் தெரியாதா???//

வருண்!அப்ப ஈராக்?

தனக்கு வேணுமின்னா pre-emptive strike இல்லைன்னா உள்நாட்டு விசயங்களில் தலையிட முடியாதா?

வருண் said...

நம்ம என்ன செய்றோம்? ஈழநாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கும், தமிழர்கள் உரிமைப் போராட்டாங்களுக்கும் இடையில் இ பி கே எஃப் னு போயி எதுக்குக் கிழிக்கப் போனோம்??? அதே மாரித்தான் இதுவும்

suvanappiriyan said...

//அந்தப் பெண் நிரபராதி என்றால் இரக்கமே இல்லாமல்ப் பேசும் உன்க்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுப்பார்னு சொல்லுங்க, ப்ளீஸ்! //

அந்த குழந்தை கழுத்து நெறிககப்பட்டு (மருத்துவ அறிக்கை) கொல்லப்பட்டிருந்தால் அந்த பிஞ்சு எந்த அளவு துடித்திருக்கும். அதன் பெற்றோர் எந்த அளவு அதன் வலியை உணர்ந்திருப்பார்கள். இப்படி இரக்கமே இல்லாமல் அந்த குழந்தையை மறந்து பேசும் உங்களுக்கு அந்த இறைவன் என்ன தண்டனை கொடுப்பான் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்.

மேலும் அந்த பெண் நிரபராதி என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? இப்படி எல்லலாம் தோண்டி துருவி பார்க்க ஆரம்பித்தால் உலகில் எந்த தண்டனையையும நிறைவேற்ற முடியாது.

அடுத்து நடுநிலை முகமூடி போட்டுக் கொண்டு திரியும் ராஜ நடராஜன் போன்ற இந்துத்வ வாதிகளை இது போன்ற பதிவுகளின் மூலமே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

வருண் said...

சுவனப் பிரியன்: நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க!

அந்தப் பெண் அந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொண்டாளாணு உங்களுக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது அல்லாவுக்கும் அந்தப் பெண்ணுக்கும்தான் தெரியும்!

ஆக அந்தப் பெண் நிரபராதியா? என்பதும் அல்லாவுக்கும், அந்தப் பெண்ணுக்கும்தான் தெரியும்!

நீங்க சவுதி சட்டம் சரி என்று வாதிடுறீங்க! இல்லையா? இருக்கட்டும்..இப்போ கேள்விக்கு பதில் சொல்லுங்க

அந்தப் பெண் நிரபராதி என்றால் இரக்கமே இல்லாமல்ப் பேசும் உன்க்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுப்பார்னு சொல்லுங்க, ப்ளீஸ்!

வருண் said...

///On 22 May 2005, her employer's four-month-old child Naif al-Quthaibi died while in Nafeek's care. Nafeek was accused of murdering the child by smothering him following an argument with his mother.[3] Nafeek claimed that she believed the baby had choked on a bottle by accident during feeding.[4][5][6][7] The baby's parents and Saudi police insisted that Nafeek was guilty of murder///

If Nafeek was not trustworthy, why do the parents let her take care of their precious child??? They should have deported her as soon as they realized or suspected what she is!

வருண் said...

If she needs a maid/slave from overseas to take care of her 4-month old child, why does she want to have a child??!!

வருண் said...

***It is one of the last four countries to still carry out public executions, the other three being Syria, North Korea and Yemen***

Public execution is done in non-islamic nations like N Korea as well. In other words, public execution is not done in several muslim nations as well.

If public execution helps people not carrying out crimes. It should have stopped long time ago. But every year they execute bunch of people.. So, public execution DOES NOT SOLVE the problem! THINK!!!

வருண் said...

A mother who does not have time for breast-feed her child or bottle-feed her child! The mother does not even have BRAIN to find a "mature trustworthy maid" to take care of her child to whom she does not have time to breast-feed or bottle-feed. What kind of mother she is??? Why does she want to have a child?

வேகநரி said...

//என்னைப்போன்ற நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் 8 மணிநேர பணி செய்தோமாஇவீடு வந்தோமா என்றில்லாமல் வீடுகளில் பணிபுரிபவர்களின் வேலைநேரக்கெடு இல்லாமை வீட்டுப்பணி புரிபவர்களுக்கென்றே தனி விசா போன்ற சிக்கல்கள் தெரியாமல் 5000,10000,15000 என ஏஜண்டுகள் கணக்கு சொல்லி வீட்டில் பணிபுரிபவர்களை இக்கட்டில் தள்ளிவிடுகிறார்கள்//

உங்களை போலவே தான் முன்னேற்றமடைந்த ஜனநாயக முதலாளித்துவ நாடுகளில் எல்லாம் நல்ல நிலைமை இருக்கிறது வீட்டுப்பணி புரிபவர்களும் உள்டங்களாக முழு பாதுகாப்பு உள்ளது.
இஸ்லாமியர்கள் எல்லோருக்கும் மதத்தை பாதுகாப்பதிற்காக இன்று ரிஸானாவை குற்றவாளியாக்கி வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானா குற்றம் என்கிறார்கள். ரிஸானா அமெரிக்காவுக்கு இதே வீட்டுப்பணி புரியும் வேலைக்கு சென்றிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருப்பார். இப்படி கொடுமை அவருக்கு நடந்திருக்காது. மனித விரோத இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் சவூதி அரேபியாவில் தான் இப்படி. மனித நலன்கள் பற்றி முக்கியமில்லை.
ஏஜண்டுகாரன் என்ன செய்வான் அந்த நாடு அப்படி.

suvanappiriyan said...

//அந்தப் பெண் நிரபராதி என்றால் இரக்கமே இல்லாமல்ப் பேசும் உன்க்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுப்பார்னு சொல்லுங்க, ப்ளீஸ்!//

எந்த நாடடு சட்டங்களுமே கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே முடிவெடுக்கப்படுகின்றன. குழந்தை பால் இறங்காமல் மூச்சுத் திணறி இறந்ததாகவும் அதை சரி செய்ய கழுத்தில் கையை வைத்து தடவியதாகவும் அந்த பெண் சொல்கிறாள். ஆனால் மருத்துவர் குழந்தை கழுத்து நெறி பட்டு இறந்துள்ளதாக கூறுகிறார். அந்த பெண்ணும் முதல்நாள் நான்தான் கொன்றேன் என்று கூறி விட்டு சில நாள் கழித்து அன்று எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு குழப்ப நிலையில் ஒத்துக் கொண்டேன். ஆனால் நான் கொலை செய்யவில்லை என்று பிறகு மறுக்கிறாள். அந்த குழந்தையின் பெற்றேர் மனம் மாறி மன்னித்து விடுவார்கள் என்பதால்தான் சவுதி அரசு இந்த பெண்ணை ஏழு வருடம் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. சவுதி மன்னரும் பரிந்து பேசினார். ஏனெனில் விபத்தினால் கூட அந்த குழந்தை இறந்திருக்கலாம் என்று மன்னரும் நினைத்ததால்தான் அந்த பெண்ணுக்காக பரிந்து பேசினார். நானும் அந்த பெண்தான் கொன்றிருப்பார் என்று உறுதியாக சொல்லவில்லை. சாட்சியங்கள் அவ்வாறு கூறுகின்றன.

இப்பொழுது சொல்லுங்கள். என் மீது இறைவன் குற்றம் பிடிப்பானா?

இங்கு ஒரு கால் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மறு உலகில் அந்த பெண் சகல சுகங்களையும் அனுபவிப்பாள். இதில் யாரும் பொய் சொல்லியிருந்தால் அதற்கான தண்டனையையும் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும். எனவே நீதி என்றுமே சாகாது.

வருண் said...

***இப்பொழுது சொல்லுங்கள். என் மீது இறைவன் குற்றம் பிடிப்பானா?***

எனக்குத் தெரியதாது தலை துண்டிக்கப் பட்ட அந்தப் பெண்ணும், அல்லாவும் சேர்ந்துதான் உங்களுக்கு நீதி வழங்கணும். ஆனால், இந்த ஒரு பரிதாப நிலையில் நீங்க இஸ்லாமிய நாட்டின் சட்டதிட்டங்கள் சரி என்று வாதிடுவது உங்கள் மதிப்பை பழமடங்கு இழக்கச் செய்கிறது! மனிதன் ஏற்படுத்திய சட்டம் இது! அல்லா ஏற்படுத்தி இருந்தால் அதை ஏன் பல இஸ்லாமிய நாடுகள் பின் தொடரவில்லை??? உக்காந்து யோசியுங்கள்! தேவையில்லாமல் சவுதி சட்டதிட்டங்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை!

வருண் said...

***இங்கு ஒரு கால் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மறு உலகில் அந்த பெண் சகல சுகங்களையும் அனுபவிப்பாள். இதில் யாரும் பொய் சொல்லியிருந்தால் அதற்கான தண்டனையையும் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும். எனவே நீதி என்றுமே சாகாது.***

நீதி நம் உலகில் செத்துக்கொண்டுதான் இருக்கு! அது தெரியாதா உங்களுக்கு? நீங்க வாழும் உலகையும், உங்க கற்பனை உலகையும் கலந்து ஒண்ணாக்கி குழம்புறீங்க மேலும் குழப்புறீங்க!

ராஜ நடராஜன் said...

மனோ!நலமாக இருக்கிறீர்களா?அவ்வப்போது பின்னூட்டங்களில் முகம் காட்டுங்கள்.

வளைகுடா அரபுநாடுகள் மாற்றத்திற்கான துவக்கமாக பஹ்ரைன் மக்கள் போராட்டம் தோல்வியில் முடிந்து விட்டாலும் மக்கள் மாற்றங்களை விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது.

மாற்றங்கள் மெல்ல வருமென எதிர்பார்ப்போம்.

ராஜ நடராஜன் said...

சுவனப்பிரியன்!இதுவரையிலும் உங்க்ள் கருத்துரிமையென்ற நிலையிலேயே உங்களுடன் பின்னூட்டங்களிட்டு வந்தேன்.ஏனையவர்கள் உடனடியாக ரியாக்‌ஷன் செய்தாலும் கூட நீங்க பொறுமை காப்பதாக நினைத்திருந்தேன்.ஆனால் உங்கள் மீதான விமர்சனங்கள் பலரிடமிருந்து வந்தும் கூட அதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மதமென்ற ஒற்றைக்கோட்டில் மட்டுமே இறுகிய தன்மையில் மதத்தைப் பார்க்கிறீர்கள்.

உங்களைப்போல் தட்டையாக நான் எதையும் விமர்சனம் செய்வதில்லை.பாபர் மசூதி,பாமியன் புத்தர் சிலை இடிப்பு,இஸ்லாமிய உல்க்ளாவிய தீவிரவாதம்,குஜராத அரசியல் படுகொலைகள்.இந்துத்வா,வர்ணாசிரமம்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,கடாபி,சதாம் ஹுசைன்,சவுதியின் காட்டுமிராண்டித்தனம் என அனைத்திலும் நான் நியாயத்தின் பக்கம்,மனித நேயத்தின் பக்கமாக பேசுகிறேன்.உங்களைப் போல் மதமென்று குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதில்லை.

முன்பு தலிபான்கள் சுதந்திரப் போராளிகள் என்றீர்கள்.தலிபான்கள் அல்ஹைதாவின் மாற்று முகம் என்ற புரிதல் கூட உங்களிடமில்லையென்பதை விட உலக வன்முறைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றே பொருள்.

இப்பொழுது ரிசானாவின் மரணதண்டனைக்கான சவுதியின் காட்டுமிராண்டி சட்டங்களுக்கு சட்ட ஆலோசகராக கருத்து சொல்கிறீர்கள்.மனிதநேயம் பேசத்தெரியாத நீங்கள் மட மார்க்கத்தனம் பேசவே தகுதியுடையவர்.பதிவுலகில் உங்களைப் போன்றவர்களின் மத குருட்டுத்தனத்திற்கு கருத்து சொல்பவர்கள் அரேபிய நாடுகளின் இரண்டு பக்கங்களையும் பாராமல் கருத்து சொல்லலாம்.எனக்கு கூட என் பெயர்க்காரணம் கொண்டு இந்துத்வா முகமூடி போடலாம்.ஆனால் சவுதியில் வாழ்ந்த,பணிபுரிந்த ஒருவர் கூட சவுதி பற்றி உயர்வாக சொல்லி நான் கேட்டதேயில்லை.

கழுத்தை வெட்டுவதிலும்,கண்ணை நோண்டுவதிலும் குற்றங்கள் காணாமல் போய் விடும் என நம்பும் உங்கள் நம்பிக்கையில் அரேபிய பாலைவன மணல்க் காற்று வீசட்டும்.இம்மையில் பல துயரங்களோடு வாழ்ந்து மறுமையில் பேரின்பம் பெற வாழ்த்துக்கள்.

உங்கள் மீதிருந்த மதிப்பை ரிசானா என்ற பெண் தன் உயிரோடு கொண்டு போய்விட்டாள்.

ராஜ நடராஜன் said...

வருண்!தனது நாட்டு நலன் என்றால் எப்படி வேண்டுமென்றாலும் கோடு போட்டுக்கொள்ளலாம் என்ற ஐக்கிய நாடுகளின் சுயநலங்களால்தான் இத்தனை குழப்பங்களும்.

அமெரிக்க தலையீட்டுக்கு நீங்கள் சொல்லும் காரணத்தின் படியே வாதித்தாலும் கூட ஜார்ஜ் புஷ் மரைன்காரன் மாதிரி ஹெலிகாப்டரில் இறங்கி Mission accomplished என்றார்.இபிகேஎஃப் காலம் தொட்டு இன்று வரையில் இந்திய மிஷன் வெற்றிகரமாக்கப்பட்டதா?

வருண் said...

***இபிகேஎஃப் காலம் தொட்டு இன்று வரையில் இந்திய மிஷன் வெற்றிகரமாக்கப்பட்டதா?***

நல்ல கேள்வி!

இதற்கான உங்களுக்கு தெரிந்த பதிலையும் தந்துவிடுங்கள்!

ராஜ நடராஜன் said...

வருண்!I have just noticed your counter argument with Supi.

இனி நீங்களாச்சு!அவராச்சு.நான் பெவிலியனில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்.ஊமைக்குத்து குத்துபவர்களுக்கே அஞ்சாதவர் நான் சொல்லியா கேட்கப்போகிறார்:)

ராஜ நடராஜன் said...

சகோ.ரகுமான்!கூட்ட நெரிசலில் உங்களின் முக்கியமான கருத்தைக் கவனிக்கவில்லை.மன்னிக்கவும்.

நான் யார் மீதும் வெறுப்பு என்ற நிலையில் கருத்துக்களை வெளியிடுவதில்லை.மதம் என்று சொல்லிக்கொண்டு தனது மதத்திற்கு இவர்கள் தீங்கு விளைவிக்கிறார்கள் என்ற புரிதல் கூட இல்லாமல் கருத்து வெளியிடுகிறார்கள்.

உங்கள் சமபார்வைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

வருண்!கேள்வியும் நானே!பதிலும் நானேவா!நல்லாயிருக்குதே ஆட்டம்:)
என்னோட நிலைப்பாடு என்ன என்பதைத்தான் ஈழம் குறித்த பழைய பதிவுகள் சொல்லுமே.நீங்க வேற தொடர் பயணியாக பதிவுலகில் இருக்கிறீர்கள்.

கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

வேகநரி!மேற்கத்திய நாடுகள் பணியாளர்களை நடத்துவதற்கும்,வளைகுடா நாடுகள் பணியாளர்களை உபயோகிக்கும் முறைக்கும் சரியான விளக்கம் தந்துள்ளீர்கள்.எதிர் வாதத்திற்கு சான்ஸே இல்லை.ஆனாலும் ரிசானா மரணதண்டனை,அமெரிக்காவின் சவுதி பக்கப்பார்வை,மத பிளாக்கர்கள் என்ற மூன்று நிலையை தொட்டதை விட்டு விட்டு வர்ணாசிரமத்துக்கு தாண்டுற மாதிரி இதற்கும் எதிர் வாதம் வைத்தால் என்ன செய்வீர்கள்:)

சார்வாகன் said...

நண்பர்களே,
மதத்திற்காக அந்தர் பல்டி அடிக்கும் சகோ சு.பியின் நகைச்சுவை நாடகம் பாரீர்.
1.//அந்த குழந்தை கழுத்து நெறிககப்பட்டு (மருத்துவ அறிக்கை) கொல்லப்பட்டிருந்தால் அந்த பிஞ்சு எந்த அளவு துடித்திருக்கும். அதன் பெற்றோர் எந்த அளவு அதன் வலியை உணர்ந்திருப்பார்கள். இப்படி இரக்கமே இல்லாமல் அந்த குழந்தையை மறந்து பேசும் உங்களுக்கு அந்த இறைவன் என்ன தண்டனை கொடுப்பான் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்.//

குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப் படவில்லை. எப்படி செத்தது என பார்த்தது போல் புரளி விடுவதைக் கேளுங்கள்.

2.//மேலும் அந்த பெண் நிரபராதி என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? இப்படி எல்லலாம் தோண்டி துருவி பார்க்க ஆரம்பித்தால் உலகில் எந்த தண்டனையையும நிறைவேற்ற முடியாது. //

ஆனால் குற்றவாளி என சு.பிக்கு தெரியும். கசாப் குற்றவாளி என்றும் மார்க்க பந்துக்கள் கூறுவார். இதுவே இஸ்லாம் ஹி ஹி

பல்டி
/ நானும் அந்த பெண்தான் கொன்றிருப்பார் என்று உறுதியாக சொல்லவில்லை. சாட்சியங்கள் அவ்வாறு கூறுகின்றன.//

சாட்சியங்கள் எதுவும் இல்லை.அப்பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம் தவிர!!

3.//சவுதி மன்னரும் பரிந்து பேசினார். ஏனெனில் விபத்தினால் கூட அந்த குழந்தை இறந்திருக்கலாம் என்று மன்னரும் நினைத்ததால்தான் அந்த பெண்ணுக்காக பரிந்து பேசினார். //

மன்னர் பரிந்து பேசினார் என்பதன் ஆதாரம் என்ன?.இதை எல்லாம் அமெரிக்காவின் அடிமை மன்னன் பார்ப்பானா? நல்ல காமெடி.

பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்?

வஹாபிகள் மத சார்பின்மைக்கு குழி தோண்டுவதும் ,அதில் முதலில் விழுவது யார்?

இதை கொஞ்சம் யோசிப்போம்!!

இனி கோத்ரா வன்முறை என்பது இரயிலில் போன யாத்திரிகர்களை கொளுத்திய தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகும்.,மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஆதரிக்க்லாம்!!

சு.பி.யின் வாதம் இந்திய மூமின்களுக்கு ஆப்பு ஆகும்!!

*
4.//இப்பொழுது சொல்லுங்கள். என் மீது இறைவன் குற்றம் பிடிப்பானா?//

அல்லாஹ் மூமின்களின் மூளைக்குள் மட்டுமே இருப்பதால் எப்படி பிடிக்க முடியும்!!

அல்லாஹ் யாரையும் எப்போதும் பிடிக்க முடியாது!!

**
5./இங்கு ஒரு கால் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் மறு உலகில் அந்த பெண் சகல சுகங்களையும் அனுபவிப்பாள். இதில் யாரும் பொய் சொல்லியிருந்தால் அதற்கான தண்டனையையும் மறுமையில் இறைவனால் கொடுக்கப்படும். எனவே நீதி என்றுமே சாகாது.//

ஹி ஹி ஆகவேதான் சொல்கிறோம் .காஃபிர்களின் நீதியை குறை சொல்லாதீர்கள்.

மூமின்களுக்கு அநீதி இழைகப்பட்டால் பலன் உண்டு. காஃபிர்களுக்கு கிடையாது என மூமின்கள் நம்புவதால்.காஃபிர்களுக்கு மட்டும் நீதி இவ்வுலகில் கிட்டினால் போதும். மூமின்களுக்கு நீதி இவ்வுலகில் தேவையில்லை!!!!மூமின்களுகு அப்பாலிக்கா 72 ஹூரி கிடைக்கும்.

இறந்தது காஃபிர் பெண் ஆக இருந்தால் நீதி எபோதும் கிடைக்காது!!

இறந்த மூமின் பெண்ணுக்கு அல்லாஹ் என்ன கொடுப்பார்?யாரு புருஷன்??

மூமின்களின் ஷ்ரியா ஒழிக்க இஸ்ரேலை,மோடியை ஆதரிப்போம்.நமக்கு வேறு வாய்ப்பு இல்லை!!

இஸ்ரேல் வாழ்க!!!!!!!!!

மோடி ஆட்சி அமைப்போம்!!

நன்றி!!

வருண் said...

****வருண்!கேள்வியும் நானே!பதிலும் நானேவா!நல்லாயிருக்குதே ஆட்டம்:)
என்னோட நிலைப்பாடு என்ன என்பதைத்தான் ஈழம் குறித்த பழைய பதிவுகள் சொல்லுமே.நீங்க வேற தொடர் பயணியாக பதிவுலகில் இருக்கிறீர்கள்.

கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.***

சரி இதை விடுங்க!

----------
இந்தப் பெண்ணை நெனச்சா ரொம்ப பரிதாபமாயிருக்கு! 17 வயதில் இப்படி நாடுவிட்டு நாடு போயி சம்பாரிக்கணுமா? இலங்கையிலேயே இவர்கள் உழைத்து வாழ்ந்தால் என்ன? எதுக்கு இந்த பாழாப்போன ஃபாரின் மோகம்???

-------

அப்புறம் இந்த சுவனப் பிரியன்..

அந்த பரிதாபத்தைக் கண்டுக்காமல் சவுதி சட்டத்தில் குறை இல்லைனு வாதாடும் இவரை என்ன சொல்றது?

சவுதியில் பிறந்து சவுதியில் வாழும் இறை நம்பிக்கையுள்ள பல இஸ்லாமியர்கூட சுவனப் பிரியன் போல வாதிட மாட்டார்கள்னு நான் நம்புறேன்! சவனப் பிரியவன் ஒரு "தனிப் பிறவி"தான்!!!

இவர் சிந்தனைகள் எல்லாம் நம்மாள் புரிந்து கொள்ள முடியாதபடிதான் இருக்கு! அல்லாவாவது புரிஞ்சுக்கிட்டா சரிதான்!

------------

இதைப் பத்தி விவாதிக்க விவாதிக்க மறைந்த அந்தப் பெண்ணையும் அவளை இழந்த குடும்பத்தினரையும் அவமத்திக்கிறதுபோல் எனக்கு ஒரு குற்ற உணர்வு வருது. இதோட நான் நிறுத்திக்கிறேன்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

சுவனத்தில் என்ன கிடைக்கும், தப்புக்கு தண்டனை கிடைக்கும்னு நினைச்சு தான் எல்லாம் வாழுகின்றார்களா?

இம்மையில் 3 வேளை சாப்பாடுக்கிடைக்கலைனு ஏன் கஷ்டப்படனும், செத்துட்டா சுவனத்தில் எல்லாம் கிடைக்கும்னு ,மக்கள் பட்டினி கிடந்து செத்து சுவன வாழ்வை அனுபவிக்கலாமே?

நீங்க தான் செத்தப்பிறகு சுவனம் கிடைக்கும்னு நம்புறிங்களே,அப்புறம் ஏன் சவுதிக்கு பணம் சம்பாதிக்க போகணும், இங்கே என்னக்கிடைக்குதோ அதை வச்சு ஒரு வேளை கஞ்சி குடிச்சா போதும்னு நினைக்கலாமே.

வாழும் போது வசதியா வாழனும்னு ஆசை வருவதேன்.

அப்படி ஆசைப்படுவது தப்பில்லை,ஆனால் அப்படி ஆசைப்பட்டவங்களை ,நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேன்னு துன்புறுத்துவது தான் தவறு.சவுதியில் இதான் நடக்குது.

வசதியா வாழ ,சம்பாதிக்கனும்னு உலகத்தில் உள்ளவர்கள் நினைக்காவிட்டால், சவுதியில் எல்லாம் திண்டாடனும்.

மதக்கோட்பாடு எனில் அனைவருக்கும் பொதுவா இருக்கணும் ,பணம் படைத்தவருக்கு ஒன்று,ஏழைக்கு ஒன்று என்றால் எப்படி?

பாலியல் வன்முறைக்கு ஆளான பணிப்பெண்கள் புகாரின் மீது எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என சொல்ல முடியுமா?

பணிப்பெண்கள் புகார் அளித்தால் சாட்சி காட்ட சொல்லும் சவுதி அரசு , இந்த சம்பவத்திலும் சாட்சி என ஏதேனும் காட்டினார்களா?இல்லையே.

உங்களால் தெளிவாக ஒன்றை சொல்ல முடியவில்லை எனில் சும்மா இருக்கலாம், ஆனால் நீங்கள் வலிய வந்து ,தண்டனை சரி எனப்பதிவிடுகிறீர்கள், விவாதம் செய்கிறீர்கள்,பாதிக்கப்பட்ட குடும்பமா மனக்காயம் என,இல்லை சவுதி அரசின் தூதரா? எதுவும் இல்லாத போது நடு நிலை என்ன என அலச வேண்டும், இல்லையா மவுனமாக இருக்கலாம்.

உங்களின் பேச்சில் ஒரு போதும் சந்தேகத்தின் பலனை ரிசனாவிற்கு அளிக்கவே மறுக்கிறீர்கள் என்பதை கவனிக்கவும்.

இப்போது நீங்கள் பேசுவது முழுக்க மதவாதம் மட்டுமே,இதில் அடுத்தவர்களை குறை சொல்வதேன்?.

suvanappiriyan said...


//உங்களின் பேச்சில் ஒரு போதும் சந்தேகத்தின் பலனை ரிசனாவிற்கு அளிக்கவே மறுக்கிறீர்கள் என்பதை கவனிக்கவும்.//

நான் எனது பதிவிலேயே ஒன்றை குறிபபிட்டுள்ளேன். எனது வாழ்நாளில் பதிவு எழுதும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்தது இந்த சகோதரியின் சோக நிகழ்வை எழுதும் போதுதான். மசூதியில் தொழும் போது கூட என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவு எனது மனதை பாதித்த விஷயம் இது.

அந்த பதிவிலேயே கூறியுள்ளேன் இந்த பெண் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். இறைவனே உண்மையை அறிந்தவன். எனவே தான் இன்று வரை அந்த பெண் குற்றவாளி என்று எனது எழுத்தில் எங்கும் குறிப்பிடவும் இல்லை. ஆனால் சட்டம் என்பது மருத்துவ குறிப்புகளையும் அந்த பெண்ணின் ஒப்புதலையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டது. குழந்தையின் பெற்றோர் இந்த பெண்ணை மன்னிக்காததுதான் முக்கிய பின்னடைவாக போய் விட்டது. இது பற்றி ஒரு சகோதரி எழுதிய பதிவையும் படித்துப் பாருங்கள்.

http://mydeartamilnadu.blogspot.com/2013/01/blog-post_15.html


சார்வாகன் said...

சகோ சு.பி,

தாக்கியா செய்யாமல் ஒழுங்காக வாதம் செய்யவும்.

எதற்காவது மூமின் அழுக குரான் ,யூதன் இட்டுக் கட்டாத ஹதிசில் ஆதாரம் உண்டா?

**

குற்றம் இழைக்கப்பட்டவர்,குற்றம் சாட்டப் பட்டவருக்கு தண்ட்னை அளிப்பது காட்டு மிராண்டித்தனம் என்றே சொல்கிறோம்.

அரசின் சட்டப்படி மட்டுமே தண்டனை ,பாரப்டசம் இன்றி வழங்கப் பட வேண்டும்.

சரி உங்களுக்கு உரைக்கும் படி சொல்கிறேன்.
கோவைக் குண்டு வெடிப்பில் உறவினர் ஒருவரை இழந்தவர், பிடிபட்ட

அனைவருக்கும் தலையை வெட்ட வேண்டும் என சொல்லி நிறைவேற்றினால் என்ன ஆகும்?


உங்களின் பதிவுகளில் ஆதரித்து எழுதிய சிலர் உயிரோடு இருக்க முடியுமா?

பாதிக்கப்பட்டவன் மன்னிப்பது அபூர்வம்.

தெரிந்தோ தெரியாமலோ சவுதி ஷரியா என்பது ஒரு காட்டு மிராண்டி சட்டம் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

மதத்திற்காக எதனையும் நியாயப் படுத்துவதோடு,எதையும் செய்வீர்கள் என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

மூமின் பெரும்பான்மை நாடுகளில் வசிக்கும் காஃபிர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

மாலியில் இஸ்லாமிய ஷரியா வாதிகளை ப்ரான்ஸ்+ ஆபிரிக்க படைகள்.
தாக்குவது இன்று நல்ல செய்தி.

எதிர்காலத்தில் சவுதிக்கும் நடக்க‌லாம்!!!

அன்று மட்டுமே உணர்வான் சவுதி!!

நன்றி!!

அஞ்சா சிங்கம் said...

இறந்தது காஃபிர் பெண் ஆக இருந்தால் நீதி எபோதும் கிடைக்காது!!

இறந்த மூமின் பெண்ணுக்கு அல்லாஹ் என்ன கொடுப்பார்?யாரு புருஷன்??////////////////

அடேயப்பா வழக்கமாக குண்டூசியால் மட்டுமே குத்தும் ராசநடை இப்போது கடப்பாரையை தூக்கிவிட்டாரே .பகடுவை போல .....
எல்லா புகழும் சுவனபிரியனுக்கே ..

ராஜ நடராஜன் said...

எனது முந்தைய பின்னூட்டக் கருத்துக்குப் பின் மீண்டும் இங்கே தொடர்கிறேன்.

சுவனப்பிரியன்!கண்ணீர் விடுமளவுக்காவது உணர்வுகள் உங்களைப் பாதிக்கிறது என்பதோடு மத நம்பிக்கை ஒருவரது சுய நம்பிக்கையென்ற அளவில் மட்டும் நின்று கொண்டு இனிமேலாவது ரிசானாவின் மரணதண்டனை போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவாக பதிவிடாதீர்கள்.குறைந்த பட்சம் மௌனம் காப்பதால் மதத்திற்கு ஒன்றும் பேரிழப்பு ஏற்படப் போவதில்லை.

எனது தார்மீக கோபத்தையும் மீறிய சக பதிவர்களின் பின்னூட்ட கேள்விகளுக்கு சுவனப்பிரியன் மட்டுமல்ல அவரை ஆதரிக்கும் எவருக்கும் பதில் சொல்லும் வலிமையில்லையென்றே நினைக்கின்றேன்.காரணம் மத விசுவாசம் vs மனிதநேயம் என்ற கருத்துரையாடலில் சக பதிவர்கள் மனிதநேயம் சார்ந்து எழுப்பும் கேள்விக்கணைகளுக்கு சவுதியின் ஷரியா சட்ட நீதிமன்றம் தவிர எந்த தீர்ப்பாய நீதிமன்றங்களையும் அசர வைக்கும்.

ராஜ நடராஜன் said...

அஞ்சா சிங்கம்!உங்க அடைப்பானின் புகழை சகோ.சார்வாகனுக்கும்,வக்கீலா போக வேண்டிய ஆளு இங்கே பதிவுகளில் குப்பை கொட்டுகிறதே என்ற ஆதங்கத்தோடு வவ்வாலுக்கும் தாருங்கள்.

பகடுவின் பயண தூரத்தைக் கடக்க எனக்கு இன்னும் மிக தூரம் பிடிக்கும்.இந்த பதிவு மத தூற்றல் என்ற எண்ணமில்லாமல் ஒரு அப்பாவிப்பெண்ணின் கழுத்தை வெட்டியதைப் பார்த்து உருவான உணர்ச்சிப்பிரவாகத்தில் உதித்தது.

வவ்வால் said...

ராச நட,

நம்மை வழக்கறிஞராவே ஆக்கீட்டீரே :-))

//.குறைந்த பட்சம் மௌனம் காப்பதால் மதத்திற்கு ஒன்றும் பேரிழப்பு ஏற்படப் போவதில்லை.//

இதைத்தான் நான் இவ்விடயத்தில் சு.பி.சுவாமிகளிடம் எதிர்ப்பார்த்தேன், அவரிடம் சொன்னதும் இது தான், ஆனால் என் கடன் இஸ்லாமிய பரப்புரையாற்றுவதே என எல்லா நிலையிலும், மதப்போதையில் மூழ்கி கிடக்கிறார், மத நெறி என்பதனை மதவெறியாகவே காணப்படும் சூழலை உருவாக்குவது நம் மார்க்கப்பந்துக்களே!

தன் மனம் வருந்து அழுதேன் என சொல்கிறார் இதிலிருந்தே இச்சூழலின் தன்மை என்னவென அவர் மனசுக்கு தெரிகிறது ,ஆனால் அவர் புத்திக்கு தெரியவில்லை போல.

தன்னெஞ்சறிவது பொய்யற்க என அய்யன் வள்ளுவர் அன்றே சொல்லிவிட்டார்.


சு.பி.சுவாமிகள் போர்த்தியிருந்த மார்க்க நெறியாளர் என்ற வெள்ளுடையின் மீது கரும்புள்ளியாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

முட்டாப்பையன் said...

காட்டுமிராண்டிகளின்,உச்சகட்ட காட்டுமிராண்டித்தனம் இந்த கொலை.
மார்க்க பந்துக்களே சற்றே சிந்தியுங்கள்.உங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த மாதிரி ஆகி இருந்தால் நீங்களே கொன்றுவிடுவீர்கள் இல்ல?


இந்த காட்டுமிரான்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்ததற்கு வெக்கபடுகிறேன்.
உங்கள் so called ___________ இதற்கும் நீதி வழங்குவார்.(இருந்தால்)

இது சுபி சாமிகள் பதிவில் இட்ட கமெண்ட்.

முட்டாப்பையன் said...

என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்கிறோம்?
கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இந்த செயலுக்கு இவனும் ஆதரவாம்?

அரபு நாடுகள் மட்டும் அழிவதற்கு இயற்கை ஏதும் வழி செய்திடாதோ?

http://suvanappiriyan.blogspot.in/2013/01/blog-post_10.html

இது fb status

அ. ஹாஜாமைதீன் said...

நமது தலைநகரத்தில் ஒரு மாணவி பாலியல் வல்லுறவால் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்... ஒட்டுமொத்த தேசமும் அந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும், நடு ரோட்டில் நிற்க வைத்து சுட்டுக் கொல்ல வேண்டும், என உணர்ச்சி வசப்பட்டு பல விதமாக தங்களது குமுறலை வெளிப்படுத்தினார்கள் இஸ்லாம் இப்படிபட்ட தண்டனையைதான் தீர்வாக கூறுகிறது என்பதை அறியாமலே...

சவூதியில் இலங்கை சகோதரிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையால் இஸ்லாமிய சட்டம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால்... குற்றத்தை தீர ஆய்ந்தறியாமல் தண்டனை கொடுக்க இஸ்லாம் கூறவில்லை, குற்றம் சுமத்தபட்ட அபலையின் வாக்குமூலத்தை வைத்து தண்டனையை உறுதி செய்ததாக கூறப்படும் சவூதி நீதிமன்றத்தின் செயல்பாடு கண்டனத்திற்குரியதே, இஸ்லாமிய சட்டத்தில் குறையில்லை, அதை நடைமுறைப்படுத்துவதில் தவறிழைத்து விட்டார்களே என்ற வேதனை தான் மிஞ்சுகிறது.

பாலியல் வல்லுறவால் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் கேளுங்கள் அந்த காமகொடூரர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பதென்று அவர்கள் கூறுவார்கள்.

தனது மகளின் திருமணத்திற்காக குருவி போல் சேர்த்து வைத்த பணத்தையும், நகையையும், பகல் கொள்ளையரிடம் பறிகொடுத்த வயதான தந்தையிடம் கேளுங்கள், அந்த திருடர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர் சொல்வார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் வலியும், வேதனையும், இஸ்லாம் அநீதிக்கு உள்ளானவர்களின் நிலையிலிருந்து பார்க்கிறது.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

திரு. சார்வாகன் அவர்களுக்கு...

தங்களது பதிவுகளையும், பின்னூட்டங்களையும், தொடர்ந்து வாசிக்கும் சாதாரன வாசகன், நபிகள் நாயகம் அவர்களை திரு.முகம்மது என மரியாதையுடன் குறிப்பிட்ட நாகரீகம் உள்ள நாத்திகர் என மகிழ்ந்தேன்
குர் ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு போன்றவற்றிலிருந்து, தங்களது வாதத்திற்கு ஆதாரமாக சுட்டிய போது, ஒரு முஸ்லிமை விட அதிகம் அறிந்து வைத்துள்ளதை கண்டு வியந்தேன்... ஆனால் கீழே உள்ள பின்னூட்டம்.... உண்மையிலேயே உங்களுடையதுதானா...???

// பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்?

வஹாபிகள் மத சார்பின்மைக்கு குழி தோண்டுவதும் ,அதில் முதலில் விழுவது யார்?

இதை கொஞ்சம் யோசிப்போம்!!

இனி கோத்ரா வன்முறை என்பது இரயிலில் போன யாத்திரிகர்களை கொளுத்திய தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகும்.,மக்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஆதரிக்க்லாம்!!

சு.பி.யின் வாதம் இந்திய மூமின்களுக்கு ஆப்பு ஆகும்!! //

பாதிக்கப்பட்டவனுக்கு தான் தண்டனை வழங்கும் உரிமையுள்ளது என்ற இஸ்லாமிய சட்டத்தை, கோத்ரா கலவரத்துடன் ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா திருவாளர் சார்வாகன்...

குற்றம் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க, மதவெறி வன்முறையாளர்கள் சம்பந்தமே இல்லாதவர்களை, பெண்களை, நிறைமாத கர்ப்பிணிகளை, பச்சிளம் பாலகர்களை நரவேட்டையாடியது... தங்களது பார்வையில் யாத்திரிகர்களை கொளுத்திய தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையா...???

பாதிக்கப்பட்ட மக்களை எல்லாம் நீங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றா இஸ்லாம் கட்டளை இடுகிறது? தயவு செய்து ஆத்திரத்தில் பின்னூட்டம் இடாதீர்கள்.....

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

// பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்? //

பாதிக்கப்பட்டவன் தண்டனை வழங்குவது என்றால் நமது திரைப்படங்களில் வருவது போல கதாநாயகன் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு தனது தாய் தந்தையை கொன்ற அல்லது தங்கையை வன்புணர்வு செய்து கொன்ற வில்லனை பழி வாங்குவது அல்ல, நீதிமன்றம் பாதிக்க பட்டவனின் விருப்பத்தை அறிந்து அதன் அடிப்படையில் தண்டனை வழங்குவது, இதை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகும்? குற்றங்கள் தானாக குறையும்.

// சு.பி.யின் வாதம் இந்திய மூமின்களுக்கு ஆப்பு ஆகும்!! //

சகோ சுவனப்பிரியனின் வாதம் இந்திய மூமின்களுக்கு மட்டுமல்ல, தவறு செய்யும் அனைவருக்குமே ஆப்பு தான்.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

// மூமின்களின் ஷ்ரியா ஒழிக்க இஸ்ரேலை,மோடியை ஆதரிப்போம்.நமக்கு வேறு வாய்ப்பு இல்லை!!

இஸ்ரேல் வாழ்க!!!!!!!!!

மோடி ஆட்சி அமைப்போம்!!

நன்றி!!
January 15, 2013 at 9:20 PM //

திருவாளர் சார்வாகன், தங்களை நாத்திக நடுநிலைவாதி என நினைத்தேன்.... தாங்களோ..!!! சொல்வதற்கு ஏதுமில்லை எனது புரிதழில் தான் தவறு.

இனியும் தங்களை நாத்திகவாதி என கூறாதீர்கள்.... உண்மையான நாத்திகர்களுக்கு அவமானம்.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

Unknown said...

ஹாஜாமைதீன்,

கொலைக்கு அதன் கொடூரத்துக்கு தக்க தண்டனை இருக்க வேண்டுமே தவிர, உறவினர்கள் மன்னிப்பதோ, காசு வாங்கிகொண்டு விட்டுவிடுவதோ அல்லது பதிலுக்கு கொலையோ தவறானது.

மன்னிப்பை வெகு எளிதில் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பதை யோசித்து பார்த்தீர்களா?

ஒரு பெரிய கோடீஸ்வரனோ அல்லது ஒரு பெரிய போலீஸ் அதிகாரியோ ஒருவனை கொலை செய்துவிட்டார் என்று வைத்துகொள்ளுங்கள்.

கொலை செய்யப்பட்டவரின் தாய் அல்லது உறவினர்களை ரெண்டு போடு போட்டு, மன்னித்து விடுவதாக எழுதி வாங்கிகொண்டால் என்ன நீதி அங்கே இருக்கும்?

நீதிபதி, போலீஸ் அதிகாரி, மன்னர் எல்லோரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து மிரட்டி மன்னித்ததாக எழுதி வாங்கினால், அங்கே நீதி இருக்குமா?


-
கொல்லப்பட்டவர் அனாதை என்றால், கொலை செய்தவரை மன்னிக்க ஆள்கள் இல்லையென்றால், அவருக்கு என்ன தண்ட்னை?

-
கொலை செய்ய ஒருவர் தூண்டுகிறார். இன்னொருவர் போய் கொலை செய்துவிட்டு தண்டனையை பெற்றுகொள்கிறார். கொலை செய்ய தூண்டியவருக்கு என்ன தண்டனை?

கொலை செய்தவர் மனநலம் பிறழ்ந்தவராக இருந்து, அவரை தூண்டிவிட்டு இன்னொருவரை கொலை செய்ய வைத்தவருக்கு என்ன தண்டனை?

வேகநரி said...

//திருவாளர் சார்வாகன், தங்களை நாத்திக நடுநிலைவாதி என நினைத்தேன்.... தாங்களோ..!!! சொல்வதற்கு ஏதுமில்லை எனது புரிதழில் தான் தவறு.
இனியும் தங்களை நாத்திகவாதி என கூறாதீர்கள்.... உண்மையான நாத்திகர்களுக்கு அவமானம்//

ஒரு இஸ்லாமியர் எப்படி இருக்க வேண்டும் இஸ்லாமியர்கள் எதிர்பார்க்கிறார்கள்? சவூதியில் ரிஸானாவை இஸ்லாமிய சட்டபடி கொலை செய்யபட்டதிற்க்கு கவலை வந்தால் மனதிற்க்குள் அழலாம், மூடிகிட்டு கண்ணீர்விடலாம்,ஆனா பின்பு சவூதியையும் இஸ்லாமிய சட்டத்தையும் நியாயபடுத்தி பிரசாரம் செய்ய வேண்டும். இதை எல்லாம் ஏற்று கொள்பவன் தான் இஸ்லாமியர்களின் நாத்திக நடுநிலைவாதி.
ஒரு இஸ்லாமிய நாடக இருந்தால் நாத்திக நடுநிலைவாதியான சார்வாகன் கொல்லபட்டு இருப்பார், அல்லது உயிருக்கு பயந்து வாழும் நிலையில் இருப்பார் ஒரு காபிர் நாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக வாழ முடிகிறது.
தமிழ் பகுத்தறிவு உலகில் சார்வாகன் மிக உயர்ந்தவன்.

அ. ஹாஜாமைதீன் said...

nila nilavan அவர்களுக்கு...

// கொலைக்கு அதன் கொடூரத்துக்கு தக்க தண்டனை இருக்க வேண்டுமே தவிர, உறவினர்கள் மன்னிப்பதோ, காசு வாங்கிகொண்டு விட்டுவிடுவதோ அல்லது பதிலுக்கு கொலையோ தவறானது.//

மருத்துவ மாணவியை கடுமையாக தாக்கி வன்புணர்வு செய்து அதன் காரணமாக உயிரிழந்த அந்த கொடூரத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

கோவையில் முஸ்கீன் என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக்கையும் கொன்ற அந்த கொடூரனுக்கு ( எண்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்றாலும்) என்ன தண்டனை கொடுக்க விரும்புகிறீர்கள்??

http://www.thinaboomi.com/2012/12/22/17848.html
தினபூமி செய்தியில் கூறப்படும் இது போன்ற காமக்கொடூரர்களுக்கு எந்த மாதிரி தண்டனை வழங்கலாம்.???

கொலைக்கு அதன் கொடூரத்துக்கு தக்க தண்டனை இருக்கவேண்டும் என்றால் அதன் அளவுகோல் என்ன???? சற்று விளக்கினால் நலம்.

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.

அ. ஹாஜாமைதீன் said...

nila nilavan அவர்களுக்கு...

// நீதிபதி, போலீஸ் அதிகாரி, மன்னர் எல்லோரும் நெருங்கிய நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் கூட்டாக சேர்ந்து மிரட்டி மன்னித்ததாக எழுதி வாங்கினால், அங்கே நீதி இருக்குமா?//

அதிகம் தமிழ் திரைப்படம் பார்த்ததின் பாதிப்பு தெரிகிறது, நமது வழக்கப்படி நீதிபதி, போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி அல்லது அமைச்சர் என்று தான் குறிப்பிட வேண்டும், சவூதி அரேபியா சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சட்டம் என்பதால் மன்னர் என குறிப்பிட்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன்.

தாங்கள் குறிப்பிட்டது போல எந்த நாட்டிலும் அதிகாரவர்கத்தினர் இப்படி நடக்கலாம், அங்கு நீதி எட்டாக் கனி தான், அதற்காக பாதிக்கப்படும் எல்லோரையும் இம்மூவரும் எப்போதும் மிரட்டிக் கொண்டு இருப்பார்களா...???

என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.