Followers

Friday, January 28, 2011

மூன்றாம் அணி சாத்தியமே!

தமிழக பயணத்தில் அரசியல் களம் புரியாத அல்லது அறிந்து கொள்ள நேரமில்லாத ஆண்கள்,பெண்கள் என்ற உழைக்கும் வர்க்க,இல்லத்தரசிகள் என்று சிலரின் வாக்கு யாருக்கு என்று கேள்வி எழுப்பியதில் தி.மு.க-அ.தி.மு.க என்ற நிலைக்கும் அப்பால் அவர்கள் வரவில்லை என்பதோடு இணைய விவாதங்களும் கூட இங்கேயே போய் சங்கமிக்கின்றன.ஈழம் மட்டுமல்லாது தமிழக சமூக அக்கறை கொண்டவர்களும் தனித்தனி இயக்கங்களாக இயங்குகிறார்கள் குறைந்த பட்சம் காகித அடையாள அட்டை வரையாவது.

தி.மு.க - அ.தி.மு.கவுக்கு எதிராக மூன்றாம் அணிக்கான சாத்தியங்கள் இருக்கிறது தலைமை யார் என்ற ஈகோ மட்டும் களைந்து விட்டால்.

எந்த மலரும் அன்றே விதையிட்டு அன்றே மலர்வதில்லை.சீமான் என்ற தோட்டக்காரனுக்கு இது முன்பு புரிந்திருந்தும் இடையில் வந்த அ.தி.மு.க குழப்ப காய்ச்சல் சீமான் அ.தி.மு.க பக்கம் தாவினாலும் சாடாமல் இருந்தாலும் இரு பெரும் திருடர்களில் ஒருவர் மீண்டும் வென்று தங்கள் பல்லைக்காட்டி சிந்திக்கும் மக்களை நோக்கி தமது கட்டவிழ்ப்புக்களை நிகழ்த்துவார்கள்.

தீர்வுக்கு இன்னும் கூட கால அவகாசம்  இருக்கிறது.

முகம் அறியப்பட்ட அவரவர் கட்சித்தலைவர்கள் ஒரே கோட்டு கொள்கைக்காக வேண்டியும்,மொழிக்காக நம்மை கோமாளிகள் என்று சிரித்துக்கொண்டிருக்கும் சிங்களவனுக்கு தமிழ்நாடு என்ற பூகோளம் சார்ந்துதான் உன் வாழ்க்கையும் என தெரிவிக்கவும், மத்திய அரசுக்கும்,இரு கட்சிகள் பரிட்சித்துப்பார்த்து விட்டோம் .....இரண்டின் சுவடுகள் அறிந்த பின் கொஞ்சம் சமரசம் மட்டும் தமக்குள் செய்துகொண்டால் ஒட்டு மர ஓட்டுப்பூக்கள் என்ற மூன்றாம் நிலை மலர்கண்காட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து விடமுடியுமென்றே நினைக்கின்றேன்.

பழமை பேசியின் பதிவான சீமானின் நாம் தமிழர் கட்சி பின்னூட்டம் போடும் போது எனக்கு அவ்வ்வ்வ்வ்வ்வென்றே இருந்தது.ஆனால் ஒரே இயக்க உணர்வுள்ள வை.கோ.பெரியார் திராவிட கழகம்,பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கம்,இன்னும் பத்து நாட்களில் யாருடனாவது சேர்ந்து விடுவது என்று காத்திருக்கும் பாட்டாளி கட்சி,உழைப்பாளர் வர்க்க கம்யூனிஸ்ட்கள் இன்னும் பலர் என்று குழு அமைத்தால் கீழே கண்ட கட்சிகளின் முதல்,இரண்டு நிலைகளில் நிற்பவையும் அதனை சார்ந்து நிற்கும் சில கட்சிகளையும் தவிர்த்தால் பேச்சு வார்த்தைகளில் மூன்றாவது அணி சாத்தியமே.

இடப்பங்கீடு?யாருக்கு வெல்லும் வாய்ப்புக்கள் அதிகமோ அந்த தொகுதிகள் விட்டுக்கொடுப்பும்,தோள் கொடுப்பும்.உங்களுக்குள் ஒற்றுமையென்றால் பரவாயில்லை.ஆனால் நாற்காலி,மகுட கனவென்றால் தலைமை உங்களில் ஒருவரல்ல! ஏனென்றால் அதில் தான் என்ற ஈகோவுக்கான சாத்தியம் இருக்கிறது.இதன் காரணம் கொண்டே மூன்றாம் அணிக்கான தயக்கங்களும் இதுவரை இயலாமையும். எனவே நிர்வாகம் கற்ற உமாசங்கர் ஐ.ஏ.எஸ் போன்ற ஒருவரை அல்லது புதிய ஒருவரை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தி தட்டி ஒட்டும் அடிப்படை தொண்டன் வரை மாவட்டம் தோறும் அமைத்து விட்டால் மூன்றாம் அணி சாத்தியமே.

பாராளுமன்றமே கூட்டுக்குழுவாக இயங்கும் போது சுயநலமில்லாத,மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தும் கொள்கை,மொழி உணர்வாளர்களை இணைப்பதில் தமிழகத்தில் ஏன் இது சாத்தியமில்லை?

கழட்டி விட்ட முதல் இரண்டு கட்சிகளை தவிர்த்துப் பட்டியலைப் பாருங்கள்.இப்பவே ஜெயிச்ச மாதிரி கண்ணைக்கட்டுதே!

பழமைண்ணா!இதுக்குப் பேருதான் நேர் அணுகுமுறை என்பது.பதிவை சுட்டதுக்கு நன்றி சொல்லுங்கள்:)

   1. திமுக
   2. அதிமுக
   3. தமிழ்ப் பேராயக் கட்சி
   4. அ.இ.கற்றும் வேலையற்றோர் கட்சி
   5. அ.இ.ஏழை மக்கள் முன்னேற்றக் கழகம்
   6. அ.இ.ல.தி.மு.க
   7. அ.இ.மக்கள் முன்னேற்றக் கழகம்
   8. அ.இ.மூவேந்தர் கழகம்
   9. அ.இ.முஸ்லீம் லீக்
  10. அம்பேத்கார் மக்கள் இயக்கம்
  11. அம்பேத்கார் மக்கள் கட்சி
  12. அருந்ததியர் தமிழக முன்னேற்றக் கழகம்
  13. பாரதீய பார்வார்டு ப்ளாக்
  14. காமன்வீல் கட்சி
  15. காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை
  16. தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்
  17. ஜனநாயக பார்வார்டு ப்ளாக்
  18. திராவிடத் தெலுகர் முன்னேற்றக் கழகம்
  19. திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்
  20. திராவிடக் கட்சி
  21. இந்து மக்கள் கட்சி
  22. இந்திய கிறித்துவர் முன்னணி
  23. இந்திய ஜனநாயகக் காங்கிரஸ்
  24. இந்திய சமத்துவக் கட்சி
  25. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி
  26. காமராசர் ஆதித்த்னார் கழகம்
  27. காமராசர் தேசியக் காங்கிரசு
  28. காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசு
  29. கொங்குநாடு மக்கள் கட்சி
  30. கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
  31. எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
  32. எம்ஜிஆர் கழகம்
  33. எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்
  34. எம்ஜிஆர்-எஸ்.எஸ்.ஆர் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
  35. மக்கள் மாநாடு கட்சி
  36. மக்கள் தமிழ்த் தேசக் கட்சி
  37. மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
  38. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  39. மார்க்சிஸ்டு பெரியாரிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  40. மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
  41. இந்திய பார்வார்டு ப்ளாக்
  42. அரவிந்த பால பஜனோர் கட்சி
  43. பசும்பொன் பார்வார்டு ப்ளாக்
  44. பாட்டாளி மக்கள் கட்சி
  45. புதிய நீதிக் கட்சி
  46. புரட்சிகர பார்வார்டு ப்ளாக்
  47. சுபாசிஸ்டு பார்வார்டு ப்ளாக்
  48. தமிழ் அரசு கழகம்
  49. தமிழ் தேசியக் கட்சி
  50. தமிழ் மாநிலக் காங்கிரசு
  51. தமிழ் மாநிலக் காமராஜ் காங்கிரசு
  52. தமிழ்நாடு பார்வார்டு ப்ளாக்
  53. தமிழ்நாடு மக்கள் கட்சி
  54. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
  55. தமிழ்நாடு தொழிலாளர் கட்சி
  56. தமிழ்த் தேசியக் கட்சி
  57. தமிழகத் திராவிடக் கட்சி
  58. தமிழக ஜனதாக் கட்சி
  59. தமிழக மக்கள் முன்னணி
  60. தமிழக முன்னேற்றக் கழகம்
  61. தமிழர் பூமி
  62. தமிழக முன்னேற்ற முன்னணி
  63. தமிழகப் பெரியார் திராவிடர் கட்சி
  64. தாயக மறுமலர்ச்சிக் கழகம்
  65. தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
  66. தொண்டர் காங்கிரசு
  67. தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
  68. உழவர் உழைப்பாளர் கட்சி
  69. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
  70. விவசாயி அன்புக் கட்சி
  71. நமது கழகம் (பல்லடம் ப.கோ.கிட்டு அவர்களுக்கு தராசு சின்னத்தில் வாக்குக் கேட்டேன்... இஃகி)
  72. புதிய தமிழகம்
  73. பாரத தமிழகம்
  74. திராவிட முஸ்லீம்
      முன்னேற்றக் கட்சி
  75. அதிமுக (நால்வர் அணி)

4 comments:

துளசி கோபால் said...

75 ஆஆஆஆஆஆஆ

ராஜ நடராஜன் said...

//75 ஆஆஆஆஆஆஆ//

76 டீச்சர்:) நாம் தமிழர் கட்சி பட்டியலில் சேர்க்கவில்லை பழமைபேசி.

இதுவ்ரைக்குமாவது இருக்குதேன்னு மகிழ்ச்சிப்பட்டுக்கலாம்.

டீச்சர்!இரண்டு நாளைக்கு ஒரு ஊர்ன்னு சுத்தி சுத்தி உங்களை சந்திக்க இயலவில்லை.அடுத்த பயணத்துக்கு இப்பவே நேரம் ஒதுக்கி வைத்து விடுகிறேன்.

பழமைபேசி said...

இஃகிஃகி... நன்றிங்க!

ராஜ நடராஜன் said...

//இஃகிஃகி... நன்றிங்க!//

பழமை!உங்கள் அன்பளிப்புக்கு பரிசாக ஒரு விசயம் சொல்கிறேன்.உங்களைப் போன்றவர்களுக்கு ஆராய்ச்சி செய்ய உதவும் என எண்ணுகிறேன்.

தமிழர்கள் சுமேரிய நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்றும் வரலாறு சொல்வது போல் மொஹஞ்சோ தாரோ,ஹரப்பா பகுதிகளிலிருந்து ஆரிய ஆக்கிரமிப்பில் அடித்து தென்பகுதிக்கு துரத்தப்பட்டவர்கள் என்றும் ஒரு விவாதம் லண்டன் வாழ் தமிழர்களிடம் நடந்து கொண்டிருந்தது.கூடவே குமரிக்கண்டம் நீரில் மூழ்கிப்போய் விட்டதென்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் மொழி கணிதம் அடிப்படையாக கொண்டது.அதாவது கணிதம்,தத்துவம்,மெய் என்ற மூன்று உள்ளடக்கத்துடன் சித்திர முறையிலிருந்து வேறுபட்ட அட்சர முறை எழுத்து முறை சிறப்பு தமிழுக்கு மட்டுமே உண்டு என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

செம்மொழி மாநாட்டில் இவைகள் பேசப்பட்டனவா?எப்படியோ செம்மொழி மாநாட்டின் பலன் அவினாசி கோயம்புத்தூர் சாலை நன்றாக இருக்கிறது.நான்கு வழிச்சாலையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஒரு இஃகிஃகி க்கு இத்தனை விளக்கமா:)