Followers

Friday, April 1, 2011

அழகிரியின் அலறல்

நேற்று மதுரை கலெக்டர் சகாயம் பற்றிய அழகிரியின்  தேர்தல் கருத்துக்கும், எனக்கும் எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தேர்தல் ஆணையமே பொறுப்பு என்ற அறிக்கைக்கும் எதிராக யாராவது கருத்து சொல்வார்களா என்று பார்த்தேன்.பதிவுலகில் யாரும் சொல்வதாக காணோம்.விகடன் செய்தியின் இணையதள பின்னூட்டங்களாக மட்டும் சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் பதிவர் ஜோதியின் சென்ற வார இடுகையான அரசியல் அதிகாரம்-பயத்தை உருவாக்கு நினைவில் வருவதை தவிர்க்க இயலவில்லை.
தமிழகத்தின் கருப்பு பக்கங்களாய் அவ்வப்போது சிலர் உருவெடுப்பது தமிழகத்தின் சாபமா என்று தெரியவில்லை.அ.தி.மு.கவின் ஆட்சிக்காலத்தில் அடியாளாக சட்டசபை வரை தனது தாதா பிம்பத்துடன் எம்.எல்.ஏ வாக இருந்தவர் தாமரைக்கனி.அந்த விதத்தில் வன்முறைக் கலாச்சாரத்திலும் தமிழகத்தில் பவனி வர இயலும் என்று நிரூபித்திருப்பவர் மு.க.அழகிரி.கூடுதலாக பணம்,மக்கள் ஆதரவு,இதனை விட அப்பா தமிழகத்தின் முதல்வர் என்ற நிலையில் அழகிரி தமிழகத்தில் சட்ட விரோத செயல்களாக திருமங்கலம் பார்முலா,அடியாட்களின் தலைவன் போன்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய அவசியமென்ன?குடும்ப ஆட்சியென்ற விமர்சனத்துக்கும் அப்பால் ஸ்டாலின் கட்சியென்ற நிலையில் அரசியல் செய்யும் நாகரீகம் கூட ஏன் அழகிரிக்கு வருவதில்லை?


அழகிரியின் அறிக்கை நியாயமென்று எடுத்துக் கொண்டால் கூட இருப்பவனையெல்லாம் விட்டு விட்டு தேர்தல் ஆணையம் அழகிரி பின் சுற்றுவதன் காரணமென்ன? மடியில் கனம் இருந்தால்தானெ வழியில் பயம்?பணமும்,அதிகாரமும்,படைபலமும் இருந்தும் அழகிரி அலற வேண்டியதன் அவசியமென்ன என்பதை இனியாவது யோசிப்பாரா?முன்பே எங்கோ ஒரு பின்னூட்டத்தில் சொல்லியுள்ளேன்.அழகிரி அவரது மகன் திருமணத்தில் மைக் மோகன் கெட்டப்பில் இயல்பாய் இருந்த பிம்பமே தனி மனித வாழ்க்கைக்கும்,நீண்ட கால அரசியலுக்கும் துணை புரியும்.இல்லையென்றால் எந்த ஒரு தாதாவுக்கும் வரும் பயமே வாழ்க்கை முழுதும் சுற்றி வரும்.

அரசியல் முடிவுகள் எப்படியென்பது மே மாதம் 13ம் தேதியே தெரியும்.ஆனால் தமிழக முதல்வரும்,அழகிரியும் விடுக்கும் அறிக்கைகளாய் எமர்ஜென்சி காலம் போல் தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் என்பதும் எனக்கோ எனது குடும்பத்துக்கோ ஆபத்து என்றால் தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று அழகிரி அறிக்கை விடுவதும் தேர்தல் ஸ்டண்டா அல்லது இவர்களுக்கு முன் கூட்டியே தேர்தல் முடிவுகள் பற்றிய பயம் வந்து விட்டதா?

எமர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தார் இந்திரா காந்தி என்ற பார்வையில் உண்மையிருந்தாலும் கூட பொது மக்களின் வாழ்க்கை முறை,ரயில்கள் சரியான நேரத்தில் ஓடின,அரசு அலுவலர்கள் நேரத்துக்கு அலுவலகம் வந்தனர் போன்ற செய்திகளையும் எமர்ஜென்சி பதிவு செய்திருக்கிறது.கூடவே எமர்ஜென்சி பெயர் சொல்லி சிறைச்சாலையில் களி தின்றவர்கள் தங்கள் சுயம் மறந்து நாற்காலி சுகத்தில் கோடிஸ்வரர்களாகி விட்டார்கள் என்பதையும் எமர்ஜென்சி முதல் 2011 தேர்தல் வரை உள்ள இடைக்காலம் திராவிடக் கொள்கைகள் காற்றில் பறக்க விட்டு விட்டதையும்,காங்கிரஸின் துணை நாடி நின்றதையும் அதனையெல்லாம் விட ஈழ மக்களின் இனப்படுகொலைகளை தடுக்க இயலாத வரலாற்று பெரும்பாவத்தையும் சுமந்து கொண்டுள்ளது என்பதையும் மறந்து தமிழக சட்டசபை தேர்தலே ஈழம் குறித்த எந்த வித உணர்வுமில்லாமல் இலவசமே வாழ்க்கை அதுவே எம் வேதம் என தமிழகம் வரலாற்றின் மாற்றுப் பாதையில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதையும் இடைப்பட்ட காலம் தமிழக வரலாற்று பதிவு செய்திருக்கிறது.


96 comments:

சக்தி கல்வி மையம் said...

இவனக்காக ஒரு பதிவை யாரும் வேஸ்ட் பன்ன விரும்பவில்லை..

சக்தி கல்வி மையம் said...

புதுப்பதிவு...
http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_01.html

சக்தி கல்வி மையம் said...

தமிழ்மணத்தில் உங்க ஓட்டும் போடுங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்படியா சங்கதி..

ராஜ நடராஜன் said...

கருன்!இந்த இடுகைக்கு கருத்து சொல்ல எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர் நோக்குகிறேன்.

நீங்கள் முன் வந்து வடை பெற்றுக்கொண்டதற்கு நன்றி.

புதுப்பதிவை காண்கிறேன்.

ஜோதிஜி said...

ஒருவருக்கு இணைப்பு கொடுக்கும் போது இரண்டு பிரச்சனைகள் உண்டு. நீங்கள் சொன்ன நபர் யார் என்று மக்கள் திசை திரும்பி என்று உள்ளே நுழைந்து விடுவார்கள். என் இல்லத்தில் இப்போது பார்த்த அத்தனை பேர்களுகளும் உங்கள் பதிவின் வழியாகவே வந்துள்ளார்கள். சில சமயம் எழுத்துக்கு கிடைக்கும் அங்கீகாரமே இது தான். உணர்ந்தவர்கள் உள் வாங்கியவர்களின் வாசிப்பு தான் இன்னமும் எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது.

ஒரு எதிரியை இரண்டு விதமாக வெல்ல முடியும். நேரிடையாக மோதி வெல்லலாம். மற்றொரு வகை அவரைச்சுற்றிலும் உள்ள விசயங்களை படிப்படியாக நிர்மூலமாக்கி பயமுறுத்தி, தனிமைப்படுத்தி செயல்படமுடியாமல் தவிக்க விட்டு இறுதியாக தோல்விக்கு அருகே அழைத்துச் சென்று கதற் அடிக்க முடியும்.

காரணம் மத்திய அரசங்கம் யாரிடம் அரசியல் பெற்று இருப்பார்கள் என்ற நினைக்கீறீர்கள்? மாமன்னர் ராஜபக்ஷே. இதை விட பெரிதான தகுதி வேறென்ன வேண்டும். இன்னமும் வேடிக்கை இருக்கிறது பார்த்துக் கொண்டே இருங்க.

வீரப்பன் புகழ் விஜயகுமார் ஞாபகம் இருக்கிறதா? இவர்கள் கதறடித்தார்கள். அவர் ஆளைவிட்டால் போதும் என்று கெஞ்சி கூத்தாடி மத்திய அரசாங்கப்பணிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு ஓட்டமாய் ஓடி விட்டார். அவர் தான் இப்போது தமிழ்நாட்டில் வந்து இறங்கியுள்ள டாஸ்போர்ஸ்க்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவ்ர். அவர் கொடுக்கும் கட்டளைப்படி தான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து நீங்க சொன்ன சகாயம். தலைமை தேர்தல் ஆணையாளர் இவருக்கு கொடுத்த சான்றிதழ் கீளின் சிலேட். வேறென்ன வேண்டும்.

உமா சங்கரை மற்றொரு பகுதிக்கு போட்டிருந்தால் இன்னமும் ஆட்ட களைகட்டியிருக்கும். கடைசி மூன்று நாட்கள் பாருங்கள். நிறைய வேடிக்கை இருக்கு. ஆண்டவா களப்பணியில் இருப்பவர்கள் பலி ஆடாக மாறிவிடாமல் இருக்க அருள்புரிவாயாக.

ராஜ நடராஜன் said...

//ஒருவருக்கு இணைப்பு கொடுக்கும் போது இரண்டு பிரச்சனைகள் உண்டு. நீங்கள் சொன்ன நபர் யார் என்று மக்கள் திசை திரும்பி என்று உள்ளே நுழைந்து விடுவார்கள். என் இல்லத்தில் இப்போது பார்த்த அத்தனை பேர்களுகளும் உங்கள் பதிவின் வழியாகவே வந்துள்ளார்கள். சில சமயம் எழுத்துக்கு கிடைக்கும் அங்கீகாரமே இது தான். உணர்ந்தவர்கள் உள் வாங்கியவர்களின் வாசிப்பு தான் இன்னமும் எழுத வேண்டும் என்று தோன்றுகின்றது.//

எனது பின்னூட்டங்கள் வெறும் நன்றி என்பதை விட கருத்து பரிமாற்றங்கள் என்று எண்ணுவதால் வரிசையாக தொடர்ந்து மறுமொழி சொல்கிறேன்.

இன்னும் ஜோதிஜி யார் என்று புருவம் உயர்த்துபவர்கள் இருக்கிறார்களா?ஆச்சரியம் தான்:)

ராஜ நடராஜன் said...

//ஒரு எதிரியை இரண்டு விதமாக வெல்ல முடியும். நேரிடையாக மோதி வெல்லலாம். மற்றொரு வகை அவரைச்சுற்றிலும் உள்ள விசயங்களை படிப்படியாக நிர்மூலமாக்கி பயமுறுத்தி, தனிமைப்படுத்தி செயல்படமுடியாமல் தவிக்க விட்டு இறுதியாக தோல்விக்கு அருகே அழைத்துச் சென்று கதற் அடிக்க முடியும்.//

இதன் சூட்சுமம் எதனைத் தொடுகிறதென்று எனக்குப் புரியவில்லை.

ராஜ நடராஜன் said...

//காரணம் மத்திய அரசங்கம் யாரிடம் அரசியல் பெற்று இருப்பார்கள் என்ற நினைக்கீறீர்கள்? மாமன்னர் ராஜபக்ஷே. இதை விட பெரிதான தகுதி வேறென்ன வேண்டும். இன்னமும் வேடிக்கை இருக்கிறது பார்த்துக் கொண்டே இருங்க.//

ஓ!இதன் விடை இதற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறதா?ஒப்புக்கு சப்பாணியாகவாவது இருக்கும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திடுவீங்க போல இருக்குதே.

கூடிக் கலைன்னு ஒற்றை வரியில் சொல்லுங்க.

ஜோதிஜி said...

தொடக்கம் முதல் திமுக வுக்கு மிகப் பெரிய பலம் பேச்சு. பேச்சு. பேச்சு.

மேடையில் பேசிக் கொண்டிருப்பவர் எதைப் பற்றி பேசுகின்றார்? ஏன் பேசுகின்றார்? இதனால் என்ன நமக்கு நம் வாழ்க்கை லாபம்? என்பதைப் பற்றி யோசிக்கத் தெரியாதவர்கள் தான் இனம், மானம், வீரம், இந்தி எதிர்ப்பு, அண்ணா, இலக்கியம், புறநானூறு என்று கலந்து கட்டி அடித்து கேட்பவர்கள் அத்தனை பேர்களும்

நன்றாக பேசினார்? ஆனால் என்ன பேசினார்? என்பதை மறந்து விட்டு நகர்ந்து விடுவார்கள். இதுவே தான் டீக்கடை வரைக்கும் திமுக என்று சொல்வது பெரிய தமிழ்மகன் என்ற போதையை உருவாக்கியது. உருவாக்கிய அத்தனை பேர்களும் மேலே மேலே போய்விட கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேர்களும் குழந்தைகளுக்கு அண்ணாத்துரை கருணாநிதி என்று பெயரை மட்டும் வைத்து விட்டு செத்தும் போனார்கள்.

ராஜ நடராஜன் said...

//வீரப்பன் புகழ் விஜயகுமார் ஞாபகம் இருக்கிறதா? இவர்கள் கதறடித்தார்கள். அவர் ஆளைவிட்டால் போதும் என்று கெஞ்சி கூத்தாடி மத்திய அரசாங்கப்பணிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு ஓட்டமாய் ஓடி விட்டார். அவர் தான் இப்போது தமிழ்நாட்டில் வந்து இறங்கியுள்ள டாஸ்போர்ஸ்க்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவ்ர். அவர் கொடுக்கும் கட்டளைப்படி தான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்து நீங்க சொன்ன சகாயம். தலைமை தேர்தல் ஆணையாளர் இவருக்கு கொடுத்த சான்றிதழ் கீளின் சிலேட். வேறென்ன வேண்டும்.//

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் விஜயகுமார் மாற்று வாங்கிக்கொண்டதற்கும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா?எனக்குத் தெரியாத விசயமிது.

கலெக்டர் சகாயம் பற்றி எல்லோரும் நல்ல கருத்துக்களையே வெளியிடுகிறார்கள்.அதனால்தானோ அழகிரிக்கு இவரைப் பிடிக்கவில்லை போலும்.

ஜோதிஜி said...

ஆனால் எம்ஜீஆர் வரவுக்கு பிறகு பப்பு வேகவில்லை. அவர் சூனாமி போல் சுருட்டி எடுத்துவிட்டார். மக்களும் கொஞ்சம் கொஞ்சம் விழித்துக் கொள்ள தலைமுறைகள் சற்று படித்து உண்மைகளை உணர்ந்து கொள்ள வேறு எந்த வழியும் இவர்களுக்குத் தெரியவில்லை. இதுவே தான் திருமங்கலம் என்ற சூத்திரம் என்று பெருமையாய் சொல்ல வைத்தது.

பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கலாம் என்று கொண்டு வந்து சேர்த்தது.

ஜோதிஜி said...

மககளுக்கு வேறு வழி? எதிர்க்க முடியாது. பேச முடியாது. கிடைத்த வரை லாபம் என்று நகர்ந்து போய்விட்டார்கள். மனசாட்சி குறுக்கே நிற்க குத்தியும் தொலைத்து விட்டார்கள்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த பயமே பிரதானம். விபரம் புரிந்துவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அத்தனை பேர்களும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்.

இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒவ்வொன்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு போட்டுத் தாக்கிக் கொண்டிருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீங்க?

ஜோதிஜி said...

விடுபட்ட இடங்களை இப்போ கோர்த்துப் பாருங்க

ராஜ நடராஜன் said...

//உமா சங்கரை மற்றொரு பகுதிக்கு போட்டிருந்தால் இன்னமும் ஆட்ட களைகட்டியிருக்கும். கடைசி மூன்று நாட்கள் பாருங்கள். நிறைய வேடிக்கை இருக்கு. ஆண்டவா களப்பணியில் இருப்பவர்கள் பலி ஆடாக மாறிவிடாமல் இருக்க அருள்புரிவாயாக.//

தன் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளவும்,அனுதாப ஓட்டு வாங்கவும் அரசியல் கட்சிகள் செய்யும் மொள்ளமாறித்தனம் பலிகடா ஆக்குவது.இதில் தி.மு.க கைதேர்ந்தது என்பது கடந்த கால அரசியல் வரலாறு.

தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இதுவரை ஒன்றும் நிகழவில்லை.அடுத்த 12 நாட்களும் எந்தவிதமான எதிர் விளைவும் இல்லாமல் தேர்தல் நிகழ்ந்து முடியட்டும் என்று நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

//தொடக்கம் முதல் திமுக வுக்கு மிகப் பெரிய பலம் பேச்சு. பேச்சு. பேச்சு.

மேடையில் பேசிக் கொண்டிருப்பவர் எதைப் பற்றி பேசுகின்றார்? ஏன் பேசுகின்றார்? இதனால் என்ன நமக்கு நம் வாழ்க்கை லாபம்? என்பதைப் பற்றி யோசிக்கத் தெரியாதவர்கள் தான் இனம், மானம், வீரம், இந்தி எதிர்ப்பு, அண்ணா, இலக்கியம், புறநானூறு என்று கலந்து கட்டி அடித்து கேட்பவர்கள் அத்தனை பேர்களும்

நன்றாக பேசினார்? ஆனால் என்ன பேசினார்? என்பதை மறந்து விட்டு நகர்ந்து விடுவார்கள். இதுவே தான் டீக்கடை வரைக்கும் திமுக என்று சொல்வது பெரிய தமிழ்மகன் என்ற போதையை உருவாக்கியது. உருவாக்கிய அத்தனை பேர்களும் மேலே மேலே போய்விட கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அத்தனை பேர்களும் குழந்தைகளுக்கு அண்ணாத்துரை கருணாநிதி என்று பெயரை மட்டும் வைத்து விட்டு செத்தும் போனார்கள்.//

ஜோதிஜி!தி.மு.க வரலாற்றையும்,தொண்ட்ர்களையும் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்.

மேடைப்பேச்சோடு துவக்க காலத்தில் சமூக அக்கறையும் கூட இருந்ததென்றே நினைக்கின்றேன்.மு.கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரான பின்பும்(வீராணம்)நெடுஞ்செழியனைப் பின் தள்ளி விட்டு முதலமைச்சர் ஆனதில் துவங்குகிறது கருணாநிதியின் வளமையும்,சறுக்கலும்.அடுத்த அதிகாரம் கணக்கு கேட்பேன் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்புக் குரலில் துவங்குகிறது.
கடைசி அத்தியாயம் ஈழ துரோகத்தில் முடிகிறது.

ராஜ நடராஜன் said...

//ஆனால் எம்ஜீஆர் வரவுக்கு பிறகு பப்பு வேகவில்லை. அவர் சூனாமி போல் சுருட்டி எடுத்துவிட்டார். மக்களும் கொஞ்சம் கொஞ்சம் விழித்துக் கொள்ள தலைமுறைகள் சற்று படித்து உண்மைகளை உணர்ந்து கொள்ள வேறு எந்த வழியும் இவர்களுக்குத் தெரியவில்லை. இதுவே தான் திருமங்கலம் என்ற சூத்திரம் என்று பெருமையாய் சொல்ல வைத்தது.

பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கலாம் என்று கொண்டு வந்து சேர்த்தது.//

இப்பவும் இரட்டை இலை எம்.ஜி.ஆர் என்ற மந்திரமாகவே கிராமப்புறங்களில் பார்க்கப்படுகிறது.

திருமங்கலம் பார்முலா இன்னும் தமிழர்களின் அப்பாவித்தனத்தால் வெற்றி பெற்றதென்றே கருதுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//மககளுக்கு வேறு வழி? எதிர்க்க முடியாது. பேச முடியாது. கிடைத்த வரை லாபம் என்று நகர்ந்து போய்விட்டார்கள். மனசாட்சி குறுக்கே நிற்க குத்தியும் தொலைத்து விட்டார்கள்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த பயமே பிரதானம். விபரம் புரிந்துவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று அத்தனை பேர்களும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்.

இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒவ்வொன்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு போட்டுத் தாக்கிக் கொண்டிருக்க என்ன காரணம் என்று நினைக்கிறீங்க?//

அரசியல்,சினிமாவின் அதி வேகமான மோகம் இவற்றுக்கும் அப்பால் மதுரைக்கான பிம்பம் அரிவாள் கலாச்சாரமே.(மதுரை வாழ் மக்கள் மன்னிப்பார்களாக) மதுரைக் களத்தில் எடுக்கப்படும் திரைக்கதைகளும் இதற்கான உறுதுணையாக இருக்கிறது.

எனவே மண்வாடையும் கூட அழகிரியை மாற்று வழியில் போக வைத்திருக்க கூடுமோ என நினைக்கின்றேன்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த பயமே பிரதானம் என்பது பதிவுலகிலும் கூட ஆட்டோ வருது எனப் போடப்படும் பின்னூட்டங்கள் மூலமாக பிரதிபலிக்கவும் செய்கிறது.

ராஜ நடராஜன் said...

//விடுபட்ட இடங்களை இப்போ கோர்த்துப் பாருங்க//

இத்தனை விசயங்களை நீங்கள் சொன்னதுக்கு ஒரு பதில் பதிவாக போட்டிருக்கலாம்.பலருக்கும் போய்ச் சேர்ந்த்ருக்கும்.

ஜோதிஜி said...

அட நீங்க வேற தேர்தல் முடியும்வரைக்கும் நாங்க விரதம். எப்போதும் போல சற்று இடைவெளி விடுவது வழக்கம்.

ஓட்டுப் போடுவது குறித்து ஒரு பதிவு மட்டும் எழுத பாக்கியுள்ளது.

ராஜ நடராஜன் said...

//அட நீங்க வேற தேர்தல் முடியும்வரைக்கும் நாங்க விரதம். எப்போதும் போல சற்று இடைவெளி விடுவது வழக்கம்.

ஓட்டுப் போடுவது குறித்து ஒரு பதிவு மட்டும் எழுத பாக்கியுள்ளது.//

நானும் கூட தேர்தல் முடிவுகள் வரை அரசியலைத் தாண்டி விடலாமென்றுதான் நினைத்திருந்தேன்.முடியவில்லை.

மறுபடியும் வந்தீங்கன்னா இந்த லிங்கைப் படியுங்கள்.

http://greenindiafoundation.blogspot.com/2011/04/blog-post.html

ஜோதிஜி said...

அழகிரி பெயரை போட்டவுடன் பதிவு சூடாகிவிட்டது பாத்தீயளா? நீங்க சொன்ன பதிவை பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

bandhu said...

//ஒரு எதிரியை இரண்டு விதமாக வெல்ல முடியும். நேரிடையாக மோதி வெல்லலாம். மற்றொரு வகை அவரைச்சுற்றிலும் உள்ள விசயங்களை படிப்படியாக நிர்மூலமாக்கி பயமுறுத்தி, தனிமைப்படுத்தி செயல்படமுடியாமல் தவிக்க விட்டு இறுதியாக தோல்விக்கு அருகே அழைத்துச் சென்று கதற் அடிக்க முடியும்.//
இது தான் இப்போது நடக்கிறது! கூட இருந்தே கழுத்தறுக்கும் வேலையே வெகு சாமர்த்தியமாக காங்கிரஸ் செய்து வருகிறது! இப்போதிருக்கும் நிலைமையில் தி மு க விற்கும் வேறு வழியே இல்லை! உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடிக்கிறார்கள்!

ராம கிருஷ்ணன் said...

பெரிய குடும்பத்தின் சின்னபுள்ள தனமான செய்தி ஒன்னை சொல்றேன் கேட்டுகிடுங்க. இன்னைய ஊரே மெச்சு பாராட்டும் புன்னகை மன்னன் அனைத்து போட்டோக்களிலும் இடுச்சு தள்ளினாலும் ஒட்டிக்கிட்டு அறுநூறு கோடி கொடுத்து மந்த்ரி பதவியை பிடிச்சாரே...அதே அந்த அமைச்சரின் ஈனத்தனமான முன்னாள் பிசுனஸ் என்னா தெரியுமா....இருபத்தி ரெண்டு வருடத்திற்கு முன்பே இன்னிக்கு டேட்டிங்க்ஸ்ன்னு சொல்லப்படுற கண்ராவிய ஸ்டேர்லிங் ரோடு அருணா இன் ஹோட்டல அரங்கேற்றம் பண்ணி துட்டு பார்த்தவனுங்கதான்... இது இக்குடும்பத்தின் முன்னாள் முகம். இது எத்துனை பேருக்கு தெரியும் ..?இதுல எத்துனை குடும்பம் அழிஞ்சுதோ...யார் கண்டார்கள்..!

மதுரை சரவணன் said...

dmk yin adavadith thanaththil athu thorkkum

நசரேயன் said...

ஜோதிஜி, நடாஜி ஏதும் உதவி தேவையா ?

ராஜ நடராஜன் said...

//அழகிரி பெயரை போட்டவுடன் பதிவு சூடாகிவிட்டது பாத்தீயளா? நீங்க சொன்ன பதிவை பஸ்ஸில் இணைத்துள்ளேன்.//

இது அழகிரி பெயருக்கானா அங்கீகாரமா?அல்லது பயத்தின் மீதுள்ள அங்கீகாரமா?இது வரை 268 பேர் எட்டிப்பார்த்திருக்கிறார்கள்:)

ராஜ நடராஜன் said...

//இது தான் இப்போது நடக்கிறது! கூட இருந்தே கழுத்தறுக்கும் வேலையே வெகு சாமர்த்தியமாக காங்கிரஸ் செய்து வருகிறது! இப்போதிருக்கும் நிலைமையில் தி மு க விற்கும் வேறு வழியே இல்லை! உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடிக்கிறார்கள்!//

பந்து!உங்கள் மீள் வருகைக்கும் மீண்டுமோர் கருத்துக்கும் நன்றி.கூட இருந்தே குழி பறிக்கும் வேலையை காங்கிரஸ் செய்கிறது என
நீங்களும் ஜோதிஜியின் பார்வையில்தான் பார்க்கிறீர்கள் போல!

ஸ்பெக்ட்ரம்,ராசா கைது,60,63 இழுபறிகள்,டெல்லியில் சரண்டர் அசைக்க முடியாத ஆப்புதான்.

ராஜ நடராஜன் said...

//பெரிய குடும்பத்தின் சின்னபுள்ள தனமான செய்தி ஒன்னை சொல்றேன் கேட்டுகிடுங்க. இன்னைய ஊரே மெச்சு பாராட்டும் புன்னகை மன்னன் அனைத்து போட்டோக்களிலும் இடுச்சு தள்ளினாலும் ஒட்டிக்கிட்டு அறுநூறு கோடி கொடுத்து மந்த்ரி பதவியை பிடிச்சாரே...அதே அந்த அமைச்சரின் ஈனத்தனமான முன்னாள் பிசுனஸ் என்னா தெரியுமா....இருபத்தி ரெண்டு வருடத்திற்கு முன்பே இன்னிக்கு டேட்டிங்க்ஸ்ன்னு சொல்லப்படுற கண்ராவிய ஸ்டேர்லிங் ரோடு அருணா இன் ஹோட்டல அரங்கேற்றம் பண்ணி துட்டு பார்த்தவனுங்கதான்... இது இக்குடும்பத்தின் முன்னாள் முகம். இது எத்துனை பேருக்கு தெரியும் ..?இதுல எத்துனை குடும்பம் அழிஞ்சுதோ...யார் கண்டார்கள்..!//

ராமகிருஷ்ணன் உங்கள் வருகைக்கு நன்றி.அதை விட பட்டினத்தில் பூதம் மாதிரி யாருக்குமே தெரியாத தங்க ரகசியம் எடுத்து விடுறீங்களே!

டேட்டிங்ஸெல்லாம் அப்ப பிரப்லமாகலையே!நண்பர் ஒருவர் இது மாதிரி பெரிய இடத்து கதைகளையெல்லாம் சொல்வதுண்டு.விலாசமெல்லம் நீங்க சரியா சொல்றதால உங்க புலன் விசாரணை சரியாக இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//dmk yin adavadith thanaththil athu thorkkum//

வாங்க மதுரைக்காரரே!உங்க ஊர்க்காரங்க பின்னூட்டம் போட்டா கள நிலைகளை உண்மையாகவே உணர இயலும்.

யார் ஜெயிக்கிறாங்க அல்லது தோற்கிறார்கள் என்பதை விட வன்முறைக் கலாச்சாரம் தமிழகத்தில் ஒழிய வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில் எழுதிய இடுகை இது.

ராஜ நடராஜன் said...

//ஜோதிஜி, நடாஜி ஏதும் உதவி தேவையா ?//

நசர்ஜி!உதவி தேவைப்பட்டா சொல்லியனுப்புறோம்:) நன்றி.

vasu balaji said...

முந்திரியாவரதுக்கு முன்னாடி எந்த பாதுகாப்பு இருந்திச்சாம். அதான் தேர்தல் அறிவிச்சதுமே சொன்னாங்கல்ல. அரசு யந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாதுன்னு. கம்னு விட்டுட்டு கடைசி நேரத்துல கவுத்து கழட்டி விட்டிருக்கணும். வச்சான் ஆப்பு. துணை ராணுவம் பாதுகாப்புன்னு. கூவாம இருந்திருந்தா மேலா இருந்திருக்கும்:)))

ராஜ நடராஜன் said...

//முந்திரியாவரதுக்கு முன்னாடி எந்த பாதுகாப்பு இருந்திச்சாம். அதான் தேர்தல் அறிவிச்சதுமே சொன்னாங்கல்ல. அரசு யந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாதுன்னு. கம்னு விட்டுட்டு கடைசி நேரத்துல கவுத்து கழட்டி விட்டிருக்கணும். வச்சான் ஆப்பு. துணை ராணுவம் பாதுகாப்புன்னு. கூவாம இருந்திருந்தா மேலா இருந்திருக்கும்:)))//

நான் கூட இன்னும் அதிக பாதுகாப்பா துணை ராணுவப் பாதுகாப்பு தந்ததே தேர்தல் ஆணையம்ன்னு நினைச்சேன்.

நீங்க என்னவோ பொடி வச்சிப்பேசற மாதிரி தெரியுதே?

முந்திரியாவது....இரட்டை நயம் அருமை:)

நிரூபன் said...

மனம் விட்டுச் சொல்கிறேன். இப் பதிவு பற்றி அரசியல் கருத்துக்களைக் கூறும் அளவிற்கு என் மூளையில் அரசியல் விடயங்கள் அதிகமாக இல்லை. தமிழ அரசியலைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக் குட்டி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. அழகிரி.. நாட்டு சுதந்திரத்துக்குக்காக ரத்தம் சிந்தியவர்.

அவர் உயிருக்கு பிரச்சனை என்றால்.. நாடே பற்றி எரியவேண்டாமா?...

Unknown said...

அஞ்சா நெஞ்சன்\?????

Unknown said...

இப்ப அஞ்சின நெஞ்சன்!!!
:)

http://thavaru.blogspot.com/ said...

ரொம்ப அகங்கார ஆட்டம் போட்டவங்களுக்கு காலம் சொல்லும் பதில் இது தாங்க ராஜ நடராஜன்.

ராஜ நடராஜன் said...

//மனம் விட்டுச் சொல்கிறேன். இப் பதிவு பற்றி அரசியல் கருத்துக்களைக் கூறும் அளவிற்கு என் மூளையில் அரசியல் விடயங்கள் அதிகமாக இல்லை. தமிழ அரசியலைப் பொறுத்தவரை நான் ஒரு கத்துக் குட்டி.//

வாங்க சகோதரம்!நாங்களும் கத்துக்குட்டிகதான்.இணையம் நிறைய விசயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.முக்கியமாக பதிவுலகத்தின் வெளிப்படையான கருத்துரிமையும் மாறுபட்டக் கருத்துக்களில் எது சரியென்று தீர்மானிக்கும் முடிவையும்.

இளங்கன்றுதானே!போகப்போக சரியாப் போயிடும்:)

ராஜ நடராஜன் said...

//ஏண்ணே.. அழகிரி.. நாட்டு சுதந்திரத்துக்குக்காக ரத்தம் சிந்தியவர்.

அவர் உயிருக்கு பிரச்சனை என்றால்.. நாடே பற்றி எரியவேண்டாமா?...//

பட்டு!நாடே பற்றி எரிய வைக்கிறதுக்கு இவங்களுக்கு சொல்லிக் கொடுக்கனுமா என்ன?

முதலாவது ஆட்சி பீடத்தில் இருப்பதால் இப்ப இருக்குற ஆப்போட இன்னும் ஆப்பு அதிகம் கூடிக்கும்.

இரண்டாவது முட்டுச்சந்து,முக்குச்சந்து ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தா இருக்குற இடத்துலயெல்லாம் போலிஸ்,துணை ராணுவ குவிப்பு.

அவங்கதான் என்ன செய்வாங்க?

தேர்தல் ஆணையம் பணத்தையெல்லாம் சோதனை செய்கிறார்களென்று மில்லில் அரிசி அரைக்கிறதுக்குப் பதிலா பணத்தை அரைச்சி வழியில இல்ல...இல்ல... குழியில போட்ட ஆளுக யாருன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

//அஞ்சா நெஞ்சன்\?????//

வடிவேலு சொல்ற மாதிரி எல்லாம் ஒரு பில்டப்புத்தான்!

ராஜ நடராஜன் said...

//இப்ப அஞ்சின நெஞ்சன்!!!
:)//

கொஞ்சம் அச்சம் இருந்தாலும் பழைய கெத்த விட்டுக்குடுக்கக் கூடாதுன்னு இன்றைய செய்தி....
--------------------------------
தேர்தல் வீடியோகிராஃபரை படம் எடுக்கக்கூடாது என்று கூறி தடுத்ததாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாசில்தாரை தாக்கியதாக திருஞானம் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பி.எம்.மன்னன், ரகுபதி ஆகியோர் மீதும், வீடியோ கிராபரை படம் எடுக்கக்கூடாது என்று கூறி தடுத்ததாக மு.க.அழகிரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-------------------------------

நாம பதிவுலகில் சொல்றதுல ஏதாவது தப்பு இருக்குதான்னு இடுகைகளைக் கண்ணோட்ட்ம் விடுகிறவர்களின் தீர்ப்புக்கு விட்டு விடலாம்.

ராஜ நடராஜன் said...

//ரொம்ப அகங்கார ஆட்டம் போட்டவங்களுக்கு காலம் சொல்லும் பதில் இது தாங்க ராஜ நடராஜன்.//

நாம் எதிர்பார்ப்பதெல்லாம் வன்முறைக் கலாச்சாரம் ஊக்குவிக்காமல் திருந்தனும் என்பதும் வேலியே பயிரை மேய்கிற மாதிரி முதலமைச்சரின் மகனே தவறான பாதையை எடுத்துக்கொண்டால் இன்னும் சட்டம்,ஒழுங்கு,நீதி கெட்டு விடும் என்பதுவே.

தமிழக அரசியலில் நிறைய இடம் இருக்கிறது.2011 முதல் அழகிரி ஜனநாயக வழிகளுக்கு திரும்பட்டும்.ஜனநாயக அரசியல் செழிக்கட்டும் தமிழகத்தில்.

ஆனந்தி.. said...

//அரசியல்,சினிமாவின் அதி வேகமான மோகம் இவற்றுக்கும் அப்பால் மதுரைக்கான பிம்பம் அரிவாள் கலாச்சாரமே.(மதுரை வாழ் மக்கள் மன்னிப்பார்களாக) மதுரைக் களத்தில் எடுக்கப்படும் திரைக்கதைகளும் இதற்கான உறுதுணையாக இருக்கிறது.

எனவே மண்வாடையும் கூட அழகிரியை மாற்று வழியில் போக வைத்திருக்க கூடுமோ என நினைக்கின்றேன்.//
எங்க ஊரு ஹீரோ பத்திய அலசலில் நானும் ஆஜர் ஆகிக்கிறேன்..:))

மண்வாடை மாற்று வழியில் போக வச்சிருச்சா..ஹீ..ஹீ...அழகிரி சென்னை வாசி சகோ...இங்கே வந்து அந்த ஆளு தான் எங்க ஊரு பேரை ரிப்பேர் ஆக்கிட்டார்னு புலம்பிட்டு இருக்கோம்...எந்த கட்சியா இருந்தாலும் அவர்களின் நாகரிகம் எல்லாம் வெகு இயல்பாகவும்,கௌரவாமாகவும் இருக்கும் எங்க மதுரையில் னு என் தாத்தா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்..ஒரு இருவது வருடம் முன்னாடி...

சில குறிப்பிட்ட சமுதாயத்தை உயர்த்திவிட்டு வன்முறை கூட்டி வளர்த்தது கூட கூட இருவது வருடம் முன்னாடி இருந்து தான்னு என் தந்தையும் சொல்வாங்க...நான் சிறுவயதில் இருந்த போது எத்தனையோ கட்சி தலைவர்கள் மதுரையில் இருந்தாலும் எந்த சத்தமும் பெருசா இருக்காது...உதாரணம் வெரி decent பி டி ஆர் பழனி வேல் ராஜன் மாதிரி ஆளுங்க...பட் அழகிரியின் ஆர்ப்பாட்டம் மட்டும் எப்பவும் உண்டு...மதுரை டி வி எஸ் நகரில் இருக்கும் மக்கள் எல்லாம் எவளவு சீரஞ்சுருப்பாங்கனு உங்களால் கற்பனை பண்ண முடியுமான்னு தெரியல அந்த குறிப்பிட்ட காலத்தில்...அந்த ஆளின் இயல்பே அப்டி தானா..இல்லை அல்லக்கைகள் ஏத்தி விட்ட கொழுப்பா னு தெரியலை...பட் அழகியில் இயல்பை என் மதுரை கெடுத்திருக்காது...என் மதுரையின் இயல்பை தான் ஒரு வெளியூர் வாசி கெடுத்திருக்கலாமுனு அபிப்ராய படுகிறேன்...:)))

ஆனந்தி.. said...

டி வி எஸ் நகர் ஏரியா முன்னாடி அழகிரி இருந்த ஏரியா...அங்கே நடக்கும் கட்டை பஞ்சாயத்துக்கள் ஒவ்வெரு சொந்த மண்ணு மதுரைகாரவங்களுக்கும் எரிச்சல் தந்த நிகழ்வு...இப்பவும் மதுரையில் எந்த ஆளு ஒரு கோடிக்கு மேலே சொத்து வாங்குரானோ...சப் ரிஜிஸ்டார் ஆபிஸ் இல் இருந்து உடனே தலைவனுக்கு தகவல் போய்டணும்...எட்டு பெர்சென்ட் கமிசன் போனால் மட்டுமே பத்திரம் பதிவுறும்....இந்த புத்தி வெளியூர் காரனுக்கு தான் சாமி இருக்கும்...ஒரிஜினல் மதுரை வாசிங்க கை புள்ளைங்க சகோ...:)))

ஜோதிஜி said...

இப்பவும் மதுரையில் எந்த ஆளு ஒரு கோடிக்கு மேலே சொத்து வாங்குரானோ...சப் ரிஜிஸ்டார் ஆபிஸ் இல் இருந்து உடனே தலைவனுக்கு தகவல் போய்டணும்...எட்டு பெர்சென்ட் கமிசன் போனால் மட்டுமே பத்திரம் பதிவுறும்...

ராஜ நடராஜன் said...

//எனவே மண்வாடையும் கூட அழகிரியை மாற்று வழியில் போக வைத்திருக்க கூடுமோ என நினைக்கின்றேன்.//
எங்க ஊரு ஹீரோ பத்திய அலசலில் நானும் ஆஜர் ஆகிக்கிறேன்..:))

மண்வாடை மாற்று வழியில் போக வச்சிருச்சா..ஹீ..ஹீ...அழகிரி சென்னை வாசி சகோ...இங்கே வந்து அந்த ஆளு தான் எங்க ஊரு பேரை ரிப்பேர் ஆக்கிட்டார்னு புலம்பிட்டு இருக்கோம்...எந்த கட்சியா இருந்தாலும் அவர்களின் நாகரிகம் எல்லாம் வெகு இயல்பாகவும்,கௌரவாமாகவும் இருக்கும் எங்க மதுரையில் னு என் தாத்தா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்..ஒரு இருவது வருடம் முன்னாடி...//

நீண்ட கருத்து சொல்லியிருக்கீங்க சகோதரி.இரண்டாய் பிரித்துப் போட்டு விடுகிறேன்.

மதுரைக்கு ஒரு தனித்துவமான வாழ்வியல் அழகியல் இருப்பதை மறுக்கவே இயலாது.பண்டைய கலாச்சார கட்டிடங்கள்,அழகான வீதிகள்,எப்பொழுதும் விழித்திருக்கும் நகரம்,கரகாட்டத்தின் ஆணி வேர்,ஜல்லிக்கட்டின் தாக்கம்,யதார்த்தமான மொழி,நட்பு,எழுத்து,கலைத்துறைக்கான அர்பணிப்பு என தமிழகத்தின் முகம் மதுரை மாவட்டம் என நல்லவைகளுக்கு சொந்தமான மாவட்டம் என்பதில் சந்தேகமேயில்லை.

இதற்கு எதிர்மாறாக இனத்தின் அடிப்படையில் ஏற்படும் கலவரங்கள்,புறநகர் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் என்பனவற்றோடு அழகிரியின் ஆதிக்கம் மதுரைக்கு மோசமான பிம்பத்தையே தருகிறது.அதன் பார்வையிலேயே இதனை சொல்லியுள்ளேன்.

ராஜ நடராஜன் said...

//மண்வாடை மாற்று வழியில் போக வச்சிருச்சா..ஹீ..ஹீ...அழகிரி சென்னை வாசி சகோ...இங்கே வந்து அந்த ஆளு தான் எங்க ஊரு பேரை ரிப்பேர் ஆக்கிட்டார்னு புலம்பிட்டு இருக்கோம்...எந்த கட்சியா இருந்தாலும் அவர்களின் நாகரிகம் எல்லாம் வெகு இயல்பாகவும்,கௌரவாமாகவும் இருக்கும் எங்க மதுரையில் னு என் தாத்தா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்..ஒரு இருவது வருடம் முன்னாடி...//



தேர்தல் என்ற பலமான ஆயுதம் இருந்தும் ஒரு தனி மனிதனின் பண பலம்,அதிகார பலத்திற்கு முன் மொத்த மக்களும் மௌனமாக இருந்து விடுவது வேதனைக்குரியது.

Prakash said...

Though I'm don't know whether the allegations on Alagiri like 8% commission are true, but most of people from Madurai says that he's doing good work for the city development and he has very helping tendency towards people for whoever approaches him.

Now, coming to the point, DMK is facing 32 district collectors and Alagiri in particular faces 9 districts collectors as he is DMK election in charge of southern districts.

But Alagiri is not complaining about all 9 collectors, he is complaining only on Madurai Dt Collector.

By the above facts, either Sagayam is over acting in his duty OR the remaining 31 district collectors are NOT following election commissions order, because DMK or Alagiri are not complaining on those 31 collectors.

ராஜ நடராஜன் said...

//சில குறிப்பிட்ட சமுதாயத்தை உயர்த்திவிட்டு வன்முறை கூட்டி வளர்த்தது கூட கூட இருவது வருடம் முன்னாடி இருந்து தான்னு என் தந்தையும் சொல்வாங்க...நான் சிறுவயதில் இருந்த போது எத்தனையோ கட்சி தலைவர்கள் மதுரையில் இருந்தாலும் எந்த சத்தமும் பெருசா இருக்காது...உதாரணம் வெரி decent பி டி ஆர் பழனி வேல் ராஜன் மாதிரி ஆளுங்க...பட் அழகிரியின் ஆர்ப்பாட்டம் மட்டும் எப்பவும் உண்டு...மதுரை டி வி எஸ் நகரில் இருக்கும் மக்கள் எல்லாம் எவளவு சீரஞ்சுருப்பாங்கனு உங்களால் கற்பனை பண்ண முடியுமான்னு தெரியல அந்த குறிப்பிட்ட காலத்தில்...அந்த ஆளின் இயல்பே அப்டி தானா..இல்லை அல்லக்கைகள் ஏத்தி விட்ட கொழுப்பா னு தெரியலை...பட் அழகியில் இயல்பை என் மதுரை கெடுத்திருக்காது...என் மதுரையின் இயல்பை தான் ஒரு வெளியூர் வாசி கெடுத்திருக்கலாமுனு அபிப்ராய படுகிறேன்...:)))/

பொதுவாகப் பார்த்தீங்கன்னா எந்த ஒரு நாட்டு அரசு நாற்காலியில் சொகுசு கண்டவர்கள் கூட இருக்கும் படை பலத்திலும்,அதிகாரம் தரும் தனி அந்தஸ்திலுமே இரும்பு மனிதர் போன்று தென்படுகிறார்கள்.இதனை தற்போதைய வரலாறாக எகிப்தின் ஹோஸ்னி முபாரக்,லிபியாவின் கடாபி துவங்கி நமது தேசத்து ஜனநாயக நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்கள் அத்தனை பேருக்கும் பொருந்தும்.

கூடியிருக்கும் கூட்டத்தைக் கலைத்துப் பார்த்தால் அழகிரி உட்பட அனைவரும் சாதாரண மனிதர்களே.அதுவே அவரது அபயக்குரலில் எதிரொலிக்கிறது.

ராஜ நடராஜன் said...

//டி வி எஸ் நகர் ஏரியா முன்னாடி அழகிரி இருந்த ஏரியா...அங்கே நடக்கும் கட்டை பஞ்சாயத்துக்கள் ஒவ்வெரு சொந்த மண்ணு மதுரைகாரவங்களுக்கும் எரிச்சல் தந்த நிகழ்வு...இப்பவும் மதுரையில் எந்த ஆளு ஒரு கோடிக்கு மேலே சொத்து வாங்குரானோ...சப் ரிஜிஸ்டார் ஆபிஸ் இல் இருந்து உடனே தலைவனுக்கு தகவல் போய்டணும்...எட்டு பெர்சென்ட் கமிசன் போனால் மட்டுமே பத்திரம் பதிவுறும்....இந்த புத்தி வெளியூர் காரனுக்கு தான் சாமி இருக்கும்...ஒரிஜினல் மதுரை வாசிங்க கை புள்ளைங்க சகோ...:)))//

கட்சியை சார்பாக வைத்துக்கொண்டு கமிசன் வியாபாரமும் கட்டைப்பஞ்சாயத்தும் வேறு சில கட்சிகளிலும் நிகழ்கிறது.முக்கியமாக மணல் வியாபரம்,துறைமுகம் சார்ந்தவை, வியாபாரம்,குவாரி போன்ற தொழிலகளில்.அழகிரியின் பிம்பம் பிரபலமாகி விட்டதால் கட்டைப் பஞ்சாயத்து கமிசன் வெளியில் தெரிகிறதென நினைக்கின்றேன்.

ராஜ நடராஜன் said...

//இப்பவும் மதுரையில் எந்த ஆளு ஒரு கோடிக்கு மேலே சொத்து வாங்குரானோ...சப் ரிஜிஸ்டார் ஆபிஸ் இல் இருந்து உடனே தலைவனுக்கு தகவல் போய்டணும்...எட்டு பெர்சென்ட் கமிசன் போனால் மட்டுமே பத்திரம் பதிவுறும்...//

காசு மேல காசு வெச்சு என்னதான் செய்வாங்களோ? திருட இயன்றாலும் இப்போதைய கணினி யுகத்தில் அளவுக்கு மீறிப்போனா வெளியே வந்தே தீரும்.

ராஜ நடராஜன் said...

//Though I'm don't know whether the allegations on Alagiri like 8% commission are true, but most of people from Madurai says that he's doing good work for the city development and he has very helping tendency towards people for whoever approaches him.

Now, coming to the point, DMK is facing 32 district collectors and Alagiri in particular faces 9 districts collectors as he is DMK election in charge of southern districts.

But Alagiri is not complaining about all 9 collectors, he is complaining only on Madurai Dt Collector.

By the above facts, either Sagayam is over acting in his duty OR the remaining 31 district collectors are NOT following election commissions order, because DMK or Alagiri are not complaining on those 31 collectors.//

Apart from the quoted contents as above I would like to say a few lines of your comments on Senkovi article,the question I have raised about you.Thanks for explaining of your stand on DMK as well as of you.

Now coming to the point of your comment, the common opinion of Mr.Alagiri is he is good at heart but bad in action.That is a proven record both he got helping tendency as well as a name assigned from his own party member"he is a cut throat politician".Dinakaran office one incident is sufficient for who would be behind the atrocity.

While everybody praising and certifying Collector Sagayam's service your comment is negative and going along with Mr.Alagiri's stand.Anyway you have got right for your own views.

ஆனந்தி.. said...

//Though I'm don't know whether the allegations on Alagiri like 8% commission are true, but most of people from Madurai says that he's doing good work for the city development and he has very helping tendency towards people for whoever approaches him.//

ஹாய் பிரகாஷ்..;)) எம்.பி நிதியில் வழங்கப்படும் பெரும்பான்மை பணத்தில் ஏதோ கிள்ளி போடும் ..அள்ளி போடும் சில சில்லறைகள் தான் நீங்கள் குறிப்பிட்ட சில உதவிகள்...அழகிரி செய்யும் எந்த நல்ல(??) திட்டங்களும்...அவரின் அல்லக்கைகளும்..அவரின் குடும்ப உறுப்பினர்களையும் சார்ந்தே இருக்கும் வகைகள் தான் அதிகம்....பணக்காரனும்...கமிஷன் வெட்டும் பீப்பிளும் போனால் நீங்க சொன்னமாதிரி அற்புதமாய் உதவி செய்யும் உத்தமர் தான்...;))))

போனவாரம் எங்க ஏரியா வில் நாங்க கண்ணிலும் பார்த்திராத தற்போதைய வேட்பாளார் தளபதியின் வருகை...துணை மேயர் மற்றும் அஞ்சாநெஞ்சனின் ஆல் அல்ல கைகளும் ஆஜர்....எங்க ஏரியா வில் குப்பை போடும் பெரிய மூடிய கிடங்கு (மாநகர ஆட்சியால் வைக்கப்பட்ட )உடனே அப்புரபடுத்தபட்டது அல்லது தூக்கி எறியப்பட்டது..அந்த இடத்தில் அழகிரி தலைமையில் தி,மு.க கொடி ஏத்தினாங்க...எங்க ஏரியா மக்கள் குப்பைகளை அப்புறபடுத்த கட்சி காரங்களை கேட்டாலும் காதில் கேட்க முடியாத வார்த்தைகள் தான் அவர்களிடம் இருந்து வந்தது...இது அழகிரியின் செல்வாக்கு பிரகாஷ்...பணத்தால் விலை போகும் அடிமட்ட தொண்டன் கை வசம் இருக்கும் வரை இவனுங்களை யாரவது என்கவுன்டர் லையோ மாறி போயி போட்டால் தான் எங்க ஊருக்கு விடிவு...

எந்த தொழில் அதிபரிடமும் மிரட்டி வாங்க படும் அழகிரிக்கு கட்சி நிதியை...(போன தீவாளி நேரத்தில் மதுரை மாப்ளை விநாயகர் theatre அருகில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் owner கள் எல்லாம் மிரட்டப்பட்ட காட்சியை நிறைய பொதுமக்களே வேடிக்கை பார்த்த நிகழ்வுகளையும் மதுரை சந்தித்திருக்கிறது...ஆளும் கட்சி என்ற திமிரு..சில குறிப்பிட்ட சமுதாயத்தை ரவுடி களாக்கி வச்சிருக்கும் சாமர்த்தியம்(??!!)

மதுரையை பொறுத்தவரை போலீஸ் க்கு பெரிய பவர் இல்லை...எல்லாமே அஞ்சாநெஞ்சனின் பொம்மைகள் ஆக்கப்பட்டவர்கள்...இப்போது சகாயம் மிக்க நல்ல கலெக்ட்டர்..எந்த பப்பும் வேகாத வெறுப்பில் அழகிரியின் புலம்பல் தான் தற்போது மதுரை மக்களுக்கு பெரிய சந்தோஷம்...

ஆனந்தி.. said...

//But Alagiri is not complaining about all 9 collectors, he is complaining only on Madurai Dt Collector.

By the above facts, either Sagayam is over acting in his duty OR the remaining 31 district collectors are NOT following election commissions order, because DMK or Alagiri are not complaining on those 31 collectors.//

செம காமடி பண்றீங்க பாஸ்...அழகிரி தான் சூத்திரதாரி...பணப்பட்டு வாடாக்கள் மதுரையில் இருந்து பறந்து பறந்து எப்படி திருமங்கலம் மற்றும் இடையில் நடந்து சில இடைதேர்தல் களை திருப்தி படுத்திய நிகழ்வுகளை உலகமே அறியும்...அதுவும் திருமங்கலம் ஒரு மாஸ்டர் பீஸ்..ஐ.நா சபை வரை இது பேசப்பட்டு இருக்கும்...;)))

மதுரை அருகில் திருமங்கலம் ரோடு இல் அழகிரியின் தயா தொழில் நுட்ப கல்லூரி கட்டப்பட்டு தேர்தல் முடிஞ்சு திறக்க படும் நாளை நோக்கி...அங்கே இருந்து கவர் பணங்கள்...சேலைகள் எல்லாம் மதுரையை மையமாய் கொண்டு தான் இதுவரை நடந்த தேர்தல்களில் கொண்டு போக பட்டன...அப்போ இருந்த கலெக்டர்கள் வேற வழியில்லாமல் கண்டுகிட்டதாலே...இப்ப சகாயம் மற்றும் தேர்தல் கமிஷன் வைக்கும் ஆப்பு கட்டாயம் அழகிரி குரூப் பிணை பாதிக்குமா இல்லையா...அதுவும் இல்லாமல் வேற ஒரு prestige cooker விஷயமும் இருக்கு..அட சை..prestige விஷயமும் இருக்கு அழகிரிக்கு...அந்த ஆள் இருக்கும் மதுரை மண்ணில் தி.மு.க மட்டும் தி,மு.க சார்ந்த கூட்டணி தோற்காமல் ஜெயிக்க வைப்பது மானம்,மரியாதை சார்ந்த விஷயம் இல்லையா...அதுக்கு சங்கு ஊதும் எந்த வேர்களும் எங்கள் அஞ்சா நெஞ்சனுக்கு பிடிப்பதில்லை..அது தான் மேட்டர்...நீங்க வேற..வேற ஊரு கலெக்டர்ஸ் அண்ணனுங்கள் பாவம்...;))

ஜோதிஜி said...

நடாஜி (நன்றி சசர்ஜி)

ஆனந்திக்கு மங்கம்மா என்று பெயர் கொடுக்கலாம் போலிருக்கு. சும்மா பொளந்து கட்டுறாங்க.

ராஜ நடராஜன் said...

சகோதரி ஆனந்தி!இந்தப் பதிவின் நோக்கம் உஙகள் பின்னூட்டத்தால் பெருமையடைகிறது.நான் தூரத்திலிருந்து கொண்டு கழுகுப்பார்வை பார்ப்பதை விட மண்ணின் சொந்தக்காரர்களின் எண்ணங்கள் வெளிப்படுவதே உண்மைகளை வெளிக்கொண்டு வரும்.அந்த விதத்தில் வீரம் பொங்கும் கருத்துக்களை பதிவு செய்ததற்கு எனது நன்றி.

கேள்வியை நீங்கள் பிரகாஷ் அவர்களுக்கு வைத்துள்ளதால் மாற்றுக்கருத்தை முன் வைக்க திரும்ப வருவாரா எனப் பார்ப்போம்.

ராஜ நடராஜன் said...

//நடாஜி (நன்றி சசர்ஜி)

ஆனந்திக்கு மங்கம்மா என்று பெயர் கொடுக்கலாம் போலிருக்கு. சும்மா பொளந்து கட்டுறாங்க.//

ஜோதிஜி!பின்னூட்ட கருத்துக்களை நீங்கள் துவக்கி வைத்தீர்கள்.மதுரையின் பெருமைக்கு ஆனந்தியின் பின்னூட்டம் இந்த பதிவுக்கு மகுடம் சேர்க்கிறது.

பிரகாஷ் அவரது கருத்தை மீண்டும் முன் மொழிவாரா என பார்ப்போம்.

Ram said...

//இவர்களுக்கு முன் கூட்டியே தேர்தல் முடிவுகள் பற்றிய பயம் வந்து விட்டதா?//

வாய்ப்பே இல்லை.!! அழகிரிக்கு பயமா.? கலைஞர் சில நாட்களுக்கு முன் கலங்கினார். ஜெயிக்கமுடியுமா என்று.! அப்போது உள்ளே புகுந்த அழகிரி கவலை வேண்டாம் 120 தொகுதிகள் என் சார்பில் நிச்சயம் உங்களுக்கு என அடித்து சொன்னார்.

//இடைப்பட்ட காலம் தமிழக வரலாற்று பதிவு செய்திருக்கிறது.//

உண்மைதான்.. எனக்கு பிடித்த திமுக வேறு இப்போ இருக்கும் திமுக வேறு என்று ஏற்கனவே பதிவு போட்டுட்டேனே.!!

Ram said...

@ஜோதிஜி:
//தொடக்கம் முதல் திமுக வுக்கு மிகப் பெரிய பலம் பேச்சு. பேச்சு. பேச்சு.//

பக்கா.!!

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.!!

Ram said...

@ராமகிருஷ்ணன்:என்ன நண்பரே அவர் மட்டும் தானா.?? இன்னும் எத்தனையோ பேர்.. எல்லாருமே ஒரே மாதிரி தான்.. சும்மா சொன்னாரு இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்னு.

Ram said...

@பட்டாபட்டி:கலாய்கிறீங்களா.? இன்னும் எதிர்பார்க்கிறேன்..

Ram said...

@ஆனந்தி:
//அழகிரி சென்னை வாசி சகோ//

நல்லா யோசிச்சு சொல்லுங்க ஆனந்தி..அழகிரி சென்னை ஆளா.? அழகிரியை மதுரையில்லனு சொன்னா, அவன் சென்னையும் இல்ல..

//மதுரை டி வி எஸ் நகரில் //

அட நம்ம சொந்தகாரங்க அங்க தானே இருக்காங்க..

//அந்த ஆளின் இயல்பே அப்டி தானா..//

அய்யோ.! அவன் ஒரு டம்மி பீஸ்ங்க..

//எட்டு பெர்சென்ட் கமிசன் போனால் மட்டுமே பத்திரம் பதிவுறும்..//

புதுசா ஏதாச்சும் சொல்லுங்கப்பா.!! இந்த கமிசன் இப்ப குறைஞ்சதா கேள்விபட்டேனே.!!

//ஒரிஜினல் மதுரை வாசிங்க கை புள்ளைங்க சகோ...:)))//

சொந்த ஊர் மேல பாசம் அதிகம்னு தெரியும்.. அதுக்குனு மத்த ஊர்காரங்கள கேவல படுத்தி சொந்த ஊரை மெச்சுவீங்கன்னு எதிர்பார்க்கல..

Ram said...

@ப்ரகாஷ்://he's doing good work for the city development and he has very helping tendency towards people for whoever approaches him.//

நண்பரே.! நீங்க ஒருவேளை திமுக அல்லாத நடுநிலைவாதிகளிடம் கேட்டுபாக்கலாம்.. ஹி ஹி.. திமுக தீவிர தொண்டன்ட போயி அழகிரி எப்படினா சூப்பருன்னு தான் சொல்லுவான்..

சகாயம் மிக சிறப்பாகவம் மற்றவர் சிறப்பாகவும் செய்கிறார்கள் என சொல்லகூடாதா.?

Ram said...

ஒன்று புரிந்துகொள்ளுங்கள் ப்ரகாஷ்.. எனது நண்பரின் தந்தை மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.. நண்பரின் வீட்டுக்கு சென்றபோது அவரை காண நேர்ந்தது.. இரவிலும் பகலிலும் ஓழாத ஓட்டம்.. திருட்டையோ, கொலையோ தடுக்க இல்ல.. அதுக்கெல்லாம் பாதுகாப்புக்காக.. அவர்களை ரௌடிகள் நடத்தும் முறையை நினைத்து மிகவும் வருந்தினார்.. நண்பரின் அம்மா சொல்லும்போது சோத்துக்கு இல்லாட்டியும் பரவாலன்னு வெளிய வர்ற சொல்றாங்க.. நைட் ஒவ்வொரு நாளும் கிளம்பும்போது அழகிரியும் அவரது ஆட்களை நினைத்தே பயம் தெரிக்கும் என்றார்..

உலகத்திலே கொடுமையான வேலை மதுரையில் போலீஸாக இருப்பது தான் எனவும் சொன்னார்..

Ram said...

@ஆனந்தி: அழகிரியின் அல்லக்கைகள் பெரும்பாலும் மதுரைகாரங்க தான்.. ஒண்ணுமே தெரியாத டம்மி பீஸ் அழகிரி.. அவனுக்கு உரிய ஒரே பலம் அவனது தந்தை அப்பரம் பவர்.. அவனை உபயோகபடுத்திகொண்டு உங்க ஊர் அதாங்க மதுரைகாரங்க தான் அவன ஏத்தி உட்டு லாபம் பாக்குறாங்க.. அழகிரி அவன் வீட்டுக்குனு 50%, அல்லக்கைக்கு,40% மக்களுக்கு 10%னு பண்றான்..

இதுல உண்மையில மதுரை மண்ணுல பொறந்தவனுக்கு இப்படிலாம் பண்ண தோணாதுன்னு சொல்றதெல்லாம் சிப்பு சிப்பா வருது..

எந்த ஊர்ல பொறந்தாலும் அவனும் மனுசன் தான்.. மதுரையை பெருமைபடுத்துங்கள் இதர ஊர்களை கேவலபடுத்தாதீர்கள்..

Ram said...

@ராஜநடராஜன்:ஒரு உருப்புடாதவன பத்தி ஒரு பதிவு போட்டு கலக்கிட்டீங்க பாஸ்..

Ram said...

@ஜோதிஜி:அரசியலை நன்கு கூர்ந்து கவனிக்கிறீர்கள்.. சிறப்பு.. நீங்க ஏன் படிக்கிற சின்ன பசங்களுக்கு படிக்கும்போது அரசியல்ல நாட்டமில்ல.. அதன் கருத்துகளை பகிர நாட்டமில்லைனு ஒரு பதிவு போடலாமே.!!!!!!

ராஜ நடராஜன் said...

////இவர்களுக்கு முன் கூட்டியே தேர்தல் முடிவுகள் பற்றிய பயம் வந்து விட்டதா?//

வாய்ப்பே இல்லை.!! அழகிரிக்கு பயமா.? கலைஞர் சில நாட்களுக்கு முன் கலங்கினார். ஜெயிக்கமுடியுமா என்று.! அப்போது உள்ளே புகுந்த அழகிரி கவலை வேண்டாம் 120 தொகுதிகள் என் சார்பில் நிச்சயம் உங்களுக்கு என அடித்து சொன்னார்.

//இடைப்பட்ட காலம் தமிழக வரலாற்று பதிவு செய்திருக்கிறது.//

உண்மைதான்.. எனக்கு பிடித்த திமுக வேறு இப்போ இருக்கும் திமுக வேறு என்று ஏற்கனவே பதிவு போட்டுட்டேனே.!!//

வாங்க கூர்மதியன்!தமிழக முதல்வரின் தேர்தல்ப் பிரச்சார சொற்கள் அவரது தோல்வி பயத்தை பிரதிபலிக்கிறதென்பதில் சந்தேகமில்லை.அனுபவசாலியான அவருக்கே வரும் கலக்கம் அழகிரிக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அதுவும் 120 தனது சார்பு என்பது தன்னைச் சார்ந்தவர்களின் ஓட்டு தன்னம்பிக்கையா அல்லது மக்கள் மீதுள்ள தில்லாலங்கடியின் நம்பிக்கையா?

தி.மு.கவுக்கு எதிரான குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் முந்தைய தி.மு.க சார்பாளர்களே.

Ram said...

@ராஜநடராஜன்://தன்னைச் சார்ந்தவர்களின் ஓட்டு தன்னம்பிக்கையா அல்லது மக்கள் மீதுள்ள தில்லாலங்கடியின் நம்பிக்கையா?//

அது தன்னை சார்ந்தவரின் புஜபலம் மீதிருக்கும் நம்பிக்கைங்க.. திமுகவின் அறிக்கையை பார்த்ததுமே பல மக்கள் மாறிவிட்டனர்.. இலவச மோகம் மோகம்னு திட்டினவங்க. அட சூப்பருன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன மனிசங்கயா.!!(சரி எங்களுக்கு எங்க கொடுப்பாங்களாம்..)

Jerry Eshananda said...

வணக்கம் நண்பர்களே,இந்த இடுகையின் சத்தம் உச்சஸ்தாயியில் கேட்பதை பார்த்து,உள்ளபடியே மகிழ்ச்சி தான், கருத்து ச்சுதந்திரதிற்க்கான வெளி தற்போது இணையத்தால் இன்னும் விலாசமாக்கப்பட்டு இருப்பதால் தான் நண்பர்கள் ஜோதிஜி,ஆனந்தி போன்றோரின்,அறிவார்ந்த,அனுபவம் தோய்ந்த,புள்ளி விவரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு ,கவனத்தை பெறுகிறது. தற்போது இந்த விடயத்தில் என்னால் கருத்து எதுவும் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்,தேர்தல் ஆணையத்தின் நேரடிக்கட்டுப்பாட்டில் Preciding Officer- ஆக பொறுப்பில் உள்ளதால்,தேர்தல் நடத்தை விதிகள் என்னையும் கட்டுப்படுத்தும் என்றாலும் இங்கே ஆனந்தி அவர்கள் வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுகளை யாராலும் அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட்டு போய்விடமுடியாது என்பதை மட்டும் இங்கே நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

ராஜ நடராஜன் said...

கூர்மதியன்!நீங்களும் பிரகாஷ்க்கு கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள்.கருத்து சொல்கிறாரா என எதிர்பார்க்கலாம்.

நீங்கள் இன்ஸ்பெக்டர் பற்றிக் குறிப்பிட்டது முக்கியமான ஒன்று.காவல்துறைக்கு மன அழுத்தங்கள் வரும் அத்தனையும் தமிழகத்தின் செயலில் வருவதும் அதன் பிரதிபலிப்பு மக்கள் மீதே வரும் அபாயங்களை கண்முன்னே நாம் காண்கிறோம்.

அப்புறம் முக்கியமான ஒன்று உங்கள் பின்னூட்டத்தில் ஒற்றைச் சொல்லில் அழகிரியின் மீது கோபக்கணைகள் விடுவதை தவிர்க்கலாமே?காரணம்,தனி மனித தாக்குதல்கள் பதிவின் சாரத்திலிருந்து பிரச்சினையை வேறு பக்கம் திசை திருப்பி விடும்.

கருத்து சுதந்திரத்தை வரவேற்போம்.கூடவே
கருத்துரிமையையும் மதிப்போம்.

Ram said...

@ராஜநடராஜன்:மன்னிக்கவும்.. ஒரு வேகத்தில் வந்துவிட்டது.. இனி தவறில்லாம்ல பார்த்துகொள்கிறேன்..

நன்றி.. எனது மதிப்பை எனக்கு உணர்த்தியதற்கு.. அழகிரியை எதிர்த்து பேசுவதாய் என் மதிப்பை குறைத்தேன்.. மன்னியுங்கள்..

ராஜ நடராஜன் said...

//அது தன்னை சார்ந்தவரின் புஜபலம் மீதிருக்கும் நம்பிக்கைங்க.. திமுகவின் அறிக்கையை பார்த்ததுமே பல மக்கள் மாறிவிட்டனர்.. இலவச மோகம் மோகம்னு திட்டினவங்க. அட சூப்பருன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. என்ன மனிசங்கயா.!!(சரி எங்களுக்கு எங்க கொடுப்பாங்களாம்..)//

மக்கள் மாறிட்டாங்களா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்.

//அது தன்னை சார்ந்தவரின் புஜபலம் மீதிருக்கும் நம்பிக்கைங்க..//

இந்த இடுகையின் நோக்கமே அந்த பிம்பத்தை எழுத்திலாவது தகர்க்க முடியுமா என்ற முயற்சிதான்.

ராஜ நடராஜன் said...

//வணக்கம் நண்பர்களே,இந்த இடுகையின் சத்தம் உச்சஸ்தாயியில் கேட்பதை பார்த்து,உள்ளபடியே மகிழ்ச்சி தான், கருத்து ச்சுதந்திரதிற்க்கான வெளி தற்போது இணையத்தால் இன்னும் விலாசமாக்கப்பட்டு இருப்பதால் தான் நண்பர்கள் ஜோதிஜி,ஆனந்தி போன்றோரின்,அறிவார்ந்த,அனுபவம் தோய்ந்த,புள்ளி விவரங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு ,கவனத்தை பெறுகிறது.//

உங்கள் களப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.பெருமையும் கூட.தேர்தல் ஆணையத்தின் சட்டத்தை நாம் கடைப்பிடிப்போம் என உங்கள் பின்னூட்டத்தை முடித்துக்கொள்கிறேன் ஜெரி ஈசானந்தன் அவ்ர்களே!

ராஜ நடராஜன் said...

//சகாயம் மிக சிறப்பாகவம் மற்றவர் சிறப்பாகவும் செய்கிறார்கள் என சொல்லகூடாதா.?//

பிரகாஷ்!திரும்ப வந்தீங்கன்னா கூர்மதியன் கேட்கும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

ஆனந்தி.. said...
This comment has been removed by the author.
ஆனந்தி.. said...

//சகாயம் மிக சிறப்பாகவம் மற்றவர் சிறப்பாகவும் செய்கிறார்கள் என சொல்லகூடாதா.?//
தம்பி கூர்மதியன்...இந்த வரிகள் மட்டும் செம டக்கரு..:)))

ஆனந்தி.. said...

வணக்கம் தம்பி கூர்மதி...:))

//இதுல உண்மையில மதுரை மண்ணுல பொறந்தவனுக்கு இப்படிலாம் பண்ண தோணாதுன்னு சொல்றதெல்லாம் சிப்பு சிப்பா வருது..//

ஒன்னு கவனிக்கணும் கூர்...இந்த மதுரை பற்றிய விஷயம் வந்ததே சகோ ராஜா நடராசன் மதுரை தான் அழகிரியை மாத்தி விட்டதோ னு சொன்ன கருத்துகளில் இருந்து புறப்பட்டது தான்...அப்படி ஒன்று அனுமானிக்க பட்டால் என் கருத்துகளை முன் வைப்பதிலும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை....

கூர் நீங்க மதுரை இல்லை தானே..அப்போ கொஞ்சம் ஓரமா இருந்து கவனிங்க....மண்ணின் மைந்தர்களுக்கு உண்டான எல்லா விஷயங்களும் நாங்கள் பட்டு இருக்கிறோம் பாஸ்...:))) அழகிரியின் முன் மதுரை..அழகிரியின் பின் மதுரை ன்னு justify பண்ண எங்கள் மண்ணின் மைந்தர்களின் சாபங்கள்..குமுறல்கள் நிறையவே இருக்கு...

நான் முதலில் மதுரை மண்ணு காரி...என் மண்ணை தவறாய் அனுமானிக்கும்போது அழகிரி பொறந்த சென்னையை சொல்வதில் எந்த தப்பும் என் சைடு தெரியலை..:)))

அழகிரி டம்மி பீஸ் ஆ ...ஒரிஜினல் பீஸ் ஆ னு யாம் அறியோம் பராபரமே...ஆனால் அழகிரியால் என் மதுரையின் இமேஜ் வன்முறை இமேஜ் க்கு போனதில் எந்த சந்தேகமும் இல்லை...அடிமட்ட மற்றும் படிக்காத கூலிகளை கூட திரு.அழகிரி அண்ணன் :)) அவர்கள் தொண்டன் மற்றும் அடியாட்களாய் மாற்றிய பெருமை என் தானை தலைவன் அழகிரியையே சாரும் என்பதை மீண்டும் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்...நன்றி கூர்...:))))))

ராஜ நடராஜன் said...

//மண்ணின் மைந்தர்களுக்கு உண்டான எல்லா விஷயங்களும் நாங்கள் பட்டு இருக்கிறோம் பாஸ்...:))) அழகிரியின் முன் மதுரை..அழகிரியின் பின் மதுரை ன்னு justify பண்ண எங்கள் மண்ணின் மைந்தர்களின் சாபங்கள்..குமுறல்கள் நிறையவே இருக்கு...//

முழுப்பின்னூட்டத்தையும் அடைப்பானில் போட்டு அதற்கு இணையாக பதிலும் சொன்னால் கூகிள் சண்டைக்கு வாரார்.அதனால் மேலே உள்ளவை மட்டும் குறிப்பாக கூர் சார்பாக:)

நீங்க சொல்லும் அழகிரிக்கு முன் மதுரை அழகிரிக்கு பின் மதுரை என்பதில் மதுரை வட்டார வழக்கும்,வாழ்க்கை முறையும் அறிந்தவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

எனக்கு இருக்கும் கேள்வியே ஒரு தனி மனிதனைச் சார்ந்த கூட்டம் புஜ பலத்திலும்,பண பலத்திலும் வலிமையானதாகி விட்டதென்று வைத்துக்கொண்டாலும் இந்த தேர்தல் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதனை மாற்றி அமைக்குமா?

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

முழு பின்னூட்டங்களையும் வாசிச்சிட்டேன். மகுடம் சூடினது ஜோதிஜி மறு பெயர் வைத்த மங்கம்மாதான் :)...

எப்படிங்க இப்படி. அதுவும் மதுரையில இருந்திட்டே இப்படி? அந்த மண்ணுக்கின்னே ஒரு வீரம் இருக்குமோ.

நிறைய விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னூட்டவாதிகள் அனைவருக்கும் நன்றிங்கோ!!

Ram said...

அட சண்டைபுடுக்கிறீங்க போல.. நான் ஈழத்தமிழனல்ல ஆனால் ஈழத்தை பற்றி பேசுவேன்.. அதுபோல தான் மதுரையும்.. நான் மதுரையும் என் ஊராக நினைப்பதாலே பேசினேன்.. நான் மதுரை அற்றாலும் என் சகாக்கள்(உங்களையும் சேத்து) பலர் மதுரையை சேர்ந்தவர்கள் தான்.

//மதுரை தான் அழகிரியை மாத்தி விட்டதோ னு சொன்ன கருத்துகளில் இருந்து புறப்பட்டது தான்//

ஆம்.. உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை.. ஆனால் ஒரு இடத்தில் //இந்த புத்தி வெளியூர் காரனுக்கு தான் சாமி இருக்கும்// இந்த இடத்தில் அந்த வெளியூர் காரனில் நானும் வருவேன் அல்லவா.. அப்படியானால் நான் பேசலாம் தானே!!

உங்களுக்கு உங்கள் மண்ணின் மீது அளவற்ற பாசம் உள்ளது எமக்கு தெரியும்.. நான் மேல் கூறியவாறே எம் எதிர்ப்புகளை கொட்டினேன்..

//அழகிரியின் முன் மதுரை..அழகிரியின் பின் மதுரை ன்னு justify பண்ண//

அட.. எங்கள விட உங்களுக்கு துன்பம் அதிகம் தான்.. நான் இங்க ஒண்ணும் அழகிரிய தலையில தூக்கி வச்சி ஆடலையே.! அழகிரிக்கு முன் தமிழகம், பின் தமிழகம்னு கூட பிரிக்கலாமே!!

//அழகிரி பொறந்த சென்னையை சொல்வதில் எந்த தப்பும் என் சைடு தெரியலை..//

அட அவர பத்தி பேசுங்க.. சென்னையில நாங்களும் இருக்கோம்ல..

எவ்வளவோ விசயம் தெரிந்த உங்களுக்கு இது தெரியாமல் இருக்காது.. மனிதர் மனமே அவன் வாழ்க்கை மார்க்கம்.. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்தவன் மனம் என்றுமே சுத்தமானதாக தான் இருக்கும் என சொல்வது நியாயமில்லை..

மற்றபடி இங்கே நான் பதிவு செய்த சில எதிர்கருத்துகள் தங்கள் பதிவில் நான் எப்போதும் செய்வதுதான்.. ஒரே ஒரு விசயம் நான் கேட்டுகொண்டது மதுரையை ஏற்ற எங்களை தூற்றாதீர்கள் என்று தான்.. இப்போது என்னை ஓரமாக உக்காந்து வேடிக்கை பார்க்க சொன்னதும் மனதுக்கு வருத்தமா இருக்கு.. உங்க கஷ்டமெல்லாம் எனக்கு புரியாதுன்னு நீங்க சொல்றது வருத்தமா இருக்கு..

மீண்டும் சொல்கிறேன்.. உங்களிடத்து இருந்து இப்படியொரு வார்த்தை எதிர்பார்க்கவில்லை..

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டம் பின்னூட்ட காப்பி பேஸ்ட்டில் நிகழ்ந்த கோளாறால் என்னால் நீக்கப்பட்டது.

ஆனந்தி.. said...

கூர்...நான் உணர்ச்சி வசப்பட்டு தான் உங்களை ஓரமா இருந்து பாருங்க சொன்னேன்னு சொல்லி எஸ்கேப் ஆய்க்க விரும்பலை...:)) காதால் மட்டுமே கேட்டு அறியும் உங்கள் உள்ளூர் பிரச்சனைக்கு நான் கட்டாயம் சிறிதும் உள்ளே வர மாட்டேன் எப்பவும் கூர்...என் ஊர் பிரச்சனைகளை நீங்கள் உன்னிப்பாய் உணர முடிஞ்சு இருக்காது என்பதால் தான் ஓரமாய் பாருங்கன்னு சொன்னேன்...என்ன சொல்றிங்க கூர்...சென்னை வாசி னு பொதுவாய் சொல்லும்போது உங்களையும் சேர்த்ததா கோவம் வருவது மண் பற்று என்றால்...என் மண்ணை பற்றி தவறாய் புரிந்து கொள்ள படும்போது சென்னை என்ன எந்த ஊரில் அண்ணன் அவர்கள் பிறந்து இருந்தாலும் அப்படி தான் சொல்வேன் என்று மீண்டும் கூறி கொள்கிறேன் கூர் சகோ...மிக்க நன்றி வணக்கம்....:)))

ராஜ நடராஜன் said...

//ராஜ நட,

முழு பின்னூட்டங்களையும் வாசிச்சிட்டேன். மகுடம் சூடினது ஜோதிஜி மறு பெயர் வைத்த மங்கம்மாதான் :)...

எப்படிங்க இப்படி. அதுவும் மதுரையில இருந்திட்டே இப்படி? அந்த மண்ணுக்கின்னே ஒரு வீரம் இருக்குமோ.

நிறைய விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னூட்டவாதிகள் அனைவருக்கும் நன்றிங்கோ!!//

தெகா!ஜோதிஜி சொன்ன மாதிரி ”மங்கம்மா ஆனந்தி” என இனி மேல் பதிவுலகம் அழைக்க கடவதாக:)

மதுரை மண்ணின் துணிச்சல்!!!

ராஜ நடராஜன் said...

தம்பி கூர்மதியன் said...
//அட அவர பத்தி பேசுங்க.. சென்னையில நாங்களும் இருக்கோம்ல..//

ஆனந்தி.. said...
//என் மண்ணை பற்றி தவறாய் புரிந்து கொள்ள படும்போது சென்னை என்ன எந்த ஊரில் அண்ணன் அவர்கள் பிறந்து இருந்தாலும் அப்படி தான் சொல்வேன் என்று மீண்டும் கூறி கொள்கிறேன் கூர் சகோ...மிக்க நன்றி வணக்கம்....:)))//

கூர்!வணக்கம் சொல்லிடலாமா?தொடரலாமா?

நாம எதிர்பார்த்த பிரகாஷ் எஸ்கேப் ஆயிட்டாரே!

Ram said...

அட வணக்கத்த போடுங்கப்பா.!!!

இதுல கேள்விகள் வேற..

வேற ஏதாச்சும் புதுசா கண்டுபிடிச்சு சண்டை போடலாம்..

Prakash said...

Sorry, I've not checked this post after my comments.

Alagiri might have rough personality and people around him might misuse his name.

If I remember, some time back he gave advertisement in Papers about this.

Some Allakai's might be doing over acting to get his attention.

@ Anandhi told that particular caste people are encouraged to become hit man of Alagiri.

Some time back, Madurai City politics was dominated by Yadava, Vellalar and Sourashtira community in large.

It was ADMK's 91-96 rule that changed the equation completely and more migrant people from rural Madurai dis & nearby areas start settling in the City.

Thus the domination on Mukulathor has started in the Madurai City's politics and they felt ADMK is their party.

To change that, Alagiri started encouraging that community into DMK.

Even for this 2011 elections, ADMK has given all tickets they are contesting in Madurai Dt ONLY to Mukullathores. Whereas DMK has given 3 to Mukulatore, 1 to Muslim, 1 to Naikar and 1 to Muthuraja (Ambalam), the Madurai Mayar belongs to Vellalar community.

So, in case ADMK wins, In place of Alagiri some Dinakaran or Diwakaran might come.

Also, as Alagiri has taken the MP seat of Madurai, communities used to be MPs in the past (Rambabu of Sourashtira etc) might felt sidelined by his domination.

Aside, out of 160 seats where ADMK is contesting, has given only one ticket to a Muslim Candidate, whereas DMK, which is contesting only in 119 seats, has given 4 tickets to Muslims.

Also ADMK has not given any seat to Christian Candidates (Completely Not sure).

Thus DMK is accommodating various groups and communities, where as ADMK is accommodating ONLY the majority / dominant communities (In that District).

Prakash said...

On Sagayam & other Honest Rajs,

So, you are saying that DMK & MK family harasses Honest Officers and if Jaya Comes to power, she will immediately honor all Honest Rajs (Sagayam, Umasankar etc)and post them in Key & Critical Govt positions like Internal Secretary / Chief Sec etc.

Sure, in Jaya's rule these Hosnest Rajs shall be given ONLY dummy posts like Sec in Animal Husbandry or in Police Training Collage. At least DMK Govt gave them ELCOT MD & Namakal Collector posts.

Jaya shall give important posts only to 2 communities like Haribaskar who helped to buy Govt TANSI Land.

And all IAS/IPS officers belonging to other communities and minority religions (Umasankar & Sagayam seems to be Christians) shall be given dummy posts.

ஜோதிஜி said...

இது ஒரு தகவலுக்காக

தம்பி கூர்மதி சொன்னபடி ஏன் மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் வரவில்லை என்பதை வைத்து இதில் பின்னோட்டமாக்கி வெளியிடும் போதும் இங்கே மின்சாரம் டம்.

அதே மூச்சில் மறுபடியும் அந்த 400 வார்த்தைகள் எழுத இப்போது நேரம் இல்லை. பதிவில் எழுத முயற்சிக்கின்றேன்.

கலைஞருக்கு நன்றி.

Prakash said...

And two more ways how Jaya treat Honest Officers are,

1. Acid Attack (On Chandralekha IAS)
2. Kanja Case (on Son-In-law of High Court Judge)

http://www.india-today.com/itoday/20010730/state-tn3.shtml

http://www.indianexpress.com/ie/daily/19971103/30750723.html

I really feel shame that Karunaidhi & Alagiri don't know how to deal with Honest Officers :)))

Ram said...

@ப்ரகாஷ்:அட ஏங்க மூச்சு விடாம பேசுறீங்க..

இங்க நாங்க யாரும் ஜெ., சூப்பரு.. நல்ல ஆட்சியாளர்னு சொல்லல.. அழகிரி சரியில்லனு தான் சொல்றோம்.. அழகிரி நல்லவர்னு உங்க தரப்பு வாதங்களை வைக்க வேண்டிய இடத்தில் ஜெ., கெட்டவர்னு வச்சிகிட்டு இருக்கீங்க..

@ஜோதிஜி:

//வெளியிடும் போதும் இங்கே மின்சாரம் டம்.//

அட இப்படி சொல்லாதீங்க.. கலைஞர குத்தம் சொல்றதா சொல்லுவாங்க.. எனக்கான பதில் அடித்தபோது மின்சாரம் தட்டுபட்டதை நினைத்து வருந்துகிறேன்..

உங்கள் பதிவை எதிர்நோக்குகிறேன்..

ராஜ நடராஜன் said...

//இது ஒரு தகவலுக்காக

தம்பி கூர்மதி சொன்னபடி ஏன் மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் வரவில்லை என்பதை வைத்து இதில் பின்னோட்டமாக்கி வெளியிடும் போதும் இங்கே மின்சாரம் டம்.

அதே மூச்சில் மறுபடியும் அந்த 400 வார்த்தைகள் எழுத இப்போது நேரம் இல்லை. பதிவில் எழுத முயற்சிக்கின்றேன்.

கலைஞருக்கு நன்றி.//

என்றைக்கு ஆட்சிக்கு தி.மு.க வந்ததோ அன்றைக்கே மாணவர்கள் ஆட்சிக்கு வருவது குழி தோண்டிப்புதைக்கப்பட்டு விட்டது.மணிரத்னத்தின் யுவா படத்தில் பாரதிராஜாவின் பாத்திரம் கருணாநிதிதான்.மாணவர்களுக்கு எதுக்கு அரசியல்.அதுதான் நாங்க இருக்கோமில்ல!

இந்திப்போராட்டமே மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் களம்தான்.அதற்குப் பின் சீனிவாசனுக்கு மட்டும் சீட் கொடுத்து காமராஜரை தோற்கடித்தது மட்டுமே மிச்சம்:(

மகனுக்கு,பேரனுக்கெல்லாம் இந்தி கத்துக்கொடுத்து விட்டு நமக்கெல்லாம் தமிழ் கத்துக்கொடுத்ததற்காகவது கருணாநிதிக்கு நன்றி சொல்வோம்:)

ராஜ நடராஜன் said...

//@ப்ரகாஷ்:அட ஏங்க மூச்சு விடாம பேசுறீங்க..

இங்க நாங்க யாரும் ஜெ., சூப்பரு.. நல்ல ஆட்சியாளர்னு சொல்லல.. அழகிரி சரியில்லனு தான் சொல்றோம்.. அழகிரி நல்லவர்னு உங்க தரப்பு வாதங்களை வைக்க வேண்டிய இடத்தில் ஜெ., கெட்டவர்னு வச்சிகிட்டு இருக்கீங்க..//

கூர்மதியன்!நான் சொல்லவேண்டியதை பின்னூட்டக்காரர் பிரகாஷ்க்கு(இப்படித்தாங்க பிரகாஷ் உங்களை விளிக்க முடியும்...நீங்கதான் பேருக்குன்னு கூட ஒரு பதிவும் போடலையே:))வெளிப்படித்தியதற்கு நன்றி.

On my behahlf thanks Mr.prakash to utter a few words.On the seat sharing politics we can discuss that in some other article if Jaya comes to power and how Madurai is going to emerge.Here let's discuss Mr.Alagiri's attidude and his undemocratic approach towards election.My stand is not to pour venom on Alagiri nor support Jaya.Let true democracy prevail in Tamilnadu.

See,even after all his nonsense yesterday he is decalaring that he is going to court to punish Sagayam.He is acting like,Sand crab wont sit on the pit proverb.

ராஜ நடராஜன் said...

//And two more ways how Jaya treat Honest Officers are,

1. Acid Attack (On Chandralekha IAS)
2. Kanja Case (on Son-In-law of High Court Judge)//

I strongly believe Jaya cannot play the same old game as the new play ground is not anymore of 2k and earlier.