Followers

Sunday, January 27, 2013

விஸ்வரூப தீர்ப்புக்கும் அப்பால்!

.

17 comments:

அஞ்சா சிங்கம் said...

என் கண்ணுக்கு பதிவே தெரியலயே ஒரு வேலை இது விஷ்வ அரூபமா ..............?

வேகநரி said...

பதிவையே காணவில்லை.இஸ்லாமியர்கள் தடைவிதித்து விட்டார்களா?

ராஜ நடராஜன் said...

சிங்கம்! பதிவு நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறது.

நிலத்திலும்,புலத்திலும் சட்டத்தையும்,நீதியையும் மதிக்கும் காரணத்தால் தலைப்பு மட்டும் எத்தனை விதமான மன அதிர்வுகளை உருவாக்கும் என்பதற்காக முன்னோட்டம்:)

ராஜ நடராஜன் said...

வேகநரி!உங்க ஊமக்குசும்பை விட மாட்டீங்க போல இருக்குதே:)

அவர்கள் கருத்துரிமை அவர்களுக்கு.நமது கருத்துரிமை நமக்கே சொந்தம்.

Anonymous said...

இருங்க...முழுசும் படிச்சிட்டு சொல்றேன்....

ராஜ நடராஜன் said...

Chilled Bears!cool.

வவ்வால் said...

ராச நட,

மிகவும் தெளிவானப்பதிவு, வெள்ளை அறிக்கை என்பது இதானா?

விஷ்வருபம் படத்தின் மீதான தடைக்கு நிஜமான காரணம், டிடிஎச் வெளியிட சன் சேர்த்துக்கொண்டது மற்றும் திமுகவுடன் நெருக்கமாக இருந்தது என நான் முன்னரே சொன்னேன்,இப்போது ஜீவியிலும் அதனையே சொல்லியுள்ளார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்னரே ஜயா டீவி சேட்டலைட் உரிமை வேண்டாம் என ஒப்பந்தத்தினை ரத்து செய்துவிட்டு கொடுத்த காசை வாங்கியுள்ளது,பின்னர் சேட்டலைட்ஸ் உரிமம் வியய் டீவியிடம் விற்றுள்ளார்,இந்நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுக்கவே இதான் சாக்கு என தடை விதித்துவிட்டார்கள் :-))

எல்லாம் ஜீவியில் வந்துள்ளது. ஜீவிக்கு முன்னர் இதனை கணித்த்தது அடியேன் மட்டுமே !!!

வர வர நான் கணிப்பது எல்லாம் அப்படியே நடக்குதே,ஒரு வேளை நமக்கும் தேவதையின் அருள் வாக்கு இறங்க ஆரம்பிச்சிடித்தா :-))

குலசேகரன் said...

இப்போதும் கருத்து சொல்லலாம்.

தீர்ப்பு கமலஹசனுக்குச் சாதகமென்றாலும் அவர் இனிமேல் இப்படிப்பட்ட விஷப்பரீட்சையில் இறங்கவே மாட்டார். அவருக்கு வேண்டியது பணம். கொள்கையன்று. எனவே ஒரு வியாபாரியின் நோக்கே அவருக்கு இருக்கும். அதன்படி மேலும் நட்டத்தில் மூழ்க அவர் விரும்பமாட்டார்.

இசுலாமிய அமைப்புக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்யும் (ஏற்கனவே அப்படிச்சொல்லியிருக்கிறார்கள்) தடையுத்தரவு அமலில் வரும். எப்போது நீங்குமென்று சொல்லவியலாது. மாதக்கணக்கில் கூட ஆகலாம். கமலுக்கு வேதனையே.

கமலஹாசனுக்குச் சாதகமில்லையென்றால் அவர் உச்சநீதிமன்றம் போவார். எனினும் அவர் மனுவில் தீர்ப்புச் சொல்லப்படும் வரையில் தடையுத்தரவு அமலில் இருக்கும். அதாவது இங்கும் அவருக்கு இழப்பே.

சார்வாகன் said...

சகோ இராசநட,

அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு. இதில் உங்களின் வெள்ளை மனம் தெரிகிறது. எத்த‌னை பதிவு,எதைப் பற்றி எழுதினாலும் இதுதான் மிச்சம் என வாழ்வின் தத்துவத்தை புரியவைத்த மாமேதையே போற்றுகிறேன்.

சந்தடி சாக்கில் வவ்வால் தன் கணிப்பு சரி,இறைத் தூதர் என தனது வவ்வால் மதத்தை பிரச்சாரம் செய்யப் பார்க்கிறார்.

உங்களின் வெற்றிட மதம் அத்னை விட உயர்ந்தது என்பதும் வெற்று பதிவு இடாமல் கண்டதையும் வெட்டி ஒட்டு பதிவிடுபவர்கள் உங்கள் மனதை புண் படுத்துவதால் ஒரு போராட்டம் நடத்துவோம்!!

வெற்றிடம் தேடி வேறு இடம் செல்லாதே
வெறி கொண்டு மனிதத்தை வேட்டையாடாதே!!

எப்புடீ!!

நன்றி!!

செங்கோவி said...

மிகவும் நடுநிலையான பதிவு..ஒரு பய குறை சொல்ல முடியாதுல்ல!

காட்டான் said...

தடை செய்ய சொன்னவங்களே கள்ள Cd விக்க தொடங்கீட்டாங்க அப்போ தங்கள் வியாபாரம் நல்லா போகனும்ன்னுதான் தடை கேட்டாங்களா..? காசுன்னா தங்கள் மதத்தையும் விற்பாங்கபோல?

நம்பள்கி said...

இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுக்கவே இதான் சாக்கு என தடை விதித்துவிட்டார்கள் :-))

வவ்வால், தமிழில் பேசுவோம்; சென்னைத் தமிழை வளர்ப்போம்..!

மேலே சொன்ன வாக்கியத்தில், "தடை விதித்துவிட்டார்கள்" என்ற சொற்றடரை எடுத்து விட்டு, இப்படி எழுதினால் நன்றாக இருக்கும்...

இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுக்கவே இதான் சாக்கு என 'வடை தட்டிவிட்டார்கள்' :-{[

வருண் said...

அரசியல் மேதை நடராஜன்:

நீங்க ஏன் இப்படி ஒரு எழவையும் எழுதாமல் பம்முறிங்கனு தெரியலை.

நான் வேணா ஒரு சில மேட்டர் சொல்றேன். அதைப்பத்தி விமர்சிங்க!

* விஸ்வரூபத்துக்குப் போலிஸ் பாதுகாப்புக் கொடுக்காமல் தடை உத்தரவு போட்ட தமிழ்நாடு ஆளுங்கட்சித் தலைவி ஜெ ஜெ செய்யம் அரசியல் பத்தி பேசலாம்.

* நாம் தமிழர் கச்சியை சேர்ந்த சீமான் விஸ்வருபத்துக்கு வச்ச ஆப்பு பத்தி விமர்சிக்கலாம்.

கமலின் அடிதடினு பெருமையாக சொல்லிக்கொள்ளும் நீங்க மம்மியிடம் பம்மி நிற்பது செம வேடிக்கைதான் போங்கோ!

வவ்வால் said...

நம்பள்கி,

//இஸ்லாமிய அமைப்புகள் புகார் கொடுக்கவே இதான் சாக்கு என 'வடை தட்டிவிட்டார்கள்' :-{[//

அய்யயோ ராச நடைக்கிட்டே எல்லாம் தெளிவா தமிழில் சொன்னாலே புரிஞ்சுக்க மாட்டார், நாம ஒன்னு சொன்னா அதுக்கு சரியா எதிரா ஒரு பொருளில் பேசுவார், சென்னை தமிழில் பேசினா சுத்தம் ,ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் கொழப்பிடுவார், பெரிய கொழப்பவாதி அவர் :-)))

எனக்கு ஓரளவு சென்னை தமிழ் வரும், அதை பேசுவதற்கே கலீஜா பேசுறேன்னு எனக்கு ஒரு பேரு உண்டு :))

நாம வேணா சென்னை தமிழில் பேசி தமிழை வளப்போம், தமிழ் பேசு தங்க காசு :-))

இந்த இடத்தில் தமிழை வளர்க்க ஒரு சிறு குறிப்பு,

தமிழ்ப்பேசு என "ப்" வைத்தால் தமிழில் இருப்பதை பேசு என்றாகிவிடும் அதாவது எழுதிய ஏதோ ஒன்றை அப்படியே தமிழில் வாசிப்பது.

தமிழ் பேசு என்றால் தமிழ் மொழியை பேசு என்பதாகும் எனவே "ப்" என ஒற்றெழுத்து கூடாது!

தங்கக்காசு என்றால் தங்குவதற்கு காசு, லாட்ஜில் தங்குவது போல, தங்க காசு என்றால் தங்கத்தில் ஆன காசு :-))

எப்பூடி:-))

ஹி...ஹி நானும் தமிழை சரியா கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் ஒருவனே, ச்சும்மா ஒரு ஆர்வத்தில தமிழ்ப்பற்றி கதைக்கிறது தான்!

Anonymous said...

என்னக் கொடுமை, உங்கள் பதிவுக்கு தணிக்கை வந்து விட்டதா .. ஐயகோ .. !

வேகநரி said...

சகோ இக்பால் செல்வன், உங்க பதிவுகளுக்கு பின்னோட்டமிட முடியவில்லை.

ஜோதிஜி said...

சிரித்து விட்டேன்