Followers

Saturday, May 15, 2010

யோக நிலைகள்

பல்லவி

சலசலக்கும் அருவி தென்றல் காற்று
சூரிய உதய பறவைகளின் பயணம்
இவையெல்லாம் பாடியவர்கள் ஏராளம்
பலர் பாடாத பாட்டொன்று நான் பாட வந்தேன்

சரணம்

தப்பில்லா நசரேயனின் கணினி தட்டு
கண்ணாடி பார்க்காத தாடி வழித்தல்
கத்திரிக்கோலின் சிகையலங்காரம்
பள்ளி மாணவன் மனப்பாடம்
மை கொட்டாத பேனா
முதன் முதலில் எழுதிய கவிதை
தூண்டிலில் சிக்கும் மீனின் அசைவு
கடகட காய்கறி வெட்டும் பெண்களின் கத்தி
முந்தைய காலத்து நெல் குத்தல்
தூக்கத்தில் சந்தைக்கு பயணிக்கும் விவசாயி
அதில் லயம் கொஞ்சமும் தவிராத மாடு

அனுபல்லவி

சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.

டிஸ்கி: வார்த்தைகளின் நடனமே கவிதையென்றால்
இதுவும் கட்டுடைப்பு கவிதையே.

10 comments:

Ahamed irshad said...

//சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.///

ரசித்த வரி.... அருமை...

vasu balaji said...

லேபில்ல கவிதைன்னு போட்டா கவிதைதான். அந்த துணிச்சல்லதான் நம்ம கடை போய்க்கிருக்கு. நீங்க வேற பீதிய கெளப்பாதீங்க.:))

ஹேமா said...

நடா....என்ன ராகம்,என்ன தாளம் ன்னு போடல நீங்க.அப்பிடியே பாடிக் காட்டியிருந்தீங்கன்னாலும் நல்லாருக்கும்.

கீரை வெட்றப்போ இவ்ளோ ஞானமா !அப்பா....டி !

கலகலப்ரியா said...

ஆக்கா... சங்கீதம் சங்கீதம்...

Unknown said...

//சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்//

ஹா... ஹா .....

ராஜ நடராஜன் said...

////சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்
ஐசக் நியூட்டனுக்கு ஆப்பிளும்
ஞானம் தந்தது மாதிரி
அம்மணிக்கு ச்மையலுக்கு உதவ
கீரை அரியலில் எனக்கு வந்த ஞானோதயம்.///

ரசித்த வரி.... அருமை...//

இர்ஷாத்!நன்றி!வாங்க ஜோதியில கலந்துக்குங்க.

நீங்க ஏன் இரண்டாம் ஆட்டம் போடுறீங்க?

ராஜ நடராஜன் said...

//லேபில்ல கவிதைன்னு போட்டா கவிதைதான். அந்த துணிச்சல்லதான் நம்ம கடை போய்க்கிருக்கு. நீங்க வேற பீதிய கெளப்பாதீங்க.:))//

இப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?சொல்லவேயில்ல:)

ராஜ நடராஜன் said...

//நடா....என்ன ராகம்,என்ன தாளம் ன்னு போடல நீங்க.அப்பிடியே பாடிக் காட்டியிருந்தீங்கன்னாலும் நல்லாருக்கும்.

கீரை வெட்றப்போ இவ்ளோ ஞானமா !அப்பா....டி !//

ராகம்,தாளம் தெரிஞ்சிருந்தா நாங்களும்
எம்.எஸ்.வி,இளையராஜா,ஏ.ஆர்.ரகுமானுக்கு போட்டியா வந்திருக்க மாட்டோம்?

கீரை வெட்றத விட வெங்காயம் வெட்டுறதில இருக்குற ரிதம் இருக்குதே! ஆஹா!

ராஜ நடராஜன் said...

//ஆக்கா... சங்கீதம் சங்கீதம்...//

லகலக ப்ரியா!இது கவிதை!

கான மயிலாட கண்டிருந்த வான் கோழி கேள்விப்பட்டிருப்பீங்களே!

ராஜ நடராஜன் said...

////சிரிக்காத புத்தனுக்கு போதி மரமும்//

ஹா... ஹா .....//

சிரிக்காதீங்க!நவீன புத்தர்கள் சிரித்தால் அர்த்தம் வேற.

போன இடுகையின் பின்னூட்ட மறுமொழியில் உங்கள் பெயர் குறிப்பிட்டிருந்தேன் படித்தீர்களா?