Followers

Tuesday, April 27, 2010

கமலஹாசனின் தேடித் தீர்ப்போம் வா!

பாமா பதிப்பகம் வெளியீட்டில் கமலஹாசனின் கருத்தாக தொகுக்கப்பட்ட சிறிய நூல்.பாமா பதிப்பகத்தினிடம் அனுமதி பெற்று இந்த புத்தகத்தை கணினியில் ஏற்றி விடலாமென்று பார்த்தால் அவர்களது இமெயில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.முழு புத்தகமுமே 96 பக்கங்கள் என்பதால் ஒவ்வொரு தலைப்பையும் ஒவ்வொரு இடுகையாக போட்டு விடலாம்.உலகில் பரந்து வாழும் தமிழர்களுக்கு ஒரு வாசிப்பின் இனிமை கிடைக்கும் என நினைக்கிறேன்.இதனால் காப்புரிமை பிரச்சினைகள் ஏதாவது வருமா என புத்தகம் பதித்த பதிவர்கள் மற்றும் ஏனைய சட்டமறிந்தவர்களின் ஆலோசனையை வேண்டுகிறேன்.இருந்தாலும் தற்போது பாமா பதிப்பகம் S.பாஸ்கர் அவர்களின் முகவுரையை இடுகைக்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்.

இனி தேடித்தீர்ப்போம் வா முகவுரை:

இந்தியனே!

தேடினால்தான் விடை கிடைக்கும்.ஆனால் அந்த தேடலுக்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் இன்றைய நிலை.ஆனால் திரு.கமல் அவர்கள் அதில் கொஞ்சம் வித்தியாசமானவர்,எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அது அவருக்கு உடன்பாடான பட்சத்தில் வெளிப்படையாக மற்றவர்களுக்குக் கூறி அதில் ஒரு சதவிகிதமாவது அவர்களை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்(Seems to be green signal is on my way)

"தேடித் தீர்ப்போம் வா" என்ற இந்த கட்டுரைத் தொகுப்பில் பல நல்ல விசயங்களை,பல பயனுள்ள நிகழ்ச்சிகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.சராசரி தமிழனாக இல்லாமல் சிறந்த 'இந்தியனாக' இருந்து நமக்குப் பலவகையிலும் பெருமை தேடித்தந்த சிறப்பு திரு.கமல் அவர்களைச் சேரும்

நாம் எச்சில் துப்புவதாலா அசுத்தம் ஏற்படுகிறது என ஒவ்வொருவரும் நினைத்து துப்ப ஆரம்பித்தால் சாக்கடைகளுக்கு மத்தியில் தான் நாம் வாழும் நிலை வரும்.எனெவே எச்சிலை விழுங்க கற்றுக்கொள்ளுங்கள்.இது நம்மைச் சுற்றி ஏற்படும் அசுத்தத்தை சுத்தப்படுத்தும் முதல்படி எனப் பட்டவர்த்தனமாகச் சொல்லும் வேகம் திரு.கமல் போன்றவர்களிடம் மட்டுமே இருக்கிற திறமையாகும்.

இந்த சிறந்த அற்புதமான புத்தகத்தை வெளியிடும் உரிமையைக் கொடுத்த திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


என்றென்றும் அன்புடன்

S.பாஸ்கர்

பாமா பதிப்பகம்.

(Courtesy Bhama pathippagam)


பின்னூட்டங்களின் ஆலோசனை மற்றும் திரு.பாஸ்கர் தொடர்பிலான யாராவது கருத்துரையின் படி தொடர்வது தொடரும்.நன்றி.

Monday, April 26, 2010

லங்கன் விழா கலாட்டா

பக்கத்து வீட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாமலே அமிதாப்பச்சன் IIFA பற்றியும்,எங்க பிரச்சினைய கவனிக்கவே நேரமில்லை,ஊர் சுத்துறவங்களுக்கு ஓட்டு போடறதுதான் ஒரு குறையான்னு நவின் சாவ்லா கேட்கிறாரே என்று வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமைன்னு இரண்டு இடுகை போட்டாச்சு.எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை நல்லா தூங்கி எழுந்து வடிச்சு கொட்டிகிட்டு நேரா ஐ.பி.எல் மேட்ச் பார்க்க போயிட்டாங்க.பெரும்பாலோர் போட்டி மும்பய்ங்கிறதால சச்சின் அணிதான் ஜெயிக்கும்ன்னு காசு கட்டியிருப்பாங்க.அப்புறம் சீட்டு போடறவனுக்கு என்ன மதிப்பு?சென்னை கிங்க்சா பின்ன ஜங்சா.சென்னை கிங்க்ஸ் ஜெயிச்சு முடிஞ்ச கையோட லலித் மோடிக்கு கடிதாசி கொடுத்துட்டாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்கிறவங்களுக்கு தெரியாத ஒரு கதை சொல்லப் போறேன்.

தற்போது ஐ.நா மனித உரிமை கழகத்தின் முதல்வர் நவி பிள்ளை வளைகுடா சுற்றில் உள்ளார்.

முதல் நாள்
UN raps Gulf on Worker's rights,GCC urged to end sponsor system,lift curbs on women
என்று அறிக்கை கொடுத்தாச்சு.

அடுத்த நாள்
Pillay Sees rights 'advances' in Gulf
என்று ஒரு பத்திரிகை செய்தி வந்துச்சு.

அதற்கும் அடுத்த நாள்
Pillay Chides Gulf over women's employement
என்று இன்னுமொரு செய்தி.

மேல்மட்டப் பேச்சு வார்த்தைகள் இப்படி ஒரு புறம் நிகழ இனி இங்கே நிகழ்ந்த லங்கா விழாவை பற்றி லங்காவின் டெய்லி மிரர் வளைகுடா செய்தியை சுட்டு விட்டு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

Kuwaitis disrupt lankan event

A massive Sri Lankan celebration in Kuwait was interrupted after angry Kuwaitis claimed it violated Islamic rules. More than 5,000 Sri Lankans, including K.S.C. Dissanayake, Sri Lankan ambassador to Kuwait, had to leave the Jahra stadium after Kuwaiti Islamists invaded the field and pressed organisers to suspend the celebration and threatened to escalate the tense situation.

Negotiations between the event organisers, the police and the angry Kuwaitis failed to reach a compromise. The protesters said that the presence of men and women at the stadium and the playing of music on a Friday afternoon made the celebration “unacceptable” for not respecting Islamic values.

The ambassador, seeking to end the deadlock peacefully, urged his compatriots to cancel the celebrations two hours before schedule and to vacate the premises.

The police said that the Sri Lankans had all the necessary permits and did not break the law. Sri Lanka is organising on Monday a “Sri Lanka Culture Week” in Kuwait to help promote the country as a tourist and cultural destination. The event is hosted by Kuwait’s National Council for Culture, Arts and Letters and co-sponsored by the Sri Lanka Tourism Promotion Bureau and the Sri Lankan Airlines.

A28-member cultural troupe will perform 'Sri Lak Rangana', a fusion of historical and contemporary dance forms.

The week will also feature a handicraft exhibition of products, bronze items, masks, gems, jewellery and other ornaments while a food festival will introduce Sri Lankan cuisine to Kuwait residents. (Gulf News)

இனி உண்மைகள் என்னவாக இருக்குமென்று பார்ப்போம்.

ஒவ்வொரு நாட்டு கலாச்சார விழாக்கள் உள்துறையின் அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட அரங்குகளிலோ அல்லது பொது வெளிகளிலோ நிகழ்கின்றன.இந்தியர்கள் அதிகம் வாழும் இடமான ஜிலிப் என்ற இடத்தில் பொதுவெளிகளில்(Garden) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கூட நடிகை ரேவது மேடம் சில முறை கலந்து கொண்டிருக்கிறார்.எனக்கு தெரிந்தும்,சில நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்த அனுபவம் கொண்டும் வரவழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்,உள்துறையில் ஒருவர் தவிர எந்த குவைத் குடிமகனும் வந்து எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்வதுமில்லை.வந்து கலாட்டாக்கள் செய்வதுமில்லை.பொது வெளி நிகழ்ச்சிகளுக்கும் கூட ஒன்று இரண்டு வாலிபர்கள் வந்து அவர்களுக்குள்ளேயே ஊமக்குசும்பு செய்து விட்டு விலகி விடுவார்கள்.மொழி தெரியும் பட்சத்தில் இவர்களையும் சிரித்து சமாளித்து விட இயலும்.

சில லங்கா விழாக்கள் கூட முந்தைய கால கட்டங்களில் ஓட்டல்களில் நிகழ்த்தப்பட்டதுண்டு.அதற்கென்று குறுகிய கூட்டம் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள்.இதுவரையிலுமில்லாத வகையில் இந்த முறை 5000 பேர் திரளும்படியான திட்டத்தில் பல வீட்டுப் பணிப்பெண்களையும்,ஏனைய பணியாளர்களையும் திரட்டியதற்கு லங்கா புது வருட விழா கொண்டாட்டம் என்பது காரணமா என தெரியவில்லை.விழாவிற்கான ஸ்டேடியம் நகரை தாண்டிய ஒதுக்குப்புறமான இடம் என்பதால் உள்துறையும் அனுமதி வழங்கியிருக்க கூடும்.ஆனாலும் ஊரின் எல்லைப்புறமாக இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நாளில் மதிய நேரத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டியதும், இசையென்ற சப்தம் மைதான வெளியில் சிலரின் கவனத்தை ஈர்த்திருந்திருக்கலாம்.கலாச்சார விழாவாக இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது கொஞ்சம் ரிலாக்ஸாகிக் கொள்ள உதவும் ஒரு சந்தர்ப்பம் நிகழாமல் இவர்கள் கலைந்து போனது வருத்தத்திற்குரியது.லங்கா தூதரகம் விழா கொண்டாடாத இத்தனை வருடங்களில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் பணிபுரியும் பெண்களும், ஆண்களும் தனித்தனியாகவோ நண்பர்கள் கூட்டமாகவோ சில மணி நேரங்கள் நகரின் மத்தியில் சர்ச், போஸ்டாபிஸ், நகைக்கடை, துணிக்கடை, பஸ் ஸ்டாண்ட், ஓட்டல், மைதானம் என கலந்துரையாடி பிரிகிறார்கள். வெள்ளிக்கிழமை கூடும் கூட்டமென்பதால் காவல்துறை வாகன, கூட்ட நெரிசல்களை தவிர்க்க மட்டுமே உதவுகிறார்கள்.

லங்கா கைவினைப்பொருட்கள்,பித்தளை,வெண்கலம்,மற்றும் ஆபரணங்கள் இந்திய கலாச்சாரப் பொருட்களைப் போன்றே லங்கா பொருட்களும் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை.சென்னையில் பாயாவும்,இடியாப்பமும் ஜோடிங்கிற மாதிரி இடியாப்பமும்,மிளகாய் கரைச்சலும் ஏகப் பொருத்தம் லங்காவுக்கு.காரம் சாப்பிடும் நாமே அலறி அடிச்சுகிட்டு ஓடும் போது இந்த ஊர்கார மக்களுக்கு லங்கா உணவு சிபாரிசு செய்யறாங்களாம்:)

Sunday, April 25, 2010

வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமை

பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலும் என்று முன்பு கூறியிருந்தார்.நேற்று சனிக்கிழமை இந்திய தேர்தல் கமிசனர் நவின் சவ்லா வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிப்பதிலுள்ள நடைமுறை சிக்கல்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.



April 24: Chief Election Commissioner Navin Chawla on Saturday said the Election Commission has pointed out to the Centre that there would be ‘logistical difficulties’ in implementing the proposal to grant voting rights to Non-Resident Indians (NRIs).

Prime Minister Manmohan Singh had a few months ago said the Centre would formulate a plan to allow for the Indian diaspora across the world to participate in elections in India, and hoped that this would be possible by the next Lok Sabha elections in 2014.

“There will be operational difficulties in allowing NRIs to vote as they are not confined to one particular place,” Mr Chawla told reporters here at the airport en route to Tiruchy. The CEC said setting up polling stations in cities abroad would involve major logistic problem. “The commission will have to move electronic voting machines to various cities abroad betw-een the last day of nominations and the polling day and then bring them back. This would be a mind-boggling exercise,” he said.

NRIs can currently be registered as voters only if they spend six months in the country ahead of the elections, so many of them would not qualify, the CEC pointed out. He said that the commission had written to the Centre on the issue since some statutory changes had to be made in the relevant Act to allow NRIs to vote.

To a query on candidates in the Pennagaram by-poll failing to declare their election expenditure, he said candidates of many political parties had failed to submit their expenses for recent elections across the country. “Notices had been issued to 16 political parties asking them to furnish the relevant details by April 29. Candidates in the Pennagaram by-poll still have time to file their expenses,” he said.

(Courtesy deccanchronicle.com)

நடைமுறை சிக்கல்களாக அவர் கூறுவது எலெக்ராடினிக் மயமாக்கப்பட்ட ஓட்டு இயந்திரங்களை பல இடங்களுக்கும் கொண்டு போய் மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வருவது சிரமம் என்கிறார்.என்ன ஒரு தொலை நோக்குப்பார்வை தேர்தல் கமிசனர்:).மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறார்களாம்.

முதலாவதாக எலெக்ட்ரானிக் பெட்டிகளுக்கு மாற்று வழிகள் இல்லையா?அமெரிக்கர்கள் எலக்ட்ரானிக் முறைக்கும் முன்பும் கூட தபால் முறையிலான ஓட்டு முறையை நடைமுறைப்படுத்தினார்களே.இத்தனைக்கும் இந்தியர்களை விட அதிகம் ஊர் சுற்றுபவர்கள் அமெரிக்கர்கள்.ரயில்வே துறையில் முன்பதிவு முறைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தி விட்டு மாற்று வழிகளான கணினி முறையில் வாக்களிக்க இயலுமா என்பதையெல்லாம் ஆராயமல் நடைமுறை சிக்கல்களை மத்திய அரசுக்கு அறிவிப்பது நிர்வாக திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட வாக்குரிமை முறையை சொல்லிக் கொடுக்க பயிற்சி நிலையங்கள் தேவையில்லை.வளைகுடா,சிங்கப்பூர்,மலேசியா போன்ற இடங்களில் வசிக்கும் ஒப்பந்த முறையில் பணி புரியும் கணினியின் சுவடுகள் அறியாத பணியாளர்களை இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.இந்தியர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் தூதரகங்கள் உள்ளன.தூதரகங்கள் மத்திய அரசுக்கும்,தேர்தல் கமிசனுக்குமான இந்திய பாலம்.

ஒவ்வொரு நாட்டிலும் இந்திய தூதரகங்களால் அனுமதிக்கப்பட்ட அதிகார பூர்வமான ஒவ்வொரு மாநில அளவிலான கலாச்சார அமைப்புகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.கூடவே பள்ளிக்கூடங்களும்.கலாச்சார,பள்ளி நிறுவனங்கள் தூதரகத்தோடு இணையும் பாலங்கள்.கூடவே தன்னார்வ தொண்டர்களும்,ஊதியத்திற்கு உழைக்கும் மனித வளமும் அந்தந்த நாட்டில் நிறையவே உள்ளன.இந்தியர்கள் அனுப்பும் டெலக்ஸ் ட்ரான்ஸ்பர் மற்றும் ஸ்விப்ட் பரிமாற்றங்கள் மட்டும் எப்படி இதுவரை துரிதமாக செயல்படுகின்றன என்பதை வங்கியாளர்கள் நவின் சாவ்லாவுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.

மற்ற நாடுகளில் சிவில் ஐடி எனப்படும் விசிட்டிங் கார்டு அளவிலானஅடையாள அட்டை,வாகனம்,சுகாதாரம்,குடியுரிமை,காவல்துறை,குற்றவியல்,காதுக்குள் ரகசியமாய் மொபைல்,நீர் மற்றும் மின்சாரம் என்று ஒரே இணையத்துக்குள் தகவல்கள் பரிமாறபடுகின்றன.கணினி தொழில் நுட்பத்தில் முன்னணி நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியா இன்னும் குழப்பங்களினுடாகவே வருடங்களை நகர்த்துகிறது.

Grow up India.

ராவண் IIFA

பல மனித வளங்களின் உழைப்பு,பொருளாதார முதலீடு,சமூகம் சார்ந்த பார்வை,திரைப்பட நுணுக்கங்கள்,இசையின் மகுடி,திரைப்படம் வெளியிடூ,மக்களின் வருகை,விமர்சனம்,முதலீட்டின் லாபம் என்ற இத்தனை விசயங்களையும் தாண்டி ஒரு திரைப்படம் வெளி வராததற்கு முன்பே அதனைப்பற்றிய சுயமதிப்பீடுகள் செய்வது என்பது சரியல்லதான்.ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு அதற்கான நீதி கிடைக்கும் முன்பே கலாச்சார பரிமாற்றங்கள் என்ற பெயரில் சுயநலங்களை விளம்பரப் படுத்தும் போது விமர்சனங்களை முன் வைப்பது அவசியமாகிறது.

இதனையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அனைவராலும் மதிக்கப்படும் அமிதாப்பச்சன் அவர்கள் இந்திய திரைப்படங்களின் துதுவர் என்ற மகுடத்தை ஏந்தும் காரணம் கொண்டும் பதிவுலகில் மெல்லியதாய் எழும் குரல்கள் பல காரணங்களால் அமுங்கிப்போகவும் கூடும். அப்படியான மெல்லிய குரலாக இருந்தும் எனது கண்டனத்தை பதிவு செய்வது அவசியமாகிறது

It would be prompt to declare International Indian Film Academy as International Indi Film Academy (IIFA)

தமிழக எதிர்ப்புக்களையும் தாண்டி International Indi Film Academy (IIFA) இலங்கையில் நடக்கும் எனபதை உறுதி செய்வதற்கான காரணிகள் சில:

இரு தேசங்களின் புரோட்டக்கல் எனும் முன்வரைவுகள் தீர்மானிக்கப்பட்டு விட்டது

அதனை உறுதி செய்யும் அமிதாப்பச்சனும்,ராஜபக்சேவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

தமிழகத்திலிருந்து இந்தி திரைப்படங்களுக்கான சந்தை குறுகியது.

அபிஷேக்,ஐஸ்வர்யாவின் இணைந்து நடித்த திரைப்படம் என்பதால் இங்கேயும் ஒரு குடும்ப நலன்.

இந்திய அளவில் ஈழ இனப்படுகொலை குறித்த ஊடகங்களின் கவலையின்மையை இப்போதைய ஐ.பி.எல் சர்ச்சைகளை இன்னும் ஒரு மாதத்தில் IIFA ஊடகங்களை நிறைத்துக்கொள்ளூம்.இப்படி தொடர் சர்ச்சைகள் நடப்பதே மக்களை திசைதிருப்பி ஆட்சியை வெற்றிகரமாகவும் நடத்த எளிதாக அமையும்.

இரு நாடுகளின் கலாச்சாரம் மேம்படுத்தல் எனும் போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் வியாபார நலன்கள்.

காமிரா தொழில்நுட்பங்கள்,வெளிநாட்டில் பாடல்காட்சிகள்,பெண்களின் அரைகுறை ஆடைகள்(இதெல்லாம் சமூக காவலர்களுக்கு பொருட்டேயல்ல)முத்தக்காட்சிகள்,இன்னும் இந்திப்படத்துக்கே உரித்தான மசாலாக்களுடன் இந்தி திரைப்படம் இந்திய திரைப்படமாக வலம் வருகிறது.தமிழ் திரையுலகம் எப்படி தமிழ் இலக்கியங்களையெல்லாம் விட்டு விட்டு வேறு பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டதோ அதே மாதிரி இந்தி திரைப்படங்களும் துவக்கம் முதல் உண்மையான இந்திய கலாச்சாரங்களை விட்டு மிக தூரமாகவே பயணிக்கிறது.இந்திய திரைப்படங்களை மாநில அளவில் ஒப்பீடு செய்யும் போது இந்தி படம் மசலாக்கள் என்பதுடன் இந்தி திரைப்படங்களின் பலமே அதன் இசையில்தான்.ஏனைய மாநில அளவிலான ரசிகர்கள் குறைவாக இருந்தாலும் வங்காள,மலையாள,தமிழ் படங்களுடன் ஒப்பீடு செய்கையில் இந்தி திரைப்படம் பாப்கார்ன் மட்டுமே.

மாநிலங்கள் என்ற பெடரல் அமைப்பே இந்தியா எனும் முகம் என்பதை மறந்து விட்டு இந்திப்படத்தை மட்டும் முன்னிறுத்துவதற்கு IIFA என்பதனை குறிப்பிட்டு சொல்லும்படியாக கேரள,வங்க,தமிழ்,ஏனைய திரைப்படத்துறையினர் குரல் எழுப்பாதது ஏன் என்பதை அறிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

இதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் மணிரத்னம் அவருடைய கட்டுக்கும் மீறி மீண்டும் ஒரு சர்ச்சையில் நுழைவது தனிப்பட்ட முறையில் வருத்தத்தை தருகிறது. ராஜபக்சேவுக்கு பஞ்ச் டயலாக் ஏதாவது வைத்திருக்கீறீர்களா மணிரத்னம் சார்? குறைந்த பட்சம் ரத்தம் படிந்த அந்த சிவப்பு துண்டு?

தமிழனின் குரல்கள் அவ்வப்போதான மழைக்காலத்து தனித்தனிக் குளத்தில் தவளைகளாய் கீச்சிட மட்டுமே செய்கிறது.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று பாடிக்கொண்டேயும் சில குரல்கள் வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்கின்றன.

ஒற்றுமையின்மை,பொது நலனிலும் கூட சுயநலம் முன்நிற்பதும்,நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் மக்களின் மனோபாவம்,சுய வாழ்க்கையின் ஓட்டத்துக்கே ஒரு நாள் ஓடிப்போவது,இவை அனைத்துக்கும் மேலாக ஒரு கூட்டம் திட்டமிட்டு தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சமீபத்து நிகழ்வுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழனுக்கு உணர்த்துகின்றன.அந்த வகையில் இலங்கையின் IIFA வும் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.

IIFA வுக்கான மேலும் சில எதிர்ப்புக் குரல்களாய் சிரவணன் அவர்களின் இடுகை தொடுப்பாக இங்கே மேலும் சில தகவல்களை காணலாம்.

பல தமிழ் திரைப்பட நடிகர்கள் திரைப்பட விழாவுக்கான அழைப்பிதழை பெற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திக்காகஅனைவருக்கும் நன்றி.முப்பது ஆண்டுகளை தமிழ் திரைப்படம் இலங்கை அரசின் உதவியில்லாமல் பயணித்திருக்கிறது.இன்னும் கொஞ்ச தூரம் இதே பாதையில் தமிழ் திரைப்பட உலகம் பயணிப்பதில் தவறில்லை.

Thursday, April 22, 2010

நெஞ்சுக்கு நீதியில்லை.

சிந்திப்பதே தவறு.ஏனென்றால் சிந்திக்கும் போது சுயநலங்களை கடந்து மனம் சுதந்திரமாக பறக்கிறது.சமூக அவலங்களை நினைத்து கவலைப்படுகிறது.அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்து போன தமிழை மீண்டும் கண்டுபிடித்ததும் கூட தவறோ?என்னவெல்லாம் புலம்ப வைக்கிறது.

மீன் பிடித்துக் கொண்டிருக்கலாம்,காமிராவை தூக்கிக் கொண்டு கடல் அலைவரிசைகளை நில் என்று சொல்லியிருக்கலாம்.பாடல்களின் இனிமையில் மெய்மறந்திருக்கலாம்.எதையும் யோசிக்க வேண்டாமென்று தொலைக்காட்சிகளை சுழற்றிக் கொண்டிருக்கலாம்.இது என்ன சோதனையும்,வேதனையும் தொண்டைக்குழியில் முட்டிக் கொண்டு நிற்கும் குமுறல்களை பொதுவிலே வை என்று மூளை கரங்களுக்கு கட்டளையிடுவது?யாரிடம் உன் சொல் விளையாட்டு!வேண்டாமே இந்த எழுத்துப் பரிட்சை.இருந்தும் மனதின்,சில நட்பின் சிபாரிசுகள் இங்கே முறியடிக்கப்படுகின்றன.

குடும்பம் சிதறி,வீடிழந்து,நாடிழந்து,சுய உரிமைகளையும் இழந்து,அரசியல் அவலங்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு வயதான மூதாட்டிக்கான குரல் இது.தமிழ் கற்ற குற்றத்தாலேயே மானுடம் குறித்த கவலைகள் எல்லாம் இங்கே வேற்று திசையிலும் கூட நோக்கப்படும்.

உலக நிகழ்வுகள் மட்டும் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.ஆனால் வரலாறு மட்டும் மீண்டும் கண்ணாடிக்குள் தன் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே செல்கிறது.துடிப்பையும்,மனதின் கோபத்தையும் சில தினங்களுக்கு முன் சில இளைஞர்கள் பார்வதி அம்மாள் திரும்ப மலேசியா அனுப்ப பட்டது குறித்து எழுப்பிய குரல்கள் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.அதே மாதிரியான துடிப்பும்,சமூக ஆர்வமும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கல்லக்குடி கொண்டான் தன் பெயர் சூட்டிக் கொண்ட ஒரு இளைஞனுக்கும் இருந்திருக்கும்.

M.A படித்திருந்தால் மட்டும் போதாது,நாவன்மையோடு சூழ்ச்சிகளும்,சகுனித்தனமும் மட்டுமே அரசியலை நிலைநாட்டும்,நட்புடன் இருந்தவனே நில பங்காளி என்ற வரலாற்றையும் எழுதி வைத்தாகி விட்டது.நெஞ்சுக்கு நீதி வாய்ப்புக்கள் கிடைத்தால் உண்மைகளின் சதவீதம்,ஒப்பனைகள்,சூழ்ச்சிகள்,உழைப்பின் பங்கு,அரசியல் பித்தலாட்டங்கள்,சுயநலங்கள்,சாதனைகள் என்று மெல்ல இனி வரும் காலம் மீள் பார்வை செய்யும்.சாதனைகளை ஒரு வேளை இதே சாம்ராஜ்யம் தொடரும் பட்சத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் கூட சொல்லி வைக்கும்.அங்கே சொல்லாதவைகளையும் சிலர் பார்வையிடவும் இங்கே சில சொல்லாடல்கள்.

சிலம்பும்,சிலப்பதிகாரமும் கோவலனால் சிறப்புற்றதோ,அரசு துறந்து துறவறத்தில் இலக்கியம் படைத்த இளங்கோவால் சிறப்பானதோ தெரியாது.இலக்கியத்தின் திரிபுகள் என்னவென்றும் காலம் எழுதி வைக்கவில்லை.இருந்த பூம்புகார் பட்டினமும் கடல் கொண்டு போய் விட்டது.ஆனால் பத்திரிகை பார்த்தே உலமறிந்த முந்திய ஒரு தலைமுறைக்கும்,இணையம் கொண்டு வரும் உண்மைகளின் இன்றைய தலைமுறைக்கும் கோவலன்,மாதவியை விட கண்ணகியும்,கண்ணகியின் சிலம்பும் மெரினாவின் அலைகளுடன் சிலையாக நின்றதையே பாமரனுக்கும் கூட சொல்லி வைத்தது சாதனைதான்.


இலக்கியம்,கவிதை,வசனம்,எழுத்து,அரசியல்,பேச்சின் நாவன்மை என்ற பன்முகங்கள் இன்றைய வரலாற்றோடு கூடவே பயணிக்கிறது.பாண்டிய மன்னர்களின் வரலாற்றை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும்,சோழர்களின் வரலாற்றை தஞ்சை கோயிலும்,பல்லவர்களின் பண்புகளை கற்பாறை ஓவியங்களும் மாமல்ல புரமும் பறைசாற்றிக்கொண்டிருப்பது போல் இன்றைய தி.மு.கவின் வரலாற்றின் சாட்சியாக திருவள்ளுவன் சிலையும் எதிர்கால சந்ததிகளுக்கு பாடங்கள் சொல்லும்.

கூடவே இன்னும் எழுதப்படாத அத்தியாயங்களும் ஒரு ஆட்சியின் மறுமுகத்தையும் காட்டக் கூடும்.முத்துப்பரல்கள்,மாணிக்கப்பரல்களின் குழப்பத்தால் பாண்டிய மன்னன் தடுமாறி அறம் பிழைத்தானோ அதே வரலாற்றுச் சுற்றில் போராட்ட குணமிழந்து,குடும்பம்,சுயநல கணக்குகளுடன் ஈழத்தின் உரிமைகளை நீர்த்துப்போக செய்ததும் தமிழக அரசியலில் எழுதி வைக்கப்படும்.

அதை விட அரசியல் அறம் பிழைத்தவன் என்ற குற்றம் பார்வதி அம்மாள் விமானத்தளத்திலிருந்து திருப்பி அனுப்பிக்க வைக்கப்பட்டதையும் வரலாறு எழுதி வைக்கும்.

திராவிட சிந்தனைக்கே மஞ்சள் துண்டு பரிகாரம் இருக்கும் போது பார்வதி அம்மாள் இந்திய இறையாண்மையில் கட்டம் கட்டுவதை நீக்குவதற்கும்,மருத்துவம் பார்ப்பதற்கும் பரிகாரம் செய்ய இயலாதா?

பார்வதி அம்மாள் தமிழக விமான தளத்துக்கு வர மறுப்பு என்ற தினத்துக்கான மனப்பிரவாகம் இது.வலையில் ஊறும் நண்டு மாதிரியான சில்லுண்டி ஒன்று பார்வைகளையெல்லாம் தடம்புரள செய்து விட்டது.அதன் காரணம் கொண்டே தூதுக்கடிதத்துடன் தாமதமாக விமானம் சென்னை நோக்கிப் புறப்படுகிறது.