Followers

Thursday, July 3, 2008

கண்ணா!கண்ணா நெருப்பு நரிக் கண்ணா!

முதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவத்தில் ரொம்ப சந்தோசமா இருக்கே!ஹி...ஹி.வேற ஒண்ணுமில்லீங்க.நெருப்பு நரி 3.0 தரவிறக்கிய சூட்டோட பிரேம்ஜிக்கு கமலின் தசாவதாரப் பேட்டி பற்றிய பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டாச்சு.

பெரிய தலைகள் நிறைய பேருக்கு பல விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கு.பதிவுகளின் போது அப்ப அப்ப கண்டுக்கிறேன்.இப்ப ரவிக்கு மட்டும் ஒரு பெரிய நன்றி.காரணம் அவரது பின்னூட்டமே நெருப்பு நரி 3.0க்கு தூண்டுதல்.அப்புறம் நிறைய ரவியார்கள் வலம்வருகிறார்கள்.நீங்க எந்த ரவின்னு கொஞ்சம் காதுல வந்து கூவிட்டுப் போறது?

நெருப்பு நரி சும்மா ஜிவ்வுன்னு இருக்குது.தமிழ் எழுத்துக்களை இரண்டு கண்ணிலேயும் ஒற்றி எடுத்துக் கண்ணால் சலனப்பட்டுப் போகிறேன்.

2 comments:

பிரேம்ஜி said...

நம்ம நெருப்பு நரி குழுவில சேர்ந்தாச்சு.அசத்துங்க நடராஜன்.நெருப்பு நரி சூப்பர் தான்.

ராஜ நடராஜன் said...

முதல் போணியே உங்களுடையதுதான்.நன்றி.