ஜெயகாந்தன் எழுத்தான sex is sacred but sex appeal is commercial vulgarity ன்னு வாசித்து விட்டு பின்பு சோவியத் யூனியன் என்ற கம்யூனிஸ சித்தாந்தங்கள் தோற்றுப்போன பின் ஜெயகாந்தனும் எழுத்துக்களை குறைத்து விட இப்பொழுது தொழில்நுட்ப மாற்றக் கலாச்சாரத்துக்கு மாறியபின் சாருவின் கோணல்பக்கங்களை தமிழ்மணத்துக்கு வந்ததன் மூலம் பதிவர்களின் எழுத்துக்களில் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சியில் சாருவின் முக அசைவுகளை முதன்முறையாக கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது.
நேற்று ராஜ் தொலைக்காட்சியில் ஒலிம்பிக்ஸ் 2008 அபினவ் பிந்த்ராவின் 28 ஆண்டு கழித்து கிடைத்த தங்கத்தைப் பார்வையிட்டு விட்டு மக்கள் தொலைக்காட்சியில் அரசாங்க உதவித்தொகையை பெறுவதற்காக வேண்டி அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசாங்க அலுவலர்களின் கையூட்டு வாங்கும் பழக்கத்தால் படும் சிரமங்களின் வர்ணனைகளைப் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சிக்குத் தாவினால் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.நிகழ்ச்சியை நடத்துபவர் சேலையுடன் பெண்ணாகத் தோற்றமளித்தாலும் பேச்சுக்குரல் ஆணுக்குரியதாக இருக்கிறதே என்று கவனித்தால் அவர் திருநங்கைபோல் இருக்கிறது.அவருக்கு எதிரில் மற்றொரு பெண் பாலியல் பற்றி விவரித்துக் கொண்டுள்ளார்.அன்றாடத் திரைப்படங்களுக்கு மத்தியில் களம் புதியதாக தோற்றமளிக்கவே அலைவரிசையை மாற்றாமல் கவனித்தேன்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பெயர் நளினி ஜமிலா-பாலியல் தொழிலாளி-எழுத்தாளர் என்ற எழுத்துக்களுடன் உரையாடல் தொடர்கிறது.இடையில் வந்ததால் பேட்டி காணும் திருநங்கை யாரென்று பெயர் தெரியவில்லை.ஆனால் நிகழ்ச்சியின் இடைவேளைக்குப் பிறகு இப்படிக்கு தமிழுடனும் ரோஸ் ஆங்கிலத்துடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்த மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையெல்லாம் இந்தி நடிகர் அனுபம் கேரின் மனைவி கிரண் கேர் தொலைகாட்சிப் புற்றீசல்களின் துவக்கத்திலேயே நிகழ்த்தி அடித்து துவைத்து காயப்போட்டு விட்டார்.இம்மாதிரி நிகழ்ச்சிகள் இன்னும் வடக்கு திசையில் நிகழ்கிறதா எனத் தெரியவில்லை.
முன்பு கமலாதாஸ் எழுதிய சுயசரிதம் எண்ட கதா என நினைக்கிறேன்.கேரளாவிலும் ஏனைய எழுத்துழகிலும் ஒரு சலசலப்பை உருவாக்கியது.பின் அருந்ததி ராய் 1992 ல் தனது The God of Small Things புக்கர் பிரைஸ் முதல் நாவல் மூலம் அறிமுகமாகி, கம்யூனிசப் பார்வை,பொக்ரான் அணுகுண்டு சோதனை,நீதியக அவமதிப்பு ,அமெரிக்க எதிர்வாதம் என்று சொல்லி பிரபலமாகி விட்டார். இப்போது நளினி ஜமிலாவின் வலம் போல் தெரிகிறது. அவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதிய Oru Laingikattolilaliyute atmakatha - என்ற மலையாளப் புத்தகம் "Oru Paaliyal Thozhilaaliyin Suyacharithai" (An Autobiography of a Sex Worker) in Tamil translation, புத்தக சரிதையுடன் பேட்டியில் பங்கு கொள்கிறார். எப்படி பாலியல் தொழிலுக்கு வந்தார் என்று விபரங்கள் தெரியவில்லை. ஆனால் தன்னை அனுபவித்த காவல்துறை அதிகாரி அதன்பின் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறினார்.காவல்நிலையத்தில் காவலர்கள் கணுக்காலில் அடித்தால் காப்பாற்று என்று அலறவேண்டுமாம்.அப்படி அலறினால் மூன்று அடியுடன் விட்டு விடுவார்களாம்.ஆனால் இவரோ வலியையும் தாங்கிக்கொண்டு பிடிவாதமாக இருந்தாராம்.அதனால் மீண்டும் மூன்று அடி கால்மேல் விழுந்ததாம்.அதற்கும் அவர் பொறுமையாக இருக்கவே மீண்டும் முதுகில் இரண்டு சாத்தல்.
பேட்டி கண்டவர் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்றதற்கு "ஆண்கள் உண்மையிலேயே பாவம்!பெரும்பாலான ஆண்கள் பயந்தவர்கள்.வலியப் போய் சைகை செய்தாலோ,அணுகினால் மட்டுமே மடிகிறார்களாம்.கையில காசு வாயில தோசைப் புதுப்பாட்டின் படி காசை
வசூலித்து விடுவேன் என்றார்.இலக்கியத்திலிருந்து பாடல் ஒன்று மேற்கோள் சொன்னார்.மேலும் அந்தக் காலத்தில் பெண்கள் சாவகாசம் என்பது அரச
பரம்பரைக்கும்,மந்திரிகளுக்கும்!!!சேனாதிபதிகளுக்குமே வாய்த்ததாகவும்,சாதாரணக் குடிமக்களுக்கு அந்த அனுபவங்கள்
போய்ச்சேரவில்லையென்றார்.கோயில் சிற்பங்கள் பற்றியெல்லாம் சொன்னார்.தன்னைப் பார்த்து இந்த தொழிலுக்கு யாரும் வந்ததாக இதுவரை யாரும் தன்னிடம் சொல்லவில்லையென்றும் இனிமேலும் யாரும் தனது அனுபவங்களைப் பார்த்து வந்து விட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். மங்களகரமாக வாழ்க்கை அமையும் போது பாலியலும் வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளில் ஒரு அங்கம்தான்.ஆனால் பாலியல் தொழிலில் அது அவசரத்தில் செய்யும் சிசேரியன் சிகிச்சை மாதிரி என்றார்.இன்னும் நிறைய சொன்னார்.
இவரது பேச்சின் இடையில் பேட்டி காண்பவரால் காமிராவுக்கு வரவழைக்கப்பட்டவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பதிவுகளில்தான் தமிழ்ச்சினிமாவுக்கு வில்லன் பாத்திரத்திற்கு தகுந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் காமிராவுக்கு முன் மனிதர் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பயந்த சுபாவம் கொண்டவர் மாதிரி எனக்குத் தோற்றமளித்தார்.எழுத்தில்தான் அவரது ஆக்கமும் ஆதிக்கமும் என
நினைக்கிறேன்.தொலைக்காட்சிக்கு முன் சாதுவாக முரண்நடையாகத்தான் பேசுகிறார்.தனக்கு பெண்களைப் பற்றி அதிகம் தெரியாது.ஆனால் ஆண்களின்
குணம் நன்கு தெரியுமென்றார்.இந்திய ஆண்களிடம் பெண்களிடத்தில் Hunting mentality ( இது எனது வார்த்தை) உள்ளதாம்.அதாவது 10 மணிக்கு மேல்
எந்தப் பெண்ணும் இரவில் தனியாக நடமாட முடியாது என்றும் ஆண்களிடத்தில் ஒரு வேட்டைப் புலியின் பசி இருப்பதாகவும் சொன்னார்.தாய்லாந்தைப் பாருங்கள்.பாலியல் தொழில் சட்டமாக்கப் பட்டு விட்டதால் அங்கே ஒரு கற்பழிப்பு கூட இல்லையெனவும் பெண்கள் சுதந்திரமாகத் திரியலாம் என்றார். மேலும் தொண்ணூறாயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளார்கள் என்றும் பாலியலை சட்டபூர்வமாக்கி விட்டால் பாலியல் குற்றங்கள் குறையும்,காவலர்கள்,இடைத்தரகர்கள் குற்றவியல் குறையும்.எச்.ஐ.வி போன்ற நோய்கள் குறையும் வாய்ப்புக்கள் உண்டு என்றார்.இந்த வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.தவறுகள் குறைவாக நடக்கும் நிலையில் இதனை முழு சமுதாய மாற்றமாக்கி விடலாமென்பது முழு நேர எழுத்தாள சிந்தனைக்கு உகந்ததல்ல.
மேலும் தற்போது மேலை நாட்டுக்கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு இளம்பெண்கள் சுமார் 30 வயது வரை பாக்கெட் மணி எனும் கலாச்சாரத்துக்கு மோகம் கொள்கிறார்கள் என்றார்.தனது உடை,முக அலங்காரம்.தலை அலங்காரம் போன்ற செலவுகளுக்காக வேண்டியே இந்த பாக்கெட் மணிக்கு செல்கிறார்கள் என்றார்.
இதனிடையில் வித்யா என்ற பாலியல் தொழிலாளி பேட்டிக்கு வரவழைக்கப்பட்டார். இந்த வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார்.இப்பொழுது நளினி ஜமிலாவைப் பார்த்து தைரியம் கொண்டு காமிரா முன் வந்ததாக சொன்னார்.அவர் அதிகம் பேசவில்லை.பேட்டியாளர்,நளினி ஜமிலா.சாரு நிவேதிதாவின் பேச்சுக்களை கவனிக்கும் பார்வையாளராய் மட்டும் தோன்றினார்.நிகழ்ச்சியின் இறுதியாக காட்சியாளர் நளினியைக் கட்டிப்பிடித்து அரக்குநிறப் பட்டுச்சேலையை நளினியின் தோளில் சாத்தினார்.முதுகில் வாங்கிய சாத்தலுக்கு அனுபவமும்,துணிவும்,எழுத்தும் தந்த அங்கீகாரம் போலும் இந்த பட்டுச்சேலை சாத்தல்.நிகழ்ச்சியாளர் அழகான தமிழும்,ஆங்கிலமும் பேசுகிறார்.இந்தமாதிரி இந்த இருநிலை வாழ்மக்களின் வாழ்க்கை நிலை மாறவேண்டும்.
இவ்வளவு நேரம் தொலைக்காட்சி கதை சொல்லி விட்டு எனது பார்வையையும் சொல்லி விட்டுப் போகலாம் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு காலத்தில் யாராவது குடிக்க வேண்டுமென்றால் பெங்களூர்ப் பக்கமோ,பாண்டிச்சேரி பக்கமோ போகவேண்டும்.அப்படி வண்டி கட்டிக்கொண்டு போவது எத்தனை பேருக்கு சாத்தியம்?லாரி டிரைவர்களுக்கும்.கல்லூரி உல்லாசப் பயணம் போகும் தருணங்கள் மாத்திரமே அந்த மாதிரி கோலாகலங்களுக்கு உதவியது.அன்றாட வாழ்வில் குடிக்காத மனிதர்கள் அதிகமாகவும்,கெட்ட பழக்கங்கள் தொத்திக்கொள்ளும் குறைந்த பட்ச மனிதர்கள் மாத்திரமே நிறைந்த வாழ்க்கையாக இருந்தது.சென்னை போன்ற பெரும் நகரில் மட்டும் கஞ்சா போன்ற பெட்டிக்கடைகளும் அதனை உபயோகிக்கும் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளின் மூச்சுத்திணறலே பெரிதாக இருந்த சூழ்நிலையில் நமது வருமானமெல்லாம் அண்டை மாநிலத்துக்குப் போய்ச் சேர்கிறது என்ற வரி வசூலிப்பு சாம்ராஜ்யத்தில் உருவான கொள்கையில் வந்ததல்லவா தற்போதைய டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகள்.
தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரிப்பட்டு வராத காரணமிருந்தாலும் கூட குடிப்பதும் கூட நாகரீகம்.ஆனால் நமது மக்களுக்கு குடிப்பதெப்படி என்ற பாலபாடம் கூட எடுக்காமல் திரைப்படத்தில் கதாநாயகன் முழுபாட்டில் ஸ்காட்ச் ஸ்டிக்கருடன் தேநீர் பானத்தை மொடக்குவதைப் பார்த்துவிட்டு நமது அப்பாவி குடி ரசிக சிகாமணிகள் அதே பாணியில் மொடக்குகிறார்கள். மீண்டும் ஒரு முறை ஜெயகாந்தனை தேடிப்பார்க்கவேண்டும்,பார்ட்டி எனப்படும் விருந்துகளில் குடிப்பது எப்படி என்ற சொல்விளையாடலை.
காலை எட்டுமணியளவில் கூட குடித்துவிட்டு தேனாம்பேட்டை வண்டி நிறுத்தத்தில் இறங்கவேண்டிய பயணி நிறுத்துனர் சொல்லியும் கேட்காமல் வண்டிக்குள்ளேயே முணங்கும் காட்சியெல்லாம் சென்னையில் சர்வசாதாரணம்.இப்பொழுது தமிழ்நாடே குடிக்கலாச்சாரமாக்கிவிட்டு போதையில் தன்னிலை இழக்கும் மனிதன் பாலியல் தவறுகளுக்கும் தூண்டப்பட்டு விடுகிறான்.அந்தமாதிரி சூழலில் வேண்டுமானால் சாரு சொல்லும் வேட்டைப்புலி பசி வருவதற்கான சந்தர்ப்பம் ஆணுக்கு தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.பதினைந்து வயது வரை கலாச்சார புடம்போடப்பட்டு இன்னும் பத்து வயதுகள் கல்லூரிக் கனவுகள்,காதல் நினைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்துக்குள் எட்டிப்பார்க்கும் அடுத்த ஐந்து ஆண்டு வரை வாழ்க்கை சீராக செல்கிறதென்று வையுங்கள். அடுத்து வரும் காலங்களைத் தீர்மானிக்கும் மன ஆற்றல் உங்களிடமே.உடல் உபாதைகளுக்காக யாரும் வீடு கட்டிக்கொள்வதில்லை.அந்த உபாதையும் ஒரு அங்கம்தான்.எனவே ஒதுக்குப்புறமாக அதற்கும் ஒரு அறை என்பதே சரியாக இருக்கும்.இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமலிருக்குமளவுக்கு மனிதனுக்கு அன்றாடப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கிறது.வறுமைக் கோட்டின் எல்லையைக் கடக்கும் நிலை வந்துவிட்டால் பாலியல் தொழிலாக மாறாமல் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இறுதியாக பாலியல் சட்ட முத்திரையிட்டுக் கொண்டு சமுதாயத்திலிருந்து பெண்களே நீங்கள் மீண்டுமொரு முறை தேவதாசி தனிமைப்பட்டுப் போகாதீர்கள்.