Followers

Thursday, September 20, 2012

(பதுமை) புதுமை ஹிஜாப் (பர்தா) பெண்!

சி.என்.என் தற்போதைய சூழலுக்கேற்றவாறு கொஞ்சம் மசாலா சேர்த்துடுச்சான்னு தெரியல.ஆனால் ஈரானின் கிராமம் ஒன்றில் கலாச்சாரப் போலிஸ் பணி செய்யும் மத போதகர் ஒருவர் மயக்கமாகி மருத்துவ மனைக்குப் போனது மட்டும் உண்மை.நடந்தது என்ன?இதைப்படிப்பவர்களுக்கு ஒன்று சிரிப்பு வரவேண்டும்.இல்லாட்டி எரிச்சல் வரவேண்டும்

கிளரிக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஈரானிய போதகர் ஹஜடோலிஸ்லாம் அலி பிகெஸ்டி (Hojatoleslam Ali Beheshti) வழிபாட்டுக்கு செல்லும் வழியில் கண்ட இரு பெண்களை முழுக்க முகத்தை மூட சொல்லி நமது ஊரில் விண்ணப்ப படிவத்தில் போடும் சொல்லான மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொண்டும் கூட இரண்டு பெண்களில் ஒருவர் வேணுமின்னா நீங்க உங்க கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என்று சொல்ல இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த ஹெஸ்ட்டி மறுபடியும் முகத்தை மூடச்சொல்லி அருகில் செல்ல கோபமடைந்த பெண்கள் போதகரின் ஆடையைப் பற்றி இழுக்க நிலை தடுமாறி கீழே விழுந்த போதகருக்கு அப்புறம் என்ன ஆனோம் என்று தெரியவில்லையாம்.பாதி மயக்கத்தில் பெண்கள் உதை கொடுத்து அவரை திட்டுவது மட்டுமே கேட்டதாம்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஹெஸ்ட்டி இதுவரை காவல்நிலையத்தில் குற்றம் சுமத்தவில்லையாம்.ஆனால் இஸ்லாமிய ஹிஜாப் மரபைக் காக்க வேண்டி கிராமத்து நாட்டாமை இது பற்றி விசாரணை செய்தாலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்கிறார் ஹெஸ்ட்டி.
பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் இந்த மூடு வேலைகள் நிகழுமென்றும் கிராமப்புறங்களில் இது போன்று யாரும் அறிவுறுத்துவதில்லையென்றும் அரசு சார்பு மெகர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

97 comments:

ராஜ நடராஜன் said...

இவ்ளோ சீக்கிரமாக ஒரு மைனஸ் ஓட்டா:) நன்றி.

வவ்வால் said...

ராச நடராசரே,

சு.பி.சுவாமிகளிடம் சொன்னால் கல்லால் அடித்து கொல்ல தண்டனை கொடுத்து மார்க்கத்தினை காத்து இருப்பார்.

-------

யாரோ நம்ம பதிவுக்கும் ஓட்டு போடுறாங்களேன்னு சந்தோஷப்படாம,மைனஸ்,பிளஸ்னு சொல்லிக்கிட்டு :-))

வருண் said...

நெகட்டிவ் மதிப்பெண்கள்தான் உண்மையிலேயே மனமுவந்து கொடுப்பது. அதை பெருமையுடன் வாங்கிக்காம.. என்ன நீங்க இப்படியெல்லாம் "நன்றி" சொல்லிக்கிட்டு??

All kinds of girls to make the world! LOL

However beating him up for this, is sort of "rude behavior" I should say! :-)

என் கவலை என்னனா, நீங்களும் சி என் என் னும் இப்படி இதை உலகத்துக்கே சொன்னதால், அந்த பொண்ணுங்களுக்கு எதுவும் ஆபத்து வந்துவிடுமோ?

பெண் பாவம் உங்களை சும்மா விடாது நடராஜன்!!!

கோவி.கண்ணன் said...

செவிக்கு உணவு. செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'

பொழுது போகாத வேளைகளில் மார்க்கத்தின் மானம் காக்கப்படும் னு கிளம்பிடுவாங்கப் போல

Anonymous said...

இரானில் ஒரு சிறிய கிராமத்தில் இப்படி ஒரு வீரப் பெண்ணா ? அவரின் பெயர் என்ன என்று அறியலமா ... எனக்கு ஒரு மகள் பிறந்தால் அப் பெண்ணின் பெயரையே வைக்க முனைவேன் ... !

:)

மண் கவ்விய மதவாதியினை நினைத்தால் என்ன சொல்வது .. முல்லாக் கதைகள் தான் நியாபகம் வருகின்றது ..

K said...

நடா, அண்ணா! அந்த இரண்டு பெண்களையும் நம்மூருக்கு அழைத்து வந்தால் தேவலை! இங்கும் சிலருக்கு உதைக்க வேண்டி இருக்கு :))

அண்ணே, இந்த வாரம் ஹிஜாப் வாரமா அண்ணே??

கேரளாக்காரன் said...

அடிச்சாலும் திருந்தாத சில அமெரிக்க கைக்கூலிகள் என்ன பண்ண :)

வருண் said...

***கேரளாக்காரன் said...

அடிச்சாலும் திருந்தாத சில அமெரிக்க கைக்கூலிகள் என்ன பண்ண :)
September 20, 2012 7:27 PM***

ஏண்டா சம்மந்தா சம்மந்தம் இல்லாம ஒளறுற?

உன் அம்மா, "இணையதளத்தில் போயி எதையாவது ஒளறிட்டு செருப்படி வாங்கிட்டு வாடா மகனே"னு அனுப்பி விட்டாங்களா? எதுவும் வேண்டுதலா? உன் பீடை கழியனும்னு??

நீயும்தான் போற எடமெல்லாம் செருப்படி வாங்குற? திருந்திட்டயா என்ன??

கேரளாப் பையனா நீ! பார்த்தா பொறுக்கிப்பைய்யன் மாதிரி இருக்க?
கேரளாக்காரன் எல்லாம் இப்படி கூறுகெட்டதனமா ஒளறமாட்டானே?.

உன் அம்மாட்ட, ஒன் உண்மையான அப்பா யாருனு கேட்டுத் தெரிஞ்சிக்கோ!

என்ன புரியுதா?

சம்ம்ந்தா சம்மந்தம் இல்லாம ஒளறினால் செருப்படிதான் விழும்!

-------

ps: நடராஜன்: க்ளீன் பண்ணினால் மொதல்ல இந்த கேரளாக்காரன் எடுத்த வாந்தியை க்ளீன் பண்ணிட்டு அடுத்து என் இதை கவனிக்கவும்! நன்றி!

கேரளாக்காரன் said...

உங்களுக்கு பைல்ஸ் ப்ரச்சினை இருக்கிறது வருண் :)

நான் உங்களை சொல்லல..

நீங்க யாருன்னே எனக்கு தெரியாது....

இப்படி கத்தவேண்டிய அவசியம் என்ன?

உங்கள் கற்ப்பனைக்குதிரைகளை கொஞ்ஜம் லாயத்தில் கட்டி வைத்தால் நலம் :)

கேரளாக்காரன் said...

//சம்ம்ந்தா சம்மந்தம் இல்லாம ஒளறினால் செருப்படிதான் விழும்!//

அப்போ இன்னேரம் ஏகப்பட்டது வாங்கிருக்கனுமே :)

கேரளாக்காரன் said...

வருண் அம்மாகிட்ட அவங்க அப்பா பேர கேட்டு தெரிஞ்சிக்கறேன் :)

வருண் said...

***நான் உங்களை சொல்லல..

நீங்க யாருன்னே எனக்கு தெரியாது....

இப்படி கத்தவேண்டிய அவசியம் என்ன?***

எதுக்கு சம்மந்தம் இல்லாமல் உன் முதல் பின்னூட்டம்???

அதை விளக்கு மொதல்ல!


என்னைப் பத்தி பேசல விடு!

பதிவுக்கு சம்மந்தம் இல்லாம என்ன மயிறுக்கு ஒளறுற?

இப்போ பெரிய யோக்கிய்ன மாரி பேசுற??

கேரளாக்காரன் said...

இன்னிக்கு நான் தான் கெடச்சேனா வேற வேல இருக்கு நீ வேற வீடு பாரு :)

வருண் said...

***கேரளாக்காரன் said...

இன்னிக்கு நான் தான் கெடச்சேனா வேற வேல இருக்கு நீ வேற வீடு பாரு :)***

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா வெண்ணை!

யாரை அமெரிக்க கைக்கூலினு சொன்ன?

அதை சொல்லவேண்டிய அவசியம் என்ன??

வருண் said...

***Blogger கேரளாக்காரன் said...

இன்னிக்கு நான் தான் கெடச்சேனா வேற வேல இருக்கு நீ வேற வீடு பாரு :)***

இல்லையே, நீ சரியான எடத்துக்குத்தான் வந்திருக்க!

உனக்கு சனியன் பிடிச்சி இருக்குனு சனீஸ்வர பகவான் வந்து சொல்லிட்டுப் போனான்!

செருப்பால அடிச்சா சரியாயிடும்னு!


It is just a procedure to treat you! You will be fine now. GTFOH!

வேகநரி said...

பர்தாவால் துன்புறுத்தபட்டு கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவான பதிவு. நல்லது.

குறும்பன் said...

LOL

தணல் said...

Great act of bravery! They must be one of those untamed village women who have not yet submitted themselves to the Islamic paarppaneeyam!

Robin said...

//இவ்ளோ சீக்கிரமாக ஒரு மைனஸ் ஓட்டா// மைனஸ் ஒட்டு போட்டவர் "சிந்திக்க உண்மைகள்" என்ற பெயரில் ஆபாச லிங்குகள் போட்டுக்கொண்டு திரியும் ஒரு விஷ ஜந்து.

சதுக்க பூதம் said...

ஷியா மார்க்கத்தை கடை பிடிக்கும் ஈரான் இசுலாமிய நாடே இல்லை. அதனால் தான் சவுதி அரேபியா இரானை பூண்டோடு அழிக்க அமெரிக்காவை நெருக்கடி கொடுக்கிறது. இதோ அதாரம்
http://www.reuters.com/article/2010/11/29/us-wikileaks-usa-idUSTRE6AP06Z20101129

//King Abdullah is reported to have "frequently exhorted the U.S. to attack Iran to put an end to its nuclear weapons program."

"Cut off the head of the snake," the Saudi ambassador to Washington, Adel al-Jubeir, quotes the king as saying during a meeting with General David Petraeus in April 2008.
//
அப்படி கூட சொல்லலாம்ல?

பர்வீன்பானு said...

அண்ணன்மார்களே!

ஹிஜாபுக்கு புதிது புதிது பதிவா எழுதி எழுதி தள்ளுகிறீர்களே, உங்களுக்கு எங்கள் மீதுதான் எவ்வளவு கரிசனம்:).) ஆனால் என்றைக்காவது, இந்தியாவில் ஒரு நாளைக்கு 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்களே அதைப்பற்றி கவலைப்பட்டு எழுதியிருக்கிறீர்களா:)), அல்லது என்றைக்காவது பெண்களின் அறைகுறை ஆடைகளினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா:)), அல்லது கண்களாலே வல்லுறவு கொள்ளும் அந்த காமுக ஆண்கள் நாய்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா:)), ஏன் அதைப் பற்றியெல்லாம் எழுதப்படுவதில்லை:))? ஹிஜாப் அணியும் பெண்களை விட தலித் பெண்கள் வாழத் தகுதியற்றவர்களா என்ன? அல்லது தலித் பெண்கள் மலிவானவர்களா? அல்லது தனது மதத்தையே கேள்விக்குள்ளாக்க நேரிடும் என்பதாலா? இதைப் பற்றியெல்லாம் எழுதுங்கள் பெண்கள் மீதான உங்களின் அக்கரையை நாங்களும் புரிந்துகொள்கிறோம்.

ஒருவேளை ஹிஜாபின் செய்தியை விடவும் தலித் பெண்களைப் பற்றிய செய்திகள் தாங்களுக்கெல்லாம் கிடைப்பதில்லையோ:))

அஞ்சா சிங்கம் said...

ஆஹா என்ன வீரம் .................நான் பதிவில் உள்ள பெண்ணை சொன்னேன் ......................................

அப்புறம் பதிவை விட பின்னூட்டங்கள் செம காமடி ........................

பாகிஸ்தான்காரன் said...

பர்வீன் பானு அக்கா. சரியாக சொன்னீர்கள். அப்படியே போய் சுகவனம் ஜயாவிடமும் வாஞ்சூர் ஜயாவிடமும் மற்றய மததினை கேவலப்படுத்தி எழுதுவதை நிறுத்திவிட்டு மத்திய கிழக்கில் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை பற்றி மட்டும் எழுதச்சொல்லுங்கள். யாரோ ஒரு பைத்தியக்கரன் சில ஆயிரம் டாலருக்கு எடுத்த படத்தால் உயிரிழந்த 30 பேரின் ஆன்மாக்கள் சாந்தியடைய தூ ஆ பண்ணச்சொல்லுங்கள்.

Robin said...

//பர்வீன் பானு அக்கா//

இது உண்மையிலேயே பெண்ணா அல்லது பர்தா அணிந்து வந்த ஆணா என்று தெரியவில்லை.

ஆமா, இந்தியாவில் தலித் பெண்கள் மட்டுமா கற்பழிக்கப்படுகிறார்கள்? கற்பழிக்கப்படும் தலித் அல்லாத பெண்கள் எல்லாம் பரிதாபத்திற்குரியவர்கள் இல்லையா?

விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் இஸ்லாமியப் பெண்களை பற்றியும் அரபு ஷேக்குகள் இந்தியா வந்து திருமணம் என்ற பெயரில் சிறுமிகளை கற்பழித்துவிட்டு தலாக் சொல்லி அனுப்புவதைப் பற்றியும் அரபு நாடுகளில் கற்பழிக்கப்படும் பணிப்பெண்களைப் பற்றியும் இவர்கள் என்றாவது எழுதியிருக்கிறார்களா?

ஹேமா said...

நடா...நீங்களும் மணியும் என்னமோ நடத்துறீங்கள்.நிமிர்ந்தால் சரி.எல்லாருக்கும் சந்தோஷம்தான் !

நன்னயம் said...

என்ன அரபு ஷேக், நான் முன்பு பணி புரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு முதியவர் (கேரளாவை பிறப்பிடமாகவும் மலேசியா வை வசிப்பிடமாகும் கொண்டவர்௦) அவருக்கு 40 வயதில் மகன் இருக்கிறார். (இன்னும் பல பிள்ளைகள் உள்ளனர்) சில வருடங்களுக்கு முன் கேரளா சென்று ஒரு 16 வயதான பெண்ணை திருமணம் செய்து மலேசியா கொண்டு வந்தார். சில மாதங்கள் தனியாக குடித்தனம் நடத்தினார். பின்பு எதோ கொஞ்சம் பணம் கொடுத்து தலாக் செய்து திரும்பவும் கேரளா அனுப்பி விட்டார். (இவர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்த போது அவரின் முதல் இரண்டு மனைவி மாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் இவர் அலுத்தவுடன் எப்படியும் அந்த பெண்ணை திரும்பவும் அனுப்பி விடுவார் என்று)

நன்னயம் said...

மதவெறியர் வாஞ்சூர் இதுதான் இந்தியா என்று இந்தியாவை பற்றி( இந்தியா ஏதோ மனித இனம் வசிக்க முடியாத இடம் என்பது போல் வர்ணித்து புகை படங்களையும் போட்டு) கீழ்த்தரமாக எழுதுவார். அதை பற்றி கதைக்க வக்கில்லாத பர்வீன் பானு அக்கா (பெண் பெயர் தாங்கிய அண்ணா) இங்கு நடராஜன் ஐயா ஒரு பதிவை போட்டவுடன் பாய்ந்து கொண்டு வந்து விட்டார். முதலில் உங்கள் ஆட்களை திருத்த செய்யுங்கள்.

நன்னயம் said...

சிரியாவில் நடக்கும் கூத்தை பாருங்க
http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/syria/9296135/Syria-using-rape-as-weapon-against-opposition-women-and-men.html

naren said...

ராஜ நடராஜன்,

இந்த பதிவு ஒரு செய்தியின் நகைச்சுவை தன்மையை உணர்த்துவதற்காகவே எழுதப்பட்டது என்று எடுத்துக்கொள்கிறேன்.

சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டியது.

நன்றி

ராஜ நடராஜன் said...

வவ்வால்!பதிவுலகில் சுற்றும் இஸ்லாமிய சார்பு பதிவர்களில் ஓரளவுக்கு மிதவாதம் பேசுபவர் சு.பி அவர்களே.அவரை ஏன் ஏனையவர்களுக்கும் சேர்த்து ஐகோன் அடையாளப்படுத்துறாங்கன்னே தெரியல.

அது சரிதான்.ஆளில்லாத கடைக்கு டீ ஆத்துவதற்கு மைனஸ் ஓட்டே பரவாயில்லைதான்.அதான் நன்றி போட்டிருக்கேனே!

ராஜ நடராஜன் said...

வருண்!வரும்போது நல்லாத்தானே வந்தீங்க!கேரளக்காரன் பொதுவாக சொன்ன மாதிரிதான் தெரியுது.ஆனால் நீங்க தயாராகிட்டீங்க:)

//All kinds of girls to make the world! //

என்னைக்கேட்டால் பெண்களை முன்னிலைப்படுத்தி ஆண்கள் ஓரங்கட்டிகிட்டா உலகப் பிரச்சினைகள் கொஞ்சம் குறையும் போலவே தெரியுது.

ராஜ நடராஜன் said...

கோவி.கண்ணன்!உங்களுக்கும் மார்க்கத்துக்கும் ஏகப்பொருத்தம்தான்:)

நம்ம மார்க்க பந்துக்கள்தான் பேட்டை தாதாக்கள் மாதிரி பிலிம் காட்டுறாங்க.இங்கே மதம் அமைதி மார்க்கம் என்பதை அடையாளப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

ஒன்றைக்கவனித்தால் இப்பொழுது நிகழும் அமெரிக்க பிலிம் சார்ந்த போராட்டங்கள் கூட வாழ்க்கைப்பிரச்சினைகளுக்காக போராடும் இந்தியா,பாகிஸ்தான்,எகிப்து,லிபியா,ஆப்கானிஸ்தான் என்றே விரிவடைகிறது.மார்க்கத்தை சீர்குலைப்பவையும் இவைகளே.

ராஜ நடராஜன் said...

இக்பால் செல்வன்!சி.என்.என் பெயர்களை குறிப்பிடவில்லை.உங்கள் எதிர்கால சந்ததிக்கு பெயர் சூட்டும் உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

நம்ம ஊரிலும் கிராமத்துப் பெண்கள் இந்த இரு பெண்கள் மாதிரியும் இருக்கிறார்கள்.எனவே பெயர் தேடி நாடுகள் கடந்து ஓடவேண்டியதில்லை.

ராஜ நடராஜன் said...

மணி! உங்க பாணியில் ஹிஜாப் எதிர்ப்பதிவு மாதிரி தோணுதா:)

எதுவும் இயல்பாகவே வரவேண்டும்.உடை,சிகையலங்காரம்ன்னு எதை எடுத்துகிட்டாலும் அந்த அந்த சீசனுக்கு அதுவாகவே வந்து விடும்.யாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.முன்பு பெண்கள் பாவாடை,தாவணி,சேலை என இருந்ததையும் இப்பொழுது குழந்தைகளுக்கு அலங்காரமாக பலவிதங்களில் உடை உடுத்துவதும்,பெண்கள் ஜீன்ஸ்,சல்வார் கமீஸ்,சேலை என தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதும் இயல்பாகவே வந்த ஒன்று.யாரும் யார் மீதான திணிப்பு அல்ல.ஹிஜாப்பின் மாற்று முகமாக துப்பட்டா கூட ஒரு பர்தா தான்.

பெண்கள் தங்களுக்கு எந்த விதமான உடைகள் தேவையென்பதை பெண்களே தீர்மானிக்கட்டும்.

ராஜ நடராஜன் said...

கேரளாக்காரன்!நீங்க அதிரி புதிரி கேரளக்காரனா அல்லது வெறும் கேரளக்காரனா:)

(வருண் புரிந்து கொண்டது போல் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.தொடர் மேய்ச்சலில் அதிரி புதிரி கேரளாக்காரன் என ஒருவரை பலரின் பின்னூட்டங்களில் கண்டதாக நினைவு)

உங்க பின்னூட்டம் கொஞ்சம் பொடி வச்சுப் பேசுற மாதிரிதான் இருக்குது.சி.என்.என் சொன்னதை நான் சொன்னதால் நான் கூட அமெரிக்க கைக்கூலி என்ற பொருள்படவும் எடுத்துக்கொள்ளலாம்:)

இந்தப் பதிவு நகைச்சுவைப்பதிவு என்பதால் வருண் போல் சீரியஸாக வேண்டிய அவசியமேயில்லை:)

ராஜ நடராஜன் said...

வருண்!என்னோட கடையில்தான் டீ குடிச்சிட்டு காசு தரமாட்டேன்னு சவுண்டு விடுறீங்கன்னு பார்த்தா போற கடைக்கெல்லாம் கடன் சொல்லிட்டுத்தான் வருவீங்க போல இருக்குதே:)

வுடு ஜூட்!

ராஜ நடராஜன் said...

வேகநரி!பர்தாவால் யாரும் துன்புறுத்தப்படுவதில்லை.இதனை வளைகுடா உஷ்ணநிலைக்கு சிறந்த உடையாக கூட கருதலாம்.ஆனால் ஆண்கள் சூரிய கதிர்களை உள்வாங்கிக்கொள்ளாமல் வெள்ளை உடை உடுத்துவதும்,பெண்களுக்கு சூரிய கதிர்களை உள்வாங்கி தக்க வைத்துக்கொள்ளும் கறுப்பு உடையை ஏன் அணிவிக்கிறார்கள் என தெரியவில்லை.

பர்தாவாக இருந்தாலும் பெண்கள் சுயமாக தாமாகவே தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது.

பல நாடுகளும் இப்பொழுது மெதுவாக காஸ்மோபொலிட்டன் ஆகி வருகின்றன.இனியும் மாறும்.

ராஜ நடராஜன் said...

குறும்பன் என்பதன் அடையாளமா எல்.ஓ.எல்:)

ராஜ நடராஜன் said...

தணல்! If the incident is true what cnn and mehar news agency have reported,certainly it is a bravery act.

ராஜ நடராஜன் said...

ராபின்!நான் நம்பும் ஒரே சி.ஐ.ஏ 007 நீங்கதான்:)

நமக்கு அவ்வப்போது இதுமாதிரியான ரகசிய தக்வல்களை பகிரவும்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சதுக்க பூதம்!தங்கள் வருகைக்கு நன்றி.

ஈரானின் ஷா காலத்து ஆட்சி ஈரானை மட்டுமல்ல,மொத்த வளைகுடா நாடுகளின் எதிர்காலத்தை தீர்மானித்ததில் முக்கியமான ஒரு கால கட்டம்.அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஈராக்கையும்,ஏனைய GCC என அழைக்கப்படும் அரேபிய நாடுகளை சார்ந்து நிற்கவேண்டிய சூழலுக்கு வித்திட்ட கால கட்டம்.ஈரானின் உடை,மொழி,உணவு என மொத்த் கலாச்சர்ரமே அரேபியர்களிடமிருந்து வேறுபடுகிறது.

நீங்கள் தந்த சுட்டிகளுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோதரி பர்வீன் பானு என்றே துவங்கலாமென்று நினைத்தேன்.பின்னூட்ட நண்பர்கள் நீங்கள் ஆணாக இருக்க கூடுமென்றும் நினைப்பதால் நமக்கென்றே கிடைத்த அருட்கொடை சகோ.பர்வீன் பானு என்றே துவங்குகிறேன்.

எனக்கு எந்த மதங்களின் மீதும் வெறுப்பு கிடையாது.மாறாக மதத்தின் பெயரால் மனிதர்கள் வித்தைகாட்டிகளாய் இருப்பதால் சில சமய்ம் சக பதிவனாகவும்,பின்னூட்டக்காரனாகவும் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.அதன் மீதான கரிசனம் மட்டுமே.பெண்கள் என்ற மொத்த அடையாளத்தில் அனைவரும் பர்தாவை ஏற்றுக்கொள்வதில் ஆண்களுக்கு பிரச்சினையே இல்லை.ஆனால் ஒரு குறிப்பிட்ட சிலரை மதம் என்ற பெயரால் தனிமைப்படுத்துவது மிகவும் தவறு.வளைகுடா சூழலுக்கு பர்தா ஒருவேளை தேவையான ஒன்றாக இருக்கலாம்.ஆனால் அதனை மொத்த உலகில் வாழும் இஸ்லாமிய பெண்களுக்கும் அடையாளப்படுத்துவது தவறு.அதிலும் பதிவில் சொன்ன பெண்கள் மீது வற்புறுத்துவது தவறு என்பதே இந்த பதிவின் நோக்கம்.

பாலியல் வல்லுறவு என்பதே தவறு.இதனை ஏன தலித் பெண்கள் என்று த்னிமைப்படுத்துகிறீர்கள்?இந்தியா ஓரளவுக்கு வெளிப்படைத்தன்மை கொண்டதால் தவறுகளை 3 சதவீதமாவது அடையாளப்படுத்த முடிகிறது.தவறுகளே வெளியில் வராத வண்ணம் இருட்டடிப்பும் அல்லது தஞ்சம் அடையும் தகவல்கள் உங்களுக்கு தெரிவதில்லையென்றே நினைக்கின்றேன்.

பாலியல் வல்லுறவு குறித்தெல்லாம் பெண்கள் என்ற நிலையிலேயே தவறுகளை காண்கிறேன்.இதனை சிறு குறியீடுகளாக நீங்கள் காண்கிறீர்கள் என்ற போதிலும் உங்கள் அக்கறைக்கு நன்றி.

நீங்கள் எனது பிந்தைய பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் இன்னும் உள்வாங்கிக்கொள்ளவிலலையென்றே நினைக்கின்றேன்.நேரம் கிடைத்தால் மேலோட்டமாகவாது படிக்கவும்.நன்றி.

ராஜ நடராஜன் said...

அஞ்சா ஸிங்கம்!சே...பழக்க தோசம்ங்கிறது இதுதான்:)

அஞ்சா சிங்கம்! உங்க பெயருக்கு போட்டியா பெண்கள் வந்துட்டாங்கன்னு ஆச்சரியமாக் இருக்குதோ?

ராஜ நடராஜன் said...

யானி!பேருக்காவது ஒன்று இரண்டு பதிவு போடுங்களேன்!நீங்க,பர்வீன் பானு எல்லாம் பின்னூட்டத்திற்கெனவே அவசர புரபைல் செய்துக்கிறீங்களோன்னு நண்பர்கள் சந்தேகபப்டுறாங்க இல்ல:)

பதிவுலகில் மதம் சார்ந்து நிறைய பேர் ஓஹோ சொல்கிறார்கள்.ஆனால் அதே மதம் சார்ந்து யாரும் தவறுகளை விமர்சிப்பதில்லை.மாறாக சமீபத்தில் ஒரு சகோதரி இஸ்லாமியர்களின் அசட்டுத்தனம் என்ற் பெயரில் வந்த திரைப்படத்திற்கு எதிராக கிளம்பும் போராட்டங்களின் வன்முறைகளுக்கு எதிராக பதிவு போட்டிருந்தார்.இப்படி தவறுகள் எங்கே நிகழ்ந்தாலும் சுட்டிக்காட்டும் மன வலிமை வேண்டும்.மாறாக உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி ரசமாங்கிற வடிவேலு பாணி மாதிரி இருப்பதால்தான் விமர்சனங்கள் உருவாகின்றன.

இஸ்லாமிய அசட்டுத்தன்ம் என்ற திரைப்படத்தின் பெயரை விட அந்தப் படத்தை உருவாக்கியவரகள் மகா அசடுகள் என்றே துவக்க்தில் தோன்றியது.ஆனால் அவன் காட்சியில் சொல்வதை உறுதிப்படுத்துவது மாதிரியல்லவா தொடர் போராட்ட வன்முறைகள் உருவாகின்றன.பாகிஸ்தான்காரன் சும்மாவே கலவரப்பிரியன்.இதில் இதுபோன்ற படம் கிடைத்தால் சும்மா விடுவானா?ஊருக்கு இளிச்சவாயனா இருக்கும் தியேட்டர்களாப் பார்த்து கொளுத்தி விட்டார்கள்.

ராஜ நடராஜன் said...

சகோ.பர்வீன் பானு! ராபின் என்னவோ கேட்கிறார்.பதில் சொல்லுங்கள்.

ராஜ நடராஜன் said...

ஹேமா!மணியெல்லாம் ஹெவி வெயிட் சேம்பியன் ஹிட் லிஸ்ட்டில் வருபவர்.நான் சும்மா தொட்டுக்க ஊறுகாய் மாதிரி.

ஐ யாம் ரொம்ப பாவமில்ல:)

ராஜ நடராஜன் said...

அதென்னங்க எதிக்கலிஸ்ட் ஈ? நான் ஈ மாதிரியான பின்னூட்ட ஈயா:)

மணிக்கெல்லாம் பின்னூட்டமிடும்போதே நினைச்சேன்.கொஞ்சம் எதிக்கலாகவே பேசுறாரென்று.

நீங்கள் சொல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முறை ஹைதராபாத்தில் 80,90 களில் துவங்கிய கலாச்சாரம்.இந்த மாதிரியான கல்யாணத்தின் விளைவுகளை ஹைதராபாத்திகள் இப்பொழுது புரிந்து கொண்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

இஸ்லாமிய சிந்தனைகளுக்கு கிடைப்பவர்கள் வாஞ்சூர் போன்றவர்களே!ஒரு இஸ்லாமிய பாரதி பதிவுலகில் என்று வருவார் என்ற ஏக்கத்தோடு முடிக்கின்றேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

நரேன்!பின்னூட்டத்துக்காக வேண்டியே பின்னூட்டம்ங்கிற மாதிரி முந்தைய பின்னூட்டங்களுக்கு பின்னூட்டமிட முடியவில்லை.நகைச்சுவைக்கே நேரம் ரொம்ப கடன் வாங்குது:)

வவ்வால் said...

கேரள சேட்டா,

இங்க யாரு முட்டாள்னு கேட்டால் கூட ஒருத்தர் நான் தான்னு கைய தூக்குறாரே :-))

---

அஞ்சா ஸிங்கமே,

//அப்புறம் பதிவை விட பின்னூட்டங்கள் செம காமடி ........................//

உமக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் :-))

இங்கிலீப்பீசு காமெடி என்றால் எனக்கும் பிடிக்கும் :-=))

வருண் said...

natrajan:

If he calls you or CNN as "kaik koolikaL", Is he supporting the "clerk" and his "expectations"?? LOL

This post is not funny as you describe, it does have a seerious message.

I dont know why you want to call this as 'nagaichuvai"?

ராஜ நடராஜன் said...

அஞ்சா சிங்கம்,வவ்வால் & வருண்!

மூன்று பேரின் பின்னூட்டமும் சிரிப்பு பற்றி பேசுவதால் ஒரே பின்னூட்டம் போட்டுடறேன்.

வருண்!நீங்க மெசேஜ்ன்னு பார்த்தா இந்த பதிவில் நிறைய மெசேஜ் இருக்கிறது.ஆனால் நான் நகைச்சுவன்னு போட்டதுக்கு காரணம் ஈரானிய போதகர்கள் நீண்ட அங்கியை உடுத்துகிறார்கள்.பதிவின் இரு பெண்கள் அருகில் நெருங்கியதும் அவரது நீள அங்கி இருபெண்களின் ஒருவர் காலில் பட்டும் கூட கீழே விழுந்திருக்க கூடுமென்று நினைத்தேன்.மனுசன் கீழே விழுந்த சாக்கில் இதுதான் தருணமென்று பெண்கள் மொத்தியெடுத்து விட்டார்கள் என நினைக்கின்றேன்:)

எவ்வளவு நாளைக்குத்தான் நானும் சீரியசான பதிவே போட்டுகிட்டிருப்பது:)

பர்வீன்பானு said...

யானி, ராபின்,

நீங்கள் குறிப்பிடும் நபர்களெல்லாம் தீவிரபயங்கரவாதிகள், ஆணாதிக்க அடக்குமுறையாளர்கள் அவர்களிடம் கேட்கமுடியுமா? ஆனால் நீங்கள்தான் பெண்ணுரிமைப் போராளிகளாச்சே, நடுநிலையாளர்களாச்சே, சாதுக்களாச்சே சே..நீங்களும் ஏன்தான் அதைப்பற்றியெல்லாம் கதைக்காமல் இருக்கிறீர்களோ?

குட்டிபிசாசு said...

வவ்வால்,

//இங்கிலீப்பீசு காமெடி என்றால் எனக்கும் பிடிக்கும் :-=))//

இங்கிலிபீசு காமெடி என்றால் எனக்குப் பிடிக்காது. இந்திய காமெடி தான் பிடிக்கும்.

//ஆனால் ஒரு குறிப்பிட்ட சிலரை மதம் என்ற பெயரால் தனிமைப்படுத்துவது மிகவும் தவறு.வளைகுடா சூழலுக்கு பர்தா ஒருவேளை தேவையான ஒன்றாக இருக்கலாம்.ஆனால் அதனை மொத்த உலகில் வாழும் இஸ்லாமிய பெண்களுக்கும் அடையாளப்படுத்துவது தவறு.அதிலும் பதிவில் சொன்ன பெண்கள் மீது வற்புறுத்துவது தவறு என்பதே இந்த பதிவின் நோக்கம்.//

பர்தா பெண்ணுக்கு மட்டும் அவசியம் என்றால் எல்லாம் வல்ல இறைவன் பெண்களை பர்தா உடனே படைத்து இருப்பான். சிந்திக்கமாட்டீர்களா? சிந்திக்கமாட்டீர்களா?

ராஜ நடராஜன் said...

சகோ.பர்வீன் பானு!சில விசயங்களை பொதுவில் அலசுவதும் இன்னும் சிலவற்றை அந்தந்த இயக்கங்கள் சார்ந்தே போராட வேண்டியுள்ளது.நாம் பதிவில் கருத்துக்கள் பகிர்வதை விட செயல்வீரர்களாக திராவிட இயக்கங்கள் சார்ந்து பலரும் சாத்வீகமாக் போராடுகிறார்கள்.

குறிப்பிட்டு நீங்கள் பிரச்சினகளை முன் வைத்தால் அது பற்றியும் பொதுவில் விவாதிக்க நாம் கடமைப்பட்டே உள்ளோம்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ.பர்வீன் பானு!சில விசயங்களை பொதுவில் அலசுவதும் இன்னும் சிலவற்றை அந்தந்த இயக்கங்கள் சார்ந்தே போராட வேண்டியுள்ளது.நாம் பதிவில் கருத்துக்கள் பகிர்வதை விட செயல்வீரர்களாக திராவிட இயக்கங்கள் சார்ந்து பலரும் சாத்வீகமாக் போராடுகிறார்கள்.

குறிப்பிட்டு நீங்கள் பிரச்சினகளை முன் வைத்தால் அது பற்றியும் பொதுவில் விவாதிக்க நாம் கடமைப்பட்டே உள்ளோம்.நன்றி.

Robin said...

//நீங்கள் குறிப்பிடும் நபர்களெல்லாம் தீவிரபயங்கரவாதிகள், ஆணாதிக்க அடக்குமுறையாளர்கள் அவர்களிடம் கேட்கமுடியுமா?//
அது எப்படி கேட்க முடியும், அவர்கள்தான் நபி வழியில் நடப்பவர்களாயிற்றே. நபிகளாரைப் போலவே சிறுமிகளையும் பணிப்பெண்களையும் (அவர்களைப் பொறுத்தவரை அடிமைகள்) விட்டு வைக்கமாட்டேன் என்கிறார்கள். நாம் கேட்டால் நபி செய்ததுபோல கழுத்தை அறுத்துவிடுவார்கள்.

// ஆனால் நீங்கள்தான் பெண்ணுரிமைப் போராளிகளாச்சே, நடுநிலையாளர்களாச்சே, சாதுக்களாச்சே சே..நீங்களும் ஏன்தான் அதைப்பற்றியெல்லாம் கதைக்காமல் இருக்கிறீர்களோ? //
நாங்கள்தான் கதைத்துக் கொண்டிருக்கிறோமே. அந்த கதைத்தலை பொறுக்கமுடியாமல்தானே பர்தா மாட்டிக்கொண்டு களத்தில் குதித்துவிட்டீர்கள். ஆனால் பாவம் எல்லாவற்றையும் மறைத்த நீங்கள் தாடியை மறைக்க மறந்து விட்டீர்கள்.

வருண் said...

நடராஜன்:

நீங்க நெனச்சது இது (உங்க மனதில்)

///பதிவின் இரு பெண்கள் அருகில் நெருங்கியதும் அவரது நீள அங்கி இருபெண்களின் ஒருவர் காலில் பட்டும் கூட கீழே விழுந்திருக்க கூடுமென்று நினைத்தேன்.மனுசன் கீழே விழுந்த சாக்கில் இதுதான் தருணமென்று பெண்கள் மொத்தியெடுத்து விட்டார்கள் என நினைக்கின்றேன்:)///

நீங்க பதிவில் கொடுத்தது இது.

***முகத்தை மூடச்சொல்லி அருகில் செல்ல கோபமடைந்த பெண்கள் போதகரின் ஆடையைப் பற்றி இழுக்க நிலை தடுமாறி கீழே விழுந்த போதகருக்கு அப்புறம் என்ன ஆனோம் என்று தெரியவில்லையாம்.பாதி மயக்கத்தில் பெண்கள் உதை கொடுத்து அவரை திட்டுவது மட்டுமே கேட்டதாம்.***

உங்க மனதில் ஓடிய நகைச்சுவையை உணர பகவான் எனக்கு அருள் கொடுக்கவில்லை!

எல்லாம் பகவான் தவறு! :))

ராஜ நடராஜன் said...

குட்டி பிசாசு!உங்களை வளைகுடாவில் கறுப்பு அங்கி அணிய வைத்து சூட்டில் சுற்ற் விட்டால் நான் சொல்வதின் அர்த்தம் புரியும்:)

உடை மட்டுமல்ல,உணவுப்பழக்கங்களும் கூட அந்தந்த சூழலை ஒட்டியே அமைகிறது.உதாரணமாக நம்ம ஊர் இட்லி,தோசை,சாப்பாடு,சாம்பார்,ரசன்,மோர் என எவ்வளவு நீரை உட்கொள்கிறோம்.ஏன்?அதெல்லாம் காவிரி நீர்ப்பிரச்சினை வராத காலத்திலிருந்தே தொடரும் பழக்க வழக்கங்கள்.இதுவே அரேபிய நாடுகளில் சாத்தியமா? இப்பவும் கூட அரேபிய உணவுகளான குப்புஸ் எனும் ரொட்டியை சில காய்கறி,பச்சைக்கீரை,தக்காளி,காரமில்லாத வெங்காயம் என முடித்துக்கொண்டு கையை தட்டி விட்டுப் போய் விடலாம்.உணவில் நீரின் அளவு குறைவு.

அதேபோல் உடையும் சூரிய ஒளியை தாங்க என்ற அடிப்படைக்காரணத்தோடு பெண்களை யாரும் பார்க்ககூடாது என்ற கோணத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

அலெக்சாண்டர் படையெடுப்பில் பாதிப்படைந்தவர்கள் அதிகம் மத்திய கிழக்கு தேசத்தை சார்ந்தவர்களே.இராணுவ அசிங்கமான முகத்தை இப்பொழுது இலங்கை ராணுவம் நினைவுபடுத்தினாலும் கூட அப்போதைய நிலையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.

இப்பொழுது சிரியா,லெபனான்,துருக்கி பெண்கள் உடை விசயத்தில் மிகவும் மாற்ற்மடைந்துள்ளார்கள் எனப்து உங்களுக்கான கூடுதல் தகவல்.

ராஜ நடராஜன் said...

ராபின்!இப்பொழுதுதான் குட்டிப்பிசாசுக்கு ஓட்டிட்டு வந்தேன்:)

முன்பு சகோ.சுவனப்பிரியன் நீரில்லாமல் உயிர் இல்லை என குரான் எடுத்துக்காட்டு சொல்லியிருந்தார்.அதற்கு நான் அவரிடம் இதுக்கு ஏன் சவுதிக்குப் போய் தேடுறீங்க.நீரின்றி அமையா உலகுன்னு நம்ம வள்ளுவ முப்பாட்டனே சொல்லியிருக்கிறாரே என்றேன்.இங்கே தாடிக்கும் கூட நீர்ப்பிரச்சினைதான்.சூடான பிரதேசத்தில் சூரிய வெப்பம் உடலுக்குள் செல்லாமல் அதுபாட்டுக்கு வளருது,அதுபாட்டுக்கு கிடக்கட்டும்ன்னு கூட தாடியை விட்டு வைத்திருக்கலாம்.கண்ணதாசன் இந்துமதத்திற்கு அர்த்தம் சொன்ன மாதிரி நான் இஸ்லாமிய மத் அர்த்தம் சொல்லனும் போல் இருக்குதே!

சூடு மட்டுமில்லை.சில சிந்தனைவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரமிருக்காது.தலை பல விசயங்களைப் பற்றி யோசிப்பதால் தாடியை தடவி விட்டுக்கொள்வதும் கூட வசதியான ஒன்று:)

உதாரணமாக சாக்ரடிஸ்,பெரியார் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

வருண் said...

***ராஜ நடராஜன் said...

குட்டி பிசாசு!உங்களை வளைகுடாவில் கறுப்பு அங்கி அணிய வைத்து சூட்டில் சுற்ற் விட்டால் நான் சொல்வதின் அர்த்தம் புரியும்:)***

அபப்டிப் பார்த்தால் நம்ம ஊரில் ஏஎன் எட்டு- பதினாறுமுல சேலையை கட்டிக்கிட்டு பொம்னாட்டி எல்லாம் அலையிறா?

எல்லாரும் சார்சும் டி-ஷர்ட்டும்தான் போட்டுட்டு அலையனும்- கொளுத்துற வெயில்ல!

நம்ம ஆத்துல சொல்லிப்பாருங்கோ! உங்களுக்கு அடி விழும்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய பருவக்குமரிக்கள் இந்தியா சொல்லும்போது என்ன சொல்றாங்கனு தெரியுமா???

பேசிப்பாருங்க! உங்க் வண்டவாளம் தெரியும். நீங்க பர்தா பின்னாலேயேஎ அலைஞ்சா உலகம் தெரியாதுங்க!

ராஜ நடராஜன் said...

வருண்!நீங்க சொல்றது உண்மைதான்.தலைக்குள்ள இருந்தது ஒன்று.வெளிப்பட்ட விதம் வேற.

நல்லாத்தான்யா சொற் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க:)

ராஜ நடராஜன் said...

வருண்!பதினாறு முழ சேலையை சுருட்டிக்கொள்வதன் அடிப்படை பஞ்சு என்று சொல்லும் பருத்தி ஆடைகள் நிறைய கிடைத்ததால்.வளைகுடா சூரிய சூட்டுக்கும்,தமிழ் நாட்டு சூரிய சூட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.அது எப்படின்னா வளைகுடா காற்றை மட்டுமே இன்னும் அதிக சூடாக்கும் உஷ்ணக் காற்று.தமிழக காற்று மரம்,செடி,கொடி,ஆறு,மழை என உள்வாங்கிக்கொண்டு மிச்சத்தை தரும் சூட்டுக்காற்றும் வியர்வையை தருவதும்.தமிழ்நாட்டு வெயிலில் போனால் சேலை வியர்வையை உறுஞ்சும்.வளைகுடா வெயில் போனால் வியர்வை கூட காற்றாக மாறி நாக்கை உலரவைத்து விடும்.

என்னமோ அமெரிக்கப் பொண்ணுகளைப் பற்றி சொல்றீங்க.புரியல.மறுபடியும் படிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

சதுக்க பூதம்!நீங்கள் கொடுத்த சுட்டியை வாசித்தேன்.அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை இரட்டை முகத்தைக் கொண்டது எனப்து அனைவரும் அறிந்ததே.விக்கிலீக்ஸ் செய்த ஒரே செயல் அமெரிக்காவின் இரட்டை முகத்தை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்ததே.முன்பு ஈரானுக்கு எதிராக ஈராக்கை கொம்பு சீவிவிட்ட நிலை இப்பொழுது இல்லையென்பதால் ச்வுதி அரசு ஈரான் பற்றி சொல்லியதில் ஆச்சரியமொன்றுமில்லை.

கேரளாக்காரன் said...

கேரளாக்காரன்!நீங்க அதிரி புதிரி கேரளக்காரனா அல்லது வெறும் கேரளக்காரனா:)
/////////////////////

அந்த அதிரிபுதிரி நான் தான் :)))))



//////////////////////////
உங்க பின்னூட்டம் கொஞ்சம் பொடி வச்சுப் பேசுற மாதிரிதான் இருக்குது.சி.என்.என் சொன்னதை நான் சொன்னதால் நான் கூட அமெரிக்க கைக்கூலி என்ற பொருள்படவும் எடுத்துக்கொள்ளலாம்:)
////////////////////////////

இந்த இடத்தில் ஒரு தவறு நடந்துவிட்டது நான் டைப்பிய பின்னூட்டமே வேறு ஆனால் காப்பி பண்ணும்போது முகநூலில் டைப்பியதை காப்பி செய்துவிட்டேன் :)

இடையில்பக்கத்து வீட்டு அக்கா மோதகம் சாப்பிட கூப்பிட்டதால வந்ததுக்கு ஏதாவது பின்னூட்டம் போடனுமேன்னு போட்டுட்டு போய்ட்டேன்.. அப்புறமா நண்பர் ஒருவர் தான் இங்க நடந்த கூத்த எல்லாம் சொன்னார்


/////////////////////////
இந்தப் பதிவு நகைச்சுவைப்பதிவு என்பதால் வருண் போல் சீரியஸாக வேண்டிய அவசியமேயில்லை:)
//////////////////////////

தெருவுக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே சார் :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!பதினாறு முழ சேலையை சுருட்டிக்கொள்வதன் அடிப்படை பஞ்சு என்று சொல்லும் பருத்தி ஆடைகள் நிறைய கிடைத்ததால்.வளைகுடா சூரிய சூட்டுக்கும்,தமிழ் நாட்டு சூரிய சூட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது***

இப்போ எல்லாரும் பருத்திலதான் சல்வார் காமிஸ், சேலை எல்லாம் கட்டுறாளா?

அந்த பட்டு சேலைகளை 25000 கொடுத்து வாங்கி கட்டுறாளே அதுவும் பருத்தி தானா?

சித்திரை, வைகாசி மாத வெயில்ல பட்டுவை கட்டிக்கிட்டு..அட அட அட!

என்னவோ போங்க, சார்! நம்ம செய்றது எல்லாமே நமக்கு சரியாத்தான் தெரியும்.

Gujaal said...

இந்திய இசுலாமியப் பெண்கள் புத்திசாலிகள்.

இப்பல்லாம் என்ன பண்றாங்கன்னா வீட்டில கிளம்பும்போது பர்தாவோட வர்றாங்க. பஸ் ஸ்டாண்டோ , பணிபுரியும் இடத்துக்கோ வந்ததும் பர்தாவ கழட்டி வச்சிடறாங்க. திரும்பவும் வீட்டுக்குக் கிளம்பும்போது பர்தாவ எடுத்து மாட்டிக்கிறாங்க.

ராஜ நடராஜன் said...

எண்டே கேரள சேட்டா!சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி.

//தெருவுக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே சார் :)//

அது!I like this sportive smile:)

ராஜ நடராஜன் said...

அய்யோ வருண்!ஜீன்ஸ் போட்ட பெண்களாப் பார்த்து உங்களுக்கு கண்கள் மங்கலாயிடுச்சுன்னு நினைக்கிறேன்:)

பருத்தி ஆடைகள் கலப்படமா இருந்தாலும் 60,70 சதவீதம் பட்டும் மற்ற சிந்தடிக் பைபர் கலந்தே நெய்கிறார்கள்.

பட்டுப்புடவை கல்யாணம்,விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகளுக்கு கட்டிக்கொள்வது.நீங்க பட்டு மடிசார் மாமிகளை நினைத்துக்கொண்டு கருத்து சொல்ற்து மாதிரி தெரியுதே!

நான் சொல்ல வருவது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்த மாதிரி உடை அமையும் என்பதே.ரஷ்யா,அமெரிக்க குளிரின் பர் ஆடைகளை விட்டு விட்டேனே!

ராஜ நடராஜன் said...

வருண்!60,70 சதவீதம் பஞ்சு என்று வாசிக்கவும்.

தவறுதலாக தட்டச்சி விட்டேன்.மன்னிக்கவும்.

ராஜ நடராஜன் said...

குஜால்!நீங்க சொல்வது இலங்கையில் நிகழும் அப்பாவி பள்ளி மாணவிகளுக்கான பரிதாபங்கள் என நினைக்கின்றேன்.இது பற்றி முன்பு சக பதிவர் யாரோ சொன்னதும்,கூகிள் காணொளியில் கண்டதும் நினைவு.

ராஜ நடராஜன் said...

குஜால்!நீங்க சொல்வது இலங்கையில் நிகழும் அப்பாவி பள்ளி மாணவிகளுக்கான பரிதாபங்கள் என நினைக்கின்றேன்.இது பற்றி முன்பு சக பதிவர் யாரோ சொன்னதும்,கூகிள் காணொளியில் கண்டதும் நினைவு.

வருண் said...

***ராஜ நடராஜன் said...

எண்டே கேரள சேட்டா!சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி.

//தெருவுக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே சார் :)//

அது!I like this sportive smile:)***

நடராஜன்: கேரளாக் காரருக்கும் எனக்கும் தவறான புரிதல், சண்டை, சமாதானம் ஒரு பக்கம்..

இந்த சண்டையை வச்சு நம்ம என்ன ஆதாயம் தேடுவதுனு அலைகிற இழிபிறவிகள் இன்னொரு புறம்! வந்தா தன் கருத்தை சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே? எப்போட எவனோடயாவது சேர்ந்து விழுந்து புடுங்கலாம் இவனைனு அலையிதுக!

இதெல்லாம் பார்த்து பயந்தா நான் எல்லாம் எப்போவோ மூட்டைகட்டி இருக்கனும்! அதென்னவோ தெரியலை இதுபோல் ஆட்களை பார்க்கும்போதுதான் என்ன மாரித் தமிழனுக்கு வீரம் பொங்கிக்கிட்டு வருது (உனக்கு இவ்ளோ இருந்தா எனக்கு எம்புட்டு இருக்கும்னு). :-)))

வவ்வால் said...

ராச நடராசர்,

நீங்க ரொம்ப நல்ல நடுநிலைவாதி,அதனால சு.பி சுவாமிகள் எல்லாம் மிதவாதியாவே தெரிவார், நான் அப்படியில்லையே , என் கண்ணுக்கு என்ன தெரியுதோ என் அறிவுக்கு என்ன புரிகிறதோ அதை ஒழிக்காமல் வெளிப்படுத்துவேன். அதனால உங்களை போன்ற நடுநிலைவாதிகளுக்கு கரடு முரடா தான் தெரிவேன்.

புர்க்கா ,கிர்க்கா எல்லாம் 2000 ஆண்டுக்கு முன்னர் இல்லை என்பதும், மேலாடை இன்றி கீழே ஒரு கச்சு மட்டும் கட்டிக்கொண்டு தான் அரேபிய தீபக்கற்பத்தில் பெண்கள் சுற்றினார்கள் என்றும் சொன்னால் இப்போ நம்பவா போறிங்க :-))

அப்போது அங்கே நாகரீகமாக இருந்தது யேமன்,சிரியா, ஜோர்டான்,ஓமன், இரான், இராக் தேச மக்களும் , பாபிலோனியர்களுமே, ரோமனியர்களின் வரலாற்றினை தொகுத்த ஹிரோட்டடஸ் நூலினை படித்தால் தெரியும்.

இப்போதைய மெக்கா, மெதினா ,நாஜாப் இதெல்லாம் அப்போது பாகன் வழிபாடு செய்யும் நாடோடி காட்டுமிராண்டிகள் வசித்த இடம் அதான் மத்திய அரபியா.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், சிலைகள் என சிரியா ,ஜொர்டான், இரான், இராக்கில் இருக்கிறது அதில் எல்லாம் பார்த்தால் ரோமனிய, இந்திய கலாச்சாரம் தான் வெளிப்படும், அரபு கலாச்சாரம் என சொல்லிக்கொள்வதற்கு ஒன்றும் இருக்காது :-))

ஓவியங்களிலும்,சிலைகளிலும் வட்டுடை தான் ,அதுவும் கூட ஒரு நாகரீகத்திற்காக,உருவாக்கப்பட்டது,நிஜத்தில் திறந்தமேனி கலாச்சாரம் தான்.

மத்திய அரேபியாவில் வேட்டையாடுவது, சுமை தூக்கும் கூலி, திருடுவது, கொள்ளை அடிப்பது இதான் பிரதான தொழில் அவர்களுக்கு. அப்போதைய துருக்கி ஒட்டமான்கள் அடிக்கடி இவர்களை கட்டுப்படுத்த படை எடுத்து கொன்றது எல்லாம் வரலாறு.

இஸ்லாம் உருவானதும் பழைய வரலாற்றினை எல்லாம் அழித்துவிட்டு நாகரீகமான சமுதாயம் போல உருவாக்கிய ஒரு வாழ்வியல் வரலாற்று நூல் தான் "குரான்".

இதனாலேயே இப்பொழுதும் யேமன்,ஜோர்டான் ,சிரியா,இரான்,இராக் எல்லாம் மத்திய அரபிய நாடுகளுடன் பெயரளவுக்கு மதத்தால் இணைந்து இருக்கின்றன, ஆனால் உள்ளூடாக ஒரு பகைமை,எரிச்சல் ஓடிக்கொண்டே இருக்கிறது.யேமன் காரனை அரேபியன் என சொல்லிப்பாருங்கள் மூஞ்சிலே குத்துவான் :-))

கலிபா ஆட்சி முறை உருவானதும், அதனை பின்னாளில் கலைத்ததும் என வரலாற்றினை முழுதாக படித்தால் சு.பிரியர்களின் வண்ட வாளம் தண்டவாளத்தில் ஏறும் :-))

பெரும்பாலான வரலாறு சார்ந்த நூல்கள் என எப்போவோ படித்தது , இப்போ எல்லாம் லேசு பாசாக நினைவில் இருக்கு, மீண்டும் தூசு தட்டி இறங்கினால் ,மார்க்க பந்துக்களின் பொய் பிரச்சாரம் எல்லாம் காணாமல் போய்விடும், இப்போது பொறுமை இல்லை, மெனக்கெட்டு இவர்களோடு வாதம் செய்ய.

தணல் said...

//அந்த பட்டு சேலைகளை 25000 கொடுத்து வாங்கி கட்டுறாளே அதுவும் பருத்தி தானா?//

Varun, it is not forced on them! It is optional! They can wear either cotton or pattu! No one would go near a woman wearing a cotton sari and walking on the road, and tell her to wear pattu sari.

Whereas in this incident, see how the clerk had approached the two women so as to force the hijab on them.

//அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய பருவக்குமரிக்கள் இந்தியா சொல்லும்போது என்ன சொல்றாங்கனு தெரியுமா???//

What do they say? :-)

வேகநரி said...

//ராஜ நடராஜன் said...வேகநரி!பர்தாவால் யாரும் துன்புறுத்தப்படுவதில்லை//
2001 செப்டம்பர் 11 அமெரிக்கா தன்னை தானே தாக்கிக்கொண்டது. அது போல

பர்தாவால் யாரும் துன்புறுத்தப்படுவதில்லை.

ரமதான் காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் காபிர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

இப்படியெல்லாம் இஸ்லாமிய மதவாதிகளை குளிர்ச்சிபடுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக நீங்கள் சொல்லும் இமயத்தளவு பொய்கள் அவர்களை 1400 வருடங்களுக்கு முற்பட்ட இஸ்லாமின் இருண்ட காலத்திற்க்கு கொண்டு செல்லவே உதவி செய்யும்.

குஜால்.
//இந்திய இசுலாமியப் பெண்கள் புத்திசாலிகள்.
இப்பல்லாம் என்ன பண்றாங்கன்னா வீட்டில கிளம்பும்போது பர்தாவோட வர்றாங்க. பஸ் ஸ்டாண்டோ பணிபுரியும் இடத்துக்கோ வந்ததும் பர்தாவ கழட்டி வச்சிடறாங்க. திரும்பவும் வீட்டுக்குக் கிளம்பும்போது பர்தாவ எடுத்து மாட்டிக்கிறாங்க//
நீங்க சொன்னது உண்மையே. இந்தியா மட்டுமல்ல வேறு பலநாடுகளிலும் பர்தா கொடுமைக்குள்ளாகும் இஸ்லாமிய பெண்கள் செய்வது தான். எந்த பெண்ணாவது முகத்தை மூட விரும்புவாளா? ராஜ நடராஜன் இஸ்லாமிய மதவாதிகளை குளிர்ச்சிபடுத்துவற்காக இதை எப்படி திசை மாற்றுகிறார் பாருங்கள்:)

வருண் said...

***//அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய பருவக்குமரிக்கள் இந்தியா சொல்லும்போது என்ன சொல்றாங்கனு தெரியுமா???//

What do they say? :-) ***

தணல்

ஹை ஸ்கூல் படிக்கும் டீனேஜர்கள் பொதுவாக ரொம்ப அரைகுறையாத்தான் சம்மர்ல அவ்ட் ஃபிட் எல்லாம் போடுவாங்க. அவங்களுக்கு சம்மர்ல இந்தியா போவது சுத்தமாகப் பிடிக்காது. முக்கியக் காரணம் சீதோசன நிலைக்கு ஏற்றமாறி ஷார்ட்ஸ் டி ஷிர்ட்டுடன் அலைந்தால், ஊரே என்னை வேடிக்கை பார்க்கிறது, அசிங்கமான காமெண்ட்ஸ் அடிக்கிறது.. இவனுக என்ன காட்டுமிராண்டிகளா? என்கிற கேள்வியை பெற்றோர்களிடம் தொடுப்பார்கள்! பெற்றோர்கள் எதையாவது ஒளறி மறுபடியும் தன் பெண்களிடம் வாங்கிக்கட்டிக்குவாங்க! :)

அதவது நீங்க எந்தளவுக்கு பர்தாவை விமர்சிக்கிறீங்களோ, அதே அளவுக்கு இந்தியா, இந்தியர்கள் உடைகள் போன்றவை விமர்சிக்கப்படும்.

இதுதான் நிதர்சனம்!

தணல் said...

//முக்கியக் காரணம் சீதோசன நிலைக்கு ஏற்றமாறி ஷார்ட்ஸ் டி ஷிர்ட்டுடன் அலைந்தால், ஊரே என்னை வேடிக்கை பார்க்கிறது, அசிங்கமான காமெண்ட்ஸ் அடிக்கிறது.. இவனுக என்ன காட்டுமிராண்டிகளா? என்கிற கேள்வியை பெற்றோர்களிடம் தொடுப்பார்கள்!//

There are such mind full of vulgar kalachchara kaavalars in India as well :-) That can't be denied. Leave shorts, they can't even withstand girls wearing jeans. Metro cities are exceptions.

வவ்வால் said...

வேகநரி,

ராச நடை ஒரு நடு நிலை என்பது தெரியாதோ?

பக்னு ஆங்கிலத்தில் சொன்னால் அது வழக்கமா சொல்லுறது தானே என்பார் @*#& என தமிழில் சொன்னால் என்ன ஆபாசமா பேசுறிங்க என்பார் :-))

சூப்பரா நடு நிலை எடுப்பாரு :-))

Gujaal said...

//குஜால்!நீங்க சொல்வது இலங்கையில் நிகழும் அப்பாவி பள்ளி மாணவிகளுக்கான பரிதாபங்கள் என நினைக்கின்றேன்.இது பற்றி முன்பு சக பதிவர் யாரோ சொன்னதும்,கூகிள் காணொளியில் கண்டதும் நினைவு.//

எல்லாம் நம்மூருலதான் நடக்குது. அடிக்கடி பார்ப்பதைத்தான் எழுதினேன்.

வருண் said...

***Whereas in this incident, see how the clerk had approached the two women so as to force the hijab on them. ***

I agree, Clerks are certainly third persons. But in our culture, it is not unusual the parents themselves insist what kind of outfits their daughter should wear or choose. Of course they are FORCED by their PARENTS. Dont tell me that our girls are not forced and they can wear whatever they want. That is NOT TRUE!

வருண் said...

natarajan: I suggest you to stick with your old friends. Share your opinions based on what your friends think as right or fair or correct or "neutral"!

They know EVERYTHING!

They know what is correct and what is wrong.

You hardly know anything. Why you run into trouble by sharing what you think as correct? It is not worth it!

I am pretty serious here! Be smart!

வேகநரி said...

வவ்வால்;
//ராச நடை ஒரு நடு நிலை என்பது தெரியாதோ?//
அவர் அரபு நடையல்லவா நடக்கிறார் வவ்வால் :)

//பர்தாவால் யாரும் துன்புறுத்தப்படுவதில்லை.இதனை வளைகுடா உஷ்ணநிலைக்கு சிறந்த உடையாக கூட கருதலாம்.//
முதலில் பர்தா ஒரு உடையே கிடையாது. நண்பர் குஜால் சொன்னது போல் அன்றாடம் நடைபெறும் விடயங்களாக இஸ்லாமிய பெண்கள் பர்தாவோட வர்றாங்க. பஸ் ஸ்டாண்டோ பணிபுரியும் இடத்துக்கோ வந்ததும் பர்தாவ கழட்டி வச்சிடறாங்க. திரும்பவும் வீட்டுக்குக் கிளம்பும்போது பர்தாவ எடுத்து மாட்டிக்கிறாங்க. அப்போ அவங்க பர்தா இல்லாம சுதந்திர காற்றை சுவாசிக்கும் நேரங்களில் அவர்களை பார்ப்பவர்களுக்கு அவர்கள் காபீர் பெண்களா அல்லது இஸ்லாமிய பெண்களா என்பதே தெரியாது. அவங்க காபீர் பெண்கள் மாதிரியே சுதந்திரமான பல வித உடையிலேயே இருப்பாங்க. ஆனா வீட்டுக்குக்கு திரும்பி போகும் போது மட்டும் வங்கி கொள்ளைக்கு போகும் கொள்ளைகாரன் மாதிரி பர்தா என்ற முக மூடியை எடுத்து மாட்டிகிட்டு போக வேண்டிய நிலை ஒரு நிலை. கொடுமை.
//குஜால்!நீங்க சொல்வது இலங்கையில் நிகழும் அப்பாவி பள்ளி மாணவிகளுக்கான பரிதாபங்கள் என நினைக்கின்றேன்//
இப்படி காபீர் நாடுகளின் மட்டுமே அப்பாவி இஸ்லாமிய மாணவி பள்ளிகளிலாவது பர்தா இல்லாம சுதந்திரமாக தங்க விருப்படி இருக்க முடிகிறது. இஸ்லாமிய நாடுகளில் பள்ளிகளின் நோக்கமே பர்தா அணிவது தான். பெண்கள் பள்ளிக்கு போனாலே இஸ்லாமிய தலிபான்கள் அவர்களை வேறு தாக்குகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

யப்பே!மன்மோகன் சிங்க் என்ன சொல்றாருன்னு பதிவு போட்டுட்டு இங்கே வந்தால் இன்னுமா இங்கே படம் ஓடிகிட்டிருக்குது.நான் நீட்டி முழக்குறதுக்கு பதிவு போடுவேனா அல்லது பின்னூட்டத்துக்கு பதில் சொல்வேனா?அவ்வ்வ்வ்வ்....

ராஜ நடராஜன் said...

வருண்!உங்ககிட்டேயிருந்துதான் ஓடிட்டேன் போல.கவனிக்கலை.
பொம்பள பொரணி...இல்ல...ஆம்பிள பொரணி பேச நாந்தான் கிடைச்சேனா!

வார்த்தைகளை அடக்கி வாசிங்கன்னு உங்ககிட்ட சண்டைக்கு வந்தா உங்களுக்கு கோபம்.ஏன் தூண்டி விடுறீங்கன்னு நண்பருக்கு சொன்னா அவருக்கு கோபம்.இடையில் நான் மாட்டிகிட்டு படுற பாடு இருக்குதே.

இரண்டு பேரும் ஸ்மார்ட்டாத்தானே சுத்துறீங்க.அவங்க அவங்க கருத்துக்களோடு ஒட்டிகிட்டுப் போங்களேன் ப்ளீஸ்!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!சுவனப்பிரியனை சீண்டினாலும் கூட அவர் பொறுமையாக பதில் சொல்கிறார்.ஏனையவர்கள் ஒன்று பின்னூட்ட பெட்டியை மூடிவைத்துக்கொள்வார்கள்.அல்லது பின்னூட்டமே வெளியிட மாட்டார்கள் என்ற அளவீட்டில் அவரை மிதவாதி என்பது.மேலும் அவரது வாதங்களை உடைத்து விடுகிற வலுவற்ற பதிவுகளை அவர் கொண்டு வருவதால் அவரிடம் விவாதம் செய்ய முடியும்.நிறைய மதவாதிகள் வெறுப்புக்களை சுமந்து கொண்டு பின்னூட்டத்தில் பவனி வருகிறார்கள்.அவர்களுடன் ஒப்பிடும் போது சுவனப்பிரியன் பரவாயில்லை என்பதே எனது மிதவாதி மதிப்பீடு.

இதோ!சொல்லி முடிக்கலை!உங்கள் வாதத்திற்கு ஆதாரமாக அடுக்கிகிட்டுப் போறீங்க.நாம் விவாதக்களம் என்ற கோட்டில் மட்டுமே நின்று பேசுகிறோம்.இதில் நமது கருத்துக்கு எதிர்க்கருத்தை முறியடிக்க முடியுமா என்பதே முக்கியம் என்பதால் ஒவ்வொருவரின் நிலைப்பாட்டில் பதிவுகள் போட்டாலும் கருத்துக்களை முன் வைப்போம்.

ராஜ நடராஜன் said...

தணல் & வருண்!

நான் தணலின் பக்கம்.உடைகளை இதை உடுத்து என்பதை நாம் பெண்கள் மீது வற்புறுத்துவதில்லை.ஒருவேளை நமது ஒபினியனை சொல்வோம்.இப்படி உடுத்தினா நல்லாயில்லையென.

Saree gives a majestic look என்பதால்தான் ஐந்து நட்சத்திர ஓட்டல்,ஏர்ஹோஸ்டஸ்,நீங்க சொல்ற பட்டு சேலை கல்யாண விசேசங்கள் என நிறைய இடத்தில் அணிய முடிகிறது.இதை செக்ஸியாகவும் கட்டமுடியும்.சேலையை கட்டுகிற விதத்தைப் பொறுத்தே அனுமதிக்கிறோமா அல்லது அப்படி உடுத்தாதே என்று சொல்வதும்.

வருண்!வீட்டில் பெற்றோர் சொல்வதற்கும் வழியில் போகிறவன் இப்படி உடுத்து என்று சொல்வதற்கும் வித்தியாசமிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

வருண்!அடிக்கடி சீரியஸ் வார்த்தை உபயோகிக்கிறீங்களே!மனித இயல்புகள் கற்க சிறந்த இடம் பதிவுலகம்.

Tt is just a cup of tea for most of us.Let's move on as far as it goes:)

ராஜ நடராஜன் said...

வேக நரி!அதென்ன அரபு நடை நடக்கிறேன்னு மெதுவா!நேரா ஒட்டக நடை நடக்கிறேன்னு சொல்லிட வேண்டியதுதானே:)

பர்தா என்பதும் கூட சவுதி தவிர ஏனைய நாடுகள் பெண்கள் மீது திணிப்பதில்லையென்றே நினைக்கின்றேன்.துபாய்,குவைத் போன்ற நாடுகள் காஸ்மோபொலிட்டனாக மிகவும் முன்னேறிய நாடுகள்.சில பிராண்ட் மேற்கத்திய உடைகளையெல்லாம் சர்வ சாதாரணமாக பெண்களும்,ஆண்களும் உடுத்துகிறார்கள்.நம்ம பதிவுலக சகோக்கள் சவுதியை அடிப்படையாக கொண்டே கருத்துக்கள் வெளியிடுவதால் அவை மொத்த இஸ்லாமியர்களுக்குமாக பிரதிபலிக்கிற மாதிரி தெரிகிறது.

இந்த காபீர்,முமின் என்கிற வார்த்தைகளே இன்னும் எனக்கு குழப்பம்.

நாடுகளும்,மக்களும் நுகர்வு கலாச்சாரத்துக்குள் நுழைந்து விட்டன.பதிவுலகம் மட்டுமே கருத்துக்கு எதிர் கருத்து என தனித்தீவாக இயங்குகிற மாதிரி தெரிகிறது

ராஜ நடராஜன் said...

வவ்வால்!அடிக்கடி நடுநிலைவியாதின்னு குறிப்பிடுவது என்னைப்பத்திதானா:)இப்பத்தான் ட்யூப்லைடே வேலை செஞ்சது.

மனிதர்கள் அவரவர் வளரும்,வாழும் சூழலுக்கேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்.சிலர் மதவாதம் பேசினாலும் அவர்களும் சமுதாயம் என்ற மொத்த வடிவில் நம்மில் ஒரு பங்கானவர்களே என்பதால் சரியாக பட்டால் சபாஷ் சொல்வதும் உங்களை மாதிரி விவாதம் செய்தால் பலே சரியான போட்டி எனவே கருத்துக்களைப் பார்க்கிறேன்.பகிர்கிறேன்.

எந்த விவாதத்துக்கும் பல பரிணாமங்கள் இருக்கும் என்பதே பதிவுகளின் பின்னூட்டங்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன்.பின்னூட்ட நண்பர்களே இரு பக்கங்களை பிரதிபலிக்கும் போது நான் இரண்டு பக்க விவாதங்களையும் நோக்குவதால் உங்களுக்கு நடுநிலை வியாதி மாதிரி தோன்றுவதில் ஆச்சரியமில்லை:)

ஆடுகளுக்கும் உயிர் இருக்கின்றது.இது உங்களுக்கு போட்ட விடுகதை.

ராஜ நடராஜன் said...

வேகநரி!நீங்க எந்த நாட்டை நினைத்துக்கொண்டு அவலை இடிக்கிறீங்கன்னு தெரியல.வளைகுடா நாடுகளில் பெண்களுக்கு பள்ளி சீருடைக்கெல்லாம் பர்தா கட்டுப்பாடு இருக்க்ற மாதிரி எனக்கு தெரியல.நிறைய பேர் ஆங்கில கல்வி கற்கிறார்கள்.நீங்க ஆப்கானிஸ்தான் மாதிரி குறிப்பிட்டு சொன்னால் நல்லது.இந்தியாவில் பள்ளிக்கு சென்றவுடன் உடை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொள்வது மாதிரிதான் தெரிகிறது.நான் நம்பவில்லை.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!தமிழில் கெட்ட வார்த்தை பேசினாலும்,ஆங்கிலத்தில் பேசினாலும் பொது தளத்தில் சில சொற்பிரயோகங்கள் தேவையில்லை எனப்தே எனது நிலைப்பாடு.

நீங்க பொருளாதார கில்லின்னு தெரியும்.அடுத்த மன்மோகன் பதிவுல என்ன என்ன ஓட்டைகள் என சொல்லுங்கள்.விவாதிப்போம்.

வவ்வால் said...

ராச நடை,

//.இந்தியாவில் பள்ளிக்கு சென்றவுடன் உடை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொள்வது மாதிரிதான் தெரிகிறது.நான் நம்பவில்லை.//

இந்த இடத்தில் தான் நான் ரெண்டுப்பக்கமும் பார்க்கிறேன்னு சொல்லும் உங்க நடு நிலை குடை சாயுது :-))

உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே அது என்ன கற்பனைனு சொல்வது.

சின்ன வகுப்புகளில் எப்படியோ தெரியாது, +1 ,_2 வில் மாணவிகள் அப்படி செய்வதுண்டு,அதுவும் ஒரு சிலர் மட்டும். பள்ளிக்கு வரும் போதும், போகும் போதும் மட்டும் புர்க்கா போடுகிறார்கள்.

கல்லூரிகளில் பெரும்பாலும் அப்படித்தான்.இது அப்பெண்ணின் பெற்றோரை பொறுத்து தான், அவங்க தான் புர்க்கா போட்டு போக கட்டாயப்படுத்துகிறார்கள்.

காயிதே மில்லத், siet கல்லூரிகளில் மிக அதிக புர்க்கா கும்பலை காணலாம். ஹி...ஹி ஒரு காலத்தில் மாலை வேலையில் பேருந்தில் பயனம் செய்வதை ஒரு சுகானுபவமாக நினைத்தவன் :-))

வேகநரி said...

//நேரா ஒட்டக நடை நடக்கிறேன்னு சொல்லிட வேண்டியதுதானே//
சே சே
படத்தை பார்தாவே தெரியுது உங்க நடை ராஜ நடை. எதற்காக இப்படி அரபு நடை நடந்து சிரமபட வேண்டும் என்ற ஒரு ஆதாங்கம் தான்.

எனக்கும் ஆரம்பத்தில் காபீர்,முமின் என்கிற வார்த்தைகள் ரொம்ப குழப்பத்தை எற்படுத்திச்சு. அரபு இஸ்லாமுக்கு வராதவர்களை காபீர் என்றும் தங்களை முமின் என்றழைத்து அவர்கள் இரகசியமாக மகிழ்கிறார்கள் என்பதை பின்பு தான் தெரிந்து கொண்டேன்.

//வளைகுடா நாடுகளில் பெண்களுக்கு பள்ளி சீருடைக்கெல்லாம் பர்தா கட்டுப்பாடு இருக்க்ற மாதிரி எனக்கு தெரியல//
வளைகுடா நாடுகளில் -இஸ்லாமிய நாடுகளில் இருந்தே பர்தா உட்பட பெண்களுக்கான சகலவிதமான அடிமைதனங்களும்கட்டுப்பாடுகளும் உற்பத்தியாகி அதை ஆசிய அப்பாவி ஏமாளி இஸ்லாமியர்கள் தீவிரமாக பின்பற்றுகிறார்கள் என்பதே முன்னேற்றம் அடைந்த சுதந்திரமாக வாழும் நாட்டு மக்கள் கருத்து. இதை எனக்கு தெரிந்து முதலில் மறுத்த காபீர் நீங்கள் தான்.இதை வேறுயாரிடமோ சொன்னால் சொன்னால் ராஜ நடராஜன் அரசியல் வாதியா என்பார்கள்

//இந்தியாவில் பள்ளிக்கு சென்றவுடன் உடை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொள்வது மாதிரிதான் தெரிகிறது.நான் நம்பவில்லை.//

நாட்டுக்கு ராஜா தனது மக்கள் எப்படியருக்கிறார்கள் என்பதை பார்பதற்கு மாறு வேடமிட்டு உலா வருவானாம். ராஜ நடராஜனும் தனது விடுமுறையில் செல்லும் போது ஒரு தடவை சாதாரண மனிதர்கள் மாதிரி வேடமிட்டு பஸ் ஸ்டாண் ரெயில் நிலையங்களில் உலாவந்தால் நிறைய அரபு இஸ்லாமிய பர்தா திணிக்கபடுவதை உண்மைகளை உணரலாம். வெளிநாட்டில் இருந்து வரும் போது இஸ்லாமிய கொடுமைகள் இவற்ற அறிய விடுமுறைகள் போதுமானதாக எல்லாம் இல்லை என்ற உண்மையை ஏற்று கொள்கிறேன்.

வருண் said...

என்னமோ இஸ்லாமியப் பெண்கள் மட்டும்தான் மாற்றுடை போட்டுக்கொண்டு செல்வதுபோல் ஒரு பொய்ப் பிரச்சாரம் நடக்கிறது.

இந்துப்பெண்கள் இதேபோல் வீட்டிலிருந்து வரும்போது கன்சர்வெட்டிவ் வாக வந்து லிபெரல் ஆடையை மாற்றிக்கொண்டு போவதும் இதே விழுக்காடுகள் அல்லது இதைவிட அதிகமான விழுக்காடுகள் நடக்கிறதென்பது மறைக்கப்படுது!

Gujaal said...

//.இந்தியாவில் பள்ளிக்கு சென்றவுடன் உடை மாற்றிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொள்வது மாதிரிதான் தெரிகிறது.நான் நம்பவில்லை. //

அலுவலங்களில் இக்காட்சியை பலமுறை நான் நேரில் கண்டதுண்டு.

தணல் said...

Varun, It is bcos of these third persons (or any-others they would come across), the parents are forced to force their kids to dress so.

தணல் said...

But still most won't force their kids to wear thaavani paavadai or sari or veshti sattai saying that these are considered the traditional attire for the Tamilians. They have the mind to accept the changes according to the need/comfort. There are many school going girls riding bicycles wearing salwars, while it may be difficult to do so wearing a pardha or sari. Though initially there was resistance from the pirpokku minded people, the attire of comfort and dignity has come into dominance.