Followers

Showing posts with label வளைகுடா செய்தி. Show all posts
Showing posts with label வளைகுடா செய்தி. Show all posts

Wednesday, May 9, 2012

வளைகுடாவில் பணிபுரிவோர் பிரச்சினைகள்!

 வளைகுடா நாடுகளில் அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்கள்,மற்றும் வாகன ஓட்டுநர்கள்,ஏனைய பணியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரேபிய நாடுகளுக்கான மனித உரிமை பற்றிய விமர்சனங்களும் அரேபிய நாடுகளின் விமர்சனங்களில் ஒன்றாக  எழுகிறதென நினைக்கிறேன்.

இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பணிப்பெண்களும் அதிலும் குறிப்பாக இலங்கை,பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் எனலாம்.அனைத்தும் உடல் ரீதியான அத்துமீறல்களா என்றால் இல்லையெனலாம்.பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாக விளங்குவது மொழி எனலாம்.கடந்த மாதம் உடன் பணி புரியும் செக்ரட்டரி புதிதாக தனது வீட்டுப்பணிக்கு சேர்த்த பெண்னுக்கு மொழி தெரியவில்லையென்றும் சொல்வதையும் விளங்கிக் கொள்வதில்லை யென்றும் சொல்லி திலானா என்ற பெண்ணிடம் பேச சொல்ல,திலானா தான் சிங்களப்பெண் என்றும் தமிழ் கதைக்கத் தெரியுமென்றும் தமிழில் சொல்லியது அந்தப் பெண்.தான் இலங்கையிலிருந்து வந்தே சில தினங்கள் என்றும் சிங்களம்,தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது என்றும் செக்ரட்டரி வீட்டில் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை என செக்ரட்டரி அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை திலானாவிடம் சொல்ல சொல்ல நான் மொழி பெயர்த்து சொன்னேன்.

இரண்டு நாள் கழித்து செக்ரட்டரி அந்தப் பெண்ணுக்கு சொல்வதும் புரிவதில்லை,வேலையும் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது வாங்கின இடத்துலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று சொல்ல மொழி பிரச்சினையென்றால் ஏன் பிலிப்பைன்ஸ் பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் கேட்க பிலிப்பினோவுக்கு காசு சம்பளம் அதிகமாக தரனுமில்ல என்று செக்ரட்டரி சொல்ல மேற்கொண்டு நான் ஒன்றும் சொல்ல வில்லை.அதன் பின் என்னிடம் மொழி பெயர்க்க உதவிக்கு வராத காரணத்தால் திலானா இன்னுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக விற்கப்பட்டிருக்க கூடும். என நினைக்கிறேன்.

எனவே சிங்கள மொழி மட்டும் பிரச்சினையல்ல.பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அரபிக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிரச்சினைதான்.சில வீடுகளில் தமது கலாச்சாரத்தோடு மேற்கத்திய நடை,உடை,பாவனைகளை கடைப்பிடிப்பவர்கள் ஆங்கில அறிவு கொண்டவர்களாக இருப்பதால் பிலிப்பைன்ஸ் பெண்களின் பணி புரியும் முறை பிடித்துப்போவதாலும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாத பெண்களும் பணிபுரிகிறார்கள்.இன்னும் சிலருக்கு மொழி பிரச்சினையில்லையென்றாலும் கூட வாகன ஓட்டுநர்,பணிப்பெண்களுக்கு நீண்ட நேர பணிநேரம் என்ற குறைகளும் உண்டு.

எனவே உடல் ரீதியான அத்துமீறல்கள்,மொழிப் பிரச்சினை,நீண்ட வேலை நேரம்,குறித்த தேதியில் சம்பளம் கிட்டாமை மற்றும் குறைந்த சம்பளம்,ஓரிரு வருடங்கள் பணிபுரிந்தாலும் சம்பள உயர்வு இன்மை என்ற பல காரணங்களால் பணிப்பெண்கள் தனது பாஸ்போர்ட்டைக் கூட அரபிகளிடமிருந்து வாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவதோ அல்லது தமது தூதரகத்தில் தஞ்சம் புகுவதோ அல்லது சரியான டாகுமென்டேசன் இல்லாமல் போலிசிடம் சிக்கிக்கொள்வதோ தொடர்ந்து நிகழும் ஒரு சம்பவமாக உள்ளது.இதில் இந்திய தூதரகமும் விதி விலக்கு அல்ல.

வீடுகளில் வேலை செய்பவர்கள் தவிர நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் கூட விசாவை புதுப்பிக்காமல் தங்குவதும்,நிறுவனத்தில் பணிபுரியாமல் சுயமாக சில அரபிகளுக்கு பணம் தந்து விசா வைத்துக்கொண்டு சட்டத்துக்கு விரோதமாக டாக்சி ஓட்டுவதும் போன்றவை நிகழ்கின்றன.மேலும் வளைகுடா நாடுகளுக்கு பணிக்குப் போனால் அந்த நாட்டு சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காமல் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது,தாய்லாந்து லாட்டரி,அங்கீகாரமில்லாமல் துணிமணிகள்,வாட்ச்,பெர்ஃப்யூம்,திருட்டு டிவிடி விறபனை செய்து போலிஸில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு.

ஒரு புறம் ஆசிய நாடுகளிலிருந்து வளைகுடாவில் பணிபுரிபவர்களின் குறைபாடுகள்,இன்னுமொரு பக்கம் பெண்களுக்கான மனித உரிமை மீறல்கள் என ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே வ்ளைகுடாவின் உழைப்பாளர் வர்க்கத்தின் பிரச்சினைகள் உள்ளது.முன்பே  ஆசிய நாடுகளின் தூதரகங்கள் செய்ய தவறும் கடமைகள் பற்றியெல்லாம் பதிவாகவோ பின்னூட்டமாகவோ கருத்து வெளியிடூ செய்தாகி விட்டது.அம்னெஸ்டி போன்ற மனித உரிமை கழகங்கள் ஐ.நாவுக்கான ஆண்டு அறிக்கை தந்தாலும் கூட வளைகுடா மாற்றங்கள் ஆமை வேகத்திலோ அல்லது உறக்க நிலையிலேயே காணப்படுகின்றது.

சரி பிரச்சினைகள் இருந்தும் ஏன் தமது நாட்டுக்குப் போக மறுக்கிறார்கள் என்றால் முதலாவதாக பொருளாதார ரீதியாக அனைத்து ஆசிய நாடுகளும் கவிழ்ந்து விடுகின்றன.மேலும் நம்மூரில் செய்யத் தயங்கும் துப்புரவு வேலைகளை இங்கே செய்து விட முடிகிறது.ஆடு,ஒட்டகத்தை மேய்த்தாலும் உழைப்புக்கான ஊதியம் ஆசிய நாடுகளின் விகிதாச்சாரத்தை விட அதிகம்.ஒப்பீட்டளவில் சிறந்த திறந்த சந்தைப் பொருளாதாரம், நிர்வாகம், கட்டமைப்புக்கள்  போன்றவைகள் முக்கிய காரணங்கள்.

மேலும் புரிதலுக்கு...

இந்த பதிவுக்கான கரு இங்கே

http://news.kuwaittimes.net/2012/05/08/govt-repatriates-240-sri-lankan-domestic-workers-domestic-labor-law-key-to-resolving-issues-in-kuwait/

Monday, April 26, 2010

லங்கன் விழா கலாட்டா

பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாமலே அமிதாப்பச்சன் IIFA பற்றியும்,எங்க பிரச்சினைய கவனிக்கவே நேரமில்லை,ஊர் சுத்துறவங்களுக்கு ஓட்டு போடறதுதான் ஒரு குறையான்னு நவின் சாவ்லா கேட்கிறாரே என்று வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமைன்னு இரண்டு இடுகை போட்டாச்சு.எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்கி எழுந்து வடிச்சு கொட்டிகிட்டு நேரா ஐ.பி.எல் மேட்ச் பார்க்க போயிட்டாங்க.பெரும்பாலோர் போட்டி மும்பய்ங்கிறதால சச்சின் அணிதான் ஜெயிக்கும்ன்னு காசு கட்டியிருப்பாங்க.அப்புறம் சீட்டு போடறவனுக்கு என்ன மதிப்பு?சென்னை கிங்க்சா பின்ன ஜங்சா.சென்னை கிங்க்ஸ் ஜெயிச்சு முடிஞ்ச கையோட லலித் மோடிக்கு கடிதாசி கொடுத்துட்டாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்கிறவங்களுக்கு தெரியாத ஒரு கதை சொல்லப் போறேன்.

தற்போது ஐ.நா மனித உரிமை கழகத்தின் முதல்வர் நவி பிள்ளை வளைகுடா சுற்றில் உள்ளார்.

முதல் நாள்
UN raps Gulf on Worker's rights,GCC urged to end sponsor system,lift curbs on women
என்று அறிக்கை கொடுத்தாச்சு.

அடுத்த நாள்
Pillay Sees rights 'advances' in Gulf
என்று ஒரு பத்திரிகை செய்தி வந்துச்சு.

அதற்கும் அடுத்த நாள்
Pillay Chides Gulf over women's employement
என்று இன்னுமொரு செய்தி.

மேல்மட்டப் பேச்சு வார்த்தைகள் இப்படி ஒரு புறம் நிகழ இனி இங்கே நிகழ்ந்த லங்கா விழாவை பற்றி லங்காவின் டெய்லி மிரர் வளைகுடா செய்தியை சுட்டு விட்டு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

Kuwaitis disrupt lankan event

A massive Sri Lankan celebration in Kuwait was interrupted after angry Kuwaitis claimed it violated Islamic rules. More than 5,000 Sri Lankans, including K.S.C. Dissanayake, Sri Lankan ambassador to Kuwait, had to leave the Jahra stadium after Kuwaiti Islamists invaded the field and pressed organisers to suspend the celebration and threatened to escalate the tense situation.

Negotiations between the event organisers, the police and the angry Kuwaitis failed to reach a compromise. The protesters said that the presence of men and women at the stadium and the playing of music on a Friday afternoon made the celebration “unacceptable” for not respecting Islamic values.

The ambassador, seeking to end the deadlock peacefully, urged his compatriots to cancel the celebrations two hours before schedule and to vacate the premises.

The police said that the Sri Lankans had all the necessary permits and did not break the law. Sri Lanka is organising on Monday a “Sri Lanka Culture Week” in Kuwait to help promote the country as a tourist and cultural destination. The event is hosted by Kuwait’s National Council for Culture, Arts and Letters and co-sponsored by the Sri Lanka Tourism Promotion Bureau and the Sri Lankan Airlines.

A28-member cultural troupe will perform 'Sri Lak Rangana', a fusion of historical and contemporary dance forms.

The week will also feature a handicraft exhibition of products, bronze items, masks, gems, jewellery and other ornaments while a food festival will introduce Sri Lankan cuisine to Kuwait residents. (Gulf News)

இனி உண்மைகள் என்னவாக இருக்குமென்று பார்ப்போம்.

ஒவ்வொரு நாட்டு கலாச்சார விழாக்கள் உள்துறையின் அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட அரங்குகளிலோ அல்லது பொது வெளிகளிலோ நிகழ்கின்றன.இந்தியர்கள் அதிகம் வாழும் இடமான ஜிலிப் என்ற இடத்தில் பொதுவெளிகளில்(Garden) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட நடிகை ரேவது மேடம் சில முறை கலந்து கொண்டிருக்கிறார்.எனக்கு தெரிந்தும்,சில நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்த அனுபவம் கொண்டும் வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்,உள்துறையில் ஒருவர் தவிர எந்த குவைத் குடிமகனும் வந்து எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்வதுமில்லை.வந்து கலாட்டாக்கள் செய்வதுமில்லை.பொது வெளி நிகழ்ச்சிகளுக்கும் கூட ஒன்று இரண்டு வாலிபர்கள் வந்து அவர்களுக்குள்ளேயே ஊமக்குசும்பு செய்து விட்டு விலகி விடுவார்கள்.மொழி தெரியும் பட்சத்தில் இவர்களையும் சிரித்து சமாளித்து விட இயலும்.

சில லங்கா விழாக்கள் கூட முந்தைய கால கட்டங்களில் ஓட்டல்களில் நிகழ்த்தப்பட்டதுண்டு.அதற்கென்று குறுகிய கூட்டம் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள்.இதுவரையிலுமில்லாத வகையில் இந்த முறை 5000 பேர் திரளும்படியான திட்டத்தில் பல வீட்டுப் பணிப்பெண்களையும்,ஏனைய பணியாளர்களையும் திரட்டியதற்கு லங்கா புது வருட விழா கொண்டாட்டம் என்பது காரணமா என தெரியவில்லை.விழாவிற்கான ஸ்டேடியம் நகரை தாண்டிய ஒதுக்குப்புறமான இடம் என்பதால் உள்துறையும் அனுமதி வழங்கியிருக்க கூடும்.ஆனாலும் ஊரின் எல்லைப்புறமாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் மதிய நேரத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டியதும், இசையென்ற சப்தம் மைதான வெளியில் சிலரின் கவனத்தை ஈர்த்திருந்திருக்கலாம்.கலாச்சார விழாவாக இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது கொஞ்சம் ரிலாக்ஸாகிக் கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பம் நிகழாமல் இவர்கள் கலைந்து போனது வருத்தத்திற்குரியது.லங்கா தூதரகம் விழா கொண்டாடாத இத்தனை வருடங்களில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பணிபுரியும் பெண்களும், ஆண்களும் தனித்தனியாகவோ நண்பர்கள் கூட்டமாகவோ சில மணி நேரங்கள் நகரின் மத்தியில் சர்ச், போஸ்டாபிஸ், நகைக்கடை, துணிக்கடை, பஸ் ஸ்டாண்ட், ஓட்டல், மைதானம் என கலந்துரையாடி பிரிகிறார்கள். வெள்ளிக்கிழமை கூடும் கூட்டமென்பதால் காவல்துறை வாகன, கூட்ட நெரிசல்களை தவிர்க்க மட்டுமே உதவுகிறார்கள்.

லங்கா கைவினைப்பொருட்கள்,பித்தளை,வெண்கலம்,மற்றும் ஆபரணங்கள் இந்திய கலாச்சாரப் பொருட்களைப் போன்றே லங்கா பொருட்களும் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை.சென்னையில் பாயாவும்,இடியாப்பமும் ஜோடிங்கிற மாதிரி இடியாப்பமும்,மிளகாய் கரைச்சலும் ஏகப் பொருத்தம் லங்காவுக்கு.காரம் சாப்பிடும் நாமே அலறி அடிச்சுகிட்டு ஓடும் போது இந்த ஊர்கார மக்களுக்கு லங்கா உணவு சிபாரிசு செய்யறாங்களாம்:)